Wednesday, July 9, 2008

அலீமா இப்போது நலமாயுள்ளார்.. பயப்படும்படி ஒன்றுமில்லை... அவளுக்காக வேண்டிய நல்லிதயங்களுக்கு நன்றி..

---------------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து நான் பார்த்த கடவுள்..


என் பக்கத்து வீட்டு ஆன்டி சரஸ் ஆன்டி ..கடவுள்னா எப்படி இருப்பார்னு நினைப்போம்.நல்லவர், சாந்தமுள்ளவர், பொறுமையானவர்

கோபமே வராது, எல்லாரும் நல்லாருக்கணும்னு நினைப்பவர்..எதிரிகளே இருக்கமாட்டார்கள்.. இப்படி எத்தனை சொன்னாலும்

அதற்கெல்லாம் தகுதியானவர் சரஸ் ஆன்டி...

எனக்கு 3 வயதாகும் போது பாளையில் அருகருகே குடிவந்தோமாம்.. இன்றுவரை அதே வீட்டில்...ஆன்டி

அவர்கள் வாழ்க்கையை பற்றி மட்டும் சொல்கிறேன்... கமலாகாமேஷ் உருவ அமைப்பு.. வெள்ளைச்சட்டையும் , சாதாரண

நூல் புடவையும்..வசதி அதிகம் .. ஆனாலும் 2 தங்க வளையில் கையில் எப்போதும் .. அது தவிர பட்டுப்புடவை கட்டிகூட பார்த்ததில்லை அதிகம்..

அவங்க திருமணம் ஆன போதே அவர்கள் நாத்தனாருக்கு மனநிலை சரியில்லை.( திருமண பயத்திலாம்...)

மாமியார்தான் பார்த்துக்கொள்வாராம்..ரொம்ப செல்லமாக வளர்ந்த மகள்.. ஆனால் மாமியாரும் சீக்கிரமே தவறிவிட, அன்றிலிருந்து ஆன் டிதான் பார்த்துக்கொள்வார்கள்..

எப்படி?.. ஒரு மன நிலை சரியில்லாதவரை கவனிப்பதுபோல் இல்லை.. அவர்களுக்கு தனி அறை.. நேரத்துக்கு சாப்பாடு... குளிப்பாட்டுதல்,

உடை அணிவித்தல், நீளமான தலைமுடியை பின்னிவிடுதல்.. மேலும் பூ ரொம்ப பிடிக்குமாம் நாத்தனாருக்கு.. அதனால் தினமும் பூ வாங்கி

தலையில் வைப்பார்கள்... அவர்கள் அருகில் இருந்து பைபிள் வாசிப்பார்கள்.. சில சமயம் முரண்டுபிடிப்பார் நாத்தனார்..அப்பவும் பொறுமையா ஒரு

2 மாத குழந்தையை கையாளுவதைப்போல் மென்மையாக நடந்துகொள்வார்களேயொழிய சலித்துக்கொள்ளவேமாட்டார்கள்..

அப்படி ஒருத்தர் அந்த வீட்டில் இருப்பதே பலருக்கு தெரியாது...

சாப்பிட அழைக்கும்போது அவ்வளவு மரியாதையாக..

" அண்ணி , சாப்பிட வாரீங்களா?.." என்றுதான் கேட்பார்கள்... சிலசமயம் ஊட்டியும் விடுவார்கள்..

எத்தனையோ முறை எங்கள் வீட்டு ஜன்னலில் வந்து எட்டிப்பார்த்துக்கொண்டே நிற்பார்கள்.. பயந்து போயிருக்கேன்..

ஆனாலும் ஒன்றும் செய்யமாட்டார்கள்..

1, 2, அல்ல, சுமார் 30 வருடம் இந்த சேவையை மனம் கோணாமல் செய்ததோடு அவர்கள் படுக்கையில் விழுந்தும் அதேபோல் கவனிப்பு..

அடுத்து அவரது தந்தை .. நோய்வாய்ப்பட்டபோது, அதேபோல தந்தையையும் இறுதிவரை கவனித்தார்கள்...

அடுத்து தாய்.. அவருக்கு கான்ஸர் வந்து எல்லாவிதமான சிகிச்சையையும் நெய்யூர் முதலான ஊருக்கு சென்று அலுப்பின்றி

சலிப்பின்றி அருமையாக கவனித்துக்கொண்டார்கள்.. பாட்டியம்மாவுக்குதான் வருத்தமாயிருக்கும்.." என் மகளுக்கு பாரமா இருக்காமல்

சீக்கிரமா போகணும்னு சொல்லிட்டே இருப்பாங்க.."

திடீரென்று ஓர்நாள் ஜன்னலில் சன்னமான குரலில் அழைப்பு..என் வீட்டிலும் யாருமில்லை.

" என்ன ஆன்டி "

" சாந்தி கொஞ்சம் வாரீயா?..அம்மாவுக்கு என்னவோ பண்ணுது.."

போய் பார்த்தால் பாட்டி மரணம்.. ஆன் டி துடித்து முதல்முறையாக அதுவும் மெதுவாகவே அழுவதைக்காணமுடியவில்லை..

சிறிது நேரத்துக்கெல்லாம் சமாதானம் அடைந்தார்கள்.. அன்னைமட்டும் அந்த நேரத்துக்கான ஜெபத்தை வாசிக்கச்சொல்லி கேட்டார்கள்..

