Wednesday, July 9, 2008

வீட்டுல விருந்தாளிகள்!!!!

" அம்மா தேர்வு முடிந்ததும் உங்ககிட்ட ஒண்ணு கேட்பேன். மாட்டேன்னு சொல்லக்கூடாது"
இப்படியான பீடீகை, உருட்டல், மிரட்டல் ஏப்ரல் மாதத்திலிருந்து வர ஆரம்பித்தது...
தேர்வு முடிந்து ரிஸல்ட்டும் வந்தாயிற்று.... அலுவலிருந்து திரும்பியதும் ஓர்நாள்...
" அம்மா இன்னிக்கு கேப்பேன் .. ஆனா இப்ப இல்ல.. நீங்க சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வெடுங்க அப்ப கேட்பேன்..."
" சொல்லு இப்பவே.."
" இப்ப சொன்னா கண்டிப்பா " நோ" தான் சொல்லுவீங்க.."
பையனுக்கு நம்பளோட பல்ஸ் தெரிஞ்சுருக்கே... பரவாயில்லையே...சரி.. அதுக்கே 10 மார்க் குடுத்தாச்சு..
" அம்மா தமிழ் படிக்கவா?..."
அட, என்ன ஆச்சர்யம்?.. வேப்பங்காய குடுத்தாகூட அப்படியே சாப்பிடுவான்.. தமிழ் படிக்கப்போறானா அவனேவா??????
ஹிஹி.. சரி 20 மார்க்...
படித்துக்கொண்டே, " அம்மா, அது ஒண்ணும் அவ்வள்வு விலையெல்லாம் இல்லை.. வேணுமின்னா என்னோட செலைவையெல்லாம்
குறைத்துக்கொள்கிறேன்.."
" இப்ப நீ சொல்ல போறியா இல்லையா?.. இதென்ன டிராமா?.."
" இல்லம்மா.. நீங்க ஹேப்பி மூட் வந்தப்புரம்.."
அட நான் எப்ப ஹேப்பி மூட்ல இல்லை?.. சரி பாவம்.. 30 மார்க் வரை கொடுத்தாச்சு.. ஆனாலும் உள்ளூர கலக்குது..
என்னத்த பிளான் பண்ணியிருக்கானோ?.. ஒருவேளை நண்பர்களை வீட்டில் தங்க அழைப்பானோ?..நேரம் ஒதுக்கமுடியாதே.
இல்ல மறுபடியும் அம்யூஸ்மெண்ட் விளையாட்டு ன்னு ஏதாவது?.. அய்யோ முடியாது..
பேசாம லீவுக்கு இந்தியாவுக்கு அனுப்பியிருக்கலாம்... எனக்கு வேணும்... சின்னவனுக்கு துணையிருப்பான்னு நினைச்சேன்...
எல்லா வேலையும் முடிந்ததும், பூனைகுட்டி போல மெதுவா, " அம்மா, அம்மா ன்னு " வழியுறான்...
" சொல்லு.."
" அம்மா நல்ல மூட்ல இருக்கீங்களா?.."
" அது முக்கியம் இல்லம்மா.. தேவைன்னா மட்டும்தான் கிடைக்கும் தெரியுமில்லையா?.. அம்மா மாட்டேன்னு சொன்னா
அழக்கூடாது...சரியா?."
இப்பவே பொத்துன்னு முகம் கீழே தொங்க ஆரம்பித்தது..
" சரி சொல்லு.. உதவ பார்க்கிறேன்.."
" அம்மா."
"ம்."
" அம்மா... ஒரு ஹெம்ஸ்டர் வேணும்...குட்டிதான் அம்மா.. நான் நல்லா பாத்துப்பேன்.."
" தம்பி..........."
" அம்மா இருங்க சொல்லி முடிக்கிறேன்... தயவுசெய்து அதுக்குள்ள " நோ" சொல்லாதீங்க...ஹேம்ஸ்டரால எந்த பிரச்சனையும் இல்லை.
அதுக்கு சாப்பாடு , சுத்தப்படுத்துதல் எல்லாம் நான் பார்த்துப்பேன்...யாரையும் தொந்தரவு செய்யமாட்டேன்..."
உனக்கே ஒருத்தர் வேலை செய்யணூம்.. இதுல ஹேம்ஸ்டர் வேறயா?..
" அம்மா, நாய் தான் வாங்கித்தரல, அட்லீஸ்ட் பூனை அதுவுமில்லை... எனக்கு போரடிக்குது..."
எப்படியோ நல்லா என்னை ஐஸ் வெச்சு அழுது, சாதிச்சுட்டான்.. அடுத்த பிரச்சனை அப்பாவை சமாளிக்கணும்..
மனத்தில் டயலாக் ஓடுது.. கேள்வியும் நானே... பதிலும் நானே...
அடுத்த நாள் அவனை அழைத்துச்சென்று வாங்கி வந்தாச்சு... ஒண்ணு மட்டும் கேட்டவன், அங்கு சென்றதும்,
பிளீஸ், என்று 1000 முறை கெஞ்சி, கடைக்காரர் என்னை மிக கொடுமைக்காரியாய் எண்ணுவதற்குள் வாங்கித்தரவேண்டிய
நிர்பந்தத்துக்குள் சதி செய்துவிட்டான்..
இப்ப 3 நாளா அதுகூடதான் .அதுக்கு சொக்கா போடாத குறை.. " அம்மா இந்த துண்டை எடுத்துக்கவா?.."
இணையத்தில் அது குறித்து அனைத்து செய்திகளையும்
வாசித்து, அதுக்கு ராஜ உபசாரம் நடக்குது வீட்டில்... அது என்னடான்னா, ஒரு சுற்றும் வீல் ஒண்ணில் ஏறி நாள்
முழுதும் ஓட்டிக்கொண்டிருக்கும்.. அதை தினமும் தோட்டத்துக்கு அழைத்துச்செல்வதும், அவனை சுற்றி ஒரு மழலைப்பட்டாள கூட்டமும்.
எப்படியோ பொழுது போகுது.. வீட்டை இரண்டு பண்ணுவதோடு, எப்பவும் அதைப்பற்றியே பேசிப்பேசி ..ஷ்ஷ்ஷ்ப்பப்பா..
நேற்று சின்னவனுக்கு காய்ச்சல் ( அதுதான் ரொட்டீனா வருமே..) அடுத்த தலைவலி ஆரம்பம்.. பாட்டுக்கள் ஆரம்பம் அப்பாவிடமிருந்து..
ஹேம்ஸ்டர் வந்ததால் காய்ச்சலும்.. இத்தனைக்கும் அவனை அதன்கிட்ட கூட நெருங்க விட மாட்டான் பெரியவன்..
மத்தளத்துக்கு 2 பக்கம் மட்டும்தான் இடி..
ஹிஹி.. எனக்கு எல்லா பக்கமும்...விருந்தாளிங்கள எப்படி அனுப்பமுடியும்???/

No comments: