Tuesday, February 24, 2009

ஒதுக்கப்பட்ட கல் - பாகம் 3






மேகமே மேகமே வானிலா தேயுதே..


பேசிக்கொண்டிருக்கும்போதே தொலைபேசி அழைக்கிறது . ஒரு சினிமா பாடல் ஒலியில்..

இருவரும் பரஸ்பரம் புன்னகைக்கிறார்கள்...

நளினாவோ, தொலைபேசியை அருகில் வைத்து பார்த்ததும் மேலும் புன்னகைக்கிறாள்...

" ஹலோ..."

" "

"ம்.நல்லாருக்கேன்.. நான் அப்புரமா பேசவா.. இங்க ஒரு முக்கிய விருந்தாளி வந்திருக்காங்க..."

" "

" ஹ .. ஹா.. நீங்க ரொம்ப முக்கியமான ஆள்தான் யார் இல்லன்னு சொன்னா...ஹஹ.."

" "
" சரி...மன்னிக்கவும் நானே.. திரும்பி கூப்பிடுறேன் ..."

அதற்குள் மலர் எழுந்து வாயில் அருகில் சென்றாள்....அவளுக்குத்தேவையான தனிமையை தர..

" பரவாயில்லை நீ உட்காரும்மா... நான் அப்புரமா பேசுவதாய் சொல்லியுள்ளேன்...."

" இல் ..........ல நீங்.....க பேசியிருக்கலாமே.."

". அவர் ஒரு பெரிய அரசியல்வாதிமா... ."

" ஓ யாரு.." அவசரமாய் இயல்பான ஆசையில் கேட்டுவிட்டாள் மலர்.

" ஹ.. மன்னிக்கவும் மா .. பேர் சொல்ல மாட்டேன் யாரிடமும்... ஹிஹி.. இது ஒரு வித தொழில் ரகசியம்னு வெச்சுக்கோங்களேன்..."

" ஓ ..மன்னிக்கவும்.. நாந்தான் தவறா கேட்டுட்டேன்.."

".ம். பரவால்ல... இவரை எனக்கு கடந்த 5 வருடமாகத்தான் தெரியும்...எங்க தொகுதிக்காரர்தான்.. ஆனால் என்னுடைய கஸ்டமர் இல்லை.."

" அப்படியானால்..?.."

"அதாவது எங்கள் தொகுதியின் ஏழை மக்களிடம் நான் கொஞ்சம் பாப்புலர்...ஆகையால் அவர்கள் ஓட்டு வேண்டி என்னிடம் வருவார்கள்.."

"ஓஹ் அப்ப வெற்றி பெற்றா சொன்னபடி செய்வாங்களா..?"

" வெற்றி பெற்றா இல்லை... பெறுவதற்கு முன்னாலே, எங்கள் தேவைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கே எங்கள் ஓட்டு...

இப்படி பல வழிகளில் , மருத்துவமனை, சாலை வசதி , பள்ளிக்கூடம், வேலைவாய்ப்பு , என பல முன்னேற்றம் பெற்றுள்ளார்கள் ஏழைகள்.."

" ஆஹா இது நல்ல யோசனையால்ல இருக்கு... ஆமா ஒருவேளை அவர்கள் அப்படியும் தோற்றுவிட்டார்கள் என்றால்..?"

" ம். அப்படியும் நடந்துள்ளது... ஆனாலும் அவர்கள் பெரிதாக எடுப்பதில்லை.. மக்கள் அவர்களை பாராட்டிக்கொண்டிருப்பதால் அந்த புகழ் போதையே அவர்களுக்கு போதுமானது போல்.."

" ஆச்சர்யமாய் தான் இருக்கு..."

சொல்லிக்கொண்டிருக்கும்போதே மலருக்கு தொலைபேசி அழைப்பு... இது 3 வது முறையாக...கணவரிடமிருந்து..

" ம்."

"ம்."

" இல்ல இன்னும் முடியலை.."

" "
" ஒண்ணும் பிரச்னையில்லை.. நான் வந்துடுவேன்.." மெல்லிய குரலில் சொல்லுகிறாள்..."


" என்னம்மா உன் கணவரா?.. மணிக்கொருதரம் அழைக்கிறார்... ரொம்ப பிரியமோ?.."

