Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Monday, August 29, 2011

ஏன் சென்றாய் செங்கொடி?.





செங்கொடியின் கொள்கை, நோக்கம் மிக உயர்ந்தது எனினும் , ஒருபோதும் ஊக்குவிக்கப்படக்கூடாது.. நீதி கிடைக்கும்வரை போராடணும்.. முத்துகுமாரின் மரணம் அவர் நினைத்ததை தந்ததா?.சரி, தவறு என்பதற்கு அப்பாற்பட்டது இது..அவரவரின் கொந்தளிப்பான, உணர்ச்சிகர சூழல் முக்கிய காரணம்..இன்னும் எத்தனை எத்தனை போராட்டங்களுக்கு தலைமை வழிநடத்தியிருக்கவேண்டியவர்கள் நீங்கள்..?. ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பதார்க்கு.ஒருபக்கம் மக்கள் சக்தியை எளிதாக எடைபோட்டுவிட்டாரோ என தோணுது.. கொள்கையுடையோர் அவசரப்படலாமா?

லட்சம் பேரை தம் பின்னால் அணிதிரட்டக்கூடிய வலிமையுடையோர், பல்லாயிரம் தலைவர்களை உருவாக்கக்கூடியோர் நீங்கள்.. எப்போது மரணத்துக்கு அஞ்சாதவராக இருக்க முடியுதோ, அப்போது உலகம் உங்கள் கையிலல்லாவா?.. சாதித்திருக்கவேண்டாமா பல வழிகளில்..?. உங்கள் உணர்வுகளின் கொந்தளிப்பு பலரை அடைய செய்திருக்கணுமே தவிர, அவசரப்பட்டீரே..சாவை துச்சமென நினைப்போர் புதிதாக அல்லவா பிறக்கின்றனர் மக்களின் தலைமையாக..?

இந்த தூக்குதண்டனை பிரச்னை மட்டுமே நம் முன்னால் இருப்பதல்ல. பல சமூக பிரச்னைகள் , வாழ்வாதார பிரச்னைகள் நம் முன்னால் ஆயிரக்கணக்கில் உள்ளது.. பல அப்பாவி மக்களுக்கு இன்னும் அதுபற்றி தெரியக்கூட இல்லை.. அப்படியிருக்கையில் இப்படி உங்களைப்போன்ற கொள்கையுடையோர் பொசுக் னு முடிவெடுத்தால்?.. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய.. அப்பாவி மக்களை விடுவிக்கவேண்டிய பொறுப்புகள் எக்கச்சக்கம் இங்கே.. இதே போல தொடர்ந்தால் நல்லவர் இல்லாத இடங்களில் நரிகளின் நாட்டாமைகள் தொடங்கிவிடும்.. கொள்கையுடையோரை இழப்பது லட்சம்பேரை இழப்பதற்கு சமம் என புரிந்துகொள்ளணும்..


கொள்கையுடையோர் உயிர் அவருக்கு மட்டுமானதல்ல.. எத்தனை பேருக்கு துணிவை தந்திருக்கலாம் நீங்கள்.. ?.. எத்தனை பேரை போராட வைத்திருக்கலாம் உங்கள் சொற்கள்..?.. உங்கள் மரணம் வலி தருது..சரி/தவறு என்ற விமர்சனமில்லை.. சகோதரி ஐரோம் சர்மிளா தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறாரே..ஏன்?.. ஏதிரிகளுக்கு உங்களைப்போன்ற கொள்கையுடையோரின் மரணம் வரவே..

மக்களுக்காக சிந்திக்கக்கூடியோராக பிறக்கும் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை..இத்தகையோரின் உயிர் சாதாரண மக்களின் உயிரை ஒப்பிடுகையில் நிச்சயம் விலைமதிப்பில்லாதது.. உங்களுக்கான போராட்டத்தை செய்துவிட்டே சென்றுள்ளீர்கள்.. இருப்பினும் இன்னும் எவ்வளவு சாதித்திருப்பீர்கள் என்ற ரணம்.. எத்தனை பேரில் மாற்றம் கொண்டு வந்திருப்பீர்கள்?..அவை மிகப்பெரிய இழப்பல்லவா?.. மனதால் ஏற்கனவே மரணித்தோர் பலருண்டு இங்கே.. இருப்பினும் இறுதி மூச்சுவரை கொள்கையை விடாமல் பற்றிக்கொண்டு செயல்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.. வெளிச்சத்துக்கு வராமல்..

விழுதுகளை தாங்கவேண்டிய ஆலமரமே சாய்ந்தால்? வீழ்த்த எண்ணியோர்க்கு இடமளித்ததாகிடுதே!

மூவருக்காக இங்கே மூன்று பெண்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனரே..தன்னையே வருத்திக்கொண்டிருக்கும் அநத ச்கோதரிகளின் உணர்வுகள் வலிமையற்று போய்விடக்கூடாது.. அவையும் தற்கொலைக்கு ஈடானதுதான்.. உணவளிப்பது வயற்றுக்கு மட்டுமா?.. இல்லையே?.. எல்லாம் செயலற்று போகுமே அவர்களுக்கு?.. நிமிடங்கள் போகப்போக வலிகள் கூடுமே சகோதரி?..நொடிப்பொழுதில் உயிர் விடுவதை விட ரணமல்லவா இது?..வணங்குகின்றேன் அச்சகோதரிகளை..




செழுமையாக வளர்ந்து இன்னும் பலரை வளரச்செய்யவேண்டிய கொடி , இன்று கருகியதேன்..

உணர்ச்சிகளை தூண்டுவிதமாக பலர் செயல்படலாம்.
தியாகி பட்டம் தரப்படலாம்.. ஆக ,கவனமாக கையாளணும்..சிலரின் மரணம் பலருக்கு அரசியல் , விளையாட்டு மட்டுமே..

இனியும் இதுபோல நடக்காமல் பார்ப்பதும் நம் அனைவரின் கடமையே..

தோல்வி நிலையென நினைத்தால்?.

Each victim of suicide gives his act a personal stamp which expresses his temperament, the special conditions in which he is involved, and which, consequently, cannot be explained by the social and general causes of the phenomenon.
Emile Durkheim


படம்: கூகுள்
Link

Monday, July 4, 2011

மிஸ் யுவகிருஷ்ணா- புதிய தலைமுறை ?.:)







யுவகிருஷ்ணாவின் அராஜக , வக்கிரமான பேச்சு யாவரும் அறிந்ததே..

பல முறை தொடர்ந்து எரிச்சலூட்டி வந்தார் பஸ் ல்.

நானும் இவன் தரம் அறிந்து கண்டுகொள்ளாமலே சென்றேன்..

இவனைப்போன்றவரிடம் மோதுவது வெட்டி வேலை நேர விரயம் மட்டுமே. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியா கோழைகள்..

சமீபத்தில் மீண்டும் மீண்டும் வம்பு செய்ததோடு ஏழர யின் விளக்கம் கேட்டமையால் பதிலளிக்க வேண்டி வந்தது இந்த சாருவின் ஆதரவாளரிடம்..

அவன் பேச ஆரம்பித்த விதத்தை பாருங்கள்..அப்ப புரியும் நான் ஏன் இவனை மிஸ் என தலைப்பில் போட்டேன் என..:)

என்னை ஆணாக கருதுவது எனக்கு இழிவல்ல. பெருமையே..:). இந்திரா காந்தி சொன்னது போல்..

------------------


யுவ கிருஷ்ணா - மிஸ்டர் சாந்தி!

எனக்கு பொம்பளைகளை திட்டுவதில் உடன்பாடு இல்லை. ஆனால் உங்களை பார்த்தால் பொம்பளை மாதிரியே இல்லை.

எனக்கு எதுக்கு செருப்படி? விளக்கம் ப்ளீஸ்...
6/௩0

jmm s - ஆனால் உங்களை பார்த்தால் பொம்பளை மாதிரியே இல்லை.//

ரொம்ப நன்றி..

உங்களை பார்த்தாலும் ஆண் மாதிரியே தெரியலை..

:))
Edit6/௩0

யுவ கிருஷ்ணா - அப்படிங்களா சார்? :-) உற்றுப் பாருங்க என் மூக்குக்கு கீழே மீசை தெரியும்... உங்க லெவலுக்கு எனக்கு மீசை வளரலேன்னாலும், ஏதோ கொஞ்சம் வளர்ந்திருக்கு....6/௩0

யுவ கிருஷ்ணா - //எனக்கு எதுக்கு செருப்படி? விளக்கம் ப்ளீஸ்...//

இந்த கேள்விக்கு துப்பிருந்தா விடை சொல்லுங்க மிஸ்டர் சாந்தி....

அப்படி செருப்படி கொடுக்கணும்னு நெனைச்சா, நேர்லே வாங்க. நானும் கூட பாட்டா ஷூ போட்டிருக்கேன். ஒருத்தரை ஒருத்தர் ஜோட்டாலே அடிச்சி விளையாடிக்கலாம்

:-)
6/30 (edited 6/30)

jmm s - மொக்கைக்கு எனக்கு நேரமில்லை

--------------------

இவனோடு இவன் தரத்துக்கு பேச மனமில்லாமல் விலகினால் மீண்டும் அசிங்கமா பேசினான்..


செருப்பால் அடிப்பேன் என சொன்னது அவன்தான். ஜாக்கி கு குழந்தை பிறந்த போது நான் சொன்ன விஷயம் இது

நான் போட்ட கமெண்ட் இது கீழே..

----------------


jmm s - இனியாவது நிர்வாணப்படத்தை பற்றி பேசும்போதும் போடும்போதும் தன் பெண் குழந்தை முகம் நியாபகத்துக்கு வரட்டும்..

நாட்டிலுள்ள மற்ற பெண் குழந்தைகளும் காப்பாற்றப்படட்டும்...

பெண் குழந்தை பெறுவது அதிர்ஷ்டம்.. வாழ்த்துகள் ஆபாச படம் போடாத தந்தைக்கு



-------

ஆக குழந்தை பற்றி பாராட்டியேயுள்ளேன்..

ஆனால் இவன் அதை திரித்து பஸ் விட்டதோடு நான் குழந்தையை திட்டியதாய் பொய் பரப்பினான்..அவன் நோக்கம் என்னை பற்றி அவதூறு பரப்புவது . அதை தொடர்ந்து செய்கிறான்..

----------------
யுவ கிருஷ்ணா • 1:36 PM • Buzz

சமீபத்தில் ஒரு நண்பருக்கு குழந்தை பிறந்திருக்கிறது.

ஆனால், ஒரே ஒரு ஜென்மம் மட்டும் இந்த மகிழ்ச்சியை பொறுக்க மாட்டாது, குழந்தை பெற்ற நண்பர் குறித்த மோசமான கமெண்டுகளை எழுதி தனக்குதானே மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.


கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் இணையத்தில் சகஜம். ஆயினும் இது மாதிரியான சந்தர்ப்பங்களையும் தன்னுடைய தனிப்பட்ட காழ்ப்புணர்வுக்கு தீனியாக்கி அரிப்பை தீர்த்துக் கொள்ளும் ஜென்மங்கள் செருப்பால் அடிக்கப்பட வேண்டியவர்கள்.


--------------

.. ஜாக்கி சேகர் ரோட்டில் போகும் பெண்களை வர்ணித்து போடுவது மிக மிக அசிங்கமான செயலும் . ஆபாசமானதும்.. சின்ன குழந்தையை கூட விமர்சிக்காமல் விட்டதில்லை ஜாக்கி...

ஜாக்கி சேகரின் ஆராய்ச்சிகள்..:

"அதில் ஒரு சின்ன குட்டி பெண். அவள் அணிந்து இருந்த டிரஸ் செம கியூட்டாக இருந்தது...அவளைதான் வண்டியின் டேங்கில் முன் பக்கம் உட்கார வைத்து ஓட்டிக்கொண்டு வந்து இருக்க வேண்டும்.. காரணம் அவள்தான் அதிகம் நனைந்து இருந்தாள்.. பிராய்லர் கறி கோழி மீது சட்டென தண்ணீர் ஊற்றினால் சிலிர்த்து நிற்குமே .. அது போல சிலிர்த்து இருந்தாள்... அவள் கையில் இருந்த ரோமகால்கள் சிலிர்த்து காணப்பட்டன..

வழியில் ஒரு வாகனம் என்னை கடந்து போனது... பையன் டேங்கில் உட்கார்ந்து இருந்தான்...அப்பா ஒட்டினார்.. அப்பாவுக்கு பின்னால் ஒரு வயதுக்கு வந்த பெண் இரட்டை கால் போட்டு உட்கார்ந்து இருந்தது.. வண்டியில் பாக்ஸ் இருந்த காரணத்தால், அந்த பெண்ணால் சரியாக உட்காரமுடியவில்லை ஙே என்று உட்கார்ந்து கொண்டு போனது. அந்த பெண்ணின் அம்மாவின் பின்புறம் இதுக்குமேல எதுவும் இல்லையா என்பது போல் பாவமாக தொங்கியது.. அந்த அம்மா நிறைய பவுடர் பூசி இருந்தார்கள்... ஜாக்கெட்டில் பின்பக்கம் முடிச்சி போட்டு தைத்து இருந்தார்கள்.. முடிச்சி போட அவரின் கணவர் உதவி செய்து இருக்க வேண்டும்.. செம டைட்டாக முடிச்சி கோபத்தில் போட்டு இருப்பது தெரிந்தது... வண்டி ஒரு பள்ள மேட்டில் இறங்கி ஏறினாலோ அல்லது எம்டிசி ஏற்படுத்திய புழுதியினால் அசுக்கு என்று தும்பினால் எந்த நேரத்திலும் அந்த முடிச்சி அறுத்துக்கொள்ள அனேக சான்ஸ் இருந்தது.."

-----------------

மேலே வர்ணிக்கப்பட்டுள்ள பெண் நீங்களாகவோ, இல்லை உங்க வீட்டு பெண்ணாகவோ இருந்தால் என்ன சொல்வீர்கள்.. ஜாக்கியை பாராட்டுவீர்களா?.

உங்க வீட்டு குழந்தையை பிராய்லர் கோழிக்கு ஒப்பீடு செய்தால் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்..?


நான் போட்ட கமெண்ட் ஆபாசமா இல்லை இவர் பதிவும் வழிநடத்தலும் ஆபாசமா என..?

இதை பதிவுலகில் தொடர விடலாமா ?..யோசித்துக்கொள்ளுங்கள்..


நான் இல்லாவிட்டாலும் வேறு யாராவது தட்டிக்கேட்கத்தான் போகிறார்கள்..


நான் மட்டும் அறிவுரை சொல்லவில்லை என்பதையும் கவனிக்க..பலருமே..

ஸ்ரீராம் பதிவிடும்போது


ஜாக்கி.. ஒரு பெண்ணுக்கு தகப்பனாயிட்டே.. இனிமேலாவது அடங்குவியா நீயீ????

னு தான் போட்டார்.. சில பின்னூட்டங்களும் அதே போல் வந்ததா இல்லையா னு ஸ்ரீராமிடம் கேட்டுக்கொள்ளவும்..



-----------------

யுவ கிருஷ்ணா - மொக்கை சாந்தி அவர்களே!

ஜாக்கிசேகரின் குழந்தையை திட்டியதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறேன். இதற்கு செருப்படியா?

யுவ கிருஷ்ணா - jmm s என்கிற பைத்தியக்கார சாந்தி!

தில்லு இருந்தால் சென்னைக்கு வா. என்னிடம் ’பாட்டா’ ஷூ இருக்கிறது. நீ அடிப்பதற்கு முன்னால் நான் அடிக்கிறேன் செருப்பால் உன்னை.

யுவ கிருஷ்ணா - தோழர!

ஒரு பெண்மணி மனம் பிறழ்ந்து போகிற வருகிறவனை எல்லாம் செருப்பால் அடிப்பேன் என்று உளறிக் கொண்டிருந்தால், பெண் என்ற ஒரே காரணத்துக்காக சும்மா இருக்க முடியாது.

இந்த மெண்டலுக்கு இன்றே ஒரு முடிவு கட்டியாக வேண்டும்.

யுவ கிருஷ்ணா - லூசு சாந்தி!

அவன் இவன்னு ஏக வசனத்துலே பேசினா, அவ இவன்னு பேசுவேன்.

பொதுவெளியில் பேசுறோம்னு கொஞ்சமாவது அறிவிருக்கா? ஏழு கழுதை வயசாவுதுல்லே?

என்னை விட உனக்கு பதினைஞ்சி வயசு அதிகம் இருக்குமில்லே? சின்னப்பய கிட்டே வந்து செருப்படி படப்போறேன்னு சொல்றே? வெட்கமாயில்லே... த்தூ.. என்ன ஜென்மமோ...


யுவ கிருஷ்ணா - அடிங்... அறிவில்லே முண்டம்..


-----
மீண்டும் எப்படி திரிக்கிறான் பாருங்கள்..

குழந்தையை எங்கேயாவது திட்டினேனா?..

இவனுடைய மிரட்டலுக்கெல்லாம் பயப்படுவோம்னு நினைத்தான் போல.

என்னிடம் மட்டுமல்ல பலரிடமும் இப்படியே பேசி வருகிறான்.. வேணுமென்றே இடைஞ்சலும்..

இதைக்கூட எனக்கு பதிவா போட விருப்பமில்லாமலே இருந்தது.. நண்பர்கள் சிலர் இவனை பற்றி கண்டிப்பாக அறிவிக்கணும் என்பதால் பகிர்கிறேன்..
------------------

jmm s - அறிவில்லே முண்டம்..//

உன் அம்மாவை சொல்றியா?..:))

சரி



யுவ கிருஷ்ணா - இந்த பைத்தியக்கார முண்டம் பேசிக்கொண்டிருக்கும்போதே அம்மாவையெல்லாம் இழுக்கிற்து .

-------------------

கவனித்தீர்களா , அவன் கேவலமான பேச்சை அவனிடமே திருப்பியதும் அவனுக்கு வரும் கோபத்தை..?

அதாவது இவனைப்போன்றவர் என்ன வேணா ரவுடித்தனமா பேசலாம்.. ஆனால் அதையே நாம் அவர் குடும்ப உறுப்பினரிடம் திருப்பினால் கோபம் வருது..

இவனெல்லாம் ஒரு பத்திரிக்கையாளனாம்.. உடன்பிறப்பாம்.. அந்த பத்திரிக்கையையே கேவலப்படுத்தும் விதமாய் இருக்கு இவன் பேச்சு.. ( இவனலாயே திமுக மீது எரிச்சலடைந்தோர் உண்டு )

இதையெல்லாம் அந்த பத்திரிக்கை அலுவலுக்கு அனுப்பி வைத்தால்?..

இது மட்டும்அல்ல இன்னும் நிறைய பேசி இருக்கிறான்.. பஸ் ல். நான் கண்டுகொள்வதில்லை..

செருப்பால் அடிப்பது என்ன அத்தனை எளிதா என்ன தமிழ்நாட்டில்?.. ஏன் இந்த வெத்து சவடால்.?..:)))

இவன் அடித்தால் இவன் வீட்டிலுள்ளவர்களை சும்மா விடுவாங்களா என்ன , அடி வாங்கியவர்கள்..?..

பதிவுலகம் வன்மம் வளர்க்கும் இடமா?..

இதை அவன் அலுவலகம் அனுப்பினால் என்னாகும்?..( ஏற்கனவே ஒருவர் அதை செய்ததாய் தகவலுண்டு )


ஆனால் இதுவே இறுதியாக இருக்கட்டும்.. இது மன்னிப்பும் அவனுக்கு..

(Abraham Lincoln"I have always found that mercy bears richer fruits than strict justice." )


யாராலும் சவடால் விட முடியும். வன்மம் வளர்க்க முடியும் .. ஆனால் அது தேவையற்றது என்றே விலகி இருக்கிறார்கள்..

வன்முறை என்பது வீரமல்ல..கோழைத்தனம்..


ஏன் அமைதியாக போவது?..என இந்த விடீயோவை க்ளிக் செய்து பாருங்கள்..

ஜெயம் கொண்டான் பட க்ளைமேக்ஸ்

இதுதான் அனைவருக்குமான பதில்..


இது போன்ற பதிவை போட்டமைக்கு வருந்துகிறேன்.. நட்புகளிடம் என் மன்னிப்பும்.. வன்முறையாளர்களை அம்பலப்படுத்தவே இது..

சில கருத்துகளை நான் சொன்னால் அதை கருத்தால் எதிர்கொள்ள பழகணும்..

சிலருக்கு பயம்.. எங்கே தன்னுடைய இடம் பறிக்கப்படுமோ என.. அதனாலேயே சிலரை பழித்து ஒதுக்குவது.. முக்கியமா பெண்கள் பயந்து ஓடுவார்கள் என்ற எண்ணம்..

இதையெல்லாம் தாண்ட பழகிக்கொண்டார்கள் பெண்கள்.. இனிமேலும் இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் பலிக்காது..

மதார் என்ற பெண்ணும் , முகிலனும் இத்தகையோரொடு சேர்ந்து பேசிய மிக ஆபாசமான வார்த்தைகள் நேரமிருப்பின் தனிப்பதிவாக வரும்..

இவையெல்லாம் பதியப்படணும்.. வன்முறை எப்படி வளருகிறது , ஒரு கூட்டத்தினரின் சுயநலத்தால் வளர்த்து எடுக்கப்படுகிறது என்பதை புரியணும்...

"நல்லவர் யாவரும் ஒதுங்கிக் கொண்டால் நரிகளின் நாட்டாமை தொடங்கிவிடும் "


தொடரும்....

(The Nagpur bench of the Bombay High Court has held that abusing or using filthy language to annoy someone can be an offence, even if it does not take place in a public place. The accused in this case had been convicted by a lower court under Section 294 (obscene acts and songs) of the Indian Penal Code.

According to this section, “whoever, to the annoyance of others... sings, recites or utters any obscene song, ballad or words, in or near any public place, shall be punished with imprisonment which may extend to three months.

http://www.hindustantimes.com/Verbal-abuse-need-not-be-in-public-place-to-attract-punishment/Article1-526477.அச்ப்க்ஸ் )














..

Sunday, May 1, 2011

மே தினம்


அல்லோகலமாய் மேதின கொண்டாட்டம்
அடுப்படியில் இடுப்பொடிய திண்டாட்டம்

உழைக்கும் வர்க்கத்திற்கே ஓய்வின்றாம்
உனக்கில்லை பெண்ணே ஒதுங்கிக்கொள்

தொழிலாளிக்கு மட்டுமிங்கே அங்கீகாரம்
தொய்வில்லாது சுமப்பாய் குடும்ப பாரம்..

குழந்தைவளர்ப்பு , வீட்டுவேலை தொழிலல்ல
குற்றம் குறை சொல்வதுமுனக்கு அழகல்ல...


பணக்கூலிபெற்றால் தொழிலாளிவர்க்கமாம்
பத்துதேய்ப்பவள் பட்டியலில் இல்லையாம்.:(

செவிலியரென்றால் ஊதியம் மரியாதை,
செத்துமடியும்வரை முடிவில்லாத வதை?..

பாட்டிலோடு ஓய்வுக்கு தேவை ஒரு டாஸ்மாக்
பாலியல் தொழிலாளி உன் தேவை ஒரு மாஸ்க்..

குடும்பத்துக்கு உழைக்கும் பெண்ணே உனக்கும்
குடிமக்கள் துயர்நீக்க உழைக்குமனைவருக்கும்


எல்லாம் சமமென சொல்வதே மேதினவாழ்த்துகள்
எவருக்கும் அடிமையில்லை வானுயறட்டும் உம்புகழ்.




படம்: நன்றி கூகுள்..





.

Saturday, April 2, 2011

நடிகையும் ஒரு பெண் என மதிப்போம்..






நான் சமீபத்தில் படித்த கமெண்ட் சில எனக்கு ஏற்படுத்திய எரிச்சலை வலியோடு பகிர்ந்துகொள்கிறேன்..

யார் எழுதியது என்பது நமக்கு தேவையில்லை.. தெரியாமலே இவை பழக்கப்படுத்தியிருக்கலாம்.. இது தவறு என சொல்வதும் நம் கடமை அவ்வளவே.. கமெண்ட் நாலு பேர் கூட சேர்ந்து அடிக்கும்போது சுகமாத்தான் இருக்கும்.. ஆனால் அது நம் வீட்டு பெண்ணா இருந்தால் அடிப்போமா என எண்ணிப்பார்ப்போம்..

-------------------------

வடிவேலு அம்பிகாவை வச்சிருந்த கதையெல்லாம் மேடையில் நாறுமோ? :-)

அம்பிகா கதை மட்டும் இல்லை... ஷ்ரேயா கதை எல்லாம் கூட வெளி வரும்.

மதுரைக்குத் தி.மு.க. அனுப்பிவைத்த பிரசார பீரங்கி குஷ்பு!

XXXX : சிங்கிள் பேரலா மல்ட்டி பேரலா?...

அடுத்து கனிமொழியையும் ராசாவையும் இணைத்து..

அப்புரம் குஷ்பூவின் பழைய நீச்சலுடை படம் போட்டு அவரை இழிவுபடுத்துதல்..

ஜெயா அம்மையாரையும் நடிகை என்ற பார்வையில் அசிங்கப்படுத்துவது..

--------------------------------------------------

என்ன ஒரு ஆர்வம்??...இவர்களுக்கெல்லாம்.?..அப்பப்பா.. ஒரு நொடி அந்த பெண்களை நம் வீட்டு பெண்களாய் எண்ணியிருந்தால்..?..

அடுத்தவர் அந்தரங்கத்தை பொதுவில் அலச ஆர்வமுள்ளவர்கள் அதே ஒழுக்கமற்றவர்களாய் இருப்பார்கள்..

இது ஒரு கீழ்த்தரமான உத்தி..

நன்றாக நியாபகம் வைத்துக்கொள்வோம் , நாம் எல்லோரும் அதே சூழலில் , முக்கியமா நம் வீட்டு பெண்களும் அதே சூழலில் இருந்தால் அதையே செய்திருப்போம் என நினைவில் கொள்ளுவோம்..

( நாளை நம் வீட்டு குழந்தையும் இதே போல செய்ய மாட்டார் என எத்தனை பேர் நிச்சயமா சொல்வீர்கள்..?. எதுவும் நடக்கும்.. யார் கையிலும் இல்லை .)

அம்பிகாவை தொடர்பு படுத்தி அசிங்கப்படுத்தவேண்டி
யதன் நோக்கம்.?

நடிகை என்றால் என்னவேணா பேசலாம்னா பேசுபவர் அப்படியானவரே என்னைப்பொறுத்தவரையில்..

இதுக்கு பலத்த எதிர்ப்போ, கும்மியோ, கண்டனமோ தெரிவித்தாலும் இதுவே என் பதில்..

பாலியல் தொழிலை விட இப்படியான பேச்சுகள்தான் சமூகத்தின் முக்கியமான சீர்கேடு . இப்படி பேசுபவர்களை விட பாலியல் தொழிலாளிகளும், நடிகைகளும் உயர்ந்தவர்கள் என்னைப்பொறுத்தவரையில்..


யாரும் திருந்தணும்னு கட்டாயப்படுத்தல்.. ஆனால் இதுதான் என் கருத்து..

அரசை , ஊழலை , விமர்சிக்கணும்தான். மக்களுக்கு அவர்கள் தவறை வெளிச்சம் போட்டும் காண்பிக்கணும்தான்.. ஆனால் இதுவல்ல வழி.. அவர்களுக்கும் நமக்கும் வித்யாசமே இல்லை..உடனே மாற்றம் வர , கோபம் வர வழி தேடாமல் நிரந்தரமாக நம் நாடும் சமூகம் நல்லதொரு சூழல் அமைக்க பாடுபடலாம்.. எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதை விட்டு.. அது நீண்ட கால பயனளிக்காது. ..



எது சரி எது தவறு என்று கூட தெரியாத அளவுக்கு தமிழர்கள் சிலர் , பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட பெண்களை, முக்கியமா நடிகைகளை , அவர்களின் அந்தரங்கங்களை பொதுவெளியில் அலசுவது மிக சர்வ சாதாரணமாக போய்விட்டது..ஆனா அதே பெண்களிடம் ஆட்டோகிராப் வாங்கவோ , குத்துவிளக்கு ஏற்றவோ க்யூவிலும் நிற்போம்..புகைப்படம் எடுப்போம்.

அதுமட்டுமா அந்த நடிகையின் படத்தை போட்டு ஹிட்ஸ் சேர்ப்போம். ஓட்டு பிச்சை எடுப்போம்.. ஏன்னா நாம நல்லவர்கள்....

அதெப்படி வெளிநாடு வாழ் தமிழர்கள் கூட வெளிநாட்டில் பெண்கள் எவ்வாறு மதிக்கப்படுகின்றனர் என பார்த்தபின்பும் , தனிமனித உரிமைகள் அதற்கான சட்டங்கள் பற்றி அறிந்த பின்னும் , தமிழரோடான பேச்சில் தம்மை மறந்து , அந்தரங்க அலசலில் இத்தனை ஆர்வம் காட்டுகின்றனர்..?

அருவருப்பா இருக்கு.. :((((((((..

இவர்களெல்லாம் நாட்டை திருத்த போறாய்ங்களாம்.. போங்க போங்க போய் மொதல்ல உங்களை நீங்க திருத்திக்கோங்க.. அப்புரம் நாட்ட திருத்த வாங்க..


திருந்தவே மாட்டாங்க சில ஆணாதிக்கவாதிகள் , தன் வீட்டு கதவை அந்த பிரச்னை தட்டும் வரை.. திருந்தவாவது , சீக்கிரம் அதே சூழல் அவரவர் குடும்பத்தில் வரட்டும் என மட்டும் வாழ்த்துவோம்..:)

உடனே கேட்கத்தோணும், உங்க வாரிசுகளுக்கு வந்தால் பரவாயில்லையா?..

நிச்சயமாக .. ஏனெனில் நான் பாலியல் தொழிலாளிகளின் வாழ்வு மேம்படத்தப்படணும் என பல வருடம் முன்பே பேச ஆரம்பிச்சாச்சு..

1. அத்தொழில் முற்றிலுமாக ஒழிக்கப்படணும்.

2. முடியாத பட்சத்தில் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து கெளரவமாக நடத்தப்படணும்...

ஏன்னா, உலகிலேயே மிகவும் பரிதாபத்துக்குறிய , மனமும் உடலும் தினம் செத்து பிழைக்கும் தொழில் அது..

ஒன்ணு அவர்கள் வலியை உணரணும்.. அல்லது தம் வாரிசுகள் அதை அனுபவிப்பதன் மூலமே அறியணும்.. இது எனக்கும் பொருந்தும்..


( இதுக்கு ஒரு 100 பேராவது ( ஆணாதிக்கவியாதிகள் ) எதிரியாகணும் எனக்கு .. ).

நடிகைக்கும், பாலியல் தொழிலாளிக்கும் , அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கு.. ஒன்றுமேயறியாத அக்குழந்தைகளை பலிகடா ஆக்கி மன உளைச்சல் தரும் மன நோயாளிகளே அந்தப்பாவம் உங்கள் வாரிசுக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்..

அப்படி பேசுபவர்களுக்கு ஆதரவு தந்து அக்குற்றத்தை வளர்க்க உதவாதீர்கள்...தவறு என துணிவாக எடுத்து சொல்ல தயங்காதீர்கள்..


தேர்தல் நேரமென்பதால் எப்படியாவது அடுத்தவரை இழிவுபடுத்தியே தான் பெரியவனாக காண்பித்துக்கொள்ள கட்சியினர் தான் அடித்துக்கொள்கின்றனர் என்றால் பதிவுலகிலும் ..



இது வளர்ச்சி அல்ல வீழ்ச்சி நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம் என்பதற்கான சான்று ..


படம் : நன்றி கூகுள்..


.

Wednesday, March 9, 2011

உழைக்கும் வர்க்கத்தினரின் (பெண்கள் தின ) வாழ்த்துகள்






உலகத்தில் பெண்களின் உழைப்பு 66 சதவீதம் , ஆனால் அவர்கள் அடையும் பயன் 10% சதம் .

உலகின் மொத்த உணவு உற்பத்தியில் 50% பெண்ணின் பங்கு.. ஆனால் 1% நிலமே பெண்களுக்கு உரிமையாயிருக்கு..

உலக ஏழைகளில் 70% பெண்கள்.. மேலும் படிக்க
http://www.trust.org/trustlaw/womens-rights/womens-voices


??????.
பெண் விடுதலை பற்றி பலர் பேசணும் .. அப்படி ஒரு அவசர தேவை இங்கிருக்கு..




தாய்லாந்து மகளிர் பற்றிய கட்டுரை படிக்க ,










தாய்லாந்தின் புன்னகை அரசிகள்


சில கவிதை பெண் பற்றி .

----------------------------------

தும்மினால் தொண்ணூறும்
சிரிப்பானுக்கே சில நூறும்
மெளனத்துக்கு கூட மறுமொழியிட்டு
பதிவுக்கு பாராட்டுவிழாவே அரங்கேறுதென்றால்

அந்த நியாத்தின் வலிமை என்ன ?
ஆட்டுவிக்கும் வித்தை என்ன?.

மிரட்டலிட்டு கத்தி கதறி
மிஞ்சுகிறதாம் ஒப்பாரிவீடு
கூடி நின்று தொண்டை கிழித்தவர்கள்
ஆடி ஓய்ந்து அடங்கலாம் ஒருநாள்

தளராது முன்னேறுதாம் பெண்ணின் போராட்டம்
தந்த பரிகாசத்தையே பரிசாகக்கொண்டு..

கவிதை - 2

அஹிம்சை யை நாட்ட
ஆயுதமாய் எழுத்தை எடு
இகழ்வாரைக்கண்டால்
ஈயென :) இளித்துவிட்டுசெல்.
உதவாக்கரை பேச்சுக்கு
ஊக்கமளிக்காதே
எண்ணிய செயல்முடி
ஏசினாலும் பேசினாலும்
ஐயமா அப்டீனா என்னன்னு கேள்
ஒதுங்கினால் ஒடுக்கிடுவார்
ஓடட்டும் அவருன் கருத்தில்
ஒளடதம் என்பதிங்கு மாற்றம்
ஃதே படைத்திடு எழுத்தில்..

பெண் மொழிகள் : பெண்ணுக்கு மட்டும் .. ( மறைமுக மிரட்டலோடு சொல்லப்பட்டவை :) )
-----------------------------

அன்பா இரு ( அடி வாங்கு )
பண்பா இரு ( பகடி தாங்கு )
இரக்கப்படு ( இழிவை தாங்கு )
ஆறுதலாயிரு ( ஆசாபாசம் அடக்கு )
நாணப்படு ( நாட்டுநடப்பு அறியாதே )
வெட்கப்படு ( வெறுமை கொள் )
அச்சப்படு ( அடங்கிப்போ )
எனை நேசி ( எதிர்த்து பேசாதே )
கருத்தரி (கருத்துக்களை அறியாதே )
குத்துவிளக்கு ( எரிந்துகொண்டே இரு )


Some Quotes about women :
-----------------------------

Because I am a woman, I must make unusual efforts to succeed. If I fail, no one will say, "She doesn't have what it takes." They will say, "Women don't have what it takes."
~Clare Boothe Luce

I wish someone would have told me that, just because I'm a girl, I don't have to get married.
~Marlo Thomas


The thing women have yet to learn is nobody gives you power. You just take it.
~Roseanne Barr


Man endures pain as an undeserved punishment; woman accepts it as a natural heritage.
~Author Unknown


Men are taught to apologize for their weaknesses, women for their strengths.
~Lois Wyse




அனைவருக்கும் உழைக்கும் வர்க்கத்தினரின் ( பெண்கள் தின ) வாழ்த்துகள்..



படம் : நன்றி கூகுள்..



Saturday, March 5, 2011

ஈரோடு கதிர்மேல் காறி துப்பணுமாம். தண்டோராவுக்கு செருப்படி வேணுமாம்.











நான் பொதுவா யாரையும் குறிப்பிடாமல் கலையரசனின் இந்த கட்டுரையில் ( http://www.jaffnatoday.com/?p=6348



//எங்கேனாலும் பாதிப்புக்குள்ளாவது ஏழைகள்தான்.. வசதியுள்ள இணைய ஈழத்தமிழச்சிகள் சிலர் , கெட்ட வார்த்தை பேசிக்கொண்டும் , வம்புக்கு இழுத்துக்கொண்டும் , ஆபாசத்தை அங்கலாய்த்துக்கொண்டு நன்றாகத்தானிருக்கிறார்கள்..//



இப்படி செருப்பாலடிப்பேன், காறி துப்புவேன் , ஜாக்கிரதையா இருந்துக்கோ என பொதுவெளியில் மிரட்டல்..

கலகலப்ரியா வந்து அது தன்னைத்தான் குறிக்குது னு சொல்லி சண்டையும் இழுத்துசென்றார்.. ஏனெனில் சரமாறியாக கெட்ட வார்த்தை பேசுவார் பஸ் ல் ( உதாரணம் இப்படி பேசுவார் - Fucking cheap retards - Priya Siva ) ..

நான் யார் பெயரையும் குறிப்பிடாமலேயே வலிய வந்து வம்பிளுப்பதும் , கூட்டமாக சேர்ந்து கதறுவதும் பல நேரம் எனக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கும்.. :)

அதுக்கு இப்ப செருப்பால் அடிப்பேன் - தண்டோரா ( மணிஜி ), காறி துப்புவேன் என - ஈரோடு கதிர் சொல்லியிருக்காங்க..


இருப்பினும் நான் யாரையும் குறிக்காமல் என் பஸ் ல் கருத்து சொல்ல கூட எனக்கு உரிமை இல்லையா?.. ப்ரியா வந்து சண்டை இழுத்ததும் கதிர் ஜால்ரா அடிப்பார் என சொன்னதுக்கு காறி துப்புவேன் , ஜாக்கிரதையா இருந்துக்கோ என மிரட்டினால் பெண்கள் எழுதவே கூடாதா?..( கதிரின் அனாவசிய ஜால்ரா உலகம் அறிந்ததே.. தங்கச்சி நாய் கட்சுடுச்சு இழை பார்த்தவருக்கு புரியும் . இன்னும் பல )

இவர் வீட்டு பெண்ணா என்னை அதட்டி உருட்டி மிரட்ட..?


பொதுவெளியில் இப்படியான மிரட்டலுக்கு அஞ்சி , வெட்கப்பட்டுதானே பெண்கள் நியாயத்தை , கருத்துகளை எழுத வருவதில்லை..?..மற்றவர்களால் இப்படி தாங்கிக்கொள்ளமுடியாதே என்றுதான் நான் போராடுகிறேன் , யார் என்ன சொன்னாலும்..

நிதானமாகவேனும் இது போன்றவற்றை நாம் தடுத்திடணும்.. யாருமே பொதுவெளியில் மிரட்டப்பட அனுமதிக்கக்கூடாது.. கெட்ட வார்த்தைகள் பேசி , நல்ல கருத்து சொல்ல வரும் சாதாரண பெண்களை பயமுறுத்தி அவமானப்படுத்தி ஓடவிடக்கூடாது.. ஏன் ஆண்களையுமே.. பஸ் களில் கூட்டமாக சேர்ந்துகொண்டு இழிவுபடுத்துவது..

இவர்களைப்போல் தரம் குறைந்து பேச எனக்கு நொடிநேரமாகாது.. பதிலுக்கு பதில் காறி துப்பிக்கொண்டோ , செருப்பால் அடித்துக்கொண்டோ இருப்பதற்காகவா நாம் இங்கே வந்துள்ளோம்.. ஒருபோதும் வன்முறை வளர்ப்பதல்ல என் நோக்கம்..

இப்போதைக்கு கதிர் தன் மீது துப்ப அனுமதித்துள்ளார்.. தண்டோரா மணி செருப்படியும் வாங்கிக்கொள்ள அனுமதியளித்துள்ளார்.. அவ்வளவே..


இந்த எழுத்து வீரர்கள் அத்தனை துணிவிருந்தால் என்னிடம் நேரில் இதை சொல்லட்டும் ..:)..


கீழே தண்டோரா , கதிர் எழுதியது..

-----------------------------------------------------------------------------------------

தண்டோரா . - //எங்கேனாலும் பாதிப்புக்குள்ளாவது ஏழைகள்தான்.. வசதியுள்ள இணைய ஈழத்தமிழச்சிகள் சிலர் , கெட்ட வார்த்தை பேசிக்கொண்டும் , வம்புக்கு இழுத்துக்கொண்டும் , ஆபாசத்தை அங்கலாய்த்துக்கொண்டு நன்றாகத்தானிருக்கிறார்கள்..//

இவருக்கு பொறாமையோ..போறாமையோ..தெரியவில்லை..நிச்சயம் செருப்படி உண்டு.. சப்போர்ட்டுக்கு வர்றவனுக்கும் சேர்த்து..

தண்டோரா . - விலகி போலாம்னு பார்த்தாலும் மேலே விழுந்து பிராண்டுது..என்னை மட்டுமல்ல.. என்னை சார்ந்தவர்களை பிராண்டினாலும் செருப்பாலடிப்பேன்..எனக்கும் வார்த்தைகள் தெரியும்.

-------------------------------------------------------------------------


Kathir கதிர் - Buzz - Public - Muted
இது வரைக்கும் பிரச்சனைக்குப் போகல / பஞ்சாயத்து வைக்கல!


நான் என்ன மயிறுக்கு ஜால்ரா அடிக்கிறேனு அந்த சாந்தி சொன்னா சந்தோசப்படுவேன்....

அது சொல்லாம ஒளறினா…. காறி துப்புவேன்…:)))) சாந்தி ஜாக்கிரதையா இருந்துக்கோ!


-----------------------------

அப்ப இதுதானே அர்த்தம்.?.. " ஈரோடு கதிர்மேல் காறி துப்பணுமாம். தண்டோராவுக்கு செருப்படி வேணுமாம்."

வேணுமின்னா அடுத்த முறை ஈரோட்டில் யார் அதிகமா ஈரோட்டு கதிர் மேல் துப்புவதுன்னு போட்டி வைப்பாரோ?..


எல்லாரும் கேட்டாங்க " ஏங்க உங்ககிட்ட செருப்புக்கா பஞ்சம் ?. " னு..
தண்டோரா மணி யை அடிக்க என் செருப்பை பயன்படுத்தி என் செருப்பை அவமதித்துவிடக்கூடாதுதானே ?.. என்ன சொல்றீக?..நம் நோக்கம் அதுவல்ல.. அவருக்கு அடி வாங்க விருப்பம் என்றாலும்..


தரம் குறைந்தவருக்காக நாமும் தரம் குறைந்தா போவது?.. ஈரோட்டு கதிர் உன்ற குடும்பத்து பெண்களை சாக்கிரதையா இருக்க சொல்லிட்டீகளா அய்யா?..

பொதுவெளில மிரட்டல் விடும்போது கவனம்.. அது மிரட்டல் அல்ல.. அனுமதி உங்க வீட்டு பெண்களிடம் வம்பு செய்ய என நினைத்துக்கொள்ளுங்கள்..

எழுத இணையம் கிடைத்திருக்கு என துள்ளக்கூடாது.. சபை நாகரீகம் வரம்பு வேணும்.. எல்லாருக்கும் வம்பு செய்யவும் அன்பு செலுத்தவும் ஆள் இருக்கு இங்கே.. உங்க வீரத்தை இங்கே காண்பிக்கவேண்டாம்..



( இன்று என் அக்கவுண்டை முடக்கினார்கள்.. என் வீட்டு தொலைபேசிக்கு தொந்தரவு செய்கிறார்கள்.. ஆனால் எப்படியும் என் எண்ணத்தை மாற்ற முடியாது மட்டுமல்ல அதிக துணிவை வழங்குகின்றீர்கள்.. )




படம் : நன்றி கூகுள்..

தனிமனித தாக்குதல்


.

Wednesday, March 2, 2011

கள்ளன் பெரிசா காப்பான் பெரிசா?.:






சினிமாக்களில் அன்றிலிருந்து இன்றுவரை பெண்ணை வன்புணர்ச்சி செய்தாலோ , அவளை கள்ளத்தனமாக ஓட்டை வழியாக அவள் உடம்பை பார்த்துவிட்டால்லோ ஏனோ குடியே முழுகியதுபோல் வெட்கி , தலை குனிந்து , அவமானப்பட்டு ,விரக்தியடைந்து , மனநோய் வந்து ,பித்து பிடித்து , உண்ணாமல் உறங்காமல் , இறுதியில் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்வதாக காட்டுவது ஏன்.?..


அதற்கப்புரமே வீரம் வந்து பழிவாங்கி , எதிரியும் செத்து , தானும் செத்து சுண்ணாம்பு ஆவதுதான் கதை..


இது இன்று யுத்தம் செய் வரையிலுமே..


தன்னை ஒருவன் தவறாக பார்க்கிறான் என்றால் அந்த இடத்திலேயே அவனை எதிர்கொள்ள பழக்காமல் தடுப்பது எது?.


நம் ஊர்களில் , ஆறு , குளத்தில் குளித்து விட்டு அப்படியே அதே ஈரத்துணியோடு நடந்து செல்வார்கள் குடும்பப்பெண்கள்.. எத்தனை பேர் தப்பா பார்த்தார்கள்..அப்படி பார்த்தவர்களையும் , ஏதோ கெட்ட வார்த்தை போட்டு திட்டிவிட்டு சபித்துவிட்டு செல்வார்கள்.. எங்கே இருந்து வந்தது அந்த துணிவு..?..


பெண் உடம்புக்கு மட்டும் கற்பு என்ற ஒரு அபத்தமான விலை வைத்ததன் விளைவா இது.?


சட்டத்தை நம் கையில் எடுக்க வேண்டியதுதான் சில நேரம்.. ஆனால் எல்லாமே காத்திருந்து வன்முறையாகவும் கொலையாகவும் இருக்கவேண்டியதில்லை..


நிர்வாணப்படுத்திவிட்டான் என்றதும் தற்கொலை செய்யவேண்டியதுமில்லை என்று சொல்லி வளருங்கள் குழந்தைகளை.. என்னடா செய்த, ஏன் பார்த்த, என தெருவுக்கு இழுத்து வந்து தர்ம அடி வாங்கித்தர பழகுங்கள்.. சமூகம் என்ன சொல்லுமோ , பெண் பிள்ளைக்கு வரன் அமையாதே என்ற முட்டாள்தனமான கவலையை ஒதுக்கினால் மட்டுமே நம் சமூகம் முன்னேறும்.. இப்படி தினமும் ஒரு பெண்ணாவது நிமிர்ந்து நின்றாள் என்ற செய்தி வந்தால் தன்னாலேயே மாற்றம் வரும்..




அதைவிட்டுவிட்டு , ரூமுக்குள் போய் குமுறி குமுறி அழுதுவிட்டு உடனே யாரையோ பழிவாங்குவதாய் நினைத்து செத்து தொலைய சொல்லி படம் எடுக்காதீர்கள்.. தயவுசெய்து அப்படியான கோழைப்படங்களை உங்க குழந்தைகளுக்கு காண்பிக்கவும் செய்யாதீர்கள்.. ,


என் வீட்டில் காமிரா வை னு சொன்னதையே ஆணாதிக்கவாதிகள் எப்படியெல்லாம் திரித்து பேசி தன் வக்கிர உணர்ச்சிகளுக்கு பசியாற்றினார்கள்.. இன்னும் அதை பேசி பேசி இன்பம் காண்கிறார்கள்..

ஆனால் இவர்கள் மறந்தது இவர்கள் வீட்டு பெண்ணையே இவர்கள் வன்புணர்கிறார்கள் என்பதுதான்...சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படியான வக்கிர புத்தியுடையவர்கள் அதையும் கண்டிப்பாக செய்வார்கள்..


சபலம் தட்டுவது போல உடை உடுத்தக்கூடாதுதான்.. ஆனால் நம்மூர் பெண்கள் ( நம் , அம்மா, நம் அத்தை , சித்தி , அண்ணி , அக்கா ) ஆற்றில் குளித்துவிட்டு உடம்பை ஒட்டிய ஆடையோடு அரைகுறையோடு எத்தனை துணிவோடு நடந்துவந்தார்கள்.. இன்றும் நடந்து வருகிறார்கள் என்பதை நினைவு கொள்வோம்.. கிராமத்து பெண்களுக்கு இருக்கும் துணிவுகூடவா நகரத்து பெண்களுக்கு இல்லை..?????


டெலிவரி பார்க்கும் ஆண் மருத்துவரை நம்பி திருமணமான பெண்களே உடலை தயங்காமல் சிகிச்சைக்கு ஒப்படைக்கும் காலமிது.. எனக்கு டெலிவரி இரண்டு முறை பார்த்ததும் ஆண் மருத்துவர்தான்..


ஒவ்வொருமுறையும் நாம் பாதுகாத்துக்கொண்டே இருந்தாலும் கள்ளன் நிப்பாட்ட போவதில்லை.. காப்பான் எப்பவும் கடைசியில்தான் வரமுடியும்.. அதனால் அப்பப்போ , அங்கங்கே எதிர்கொள்ள செய்யுங்கள்..


இவர்களை விட முக்கிய எதிரி, ஆபாத்தானவர்கள் நம்மை சுற்றியிருப்பவர்கள் சிலர்... அவர்களை சமாளிப்பதுதான் பெரிய விஷயம் பலருக்கு.. நாகரீகமற்று இது குறித்து வருத்தத்தோடு பேசுவது போல் நாடகமாடி தகவல் கறந்து பரப்பும் வேலை செய்பவர்கள்.. இப்படியானவர்களை மொத்தமாக வாழ்விலிருந்தே தவிர்த்திடணும்..


சம்பவம் குறித்து பேச வந்தாலே முகத்தில் அடித்தாற்போல் , "வேற பேசலாமா .?" என சொல்லிடுங்கள்.. எப்படியும் கெடுதல் எண்ணமுடையவர்கள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க போவதில்லை.. வம்பழத்து குதூகலிக்கும் கூட்டமாய் சேர்ந்து.. தூசியென பலரை அற்பர்கள் என துணிவோடு ஒதுக்கினால் மட்டுமே நல்லவர்களை நாம் காண முடியும்..நல்ல பக்குவமடைந்தவர் பலர் இருக்கின்றனர் . பயம் வேண்டியதேயில்லை..

நல்லவர்கள் பலர் அமைதியாக இருப்பதால் கெட்டவர்களின் ஆட்டம் பெரிதாக தெரிகிறது சமூகத்தில்.. அவர்களின் பெரும்பான்மை குறித்து எவ்வித அச்சமும் தேவையேயில்லை..

எல்லாரும் வாழத்தான் வாழ்க்கை இங்கே என்பதை புரிந்துகொண்டு சொல்லிக்கொடுங்கள்.. உதவிக்காக காத்திருப்பதைவிட , உதவ முன்வருவதை பழக்கிடுங்கள்.. எங்கே தப்பு நடந்தாலும் தட்டிக்கேட்க துணிவு தாருங்கள்..


அதற்கு பலனாக ஆபாச வார்த்தைகள் என நினைத்து , விபச்சாரி , ( இன்னும் பல கெட்ட வார்த்தைகள் தெரியவில்லை ) , என பல பட்டம் தருவார்கள்தான். அவற்றையெல்லாம் ஒரு புன்னகையோடு கடந்து சென்று அவ்வார்த்தைகளின் மதிப்பிழக்க செய்திடுங்கள்.. ஏனெனில் பாலியல் தொழிலாளியும் மனிதர்தான் என்று மனிதாபிமானத்தை பழக்காதவருக்கே , ஆணாதிக்கவாதிகளுக்கே அவை ஆபாசமாகத்தெரியும்..


*உடலிலல்ல கற்பு.. எண்ணங்களில் இருக்கு ." .. துணிவை கொடுப்போம் பெண்ணுக்கு..

( மகளிர் தினத்துக்கான பதிவு. )

( இன்றும் 8 வயது குழந்தை அனுசூயா கோவையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.. ஆழ்ந்த அனுதாபங்களும் , கண்டனங்களும்.. ஆபாச பதிவும் , எழுத்தும் செய்யும் வீரர்கள் ,ஊடகங்கள் , சினிமாக்கள் , சரோஜாதேவி புத்தகத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் , தொடர்ந்து நடத்துங்கள் உங்க சேவையை , உங்க வீட்டு கதவுகளை தட்டும் வரையிலும் .. இது ஒரு பக்கமிருக்க , ஆபாச பதிவர்களை பல ஆண் பதிவர்கள் துணிவாக எதிர்க்க முன்வந்திருப்பது மகிழ்வான விஷயம்.. வாழ்த்துகள்.. )


[ என் கணினியிலும், தொலைபேசியிலும், மிரட்டலும் , தொந்தரவும் வருகிறது.. பின்னூட்டங்களையும் மாற்றுகின்றனர்.. எனக்கு மரணத்தையே தந்தாலும் என் மனதின் எண்ணங்களை ஒருபோதும் மாற்ற முடியாது என்பதை புரிவீரா?..தொடரும் என் கருத்துகள்..நிலைபெற்றும் நிற்கும்.. சமூகத்தில் மாற்றம் கொண்டு வர முன்பைவிட அதிக துணிவை தருவதற்கு நன்றிகளும்.. எதிரிகள் யாரென்று தனியா சொல்லவேண்டியதில்லைதானே?..:)) ]



படம் : நன்றி கூகுள்..




.

Saturday, February 5, 2011

நான் யார்?.. சிறுகதை..




" அய்...யாஆஆஆஆஆஆஆஆஆஆஆ....." ஓங்கி குரலெடுத்து கதறினாள் மீனாட்சி.

நீதிபதி வெங்கடேசன் மடியில் வைத்து படித்துக்கொண்டிருந்த கீதையை மூடிவிட்டு , கண்ணாடியை கழற்றினார்.

பின் மெதுவாக தான் அமர்ந்திருந்த ஊஞ்சல் கம்பியை பிடித்துக்கொண்டு கால் தரையில் ஊன்றி நிப்பாட்டினார்..

பார்வையாலேயே காவல்காரனுக்கு சம்மதம் தந்தார் மீனாட்சியை உள்ளே விட சொல்லி..

" ராவுல ,என்ன ஏதுன்னு சொல்லாம போலீஸ் புடிச்சுட்டு போச்சுய்யா.. திருட்டு கேஸூன்னு சொன்னாங்க..

வேல பாக்க கம்பெனில திருடிட்டார் னு நிர்வாணமா நிக்க வெச்சு அடிச்சிருக்கான். அப்பவும் அவர் கிட்ட பொருள்

ஏதும் கண்டுபிடிக்க முடியாம போலிஸ் கிட்ட சொல்லி கூட்டிட்டு போனாங்கய்யா.. நான் போறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சேய்யா.."

கதறினாள்.. மீனாட்சி நீதிபதி அலுவலகத்தில் துப்புறவு வேலை செய்பவள்..

" ராவுல உடனே அய்யாவ பாக்க ஓடிவந்தேங்ய்யா . ஐயா தூங்குறாரு எழுப்ப முடியாதுன்னு காவக்காரர் சொல்லிட்டாருங்கய்யா.." கதற சக்தி இல்லாமல்

மூச்சு விட்டு விட்டு பேசினாள்..

ராதிகா சத்தம் கேட்டு வந்தவள் கையிலிருந்த காப்பியை மாமனாருக்கு தந்துவிட்டு மீனாட்சியை ஒரு கணம்தான் கவலையோடு பார்க்க முடிந்தது..

நீதிபதியின் பார்வை அவளை உடனே உள்ளே போக சொன்னது..

"சரி நான் பார்க்கிறேன். நீ போய் ஆக வேண்டியதை கவனி..எந்த ஸ்டேஷன், கம்பெனி விபரம் உதவியாளர் கிட்ட கொடுத்துட்டு போ.. "

" ராதிகா ஒரு 5000 ரூபாய் எடுத்துட்டு வா.."

எடுத்து வந்தவள் , காவலனிடம் கண்ணாலேயே " ஏன் இரவு அனுமதிக்கல ? " னு கேட்டு " என் வேலை போயிருக்குமே மா" என்று கைவிரிப்பே பதிலாய் வந்ததும்

புரிந்துகொண்டாள்..

---------------------------------

தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார் நீதிபதி வெகுநேரமாய்.. பின் , இறுதியாக ,

" சரி தொகையை கொஞ்சம் கூட்டிடுங்க.. மத்தத நான் பார்த்துகிறேன்.என் தொகையை குறைச்சுக்கலாம்.."

குளித்துவிட்டு உணவு மேசைக்கு வந்தவர் , மருத்துவர் மகனிடம் ,

" போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கேட்கிறபடி செய்துகொடுத்துடு " என்று கட்டளையிட்டார்..

இட்லியை பிட்டுக்கொண்டிருந்தவர் தலை அசைத்தார்.

கணவனின் அடிமைத்தனத்தை ஒரு வெறுமைச்சிரிப்போடு கடந்தாள்..

-----------------------------------

" பூஜை சாமான்லாம் தயாரா மா? " மாமியார்

பேரப்பிள்ளைகள் அட்சரம் பிசகாமல் ஸ்லோகம் சொல்வதை ஒரு கணம் கண் மூடி ரசித்தார் நீதிபதி..

அதையே பாராட்டாய் எடுத்துக்கொண்டு வெட்கச்சிரிப்பில் பெருமிதமாய் பூஜை செய்ய ஆரம்பித்தார் மாமியார்..

----------------------------------

குடுகுடுன்னு மாடிப்படி ஏறிய 6 வயது மகளை தடுத்து நிப்பாட்டி ,

" ஏன் இத்தனை வேகம்.. எத்தனை முறை சொல்வேன்.. ஓடாதே.."

" அய்யோ மம்மி. விடுங்க. பென்சில் சீவும் போது கை வெட்டி காளிம்மாவுக்கு ரத்தம் மம்மி.."
விட்டால் அழுதுடுவாள் போல..

" ஒருவாட்டி சொன்னா கேட்கமாட்டியா. ஷார்பனர் இருக்கும்போது ஏன் அவ கிட்ட தரணும்..? " திட்டிக்கொண்டே பின்பக்கம் போக ,

சாதாரணமாய் பெருக்கிக்கொண்டு இருந்தாள் காளி..

" என்னாச்சு காளி .?"

" எதும்மா.. ..ஒஹ். அதுவா. பாப்பா சொல்லிச்சா.. ஹாஹா.. ரத்தத்த பார்த்து கொழந்த பயந்துடுச்சு போல.. அட இங்க பாருங்க.. பிளாஸ்டர் மருந்தெல்லாம் எடுத்து வாரத."

கலகல வென சிரித்தாள்.. " என் செல்லம், என் தங்கமே.. அம்மா மாதிரியே கொணம் ஒனக்கும்.. என்ன பெத்த தாயே, ஏழ பாழங்களுக்கு இதெல்லாம்

பழக்கம்டா கண்ணு. வலிக்காது கண்ணே.. " னு கொஞ்சினாள்..

----------------------------------------






எல்லா வேலையும் முடித்துவிட்டு குழந்தைகளை பள்ளி அனுப்பிவிட்டு , மாமனார், கணவர் வேலைக்கு சென்றதும்,

மாடிக்கு சென்றாள்.. குளித்துவிட்டு பக்கத்தில் இருக்கும் கலக்டர் வீட்டுக்கு செல்லணும்.. பேரப்பிள்ளைக்கு பேர் வைக்கிறார்கள்..

15 ஆயிரம் மதிப்புள்ள டிசைனர் புடவையை எடுத்து வைத்தாள்.. ஏதோ ஒரு எம்.எல்.ஏ வீட்டு பரிசாம்.. அலட்சியமா சிரித்தாள்..

சின்ன நகை டப்பாவில் பரிசை பத்திரப்படுத்தினாள்..தான் சேமித்து வைத்த லட்ச ரூபாய் பணத்தையும் எடுத்து கைப்பையில் ஒளித்துவைத்துக்கொண்டாள்.

அனாதை இல்லம் போகணும் பிராயசித்தமாக என எண்ணிக்கொண்டாள்..

" ரெடியாம்மா " மாமியார் குரல்

" இதோ 10 நிமிஷத்தில் வந்துடுறேன் மா.. "

அவசர அவசரமாய் கணினியில் உட்கார்ந்தாள் .

" கொலையா தற்கொலையா ?. நீதி வேண்டும்.. ஏழைகள் வயிற்றில் அடிக்கும் நீதிபதி , மருத்துவர் , காவல்துறை என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும்

சகட்டுமேனிக்கு ஆசைதீர கிழி கிழி என கிழித்தாள்.. நீதிபதி வீட்டினரையும் சாபம் விட மறக்கவில்லை.. இறுதியில் - தீகங்கு என கையெழுத்திட்டாள்..

பத்திரமாக தன் ஜெர்மன் தோழிக்கு அனுப்பி வைத்தாள்..அன்று இரவே இணையத்தில் தீகங்கின் எழுத்து வெளிவந்து சலசலப்பை ஏற்படுத்தியது . பற்றிக்கொண்டு பற்றி எரிந்தது

நாலாபுரமும்..அதை மனக்கண் முன் கொண்டு வந்து புன்னகைத்தாள் திருப்தியோடு..

எவ்வித சுவடுமின்றி அழகாக அலங்காரம் செய்துகொண்டு மாடிப்படி இறங்கி வந்தாள் தேவதை போல..

















படம் : நன்றி கூகுள்..

Wednesday, December 15, 2010

அம்மா புராணம் - 3 -போதையிலிருந்து மீட்ட மணமகன்..




அம்மாவோட தோழிகளை பார்த்தாலே புரியும் அம்மாவோட ரசனை..எல்லாரிடத்திலும் சமமாக பழகினாலும் , துணிச்சலான பெண்மணிகளே அம்மாவின் தோழிகள்..
இப்படி பலர் இருந்தாலும் இன்று நான் சொல்லப்போவது டெல்லியம்மா பற்றி.டெல்லி அம்மா என்ற பெயர் எப்படி வந்தது?.. புரிந்திருக்கும்..ஆம். டெல்லியில் கிட்டத்தட்ட 40 வருடம் வாழ்க்கை நடத்திவிட்டு ஊர்பக்கம் வந்தவர்கள்..

மிக அழகானவர்.. வட நாட்டு பெண்மணியை போல தோற்றம்..அவர் கணவர் ராணுவத்தில் மிக உயர்ந்த பதவியில்..அதன்மூலம் இவர்களுக்கு அன்னை இந்திராகாந்தியின் பழக்கம் கிடைத்தது.. பல வருடம் அவருக்கு உதவியாளராகவும் இருந்துள்ளார்.. தனிப்பட்ட முறையில்.. எங்களிடம் அந்த புகைப்படங்களை காண்பிப்பார்.. சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தியோடும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்..இப்படி மிகப்பெரிய ஆட்களோடு பழகி , தம் குழந்தைகளையும் மிகப்பெரிய பள்ளியில் சேர்த்து கல்வி கொடுத்தார்.. அதில் கடைசி மகன் கல்வியோடு போதைக்கும் அடிமையானார்..அதிலிருந்து மீட்டு பின் பிடிவாதமாய் சொந்த ஊருக்கு அழைத்து வந்தார்..

அந்த பையன் கணினியில் அப்பவே கெட்டிக்காரர்.. ( 17 வருடம் முன்பு ) .என் அண்ணனும் கணினி என்பதால் இருவரும் நட்பாயினர்.. ( கணினியையே கட்டிகிட்டு அழுவார்கள் எந்நேரமும் ).இப்ப அந்தம்மா தன் மகனுக்கு பெண் பார்க்கிறார் தன் சாதியில்.. ( என்கே போய் வாழ்ந்தாலும் இந்த சாதி விடமாட்டேங்குது பாருங்க..).

நல்ல விஷயங்கள் உடனே பரவுதோ இல்லையோ கெட்ட விஷயங்கள் தீ மாதிரி பரவிடுமே.. அந்த பையனின் போதை பழக்கம் ஊர் முழுக்க தெரிந்தது..யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.. இத்தனைக்கும் ஏகப்பட்ட சொத்துக்கள்.. அந்தம்மாவும் தனக்கு சம்பந்தம் கொஞ்சம் பெரிய இடமாக இருக்கணும் என தேடினார்கள்.. மகனுக்கும் அவன் பேசும் நுனிநாக்கு ஆங்கிலத்துக்கும் ஏற்ற பெண் இருக்கணும் என்ற ஆசையும்..மிக நல்ல மரியாதையான பையன் தான் அவர்.. எங்க வீட்டுக்கு வரும்போது அமைதியாக அண்ணணுக்காக காத்திருப்பார்.. வசதியானவர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல்...ஆனா அவர் அம்மா நல்லாவே பந்தா காட்டுவார்.. இரண்டு தெரு தள்ளியிருந்து எங்க வீட்டுக்கு அம்மாவிடம் பேச வரணும் என்றாலும் காரில்தான் வருவார்.. டிரைவார் காத்திருந்து கூட்டிசெல்வார்..

இப்ப இன்னொரு தோழியின் மகளை பேசி முடிக்க எங்க வீட்டில் வைத்து பேச்சு நடக்கும்.. அந்த தோழி மலைக்காரம்மா.. ( மூணாறில் எஸ்டேட் இருப்பதால் இப்பெயர் .)
அவர்கள் வீட்டு பெண்களும் மிக அழகும் கலரும்.. வசதியும்.. படிப்புதான் குறைவு...இப்ப என்ன பிரச்னைன்னா, சீர் , பணம் ஏதும் தரமாட்டேன் என பெண் வீட்டார் சொல்கிறார்கள்.. ( வலிய வந்தமையால் )..இப்படி இழுபறி நடந்துகொண்டிருந்தபோது அந்த பெண்ணுக்கு வேறொரு பண்ணையார் வீட்டில் அழகுக்காக விரும்பி நிச்சயம் செய்துவிட்டார்கள்..

அப்பதான் அம்மா சொன்னார்கள் , " பையன் போதை பழக்கம் எல்லாரும் அறிந்தமையால் பயப்படுவார்கள்.. ஏன் ஒரு ஏழை பெண்ணுக்கு வாழ்வளிக்க கூடாது ?." .அந்தம்மா முதலில் ஒத்துக்கொள்ளவில்லை.. அவர் மகனிடம் என் அம்மா பேசியபோது அவர் மிக தயாராய் இருந்தார்.. தன் அம்மாவையும் சம்மதிக்க வைப்பதாகவும் , " நீங்க சொல்ற எந்த பெண்ணையும் நான் கட்டிக்கிறேன் மா. " என்றார்.. கடைசியில் அந்தம்மாவும் சம்மதித்தார்கள்.. இப்பதான் அம்மாவுக்கு பிரச்னை.. வேலியில் போற ஓணானை -----------//

அக்கம்பக்கம் இருந்த ஏழைப்பெண்கள் லிஸ்ட் எடுத்து அழைத்து மெதுவா கேட்டுப்பார்த்தார்கள்.. டெல்லி என்றதுமே பலர் வேண்டாமென சொல்லிவிட்டார்கள்..இப்ப கடைசியில் இருப்பது சில வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு குடும்பம்.. வசதியிருந்து நொடித்தவர்கள்.. 8 பெண்கள் ஒரே பையன்.. ஒவ்வொரு பெண்ணையும் கறையேத்த மிக கஷ்டப்பட்டது அக்குடும்பம்..அவர்கள் சண்டையிட்ட குடும்பம் எங்களோடு மிக நெருக்கம் என்பதால் எங்களிடமும் பேசமாட்டார்கள்..ஆனாலும் அம்மாவுக்கு அந்த குடும்பம் மீதும் , பெண் குழந்தைகள் மீதும் ஒருவித பாசம் /மரியாதை உண்டு...என்னிடம் சொல்லி அனுப்பினார்கள் அந்தம்மாவை எங்க வீட்டுக்கு வர சொல்லி.. நான் போய் சொன்னதும் வேண்டா வெறுப்பாக வந்தார்கள்.. அம்மா விபரமாக எல்லாவற்றையும் எடுத்து சொல்லி , " நான் கட்டாயப்படுத்தவில்லை.. நீங்க யோசிச்சு சொல்லுங்க .. " னு சொன்னார்கள்..


அவர்கள் முதலில் வேண்டாம்னு சொல்ல , பின் அவர்கள் மூத்த மகள் வந்து மேலும் பேசி விப்ரம் கேட்டு அறைகுறையாக சம்மதித்தார்கள் பெண் பார்க்க..உடனே எங்க அண்ணியோட நகையை எடுத்து சென்று அப்பெண்ணுக்கு போட்டு அலங்கரித்தோம்.. மாப்பிள்ளையும் அவர் அம்மாவும் வந்து பார்த்து பிடித்துவிட்டது..பெண் அதிகம் படிக்கவில்லை.. 10ம் வகுப்பு மட்டுமே..சுமாரான அழகுதான்..( இதை சொல்வது ஊர் உலக பார்வைக்காக மட்டுமே . என் பார்வை அல்ல.. திட்டிராதீங்க.. :)) )

சம்மதம் தெரிவிக்கும் வகையில் மாப்பிள்ளை வீட்டார் ஒரு நகை , சில புடவைகள் பரிசாக பெண்ணுக்கு தந்தார்கள்.. பெரிய ஹோட்டலில் அந்த வாரமே திருமணமும் நடந்தது... பலர் விமர்சித்தார்கள் எதிர்மறையாக.. எங்கம்மா அந்த பையனிடம் சத்தியம் வாங்கினார்கள்.. என் பெண்ணை கொடுத்தது போல கொடுத்துள்ளேன்.. நீ ந்ல்லா வாழ்க்கை நடத்தி காண்பிக்கணும் என.. அந்த பையன் கண்ணீரோடு சத்தியம் செய்தார்..

திருமணம் முடிந்த சில தினங்களில் டெல்லிக்கு விமானத்தில் சென்றார்கள்.. அடுத்த வருடத்தில் மாமியார் போன்ற மிக அழகான பெண் குழந்தை பெற்று மாமியார் மனதிலும் நீங்க இடம் பிடித்தார் அப்பெண்.. இப்பல்லாம் வருடந்தோறும் விமானத்தில் தனியே குழந்தையோடு வருவார்..( இன்று ஒரு நடிகையைப்போன்ற மிக அழகிய வாலிப பெண் . அதே நுனிநாக்கு ஆங்கிலமும் அப்பாவைப்போல ) . எங்கேயோ போய் விட்டாள் அந்த கிராமத்து பெண்... இப்பவும் எந்த அவசரம் என்றாலும் அம்மாவை வந்து பார்த்து " அம்மா இது நீங்க கொடுத்த வாழ்வு " என வணங்கிவிட்டு செல்வாராம்....


ஊரே பழியை போட்டது அம்மா மேல்.. இது எப்படி நல்லா வாழ முடியும் என சவால் விட்டது.. அதுவும் வேறு ஜாதியினர்.. அன்று பழியெல்லாம் தனி ஆளாக அம்மா ஏற்றுக்கொண்டார்.. இன்று அக்குடும்பமே மகிழ்ச்சியில்...அம்மா எங்களுக்கு எப்பவும் இப்படி செய் , அப்படி நட என சொன்னதில்லை.. சொல்ல நேரமிருந்ததில்லை எனலாம். ஆனால் அவர் வாழ்க்கையை பார்த்தே கற்கலாம்..அவர் துணிவை, அடுத்தவருக்காக பழி ஏற்றுக்கொண்டும் செய்யும் நற்செயல்களை...நிஜமான அக்கறை இருந்தால் மட்டுமே முடியும்.. பெண் குழந்தைகளுக்கு முக்கிய தேவை கல்வியும் துணிவும் என நினைப்பவர்..




(புராணத்துக்கு தேவையில்லாதது : ஜனாதிபதி திரு.வெங்கட்ராமன் அவர்கள் தூத்துக்குடி வந்தபோது டெல்லியம்மாவுடன் எங்க அம்மாவும் சென்று சந்தித்தது அப்போதுதான்... அப்பதான் டெல்லியம்மாவின் மரியாதையை முழுதாக கண்டார் அம்மா..டெல்லியம்மா கெஸ்ட் ஹவுஸ் குள் நுழைந்ததுமே காவலர்கள் சல்யூட் அடிக்குமளவுக்கு பிரசித்தி...அவர் கணவர் பற்றி எனக்கு தெரியவில்லை.. அரசியல் பிரமுகர்கள் பலரும் பரிச்சயமுண்டு..)

இப்படி கம்பீரமான பெண்"மணிகளை" எமக்கு அறிமுகப்படுத்த தவறியதில்லை அம்மா... )

-

அடுத்து ஒரு எமோஷனல் காதல் பிளாக்மெயில் பற்றி நேரமிருப்பின் எழுதுவேன்.. அல்லது அடுத்த வருடம் வந்து தொடருவேன்.. விடுமுறைக்குப்பின்...

பதிவுலகினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..



அம்மா புராணம் - 2 படிக்க
அம்மா புராணம் - 1 படிக்க



படம் : நன்றி கூகுள்..





.

Thursday, December 9, 2010

இணைய நட்பு - வருமுன் காப்பது..2






































அக்கம்
பக்கம் உள்ளவரிடம் பேசாதவர், நல்ல விதமாய் நட்பு பாராட்ட முடியாதவர்கள் கூட இணையத்தில் எளிதாக நட்பு பாராட்ட முடிகிறது..

எல்லோருக்குமான சம உரிமை இங்கே உள்ளது.. தத்தம் திறமைகளை எவ்வித தயக்கமுமின்றி வெளிப்படுத்தி பாராட்டும் ஊக்கமும் பெற முடிகிறது..

அண்டை வீட்டுக்காரர்களுக்கு , ஒரு துரும்பை கூட எடுத்து உதவ முடியாதவரெல்ல்லாம் இணையத்தில் நல்ல மனிதராய் நடிக்க முடிகிறது..

குழந்தை , குடும்பம் என மிகவும் அன்பான நிறைவான சூழலில் , ஏன் ஆச்சாரமான சூழலில் இருப்பவரும் கூட நட்பை தேடி இணையம் வருகிறார்கள்..

அதைவிட நான் அதிகமாக கண்டது புகழ் விரும்பிகள்..

எல்லோருக்கும் புகழ் பிடிக்கும்தான்.. இதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.. சிலருக்கு அது ஊக்கம் , அங்கீகாரம்.. அந்தளவில் அது ஆரோக்கியமானதே..

ஆனால் அதையும் தாண்டி தகுதியற்ற புகழை தேடும்போதுதான் ஆபத்தாக வந்து முடியும்..

எப்படி இந்த தகுதியற்ற புகழை அடைய விரும்புவார்கள்.?

ஓட்டு போடுங்க என பிச்சை கேட்பது.. இதில் கூட சமூகத்துக்கு தேவையான விஷ்யங்களை சொல்லி அது பரவவேண்டும் என நல்லெண்ணத்தில் ஓட்டு கேட்பவர்களை இங்கே சொல்லவில்லை.. ஆனால் உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் ஓட்டு பிச்சை கேட்பதும் , பின்னூட்ட மொய் எழுதுவதுமாய்...


ஜாலியாக சகாக்கள் சேர்ந்து கும்மி அடிக்கட்டும் அதுவும் தவறில்லை.. ஆனால் சிலர் தகுதியற்ற , சமூக விரோத பதிவுகளை போட்டு கூட்டம் சேர்த்துவிட்டு தன்னை பெரிய தலைவராக நினைத்துக்கொண்டு கருத்து சொல்லும்போது தான் தாங்க முடிவதில்லை...

ஆக இங்கே தற்போது நிலவும் இந்த சூழல்/கூட்டம் ஆரோக்கியமானதல்ல என்பது என் கருத்து...


இப்ப சில விஷயம் பெண்கள் குறித்து.. இது தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்குவதற்கல்ல. ஒரு விழிப்புணர்வுக்கு மட்டுமே..


பொதுவெளியில் நாம் என்ன உடையில் செல்வோமோ , அந்த உடையில் உள்ள படங்களை மட்டுமே உங்கள் முக புத்தகத்திலோ அல்லது பதிவிலோ போடுங்கள்..

