Friday, September 17, 2010

இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் - பாகம் 2




























தவறான
வழிமுறை மூலம் அடைய நினைக்கும் நான்கு முக்கிய குறிக்கோள்.

முதல் பாகத்தில் சொன்னது போல் நான்கு முக்கிய குணங்களை பற்றி பார்ப்போம் இங்கு..

ஏன்
இந்த நான்கு குணங்களும் ஏற்படுகிறது?.. சமூகத்தில் எத்தனை நேர்மையாக இருந்தாலும் தம் கடமையை சரிவர செய்தாலும் தமக்கு கிடைக்கவேண்டிய மரியாதையோ , அரவணைப்போ ,
அங்கீகாரமோ, தகுதியுள்ள பாராட்டோ சரியான நேரத்தில் கிடைக்காவிட்டால் மனிதன் இத்தகைய குணங்களை வளர்த்துக்கொள்கிறான்.


சில நேரம் நியாயமாக, பல நேரம் நியாயமற்றும்..

நான் இப்படித்தான் .. என் குணம் , வளர்ப்பு இப்படித்தான்.. இருந்தாலும் என்னை கவனிக்கவேண்டும் ..என்ற பிடிவாதமும்..


ஆக எத்தகைய தவறான நடத்தை எந்த குறிக்கோளை அடைய நினைக்கிறது என்பதை சக மனிதர்கள் புரிந்துகொண்டு சரிபார்த்து திருத்திக்கொள்ளவேண்டும்..

இந்த குறிக்கோள்கள் அனேகமாய் சுயபுத்தியோடு வேலைசெய்வதில்லை.. நம்மை அறியாமலேயே இவை உருவாகிவிடுகின்றன.. ஆக இதன் அடிப்படைகளை அராய்ந்து எதனால் இந்த பிரதிபலிப்பு என்பதை புரிந்து அதை தவிர்க்க பழகிக்கலாம்..

நாம் இங்கே திருமண உறவினில் இவை எப்படி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை பார்க்க போகிறோம். ஆனால் இந்த குணங்கள் மனிதர் அனைவருக்குமே ஏன் குழந்தைகளுக்குமே பொருந்தும்..முக்கியமாய் ஹார்மோன் மாற்றத்தினால் அவதியுறும் வாலிப வயதிலும்..


1. கவன ஈர்ப்பு :



தம்பதியினரில்
ஒருவருக்கு
சுய மரியாதை இல்லை எனும் பட்சத்தில் நியாயமாகவும், சுயநலத்தினால் நேர்மையற்றும் , இந்த கவன ஈர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கும்.

நேரடியாக
சொல்லாமல் பாத்திரங்களை சத்தமாக பொடுவதோ, தொலைக்காட்சியை அலற விடுவதோ , தொலைபேசியில் மணிக்கணக்காய் பேசுவதோ,( இப்ப இணையமும் சேர்த்துக்கலாம்)
ஆணாக இருந்தால் புதுசாக குடித்துவிட்டோ புகைத்துவிட்டோ வருவது..,

குழந்தைகளை
திட்டுவது அடிப்பது...
இப்படி சம்பந்தமில்லாமல் கவன ஈர்ப்புகள் இருக்கும்..

தங்களுக்கு
கிடைக்கவேண்டிய அன்பு, அனுசரணை கிடைக்காவிட்டால் இப்படி ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றி தம்மை நியாயப்படுத்த நினைப்பார்கள்..


அலுவலகத்தில்
கூட தாம் கவனிக்கப்படவில்லையென்றால் , சத்தமாக பேசிக்கொண்டோ , கூட்டத்தின் போது பென்சில் பேனாக்களை மேசையில் தட்டிக்கொண்டோ , மேலே போட்டிருக்கும் லைட்டை
வெறித்து பார்த்துக்கொண்டோ , சீரியஸான நேரத்தில் நக்கல் அடித்துக்கொண்டோ , கெட்ட வார்த்தை சொல்லி யாரையாவது திட்டிக்கொண்டோ இருப்பார்கள்...

எந்த
ஒரு நல்ல விஷயத்துக்கும் எதிர்ப்பை காண்பித்தும் அதற்கு ஒரு பிடிவாதமான காரணத்தை சொல்லி நியாயப்படுத்திக்கொண்டு அனைவரையும் எரிச்சலடைய செய்வார்கள்..


எளிதாக
சொல்ல போனால் திசை திருப்பியாவது காரியம் சாதிக்க நினைக்கும் எண்ணம்..

அது
தோல்வியில் முடிந்தாலும் அதனால் பலர் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு கவலையேதுமில்லை..
ஏனெனில் என்னை கவனிக்கவில்லை... எனக்குண்டான மரியாதை கிடைக்கவில்லை.. ஆக இது மட்டுமே என் வழி என்ற தவறான குறிக்கோள்..

சரி
இந்த தொல்லையிலிருந்து விடுபட எண்ணி கவனிச்சுத்தான் தொலைப்போமே னு அவர்கள் பிடிவாதத்துக்கு செவிசாய்த்தால் ,
" ஆஹா நாம் நினைத்தது சரிதான்.. இதே அடாவடியை தொடர்ந்தால் நமக்கு வெற்றி நிச்சயம் என்றெண்ணி இந்த எதிர்மறை குறிக்கோளோடே வாழ்க்கையை தொடருவதோடு அதே போல நட்புகளையும் இணைத்து கொள்வர்..

அதனால்
இது போன்ற எதிர்மறை குறிக்கோள்களுக்கு ஒருபோதும் செவிசாய்க்காமல் , ஆனால் அதே நேரம் அந்த நபர் செய்யும் நல்ல விஷயங்களை பாராட்டி ஊக்குவித்தால் ,
" நாம் என்னதான் கத்தினாலும் கதறினாலும் நம் பிடிவாதத்தை யாரும் கண்டுகொள்ளவில்லையே , ஆனா நல்ல விஷயத்தை பாராட்டினாங்களே " என்றெண்ணி மெதுவாக நியாயமான கவன ஈர்ப்புக்கான வழிமுறைகளை மட்டுமே பின்பற்ற ஆரம்பிப்பார்..

குழந்தைகளின் பிடிவாதமும் இதேதான்.. அடம்பிடித்து காரியம் சாதிக்கும் குழந்தை ஒருபோதும் வளராது மனதளவில்..

தனக்கு
வேண்டிய நகையோ புடவையோ கேட்டு பிடிவாதம் செய்யும் பெண்கள்...,
இல்லறத்தில் நினைத்த நேரம் இன்பமடைய முடியா ஆண்கள் , கட்டுப்பாடு போடும் பெண்களிடம், இத்தகைய கவன ஈர்ப்பு போராட்டம் நடக்கும்...

என்னால் விலையுயர்ந்த நகை வாங்கி தர முடியாது .. என்னிடம் போதிய வருமானமில்லை.. அல்லது நகையில் போடுவதைவிட வேறு உபயோகமான வழியில் சேமிக்க எண்ணுகிறேன்...ஆக அதற்காக நீ கோபித்துக்கொண்டு என்னை கவனிக்காவிட்டால் வேறு வழியில்லை நான் பொறுத்துத்தான் போகவேண்டும் என்ற பிரச்னையை விளைக்கி நம்மை விட்டுகொடுத்தல் ஒரு தீர்வு..


அதைவிடுத்து
சரி சரி இப்படி முகத்தை தூக்கி வைக்காதே வாங்கி தொலை னு வாங்கி கொடுத்தால் இது அடுத்த முறையும் வழக்கம்போல தொடரும்..


அதே
போல நண்பர்களோடு பார்ட்டிக்கு போக அனுமதிக்காவிட்டால் முகம் தூக்கும் கணவருக்கும் பரிதாபப்பட்டு அனுமதித்தால் அதுவே தொடரும்...
அதைவிட , " நீங்க என்னிடம் பேசாவிட்டாலும் சரி.. இந்த பழக்கம் நம் குடும்பத்துக்கும் , குழந்தைகளுக்கும் நல்லதல்ல என நான் நினைக்கிறேன்... அதனால் இந்த வலியை ஏற்றுக்கொள்கிறேன் .. இருப்பினும் எப்பவும் போல் என் கடமையை நான் தொடர்ந்து செய்வேன் " என மிக உறுதியோடு நிற்கணும் இத்தகைய கவன ஈர்ப்பு குறிக்கோளுக்கு எதிராக...

ஆரம்பத்தில்
பொறுமை இருக்காது.. நாம் செய்வது தவறோ என்ற பயம் கூட வரலாம்..
ஆனால் மிக மிக உறுதியோடு இருந்தால் , " அட , இங்க வேலைக்காகாது போலயே " னு வழிக்கு வந்தே ஆகணும் துணை என்றாலும், குழந்தை என்றாலும் வாலிபம் என்றாலும்...

இந்த குணத்தை குடும்பத்தில் திருத்துவது குடும்பத்துக்கு மட்டும் நல்லது என நினைக்காதீர்கள்... ஒட்டு மொத்த சமூகத்துக்கே நீங்கள் நல்லது செய்கின்றீர்கள்...

இதிலும் வெற்றி காண முடியாதவர்கள் என்ன செய்வார்கள்?.. அதிகாரத்தை தாமே எடுத்துக்கொள்வார்கள்.. ஆனால் தோல்வியை ஒத்துக்கொள்ளமாட்டார்கள்..


அடுத்த தொடரில் அடுத்த இரண்டாவது குணமான " அதிகாரத்தை கையிலெடுத்து ஆட்டிவிப்பது " குறித்து பார்ப்போம்...

தொடரும்...........