Tuesday, October 26, 2010

திரில்லர் மலை /தீவு பயணம்.. - 4























































-------------------------------

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து சுமார் 330 கிமீ தூரம் அமைந்துள்ளது கோ சாங் ( KO CHANG) என்ற தீவு.. , திராட் ( TRAT ) மாநிலத்தில்..சாங் என்றால் யானை என்று அர்த்தம்..

கிட்டத்தட்ட 4 மணி நேர பயணம் , படகு பயணமும் சேர்த்து.. காரிலேயே படகில் தீவுக்கு செல்லும் வசதி உள்ளது..


கம்போடியாவின் பார்டர் அருகில் அமைந்துள்ள இத்தீவு தாய்லாந்தின் இரண்டாவது மிகப்பெரிய தீவு புக்கெட் ( Phuket ) க்கு அடுத்ததாக..

வெள்ளி மணற்கடற்கறைகளும், நீர்வீழ்ச்சிகளும், பவளப்பாறைகளும் , மழைக்காடுகளும் பசுமை மாறாமல் காட்டுலாகாத்துறையினரால் மிக அருமையாக பராமர்ரிக்கப்பட்டு வருவதால் சுற்றுலாவுக்கு மிக சிறந்த இடம்..

கிட்டத்தட்ட 5000 குடியிருப்புகள்...

ஸ்நார்கெலிங் , ட்ரெக்கிங் , டைவிங் , விரும்பிகளுக்கு ஏதுவான இடம்..யானை மேலே ஆற்றில் பயணம் , காட்டு மரங்கள் பயணம் போன்ற அட்வென்சர் விளையாட்டுகளும்..

http://www.treetopadventurepark.com/

http://www.koh-chang.com/banchangthai/INDEX.HTM


http://www.kohchangbookingandinformation.com/Koh_Chang_elephant_ride_Trek_jungle.asp


திரில் விரும்புபவருக்கு சொர்க்கம்.. ( மலைப்பாதையில் வண்டி ஓட்டுவது மிக ரிஸ்கான விஷயம்.. அதுவும் நாங்க சென்றது இரவு நேரம் , மழையில் )

வழக்கம் போல இரவு நேரம் களை கட்டுது கடற்கரை..பாடல் ஆடலுடன்..

http://www.koh-chang.com/

தங்கும் விடுதிகளின் விலையும் அதிகமில்லை.. .. இணையம் மூலம் முன்பதிவு செய்யலாம்..

அனேக இடங்களில் ரோட்டின் மேலேயே ஆற்றின் நீர் ஓடுகிறது.. அங்கேயே இறங்கி குளிக்கவும் செய்கிறார்கள் .. அத்தனை தெளிவான சுத்தமான நீர்..

275 சதுர கி.மீ உள்ள தீவை சுற்றி பார்க்க மோட்டார் பைக்/சைக்கிள் வாடகைக்கும் எடுக்கலாம்..சில இடங்களில் காரின் சக்கரம் மண்ணில் சிக்கினால் தள்ளவும் வேண்டும்.. ஆங்காங்கே மலை உச்சியில் வியூ பாயிண்ட் வைத்துள்ளார்கள்.. மேகத்துக்கு நடுவே சாரலில் நனைந்தபடி சுற்றியுள்ள இடங்களை பார்ப்பது பிரம்மாண்டம்..கூடவே அதிகளவு கழிப்பிடங்களும் வசதியாக சுத்தமாக உள்ளது..

திரும்பும் வழியில் பத்தயாவில் தங்கி வரலாம்..

அடுத்து சந்தபுரி மாவட்டத்தில் உலக புகழ் மிக்க ஜெம் கற்கள் விற்பனை செய்யும் இடம்.. அனேக இந்தியர்கள் அங்குதான் வாங்குவதுண்டு...

http://www.khulsey.com/jewelry/gems_thailand.html

அங்கேதான் சுமார் 275 வருடம் பழமை வாய்ந்த தேவாலயம் Cathedral of the Immaculate Conception இருக்கின்றது..


http://thailand-cathedral-catholic.blogspot.com/2009/06/immaculate-conception-cathedral.html


அங்கேயே பல நீர்வீழ்ச்சிகளும் ..கட்டணம் வாங்கிக்கொண்டு பராமரிப்பதால் மிக பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் உள்ளது.

http://www.naturethai.net/National-Park-in-Eastern-Thailand/Namtok-Phlio-National-Park.html

http://www.thailandbethere.com/Provinces/ENG/Files/Chanthaburi/EG_Phlio_Waterfall.htm


அடுத்த முக்கிய இடம் அலையாத்தி காடுகள் , அவை சார்ந்த படிப்புகள், ஆராய்ச்சிகள்...குங் க்ரபேன் பே ( Kung Krabean Bay )

http://www.google.co.th/images?hl=en&biw=1280&bih=834&gbv=2&tbs=isch:1&aq=f&aqi=&oq=&gs_rfai=&q=kung%20krabaen

http://iluvthailand.wordpress.com/2008/01/29/mangrove-forests-at-kung-krabaen-bay/



அடுத்து குழந்தைகளுக்கான விளையாடும் இடமான ஒயாசிஸ் சீ வேர்ல்ட்.. டால்பினோடு குளித்து விளையாடி மகிழலாம்..


http://www.laemsing.com/23_oasis_sea_world_laemsing.html


http://www.swimwithdolphinsthailand.com/




எல்லாம் பார்த்து முடித்து வருவதற்கும் , மகனின் பள்ளி தோழர்கள் கூடைப்பந்து போட்டிக்கு வர சொல்லி விடாப்பிடியான அழைப்புகள்

வரவும் சரியாக இருந்தது..என்னமோ இவர் இல்லைன்னா மேட்ச்சே விளையாட முடியாத மாதிரி.. பில்டப்..

உலக மஹா அன்பையும் , ஐஸ் ஸையும் பொழிந்து இன்னும் 1 மணி நேரத்தில் பாங்காக் செல்லணும் என பத்தயாவில் சொல்ல ,

முதன்முறையாக 140 வேகத்தில் வீடு வந்து சேர்ந்து , உடுப்பு , ஷூ எடுத்துக்கொண்டு பள்ளி சென்று விட்டால் ,

" பரவாயில்ல நல்லாத்தான் ஓட்டுறீங்க " னு ஆணாதிக்கத்தோடு பாராட்டிய மகனையும் , அவன் தோழர்களையும் என்ன சொல்ல..?..:)

( பசங்களை வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டினால் , " முந்துங்க , முந்துங்க, இன்னும் வேகம் , லேன் மாறுங்க ,

போன்ற பேச்சுகள் இலவசம்... அதுவும் இங்கு மலைப்பகுதியில் கரணம் தப்பினால் மரணம்தான்.. மிகப்பெரிய லாரிகளை/கண்டெய்னர்களை லாவகமாய் கூட ஓட்டும் பெண்கள் அதிகம் இங்கே,.. )


ஆக தாய்லாந்து வந்தால் த்ரில்லோடு பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் ... முக்கியமா இம்மக்களின் இனிதான உபசரிப்பும் சேவையும்....


படம் : நன்றி கூகுள்..

------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த பதிவு குறித்து , தனிமடலில் பாராட்டிய , நன்றி கூறிய , பல தகவலகள் தந்தவர்களுக்கு என் நன்றிகள்..

பாராட்டுக்காக நான் எழுதவில்லை.. " சகோதரி நாங்க சொல்ல தயங்கியதை நீங்கள் எடுத்துறைத்தமைக்கு நன்றிகள் " போன்ற கடிதங்களுக்கு நன்றி..

அதே போல எதிர்ப்பார்த்த சில திட்டு பின்னூட்டங்களும் , கேள்விகளும்..

இதை விவாதமாக்கி என்னை நிரூபிக்க போட்ட பதிவல்ல , எதிர்வினை மட்டுமே என புரியவும்...

இங்கு யாரையும் திருத்த வேண்டியது என் வேலையல்ல..நமக்கு உபயோகமான/கற்றுக்கொள்ள முக்கிய வேலைகள் இதை விட நிறைய இருக்கிறது..

ஆனாலும் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியதை சொல்லிச்செல்வோம் அவ்வளவே...


ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் பலருக்கும் சமூகத்தின் மீதான அக்கறை கண்டு வியந்தேன்.. முக்கியமா இள வயதினர்... என் நன்றிகள்..


--------------------------------------------------------------------------------------------------------------------

3 comments:

ராம்ஜி_யாஹூ said...

thanks for sharing

ராம்ஜி_யாஹூ said...
This comment has been removed by a blog administrator.
ம.தி.சுதா said...

படங்களும் தகவலும் மிகவும் அருமை....