சில மாதம் முன்பு ஒரு பெண்ணின் நைட்டி போட்ட படம் தினமும் வந்து என் முகபத்தகத்தில் தொந்தரவு கொடுத்தது..

அவர் அந்த படத்தை அறிந்தோ அறியாமலோ போட்டிருக்கலாம்.. இல்லை அது அவருக்கு ஒரு பெரிய விஷயமாக/தவறாக இல்லாமல் கூட இருக்கலாம்..

எதையும் எதிர்நோக்கும் துணிவு மிக்கவராயும் இருக்கலாம்..

ஆனால் பார்ப்பவர்கள் எல்லாரும் அவர் மன நிலையில் இருப்பார்கள் என சொல்ல முடியாதே?..

அதே போல்தான் சில ஆபாச கவிதைகளும்..

மணிமேகலை எழுதுகிறார் என்றால் அவரால் எதிர்கொள்ள முடியும்..

முத்தக்கவிதை எழுதும் சில தோழியர் , அவர் வாழும் நாட்டில் இது சகஜமாக இருக்கலாம்.. ( நான் வாழும் நாடு போல )

அவர்கள் குடும்பத்தினரும் அதனை அங்கீகரிக்கலாம்..

ஆனால் பொதுவில் அப்படி ஒரு கவிதை எவ்வாறு உள்வாங்கிக்கொள்ளப்படுகிறது என்பதையும் கணக்கில் கொள்ளணும்..

அதே போல சில பின்னூட்டங்கள் மூலமும் சில பெண்கள் தம்மை வெளிப்படுத்திக்கொள்வதுண்டு..

ஆக இதை வைத்தே ஒரு ஆண் எளிதாக இவர்களை எடைபோட முடிகிறது..

சாந்தம் வழியும் சர்வ லெக்ஷனம்;
காந்தமாய் கவரும் கண்களில் அன்புமழை;
பொன்னகைப் பூட்டிய பளிங்கு கழுத்தை
புன்னகைக் காட்டிய பவள இதழ்கள்
வெல்லும் வண்ணம் வார்த்து எடுத்த---

இப்படி ஒரு வர்ணனை ஒரு பெண்ணிடம் முக புத்தகத்தில் .அவள் புகைப்படம்
பார்த்து.

அவரும் நன்றி சொல்கிறார் இக்கவிதைக்கு...

பளிங்கு கழுத்தை பவள இதழ்கள் போன்ற அசிங்க வர்ணணைகளை ஏன் பொதுவில் அனுமதிக்கின்றார்கள்..?..

முளையிலேயே கிள்ளி எறியவேண்டாமா?..

இல்லை அதை விரும்பினாலும் தனிமடலில் இருந்துவிட்டால் பரவாயில்லை.. அது அவர்கள் தனிமனித சொந்த விருப்பம்...மட்டுமே..

இது போதாதா சில ஆண்களுக்கு?..

இப்படியான பிரபலங்களை ஏன் பெண்கள் விரும்புகின்றார்கள் என்றுதான் புரிவதில்லை...

இவர்கள் கட்டாயம் மற்றவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமும்..

ஒஹோ நாமும் இப்படி வழிசலை ஏற்றால் தான் நமக்கும் பிரபலமடைய முடியும் என்று எண்ண வைக்கின்றார்கள்..

பெண் என்பவள் கம்பீரமானவள்.. சக்தி வாய்ந்தவள்.. எவருக்கும் அஞ்சாத மன பலம் படைத்தவள்..தவறுகளை துணிந்து எதிர்ப்பவளாக ,விமர்சனங்களை எதிர்கொண்டு தாங்கி புன்னகைப்பவளாக இருக்கணும்..

அவள் இப்படி கவிதைகள் மூலம் போகபொருளாய் பலவீனப்படுத்தப்படுவது மிக

ஆரோக்கியமற்றது என்பது என் கருத்து...

சமீபத்தில் சேட்டைக்காரன் என்ற பதிவர் கூட பொதுவில் ஒரு விஷயம் சொல்லியிருந்தது எல்லாருக்கும் நினைவிருக்கும்..

அவரிடம் இரு பெண்கள் தவறாக நடப்பதாகவோ/பேசியதாகவோ... அதை அவர் நிரூபிக்கவும் தயார் என்றார்..


ஆக இப்படியான பெண்கள் நம் மத்தியில் இல்லை என்று சொல்ல முடியாது..

செய்வதை செய்துவிட்டு ஆண்களே மோசம் என பழி போடுவது எப்படி சரியாகும்.?

ஒரு ஆண் தவறாக பேச முயல்கிறான் என்பதை ஒரு வார்த்தையிலேயே /புகழ்ச்சியிலேயே மிக மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும்...

அதை அனுமதித்து விட்டு பின்பு அழுவதால் பிரயோசனமில்லை..

நான் இணையம் வந்த புதிதில் பலரும் இப்படியாக பேசியவர்தான்..முதலில் காம ரசம் சொட்டும் கவிதைகளை பகிர்ந்து நம் கருத்தை கேட்பார்கள்.. அல்லது சிலைகளுடைய புகைப்படம் அனுப்புவார்கள்.. அல்லது இருக்கவே இருக்கு ஓஷோவின் காம வரிகள்...

நாம் மரியாதை கருதி அமைதியாகவோ , ஒரு புன்னகையோடோ விலகுவோம்..

சிலர் மீண்டும் தொந்தரவு செய்யும்போது , எனக்கு இதிலெல்லாம் விருப்பமில்லை என மென்மையாக மறுக்கலாம்..

யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை...

பின்பு நாம் அதை விரும்பாதவர் என தெரிந்தும் நல்ல விதமாய் மட்டுமே நட்போடு பழகுபவராய் மாறிப்போனதுண்டு..

ஆணிடம் காமம் குறித்தான் எண்ணம் பெண்ணை விட அதிகம்தான்.. மறுப்பதற்கில்லை...அது இயற்கை..

அதற்கு இடம் கொடுப்பதை பொறுத்தே இருக்கிறது , அதை தொடர்வதும் , விலகுவதும்..

ஆனால் அதை வைத்து மட்டுமே ஒருவன் அயோக்கியன் என்று சொல்லிவிட முடியாது..

பெண்களிடம் செல்லும் எல்லோரும் அயோக்கியருமல்ல.. செல்லாதவர் எல்லாரும் யோக்கியருமல்ல..

இதே தான் பெண்களுக்கும்..

20 வயதிலிருந்தே ஆணின் பார்வைகளை தாங்கியே வளர்ந்திருக்கோம்.. பெண் அங்கங்களை ரசிப்பவனாகவே படைக்கப்ப்ட்டிருக்கான் ஆண்..

ஆனால் எல்லா பெண்களையுமா எப்போதும் பார்க்கிறான்?.. அது காம வெறியனின் செயல் மட்டுமே..

அப்படி பார்ப்பவனும் , பெண்களையே ஏறெடுத்தும் பார்க்காமலேயே இருப்பவனும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள்..

மற்றபடி சாதாரணமாய் ரசிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.. அது நாகரீகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்..

இதேதான் இனையத்திலும்...


ஆணுக்கு பெண்ணின் மீது ஒரு அன்பு, பாசம், தாய்மை ஏதோ ஒன்றின்மீதும் , பெண்ணுக்கு ஆணின் மீதும் ஒரு கண்காணிப்பு, பாதுகாப்பு , ஆறுதல் , துணிவு தரும் ஏதோ ஒன்றும் தேவைப்படுகிறது...

இவை வரம்பு மீறாதவரை இரு பக்கமும் வளர்ச்சியோடு இருக்கும்வரை ஆபத்துகள் ஏதுமில்லை.. எப்ப மற்றவர் மீது பொறாமை , பொஸசிவ்நெஸ்/ஆழுமை வர ஆரம்பிக்குதோ அப்போது அங்கேயே நட்போடு , எவ்வித கசப்புமின்றி பிரிவது அவசியம்..


பிரியணும்னு முடிவெடுப்பவர் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் மிக கவனமாக கையாளணும்...

தன் நிலைமையை விளக்கி ஆணுக்கான அவகாசம் /நேரம் கொடுத்து , அவர் இதுவரை செய்த நல்ல விஷயங்களுக்கு நன்றி செலுத்தி , அவர் காயப்பட்டிருந்தால் அதற்கான மன்னிப்போடு விலகணும்..

அந்த நட்புக்கு ஒரு குற்ற உணர்ச்சியை கொடுத்துவிடக்கூடாது.. தப்பு நம்மேலும்தான்..இதை ஏற்க கடினமென்றாலும்..

ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் நட்போடு இருக்கும்போது கண்டிப்பாக அவர் நல்ல விஷயம் செய்திருப்பார்.( ஒன்றாவது ) . அதை மறந்து தூக்கி எறிந்து விட்டு செல்ல வேண்டாம்..


அப்படி செல்லும்போதுதான் பழிவாங்கும் எண்ணம் வரும்..

இதையும் தாண்டி மென்மையாக பிரிந்தும் இப்படி பழிவாங்கும் எண்ணமிருந்தால் ஒண்ணும் கவலைப்படாது துணிந்து நிற்பதே வழி..

சில பல விஷமத்தனமான விமர்சனங்கள் நம்மீது பரப்பப்படும்.. எல்லாவற்றையும் ஏற்க பழகிக்கணும்.. ஏன்னா இது பொறாமை , போட்டிகள் நிறைந்த உலகமாச்சே..

நாம் நல்லவர்கள் , என்பதற்காக மட்டுமே நமக்கு நடப்பதெல்லாம் நல்லவையாக நடக்கணும் என்ற எவ்வித கட்டாயமுமில்லை..

ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு..

“Expecting the world to treat you fairly because you are a good person is a little like expecting a bull not to attack you because you are a vegetarian" Dennis Wholey

மேலும் ஒரு நல்ல நட்பு தப்பை சுட்டிக்காட்டக்கூடியதாய் இருக்கணும்.. தப்புகளை ஏற்றுக்கொள்வதாகவும் இருக்கணும்.. நட்பாய் இருக்கணும் என்ற ஒரே காரணத்துக்காக தப்புகளை கண்டும் காணாமல் இருக்க கூடாது..


நம் மனசாட்சிக்கு நாம் நல்லவர்களாய் இருந்தால் போதும்.. மற்றவர்களுக்காக அல்ல..அதே போல் நிரூபிக்க தேவையுமில்லை யாரிடமும்..

நம் குடும்பத்தினர் நம்மை நம்பணும்.. அவ்வளவே..

மேலும் திருமணமான பெண்கள் மற்றொரு ஆணோடு பேசுவதை நம் தமிழ்நாட்டு/இந்திய /சில சமயம் பல நாட்டு கலாச்சார ஆண்களால் உடனே ஏற்க முடியாதுதான்..

மெதுவாகத்தான் புரிய வைக்கணும்.. ஆனால் பெண் புரிந்துகொள்வாள் எளிதில்..

( என் வேலை நிமித்தம் என் பாஸ் கூட பல்வேறு ஊர்களுக்கு சென்று விடுதியில் தங்கி வருவேன்.. பல இரவு நேர வேலையும் எனக்கு.. இதையெல்லாம் பெருமையாக

அனுப்பி வைத்தாலும் , ஆயிரம் பேரோடு அலுவலில் கைகுலுக்கினாலும் ,20 வருடமாய் ஆண்களோடு ஆண் போலவே வேலை செய்தபோதும் , தன் கண் முன்னால் வேறொரு ஆண் கைகுலுக்குவதை ஜீரணிப்பது இன்னும் என் கணவருக்கு சங்கடம்தான்..அதிலும் வெளிநாட்டவர் என்றால் கூட பரவாயில்லை.. இந்தியர் என்றால் தான் ..:) ஏனெனில் நம் வளர்ப்பு அப்படி.. )


ஆக கணவரையும் புரிந்துகொள்ளணும்.. நாம் பேசும் அனைத்து நட்புகளையும் முடிந்தவரை அறிமுகப்படுத்திடணும்..

எனக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரும்போதெல்லாம் அவரும் சில சமயம் பேசுவார்..என் கல்லூரி தோழர்கள் என் வீட்டில் வந்து தங்கியதுமுண்டு..அவருக்கு பிடிக்கும் பட்சத்தில்..

பிடிக்காவிட்டால் ?.. வேறென்ன செய்ய புரியவைக்க முடியாவிட்டால் , புலம்பிக்கொண்டே விட்டுவிட வேண்டியதுதான்.. மற்றவரை மாற்றுவதை விட , நாம் மாறிக்கலாம் சில வேளை..

ஆண்களோடான எனது இருபது வருட வேலை அனுபவத்தில் ,நட்பு/காதல் பிரிவினால் அவர்கள் வருந்துவதையும், வலிகளை மனதுக்குள்ளே வைத்து அழுவதையும் கண்டுள்ளேன்.. பெண் புலம்பியாவது ஆறுதலடைவாள்.. ஆனால் ஆண் பூட்டி வைப்பான்..சிலரே வெளியில் சொலவ்தும்..


ஆண்களும் சில பெண் நட்புகள் , அல்லது காதலி பிரிந்துபோய்விட்டாளே என ஒருபோதும் கவலை கொள்ளாதீர்கள்..

காதலும் , அன்பும், நட்பும், இன்ன பிறவும் நம்மிடையேதான் இருக்கிரதேயன்றி பிறரிடம் இல்லை.. அதற்கு தகுதியானவர்கள் கிடைத்தே தீரும்...

நண்பர்கள் பிரிந்தாலும் அவர்களோடான அந்த நட்பு கால நினைவுகள் ஒருபோதும் பிரிவதில்லை.. அவை என்றென்றும் இனிமையாக இருக்கணும்..

நண்பர்களை நட்போடு பிரிய பழகுவோம்...



படம் : நன்றி கூகுள்..





--

Monday, December 6, 2010

இணைய நட்பு முழுதும் தீங்கானதா?..



























இணைய நட்பு முழுதும் தீங்கானதா?..

இன்று "

இது கண்டனம் அல்ல விழிப்புணர்வு....!"


என்ற ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவை கெளசல்யா போட்டிருந்தார்..நன்றி..

http://kousalya2010.blogspot.com/
----------

பெண்களின் பலவீனத்தை பயன்படுத்தி மன உளைச்சல் கொடுப்பதும் , மிரட்டுவதும் தொடற்கிறது.

எல்லாருக்குமே ஏதோ ஒரு நேரம் மனசு விட்டு பேச ஒரு நல்ல நட்பு வேண்டிதானிருக்கிறது..

குடும்ப விஷயங்களை கூட நம்பிக்கையானவர்களிடம் சொல்வதில் தப்பில்லை..

இதுவரை என்னிடம் சாட் செய்தவர்கள் நூற்றுக்கணக்கில்.. எத்தனை எத்தனை குடும்ப பிரச்னைகள்?...

ஒரு சகோதரன் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கூட துணிந்த கதையுண்டு..

அந்த நேரத்தில் " எதைத்தின்னா பித்தம் தெளியும் ' என்ற கதையில் ஆறுதல் தேடி அலையத்தான் செய்யும் மனம்..

அந்த நண்பருக்கு அவரை விட கஷ்டத்தில் இருக்கும் நபர்களை பற்றி எடுத்து சொல்லவேண்டியிருந்தது..



நானும் பகிர்ந்து ஆறுதல் அடைந்துள்ளேன் மிக மிக நல்ல தோழி , நண்பர்களிடம்..

ஆக எல்லாருமே மோசம் இல்லை.. பழகும் போது அந்த நபர் அவர்கள் குடும்ப விபரம் தெரிந்து வைப்பதும் , அவர் குடும்பத்தினரிடம் எத்தகைய மரியாதை வைத்துள்ளார் என்பதையும் புரிந்துகொள்ளணும்..

என் நட்புகளை குடும்பத்தோடு அறிமுகம் செய்ய முடிந்தால் மட்டுமே தொடருவேன்..

வருடா வருடம் இந்தியா செல்லும்போது குடும்பத்தோடு சந்திப்பதுமுண்டு...

ஜொள்ளு விட வரும் நட்புகளிடமும் நீங்கள் தேடும் பெண் நான் இல்லை என சொன்னால் நிச்சயம் மரியாதையாக விலகிடுவதுண்டு.. அல்லது மன்னிப்புடன் நல்ல நட்பாக மாறுவதுமுண்டு... சில விஷயங்கள் நம் கையிலும்..கெட்டவர்களை கூட நல்லவர்களாய் மாற்றுவதும் கூட சில சமயம்..


இதில் சில கெட்டவரும் இருக்கலாம்.. என்னைப்பொறுத்தவரை 1000ல் ஒண்ணு அப்படி இருக்கும்..

ஆக எல்லோருமே மோசம் என எண்ண வேண்டியதில்லை..

எனக்கு பதிவுலகில் பிரச்னை என்றதும் உதவியதில் பலர் ஆண்கள் தான்..பெண்களுமுண்டென்றாலும்.. ( என் நன்றிகள் )

இதையும் மீறி தப்பு நடந்திருந்தாலும் ஒன்றும் பயப்பட வேண்டாம்..ஒரு அனுபவம் அவருக்கு.. மன உளைச்சலே வேண்டாம் என ஆறுதல் சொல்லுங்கள்.. துணிந்து பதிவுகளை எழுத சொல்லுங்கள்.. அதுவே சிறந்த மருந்தும்... ஓடி ஒளிவதே இத்தகைய கயவருக்கு வெற்றி.. அடுத்து வேறொரு பெண்ணுடன் ஆரம்பிப்பார்... ஆக அவர் யாரென்று பெண் பதிவர்களுக்காவது தெரியப்படுத்திடுங்கள்...


அதுவும் வெளிநாட்டில் இருக்கும்போது நட்பு கூடுதலாய் தேவைப்படலாம்..அனைவருக்குமே..

இதை " மித்ர மை பிரண்ட் " என்ற படம் கூட அழகாக சொல்லியிருக்கும்..


பெண்கள் கொஞ்சம் மென்மையானவர்கள் என நினைத்து இல்லாத குடும்ப கஷ்டத்தை சொல்லி பணம் கேட்பவரும் உண்டு..

ஒருமுறை ஒரு நண்பர் என்னிடம் அப்படி கேட்டபோது நான் அவர் அக்கவுண்ட் எண் , வேலை செய்யும் அட்ரஸ் கேட்டேன்.. கொடுத்தார்..

இப்ப கொஞ்ச நேரத்தில் பணம் போடுகிறேன் என்றேன்..

சிறிது நேரங்கழித்து என்ன போட்டாச்சா என்றார்..

இருங்க எங்க வீட்டு பசங்க சென்னையில் தான் பலர் இருக்காங்க அனுப்பி வைக்கிறேன் உங்க அலுவலகத்துக்கு என்று சொன்னதும் அழ ஆரம்பித்தார்

மன்னிச்சுடுங்க என் வேலை போயிடும் என.. மன்னித்துவிட்டேன்..

எந்த பிரச்னை என்றாலும் துணிவாக பதிவுலக நட்புகளை முக்கியமா பெண்களை நாடுங்கள்..

பெண் பதிவர் சந்திப்பும் அப்பப்ப நடத்திடுங்கள்.. அப்ப பயம் இருக்கும் இத்தகைய ஆண்களுக்கு..

அதுமட்டுமல்ல நாங்கள் அன்புடன் குழுமத்தில் இருந்த போது குறிப்பிட்ட ஒரு ஆணின் பெயரை கெடுக்க அவரைப்போலவே சாட் செய்து அதை பெண்கள் எல்லாருக்கும் அனுப்பியும் வைத்தார் ஒரு அனானி..

நாங்கள் அதிர்ச்சியடைந்தோம்..அதில் எல்லா பெண்களை பற்றியும் விமர்சிக்கப்பட்டிருந்தது.. பின் அவரை கூப்பிட்டு கேட்டபோது இது அவர் எதிரியின் வேலை என தெளிவுபடுத்தினார்..

ஆக சாட்களை கூட மாற்றி இப்படி அனானி பேரில் அனுப்பி துன்புறுத்துவது ...

பெண்களுக்கு மட்டும் பிரச்னை இல்லை .. பொறாமையால் சில ஆண்களுக்குமே பிரச்னை உண்டுதான்..

அப்பெண் பதிவர் எழுத தொடங்கட்டும் பிரச்னை முடிந்ததும்.

இணையம் மூலம் அறிமுகமான இரு பெண் நட்புகள் தாய்லாந்து வந்ததும் நாங்கள் ஊர் சுற்றிப்பார்த்ததும் நல்ல அனுபவங்கள்.. அதே போல நான் இந்தியா சென்ற போது எங்களை குடும்பத்தோடு கூடன்குளம் மின் நிலையம் அழைத்து சென்று சுற்றிக்காட்டிய முன்பின் அறிமுகமில்லாத நண்பர்..இப்படி பல விஷயங்களை சொல்லலாம்..



கயவர்களை மட்டும் களை எடுப்போம்.... நல்ல நட்புகளை ஆரோக்கியமாக வளர விடுவோம்...




( மேலேயுள்ள குழந்தைகள் படம் வாசகத்தோடு அளித்த நண்பர் க்கு மனமார்ந்த நன்றிகள்... )




படம் : நன்றி கூகுள்



..

Wednesday, December 1, 2010

மீண்டும் பெண்ணை பலியாக்குதல்...நந்தலாலா...




















படம் அருமையா எடுக்கப்பட்டிருக்கு..

குழந்தை , குமரனின் வலிகள் , அவர்கள் பயணங்கள் , சந்திக்கும் மனிதர்கள் , அவர்களின் நிலைகள் , சுவாரஸ்யமானவை..


வித்யாசமான படம்..

குத்துபாட்டு , அடி தடி நம்ப முடியாத பைட்டுகள் , சுவிஸ் பாடல்கள் இல்லாமல் இது போல படங்கள் கருத்தை , வலிகளை சொல்வதாய் பார்க்க நன்றே..


இசையும் கூடுதல் பலம் .

ஆனால் கரு.?

தமிழ் சினிமா யாருக்காக எடுக்கப்பட்டிருக்கோ அதில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்...

நான் எழுத நினைத்த விஷயங்களை மிக அழகாக இரு பதிவர்கள் ஏற்கனவே எழுதிவிட்டதால் , ( அதிலும் இவர்கள் ஆண்கள் என்பது மிக முக்கியமான விஷயம் )

அவர்கள் லிங் இங்கே..

அதெப்படி ஒரு பெண்ணின் பார்வையை ( வலிகளை ) எளிதில் சில ஆண்களால் மட்டுமே புரிய முடிகிறது?.

சிலருக்கு புரிந்தாலும் பயம்.. எங்கே ஆட்டு மந்தைகளின் கூட்டத்தை விட்டு விலக்கப்படுவார்களோ என.. ( அப்ப அவர் ஆணா னு கேக்கப்டாது )

சிலர் புரியவே மாட்டோம், இதுவே வசதியாகத்தான் இருக்கு.. இந்த பண்பாட்டிலேயே ( பெண் பலியாவதே ) இன்னும் ஒரு 1000 ஆண்டுகள் கடத்திடுவோம் னு பிடிவாதமாய்..


என் குடும்பத்தில் இதே போல இரு சகோதரர்கள் ( ஒருவர் அதிகம் படித்தமையால் , இன்னொருவர் விபத்தால் ) இருப்பதால் என்னால் அவர்கள் வலியை மிக எளிதாக புரிய முடிந்தது..

பெரிய சகோதரர் ( சித்தப்பா மகன் ) இன்னும் மருத்துவமனையில்..( விடுதி மாதிரி.. தன்வந்த்ரி ஹோம் ).. அசாம் ஐஐடியில் கைட் ன் அராஜகத்தால் , மூத்த மகன் என்ற வீட்டுப்பொறுப்பால் விட்டுவிட்டும் வர முடியாமல் , வருத்தங்களை மனசுக்குள் அமுக்கி...மனநிலை தவறியது..டாக்டர் பட்டம் வாங்கிய கையோடு.. )

வருடா வருடம் சென்று சந்திக்கும்போது அவன் அறைக்குள் என்னை பாதுகாப்பாக அழைத்து செல்லும்போது அப்படி ஒரு பயம் அப்பிக்கொள்ளும்...

அவன் அறையில் தங்கியிருந்த ஒரு வாலிபன் , குழந்தை போல் வந்து என்னை தொட்டு சென்றதும் கட்டில் மீதேறி மகிழ்ச்சியில் குதித்ததும் , உலக வாழ்வே வெறுக்க செய்த நிமிடங்கள் அவை.. விவரிக்க வார்த்தையில்லை...:(((

தம்பி ஒரு விபத்தில் பெங்களூரில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்தும் மன நிலை குழந்தையாக மாறிப்போனது.. :(


இவ்வலிகள் எப்போதும் எந்த மனநிலை சரியில்லாதவரை பார்க்கும்போதும் என் சகோ வாய் எண்ண வைக்கும்...


ஏற்கனவே காயப்பட்டதால் கண்ணீர் வரவில்லை.. சகோதரர்கள் நியாபகம் மட்டுமே..

குழந்தை அம்மாவை தேடும் ஒவ்வொரு சொல்லும் வயற்றிலிருந்து தொண்டைக்கு கொண்டு வந்து அமிழ்ந்த வலியை விவரிக்க முடியாது...தான்..

ஏனோ கண்ணீர் வருவதில்லை இபோதெல்லாம்..:)

பாலியல் தொழிலாளியை வைத்து மட்டும் இன்னும் எத்தனை தரம் --------------------?...


வலிகளுக்காக பார்க்கலாம் ...முடிந்தால் ஒரு மனநோயாளியையும் சென்று .


இதோ நான் ரசித்த இரண்டு விமர்சனங்கள்..