பின் அங்கிளுக்கு போன் போடச்சொன்னார்கள்... முகத்தைத்துடைத்துக்கொண்டு.. அதன்பின் அழுகையை இறுதிவரை அடக்கிக்கொண்டு

வந்தவர்களுக்கு காபி குடுப்பதிலேயும் கவனிப்பதிலேயும் இருந்தார்கள்..தன் அழுகை கூட யாரையும் வருத்தக்கூடாது என்ற எண்ணம்..

எங்க வீட்டில் எந்த ஒரு பிரச்சனை, விழா என்றாலும் ஆன் டி , அங்கிள்தான் முதலில்...

ஞாயிறனறு தூங்கினால் அம்மா எழுப்பும்போதே

" இந்தா ஆன்டி அங்கிள் வந்திருக்காங்க " னு சொன்னா போதும் , எல்லோரும் துண்டை காணோம் துணியை காணோம்னு

எழும்பி ஓடுவோம் குளிக்க.. அவர்கள் முன் கெட்டவராய் இருப்பதில் அவ்வளவு வெட்கம்..

எங்க வீட்டுல நடக்கிற கலாட்டா அத்தனையும் அவர்களுக்கு அத்துபடி..

" என்ன அழுகை?. காலேஜ் பஸ் போயிடுச்சா?.. சரி நான் கொண்டு விடுறேன்.."

" என்ன மேலே படிக்கமாட்டாயா?.. வேலைக்கு போகணுமா?.. படிச்சால் நல்லதுதானே?.." அக்காவிடம்..உடனே சரிதான் பதில்

" என்ன கல்யாணம் இப்ப வேண்டாமா.. பண்ணிக்கோ.." சரி அங்கிள் - அண்ணா.

ஒரு மந்திரத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி...

எங்களுக்கு மட்டுமல்ல பலபேருக்கு எங்கள் தெருவில்..பூக்காரி வந்து அவள் கஷ்டத்தை சொன்னால்கூட அமைதியாய், ஆறுதலாய் கேட்பார்கள்..

நாந்தான் அவர்களை அதிகம் தொந்தரவு செய்திருப்பேன்.. சவ்வு மிட்டாய், தேங்காய் மிட்டாய் , மல்பெரி ஜாம் அடிக்கடி எனக்கு செய்து தருவார்கள்..

இன்றுவரை உலகத்தில் ஆன்டி யின் தேங்காய் மிட்டாய்போல் சுவை எங்குமே கிடைத்ததில்லை.இப்பவும் நான் சென்றால் எனக்காக செய்து தருவார்கள்..

அடிக்கடி அவர்கள் சமையலரையில் இருந்து பைபிள், வாழ்க்கை குறித்த அனைத்து விஷயங்களையும் சொல்லித்தருவார்கள்.

லீவு விட்டால் , குரோஷா, கூடை பின்னுதல், எம்பிராய்டரி, செடி வளர்த்தல் எல்லாமாய் கற்றுக்கொண்டேன்.. இன்னும் அவர்கள்

நினைவில் செடி வளர்க்கிறேன் அபார்ட்மெண்டில்.. செல்லமாய் பூனை , கோழி வளர்த்தார்கள்.. அவர்கள் உலகம் எப்போதும் அன்பானது..

வாழ்க்கையில் அவருக்கு பல சோதனை.. சிலவற்றை பேசி சமாளிக்கலாமோ என நினைப்பேன்.. அப்போதும், அதை கடவுள்

குடுத்த பரிசாகவே எண்ணி மனமுவந்து ஏற்றுக்கொண்டார்களே தவிர ஒரு குற்றம் குறை கூறியது கிடையாது....

அவர்கள் வீட்டுக்கு வந்த மருமகனும் , மருமகளும் அவரைப்போலவே மாறியது இன்னொரு அதிசயம்..

அவர்கள் மகனுக்கு, பெண்பார்க்க சொன்னார்கள்.. நானும் என் மிக நெருங்கிய தோழியை சொன்னேன்..ஏனோ ஒத்துவரலை..

" சாந்தி நீ சொல்ற பெண்ணைத்தான் நாங்க முடிவு பண்ணுவோம் "

அதேபோல் அண்ணியை நாந்தான் முதலில் சென்று பார்த்தேன் ஒக்கே சொன்னேன்.. அவர்கள் என் கல்லூரி சீனியரும்..

பிள்ளைகளை அடித்து வளர்ப்பதில் கொஞ்சமும் விருப்பமில்லாதவர்கள்.. அன்பாலேயே எப்படித்தான் வளர்க்கமுடியும்னு

கேட்பேன்... சேட்டை ரொம்ப பண்ணினா என்ன பண்ண?..

" அன்பால கேக்காத பிள்ளை அடித்தாலும் கேட்காது " என்பார்கள்.. என்னவோ நமக்கெல்லாம் அது இன்னிக்கு வரை ஒர்கவுட் ஆனதில்லை..

யாராவது அந்த கடவுளைப்பார்த்தாலே போதும்.. அத்தனை சந்தோஷமாயிருக்கும் உள்ளம்..

பார்க்கணுமா?., தனிமடலில் விவரம் தருகிறேன்... கண்டிப்பாக சந்தியுங்கள்...

***********************************************தொடரும்******************************************

1 comment:

செல்வேந்திரன் said...

..உங்கள் புன்னகை தேசம் படித்தேன்..
மிகவும் மகிழ்ந்தேன்..நம்முடன் வாழும் நல்லவர்களை பற்றி அவர்கள் வாழும்போதே மற்றவர்களுக்கு உரைப்பதென்பது பாராட்டப் பட வேண்டிய ஒன்று...