புன்னகைக்கிறாள் பதிலேதும் கூற முடியாமல்...

" கொடுத்து வைத்தவள் நீ என நினைக்கிறேன்..."

அதற்கும் புன்னகை..

" இப்படி ஒருத்தர் எனக்கு கிடைத்திருந்தால் நான் இந்த தொழிலுக்கு வந்திருப்பேனா?.."


ஒண்ணுமே சொல்ல முடியவில்லை மலருக்கு..."ம்." மட்டும் கொட்டினாள்...

எல்லாம் தலையெழுத்து வேற என்ன சொல்ல...

அவளாக குடும்ப கதையை தொடருவாள் என நினைத்தாள் மலர்.. ஆனால் நேரமாகிக்கொண்டே இருக்கிறது...

பாவம் பிச்சையா அண்ணாவும் , சுதிரும் காத்திருப்பார்கள் தோட்டத்தில்...

மீண்டும் இன்னொரு நாள் தொடரலாமா, இல்லை, அவர்களை அனுப்பிவிட்டு இவள் மட்டும் முடித்துவிட்டு செல்லலாமா என யோசனை..

சரி எதற்கும் அவர்களையும் கலந்தாலோசிக்கலாம் என நினைத்தவளாய், விபரங்களை நளினாவிடம் சொன்னாள்...

அவளும் சரி வாம்மா தோட்டத்துக்கு போகலாம் அன அழைத்துக்கொண்டே பக்கவாட்டில் உள்ள தோட்டத்துக்கு சென்றார்கள்..

வண்ண மலர்கள் பூத்து குலுங்க துளசி மாடத்தினை சுற்றி, செடிகளுக்கருகில் மூங்கில் நாற்காலியில் அமர்ந்து இளநீர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள் இருவரும்..

போகும்போதே கேட்கிறாள் நளினா, மலரிடம்...

" இந்த மாதிரி பெண்கள் இத்தொழிலுக்கு வர யார் காரணம்னு நினைக்கிறே,,,?"

"என்ன சந்தேகம் .. சமுதாயம்தான்.." என 100% சரியான விடையை சொல்லிவிட்டோம் என்ற திருப்தியில்...

"ம்ஹூம்...ம்ஹூம்.." விரக்தியில் தலையை ஆட்டினாள் நளினா..."

" அப்போ" சட்டென்று நின்றவளாய் ஆச்சர்யத்துடன் அசையாது நளினாவை நோக்கினாள் கண்கள் சுருக்கி...

" குடும்பம்தான்... .."

"கு....டு...ம்..ப...மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ" திறந்த வாயை மூடாது நின்றாள் நளினா...

பின் சுதாரித்தவாளாய், அதற்குள் இருவரும் அருகில் வந்ததால் விவரம் சொன்னாள்..

" எனக்கொண்ணும் பிரச்னையில்லைமா.. நான் இந்த வாரம் முழுதும் இங்குதான் இருப்பேன்... எப்போ வேணுமானாலும் தொலைபேசிவிட்டு வரலாம்.."

".. ஓஹ்.. மிக்க நன்றி.. அப்படியானால் நான் சென்றுவிட்டு நாளை அல்லது மறுநாள் வருகிறேன்..."

அதற்குள் சுதிர், மேடம் ஒரு புகைப்படம் மட்டும் பிளீஸ்..: " என்றான்..

" மன்னிக்கவும் சில காரணங்களுக்காக நான் அனுமதிப்பதில்லை..."

அதற்குள் மலருக்கு கோபம் வந்தது.." அவங்கதான் ஏற்கனவே வேண்டாம்னு சொன்னாங்கல்லா." என கண்காளாலேயே கோபத்தில் விழிகளை உருட்டி பேசினாள்..

" அய்யோ இல்லீங்க மேடம் .. உங்க தோட்டத்தை மட்டும்.. அவ்வளவு அழகா இருக்கு இந்த தோட்டம்.. இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தா நாங்க இரண்டு பேரும் இங்கேயே தூங்கியிருப்போம்"

என சொல்லவும் எல்லாருமாய் சிரித்தார்கள்....

வேனில் ஏறி செல்லும்போதெல்லாம் ஏதோ வெகுநாள் பழகிய ஒரு உறவை விட்டு பிரிவதாகவே உணர்ந்தாள் மலர்...

அத்தனையையும் அசைபோட்டவளுக்கு " அவள் குடும்பத்தில் நேர்ந்த அந்த கொடுமையான விஷயம் என்ன என தெரிந்து கொள்ளாமல் வந்ததில் தலையே வெடித்துவிடும் போல குழம்பினாள்..

பக்கத்தில் சாப்பிட்டுக்கொண்டே கணவனுக்கு உணவு பறிமாறும்போதும் தயிர் ஊற்றுவதற்கு பதிலாய் மீண்டும் சாம்பாரை ஊற்ற போனாள்...பின் அவன் " ஏய் என்னாச்சு..." னு சொல் கேட்டு சரிசெய்தாள்..

மறுநாள் அலுவலகத்தில் ஆசிரியர்,

" என்னம்மா சட்டு புட்டுன்னு முடிச்சுட்டு வருவியா, ஊர் கத ஒலக கதையெல்லாம் பேசிட்டு இருந்தியாக்கும்... ஒரு போட்டோ கூடவாடா உனக்கு எடுக்க சாமர்த்தியம் இல்லை..?"

என்று திட்டிக்கொண்டிருந்தார்...

" இந்த பாரும்மா., அவ சொந்த கத சோகக்கதயெல்லாம் வேணாம்.. பத்திரிக்கை வீற்கிற மாதிரி, கவர்ச்சியான தலைப்புல போடணும்.. உள்ளே மேட்டரும் படு கவர்ச்சியா குளு குளுன்னு ஜில்லுன்னு இருக்கணும் " னு

ஆடிக்கொண்டே கையை விரித்து பேசிக்கொண்டிருந்தார்...

" சார் உங்களுக்கும் 3 பெண்.. இருக்குன்னு கொஞ்சமாவது நினைப்பிருக்கா..." னு மனதிலேயே பேசிக்கொண்டாள்..

" என்ன முணுமுணுக்கிற..?"

" ஒண்ணுமில்ல சார் இத ஒரு தொடராய் எழுதலாம்னு...."

" செய்யி.. தாராளமா செய்யி.. யார் வேணாமுன்னா.. நமக்கு தேவையெல்லாம் நம்ம ரோஜாப்பூக்கள் பத்திரிக்கை வித்தாகணும்.. அவ்வளவுதான்..சம்பளம் தரணூமோல்லியோ?"

என்று ஏதோ பெரிய ஜோக் ஒன்றை சொல்லிவிட்டவர் போல் சிரித்தார்....

குரூரமான எண்ணத்தை வெறுப்புடன் ஆனால் சகித்துக்கொண்டு,

" சரி சார் ,நான் கிளம்புறேன்." என்று கிளம்பி விட்டாள்..

அங்கு சென்றால் நளினா இல்லை... தொலைபேசியிலும் அழைக்கமுடியவில்லை..

" அம்மா உங்களை மருத்துவமனைக்கு வரச்சொன்னார்கள்.. தெரிந்த பெண் ஒருத்திக்கு அவசரமாக சிகிச்சைக்கு...போயுள்ளார்கள்..

உடனே அங்கு சென்றாள் மலர்..

அங்கு கோபமாக திட்டிக்கொண்டிருந்தாள் ஒரு பெண்ணை...கூட இரு பெண்களும் மருத்துவரும்...

" எத்தனை முறை சொல்லிருக்கேன் கவனமா இருன்னு...உன் உடம்பு தாங்குமா.. அவனுக அப்படித்தான் சொல்லுவான்க.. உனக்கெங்க போச்சு புத்தி.."


' சரி விடு மீனா... இப்ப என்ன செய்ய ம்உடியும் நான் பாத்துக்கிறேன் .. நீ கவலைப்படாதே" என்றார் மருத்துவர்...

நேரங்கெட்ட நேரத்தில் வந்துவிட்டோமோ என தயங்கி, ஒதுங்கி நின்றாள் மலர்...

கவனித்துவிட்டவள் , " வாம்மா எப்ப வந்த " என மிக அழகாக புன்னகையோடு வாஞ்சையோடு கைபிடித்தாள்.....

" அவங்க "

' ம். அவ என் பழைய காலத்து தோழி..இப்ப மருத்துவர்...:)."



*********************************************தொடரும்*****************************************


No comments: