skip to main  |
      skip to sidebar
        
      
        
      


விடியற்காலையில் ஆதவன் வருகையை விழிவைத்து பார்த்து ரசிக்கையில் விரைவாய் நாசி ஏறுது கீழ்வீட்டிலிறுந்து 
விழுங்குவது போல் சிகெரெட் புகை 
ஆமாம் நானும் புகை பிடிக்கிறேன்.  
அரக்க பரக்க அலுவல் செல்ல 
அள்ளிபோட்டதை வாயில் மெல்ல 
அருகே  புகை வர , பிடிக்கிறேன் 
அஞ்சு பைசா செலவில்லாமல் 
ஆமாம் நானும் புகை பிடிக்கிறேன்.மனம் மகிழ சினிமாவுக்கு போனா 
மப்போடு மனிதன் பின்னாலிருக்க 
மயக்கமாய் வருது புகை நெளிந்து 
மன்றாடினேன் , புகை பலமாய் வருது.  
ஆமாம் நானும் புகை பிடித்தேன் விரும்பாமலே..( கீழ் வீட்டில் இருந்து புகை வருது பால்கனி வழியே. புகைபிடிப்பவனை திட்ட முடியாமல் அவசரமாய் ஒரு கவிதை..:))  )
பாசிவ் ஸ்மோகிங்  தான் அதிக ஆபத்தும்.. தயவுசெய்து நிறுத்துங்க  மக்களே...:)
 
 
 
 ஊருக்கு போகிற மகிழ்ச்சியேதுமில்லாமல் பெட்டியை கடமைக்காக அடுக்கிக்கொண்டிருந்தார் கதிரேசன்.ஒரு வார காலமாக சுறுசுறுப்பு ஏதுமில்லாததை கவனித்திருந்தான் ஹமீது.. கேட்கணும்னு நினைத்தாலும் தன்னை விட வயதிலும் பதவியிலும் பெரியவராய் இருப்பதால் வாய் வரை வந்ததை தள்ளிப்போட்டே வந்தான்..ஆனால் இப்ப கேட்டே விடுவது என கேட்டான்." கதிரண்ணா , நானும் பாக்குறேன் ஒரு வார காலமா ஊருக்கு போற  உசாரில்லாம இருக்கிறீகளே.. ஏன் ணா?.." " அதொண்ணுமில்லப்பா.. சம்பாதிப்பது மட்டுமே நம்ம பொழப்புன்னு ஆயி போச்சு..கடைசி வரை இதான் போல.." வெறுமையோடு சொன்னார்.." அதுக்கேண்ணா வருந்தணும்.. நம்ம குடும்பம் நல்லா இருப்பது பெருமைதானே  நமக்கு.. அதுக்கு சின்ன தியாகம்னு நெனச்சுக்கோங்க.." " அப்படித்தான் நெனச்சு 15 வருசம் ஓட்டிட்டேன்.. ஆனா ஒவ்வோரு முறையும் ஊருக்கு போய்விட்டு வரும்போது அங்க நடக்கிற ஆடம்பரமும், அவங்க எதிர்பார்ப்பும்எனக்கு கவலை அளிக்குது.. பணம் என்பது தேவைக்குத்தான் என்ற நிலை மாறி, விட்டா நாய்க்குட்டிக்கு தங்க பிஸ்கட் போட்டாலும் போடுவாங்க போல..இதைவிட சுற்றியிருக்கும் பொய் சொந்தங்களும்..ம்..ம்.  என்ன சொல்ல..." "சரி ணா , அப்ப நான்  சொல்றத கேளுங்க.."  கலங்கலாய் தெரிந்த மேகத்தை வருத்தமாய் பார்த்து விமானத்தின் ஜன்னலை மூடினார் தூங்கிட..-------------------------------------------------------------------
ஊருக்கு போகிற மகிழ்ச்சியேதுமில்லாமல் பெட்டியை கடமைக்காக அடுக்கிக்கொண்டிருந்தார் கதிரேசன்.ஒரு வார காலமாக சுறுசுறுப்பு ஏதுமில்லாததை கவனித்திருந்தான் ஹமீது.. கேட்கணும்னு நினைத்தாலும் தன்னை விட வயதிலும் பதவியிலும் பெரியவராய் இருப்பதால் வாய் வரை வந்ததை தள்ளிப்போட்டே வந்தான்..ஆனால் இப்ப கேட்டே விடுவது என கேட்டான்." கதிரண்ணா , நானும் பாக்குறேன் ஒரு வார காலமா ஊருக்கு போற  உசாரில்லாம இருக்கிறீகளே.. ஏன் ணா?.." " அதொண்ணுமில்லப்பா.. சம்பாதிப்பது மட்டுமே நம்ம பொழப்புன்னு ஆயி போச்சு..கடைசி வரை இதான் போல.." வெறுமையோடு சொன்னார்.." அதுக்கேண்ணா வருந்தணும்.. நம்ம குடும்பம் நல்லா இருப்பது பெருமைதானே  நமக்கு.. அதுக்கு சின்ன தியாகம்னு நெனச்சுக்கோங்க.." " அப்படித்தான் நெனச்சு 15 வருசம் ஓட்டிட்டேன்.. ஆனா ஒவ்வோரு முறையும் ஊருக்கு போய்விட்டு வரும்போது அங்க நடக்கிற ஆடம்பரமும், அவங்க எதிர்பார்ப்பும்எனக்கு கவலை அளிக்குது.. பணம் என்பது தேவைக்குத்தான் என்ற நிலை மாறி, விட்டா நாய்க்குட்டிக்கு தங்க பிஸ்கட் போட்டாலும் போடுவாங்க போல..இதைவிட சுற்றியிருக்கும் பொய் சொந்தங்களும்..ம்..ம்.  என்ன சொல்ல..." "சரி ணா , அப்ப நான்  சொல்றத கேளுங்க.."  கலங்கலாய் தெரிந்த மேகத்தை வருத்தமாய் பார்த்து விமானத்தின் ஜன்னலை மூடினார் தூங்கிட..-------------------------------------------------------------------
 
விமான நிலையத்திலிருந்து இறங்கியதுமே விளங்கிப்போச்சு தன்னை வரவேற்க கால் டாக்ஸி மாட்டுமே வந்திருப்பதை..
நேராக வீட்டுக்கு போனதும் மனைவியும்  குழந்தைகளையும் தவிர்த்து எப்போதுமிருக்கும் சொந்த பந்த கூட்டம் யாரும் இல்லை..
 
நிம்மதியாயிருந்தது.. ஆனாலும் காண்பித்துக்கொள்ளவில்லை..
குளித்து ,உணவருந்தி முடித்ததுமே மனைவியிடம் இருந்து வெடுக்கென கேள்வி வந்தது..
" வேலை போயாச்சு..அப்ப இனி என்ன செய்வதாய் உத்தேசம்?.. எங்க அப்பா கேக்க சொன்னாங்க.."
 
பதிலேதும் பேசவில்லை. கை கழுவிவிட்டு சென்றார்.
பெரியவனும் சின்னவளும் மலங்க மலங்க விழித்தார்கள்.. அப்பாவிடம் சகஜமாக எப்போதும் போல் 
சிரித்து பேசலாமா , இல்லை அம்மா திட்டுவாளா என..
அவர்களுக்கு வாங்கி வந்த பொருள்களையும் தயக்கத்துடனே வாங்கி சிரிப்பை நன்றியாக உதிர்த்துவிட்டு சென்றார்கள்..
 
2 நாள் மெளனமாக கழிந்தது ,தொலைபேசி அழைப்புகள் கூட இல்லாது.. வித்யாசமாயிருந்தது..
 முன்பெல்லாம் விருந்துண்ண பெரிய கால்ஷீட் தயாராகும்.. கூடவே ஊர்சுற்ற கார்களும் வேன்களுமாய் களைகட்டும்.....
சாயங்காலமாய் காலாற நடந்து வரலாம் என தெருவில் நடந்தால் தினமும் பார்ப்பவரை பார்ப்பதுபோல் கடமைக்காக 
 
புன்சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு சென்றார்கள்...தையல் கடை திருமால் மட்டும் மாறவில்லை.. அவன் கடையில் உட்கார்ந்து ஊர் நிலவரம் தெரிந்துகோண்டார்...
எங்கே வேலை கேட்டு தன்னிடம் வருவானோ என்ற பயம் சந்திக்கும் அனைவரின் முகத்திலும் படர்ந்திருந்தது..
 
ஒரு வாரம் கழித்தே மச்சினனும் மாமனாரும் வந்தார்கள்... அன்று மட்டும் விசேடமாய் கறிக்குழம்பு வாசம் அடித்தது வீட்டினுள்..
ஏற்கனவே திட்டமிட்டபடி அவர்களுக்கு சாதகமாய்  வியாபாரத்தில் வந்து கலந்துகொள்ள வேண்டினார்கள்..
 
அதுவும் கூட தான் அனுப்பிய பணத்தில் வந்த வியாபாரம் என்பதை பேச்சிலும் தவறி உணர்த்திடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள்..
தான் ஆசையோடு கட்டி குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு மாமனார் ஊரில் வந்து வாடகைக்கு வீடெடுத்து குடியிருக்க இலவச அறிவுறையும் வழங்கினார்கள்..
 
தன் முன் பேசவோ உட்காரவோ அஞ்சிய மைத்துணன் எல்லாம் இப்ப அறிவுறை அள்ளி வழங்கும் பெரிய மனிதனாக்கப்பட்டான்...தன் மனைவியாலேயே..
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டார் கதிரேசன்..
படிப்பில் நாட்டம் காட்டாத மனைவி இப்போது பிள்ளைகளை எதிர்கால பயம் குறித்து மிரட்டி படிக்க வைத்தாள்..
 
கழுத்தில் ஏறியிருந்த கனமான நகைகளும் தலையில் உள்ள கனங்களும் இந்த ஒரு மாதத்தில் வெகுவாக குறைந்திருந்தது...
வருடாவருடம் இருப்பதுபோல் பேருக்கு கூட விருந்தாளியில்லை, கல்யாண வீடோ, திருவிழாக்களோ , ஷாப்பிங்கோ இல்லை..
 
மறுநாள் காலை வேலை தேடுவதாக சொல்லிவிட்டு 2 நாள் கழித்தே திரும்பி வந்தார்..
வந்ததும் இனியும் தன் விடுமுறை 2 வாரமே இருப்பதால் குடும்பத்தினரை வருத்திடக்கூடது என எண்ணியவராய், மனைவி பிள்ளைகளை அழைத்தார்.
வருமானம் தரக்கூடிய 2 தோட்டங்களையும் , அதனோடு அமைந்த வீட்டையும் விலை பேசியிருப்பதை காண்பித்தார்..
 
" இப்ப எதுக்கு இது "  என அவசரப்பட்டு பேச முனைந்த மனைவியை செய்கையால் அமர்த்தினார்.
அருகிலுள்ள ஊனமுற்றோர் மற்றும் முதியோர் இல்லத்துக்கு மாதாமாதம் தான் பணம் அனுப்புவதாய் வாக்களித்த பத்திரத்தையும் காண்பித்தார்.
 
இவருக்கென்ன பித்து பிடித்ததா என எரிச்சலோடு உள்ளே செல்ல எண்ணிய மனைவி கையை பிடித்து அமர வைத்தார்..
மெதுவாக விளக்க ஆரம்பித்தார்..
ஒவ்வொரு முறையும் பணத்தோடு பொருளோடு வரும் தமக்கு கிடைத்த போலி மரியாதையையும், தன் இல்லத்தில் நிரம்பி வழிந்த 
 
போலியானவர்களையும் அவர்கள் நடவடிக்கையையும் , தற்போது வேலையின்றி வந்ததால் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் ஒப்பிட்டார்..
பிள்ளைகளுக்கு பொறுப்பை பற்றி நிதர்சனமாய் எடுத்துச்சொன்னார்..
மனைவியின் ஆடம்பரம் தேவையற்றதாகவும் , தற்போது  ரசிக்கவோ , மதிக்கவோ ஆளில்லாமல் போனதையும் சுட்டிக்காட்டினார்..
 
நிஜமான மகிழ்ச்சியை ஊனமுற்றோர் , முதியோர் இல்லம் சென்று எப்படியெல்லாம் பெருக்கிக்கொள்ளலாம் என மென்மையாக சொன்னார்.. அதில் நம் எல்லோருக்கும் கடமை இருப்பதையும் எடுத்துரைத்தார்..
பொட்டில் அடித்தாற்போல் இருந்தது  குடும்பத்தினருக்கு..
 
தான் மீண்டும் அதே  வேலைக்கு வெளீநாட்டுக்கு செல்வதாக கூறினார்..
தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்பதை கொஞ்சம் கோபத்தை காட்டிவிட்டு புரிந்துகொண்டாள்  மனைவி..
அந்த நாளும் வந்தது... மனைவி கலங்கிய கண்களோடு , 
 
" பணம் மட்டுமே இருந்தா போதும்னு நினைத்திருந்தேன்.. இப்பத்தான் நிஜமான வாழ்வுக்கான அர்த்ததை சொல்லித்தந்தீர்களே, இன்னும் பணம் 
சம்பாதிக்க நீங்க போய்த்தான் ஆகணுமா..?  நம்மிடம் இருப்பதை வைத்து எளிமையாகவே நான் இல்லறம் நடத்துவேனே இனி.. தயவு செய்து போகவேண்டாமே"
 
என கெஞ்சினாள்..
வாழ்நாளில் முதன்முறையாக மனைவியிடமிருந்து இப்படி ஓர் வார்த்தையைக்கேட்டு மனமகிழ்ந்தார் கதிரேசன்..
தன் பொறுப்புகளை மற்றொருவரிடம் கொடுத்துவிட்டு முறைப்படி வேலையிலிருந்து விடைபெற்றுக்கொண்டு வருவதாக சொல்லி விடை பெற்றார் .
 
சிறுவனாயிருந்தாலும் ஹமீது சொன்ன யோசனை ,  வலிகள் பல தந்தாலும் எத்தனை தெளிவை தந்துள்ளது என எண்ணியவாறே 
நிறைந்த மனதோடு விமானத்தின் ஜன்னலில் கடக்கும் மேகங்களை  குழந்தையின் மகிழ்வோடு ரசிக்க ஆரம்பித்தார் முதன்முறையாக....
