Sunday, August 10, 2008






பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா.. - ஒரு பார்வை...
2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8, 2008 தொடங்கி ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெறவுள்ளன. சீனப் பண்பாட்டில் 8ஆம் இலக்கம் இராசியாக கருத்தப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைப்பெறும்.
கால்பந்தாட்டப் போட்டிகள், படகோட்டம், நீச்சல்ப் போட்டிகள், மரதன் ஓட்டம் உட்பட சில போட்டி நிகழ்வுகள் சீனாவின் வேறு நகரங்களில் நடைப்பெறும். குதிரைப் பந்தயங்கள் ஹாங்காங்கில் நடைபெறும்.
விளையாட்டின் முக்கிய அடையாளமாக "நடனமாடும் பெய்ஜிங்" என்பது பெய்ஜிங் பெயரில் காணப்படும் இரண்டாவது சீன எழுத்தான "ஜிங்" என்பதன் அழகியல் வடிவமாகும். போட்டியின் குறிக்கோளாக "ஒரே க‌ன‌வு ஒரே உல‌க‌ம்" தேர்ந்தெடுத்துள்ளார்கள்.. இவ்விளையாட்டில் 10, 500 க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கலாம்..மொத்த நிகழ்ச்சிகளும் 300 கும் அதிகமே.



கடந்த மார்ச் 24ஆம் நாள் கிரீசு நாட்டில் ஏற்றப்பட்ட சுடர் 5 மாத காலத்தில் 19 நாடுகள் வழியாக சீனா வந்தடைந்தது.

மிகப் பெருமையுடைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைத் தான் நடத்துவதில் பெருமிதம் கொண்டது சீனா.

சீனாவின் பிடிக்குள் சிக்கி, பெயரளவிலான தன்னாட்சிப் பகுதியாகக் கிடக்கும் திபெத், தனது உரிமைக் குரலை தொடர்ந்து எழுப்பியது. , சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் நோக்கில் சீனாவிற்குக் கொண்டு செல்லப்படும் ஒலிம்பிக் சுடரைத் திபெத்தின் விடுதலைச் சுடராக மாற்றிக் கொண்டது திபெத்.

ஒலிம்பிக் விளையாட்டு என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட கிரேக்கர்களின் தேசியத் திருவிழா. கிரேக்கர்களின் தெய்வம் வாழ்ந்த ஒலிம்பியா மலையில், கிரேக்க தெய்வத்தை வழிபட கிரேக்கர்கள் ஒலிம்பிக் விழாவை விளையாட்டு போட்டிகளை நடத்திக் கொண்டாடினார்கள்.
பெய்ஜிங்கில் பண்பாட்டு மற்றும் விளையாட்டு மையம், ஆங்கில மொழியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் பொருட்டு ஆங்கிலம் விசேஷமாக கற்றுத்தருகிறது... ஆச்சர்யம் என்னவென்றால் ,மாணவர்களின் சராசரி வயது, 58 .
பெய்ஜிங் மாநகர அரசின் திட்டத்தின் படி, 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறும் போது, 40முதல் 60 லட்சம் வரையான பெய்சிங் நகரவாசிகள் ஆங்கில மொழி பேச முடியும்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது, பெய்ஜிங் காற்று தர பிரச்சினையில் , காற்று தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், பெய்ஜிங் சுற்றுச்சூழல் துறை மிகவும் கவனம் செலுத்தி பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


ஒலிம்பிக் குழுவின் உலக ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டாளி, தொலைக்காட்சி ,அஞ்சல் நிறுவனங்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் சந்தை வளர்ச்சி ஆகிய திட்டங்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் ஏற்பாடு மற்றும் அனைத்து பணிகளுக்கு, அதிக நிதி, வசதிகள், தொழில் நுட்பம், சேவை ஆகியவற்றை திரட்டியுள்ளன.


பெய்ஜிங் ஒலிம்பிக் பூங்காவின் மையப் பிரதேசத்திலுள்ள தென் பகுதியில் , போட்டிக்கான சிறப்பு வாய்ந்த அரங்குகளில் ஒன்றான 17 ஆயிரம் இருக்கைகள் கொண்ட, சுமார் 80 ஆயிரம் சதுரமீட்டருள்ள ,நீர் கன சதுர விளையாட்டரங்கு, அதிகாரப்பூர்வமாகக் கட்டி , பயன்படுத்தப்படத் துவங்கியது.

பெய்ஜிங், 31 விளையாட்டரங்குகளையும் பயிற்சியரங்குகளையும் ,இதர 30 விளையாட்டரங்குகள், 44 பயிற்சியரங்குகளுடன் , 29வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தேவையை நிறைவு செய்யும் வகையில்,கட்டியமைத்துள்ளது

கிட்டத்தட்ட 63 தொழில் நிறுவனங்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஒத்துழைப்பு நிறுவனங்களாக மாறியுள்ளன.நிதி, பொருட்கள், தொழில் நுட்பம் மற்றும் சேவை போன்று பல்வேறு வகையிலும் ஆதரவுகளை இந்தத் தொழில் நிறுவனங்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு வழங்கும். இதனால் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு தலைசிறந்த பொருட்களின் அடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழில் நிறுவனங்களைப் பொறுத்து, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீனாவின் சந்தையை விரிவாக்குவதற்கு வலிமையான வாய்ப்பை வழங்கும்.
சீனாவின் மிகப்பரப்பிலான ஆழமான பண்பாட்டையும் "ஒரே உலகம், ஒரே கனவு" என்ற தலைப்பின் அடிப்படையில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்திக்காட்ட விரும்பியுள்ளது..
பெய்ஜிங்கிற்கு வருகை தரும் வீரர்கள், பயிற்சியாளர்கள் பல்துறை அதிகாரிகள், வெளிநாட்டு பார்வையாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6 இலட்சம் இரூக்கலாம்.பண்பாட்டு நடவடிக்கைகள் ஒலிம்பிக் நடவடிக்கைகளின் முக்கிய பகுதியாகும். அனுமதிபெற்றுள்ள 20,000 மக்கள் தொடர்பு ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும்..
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவின் தீபத்தை ஏற்றும் வழிமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டவட்டமான நுணுக்கங்கள், இரகசியமானது .தொடக்க விழா சடங்கு, கலைநிகழ்ச்சிகள், வீரர்கள் விளையாட்டரங்கில் நுழைவது, தீபத்தை ஏற்றுவது ஆகிய 4 பகுதிகளை இத்தொடக்க விழா உள்ளடக்கும்.

வண்ணமயமான வான வேடிக்கைகள் மூலம் ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்களை முதன்முறையாக ஆகாசத்தில் காண்பிக்கப்படும்.. மேலும் கொடி ஏற்றத்தின்போது மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு செல்லும் அளவிற்கு கணினியின் துணையோடு வான வேடிக்கைகள் வெடிக்கப்படும்..

நிகழ்ச்சியின் இறுதியில் 2008 முகங்கள் உலகம் முழுவதிலிருந்தும் காண்பிக்கப்படுவது விசேஷமாக இருக்கும்..


மேலதிக விசேஷமான பாதுகாப்புகள், பார்வையாளருக்கும், வீரர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..இதில் FBI யும் அடங்கும்..

மேலும் பெய்ஜிங்கில் வாகன , போக்குவரத்து வசதிகளும் , அதி வேக ரயில்கள் ஓவ்வொரு 5 நிமிடங்களுக்கு ஒன்றாக வசதியாகவே உள்ளது பெய்ஜிங்கில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான வாடகை மகிழ்வுந்துகள் இருக்கின்றது..

இதைத்தவிர உணவகங்கள், சர்க்கர நார்காலி வசதியுடன் கூடிய வண்டிகள், மது அருந்துமிடங்கள், தொலைபேசி வசதிகள், புகைப்பட வீடியோ வசதிகள்,மருத்துவ வசதிகள், இப்படி தேவையான அனைத்து வசதிகளும் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளன... பொது மக்களுக்கும் உதவி செய்திட விசேஷ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது..
இந்த விளையாட்டை காண்பதற்காக விற்கப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் அதிரடியாக விற்றுத் தீர்ந்தன... இதற்காக 2 நாள்கள் கூட வரிசையில் காத்திருந்தார்கள் மக்கள்..

சீன கலாச்சாரத்தோடு இணைந்த சில நகைச்சுவை பாத்திரங்களாய் விளையாட்டுகளை சித்தரித்து மகிழ்கிறார்கள்..படத்தில் உள்ளது போல..மேலும் அழகான வேலைப்பாடுகள் நிறைந்த சிறபங்கள் பூங்காக்களை அலங்கரிக்கின்றன்..


பல பிரச்னைகளுக்கிடையிலும் இந்த விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதோடு தம் கலாச்சாரத்தையும் , பண்பாட்டையும் பேணும் சீனாவையும், இந்த விளையாட்டுக்கள் நல்ல முறையில் நடைபெறவும் நாமும் மன மகிழ்வுடன் வாழ்த்துவோம்...

1 comment:

மங்களூர் சிவா said...

அருமையான பதிவு சாந்தி அக்கா.