Sunday, August 10, 2008

அலெக்ஸ் தொடர்ச்சி..

அடுத்து வந்த நாட்களில் அலெக்ஸின் வருகை குறைந்தது.. விஷயம் தெரிந்து வேதனைப்பட்டோம்..
அலெக்ஸின் அப்பாவுக்கு திடீரென்று வேலை போய்விட்டது... அது ஒரு பன்னாட்டு நிறுவனம்..எங்களால் முடிந்த அளவு
தேடினோம்.. இங்கு தாய் பாஷை கண்டிப்பாக தெரியணும்...இல்லாவிட்டால் கொஞ்சம் கடினமே.. இதனால் பாதிப்பு அலெக்ஸுக்கு..
அவன் படிப்பை தொடர முடியாத நிலைமை.
என்ன கொடுமை.. குழந்தைக்கு அது ஒன்றுதான் ஆறுதல்.. அதுவும் முடியாவிட்டால்...?..அவர் அப்பாவே வீட்டில் பாடம்
எடுக்க நினைத்தார்.. நானும் உதவுவதாய் சொன்னேன்.. அப்பதான் நான் மும்முரமாய் CCNP படித்துக்கொண்டிருந்தேன்,
ஆனால் இதை எதையும் வெளிக்காட்டாமல் அலெக்ஸ்..பின்பு ஒருவழியாக அவர் பள்ளி முதல்வரிடம் ( எனக்கு தெரிந்தவர்)
பேசி செலவுகளை பின்னாளில் தருவதாய் கூறி அந்த பிரச்னையை சமாளித்தோம்..பள்ளிக்கு சென்று அவன் ஆசிரியரை சந்தித்தால்
" அலெக்ஸ் சேட்டைக்காரந்தான்" என்கிறார்கள்.. நம்பவே முடியவில்லை.. இருந்தாலும் சந்தோஷம் .. பிள்ளைக்கு சமாளிக்கவும் தெரியணுமே உலகில்... தாய்க்கு எப்போதும் தன் பிள்ளை நல்ல பிள்ளையோ????
அவர் தந்தை இப்போது அமெரிக்கா செல்ல முயற்சி எடுத்தார்.. அவர் சகோதர சகோதரி அங்கு இருப்பதால்.. இடையில் அவர் மட்டும் போவதாயும் , அலெக்ஸ்ஸை எங்களிடம்
விட்டுப்போவதாயும்.. எனக்கே தத்து கொடுத்தது போல அப்படி ஒரு சந்தோஷம் ...என் மகனுக்கும்..கற்பனையில் மிதக்க ஆரம்பித்தேன்..
முதல் முறை விசா நிராகரிக்கப்பட்டது... அலெக்ஸ் அப்பா வந்து என்னிடம் ஜெபம் செய்யச்சொன்னார்கள்.. ஆனால் என் மகனோ,
" கடவுளே அலெக்ஸுக்கு விசா கிடைக்கக்கூடாது " என்று ஜெபிக்கிறான்... அவனுக்கு புரிய வைப்பதற்குள் பெரும்பாடு.
அலெக்ஸ் நல்லா இருக்கவேண்டாமா, அவன் நம்ம கூட இருப்பதைவிட அவன் வாழ்வு சிறக்கணுமே தம்பி.. ம்கூம்.. புரியவில்லை.
இதற்கிடையில்தான் என் மகன் நச்சரிக்க ஆரம்பித்தான் தனக்கு துணையாக ஒரு தம்பி வேண்டுமென்று.அலெக்ஸ் போய்விட்டால்
தான் தனிமைப்படவேண்டுமென்று..
அப்படி ஒரு எண்ணமே கிடையாது.. ஆனாலும் கடவுளிடம் ஜெபிக்கும்படி சொல்லிவைத்தேன்.. அவன் அதை வேத வாக்காய் எடுத்துக்கொண்டு
2 வருடம் தவறாமல் ஜெபித்தான்... நான் சிரித்துக்கொள்வேன்..

அலெக்ஸுக்கு விசா கிடைத்தது.. அதே நேரம் கடவுள் கிருபையால் ஒரு குழந்தையும்...அலெக்ஸுக்கும் என் மகனுக்கும் ரொம்ப மகிழ்ச்சி..
ஆனால் அலெக்ஸ் மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு செல்ல எங்க வீட்டுக்கு மே மாதம் குழந்தை வந்தான்..
அலெக்ஸ் க்கு சிறப்பாக ஒரு பிரிவுபசார விழா வைத்தேன்.. பிரிய மனமின்றி..உணர்ச்சிகளையும், அழுகையையும் கட்டுப்படுத்தி..
அவனுக்கு அலெக்ஸ் என்றே பெயரிட ஆசை.. ஆனால் ஆண்ட்ரி பிரியன் டேனி என வைத்தோம்...இவனோ அலெக்ஸுக்கு எதிர்புரம்.
அலெக்ஸ்ஸை மறப்பதற்கே வந்த குழந்தை... ஆனாலும் அலெக்ஸுக்கான இடம் யாராலும் நிரப்பப்படமாட்டாது..
என்றாவது சந்திக்கலாம்.. சந்திக்காமலே போகலாம்... ஆனால் பல இனிய நினைவுகளை தந்துவிட்டு சென்றுவிட்டான்..அவனுக்கான நேசம் வட்டியோடு வளர்ந்துகொண்டிருக்கிரது..:-))
நிறய அவனைப்பற்றி எழுதலாம் .. என் மேசையின் பேப்பர் ( டிஷ்யூ) காலியாகிவிட்டது...:-((
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நமக்கான அன்பானவர்களும் ,பிரச்னைகளும், தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவே நம்புகிறேன்.... அந்தந்த காலங்களில்..
கசப்போ, இனிப்போ ,அவற்றின் சுவையை பருகிக்கொள்ளவேண்டியுள்ளது.., .. இந்த நீண்ட வாழ்க்கை பிரயாணத்தில்..

No comments: