Monday, September 24, 2007



காலமெல்லாம் காத்திருப்பு ..
=======================

பத்து மாதம் முடிந்த பின்னும் வெளிவர காத்திருந்தாள்.
பெண் என் தெரிந்ததும் அரளிக்கு காத்திருந்தாள்.

தம்பியுடன் பள்ளி செல்ல தவமாய் காத்திருந்தாள்.
கேள்வி ஞானம் மூலமாய் அறிவுபெற காத்திருந்தாள்.

பிஞ்சான பூ பின் கனியாக காத்திருந்தாள்.
கனியான்பின் திரு மணமாக காத்திருந்தாள்.

ஊரார் குறை சொல்ல தாயாக காத்திருந்தாள்.
பிரசவ வலியிலும் குழந்தை கொஞ்ச காத்திருந்தாள்.

விட்டுச் சென்ற மாமன் வீடு திரும்ப காத்திருந்தாள்.
கஷ்டப்பட்டு வளர்த்த மகன் சிறப்பு பெற காத்திருந்தாள்.

அயல்நாடு தொலைபேசி அழைப்புக்கு காத்திருந்தாள்.
பேரப்பிள்ளை விளையாட ஊஞ்சலோடு காத்திருந்தாள்.

மகளாகி, தமக்கயாகி ,தாரமாகி, தாயுமாகி, காத்திருந்தவள்,
பாட்டியாகி தள்ளாத வயதினிலே கண்மூட காத்திருக்கிறாள்.