Tuesday, February 24, 2009

ஒதுக்கப்பட்ட கல் ‍ பாகம் 4

ஊரோரமாய் ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு....



மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து டாடா சுமோவில் ஏற்விட்டு,

" ஏம்மா , வீடு செல்லுமுன் எங்கள் தோட்டம் ஒன்று உள்ளது அஹை பார்த்துவிட்டு செல்வோமா"
என கேட்டாள் நளினா...

" தாராளமாய்.. வீட்டில்தான் பேசணும் என்றில்லை .உங்கள் வேலை எதுவும் தடைபட வேண்டாம்..." என்றாள் புன்னகையுடன்..


வாகனம் சென்ற வேகத்தில் ஜன்னலின் அருகில் அமர்ந்திருந்தவள் முகத்தில் விழும் கூந்தலை கூட மெதுவாக பின்னுக்குத் தள்ளிவிடும் அழகை ரசித்தாள் மலர்..

அவளின் சோகக்கதையை எப்படி ஆரம்பித்துதெரிந்து கொள்வது என்பதில் தடுமாறிக்கொண்டிருந்தாள்..


" இப்படித்தான் இருக்கும் நான் வளர்ந்த ஊரும்...ம்.." என பெருமூச்சு விட்டவள்,

" ஆமா நான் எதுல நிப்பாட்டினேன் ..?...ம்.. ஆஹ்ஹ்..ஆமா... நான் பள்ளியில் வகுப்பறையில் அமர்ந்திருக்கும்போது,

பள்ளி அலுவலர் ஒருவர் வந்து என் ஆசிரியரிடம் ஏதோ முணுமுணுக்க, அவர் என்னை அழைத்து தலைமை ஆசிரியர் அறைக்கு செல்லுமாறு பணித்தார்..


நானும் ஏதாவது நடனப்போட்டி , பாட்டுப்போட்டிக்காய் இருக்கும் என்றே மகிழ்வுடன் சென்றேன்..

அங்கு சென்றதும், என் அண்ணா அழுத முகத்தோடு நின்றுகொண்டிருந்தான்....

உடனே கலவரமடைந்தேன்....


தலைமை ஆசிரியரை கூட கண்டுகொள்ளாமல் ஓடி சென்று அண்ணாவை பிடித்து உலுக்கினேன்...

கண்டிப்பாக அம்மாவுக்குதான் ஏதோ ஆகியிருக்கணும் என்று....பயத்தில்..
.

அவனோ, " அப்பாவுக்கு........."


அதற்குள் தலைமை ஆசிரியர் வந்து என்னை தாங்கிப்பிடித்துக்கொண்டு அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் இருப்பதாகவும் எல்லாம் சரியாகிவிடும் என என்னென்னவோ சொன்னார்.... எதுவும் அந்த கணத்தில் ஏறவில்லை...

உடனே அப்பாவை பறந்து சென்று பார்க்கணும்போல் இருந்தது...

அண்ணாதான் சைக்கிளில் வைத்து வேகமாய் ஒட்டி சென்றார்...அதுவரை அதிர்ச்சியில் இருந்த நான்,

கத்தி அழ ஆரம்பித்துவிட்டேன்....


பின் மருத்துவமனையில் சென்றதும் அப்பாவை ஐ.சி.யு.வில் வைத்திருந்தபடியால் யாரையும் அனுமதிக்கவில்லை....

என்னுடைய வாழ்வில் தாக்கிய முதல் சோகம் அது...



அதன் பின் அப்பாவின் செயல்கள் அனைத்தும் பாதியாக குறைக்கப்பட்டன....


இனி எப்போதும் வரலாம் அதே அட்டாக் என்பதால் மிக கவனமாக இருந்தோம்...


நான் 10ம் வகுப்பு தேர்வு முடிந்த வேளை, அண்ணா கல்லூரி மூன்றாவது வருடம்... அது வரை விட்டு வைத்திருந்த உயிர் எங்களையெல்லாம் பெரும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு சென்றது...


அம்மா படுத்த படுக்கையில்.....

நான் மேற்கொண்டு படிக்க இயலாத நிலைமை....

அண்ணா, மாமாவின் பட்டரையில் வேலைக்கு சேர்ந்தான்.


இப்பத்தான் பல உறவுகளின் உண்மையான சுயரூபங்கள் தெரிய ஆரம்பித்தது....


பக்கத்தாத்து கிட்டு மாமா கொஞ்சம் மன வளர்ச்சி குன்றிய தன் மகனுக்கு என்னை பெண்கேட்டு வந்தார்...


அடுத்த தெருவில் இன்னொருவர் ரைஸ்மில்லை கவனித்துக்கொண்டு ரவுடித்தனம் பண்ணும் தன் கடைசி மகனுக்கு

தானே எல்லாம் செய்வதாய் சொல்லி பெருமையாய் பெண் கேட்டார்...


