Monday, August 18, 2008



சந்தித்த அற்புதமானவர்கள் ‍பாகம் 4 - கண்ணா..

" பாட்டீ"
"" யாரு தம்பி நீங்க.. என்ன வேணும்?.. " "பாட்டி இல்லையா?.. சாவி கொடுத்தேன் .. அதான்.."
என் முகத்தை கூட பார்க்காமல், தயக்கத்துடன் எங்க அம்மா வீட்டு வாசலில்...
" யாரம்மா அந்த பையன்.. ஹஹ உங்களை பாட்டி என்று உரிமையாக கூப்பிடுகிறான்..?'"
தெரியாதா அவந்தான் கண்ணன்.. அவன் அப்பா அமெரிக்காவிலிருந்து வந்து 17 வரடம் பின்பு இப்போதுதான் சேர்ந்துள்ளார்கள் , அவனது பெற்றோர்...அவர்கள் திருமணம் இந்த வீட்டில்தான் நடந்தது...( ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா.. இன்னும் அந்த பாடல் ஒலிக்குது காதில்..)
கண்ணனின் அம்மா நடிகை அஸ்வினி யென்றால் அவன் அப்பா மேஜர் சுந்த்ரராஜன் போல.. அவர்களுக்கு அழகான குழந்தை கண்ணன்..
அவன் பிரசவத்துக்காக இந்தியா வந்த அவரது தாயார், சில குடும்ப பிரச்னையால் அதன்பின் பிரிந்தே வாழ , அது அவருக்கு மனநோயையும் தர, பாட்டி வீட்டிலேயே மாமா, சித்திகளோடு வாழ்ந்துள்ளான் கண்ணன்..
பல வருட ஞானோதயத்துக்குப்பின், அவர் அப்பா எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டை( சொந்த வீடு)சீர்செய்து அவர்களை குடிவைத்துவிட்டு, பையனை நன்றாக படிக்க வைக்க ஏற்பாடு செய்கிறார்...
கண்ணனை எப்படியாவது அமெரிக்கா அனுப்ப முழு ஆதரவும் என் அன்னையிடமிருந்து...பின் அதற்கும் ஏற்பாடு செய்தார்..
யாரிடமும் பேச பழக மாட்டான் கண்ணன்.. அவர் அன்னைக்கோ கொஞ்சம் மன நிலை சரியில்லை.பார்த்தால் தெரியாது.. எல்லா வேலையும் செய்வார்... க‌ண்ண‌ன் மேல் உயிர்..
ராஜாவாட்ட‌ம் பிள்ளை இருப்ப‌து க‌ண்டு பெற்ற‌வ‌ளுக்கும், த‌ந்தைக்கும் பெருமை...ஆனால் அவ‌னால் ப‌டிக்க‌ முடிய‌வில்லை.. அப்போதுதான் நான் க‌ட்ட‌ட‌ பொறியாள‌ரிலிருந்து க‌ணினிக்கு போக‌லாம் என‌ முடிவு செய்து எம்சிஎஸ்சி படிக்க வந்தேன் தாய்லாந்திலிருந்து... நான் படிப்பதை பார்த்து அவனும் புத்தகத்தை எடுத்து வந்து சந்தேகம் கேட்பான்...முகம் கூட பார்க்க மாட்டான்.. ஆனால் என் பையனிடம் நன்றாய் விளையாடுவான்...
நானே நேரமில்லாமல், பையனை பள்ளியில் விடுவதும், வீடெல்லாம் சுத்தி சாப்பாடு கொடுப்பதும், பின் தூங்க வைத்துவிட்டு டவுணுக்கு சென்று படிப்பதுமாய் ஒய்வில்லாமல் இருப்பேன்... ஆனால் இவன் வந்து அமைதியாக உட்கார்ந்திருப்பான்..
எனக்கு அவனிடம் என்ன பேச என தெரியாது... ஏன் வந்துள்ளான் என்றும்.."உனக்கு நண்பர்கள் இல்லையா கண்ணா?.."
" இல்லக்கா எல்லாம் செலவு பண்ணதான் இருக்காங்க.. அப்பா அமெரிக்கா என்பதால்... ஆனால் நானே அதிகம் செலவு செய்ய மாட்டேன்.."
என் பையன் விளையாட அவன் வீட்டில் உள்ள பெரிய வேப்பமரத்தில் ஊஞ்சல் கட்டி தந்தான்... ( அந்த வேப்பமரம்தான் அனைவருகும் மருந்துக்கும் விசேஷங்களூக்கும்.. அது பெரிய கதை..புயல்வரும்போதெல்லாம் பயமாயிருக்கும் எப்ப விழுமோ என..ஆனால் கோடை காலத்தில் அதுதரும் நிழலும், சுகமான காற்றும்.. அற்புதம்..)
இப்படியாக என் சொந்த அக்கா பசங்க மாதிரி வீட்டோடு ஒன்றிவிட்டான் கண்ணன்.. என் பையனுக்கு என விசேஷமாக எது செய்தாலும் கண்ணனுக்கும் உண்டு... சின்ன் பிள்ளைபோல் என்ன நடந்தாலும் என்னிடம் வந்து சொன்னால்தான் திருப்தி அவனுக்கு..
நான் படித்து முடித்து மறுபடி தாய்லாந்துக்கு வந்துவிட்டேன்.. அவனும் அமெரிக்கா சென்றான்..ஆனால் இங்கு செல்லமாக வளர்ந்ததால், அவனால் அங்கு சமாளிக்க முடியவில்லை.. மேலும் ஆங்கிலமும்... இங்கு தமிழில் படித்தவன்..
அடுத்த முறை விடுமுறைக்கு வந்தபோது வருத்தப்பட்டேன் அவனிடம்.. நல்ல சந்தர்ப்பத்தை இழந்தாயே கண்ணா...ஆனால் அவனோ ஒரே சோகமாய் இருந்தான்..
அப்போது திடீரென்று ஓர்நாள் காலை என் வீட்டுக்கு வந்து,
" அக்கா வணக்கம் " என்று சல்யூட் அடிக்கிறான்... மீண்டும் மீண்டும்... நான் துணி காயப்போட்டுக்கொண்டிருந்தேன், அப்படியே அதிர்ச்சியில்..ஒண்ணுமே பேச வரவில்லை எனக்கு... நடிக்கிறானா, விளையாடுகிறானா, இல்லை , என்னாச்சு கண்ணனுக்கு,..?
அப்போதான் தெரிய வந்தது அவனுக்கும் மன நிலை சரியில்லாமல் ஆகா ஆரம்பித்துள்ளது... தீவீர டிப்ரஷனாம்... அப்படியே உலுக்கிவிட்டது ..
சிரிது நேரத்துக்கெல்லாம் மறுபடியும் வந்து மிக சாதாரணாமாய் பேசுகிறான்...
" அக்கா நான் ஏதாவது சொல்லியிருந்தால் தயவுசெய்து மனதில் ஒண்ணும் வெச்சுக்காதீங்க என்று.."
கண்ணீர்தான் வருகிறது அவன் நிலைமை கண்டு...
" அப்படீல்லாம் ஒண்ணும் இல்ல கண்ணா...நீ ஒண்ணும் சொல்லல.. அக்காவும் ஒண்ணும் நெனக்க மாட்டேன்.. சரி தீபாவளிக்கு என்ன பிளான் ?" என பேச்சை மாத்தினேன்...
மிகவும் சந்தோஷமாக தன் அத்தை, வீட்டுக்கு போவதாய் சொன்னான்...
நானும் என் அக்கா வீட்டுக்கு மகனை வெடி காண்பிக்க அழைத்துச்செல்வதாய் சொன்னேன்..
" சீக்கிரம் வாங்க அக்கா.. நானும் நிறய வெடி வெச்சிருக்கேன் என்றான்..
நான் கோவில்பட்டிக்கு சென்றேன்...
தீபாவளி மறுநாள் என் அண்ணாவிடமிருந்து தொலைபேசி.."செய்தி பார்த்தாயா?.." "இல்லையே ணா..."
"முதலில் பார்.."
" சொல்லுங்க என்னாச்சு ன்னு.."
" நீயே பார்.. நம் தெரு பற்றி செய்தியை.." வைத்துவிட்டார் ...
அரக்க பரக்க எடுத்து வாசித்தேன் புரியவில்லை...
மறுபடியும் தொலைபேசியில் அழைத்தேன் ..அப்படியே சிலையானேன் செய்தி கேட்டு...அழுகை கூட வரவில்லை அப்படி ஒரு அதிர்ச்சி...
தீபாவளி விருந்து முடிந்து வீட்டுக்கு வந்தவன் டிப்ரஷனுக்கான மாத்திரை எடுத்துக்கொண்டு, சிகரெட்டும் பிடித்துவிட்டு அணைக்காமலே மாடியில் கதவை பூட்டிக்கொண்டு தூங்கியுள்ளான்...
அது மெத்தையில் பற்றி , தீயாக எரியாமல் , புகை மண்டலத்தில் மூச்சு திணறி இறந்துள்ளான்...
பக்கத்து வீட்டினர் , புகை வருவதைப்பார்த்து தெரிவித்ததும் தான் கீழே அன்னைக்கு தெரிந்துள்ளது.. எப்பவும் மாமன் மார் யாராவது இருப்பார்கள்.. அன்று மட்டும் இல்லை.
அவன்மேல் ஒரு காயம் கூட இல்லையாம்... குளிப்பாட்டி அவனை எடுத்துச்செல்லும் போது தூங்குபவன்போல அவ்வளவு அழகாக இருந்தானாம்...
என் வீட்டில் யாருமில்லை இவையெல்லாம் காண.. எல்லாரும் ஊரில்...
கடைசிவரை அவனைப்பார்க்காமலே...நான் இருந்திருந்தால் நடந்திருக்காதோ என ஒரு நப்பாசை.. ஆறாத ரணம்.. மனதில்..
என்னை மிகவும் உலுக்கியது அவன் மரணம் வாழ்வில் முதன்முதலாக... வாழ்க்கையே வெறுத்துப்போனது இவன் மரணத்தில்.. அவன் அப்பா மொத்தமாக நொறுங்கிப்போனார்...அம்மா ஒரே புலம்பல் ... ஆறுதல் சொல்லவே முடியாதபடி..
சிலசமயம் ஆறுதல் படுத்திக்கொள்வேன் அவன் மனநிலை சரியில்லாததால் கடவுள் அவனை அழைத்துக்கொண்டாரோ, மேலும் கஷ்டம் தராமல்... என..
அதன்பிறகு எத்தனையோ கண்ணன்களை சந்தித்தாலும், அவன் நியாபகம்தான் வரும்...(இணையத்திலேயே 4 கண்ணன் இதுவரை...)
இன்னும் என் வீட்டுக்கு சென்றால், மொட்டை மாடியில், எதிர்வீட்டில் நின்று " அக்கா " என்று புன்னைகையோடு கண்ணா அழைப்பது போலிருக்கும்...அந்த பக்கமே பார்க்கக்கூடாது என்றாலும் மனம் கேட்குமா என்ன... ???
வாழ்க்கையில் பல செய்திகள் பாசத்தோடு சொல்லிவிட்டு சென்றவன் கண்ணன்...

2 comments:

Layman9788212602 said...

ஏன் சிலருக்கு இப்படி நடக்கிறது ? அவன் அன்னைக்கு ஒரே ஆறுதலாக கண்ணன் தான் இருந்திருப்பான். வாழ்கை பல அதிர்சிகளையும் ஆசிரியங்களையும் உள்ளடக்கியது

எண்ணங்கள் 13189034291840215795 said...

. வாழ்கை பல அதிர்சிகளையும் ஆசிரியங்களையும் உள்ளடக்கியது//

மிக சரி..

நம் வாழ்வை விட அடுத்தவர் வாழ்வின் மூலம் பல பாடங்கள் காத்திருக்கு..பயமும்..