Thursday, April 24, 2008









தாய்லாந்தில் வருடப்பிறப்பு ( ஏப்ரல் 13-15)


----------------------------------------------------------
தாய்லாந்தில் கொண்டாடப்படும் அனைத்து விசேஷங்களிலும் முக்கியமானது "சொங்க்ரான்"( songkran) எனப்படும் தாய்லாந்து வருடப்பிறப்பே..இது பக்கத்திலுள்ள கம்போடியா, லாவோஸ், மற்றும் பர்மாவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது...



சொங்க்ரான்" என்பது சமஸ்கிருதத்திலிருந்து வந்த வார்த்தையாகும். அதாவது சூரியன் மற்ற ராசிக்குள் பிரவேசிப்பதை குறிப்பது..முக்கியமாக மேஷ ராசிக்குள்..அதன் முழுப்பெயர் மஹா சொங்க்ரான் எனவும் அழைக்கப்படுகிறது...



இந்த விடுமுறை நிச்சயிக்கப்பட்ட ஒன்று.. ஏப்ரல் மாதம் 13ம் தியதி ஆரம்பித்து 15ம் தியதி முடிவடையும்..சிலசமயம் 16ம் தியதியும்..
இது இந்தியாவில் ஹோலி பண்டிகையைப்போலவும் கொண்டாடப்படுகிறது...



இதுதான் தாய்லாந்து மக்களின் பாரம்பரிய திருநாள், விழா எனலாம்..அவர்கள் முழுமையாக விடுமுறையுடன் குடும்பத்தாருடன் இன்பமாக தண்ணீர் தெளித்து கொண்டாடுவார்கள்.
இத்திருநாளில் புத்த கடவுளுக்கும் பெரியவர்களுக்கும் வாசனை திரவியத்துடன் கலந்த தண்ணீர் வழங்கி மரியாதை செலுத்துவார்கள்.பழையன கழித்து ,வீடு கோவிலை சுத்தம் செய்வார்கள்.



ஊர் முழுவதும் தண்ணீர் லாரிலாரியாக வைத்து போவோர் வருவோர் எல்லோர் மேலும் அடித்து விளையாடுவர் வயது வித்தியாசமில்லாமல்.. எல்லோரும் அதை நகைச்சுவையாகவே ஆசீர்வாதமாகவே ,எடுத்தும்கொள்வர்...மேலும் முக்கிய காரணம் கொளுத்தும் வெயில் காலத்துக்கு தண்ணீர் விளையாட்டு சுகமாகவும் இருக்கலாம்..
இது சிஃபி.காம் இல் சித்திரை சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரை.

No comments: