Monday, August 30, 2010

இன்னா செய்தாரை - குட்டிக்கதை..
































" டேய் , எப்படியாவது போட்டுத்தள்ளணும்டா." .. ரிச்சி


" ஆமாண்டா. சாதாரண வக்கீல் பொட்டச்சிக்கு என்ன இம்புட்டு திமிரு.?" பீட்டர்

" நாம யாருன்னு காட்டணும்டா.." சாம்..

" பெரிய நீதிபதின்னு இவளுக்கு நெனப்பு.. ஒழுங்க புள்ள குட்டிய பார்த்துட்டு இருக்க முடியாதோ?..
எல்லார் தப்பையும் தட்டி கேட்பாளாம்.. தட்டி வெச்சா அடங்குவா.."

" இப்படி நம்மள ஒட்டு மொத்தமா நஷ்ட ஈடு வழங்க வெச்சுட்டாளே டா.."


" அவளுகளுக்கு ஆதரவு கொடுக்கிறானுங்க பாரு ************** அவனுங்கள சொல்லணும்.."

" என்ன புரளி சொன்னாலும் அசர மாட்டேங்காளடா.. "

" கெழவி டா.. அவள போய்.. சீ தூ... "
கேவலமாய் பேசி தங்களுக்குள்ளே சிரித்து ஆற்றாமையை தீர்த்துக்கொண்டனர்..

--------------------------------------------------------------


" டேய் தெரியுமா சேதி.. இன்னிக்கு நாம படிச்ச பள்ளிக்கு வராளாம்.. என்னமோ விருதெல்லாம் கொடுக்க போறாளாம்... "

" நம்ம பள்ளி யில் இவளுக்கென்ன வேலை..? .. படுபாவி.. சும்மா விடக்கூடாது டா.. பிளான் சொல்லு.."

" கெளம்புடா நாமளும் போவோம்.. போகும்போது சொல்றேன் என் பிளானை.."


------------------------------------------------------------

பல்வேறு
சிறப்பு நிகழ்ச்சிகள் , விளையாட்டுக்கு பின் பரிசளிப்பும் விருதும் ..

" நல்லொழுக்க விருது " ரிச்சி " என்ற முன்னாள் மாணவர் பெயரால் வழங்கப்படுகிறது.. "

கைதட்டல்.


சிறந்த சமூக சேவை விருது " பீட்டர் " என்ற முன்னாள் மாணவர் பெயரால் வழங்கப்படுகிறது..
"

கைதட்டல்.


சிறந்த
மாணவன் விருது " சாம்" என்ற முன்னாள் மாணவர் பெயரால் வழங்கப்படுகிறது..



பலத்த கைதட்டல்.



பின்
அந்த பெண் வக்கீல் பேசுகையில் ,

அந்த 3 மாணவரையும் வாழ்நாள் முழுதும் எல்லோரும் நினைவு கூறும் வகையில் தான்
இவ்விருதுகளை அறிவித்ததாக சொன்னார்..

கையிலுள்ள கத்திகளை அங்கேயே போட்டுவிட்டு வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்க கூட தகுதியின்றி வெளியேறினார்கள் , ரிச்சி, பீட்டர் , மற்றும் சாம்...

ஆனால் அடுத்த விருதுக்கு தம்மால் இயன்ற உதவியை செய்யணும் என்ற தீர்மானத்தோடு...

-------------------------------------------------------------------------------
நன்றி படம்: கூகுள்



( சமீபத்திய பிரச்னையில் பின்னூட்டம் இட்டவர்களும், தனிமடல் அனுப்பியவர்களுக்கும் நன்றி சொல்ல மறந்திருந்தால் என் மன்னிப்புகள்..

அறிமுகமில்லாத நட்புகளின் ஆறுதல் அளவிடமுடியாதது.. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி
..)

6 comments:

சிங்கக்குட்டி said...

நல்ல கருத்து, இடுகை அருமை.

எனக்கு கொஞ்சம் குழப்பம், இது கதையா அனுபவமா?

எண்ணங்கள் 13189034291840215795 said...

வருகைக்கு நன்றி சிங்கம்

கதைதான்..

ஆனால் இப்படி இன்னா செய்தாரை அவர் நாண , நன்னயம் செய்தவர்களை கண்டுள்ளேன்...

நாடோடி said...

குற‌ளுக்கு ச‌ரியான‌ விள‌க்க‌க் க‌தை .. :)

R.Gopi said...

இன்னா செய்தாரை ஒருத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்....

இந்த குறளுக்கு மிக பொருத்தமான இருக்கிறது இந்த குட்டிக்கதை....

இது போல் மேலும் பல நல்ல பதிவுகள் பதிய வாழ்த்துக்கள்....

உண்மைத்தமிழன் said...

சிறந்த கருத்து..! நன்றி..!

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி கோபி , உண்மைத்தமிழன்.