இதெல்லாம் ஏன் என்று பார்த்தால் , என் ஜாதகம் சரியில்லையாம்.... போகிற இடம் அழிந்துவிடுமாம் என பரவலாய் ஒரு பேச்சு.... அதையும் கிட்டு மாமாவே செய்துள்ளார்... அவருக்கு எப்பவுமே என்மேல் ஒரு கண்ணு..


மாமி வெகுளி...

அப்பப்ப எனக்கு உதவி செய்வதாய் அங்கங்கே தொடுவார்... என்னால் இதை யாரிடமும் சொல்ல கூட முடியாத நிலை...


ரோட்டில் நடந்து சென்றால் பார்வையிலேயே எல்லாத்தையும் மேயும் வெறி கொண்ட நாய்களின் பார்வை...

அப்படியே செருப்பை கழட்டி அடிக்கலாமா, கொன்று விடலாமா என்று தோன்றும் அப்போதெல்லாம்...

ம்.. எப்படியெல்லம் வளர்ந்த நான் இன்று பலருக்கு விருந்தானேன்
...." பெருமூச்சு விட்டாள்....


பின் என் மாமா, தன் பெண்ணை என் அண்ணாவுக்கு மணமுடித்துவிட்டு அம்மாவையும் அழைத்து செல்ல எண்ணி,

என்னை இரண்டாம் தாரமாக 45 வயது காரருக்கு மணம் முடித்து வைத்தனர்...


நடக்கின்ற எதையும் எதிர்க்கும் திராணியில்லை எங்க மூவருக்கும்..


திருமணம் ஆனதும்தான் தெரிந்தது பகலில் மூத்த தாரத்துக்கு பணிவிடை செய்யவும், இரவில் அவருக்கு விருந்தாகவும் , சொத்துக்கு வாரிசு பெத்துபோடுவதுமே என் வேலை என்று...

அப்போதுதான் முதன்முதலாக வாழ்க்கை வெறுத்து தற்கொலை செய்ய எண்ணினேன்...

ஆனால் அதற்கும் கடவுள் வழிவிடாமல், அடுத்த பிரச்னையை தந்தார்...

அடிமை மாதிரி நடத்தியவர்கள் கருவில் குழந்தை சுமக்க ஆரம்பித்ததும் கொண்டாடினார்கள்..


குழந்தை பிறந்து 3 மாதம் என்னிடம் , அதன்பின் என்னிடம் தராமல் பிரிக்க ஆரம்பித்தார்கள்..."


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______________

அதற்குள் தோட்டமும் வந்தது......


வேலையாள் ஒடி வந்து கதவை திறந்து விட்டு, இளநீர் வெட்டி தந்தான்...அன்போடு..

சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள் மலர்.... சோலையாக மலையடிவாரத்தில் குளு குளு என்றிருந்தது...


அதை அறிந்தவளாய்,

" இந்த தோட்டத்தை எனக்கு பரிசாக தந்துவிட்டு கோபித்து சென்றவர் இதன் முதலாளி.." என சொல்லிவிட்டு

விழுந்து விழுந்து சிரித்தாள்...


வியப்புடன் " ஏன் அப்படி "'

எனக்கேட்டாள் மலர்... " நான் அவரை கல்யாணம் செய்ய்வில்லை "என்கிற கோபம்...

அவருக்கு அருமையான குடும்பம் உள்ளது...மேலும் இத்தொழிலுக்கு வந்தபின் பலரும் மீண்டும் குடும்ப வாழ்க்கைக்கு

செல்வதில்லை.. அப்படி ஓர் தாழ்வு மனப்பான்மை உண்டு...

ஒரு 10 வருடமாக கடவுள் மீதும் வெறுப்பு கொண்டிருந்தேன்...

பணம் சம்பாதிப்பதில் வெறியாயிருந்தேன்...

என்னை அனுபவிக்க ஆசைப்பட்டவரையெல்லாம் என் காலடியில் விழச்செய்து அதில் என் கோபத்துக்கு பழி தீர்த்தக்கொண்டேன்...

என்ன செய்தாலும் உள்மனம் அமைதி அடையவேயில்லை....


என் குழந்தையை மட்டும் நல்லதொரு கான்வெண்டில் படிக்க வைத்தேன்....

அந்த பாதிரியார், மிக மிக நல்லவர், அன்பானவர்.........எல்லாருக்கும் உதவி செய்பவர்...


ஆனால் ...................அவருக்கும் .............மாதமொருமுறை..
.. என சொல்லி புன்னகைத்தாள்...


பின் அவசரமாய், " இதையெல்லாம் எழுதிவிடாதேம்மா" என்று கேட்டுக்கொண்டாள்.....


______________________________
__தொடரும்___________________



No comments: