Sunday, June 27, 2010

பிராயசித்தம் - சிறுகதை..







மொபைலையும் இமெயிலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் முருகேசன்...

" ஏங்க இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க.." டாக்டர் மனைவி 10 வது தடவையா
புன்னகையோடு சொல்லிவிட்டு முதுகில் ஒரு தட்டும் தட்டிவிட்டு சென்றாள்.

இந்தியா சென்றிருந்த மகன் லோகேஷோட அழைப்புக்காக

காத்திருந்த
முருகேசனுக்கு எதுவுமே காதில் விழவில்லை..

ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங்....................ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங்.....................

டக்கென எடுத்தார்..


" கண்டுபிடிச்சுட்டேன் அப்பா.."
பதிலேயில்லை.. மகிழ்ச்சியில் மூச்சு முட்டுவது போலிருந்தது

" அப்பா ..அப்பா என்னாச்சு இருக்கீங்களா..?."


" சொல்லுப்பா ரொம்ப மகிழ்ச்சி..சரி மதன் கிட்ட விபரம் சொல்லிட்டு நீ கிளம்பி
வந்துடு.."

" மரகதம் , நாம இப்பவே இந்தியா கிளம்புறோம்.. "

" என்னங்க நீங்க .மருமகள் பிரசவ நேரம். அவளோட பெற்றோர் வந்திருந்தாலும் நானும் கூட இருந்தா தான் நல்லாருக்கும்.. நீங்க கிளம்புங்க.."

---------------------------------------------------------


" என்னால இனியும் வச்சுக்க முடியாது உங்கம்மாவ.. உங்க தம்பிகிட்ட அல்லது
முதியோர் இல்லத்துல விடுங்க.. மீறி வெச்சிருக்கதுன்னா நான் போறேன் எங்கப்பா வீட்டுக்கு.."

குழந்தைகளை இழுத்துக்கொண்டு மாடி ஏறினாள் நீனா..
செய்வதறியாமல் திகைத்து நின்றான் சரவணன்,..

" நான் தான் சொன்னேன்ல மா.. அவ குணத்துக்கு கொஞ்சம் அனுசரிச்சு போ னு.. வாரத்துல ஒரு முறை வீட்டுக்கு வரேன்.,. வந்தா நிம்மதியில்லை.. "

மகன் நிலைமை கண்டே கண்ணீர் வடித்தாள் தாய்..

" சரி வாப்பா தோச ஊத்துறேன்.. " எதையும் மனதில் வைக்காமல் அழைத்தாள்
மகனை..

" நீங்க என்னம்மா நினைக்கிறீங்க..? தம்பி கிட்டயும் இருக்க முடியாது.. மாமனார்
வீட்டோட இருக்கான் தொழில பாத்துகிட்டு.. ...........பே.........சா.................ம......" தயங்கினான் மேற்கொண்டு சொல்ல...

அதை கேட்டு அழ கூட வலுவிழந்தவளாய் திரையை விலக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள் முத்துலெஷ்மி..

---------------------------------------------------------------------------

" அட்ரஸ் சரிதானேப்பா.?.. இந்த குறுகலான தெருவிலா.. இரு யாரையாச்சும்
கேட்டுக்குவோம்.."முருகேசன் மதனிடம்..

" ஏம்ப்பா தம்பி, இந்த முத்துலெச்க்மி அம்மா வீடு...??? " முடிப்பதற்குள்.,

" அத்வா சார், தோ லெஃப்டுல கட் பண்ணி நேர போனீனா , கட்சீ வீட்டுக்கு முந்தின பச்சை பெயிண்ட் வீடு.. "

" மதன் , 40 வருடம் கழிச்சு பார்க்க போறோம்..நான் தனியா மொதல்ல போறேன் .
கார் இங்கயே நிற்கட்டும்.." இறங்கி நடந்து வீட்டு வாசலில் கால் வைக்கிறார்..பழைய நினைவுகளோடு...

----------------------------------------------------------------------------

" போறதுன்னா அந்த காவலியோட போய்டு.. குடும்பத்தோட செத்து
தொலையுறோம்.."

" அப்பா எனக்கொண்ணும் தெரியாது.. என்ன நம்புங்கப்பா.." கதறுகிறாள்...

முத்துலெஷ்மியின் பெட்டியை வீசுகிறார் அவர் தகப்பன்..

" மன்னிச்சுருங்க சார்.. தப்பு என்மேல தான்.. என்னை தண்டியுங்க சார்.. " காலை பிடிக்கிறான் முருகேசன்..

