Wednesday, February 25, 2009

பெரியவா சொன்னா...................குட்டிக்கதை..:)

பெரியவா சொன்னா...................

" டேய் எந்திரிடா.." வடிவேலு எழுப்பிக்கொண்டிருந்தான் விஜையை....

" ம்ஹூம் .. மாட்டேன்... " சொல்லிவிட்டு குப்புற படுத்துக்கொண்டான்...

" டேய் , கண்ணா, நீ இன்னிக்கு ஊருக்கு போய்டுவேன்னுதானே டா என் பிரண்டஸயெல்லாம் வரச்சொல்லிருக்கேன்...

ஏண்டா இப்படி இம்சை பண்ணுறே...கெ...ள...ம்...பு..டா
.....பிளீஸ்..."

எழுந்து உட்கார்ந்தான் விஜய்..

" அந்த சோகக்கதய ஏண்டா கேக்க?"

" அய்யோ.. ஆரம்பிச்சுராதடா... எனக்கு வேலை இருக்கு.. வேணுமானா செந்தில் ஃப்ரீயா இருக்கான் அவன்கிட்ட சொல்லு .."

தப்பிச்சவனை பிடித்து இழுத்து பக்கத்தில் அமர்த்தினான்...


"டேய் எனக்கு ஒன்ன விட்டா யாருடா இருக்கா... பாருடா.. ஆச ஆசயா ஊருக்கு கெளம்பினா இப்ப வரவேண்டாம்னு சொல்றாங்க...கேட்டா ஓவர் அட்வைஸ்... டேய் ஊருல ஒலகத்துல என் வயசுப்பசங்க எல்லாம் கல்யாணம் பண்ணி 2 பிள்ளைக்கு அப்பனா திரியிறாங்க... ஆனா என் பேச்ச கேட்கமாட்டேங்கிறாங்கடா...

அவுங்க பேச்ச நான் கேட்கணுமாம்.. ,... ஜெனரேஷன் கேப்.. புரிஞ்சுக்க மாட்டேன்றாங்களேடா..

சொன்னா, " பாரு உன் அக்காவ அவ எங்க பேச்ச கேட்டு ஜம்முன்னு இருக்கா பாருன்னு சொல்றாங்க..."

" சரி சரி நீயும் கொஞ்சம் விட்டுக்கொடுத்துதான் போயேண்டா.. பெரியவங்க மனசு கோணாம.."

" வந்துட்டாரு இவுரு அட்வைஸ் பண்ண, ஓசில என்கூட தங்கிட்டு, எனக்கே அட்வைஸா...?"

" இல்லடா, தங்கமே, செல்லமே, நீ சொல்லு கண்ணு கேக்குறேன் ( தலையெழுத்து....) அவ்வ்வ்வ்வ்வ்"

"ம்.. அப்படியே மெயிண்டைன் பண்ணு குறுக்கால பேசாத...என் பிரண்ட் அப்படி பண்ணித்தான் இப்ப விவாகரத்துல போய் நிக்குதுடா....."

" ஆமா.."

" என்ன இருந்தாலும் நமக்கு கெடக்கிற மரியாதை, காதல் அதுல இருக்கிறதா தெரியல டா..."

" சர்தான்.."

"கட்டின சுடிதாரோட வந்தாகூட போதும்...நான் பாத்துக்குவேன் டா.என் பொறுப்பு...."

"ரைட்டு.."

' அவ என்னை பாக்க... நான் அவளை பாக்க..... அவ நிலத்தை பாக்க....அது ஒரு சொகம்டா..."

" சோ................கம்..."

" என்ன..."

" இல்ல சொகம்தான்... நீ சொல்லு...."

"அய்யோ ஒத்துகிற மாட்டேங்குறாங்களேடா.... என் நெலமய தாண்டி வந்தவங்க தானே அவுங்களும்... ஏண்டா இப்படி?."

" கர்...உர்....." குறட்டை சத்தம்....

" தன் மகனின் இஷ்டத்தையும் கொஞ்சம் காது குடுத்து கேக்கணூம்டா இந்த பெற்றோர்...தான் பிடிச்ச பிடிவாதமாய் இருந்தால் எல்லோருக்குந்தான் நஷ்டம்..."


".."

" அவுங்க இஷ்டப்படி பள்ளிக்கூடம், ஆடைகள், கல்லூரி, வேலை... எல்லாத்தையும் தட்டாமல்தானே செய்து வந்தோம்... கல்யாணத்தில் மட்டும் ஏன் இவ்வளவு பிடிவாதம்...பிடிக்கிறாங்க பெற்றோர்...?"

"..."

" டேய், நான் என்ன கதையா சொல்லிட்டிருக்கேன்...அடப்பாவி...தூங்கிட்டியா...???" தலயணையை எடுத்து வீசுகீறான்...

அதிர்ந்து தெளிந்து எழுகிறான்.....வடிவேலு..


" சொல்லு டா, இதுக்கொரு முடிவு சொல்லுடா......" கையை பிடித்து கத்துகிறான்...


" நான் என்ன டா சொல்ல... இப்பவே போன போட்டு, "

" போட்டு..??'


" உங்க அப்பாகிட்ட..."

" அப்பாகிட்ட...???"


" நீ காதலிக்கிற பொண்ண கட்டிக்க சம்மதம் பேசுறேன் ...சரியா... கைய விடு..."

" அடேய் மவனே.. இன்னிக்கு உன்ன இரண்டுல ஒண்ணு பாக்காம விடப்போறதில்ல....." தேடுகிறான் எத வெச்சு அடிக்க என்று..

" ஏன் .. நான் இப்ப தப்பா என்ன சொல்லிட்டேன்னு இம்புட்டு கொலவெறி..?"

" அதத்தேன் எங்க அப்பாவும் சொல்றாருடா... காதலிக்க சொல்லி.... பொண்ணுக்கு எங்கடா போவேன்...?.. இவுரு மட்டும் நல்லா பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு பொண்ணு பார்த்து, கெத்தா மாப்பிள்ளை ஊர்வலம்லாம் போய் கல்யாணம் பண்ணுவாறு... நான் மட்டும் நானே பாத்துக்கணுமாம்.... நியாயமாவா இருக்கு....?"

" ஓ.. அப்படியாஆஆஆஆஆஆஆஆஆஆ" எந்த பக்கமா ஓடலாம்னு கண்ணை உருட்டி பார்த்துவிட்டு வடிவேலு ஓட்டமாய்....

2 comments:

cute baby said...

இது பெரியவா சொன்ன கதையா? இல்ல உங்க சோக கதையா?

எண்ணங்கள் 13189034291840215795 said...

நமக்கெல்லாம் இப்படி ஒரு அப்பா கெடக்கலியே க்யூட் பேபி....