Monday, February 18, 2008
பாகம் - 5
சனிக்கிழமை விடுமுறையாதலால் மது நிஷாவின் வீட்டுக்கு செல்வது வழக்கம்...குழந்தைகளுக்கு வேண்டியபொருள்களை வாங்கிக்கொண்டு சந்தோஷமாகச்சென்றாள்..கதவைத்திறந்த நிஷா ஒப்புக்கு உள்ளே வா என்று சொல்லிவிட்டுசெல்ல, ஒருமாதிரியிருந்தது..
குழந்தையுடன் விளையாடிவிட்டு வரும்வரை அவள் சமையலிலே... என்னாச்சு இவளுக்கு.
" ஏய் என்னாச்சு.. நானும் வந்ததிலேருந்து பார்க்கிறேன்.. சரியாயில்லை நீ. ஏன்.."பதிலில்லை..
பின் கை இரண்டையும் பிடித்து அடுத்த அறைக்கு அழைத்து வந்து
"இப்ப நீ சொன்னாதான் உண்டு.."
" என்ன சொல்ல.. இன்மேல் நீ இங்கு வரவேண்டாம் மது.. நானே என்னைப் பார்த்துக்கொள்வேன்..."
" பைத்தியமா உனக்கு..."
" ஆமா . இவ்வளவு நாள் அப்படித்தான் போல. இப்பத்தான் தெளிஞ்சிருக்கேன்.."
" என்ன சொல்ற நீ.."
" ஆமா மது, நீ எனக்காகத்தான் திருமணம் செய்யாமலிருக்கிறாய் என்று ஊர் முழுக்க பேச்சு.."
" ஹஹஹஹ. இவ்வளவுதானா. அதுக்குதான் அம்மணி கோவமா..என் செல்ல நிஷா.." என்று அவளை இழுத்து அணைத்துக்கொள்ள,அவள் விலகி
" உண்மையாகத்தான் சொல்கிறேன் . நீ இனியும் திருமணம் செய்யாவிட்டால் இங்கு நீ வருவதை அனுமதிக்க மாட்டேன்.."
" . அவ்வளவுதானே.. சரிங்க நீங்களே ஒரு நல்ல மாப்பிள்ளை பாருங்க..அதுவரைக்கும் வரலாம்தானே?.." சிரிப்புடன்..
" . ம். மாப்பிள்ளை ரெடி... நீதான் சரின்னு சொல்லணும்.."
" ஹாஹாஹா.. அட அதுக்குள்ளேயே.."விழுந்து விழுந்து சிரிக்கிறாள் விளையாட்டு என்றெண்ணி..
" சரி யாராம் மாப்பிள்ளை..?"
" ரகு.."அப்படியே அதிர்ச்சியில் மது நிஷாவை முறைக்கிறாள்..
" ஒஹோ . இங்கு வரைக்கும் வந்தாச்சா , விஷயம்...என்ன இதெல்லாம்..." சற்று கோவமாக...
"புரிந்துகொள் மது.. ரகு மிகவும் நல்லவர், நான் விசாரித்தவரையில்.."
" நிஷா.. தயவுசெய்து இனி அதைப்பற்றி யாரும் பேசவேண்டாம் என்னிடம்.. எந்த மாற்றமுமில்லை..."
" அப்போ நானும் தீர்மானமாய் சொல்கிறேன், நான் என் சொந்த ஊருக்கே போகிறேன்.. எனக்கெதுக்கு பழி.."அழுகையாய் வருகிறது மதுவுக்கு...
" நீயுமா என்னைப்புரியாமல்" என்று அவள் மடியில் படுத்துக்கொள்கிறாள்..அன்பாக அவள் தலை வருடியபடியே நாந்தான் முதலில் சந்தோஷப்படுவேன் மது உன் திருமணத்தைப்பார்க்க...
-------------------------------------------------------------------------------------
வீட்டுக்கு வந்தால் அண்ணா போன் செய்த விவரத்தை அப்பா சொல்கிறார்...கீதாம்மா டாக்டர் சொன்னதாக ரகுவைப்பற்றி கேட்கிறார்.
" என்னம்மா சொல்ற நீ.. உன் விருப்பம் என்ன.. உன் அதிகாரியாமே..."அப்பா.
"எனக்கு இஷ்டமில்லைப்பா.. இத்தோடு விட்ருங்கப்பா.."
" சரி நாங்க பார்த்த மாப்பிள்ளைதான் பிடிக்கல. என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய் மனதில்..."கீதாம்மா கொஞ்சம் வருத்ததுடன்...
" புரிஞ்சுக்கோங்கம்மா. எனக்கு திருமணமே வேண்டாம்..."
" அதுதான் ஏன்.. எங்களுக்கு கடைமை இருக்கே...நீ ஒண்ணும் சம்பாதித்து எங்களைக்காப்பாத்த வேண்டாம்."
" அப்பா..." அழுகிறாள்... சரி விடு கீதா..குழந்தைகிட்ட நான் பேசிக்கிறேன் ..
" என்னமோ போங்க.. அவளுக்கு செல்லம் கொடுத்தே எல்லாம் அவள் இஷ்டப்படி..."மகளை ஆறுதல்படுத்தி மாடிக்கு அழைத்துச்சென்று அமைதியாக , விளக்குகிறார்..
பொறுமையுடன் அவள் கருத்தையும் கேட்கிறார்.. இறுதியில் அவர்கள் வீட்டார் வந்து பார்த்துவிட்டு மட்டும் செல்லட்டும் டாக்டருக்கு கொடுக்கும் மரியாதைக்காக என்று அவளின் அனுமதியும் பெறுகிறார்.
பாகம் -4
வேந்தனுக்கு , அப்பா மதுவுக்கு இவ்வளவு இடம் கொடுப்பது பிடிக்கவில்லை...என்ன விஷயம் என்றாலும் அவளைக்கலந்தாலோசித்து பின்னரே முடிவெடுக்கிறார்...சிலசமயம் அவள் சில முடிவுகளை நிராகரித்தால் அதற்கும் அப்பா ஒத்துபோகிறாரேஎன்று எரிச்சலாய் இருக்கின்றது வேந்தனுக்கு...
தன் அமெரிக்கப்படிப்பு , அனுபவம்,எல்லாம் அவளுக்குப் பின்னால்தானா?.. அவள் என்ன வெறும் M.Com.,, M.B.A தான்...என்ன இது சுத்த பைத்தியக்காரத்தனமாய் இருக்குது..சரி எல்லாம் அப்பா காலம் வரைக்கும் தான்... என்று பொறுத்தார்...இப்படித்தான் ஒருமுறை மதுரையிலுள்ள ஒரு ஃபாக்ட்ரியை மூடுவதன் பொருட்டு வக்கீல் மற்றும் ஆடிட்டர்அனைவரையும் கலந்தாலோசித்து இறுதி முடிவுக்காக அப்பாவுடன் ஆலோசனை நடத்தும் கூட்டத்திலும் அவளையும் அழைத்தார் அப்பா..
எல்லா வற்றையும் கேட்டுவிட்டு 2 மணிநேரம் கழித்து
" நீ என்னம்மா சொல்ற மது .."
" அய்யா மன்னிக்கணும், அந்த தொழிற்சாலையை நம்பி சுமார் 1000 குடும்பங்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு இழப்பீடு மட்டும் போதாது.. அவர்களுக்கு வேறு வேலை தெரியாது...ஆகையால் மனிதாபிமான முறையில் அதை ஒரு தொண்டு நிறுவனமாக மட்டும் கணக்கில் கொண்டு மாற்று தொழில் ஏற்படுத்தும்வறை அதை மூடவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.." என்று
அதற்குண்டான அனைத்து புகைப்படங்கள்பேட்டிகள், presentations( மன்னிக்க) எல்லாவத்தையும் விளக்கமாகத் தந்தாள்..அதைப்பார்த்த மாத்திரத்தில் ராமர் அய்யாவும் ,
" சரி இப்போதைக்கு இதனை மூட வேண்டாம் . தொண்டு நிறுவனத்தில் சேர்த்துவிடுங்கள்.."என்று ஒத்தை வரியில் சொல்லிவிட்டு ,
" நன்றி அனைவருக்கும்.."என்று முடித்துவிட்டார்..வேந்தனுக்கும் மற்ற சகோதரருக்கும் பயங்கர அதிர்ச்சி...கிட்டத்தட்ட 2 மாதமாகசெலவழித்த அனைத்து வேலைகளும் , நேரமும் வீண்...
எல்லாத்துக்கும் காரணம் மது..தோல்வி என்று ஏற்கமுடியாமல் அவளுடைய அணுகுமுறையையும் ஒருகணம் வியந்தார்..எப்படி இத்தனை விவரங்களை ஆர்ப்பாட்டமின்றி விரல்நுனியில் வைத்திருக்கிறாள்..
எல்லோரும் சொல்வதுபோல் அவள் ஒன்றும் தெரியாதவள் அல்ல. என்ன பெண் என்றஒரு மனப்பான்மை , அனுபவக்குறைவு அவளை குறைத்து எடைபோடச்செய்கிறது,.குழப்பமாக யாரையும் தன்னை பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு தன் செல்ல நாய்களுடன் வேட்டைக்கு மலைக்கு பொழுதுபோக்க புறப்பட்டார்....அவருடைய உலகமே தனி.
.இயற்கையும், விலங்குகளும் , தனிமையும் ..அவருக்கு பிரியமானவை... அந்த தனிமையேபலவிஷயத்தை கத்துக்கொடுக்கும் குரு அவருக்கு..
.---------------------------------------------------------------------------------
ரகுவின் இறக்கமற்ற வார்த்தைகள் நொடிவிடாமல் மனதை கிழித்துக்கொண்டிருந்தாலும், அழுகையைமறந்து வருடங்கள் பல ஆனதால் மதுவுக்கு கண்ணீரும் கை கொடுக்கவில்லை.....
அசதியில் வந்த தூக்கம், துக்கமாய்தொண்டையையும் , அனைத்தையும் அடைத்தது....ரகுவின் கோபம் புதிதல்ல...
ஆனால் பிரிவென்பது...
அவன் தானே ஆசைப்பட்டான் இப்படி உயரத்துக்கு வரவேண்டுமென்று... M.Com மட்டுமே படித்திருந்த தன்னை, முதல் குழந்தை பிறக்கும்போதே M.B.A.. படிக்கச்செய்து அழகு பார்த்தான்.. பெண்கள் வேலைக்குப்போகணும்என்று விரும்பியவனும் , அதற்கான எல்லா சவுகரியமும் செய்து தந்தவன் ஆரம்பத்தில்...
ஆனால் இவ்வளவு சீக்கிரம் ராமர் அய்யா மதுவின் மேல் உள்ள நம்பிக்கையால் உயர்பதவி கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லைதான்...தன் சொந்த மகள் போல் அவளிடம் அனைத்து அலுவல் விஷயத்தையும் வீட்டுக்கு அழைத்து சொல்லுவார்..
எஸ்டேட்டுக்கு மதுவுடன் சென்று பழங்குடியினருடன் பழகுவார்.. . தொழலாளர்கள் கவலையை நேரில் கேட்பார்..மதுவும் எளிமை விரும்பி, அவரைப்போல் , அதுவே இருவருக்குள்ளும் நம்பிக்கைஏற்படுத்தியது...
----------------------------------
விடிந்ததுகூட தெரியாமல் தூங்கிய மதுவை,
" என்னம்மா ரொம்ப அசதியா.. கொஞ்சம் காஃபி அருந்திவிட்டு படுத்துக்கொள்ளேன்"
" அய்யய்யோ , மன்னிக்கணும் அம்மா...அதிகம் தூங்கிவிட்டேன்.."
" என்னம்மா கண்கள் வீக்கமாயிருக்கு..அதிக அலைச்சல் போல.. சரி தூங்கம்மா.."
" இல்லையம்மா.. பிள்ளைகள் பள்ளி போயாச்சா...சே வெக்கமாயிருக்கு பிள்ளைகளைகூட பாராமல்.."
" அடடே.. நாந்தான் தடுத்தேன்மா..நீ ஒன்றும் கவலைப்படவேண்டாம்..."அதற்குள் ரகு
" அம்மா அலுவலகம் செல்கிறேன்" அவளிடம் சொல்லாமல்...இதயமே வெடிப்பதுபோல்....ஏன் ரகு, கொஞ்ச நாள் அம்மாவிடமாவது நடிப்போமே...
அவர்கள் எப்படி இதை தாங்குவார்கள்.. ரகு , நீ என்னைத்தண்டிப்பதாய் எல்லோரையும் , ஏன் உன்னையும் சேர்த்துதண்டிக்கின்றாயே....எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல்...சிரித்தமுகத்துடன்..
" அம்மா. உங்க கையால் காஃபி.. பிரமாதம்.. பாருங்க எவ்வளவு ஃபிரஷா ஆயிட்டேன்.."
ஒரு துள்ளலுடன் எழுந்து ஓடும் மதுவை புரியாமல் பார்க்கிறார், விசாலம் அம்மா...குளியலரைக்கு சென்றவள் கண்ணாடியில் முகம் பார்க்கும்போதுதான் தெரிகிறது அததனைசோகமும் முகத்தில் , கண்ணில்....
நேற்று ரகு சொன்னது நினைவுக்கு வருகிறது...
" பிரியாமல் இருக்கணும் என்றால் நீ வேலையைவிட வேண்டும்.. அதற்கு நீ ஒருபோதும்..சம்மதிக்கமாட்டாய்.. ஏனென்றால் என்னைவிட உனக்கு அந்த வேலைதான் முக்கியம்..."கேட்கும்போது சிரிப்புதான் வந்தது...
தூங்குபவனை எழுப்பலாம், துங்குபவன்போல் நடிப்பவனை?..நானே விரும்பினாலும் விடமுடியாத வேலையிது ..உனக்குத்தெரியாதா ரகு...ஒரு காலத்தில், பணத்துக்காக, அப்புரம் பெருமைக்காக, பின், பெரியவரின் அன்புக்காகஎன்று இருந்து, இன்று அவளைமீறிய பொறுப்புகள், ரகசியங்கள் அனைத்தும் அவள் மீது...
அவ்வளவு எளிதல்ல அதனைவிட்டு விலகுவதென்பது..அவளை ஒருகட்டத்தில் பங்குதாரராக நியமிக்க பெரியவர் எடுத்த முயற்சியை தடுக்கத்தான் எவ்வளவு கஷ்டப்பட்டாள்.. அதிலும் அவர் மனதிலும் கம்பெனியின் மூத்தா ஆடிட்டர்கள் மத்தியிலும் மிகவும் உயர்ந்துவிட்டாள்...மக்களுக்கு இந்த கம்பெனியின் மூலம் சேவைசெய்ய முடிவதே தன் பெரும்பாக்கியமாகக் கருதினாள்..
அதனால் அவளுக்கு அத்தனை வசதிகளையும் கம்பெனியே செய்து தந்தது...இதனோடு ஒன்றிவிட்டதால் தன் உயிர் உள்ளவரை அதனை விட்டு விலகுவதென்பது இயலாத ஒன்று..ரகுவிடம் என்ன பேசினாலும் பிரயோஜனமில்லை.. மேலும் வருத்தமே மிஞ்சும் என்று அமைதிமட்டும்காத்தாள்... அவனுக்கோ அவள் அமைதி கூட அழுத்தமாகத் தோன்றியது....
------------------------------------------------------------------------------------------
காரில் மதுவை இறக்கிவிட்டு, நண்பன் போன் செய்தான் ரகு..
." என்னடா மதுவைப்பற்றியா எல்லா டீடெய்ல்ஸும் ....."
" எல்லாம் விரல் நுனியில்.. ஆனா ஒவ்வொண்ணா தான் தருவேன்.. அதுக்கு விலை அதிகம்.."
" டேய் டேய் என்கிட்டேயெவா.. ம் . உனக்கு இப்ப நல்ல நேரம்..சரி சொல்லு.."
" மது தோழி நிஷாவிடம் பேசிவிட்டேன்.., அப்புரம், நாளை அவர்கள் குடும்ப டாக்டர் எனக்கு பழக்கம்..கோயிலில் அவரை சந்திக்கிறோம் நாம்.."
"ம் . அப்புரம் மதுவுக்கு ஒரு அண்ணன்.. மும்பையில்.. அவரிடமும் பேசச்சொல்லி என் மைத்துனனை அனுப்பியாச்சு.."
" அடேங்கப்பா.. என்னைவிட நீ வேகமா இருக்க.."
" பின்ன இல்லியா.. யான் பெற்ற இன்பம் பெறுக நீயும்...இல்லடா.. நீ கல்யாணம் பண்ணிக்க சம்மதித்ததே சந்தோஷம்.."
------------------------------------------------------------------------------------------
டாக்டர் சங்கர் கடவுள் மந்திரத்தை பாட்டாக பாடிக்கொண்டே கோயிலை சுத்தி வருகிறார்...சுந்தரைப்பார்த்துவிடுகிறார்.... அப்போதும் பாட்டைத்தொடர்ந்துகொண்டே கண்களாலும் கைகளாலும்
" இறுங்கோ வாரேன் என்கிறார்... இவர்களும் அவர் பின்னால் செல்ல ரொம்பவே குஷியாகி சத்தமாகப்பாடுகிறார்.
"நமஸ்காரம்.. நான் சங்கர்.. உங்களப்பத்தி சுந்தர் சொல்லியிருக்கிறார்...மிக்க மகிழ்ச்சி..."
"மது ரொம்ப நல்ல பொண்ணு. நீங்க அதிர்ஷ்டசாலி...என்ன கல்யாணம் வேண்டாம்னு ஒரே பிடிவாதம்...எல்லாம் இனி நான்பார்த்துக்கிறேன்..உங்களையும் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.. கோயில் காரியமெல்லாம் எப்படி."
ரகுவிற்கு பக்தியுண்டு..தலையாட்டிவைத்தான்...அப்ப என்கூட இந்த மந்திரத்தை சொல்லுங்கோ ன்னு அவர் பாட்ட்டுடன் சுத்த ஆரம்பித்துவிட்டார்..
--------------------------------------------------------------------------------------------
வேந்தனுக்கு , அப்பா மதுவுக்கு இவ்வளவு இடம் கொடுப்பது பிடிக்கவில்லை...என்ன விஷயம் என்றாலும் அவளைக்கலந்தாலோசித்து பின்னரே முடிவெடுக்கிறார்...சிலசமயம் அவள் சில முடிவுகளை நிராகரித்தால் அதற்கும் அப்பா ஒத்துபோகிறாரேஎன்று எரிச்சலாய் இருக்கின்றது வேந்தனுக்கு...
தன் அமெரிக்கப்படிப்பு , அனுபவம்,எல்லாம் அவளுக்குப் பின்னால்தானா?.. அவள் என்ன வெறும் M.Com.,, M.B.A தான்...என்ன இது சுத்த பைத்தியக்காரத்தனமாய் இருக்குது..சரி எல்லாம் அப்பா காலம் வரைக்கும் தான்... என்று பொறுத்தார்...இப்படித்தான் ஒருமுறை மதுரையிலுள்ள ஒரு ஃபாக்ட்ரியை மூடுவதன் பொருட்டு வக்கீல் மற்றும் ஆடிட்டர்அனைவரையும் கலந்தாலோசித்து இறுதி முடிவுக்காக அப்பாவுடன் ஆலோசனை நடத்தும் கூட்டத்திலும் அவளையும் அழைத்தார் அப்பா..
எல்லா வற்றையும் கேட்டுவிட்டு 2 மணிநேரம் கழித்து
" நீ என்னம்மா சொல்ற மது .."
" அய்யா மன்னிக்கணும், அந்த தொழிற்சாலையை நம்பி சுமார் 1000 குடும்பங்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு இழப்பீடு மட்டும் போதாது.. அவர்களுக்கு வேறு வேலை தெரியாது...ஆகையால் மனிதாபிமான முறையில் அதை ஒரு தொண்டு நிறுவனமாக மட்டும் கணக்கில் கொண்டு மாற்று தொழில் ஏற்படுத்தும்வறை அதை மூடவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.." என்று
அதற்குண்டான அனைத்து புகைப்படங்கள்பேட்டிகள், presentations( மன்னிக்க) எல்லாவத்தையும் விளக்கமாகத் தந்தாள்..அதைப்பார்த்த மாத்திரத்தில் ராமர் அய்யாவும் ,
" சரி இப்போதைக்கு இதனை மூட வேண்டாம் . தொண்டு நிறுவனத்தில் சேர்த்துவிடுங்கள்.."என்று ஒத்தை வரியில் சொல்லிவிட்டு ,
" நன்றி அனைவருக்கும்.."என்று முடித்துவிட்டார்..வேந்தனுக்கும் மற்ற சகோதரருக்கும் பயங்கர அதிர்ச்சி...கிட்டத்தட்ட 2 மாதமாகசெலவழித்த அனைத்து வேலைகளும் , நேரமும் வீண்...
எல்லாத்துக்கும் காரணம் மது..தோல்வி என்று ஏற்கமுடியாமல் அவளுடைய அணுகுமுறையையும் ஒருகணம் வியந்தார்..எப்படி இத்தனை விவரங்களை ஆர்ப்பாட்டமின்றி விரல்நுனியில் வைத்திருக்கிறாள்..
எல்லோரும் சொல்வதுபோல் அவள் ஒன்றும் தெரியாதவள் அல்ல. என்ன பெண் என்றஒரு மனப்பான்மை , அனுபவக்குறைவு அவளை குறைத்து எடைபோடச்செய்கிறது,.குழப்பமாக யாரையும் தன்னை பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு தன் செல்ல நாய்களுடன் வேட்டைக்கு மலைக்கு பொழுதுபோக்க புறப்பட்டார்....அவருடைய உலகமே தனி.
.இயற்கையும், விலங்குகளும் , தனிமையும் ..அவருக்கு பிரியமானவை... அந்த தனிமையேபலவிஷயத்தை கத்துக்கொடுக்கும் குரு அவருக்கு..
.---------------------------------------------------------------------------------
ரகுவின் இறக்கமற்ற வார்த்தைகள் நொடிவிடாமல் மனதை கிழித்துக்கொண்டிருந்தாலும், அழுகையைமறந்து வருடங்கள் பல ஆனதால் மதுவுக்கு கண்ணீரும் கை கொடுக்கவில்லை.....
அசதியில் வந்த தூக்கம், துக்கமாய்தொண்டையையும் , அனைத்தையும் அடைத்தது....ரகுவின் கோபம் புதிதல்ல...
ஆனால் பிரிவென்பது...
அவன் தானே ஆசைப்பட்டான் இப்படி உயரத்துக்கு வரவேண்டுமென்று... M.Com மட்டுமே படித்திருந்த தன்னை, முதல் குழந்தை பிறக்கும்போதே M.B.A.. படிக்கச்செய்து அழகு பார்த்தான்.. பெண்கள் வேலைக்குப்போகணும்என்று விரும்பியவனும் , அதற்கான எல்லா சவுகரியமும் செய்து தந்தவன் ஆரம்பத்தில்...
ஆனால் இவ்வளவு சீக்கிரம் ராமர் அய்யா மதுவின் மேல் உள்ள நம்பிக்கையால் உயர்பதவி கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லைதான்...தன் சொந்த மகள் போல் அவளிடம் அனைத்து அலுவல் விஷயத்தையும் வீட்டுக்கு அழைத்து சொல்லுவார்..
எஸ்டேட்டுக்கு மதுவுடன் சென்று பழங்குடியினருடன் பழகுவார்.. . தொழலாளர்கள் கவலையை நேரில் கேட்பார்..மதுவும் எளிமை விரும்பி, அவரைப்போல் , அதுவே இருவருக்குள்ளும் நம்பிக்கைஏற்படுத்தியது...
----------------------------------
விடிந்ததுகூட தெரியாமல் தூங்கிய மதுவை,
" என்னம்மா ரொம்ப அசதியா.. கொஞ்சம் காஃபி அருந்திவிட்டு படுத்துக்கொள்ளேன்"
" அய்யய்யோ , மன்னிக்கணும் அம்மா...அதிகம் தூங்கிவிட்டேன்.."
" என்னம்மா கண்கள் வீக்கமாயிருக்கு..அதிக அலைச்சல் போல.. சரி தூங்கம்மா.."
" இல்லையம்மா.. பிள்ளைகள் பள்ளி போயாச்சா...சே வெக்கமாயிருக்கு பிள்ளைகளைகூட பாராமல்.."
" அடடே.. நாந்தான் தடுத்தேன்மா..நீ ஒன்றும் கவலைப்படவேண்டாம்..."அதற்குள் ரகு
" அம்மா அலுவலகம் செல்கிறேன்" அவளிடம் சொல்லாமல்...இதயமே வெடிப்பதுபோல்....ஏன் ரகு, கொஞ்ச நாள் அம்மாவிடமாவது நடிப்போமே...
அவர்கள் எப்படி இதை தாங்குவார்கள்.. ரகு , நீ என்னைத்தண்டிப்பதாய் எல்லோரையும் , ஏன் உன்னையும் சேர்த்துதண்டிக்கின்றாயே....எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல்...சிரித்தமுகத்துடன்..
" அம்மா. உங்க கையால் காஃபி.. பிரமாதம்.. பாருங்க எவ்வளவு ஃபிரஷா ஆயிட்டேன்.."
ஒரு துள்ளலுடன் எழுந்து ஓடும் மதுவை புரியாமல் பார்க்கிறார், விசாலம் அம்மா...குளியலரைக்கு சென்றவள் கண்ணாடியில் முகம் பார்க்கும்போதுதான் தெரிகிறது அததனைசோகமும் முகத்தில் , கண்ணில்....
நேற்று ரகு சொன்னது நினைவுக்கு வருகிறது...
" பிரியாமல் இருக்கணும் என்றால் நீ வேலையைவிட வேண்டும்.. அதற்கு நீ ஒருபோதும்..சம்மதிக்கமாட்டாய்.. ஏனென்றால் என்னைவிட உனக்கு அந்த வேலைதான் முக்கியம்..."கேட்கும்போது சிரிப்புதான் வந்தது...
தூங்குபவனை எழுப்பலாம், துங்குபவன்போல் நடிப்பவனை?..நானே விரும்பினாலும் விடமுடியாத வேலையிது ..உனக்குத்தெரியாதா ரகு...ஒரு காலத்தில், பணத்துக்காக, அப்புரம் பெருமைக்காக, பின், பெரியவரின் அன்புக்காகஎன்று இருந்து, இன்று அவளைமீறிய பொறுப்புகள், ரகசியங்கள் அனைத்தும் அவள் மீது...
அவ்வளவு எளிதல்ல அதனைவிட்டு விலகுவதென்பது..அவளை ஒருகட்டத்தில் பங்குதாரராக நியமிக்க பெரியவர் எடுத்த முயற்சியை தடுக்கத்தான் எவ்வளவு கஷ்டப்பட்டாள்.. அதிலும் அவர் மனதிலும் கம்பெனியின் மூத்தா ஆடிட்டர்கள் மத்தியிலும் மிகவும் உயர்ந்துவிட்டாள்...மக்களுக்கு இந்த கம்பெனியின் மூலம் சேவைசெய்ய முடிவதே தன் பெரும்பாக்கியமாகக் கருதினாள்..
அதனால் அவளுக்கு அத்தனை வசதிகளையும் கம்பெனியே செய்து தந்தது...இதனோடு ஒன்றிவிட்டதால் தன் உயிர் உள்ளவரை அதனை விட்டு விலகுவதென்பது இயலாத ஒன்று..ரகுவிடம் என்ன பேசினாலும் பிரயோஜனமில்லை.. மேலும் வருத்தமே மிஞ்சும் என்று அமைதிமட்டும்காத்தாள்... அவனுக்கோ அவள் அமைதி கூட அழுத்தமாகத் தோன்றியது....
------------------------------------------------------------------------------------------
காரில் மதுவை இறக்கிவிட்டு, நண்பன் போன் செய்தான் ரகு..
." என்னடா மதுவைப்பற்றியா எல்லா டீடெய்ல்ஸும் ....."
" எல்லாம் விரல் நுனியில்.. ஆனா ஒவ்வொண்ணா தான் தருவேன்.. அதுக்கு விலை அதிகம்.."
" டேய் டேய் என்கிட்டேயெவா.. ம் . உனக்கு இப்ப நல்ல நேரம்..சரி சொல்லு.."
" மது தோழி நிஷாவிடம் பேசிவிட்டேன்.., அப்புரம், நாளை அவர்கள் குடும்ப டாக்டர் எனக்கு பழக்கம்..கோயிலில் அவரை சந்திக்கிறோம் நாம்.."
"ம் . அப்புரம் மதுவுக்கு ஒரு அண்ணன்.. மும்பையில்.. அவரிடமும் பேசச்சொல்லி என் மைத்துனனை அனுப்பியாச்சு.."
" அடேங்கப்பா.. என்னைவிட நீ வேகமா இருக்க.."
" பின்ன இல்லியா.. யான் பெற்ற இன்பம் பெறுக நீயும்...இல்லடா.. நீ கல்யாணம் பண்ணிக்க சம்மதித்ததே சந்தோஷம்.."
------------------------------------------------------------------------------------------
டாக்டர் சங்கர் கடவுள் மந்திரத்தை பாட்டாக பாடிக்கொண்டே கோயிலை சுத்தி வருகிறார்...சுந்தரைப்பார்த்துவிடுகிறார்.... அப்போதும் பாட்டைத்தொடர்ந்துகொண்டே கண்களாலும் கைகளாலும்
" இறுங்கோ வாரேன் என்கிறார்... இவர்களும் அவர் பின்னால் செல்ல ரொம்பவே குஷியாகி சத்தமாகப்பாடுகிறார்.
"நமஸ்காரம்.. நான் சங்கர்.. உங்களப்பத்தி சுந்தர் சொல்லியிருக்கிறார்...மிக்க மகிழ்ச்சி..."
"மது ரொம்ப நல்ல பொண்ணு. நீங்க அதிர்ஷ்டசாலி...என்ன கல்யாணம் வேண்டாம்னு ஒரே பிடிவாதம்...எல்லாம் இனி நான்பார்த்துக்கிறேன்..உங்களையும் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.. கோயில் காரியமெல்லாம் எப்படி."
ரகுவிற்கு பக்தியுண்டு..தலையாட்டிவைத்தான்...அப்ப என்கூட இந்த மந்திரத்தை சொல்லுங்கோ ன்னு அவர் பாட்ட்டுடன் சுத்த ஆரம்பித்துவிட்டார்..
--------------------------------------------------------------------------------------------
பாகம் - 3 தொடர்கிறது
..................................
உணவருந்தி முடித்ததும் தப்பிக்கலாம் என்ற எண்ணத்தில்
" சார் நான் வீட்டுக்கு போகலாமென்று இருக்கிறேன்.."
" ஓ தாராளமா... நானே உன்னை விட்டுச்செல்கிறேன்.."
" இல்லை .. நான் ஒரு ஆட்டோ வைத்து சென்றுகொள்வேன்.. நன்றி..."
" நோ. நோ... எனக்கொண்ணும் சிரமமில்லை... நானும் அலுவலகம் போகவில்லை.."
பேசி தப்பிக்கவே முடியாது என்று சம்மதித்து இடத்தையும் சொல்கிறாள்..
வீட்டருகே வந்ததும் அதுவரை மெளனம் காத்த ரகு.,.
" மிக்க நன்றி.. நான் உன்னிடம் இருந்து விரைவில் நல்ல பதில் எதிர்பார்க்கிறேன்.."
ஒரு புன்னகையை மட்டும் மரியாதைக்காக அளித்துவிட்டு... நன்றி கூறி விடைபெறுகிறாள், தெரு முனையிலேயே...
-----------------------------------------------------------------------------------
விமானம் சென்னை நிலையத்தில் இறங்கவும், மதுவின் உள்ளம் மகிழ்ச்சியால் பீறிடுகிறது...
1 மாதப்பயணம் முடிந்து எல்லோரையும் சந்திக்கப்போவதால்., முக்கியமாக குழந்தைகளை..
அலுவலக வண்டி வந்துள்ளது... சகல மரியாதையுடன் விடு சேருகிறாள்..
குழந்தைகள், விசாலம் அம்மா, எல்லோரும் , வேலையாட்களுடன் அவளை வரவேற்க..
ரகு மட்டும் மாடியிலிருந்து மரியாதைக்காக கையசைக்கிறான்..
வேலையாட்கள் ஒவ்வொருவரிடமும் அன்பாக விசாரித்துவிட்டு, குழந்தைகளுடன், 1 மணி நேரம் செலவிட்டு
, பின் விசாலம் அம்மாவிடம் பேசுகையில்..,
" ஒருவாய் சாப்பிட்டு படும்மா.. ரொம்ப அசதியில் இருப்பாய்..."
" இல்லம்மா, நான் விமானத்திலேயே சாப்பிட்டுவிட்டேன் "
கட்டாயப்படுத்தி சாப்பாடு எடுத்து வந்து பிடிவாதமாய் ஊட்டிவிடுகிறார்...
"என்ன தவம் செய்தேன் அம்மா " கண்கலங்குகிறாள்..
" சரி சரி.. நீ போய் உன் கணவனைக்கவனி..மீதி நாளைப்பேசலாம்..."கிண்டலாக..
------------------------------------------------
மாடிக்குச்சென்று ரகு இருக்கும் அறைக்கு செல்கிறாள்..
அவன் இவள் வந்தது தெரியாததுபோல் புத்தகத்தில் மூழ்கியிருக்கிறான்..
" நல்லா இருக்கீங்களா..?. வேலையெல்லாம் அதிக சுமையில்லையே?..."
புன்னகையோடு இவளே ஆரம்பிக்க..
" ..ம்.. இருக்கு. உன் பிரயாணம், கான்ஃபரன்ஸ் எல்லாம் நல்லபடியா இருந்திருக்கும் என நினைக்கிறேன்.."
". ம்.ம்."
வேறொன்றும் பேச விரும்பவில்லை என்று அவன் பேச்சிலிருந்து யூகிக்க முடிந்தது...
குளித்து உடுப்பு மாற்றி அவள் வரும்போது ரகு பால்கனியில் சிகெரட் புகைத்துகொண்டிருந்தான்..
இவள் போய் நின்றும் திரும்பி கூட பார்க்கவில்லை..
சரி தொந்தரவு செய்ய விரும்பாமல்...இவளும் பூஜயை முடித்துவிட்டு, மிகவும் அசதியாக
இருந்ததால் படுக்கச்சென்றாள்...
" உன்கிட்ட நான் பேசணும்....."
சந்தோஷமாக விருட்டென்று மலர்ச்சியோடு எழுந்து உட்கார்ந்தாள்...
" நாம் இருவரும் நல்லமுறையில் பிரியலாம் என்று நினைக்கிறேன்...".
ஒரு நிமிடம் அப்படியே இடி விழுந்ததுபோல் இருந்தது அவளுக்கு...
எவ்வளவு கனவுகளோடு வந்தேன் ரகு.....என்னுடைய கவலையெல்லாம் மறக்கலாம்
என்று நினைத்து வந்த எனக்கு இப்படி ஒரு பரிசா...
அழக்கூட முடியாமல், தோல்வியில் துவண்டு போனாள்..
ரகு தலையணையை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.....
..................................
உணவருந்தி முடித்ததும் தப்பிக்கலாம் என்ற எண்ணத்தில்
" சார் நான் வீட்டுக்கு போகலாமென்று இருக்கிறேன்.."
" ஓ தாராளமா... நானே உன்னை விட்டுச்செல்கிறேன்.."
" இல்லை .. நான் ஒரு ஆட்டோ வைத்து சென்றுகொள்வேன்.. நன்றி..."
" நோ. நோ... எனக்கொண்ணும் சிரமமில்லை... நானும் அலுவலகம் போகவில்லை.."
பேசி தப்பிக்கவே முடியாது என்று சம்மதித்து இடத்தையும் சொல்கிறாள்..
வீட்டருகே வந்ததும் அதுவரை மெளனம் காத்த ரகு.,.
" மிக்க நன்றி.. நான் உன்னிடம் இருந்து விரைவில் நல்ல பதில் எதிர்பார்க்கிறேன்.."
ஒரு புன்னகையை மட்டும் மரியாதைக்காக அளித்துவிட்டு... நன்றி கூறி விடைபெறுகிறாள், தெரு முனையிலேயே...
-----------------------------------------------------------------------------------
விமானம் சென்னை நிலையத்தில் இறங்கவும், மதுவின் உள்ளம் மகிழ்ச்சியால் பீறிடுகிறது...
1 மாதப்பயணம் முடிந்து எல்லோரையும் சந்திக்கப்போவதால்., முக்கியமாக குழந்தைகளை..
அலுவலக வண்டி வந்துள்ளது... சகல மரியாதையுடன் விடு சேருகிறாள்..
குழந்தைகள், விசாலம் அம்மா, எல்லோரும் , வேலையாட்களுடன் அவளை வரவேற்க..
ரகு மட்டும் மாடியிலிருந்து மரியாதைக்காக கையசைக்கிறான்..
வேலையாட்கள் ஒவ்வொருவரிடமும் அன்பாக விசாரித்துவிட்டு, குழந்தைகளுடன், 1 மணி நேரம் செலவிட்டு
, பின் விசாலம் அம்மாவிடம் பேசுகையில்..,
" ஒருவாய் சாப்பிட்டு படும்மா.. ரொம்ப அசதியில் இருப்பாய்..."
" இல்லம்மா, நான் விமானத்திலேயே சாப்பிட்டுவிட்டேன் "
கட்டாயப்படுத்தி சாப்பாடு எடுத்து வந்து பிடிவாதமாய் ஊட்டிவிடுகிறார்...
"என்ன தவம் செய்தேன் அம்மா " கண்கலங்குகிறாள்..
" சரி சரி.. நீ போய் உன் கணவனைக்கவனி..மீதி நாளைப்பேசலாம்..."கிண்டலாக..
------------------------------------------------
மாடிக்குச்சென்று ரகு இருக்கும் அறைக்கு செல்கிறாள்..
அவன் இவள் வந்தது தெரியாததுபோல் புத்தகத்தில் மூழ்கியிருக்கிறான்..
" நல்லா இருக்கீங்களா..?. வேலையெல்லாம் அதிக சுமையில்லையே?..."
புன்னகையோடு இவளே ஆரம்பிக்க..
" ..ம்.. இருக்கு. உன் பிரயாணம், கான்ஃபரன்ஸ் எல்லாம் நல்லபடியா இருந்திருக்கும் என நினைக்கிறேன்.."
". ம்.ம்."
வேறொன்றும் பேச விரும்பவில்லை என்று அவன் பேச்சிலிருந்து யூகிக்க முடிந்தது...
குளித்து உடுப்பு மாற்றி அவள் வரும்போது ரகு பால்கனியில் சிகெரட் புகைத்துகொண்டிருந்தான்..
இவள் போய் நின்றும் திரும்பி கூட பார்க்கவில்லை..
சரி தொந்தரவு செய்ய விரும்பாமல்...இவளும் பூஜயை முடித்துவிட்டு, மிகவும் அசதியாக
இருந்ததால் படுக்கச்சென்றாள்...
" உன்கிட்ட நான் பேசணும்....."
சந்தோஷமாக விருட்டென்று மலர்ச்சியோடு எழுந்து உட்கார்ந்தாள்...
" நாம் இருவரும் நல்லமுறையில் பிரியலாம் என்று நினைக்கிறேன்...".
ஒரு நிமிடம் அப்படியே இடி விழுந்ததுபோல் இருந்தது அவளுக்கு...
எவ்வளவு கனவுகளோடு வந்தேன் ரகு.....என்னுடைய கவலையெல்லாம் மறக்கலாம்
என்று நினைத்து வந்த எனக்கு இப்படி ஒரு பரிசா...
அழக்கூட முடியாமல், தோல்வியில் துவண்டு போனாள்..
ரகு தலையணையை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியே சென்றான்.....
லேசா லேசா - பாகம் 2
*பகுதி -2 --
---------------
காற்றே என் சுவாசம் வந்தாய். மெதுவாகக்கதவு திறந்தாய் ==================================================
மது ரகுவின் அழைப்புக்கு உள்ளே செல்ல ஆயத்தமாகிறாள்... நேற்று நடந்ததை மனதில் அசை போடுகிறாள்... என்னவோ சொல்லி தப்பிவிட்டாலும், வீடு சேரும் வரை பஸ்ஸில் அதைப்பற்றியே நினைப்பு... " ஏம்மா டிக்கெட் எடுக்கலியா?. செக்கிங் வந்தா எங்களுக்குதான் திட்டு....இன்னாதான் யோசிப்பாய்ங்களோ" அவசரமாக சுய நினைவுக்கு வந்து பணம் கொடுத்தாள், மீதி வாங்காமல்... எவ்வளவு தைரியம் ரகுவுக்கு...
நேரில் எப்படி.. சொல்ல கூடும்.... அதுவும் இவரே முடிவு செய்துட்ட மாதிரி...ஆண் என்கிற திமிர். அதிகாரி என்கிற கர்வம்.. கோவமாய் வருகிறது... ஒரு பெண்ணால் இப்படி சொல்ல முடியுமா?.. அந்த முனீஸ் வேறு விளையாடுகிறான்... சே பெண் என்றால் இவர்களுக்கு என்ன அவ்வளவு இளக்காரம்..... இல்லையில்லை, ரகு கல்யாணம் பண்ணிக்கொள்ளத்தானே கேட்டார்... இல்லைன்னா இல்லை, ஆமான்னா, ஆமா.. நான் என்ன பெரிய அழகுராணி... என்னைவிட்டால் அவருக்கு வேற பெண்ணே கிடைக்காதா என்ன...
இருபுறமும் சிந்திக்கிறாள், உண்மையை....
இருந்தாலும் இனி தொடர்வது எப்படி , அந்த அலுவலகத்தில் இன்னும் 6 மாதம் காண்ட்ராக்ட் உள்ளதே.. சட்டென்று விலகவும் முடியாதே....அன்ன பதிலுறைக்க, எப்படி மனம் புண்படாமல் சொல்ல, மேலதிகாரியாயிற்றே...
யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் முடியாது... இதுதான் சாக்கு என்று ஆளாளுக்கு திருமண அறிவுரை வழங்க ஆரம்பித்துவிடுவார்கள்...சாப்பிட மனமில்லாது கீதாம்மாவிடம் பொய் சாக்கு சொல்லி தூங்கச்சென்றாள்..
-----------------------------------
மறுபடியும் தொலைபேசி அழைப்பு....
" மது உன்னை கூப்பிட்டு 15 நிமிடம் 20 வினாடிகள் ஆகிறது..."
" மன்னிக்கணும் .. சார்.. இதோ வருகிறேன் சார்..."
" சரி. சீக்கிரம்..."
--------------------------------
கதவை தட்ட... " உள்ளே வரலாம்..." இருக்கையை காண்பித்து அமரச்சொல்கிறார்.. அவர் எழுந்து தான் குடித்துக்கொண்டிருந்த சிகரெட்டைத்தூக்கி அணைத்து ஆஷ் டிரேயில் போடுகிறார்...
" சாரி.. எனக்கு இந்த பழக்கமுண்டு..."
" பரவால்ல சார்...".. நிசப்தம்..
"..ம்.. பிரமோத் கம்பெனிக்கு ஆர்டர் அனுப்பியாச்சா?.."
". இல்ல சார். இன்னிக்கு. அனுப்பிரலாம் .. சார்.."
"..ம்..." "...ம்.. துபாய் ஷிப்மெண்ட் என்னாச்சு..?.."
".. அது இன்னும் 1 வரமாகுமாம் சார்.. LC ரெடி பண்ணிட்ருக்கோம்..."
"..ம்.."
".. விவேகா எண்டர்பிரைஸ்...."
". கிட்டத்தட்ட ரெடி சார்..."..
" என்ன எது கேட்டாலும் முடிக்காத மாதிரி பதில் தாரீங்க... எதுவுமே முடிக்கலயா?.."
". சாரி... சார்... என்கூட உள்ள மல்லிகா 1 வாரம் லீவு...அதான்..."
".. அதனாலயா.., இல்ல, முனீஸ் கூட அரட்டையா?..."
.. அவளுக்கு அழுகையே வந்துவிட்டது... ஓஹோ இப்ப புரியுது.. , அவன்கிட்ட பேசுவது தான் குழப்பத்துக்கு காரணமோ....
". வேலையை மட்டும் ஒழுங்கா பாருங்க... நான் மேலதிகாரிக்கு பதில் சொல்லணும்.."
" சரி.. சார்..." லீவு போட்டுவிட்டு வீட்டுக்கு போய் விடலாமான்னு தோணுது...
" சரி நீங்க போகலாம்..." அவள் கதவருகில் செல்லும்போது ,
"..ம்.. மது... நேற்று நான்........".. ஏதோ நினைத்தவராய்....
".. சரி சரி.. நீங்க தொடருங்க... யூ கேரி ஆன்."..
அப்பாடா தொல்லை விட்டது என்றிருந்தது அவளுக்கு...
முனீஸ் வந்தான்..." "என்னம்மா முகம் சும்மா தீபாவளி அதிரசம் மாதிரி சும்மா ஜிவ்வுன்னு இருக்கு..."
அவனை பார்க்காமலே.., " முனீஸ் , மேனேஜர்.., ரொம்ப கோவமாயிருக்கார்.. இங்க இனி வராதே...ப்ளீஸ்.."
". ஹ . ஹ்.. இங்க பார்ரா... எங்க வேலையத்தான் ஒழுங்கா செய்ரோம்ல... அப்புரம் ஏன் பயப்படணும்.." என்று பக்கத்தில் இருந்த மேஜைமேல் ஏறி குதித்து உட்காரவும், மேனேஜர் வெளியில் வரவும் சரியாக இருந்தது.. மதுவின் முதுகுப்பின் என்பதால் அவள் கவனிக்கவில்லை...
ஆனால் அவன் நெளிந்துகொண்டே மேஜையிலிருந்து இறங்குவதை ஆச்சர்யமா, பார்த்துக்கொண்டே, வேலையில் ஈடுபட,
" உன்னுடைய இடம் எது முனீஸ்.." ரகு...
". சாரி சார்.. ".. மெதுவாக ஓடிவிட்டான்..
"..ம்.."
"..ம்.. மது..."
" சார்..." எழுந்து நிற்கிறாள் , பயத்துடன்...உட்காருமாறு கைகாட்டி... ". மது 11.00 மணிக்கு ஹோட்டல் தாஜ்ல ஒரு மீட்டிங்... ரெடியாயிருங்க.."
"சரி சார்.." எதுவும் சொல்லமுடியாமல்... யோசித்துக்கொண்டிருக்க.. அதற்குள், செக்ரட்ரி, அதற்குண்டான
கோப்புகளைத் தருகிறாள்...அவசரமாக புரட்டிப்பார்க்கிறாள்... வரமுடியாது என்று சொல்ல கூட அவகாசம் இல்லையே...இன்னும் 1 மணிநேரம் இருக்குது.. அதில்பயணம் 30 நிமிடமாகும்...
இதற்குள் போன் வருகிறது நிஷாவிடமிருந்து.... நிஷா அவள் தோழி.. கல்லூரியில் ஒன்றாகப்படித்து, கல்லூரி நண்பனையே மணமுடித்து, பின் அவளையும் 2 குழந்தையும் விட்டு அமெரிக்கா சென்றுவிட்டான்....
அழகுக்காகவே திருமணம் செய்து குழந்தைபெற்றபின் அவள் குண்டாகிவிட்டதாலும், இன்னும் பல கெட்ட பழக்கங்கள் MNC வேலையில் தொற்றிக்கொண்டதாலும் அவளைப்பிரிந்தவன்.. அதிலேயே வெறுப்புற்றுவிட்டாள், மது.. நிஷா யாருமற்ற நிலையில் சாகப்போனவளை திட்டி தடுத்து, அவளுக்காகவே தான் வாழ்வதாக சொல்லி அவளை மீட்டவள் மது...அவள் குழந்தைகளுக்கோ மது என்றால் உயிர்...நிஷாவின் மனநோயை மாற்றி நல்ல மருந்தாக ஊக்கம், கொடுத்து, பழசை மறக்கச்செய்து வேலைக்குப்போகச்செய்தவள் மது....
போன் உறையாடல் கலகலப்பாயிருந்தது.. அதுவும் பிள்ளைகளின் சேட்டைகள் பற்றி... நேரம் போனதே தெரியவில்லை... மறு தொலைபேசியில்...
" மது தயாரா?.. கீழ் தளத்துக்கு வந்துவிடுங்கள்...நான் அங்கு இருப்பேன்.."
". சரி சார்..." அவசரமாக தன்னை தயார் செய்து கொண்டு போகிறாள்.... -
-----------------------------------------------
காரில் ஓட்டுனர் இருக்கையில் ரகு... எப்போதும் டிரைவர் தானே ஓட்டுவார்.. இன்று என்ன புதுசா என்று யோசிக்கையிலேயே, கண்ணாலேயே கட்டளை இடுகிறார் வண்டியில் ஏறும்படி...முன்னாலா, பின்னாலா.. குழப்பம்.. பின்னால் ஏறுவது மரியாதை இல்லை...
முனீஸ் வந்தால் அவன் முன்னால் ஏறினால், நான் பின்னால் இருக்கலாம்.. இப்போதோ வழியில்லை. அன்று முன்னாலேயே பக்குவமாக அமர்கிறாள்... ரகு மனதுக்குள் சிரித்துக்கொள்கிறான்..
" ம். காலையிலேயே அம்மணிய மிரட்டுனது , பின்னாளில் சொல்லி சொல்லி அவளிடம் விளையாடலாம்... சிரிக்கலாம்....அடேங்கப்பா என்னா பயம் ..இருந்தாலும் பாவமாயுமிருந்தது அவனுக்கு... அதற்காகவும் அவளிடம் சகஜமாக பேசவேண்டும் என்றும் சந்தர்ப்பம் எடுத்து காரில்... அவள் எங்கு பார்க்க என தெரியாமல் .. ஃபைலை புரட்டிக்கொண்டிருக்க., அப்பப்ப, அவளை ரசித்துகொண்டே வண்டி ஓட்டுகிறான் ரகு... அவளுக்கு பயமாக இருக்குது...
எங்கே மறுபடியும் கேட்டுவிடுவானோ என்று...
" ஃபைலில் எல்லா விவரமும் இருகில்லயா?." அவளை பேசவைப்பதற்காகவும், தன்னை கவனிக்கவும்...
" .. ம்.. ஆமா சார்..." ரகுவைப்பார்த்து பதிலழிக்க...
" உனக்கு டிரைவிங் தெரியுமா.."
" இல்ல சார்.."
" சீக்கிரம் கத்துக்கொள்.."
".ம்.."
" என்ன ..ம்.."
" அது எனக்கு எதுக்கு ன்னு......"
" ம். நான் விருப்பப்படுகிறேன் . நீ கத்துக்கொள்ளணும் என்று ..
சரியா?.." எரிச்சலாக இருக்கிறது அவளுக்கு... இறங்கி ஓடிவிடலாமான்னு தோணுது அவளுக்கு...
இருக்கட்டும் எல்லாத்துக்கும் நேரம் வரும் அப்போது குடுக்கலாம்... இப்ப ஃபைலை பார்ப்போம் என்று மனதை திசை திருப்பினாள்.. சடன் பிரேக் போட்டு வண்டிய நிறுத்தினான் ரகு
... -----------------------------------------------------------------------
விமானம் பயங்கர சத்தத்துடன் லண்டன் ஓடுதளத்தில் தறையிரங்க...
" பயணிகள் கவனத்திற்கு.................................." கொஞ்சம் சோம்பல் முறித்து தயாராக இருக்கிறாள் இறங்க ....
பக்கத்து நபர் இன்னும் குறட்டையில்.. ஏர்போர்ட் வந்ததும் தொலைபேசியெடுத்து ரகுவிற்கு பேச முயல...
" இந்த எண் தற்போது தொடர்பு கொள்ள முடியாது... சிறிது நேரத்துக்குபின் தொடர்பு கொள்ளவும்..." உடனே வீட்டுக்கு போன் போடுகிறாள்.. விசாலம் அம்மா எடுக்கிறார்....
" அம்மா நலமாம்மா.. நான் மது பேசுறேன்.. " " எப்படிம்மா இருக்க?. உன் வரவை தான் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கோம்..." " சரிம்மா ரகு இல்லையா..?.."
" இதோ மாடிலதான் குழந்தைகளோடு இருக்கான்.. கூப்பிடவா.." " வேண்டாம் மா..நானே பேசிக்கொள்கிறேன் மா.." ஒரே குழப்பாமாயிருக்கு... ஏன் ரகு போன் கூட எடுக்காமல்... சரி ரொம்ப பிஸி போல தன்னையே சமாதனப்படுத்திக்கொண்டாள்... இன்னும் 12 மணி நேரப்பயணம் இருக்கே.. ஒய்வெடுக்கச்சென்றாள் விடுதியில்... பழைய இனிய ஞாபகமும் தொடர்ந்தது..
. --------------------------------------------------------
" கொஞ்சங்கூட பொறுப்பில்லை இப்படியா குழந்தையுடன் சாலையைக்கடப்பது.." திட்டிக்கொண்டே ரகு..
" ரொம்ப சமயோசிதமா பிரேக் போட்டீங்க சார். மிக்க நன்றி சார்..." முதன்முறையாக தன்னையறியாமல் உணர்ச்சிவசப்பட்டு பேசும் மதுவை அச்சர்யமாக, சந்தோஷமாக பார்க்கிறார்...
கொஞ்சம் வெற்றிக்களிப்பு .. அதற்குள் ஹோட்டல் வந்துவிட...மீட்டிங் செல்கிறார்கள்... அதில் ரகு மிக உற்சாகமாகவும் அறிவுபூர்வமாகவும் பணிவாகவும் பேசுவது வியப்பாக உள்ளது.. கடைசியில் அவருக்கே வெற்றியும்.. காண்ட்ராக்ட் கையெழுத்தாகுது.. நேரம் 1. 30... .
"சரி வா சாப்பிடலாம்"
" வேண்டாம் சார்.. நான் அலுவலகம் போய் சாப்பிட்டுக்கொள்கிறேன்...".
" அதுவரையில் நான் பசி தாங்கணுமா..?.."
" இல்ல அப்படி சொல்லல சார்.. நீங்க சாப்பிடுங்க... நான் காத்திருக்கேன்..."
" அது முடியாதே..இன்னிக்கு உன் ராசின்னு நினைக்கிறேன் எல்லாம் ஜெயம்..." புன்னகையுடன்.. அவர் பாட்டுக்கு நடந்து லிப்டின் பொத்தானை அளுத்துகிறார்..
நிறய பேர் மத்தியில் மறுக்க முடியாமல் இவள்... நல்லா மாட்டிக்கொண்டோம்னு மட்டும் புரியுது.... உனக்கு என்ன பிடிக்கும் என்ன வேணும் ன் கேட்டு ஆர்டர் பண்ணுகிறார்.. அந்த உயர் ரக ஹோட்டலில் கத்தி போர்க், கரண்டி,, எல்லாம் கொண்டு வத்து வைக்க மெதுவாக அழகாக விவரித்து அவளுக்கு சொல்லிக்கொடுக்கிறார் இவள் எடுக்கும் வேகத்தில் கத்தி பறந்து ரகு அருகில் விழ, அவருக்கோ சிரிப்பு...
ரசிக்கிறார், இவள் செய்யும் வித்தைகளையும் போராட்டத்தையும் , நாடியில் கை ஊன்றியபடி.. வெட்கித்தான் போகிறாள்....உள்ளே கோபமிருந்தாலும்...
எனக்கு இன்னிக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு ." " ம்.." " ஏன்னு கேக்கமாட்டியா...."
" மொதல்ல உன்கூட தனியா வந்து, இப்படி லஞ்ச் சாப்பிடுரது..." சொல்லிவிட்டு அவள் முகத்தைப்பார்க்கிறார் .... அவளோ கரண்டிகொண்டு தட்டில் எரிச்சலாய் கோலம்போடுகிறாள்...
" அடுத்து சந்தோஷம் உனக்குத்தெரியும், இந்த காண்ட்ராக்ட் முடிந்தது.."
"ஆமா சார்.. நீங்க நல்லா , தெளிவா ,அழகா பேசினீங்க. எனக்கு பிடித்திருந்தது.." கொஞ்சம் தைரியமாய்.. சரி பேச்சை மாற்றலாம் என்று அவள்...
" ஹாஹாஹா.... உண்மையாகவா..."
"ஆமா சார்...." ஒன்றும் புரியாமல் ...
" ஹாஹாஹா ..உண்மையா உனக்கு என்னை பிடிச்சிருக்கா.. ஹாஹாஹா.." மாட்டிக்கொண்டாளே என்று.. ".........." இப்போது புரிகிறது அவரின் கில்லாடித்தனம்...
------------------------------------------------தொடரும்.. இப்போதைக்கு லேசா..லேசா..
லேசா லேசா - தொடர் பாகம் 1
அறிமுகம்...- பகுதி 1...தொடர்கிறது.....
------------------------------------------------------------------
" மது கடந்த 6 மாதமா, ஐ அம் வாட்சிங் யூ.. எனக்கு சொல்லணும் னு தோணிச்சு.."
" டேக் யூவர் ஓண் டைம்...நிதானமா சொல்லலாம்.." ஆனாலும் இப்பவே சொல்லமாட்டாள என்ற நப்பாசை..
" மன்னிக்கணும் சார்.. எனக்கு இந்த காதல் , கல்யாணம் இதில் விருப்பமில்லை..."
" ஐ யம் நாட் அ ரொமண்டிக் பேர்சன்.. எப்டி சொல்லனு தெரில சார்..ஐ.. ஐ..யம் நாட் த ரை பேர்சன்."
" ஹாஹாஹாஹா. இது தான் உங்க பிராப்ளமா.."
" யார் சொன்னா கல்யாணம் பண்ணிக்க ரொமாண்டிக்கா இருக்கணும்னு.."
"சார். சாரி. ஐ யம் நாட் இன் எ பொசிஷன் டூ எக்ஸ்ப்லெய்ன் யூ.. எனக்கு நேரமாச்சு சார்.."
" நாளை நாம் டிஸ்க்ஸ் பண்ணுவோம் சார்....."
என்று சொல்லிவிட்டு அவள் பதில் எத்ர்பார்க்காமல் வெளியேற முயல,
" எனிவே ஐயம் சாரி...இப்படி , இன்று, இங்கே சொன்னதற்கு..சாரி அகெய்ன்.."சிரிப்புடன் ,தடுமாற்றம்..
"இட்ஸ் ஒக்கே சார்.." அவசரமாக வெளியேறினாள்..
கலக்கமாக இருந்தது அவளுக்கு... எங்கு நடந்தது தவறு... எல்லோருக்கும் தெரியுமே, நான் திருமணம் வேண்டாமென்றிருப்பது.
தன் மேல் தவறில்லை, என சமாதானம் செய்தாலும், மேற்கொண்டு இங்கு வேலையை எப்படி தொடர்வது..
என 1000 குழப்பம்....
ரகுவுக்குத் தெரியும் அவள் உடனே சம்மதம் தரமாட்டாள் என்று.. ஆனால் எப்ப்டியோ சொல்லிவிட்டோம்
என்று மனதில் குஷி.. இனி மேற்கொண்டு காயை எப்ப்டி நகர்த்தலாம் என்று திட்டமிட்டான் புராஜக்ட்
மேனேஜர் ரகு...அவள் முகவரியை விசாரித்தான்...
---------------------------------------------------------------------------------
இதற்கிடையில் முனி என்ற முனீஸ் இவர்களுடன் வேலை பார்க்கிறான்..அவனுக்கும் மதுமேல் ஒரு கண்.
ரொம்ப ஜாலியான பேர்வழிதான்...ஆனால் கொஞ்சம் தன்னலம் ஜாஸ்தி...
" ஹை மது ..நீ கண்டிப்பா நல்லாருக்கணும் இன்னிக்கு . ஏன்னா என் முகத்துல முதலில் முழிச்சிருக்க..."
" குட் மார்னிங் முனி...என்ன வந்ததும் வராததுமாய்..."
" ஹேய் யூ நோ வாட்?.. "
" டேய் சொல்லுபா முதல்ல... ரொம்ப பீடிகை போட்டுட்டு..எனக்கு நெரய வேலையிருக்கு முனி.."
" இங்க பார்ரா.. நாங்கல்லாம் சும்மா இருக்கமாதிரி....சரி நான கேட்ட மாட்டர் என்னாச்சு"
" எது"
" அதான் நீ அத்ர்ஷ்டசாலியா?. இல்லயா?."""
" ஹாஹாஹாஹா.. ஓ. அது...வா... ஹாஹா.."
" என்ன சிரிப்பு.."
" டேய் தாங்கமுடிலடா.. போ. போய் வேலயப்பாரு..."
" ரொம்பதான் சிரிக்கிற.. ஒருநாள் இல்லாட்டி ஒரு நாள் பீஃல் பண்ணப்போர.."
" சரி சரி. ரொம்ப பீஃலிங்க்ஸ் விடாம..போய் வேலையைப்பாரு...மேனேஜர் கோவமா இருக்கார் இன்னிக்கு"
"அவன் கெடக்கான்...."
" ம். மரியாதை.."
" சரி. அவங்க கெடக்காங்க விடுங்க...இன்னும் 30 நாள் டைம் தாரேன்..அதுக்குள்ள நல்ல முடிவா சொல்லிடு.."
"க்ளுக்.க்ளுக். என வாய்ப்பொத்தி சிரிக்கிறாள்..
" உனக்கு இன்னொண்ணு சொல்ரேன் கேட்டுக்கோ.. அந்த கேரள் சீமாவையும் கரெக்ட் பண்ணிட்டு இருக்கேன்..
முடிஞ்சா ரெக்கமண்ட் பண்ணு அவகிட்ட... எதுக்கும் நீயும் நல்லா யோசி..
உனக்குதான் பஸ்ட் , அவ உன்னவிட அழகுன்னாலும் ..ப்ப்ரிபஃரன்ஸ்.."
" சரி சரி .. போரேன்... அதுக்காக போன்லாம் பேசவேண்டாம்"
அப்பாடா என்றிருந்தது அவளுக்கு.... வேறு வழியில்லை இவனை பகைத்தால் பெரும் பிரச்சனை..
ஒருவழியா சீட்டில் உட்கார்ந்தவளுக்கு போன்..
" கேன் யூ கம் டு மை ரூம் மது..என் அறைக்கு வர முடியுமா மது..?"
அடுத்த எரிச்சல் என்று திட்டிக்கொண்டே பைஃலுடன் சென்றாள்.
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா - தொடர்....
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா - தொடர்....
======================================
அறிமுகம்...- பகுதி 1...
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவேயில்லாதது..
---------------------------------------------------------------------------
விமானம் நியூ யார்க் நகரத்தின் மேலெழும்பி பறக்கத்தொடங்கியதும் மதுமிதாவின் எண்ணச்சிறகுகள் விரிக்கத்தொடங்கின..
மேலெழும்பும் போது வரும் காது வலியை மறக்க நினைவுகளை அசை போட்டாள்...
இதே போன்று முதன்முறயாக ரகு என்ற ரகுராமுடன் தேனிலவுக்காக அவள் வந்தது.., பயந்தது..
அதனையே சாக்காக வைத்து அவன் துணையாக அனுசரணையாக இருந்த நிமிடங்கள். மறக்க முடியுமா?
அதன்பின் வந்த எத்தனையோ தனிமைப்பயணங்கள் தராத சுகங்கள் அவை...
பக்கத்தில் அமர்ந்திரூந்த நபர் நல்ல குரட்டை சத்தத்துடன் தூங்க ஆரம்பித்தார்..
இவள் ரகு தன்னிடம் முதன்முதலாக காதல் சொன்னதை எண்ணிப்பார்த்து கொஞ்சம் சத்தமாகவே சிரித்தாள்..
---------------------------------------------------------------------------------------
ரகு குழந்தைகளுடன் குழந்தையாக தீபாவளி வெடி வெடித்துக்கொண்டிருந்தான்...
விசாலம் அம்மாவோ குழந்தைகளை நினைத்து பயந்தபடி,
" ரகு என்னப்பா விளையாட்டு...கவனமப்பா...." என்று சொல்லிவிட்டு,
பட்சணங்கள் செய்ய சென்றுவிட்டார்..
வீடே கலகலவென்றிருந்தாலும், மது இல்லாமல் கொஞ்சம் வெரிச்சோடிதானிருந்தது...
விசாலம் அம்மாவுக்கு மது மருமகள் அல்ல மகள்...
"நான் உங்க புள்ளயா, இல்ல மதுவான்னு எனக்கு சந்தேகமாயிருக்குமா" ரகு அம்மாவிடம்..
வீடு மற்றும் வேலையாட்கள் மதுவின் வரவுக்கு தயாராகிகொண்டிருக்கிறார்கள்...
-------------------------------------------------------------------------------------
வேந்தன் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளரும் சகல அதன் மற்ற கம்பெனியின் மேனேஜிங் டைரக்டருமான
வேந்தன் அமெரிக்காவில் படிப்பையும் இன்ன பிற வேலைகளையும் பார்த்து அங்கே நிரந்தரமாக இருக்கலாம்
என்ற நிலையில் தந்தையின் கட்டாயத்தின் பேரில் இந்தியா வந்தவர்.... ராமர் அய்யாவின் 4 மகன்களில் மூத்தவர்..அழகானவ்ர்..
வெளிநாட்டுப்பெண்ணுடன் திருமணம், பின் முறிவு,,,எல்லாம் இள வயதில் நடந்து, அதனால், மருமணம் வேண்டாம்
என்றிருப்பவர்...பெண்கள் என்றாலே வெறுப்பு இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு பயத்தில் பெண்களை
தன் கீழ் வேலைக்கு வைக்க விரும்பாதவர்...
மதுமிதா வேந்தன் கம்பெனியின் மூத்த அதிகாரி.. நம்பிக்கைக்கு பேர்போனவர் என்பதால் சீக்கிரம் உயர்பதவிக்கு வந்தவர்.
பெரியவருக்கு மிகவும் பிரியமானவள்...தன் மகன்களிடம் சொல்லாத விஷயங்களைக்கூட பெரியவர், மதுவிடமே
கேட்டு முடிவெடுப்பார்..
---------------------------------------------------------------------------------------
13 வருடங்களுக்கு முன்பு..
ரகு வின் கீழ் மது வேலை பார்த்தாள்... ரகு கண்டிப்பான அதிகாரி... எல்லா விவரமும் விரல் நுனியில்..
இவருக்கும் பெண்களிடம் கொஞ்சம் தூரம் வைப்பது பிடிக்கும்...
திருமணம் வேண்டாம் என்று தள்ளிப்போட்டவர்....
ஆனால் மது இந்த அலுவலகம் வந்து 1 வருடத்தில் அவளின் சுறு சுறுப்பும், வேலையின்மீதுள்ள பிடிமானமும், ரகுவை
கவர்ந்தது.....விசாரித்ததில், தன் தோழிக்கு ஏற்பட்ட காயத்தில் திருமணம் வேண்டாமென்று இருக்கிறாளாம்.
கடந்த 6 மாதமாக எப்படி சொல்வது என்று டிசைன் டிசைனாக யோசித்தும் முடியவில்லை..
இன்று அவளை மீட்டிங் என சொல்லி வரச்சொல்லியிருந்தான்...
"மே ஐ கம் இன் சார்.."" உள்ளே வரலாமா"
"யெஸ் ப்லீஸ்."
உள்ளே ஒரு பத்திர்க்கையை வைத்து சிரித்துக்கொண்டிருந்தான் ரகு...
அவனே" ஏன் சிரிக்கேன் தெரியுமா"
ஜாலியாக இருப்பதை பார்த்து கொஞ்சம் வியப்பாகத்தானிருக்குது...இருந்தாலும் அதிகாரி ஆயிற்றே.
" சொல்லுங்க சார்"
" ஹாஹாஹா..நான் படித்த கதையில் தன் செக்ரட்ரியிடம் காதல் சொல்லத்தெரியாது தவிக்கிறான் நாயகன்.. ஹாஹாஹா."
இவளுக்கு சிரிப்பு வரலை. இருந்தாலும் சிர்த்து வைத்தாள்..
" டூ யூ ஹேவ் எனி ஐடியா.. உனக்கெதாவது தோணுதா"
" யூர் சஜஸ்ஷன்.. உன் எண்ணம்?.."
அய்யோ இது வேரயா?.. சீக்கிரம் மீட்டிங் முடிந்தால் வீட்டுக்கு போகலாம் . சரி சொல்லித்தொலைப்போம்.,
" இதிலென்ன சார் பயம்.. ஏதாவது ஒரு பூ வை எடுத்து அவளிடம் " ஐ லவ் யூ.. ஆர் ஐ வாண்ட் டூ மேரி யூ" னு சொல்ல வேண்டியதுதானே"
ஒப்பேத்தினாள்....
உடனே பக்கத்திலுள்ள பூச்சாடியில் உள்ள ரோஜா ஒன்றை எடுத்து மதுவிடம் அருகில் வந்து நீட்டி.,அவள் எதிர்பார்க்காத நிலையில்
" மது ஐ லவ் யூ.. அண்ட் ஐ வாண்ட் டூ மேரி யூ.. .."
என்ன நடக்குது என்பதே புரியாமல் அதிர்ச்சியுடன், ஆனால் காட்டிக்கொள்ளாமல் ,
" சார் என்ன இது .. நேரமாகுது.. சீக்கிரம் சார்.. . ஷிப்பிங் பத்தி பேசலாம் சார்.."
" மது ஐ மீன் இட்....நான் உன்னை கல்யாணம் செய்ய விடும்புகிறேன்..."
ஹாஹா. சிரித்தாள் அவள்....
" சார் ,ப்லீஸ் பி சீரியஸ்..." அசட்டுச்சிரிப்புடன்ன்.............................
-------------------------------------------------------------------------------------------------
--
தொடரும்...வாரம்தோரும்...
======================================
அறிமுகம்...- பகுதி 1...
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவேயில்லாதது..
---------------------------------------------------------------------------
விமானம் நியூ யார்க் நகரத்தின் மேலெழும்பி பறக்கத்தொடங்கியதும் மதுமிதாவின் எண்ணச்சிறகுகள் விரிக்கத்தொடங்கின..
மேலெழும்பும் போது வரும் காது வலியை மறக்க நினைவுகளை அசை போட்டாள்...
இதே போன்று முதன்முறயாக ரகு என்ற ரகுராமுடன் தேனிலவுக்காக அவள் வந்தது.., பயந்தது..
அதனையே சாக்காக வைத்து அவன் துணையாக அனுசரணையாக இருந்த நிமிடங்கள். மறக்க முடியுமா?
அதன்பின் வந்த எத்தனையோ தனிமைப்பயணங்கள் தராத சுகங்கள் அவை...
பக்கத்தில் அமர்ந்திரூந்த நபர் நல்ல குரட்டை சத்தத்துடன் தூங்க ஆரம்பித்தார்..
இவள் ரகு தன்னிடம் முதன்முதலாக காதல் சொன்னதை எண்ணிப்பார்த்து கொஞ்சம் சத்தமாகவே சிரித்தாள்..
---------------------------------------------------------------------------------------
ரகு குழந்தைகளுடன் குழந்தையாக தீபாவளி வெடி வெடித்துக்கொண்டிருந்தான்...
விசாலம் அம்மாவோ குழந்தைகளை நினைத்து பயந்தபடி,
" ரகு என்னப்பா விளையாட்டு...கவனமப்பா...." என்று சொல்லிவிட்டு,
பட்சணங்கள் செய்ய சென்றுவிட்டார்..
வீடே கலகலவென்றிருந்தாலும், மது இல்லாமல் கொஞ்சம் வெரிச்சோடிதானிருந்தது...
விசாலம் அம்மாவுக்கு மது மருமகள் அல்ல மகள்...
"நான் உங்க புள்ளயா, இல்ல மதுவான்னு எனக்கு சந்தேகமாயிருக்குமா" ரகு அம்மாவிடம்..
வீடு மற்றும் வேலையாட்கள் மதுவின் வரவுக்கு தயாராகிகொண்டிருக்கிறார்கள்...
-------------------------------------------------------------------------------------
வேந்தன் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளரும் சகல அதன் மற்ற கம்பெனியின் மேனேஜிங் டைரக்டருமான
வேந்தன் அமெரிக்காவில் படிப்பையும் இன்ன பிற வேலைகளையும் பார்த்து அங்கே நிரந்தரமாக இருக்கலாம்
என்ற நிலையில் தந்தையின் கட்டாயத்தின் பேரில் இந்தியா வந்தவர்.... ராமர் அய்யாவின் 4 மகன்களில் மூத்தவர்..அழகானவ்ர்..
வெளிநாட்டுப்பெண்ணுடன் திருமணம், பின் முறிவு,,,எல்லாம் இள வயதில் நடந்து, அதனால், மருமணம் வேண்டாம்
என்றிருப்பவர்...பெண்கள் என்றாலே வெறுப்பு இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு பயத்தில் பெண்களை
தன் கீழ் வேலைக்கு வைக்க விரும்பாதவர்...
மதுமிதா வேந்தன் கம்பெனியின் மூத்த அதிகாரி.. நம்பிக்கைக்கு பேர்போனவர் என்பதால் சீக்கிரம் உயர்பதவிக்கு வந்தவர்.
பெரியவருக்கு மிகவும் பிரியமானவள்...தன் மகன்களிடம் சொல்லாத விஷயங்களைக்கூட பெரியவர், மதுவிடமே
கேட்டு முடிவெடுப்பார்..
---------------------------------------------------------------------------------------
13 வருடங்களுக்கு முன்பு..
ரகு வின் கீழ் மது வேலை பார்த்தாள்... ரகு கண்டிப்பான அதிகாரி... எல்லா விவரமும் விரல் நுனியில்..
இவருக்கும் பெண்களிடம் கொஞ்சம் தூரம் வைப்பது பிடிக்கும்...
திருமணம் வேண்டாம் என்று தள்ளிப்போட்டவர்....
ஆனால் மது இந்த அலுவலகம் வந்து 1 வருடத்தில் அவளின் சுறு சுறுப்பும், வேலையின்மீதுள்ள பிடிமானமும், ரகுவை
கவர்ந்தது.....விசாரித்ததில், தன் தோழிக்கு ஏற்பட்ட காயத்தில் திருமணம் வேண்டாமென்று இருக்கிறாளாம்.
கடந்த 6 மாதமாக எப்படி சொல்வது என்று டிசைன் டிசைனாக யோசித்தும் முடியவில்லை..
இன்று அவளை மீட்டிங் என சொல்லி வரச்சொல்லியிருந்தான்...
"மே ஐ கம் இன் சார்.."" உள்ளே வரலாமா"
"யெஸ் ப்லீஸ்."
உள்ளே ஒரு பத்திர்க்கையை வைத்து சிரித்துக்கொண்டிருந்தான் ரகு...
அவனே" ஏன் சிரிக்கேன் தெரியுமா"
ஜாலியாக இருப்பதை பார்த்து கொஞ்சம் வியப்பாகத்தானிருக்குது...இருந்தாலும் அதிகாரி ஆயிற்றே.
" சொல்லுங்க சார்"
" ஹாஹாஹா..நான் படித்த கதையில் தன் செக்ரட்ரியிடம் காதல் சொல்லத்தெரியாது தவிக்கிறான் நாயகன்.. ஹாஹாஹா."
இவளுக்கு சிரிப்பு வரலை. இருந்தாலும் சிர்த்து வைத்தாள்..
" டூ யூ ஹேவ் எனி ஐடியா.. உனக்கெதாவது தோணுதா"
" யூர் சஜஸ்ஷன்.. உன் எண்ணம்?.."
அய்யோ இது வேரயா?.. சீக்கிரம் மீட்டிங் முடிந்தால் வீட்டுக்கு போகலாம் . சரி சொல்லித்தொலைப்போம்.,
" இதிலென்ன சார் பயம்.. ஏதாவது ஒரு பூ வை எடுத்து அவளிடம் " ஐ லவ் யூ.. ஆர் ஐ வாண்ட் டூ மேரி யூ" னு சொல்ல வேண்டியதுதானே"
ஒப்பேத்தினாள்....
உடனே பக்கத்திலுள்ள பூச்சாடியில் உள்ள ரோஜா ஒன்றை எடுத்து மதுவிடம் அருகில் வந்து நீட்டி.,அவள் எதிர்பார்க்காத நிலையில்
" மது ஐ லவ் யூ.. அண்ட் ஐ வாண்ட் டூ மேரி யூ.. .."
என்ன நடக்குது என்பதே புரியாமல் அதிர்ச்சியுடன், ஆனால் காட்டிக்கொள்ளாமல் ,
" சார் என்ன இது .. நேரமாகுது.. சீக்கிரம் சார்.. . ஷிப்பிங் பத்தி பேசலாம் சார்.."
" மது ஐ மீன் இட்....நான் உன்னை கல்யாணம் செய்ய விடும்புகிறேன்..."
ஹாஹா. சிரித்தாள் அவள்....
" சார் ,ப்லீஸ் பி சீரியஸ்..." அசட்டுச்சிரிப்புடன்ன்.............................
-------------------------------------------------------------------------------------------------
--
தொடரும்...வாரம்தோரும்...
சோதனை மேல் சோதனை.. அலுவகலகத்தில்
=======================================
இன்று என் அலுவலகத்தில் முக்கியமான நாள்..ஒவ்வொருவரையாக என்
தலைமை அதிகாரி கூப்பிட்டு அனுப்பினார்... அதுதாங்க வருட பணிஆய்வுத்
தீர்ப்பு .(Yearly Performance Evaluation report).
நமக்கு சும்மா கலக்க ஆரம்பிச்சுருச்சு... அறையிலிருந்து வெளியே வருகிறவர்கள்
முகத்தை பார்த்தும் பார்க்காத மாதிரியும் ஒரு லுக் விட்டேன்..
காணோம் . ஒரு எக்ஸ்பிரஷ்னும் காணோம்...சந்தோசமா, வருத்தமா?. ம்கூம்
சரி நம்ப டர்ன் வந்தது.... கூப்பிட்டார்கள்.. நானும் என்னோட
குழும ஜன்னலை மூடிவிட்டு, கொஞ்சம் தண்ணிய குடிச்சுபுட்டு
ரிலக்ஸா போரமாதிரி பிலிம் காட்டிவிட்டு ( மனதுக்குள் ஆயிரம் கேள்வி ..+ பதிலோட)
அதிகாரி அறைக்குள் போனேன்...சிரித்துக்கொண்டே வரவேற்றவர்,
சாரி சாந்தி, லஞ்சுக்குப் பிறகு பார்க்கலாமா என்றார்..அட, இன்னும்
30 நிமிடம் இருக்கின்றதே அதற்கு என்று கேட்க நினைப்பதற்குள்,
இல்ல விலாவாரியாக பேசவேண்டும் என்று ஒரு பெரிய குண்டைத்தூக்கிபோட்டார். அடப்பாவி, எல்லாருக்கும் 15 நிமிடம்,
என்னிடம் மட்டும் 30 நிமிடத்துக்கு மேலா?. இது நல்லால்ல, தாங்காது
நாட் பேஃர் என்று மனதுக்குள் திட்டினாலும், வாய் நிறைய சிரித்துக்கொண்டு
பரவால்ல பரவால்ல னு பல்லைக்கடித்துக் கொண்டு விடைபெற்றேன்..
நேரே சாப்பிடச்சென்றேன்.. ஒரே டென்ஷன்.. கூல் கூல் னு மனதுக்குள்
சொன்னாலும் மனம் கூலாவா ஆகுது... என்ன ஆர்டர் பண்ணினேன் , என்ன சாப்பிட்டேன்
என்று எனக்கே தெரியாது... இடையில் 2 போன்.. 1 குழந்தையிடமிருந்து..
" ஏன் என்னை ஸ்கூலில் விட்டுட்டுப்போனன்னு" சாரிம்மான்னு சமாதனம்
சொல்லிட்டு வைத்ததும் வூட்டுக்காரர்..அவர் பாட்டைப்படித்து முடித்தார்...
அய்யோ என் பாட்டை கேப்பார் இல்லியா.....
ஒருவழியா சீட்டில் வந்தமர்ந்ததும் , அவரா கூப்பிடட்டும்னு நான் சீன் விட
5 மினிட்ஸ் னு சொல்லிகினே அலங்கார அறைக்கு ( rest room ) சென்றுவிட்டு
15 நிமிடம் கழித்து வருகிறார். ரொம்பதான் பில்டப்...னு மனதில் திட்டிக்கொண்டே,
நான் அசடு வழிய ,சாரி சொல்லிட்டே கம் சாந்தி னு போரார் .
நான் பின் தொடர்கிறேன், பலி ஆடுபோல...
தொடரும்......
உள்ளே சென்றதும் நாற்காலி காட்டி உட்காரச்சொன்னார்.. நான் வாயிற்புரம் அருகிலிருக்கும் நாற்காலி, சாரி முக்காலியில் நுனியில் அமர்ந்தேன். ( ரொம்ப மரியாதைதான்..) ரிலக்ஸ் என்கிரார்.. சிரித்து வைத்தேன்( சரிங்கோ, சிக்கிரம் உடைங்கோ சஸ்பென்ஸ னு திட்டிகிட்டே).
ஒரு பேப்பரை நிட்டினார்... பல அடித்தல் திருத்தல்.. பரவால்ல நம்ம மக்கள் ரொம்ப கக்ஷ்டப் பட்டிருக்காங்க நம்மள பத்தி எழுதன்னு புரிஞ்சுது.... அதென்ன அடியில் மார்க்கு தானே?. னு எட்டிப் பார்க்கையில், அவசரமா வாங்கிக்கொண்டார்.. அட ஜீஸஸ்..... ஏதோ 4 என்ற எண் தெரிந்தது... அட அப்போ 40 க்கு மேல் என்று சந்தோஷமாயிடுச்சு.. (" சாந்தீஈஈஈஈஈஈஈஈஈ நீ பாஸாயிட்டேன்னு ஒரு குரல்") கொஞ்சம் முக்காலியில் உள்ளே தள்ளி அமர்ந்தேன் இப்ப ரிலாக்ஸ்டாக...பேச ஆரம்பித்தார். தண்ணி குடித்தார்..
வேணுமான்னு கேட்டார்.. ( தெய்வமே அமிர்தம் குடுத்தாலும் வேண்டாம்) அட சீக்கிரம் அனுப்புங்கையா , இன்னும் மார்க் கன்பர்ம் ஆகலையே...
பத்து கேள்விகள் அதில். ஒவ்வொண்ணும் 1-5 மார்க்...
பத்து கேள்விகளையும் எனக்களிக்கப்பட்ட பதிலையும் நிதானமாக (???)விவரிக்க ஆரம்பித்தார்... ( யாருக்குங்க வேணும்???) கண்ணை மட்டுமல்ல பல்லையும் கட்டுதே!!!!.. ஹார்ட் பீட் எக்குத்தப்பா அடிக்கிற சத்தம் எனக்கு கேக்குது...
சிலவற்றிற்கு 3 மார்க். அதுக்கு எனக்கு ரொம்ப ஆறுதல் வேற சொல்ரார்.. ( நான் கேட்டேனா?. இல்ல நான் கேட்டேனா?) இதுக்கு எல்லாருக்குமே 3 மார்க் தான் என்று.. எவ்வளவு நேரம்தான் அசடு வழிய.. நான் பரவால்ல பரவால்லனு சொன்னாலும் விடமாட்டேங்கிறார்..
ஒருவழியா 42 மார்க்.. எனக்கு இப்ப உண்மையிலேயே தூக்கி வாரிப்போடுது.... அய்யோ என்ன இது... நான் முழிக்க, அவர் வியக்க , என் மனசாட்சி ஒத்துக்கொள்ள மறுக்கின்றது... கஷ்டம் வந்தாலும் தகுதியில்லா இன்பம் வந்தாலும் இப்டித்தான்..
ஒருவேளை
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் " னு
பழிவாங்கிட்டாங்களோ னு எனகிப்ப நாணமா இருக்கு...
ஏதோ என் அத்ர்ஷ்டம் இந்த வருடம் கஸ்டம்ருகிட்ட அவ்ளோ கஸ்டமில்ல..
கடந்த 4 மாதமா எங்க வேலை செஞ்சேன்.. அப்பப்ப இரவு நேர வேலைக்கு மட்டும் மாட்டேன்னு சொல்லாம போவேன்.. அதுக்காக இப்படியா..
புலம்பித் தவிக்கிரேன் மனதுக்குள்...அவரோ அடுத்த புராஜக்ட் பத்தி விவரித்துகொண்டே போகிறார்...உடனே சபதம் எடுக்கிரேன்." சே , இந்த வருடம் என் முழு கவனத்தையும் வேலையில் செலுத்தி இந்த மார்க்குகளை உண்மை என நிரூபிப்பேன்.."அவர் சொல்கிறார், நாளை நம் முதலாளி மீட்டிங் வைத்துள்ளார்.. நீ விரும்பும் கேள்விகளை அவரிடம் கேட்கலாம் என்று... கேள்வியா எனக்கா.. ஹாஹா. என்ன நினைத்தார்கள் என்னை..
அவ்வளவு தைரியசாலியா நான்?
"கேள்வி ஒண்ணுமில்லை நான் செல்லலாமா "னு ஓட ரெடியா இருக்கும் போது சிட் சிட் , புரமோஷன் என்று ஸ்லோமோஷனில் சொல்கிறார்...
அதுதான் வேண்டாம்னு இருக்கேனே ( ஊர் சுற்ற முடியாமல்...+ வேலைப்பழு அதிகம்.) . எனக்கு எந்த தனிப்பட்ட தேவையும் இல்லை சார் னு ஆளைவிட்டாப் போதும்னு ஓடி வந்துட்டேன் நாரதர் மாதிரி....சீட்டுக்கு வந்தும் படபடப்பு அடங்கலை...
போட்டேன் வூட்டுக்காரருக்கு போனை... வருட ஆய்வுல கவுத்துட்டாங்க ன்னேன். அப்டியா அதான் தெரிந்த விசயமே ன்னார். முழு விவரம் கேட்டபின், பிளீஸ் எனக்கொரு வேலை வாங்கித்தர முடியுமான்னு என்கிட்டேயே கேக்கிறார்...என்ன தைரியம் ???
வெச்சுட்டேன் போனை.. என் இமேஜ் என்னாரது....
ஒண்ணுமே புரியல உலகத்துல....என்னவோ நடக்குது......மர்மமாயிருக்குது...
அதனால் இந்த வருடம் ஒழுங்கா வேலை செய்யலாம்னு இருக்கேன்.....
யாரங்கே சிரிக்கிரது??????????
=======================================
இன்று என் அலுவலகத்தில் முக்கியமான நாள்..ஒவ்வொருவரையாக என்
தலைமை அதிகாரி கூப்பிட்டு அனுப்பினார்... அதுதாங்க வருட பணிஆய்வுத்
தீர்ப்பு .(Yearly Performance Evaluation report).
நமக்கு சும்மா கலக்க ஆரம்பிச்சுருச்சு... அறையிலிருந்து வெளியே வருகிறவர்கள்
முகத்தை பார்த்தும் பார்க்காத மாதிரியும் ஒரு லுக் விட்டேன்..
காணோம் . ஒரு எக்ஸ்பிரஷ்னும் காணோம்...சந்தோசமா, வருத்தமா?. ம்கூம்
சரி நம்ப டர்ன் வந்தது.... கூப்பிட்டார்கள்.. நானும் என்னோட
குழும ஜன்னலை மூடிவிட்டு, கொஞ்சம் தண்ணிய குடிச்சுபுட்டு
ரிலக்ஸா போரமாதிரி பிலிம் காட்டிவிட்டு ( மனதுக்குள் ஆயிரம் கேள்வி ..+ பதிலோட)
அதிகாரி அறைக்குள் போனேன்...சிரித்துக்கொண்டே வரவேற்றவர்,
சாரி சாந்தி, லஞ்சுக்குப் பிறகு பார்க்கலாமா என்றார்..அட, இன்னும்
30 நிமிடம் இருக்கின்றதே அதற்கு என்று கேட்க நினைப்பதற்குள்,
இல்ல விலாவாரியாக பேசவேண்டும் என்று ஒரு பெரிய குண்டைத்தூக்கிபோட்டார். அடப்பாவி, எல்லாருக்கும் 15 நிமிடம்,
என்னிடம் மட்டும் 30 நிமிடத்துக்கு மேலா?. இது நல்லால்ல, தாங்காது
நாட் பேஃர் என்று மனதுக்குள் திட்டினாலும், வாய் நிறைய சிரித்துக்கொண்டு
பரவால்ல பரவால்ல னு பல்லைக்கடித்துக் கொண்டு விடைபெற்றேன்..
நேரே சாப்பிடச்சென்றேன்.. ஒரே டென்ஷன்.. கூல் கூல் னு மனதுக்குள்
சொன்னாலும் மனம் கூலாவா ஆகுது... என்ன ஆர்டர் பண்ணினேன் , என்ன சாப்பிட்டேன்
என்று எனக்கே தெரியாது... இடையில் 2 போன்.. 1 குழந்தையிடமிருந்து..
" ஏன் என்னை ஸ்கூலில் விட்டுட்டுப்போனன்னு" சாரிம்மான்னு சமாதனம்
சொல்லிட்டு வைத்ததும் வூட்டுக்காரர்..அவர் பாட்டைப்படித்து முடித்தார்...
அய்யோ என் பாட்டை கேப்பார் இல்லியா.....
ஒருவழியா சீட்டில் வந்தமர்ந்ததும் , அவரா கூப்பிடட்டும்னு நான் சீன் விட
5 மினிட்ஸ் னு சொல்லிகினே அலங்கார அறைக்கு ( rest room ) சென்றுவிட்டு
15 நிமிடம் கழித்து வருகிறார். ரொம்பதான் பில்டப்...னு மனதில் திட்டிக்கொண்டே,
நான் அசடு வழிய ,சாரி சொல்லிட்டே கம் சாந்தி னு போரார் .
நான் பின் தொடர்கிறேன், பலி ஆடுபோல...
தொடரும்......
உள்ளே சென்றதும் நாற்காலி காட்டி உட்காரச்சொன்னார்.. நான் வாயிற்புரம் அருகிலிருக்கும் நாற்காலி, சாரி முக்காலியில் நுனியில் அமர்ந்தேன். ( ரொம்ப மரியாதைதான்..) ரிலக்ஸ் என்கிரார்.. சிரித்து வைத்தேன்( சரிங்கோ, சிக்கிரம் உடைங்கோ சஸ்பென்ஸ னு திட்டிகிட்டே).
ஒரு பேப்பரை நிட்டினார்... பல அடித்தல் திருத்தல்.. பரவால்ல நம்ம மக்கள் ரொம்ப கக்ஷ்டப் பட்டிருக்காங்க நம்மள பத்தி எழுதன்னு புரிஞ்சுது.... அதென்ன அடியில் மார்க்கு தானே?. னு எட்டிப் பார்க்கையில், அவசரமா வாங்கிக்கொண்டார்.. அட ஜீஸஸ்..... ஏதோ 4 என்ற எண் தெரிந்தது... அட அப்போ 40 க்கு மேல் என்று சந்தோஷமாயிடுச்சு.. (" சாந்தீஈஈஈஈஈஈஈஈஈ நீ பாஸாயிட்டேன்னு ஒரு குரல்") கொஞ்சம் முக்காலியில் உள்ளே தள்ளி அமர்ந்தேன் இப்ப ரிலாக்ஸ்டாக...பேச ஆரம்பித்தார். தண்ணி குடித்தார்..
வேணுமான்னு கேட்டார்.. ( தெய்வமே அமிர்தம் குடுத்தாலும் வேண்டாம்) அட சீக்கிரம் அனுப்புங்கையா , இன்னும் மார்க் கன்பர்ம் ஆகலையே...
பத்து கேள்விகள் அதில். ஒவ்வொண்ணும் 1-5 மார்க்...
பத்து கேள்விகளையும் எனக்களிக்கப்பட்ட பதிலையும் நிதானமாக (???)விவரிக்க ஆரம்பித்தார்... ( யாருக்குங்க வேணும்???) கண்ணை மட்டுமல்ல பல்லையும் கட்டுதே!!!!.. ஹார்ட் பீட் எக்குத்தப்பா அடிக்கிற சத்தம் எனக்கு கேக்குது...
சிலவற்றிற்கு 3 மார்க். அதுக்கு எனக்கு ரொம்ப ஆறுதல் வேற சொல்ரார்.. ( நான் கேட்டேனா?. இல்ல நான் கேட்டேனா?) இதுக்கு எல்லாருக்குமே 3 மார்க் தான் என்று.. எவ்வளவு நேரம்தான் அசடு வழிய.. நான் பரவால்ல பரவால்லனு சொன்னாலும் விடமாட்டேங்கிறார்..
ஒருவழியா 42 மார்க்.. எனக்கு இப்ப உண்மையிலேயே தூக்கி வாரிப்போடுது.... அய்யோ என்ன இது... நான் முழிக்க, அவர் வியக்க , என் மனசாட்சி ஒத்துக்கொள்ள மறுக்கின்றது... கஷ்டம் வந்தாலும் தகுதியில்லா இன்பம் வந்தாலும் இப்டித்தான்..
ஒருவேளை
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் " னு
பழிவாங்கிட்டாங்களோ னு எனகிப்ப நாணமா இருக்கு...
ஏதோ என் அத்ர்ஷ்டம் இந்த வருடம் கஸ்டம்ருகிட்ட அவ்ளோ கஸ்டமில்ல..
கடந்த 4 மாதமா எங்க வேலை செஞ்சேன்.. அப்பப்ப இரவு நேர வேலைக்கு மட்டும் மாட்டேன்னு சொல்லாம போவேன்.. அதுக்காக இப்படியா..
புலம்பித் தவிக்கிரேன் மனதுக்குள்...அவரோ அடுத்த புராஜக்ட் பத்தி விவரித்துகொண்டே போகிறார்...உடனே சபதம் எடுக்கிரேன்." சே , இந்த வருடம் என் முழு கவனத்தையும் வேலையில் செலுத்தி இந்த மார்க்குகளை உண்மை என நிரூபிப்பேன்.."அவர் சொல்கிறார், நாளை நம் முதலாளி மீட்டிங் வைத்துள்ளார்.. நீ விரும்பும் கேள்விகளை அவரிடம் கேட்கலாம் என்று... கேள்வியா எனக்கா.. ஹாஹா. என்ன நினைத்தார்கள் என்னை..
அவ்வளவு தைரியசாலியா நான்?
"கேள்வி ஒண்ணுமில்லை நான் செல்லலாமா "னு ஓட ரெடியா இருக்கும் போது சிட் சிட் , புரமோஷன் என்று ஸ்லோமோஷனில் சொல்கிறார்...
அதுதான் வேண்டாம்னு இருக்கேனே ( ஊர் சுற்ற முடியாமல்...+ வேலைப்பழு அதிகம்.) . எனக்கு எந்த தனிப்பட்ட தேவையும் இல்லை சார் னு ஆளைவிட்டாப் போதும்னு ஓடி வந்துட்டேன் நாரதர் மாதிரி....சீட்டுக்கு வந்தும் படபடப்பு அடங்கலை...
போட்டேன் வூட்டுக்காரருக்கு போனை... வருட ஆய்வுல கவுத்துட்டாங்க ன்னேன். அப்டியா அதான் தெரிந்த விசயமே ன்னார். முழு விவரம் கேட்டபின், பிளீஸ் எனக்கொரு வேலை வாங்கித்தர முடியுமான்னு என்கிட்டேயே கேக்கிறார்...என்ன தைரியம் ???
வெச்சுட்டேன் போனை.. என் இமேஜ் என்னாரது....
ஒண்ணுமே புரியல உலகத்துல....என்னவோ நடக்குது......மர்மமாயிருக்குது...
அதனால் இந்த வருடம் ஒழுங்கா வேலை செய்யலாம்னு இருக்கேன்.....
யாரங்கே சிரிக்கிரது??????????
Subscribe to:
Posts (Atom)