" போடா பொறுக்கி .. ஏழை பையன்னு இலவசமா படிப்பு சொல்லி கொடுத்ததுக்கு
நன்றியாடா நாயே.."

-----------------------------------------------------------------------

"என்ன இன்னும் முடிவு பண்ணலையா .. சரி நீங்க இருங்க உங்கம்மாவோட .. நானும் பிள்ளைகளும் கிளம்புறோம்.."

" இரு .. இரு.. பேசலாம்.."

" எனக்கு பொறுமையில்ல..அவங்களே சுமை.. இதுல அவங்கள பார்க்க வருகிற கூட்டத்துக்கும் கொட்ட உங்கப்பா சொத்தா இருக்கு.. ?.."

" நானே போறேன் மா.. நீ அவனையும் குழந்தைகளையும் நல்லபடியா பாத்துக்கோ
மா.. "

" அது எனக்கு தெரியும்.."


பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியவர் இதுநாள் வரை தேக்கி வைத்திருந்த
அழுகையை மொத்தமாக கொட்டவும், வாசலில் கேட்டை பிடித்தபடியே அதிர்ச்சியில் நின்றிருந்த முருகேசனை கண்களை சுறுக்கிக்கொண்டு சந்தேகத்தோடு பார்த்தாள் முத்துலெஷ்மி....


" இப்பவாவது என்கூட வருவியா எங்க வீட்டுக்கு லஷ்மி.. உனக்காக அங்கே ஒரு
கூட்டமே இல்ல இல்ல குடும்பமே காத்திருக்கு..........."

------------------------------------------------------------------------------------

13 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அவ்வ்வ்வவ்வ்வ். சத்தியமா எனக்கு புரியல சாந்தி மேடம். ரெண்டு தபா படிச்சிட்டேன்

Unknown said...

நல்லா இருக்குங்க. ஆனா இரண்டாம் முறை படிக்கும் போதுதான் புரிந்தது.

எண்ணங்கள் 13189034291840215795 said...

வருகைக்கு நன்றி ரமேஷ் , கலாநேசன்.

ரமேஷ் இந்தாங்க கோனார் நோட்ஸ் . இப்ப புரியுதான்னு பாருங்க,....

" 40 வருடம் முன்பு முத்துலெஷ்மி அப்பாவால் வீட்டை விட்டு துரத்தப்பட்டாள்.. இப்ப மருமகளால்.. முதல் முறை முருகேசனின் இயலாமை.. 40 ஆண்டுகள் கழித்தும் மனசாட்சி உறுத்தியமையால் அவளை தேடி வருபவருக்கு அவளை அழைத்து செல்லும் சந்தர்ப்பமே கிடைக்குது.."

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

புரிஞ்சிடுச்சு.தேங்க்ஸ்

Gayathri said...

எதார்தமா எழுதிருக்கிங்க நல்லா இருக்கு ..

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றி காயத்ரி

பூங்குழலி said...

நல்லா இருக்கு சாந்தி ...

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றிங்க பூங்குழலி..

எல் கே said...

nalla myarchi

எண்ணங்கள் 13189034291840215795 said...

நன்றிங்க எல்கே.

ஜானகிராமன் said...

ஏறக்குறைய கதையின் பெரும்பாலான நடை உரையாடலில் வைத்திருப்பது சிறந்த முயற்சி. உண்மையில் இது போல் எழுதுவது கடினமும் கூட. நல்ல கதை. நன்றி.

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஜானகிராமன் said...

ஏறக்குறைய கதையின் பெரும்பாலான நடை உரையாடலில் வைத்திருப்பது சிறந்த முயற்சி. உண்மையில் இது போல் எழுதுவது கடினமும் கூட. நல்ல கதை.

------------------

அதுதான் என் தனித்தனமைங்க.. அனேகமா உரையாடலிலேதான் கதை எழுதியிருக்கேன்.. தொடர்கதைகளும் கூட...

ரொம்ப நன்றிங்க இதை கண்டுபிடித்தமைக்கு..

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஜானகிராமன் said...

ஏறக்குறைய கதையின் பெரும்பாலான நடை உரையாடலில் வைத்திருப்பது சிறந்த முயற்சி. உண்மையில் இது போல் எழுதுவது கடினமும் கூட. நல்ல கதை.

------------------

அதுதான் என் தனித்தனமைங்க.. அனேகமா உரையாடலிலேதான் கதை எழுதியிருக்கேன்.. தொடர்கதைகளும் கூட...

ரொம்ப நன்றிங்க இதை கண்டுபிடித்தமைக்கு..