Sunday, August 10, 2008


லேசான தூறல்.. சிறுகதை..


" சாரிப்பா மன்னிச்சுக்கோ.."
" செய்றதையெல்லாம் செஞ்சுட்டு மன்னிப்பா?.. "
" அதான் சொன்னேன்ல.. மறந்துட்டேன்... திருமண நாளை.."
" அப்ப இப்படியே ஒரு நல்ல நாள் பார்த்து என்னையும் மறந்துடுங்க.."
" ம். சரி.."
" என்னாஆஆஆஆ.....து?"

" ம். இல்ல இல்ல ..கோவத்த பாரு.. ஆமா இந்த கோவத்தையெல்லாம் ஏன் கல்யாணத்துக்கு முன்னாடி காட்டல??"
" ம். பதில் சொல்ல மாட்டேன்.. "
" ஆமா.. ஏன் காட்டலன்னா, நீங்க ஒழுங்க இருந்தீங்க.. இப்படி இல்ல.."
" பதில் சொல்லிட்ட.. கிகிகி.."
" போதும் சிரிப்பு.."
" அய்யோ என் வேலை அப்படிம்மா... புரிஞ்சுக்கோ."
" அதுக்காக நம்ம கல்யாண நாள்கூட மறக்குமா?.. எங்க அப்பா எவ்வளவோ பரவால்ல.."
" என்ன .. எல்லா நாளையும் மறந்துடுவாரா மொத்தமா?..கிகிகி"
" ரொம்ப கோபப்படுத்தாதீங்க.. இப்பவே நான் அப்பா வீட்டுக்கு போறேன்...1 வாரம்..க்ர்ர்ர்"
" ஆ..ஊ ன்னா அப்பா னு சொல்லி எதுக்கு கம்பேர் பண்ற... உங்க அப்பா ஓட்டை ரைஸ்மில் வெச்சுட்டு வீட்டுக்கு
பக்கத்திலேயே வண்டிஓட்டுறார், வக்கணையா 3 நேரம் சாப்பிட்டு தூங்கி... என் நிலைமை அப்படியா கணினி யை கட்டி அழுவுறேன்,
நேரம் காலம் இல்லாம.."
" சரி.சரி, என் தேவதையே, வழக்கம்போல வழியனுப்புவியாம்... "
" மரியாதையா போய்டுங்க, இன்னும் கோவம் வரதுக்குள்ள.. சே என் பிரண்ட்ஸ் எல்லாம் என்ன நினைப்பாங்க.."
-----------------------------------------------------------------------------------------மதியம்
தோழியுடன்...அரட்டை...
" நல்லா டோஸ் விட்டேன் .. பயந்துட்டாருப்பா.."
" அதானே .. அதெப்படி திருமண நாளை மறக்கலாம்.."
" ம். இப்பத்தான் திருப்தியா இருக்கு...ஆனா பாக்க பாவமாயும் இருக்கு வருக்கு வேலை அப்படி.."
" நீயும் கொஞ்சம் பொறுமையா போயிருக்கலாமோ என்னவோ.."

" சரி சரி அப்புரம் பேசுறேன்.,.சாயங்காலத்துக்கு ஏதாவது விசேஷமா ஸ்வீட் பண்ணனும்.."
"ம். விட்டுக்கொடுக்க மாட்டியே.."
---------------------------------------------------------------------------------------------------
சாயங்காலம்..
அலுவல் முடிந்து கோபத்துடன் வீட்டிற்கு வருகிறான் .
" கிளம்பு.."
" எங்க..?."
" ம். உங்க அப்பா வீட்டுக்குதான்.."
" ம். எதுக்குங்க."
" ம். காலங்காத்தால கோபப்படுத்தி மனுசன அலுவலகம் அனுப்ப வேண்டியது... அங்க போய் நான்
தப்பு தப்பா செய்ய வேண்டியது.."
" சரி அது காலையிலேயே முடிஞ்ச விஷயம்.. இப்ப போய்."
" அதெல்லாம் தெரியாது.. இன்னும் 1 வாரம் உங்க அப்பா வீட்டுலதான் .,.. அப்பதான் என்னால புராஜெக்ட் ஒழுங்கா முடிக்க முடியும்.."
" ச்......என்ன இது திடீரென்று..."
" இப்ப நீ கிளம்புறயா இல்ல நான் எடுத்து வைக்கவா?."
எரிச்சலுடன் எடுத்து வைக்கிறாள்..
காரை எரிச்சலுடன் ஓட்டிக்கொண்டே செல்கிறான்... அவளோ தொண தொணன்னு..
" சரி இப்பவாவது ஒரு முடிவுக்கு வாங்க... ஏன் இந்த அவசரம்..."
" நீ மட்டும் கோபப்ப்டலாம் நான் படக்கூடாதா.."
" அதுக்கு பழிக்குப்பழியா.. ?. சரி சாமி இனி கேட்கல போதுமா?."
" அதெல்லாம் போதாது.."
" அப்ப.. என்ன மன்னிப்பு கேட்கணுமா?.."
" ம்.....ம்.. சரி ஆனா மன்னிப்பு நான் சொல்ற மாதிரி சொல்லும்போது கேளு போதும்..."
" என்ன புதிர் போடுறீங்க?.. ஆமா கார் எங்க போகுது ஸ்டேஷன் போகாம..?."
" பேசாம வா.."
" அட நீங்களே என்னை அப்பா வீடு வரை கொண்டு விடப்போறீங்களா??."
" இந்த தொண தொணப்பு தாங்காமதான் " பல்லை கடித்துக்கொண்டு...
" தங்காமதான்???" பயத்துடன்...
" 1 வாரத்துக்கு.."
" 1 வாரத்துக்கு..?????" திகிலுடன்
" ஹஹஹஹா.."
" நம்ம திருமண நாளை கொண்டாட ஊட்டி போறோம்....இப்ப உன் மன்னிப்பை தாராளமா இங்க தரலாம்.."

"..............:-)) " நாணத்துடனும் பொய் கோபத்துடனும்......
--------------------------------------------------------------------------------------------------
சரி இப்படில்லாம் சர்பிரைஸ் கொடுக்காதீங்க புதுசா கல்யாணம் ஆனவங்க... தாய்குலத்துக்கு பிடிக்காது...:-)))

1 comment:

Anonymous said...

wonderfulstory i luv it so much, keep posting mor dear