Wednesday, July 9, 2008

தொடர்ச்சி...- பாகம் 1.

அலீமாவின் வீட்டுக்கு சென்று பார்த்தோம் அவளால் வேகமாக நடக்கமுடியவில்லை... முதுகில் வலி.. மாத்திரை சாப்பிட்டும் நிற்கவில்லையாம்..

மேலும் பல பரிசோதனைக்கு பரிந்துரைத்தார்களாம்.. அவளுக்கு பயம் .. தண்டுவடம் டிஸ்க் விலகியிருக்கலாமோ என.. வாழ்நாளெல்லாம் கஷ்டப்படணுமே என கவலை..

சொல்லும்போதே கண்களில் நீர்த்துளி..எனக்கும்.." அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது.. இருந்தாலும் மருத்துவ உலகில் இப்ப நவீன சிகைச்சையுள்ளது.. சரியாகிவிடும்.."

என ஆறுதல் சொல்ல, " இல்லை, ஆயுசுக்கும் இருக்குமாம்.. எனக்கு குழந்தைகள் பத்திதான் அதிக கவலை " என்கிறாள்..

" அப்படி ஒன்று நேர்ந்தால் ஆயுசுக்கும் நானிருக்கேன் அலீமா.." என்று மட்டுமே என்னால் கூற முடிந்தது...எனக்கு உள்ளே பயம் அதிகரித்தது...அவள் வேதனை குறித்தும், இன்னும் என்னை நல்ல நிலைமையில் வைத்திருக்கும் கடவுளை நன்றியோடு எண்ணியும்..நான் செய்ய வேண்டிய வேலை அப்ப நிறைய இருக்கு போல...

அவள் கணவரே எல்லா பணிவிடைகளும் செய்கிறார் அன்பு மனைவிக்கு...

--------------------------------------

3 வருடம் முன்பு.. சலீம் அழைக்கிறார்.. " சாந்தி ஒரு விஷயம். அலீமா வந்து சொல்வாள்.."

என்னவாயிருக்கும்.. வரும்வரை சஸ்பென்ஸ் தாங்கவில்லை.. உள்ளே நுழைந்தவளைப்பார்த்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சி.. வாயும் வயறுமாய்..

அதே நேரம் நானும் அதே நிலைமையில் இருப்பதை பார்த்தௌம் அவளுக்கும் மகிழ்ச்சி..

இருவருக்கும் இரண்டாவது குழந்தை 3 மாத வித்யாசத்தில்.. பிரசவத்துக்குமுன் ஓர்நாள் அவளை பார்ப்பதற்காக நான் வருகிறேன் என்றபோது,

" என் கணவர் வந்து அழைத்து வருவார்.. வீடு மாற்றியுள்ளோம்... சிரமம் வேண்டாம் என்றாள்.."

அடுத்த 1 மணிநேரத்தில் பலத்த மழையில், அவர்கள் வண்டி வந்தது.. மூத்த மகன் ஓடிவந்தான் .. ஏறச்சென்றபோது அதிர்ச்சி...

ஓட்டுனர் இருக்கையில் அலீமா... " என்ன இது.. நீயேன் இந்த நேரத்தில் மழையில் வண்டியை ஓட்டிக்கொண்டு?" திட்டினேன்..

" என் கணவர், உங்களுக்காக இந்திய உணவு ( ரொட்டி ) தயாரிக்கிறார்.. அதனால்தான்..."

இப்படித்தான் 300 கிமீ பயணத்தைகூட சாதரணமாக ஓட்டிச்செல்வாள்.. அதுவே முதுகுவலி வந்திருக்குமோ?..

என் பையன் அதிசயிப்பான், அம்மா ஆண்டி உங்களவிட ரொம்ப ஸ்மார்ட் என்று .. பெருமையாயிருக்கும்...என் தோழியைபற்றி..

என்னவென்று சொல்வது அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை, இல்லை, அன்புத்தொல்லையை...???இப்படித்தான் அதிகமா என்னை வருத்தப்படச்செய்வாள்

டெலிவரி சமயம் கண்டிப்பாக என்னை கூப்பிடு.. நான் வருவேன் உடனே என்றேன்.. குழந்தை பிறந்தபின் கூப்பிடுகிறாள்.. எனக்கு உதவ நினைப்பாளே தவிர,

என்னிடம் உதவி கேட்டு என்னை தொந்தரவு செய்துடக்கூடாது என்று நினைப்பாள்...

கணவருக்காக பாகிஸ்தான் உடையணிந்து முஸ்லீமாக மாறி, பாகிஸ்தான் சென்று உறவுகளையும் 2 மாதம் மகிழ்ச்சிபடுத்தி வந்தாள்..

இன்றும் அலுவல் விஷயமாய் மட்டும் தாய்லாந்து உடை, மற்றபடி பாகிஸ்தான் உடையில்.. .

சிலரிடம் அன்பு காட்டினால் ஏமாறலாம்.. ஆனால் அலீமா போன்றோர் அதை பன்மடங்காக்கி திருப்பித்தருகிறார்கள்....நான் இப்ப கடனாளியாய்..

-------------------அடுத்து நான் பார்த்து வளர்ந்த ( சரஸ் ஆன்டி) கடவுள்...------------------------------------------------------

No comments: