Saturday, June 5, 2010

பதிவுலக பந்து இப்ப பொதுஜனம் கையில்....





நர்சிம் , கார்க்கி செய்தது மிகப்பெரிய தவறே.. ஆனால் மனமாற மன்னிப்பு
கோரியுள்ளனர்..

அதை துச்சமென மதித்த சந்தனமுல்லை , தோற்று போக தயாராகிவிட்டார்..:(


தன் கையில் பந்து கிடைத்ததும் தாறுமாறாக விளையாட ஆரம்பித்துள்ளார் , சில கெட்டவர்களின் , கொலைகார எண்ணம் கொண்டவர்களோடு..( பின்னூட்டம் பார்த்தவருக்கு புரியும்..)

கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து ஒரு உன்னதமான காரியம் செய்திருக்கலாம்..தன்
மதிப்பை பன்மடங்கு அவர் உயர்த்தியிருக்கலாம்..

பதிவுலகமே அவருக்காக பரிதாபப்பட்டது. நர்சிம் மை எதிர்த்தது..

இப்ப நிலைமை தலைகீழாக மாறும்..


மனதார மன்னிப்பு கேட்ட நர்சிம்மை மன்னிக்க மெஜாரட்டி பதிவுலகத்தினர்
தயாராகவே உள்ளனர்..

பதிவுலகம் என்பது சந்தனமுல்லையும் வினவும் மட்டுமல்ல என்பதை புரிந்துகொள்ளணும்..


பெண்ணியம் போற்ற மனிதநேயத்தை கீழே போட்டு மிதித்துவிட்டார்கள்..

ஒரே நாளில் பிரபலாமானவர் பிரபலத்தை தக்க வைத்துக்கொள்ள தவறான வழியை தேர்ந்தெடுக்கிறார்.. அவருக்கு தூபம் போடுபவர்கள் எத்தனை நாட்கள் அவரோடு இருக்காங்கன்னு புரிந்துவிடும்....:)

கண்டிப்பா மற்றோரு பெண்ணுக்கு இதே பிரச்னை வந்தாலும் வினவின் பக்கம்
தலைஎன்ன கால் வைத்து கூட படுக்க மாட்டார்கள்..

கொலைகாரன் ஒருவனுக்கு தண்டனை கொடுத்துவிட்டால் உலகில் கொலைகளே இல்லாமல்
செய்துவிடலாம் என்கிற இவர்களின் கண்டுபிடிப்பை என்ன சொல்ல?.. குழந்தைத்தனம் என்றா?,,.:)

பெண் என்பவள் முதலில் மனுஷி . மனிதநேயம் , தாய்மை உணர்வு கொண்டவள்..
பழிவாங்க துடிப்பவள் அல்ல..

உன் நண்பரை சொல் உன்னை சொல்கிறேன் என்பது சந்தனமுல்லை க்கு மிக பொருத்தம்..


படகு என நினைத்து முதலையின் முதுகில் பயணம் செய்ய நினைப்பதை என்ன சொல்ல..?????????


முகில் கடிதம் கண்டு அற்புதமான , கண்ணியமான கணவர் என போற்றிய எழுத்துகள்
, சாரி சந்தனமுல்லை உங்களுக்கு எழுத முடியவில்லை..

உங்க பழிவாங்கும் எண்ணம் என்ன முடிவை தரப்போகிறது என பொருந்திருந்து பார்ப்போம் ..


அரசியலில் கூட மன்னிப்பும் மறப்பும் அதிகமா இருக்கும்போது !!!!!!!!!!!

சந்தனமுல்லை இதுவரை வாசனை. இனி..????????

வருந்துகிறேன்... நர்சிம் ஐ / கார்க்கி யை அழைத்து நேரில் ஏன் இப்படி செய்தீர்கள் என ஒரு வார்த்தை அன்போடு கேட்டிருந்தாலே அவர்கள் ஒடிந்து போய் அழ வைத்திருக்க முடியும்..

அன்பால் கையாள வேண்டியதை அறிவாளால் கையாளப்போகிறீர்கள் கவனம் . உங்களை
பதம் பார்த்துவிடப்போகிறது...

பிரச்னைகளை தீர்ப்பதில் மிக தவறான வழியை தேர்ந்தெடுத்து தோற்றுபோக
தயாராகிவிட்டீர்கள்...

தமிழமுத குழுமத்தில் என்னை நேராகவே வேசி என்றும் தாய்லாந்தில் தொழில்
நடத்துபவள் , உனக்கு நல்ல மரணமே கிடையாது என்றும் சபித்தவர் பகலவன் என்ற நண்பர்.. அவரை மட்டுறுத்தி வெளியேற்ற மட்டுமே செய்தோம்.. எந்த நடவடிக்கையும் எடுக்காமல்..

பின்னர் அவராகவே புரிந்துகொண்டு ஒரு மாதம் கழித்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டார்...

எல்லாரையும் திருத்த முடியாது திருத்த புறப்பட்டால் வேலைக்காவாது..

சிலர் சொன்னால் திருந்துவார். சிலர் உணர்ந்து திருந்துவார்..

மற்றொன்று எனக்கு வேசி , ஸ்த்ரீ லோகர் என்பவர்கள் கெட்டவர்கள் என்ற
எண்ணத்தையெல்லாம் தாண்டியவள் நான்..

அவர்களை சமமாகவே எண்ணுகிறேன்..


அதனால் என்னை வேசி என்பதால் நான் வேசியாகிடப்போவதுமில்லை.. தெய்வம்
என்பதால் நான் கடவுளாகப்போவதுமில்லை... :)

இங்கு தினந்தோறும் வேசி என நீங்கள் சொல்லும் தொழிலாளிகளை புன்னகையோடே
கடந்து செல்கிறேன் .. கூடவே பயணிக்கிறார்கள்.. என் குழந்தைகளிடம் ஆசையாக பேசுகிறார்கள் பொது இடங்களில்...அதே போல திருநங்கைகளும் .. வித்யாசம் ஏதுமின்றி..

நம் நாட்டு மக்கள் அப்படியான பார்வையை எப்போது விசாலப்படுத்துவோம்.?


சர்ச் மூலம் சிறைச்சாலையிலுள்ளவர்களையும் பாலியல் தொழிலாளிகளையும்
சந்திக்கிறோம்..மனிதர்களாகவே பார்க்க முடியுதே தவிர குற்றவாளிகளாய் அல்ல... அவர்கள் மாட்டிக்கொண்டவர்கள்/ உணர்ச்சிவசப்பட்ட முட்டாள்கள் அவ்வளவே...

நாட்டில் நல்ல மனிதராய் வேடமிடுபவர்களிடம்தான் கவனமாய் இருக்கவேண்டிய
காலகட்டத்தில் இருக்கிறோம் நாம்...

மன்னிப்பு கேட்டபின்னும் பழிவாங்க துடிப்பது செத்த பாம்பை அடிப்பதற்கு சமம்..
அதில் வீரமோ விவேகமோ இல்லை..காயங்களும் வலிகளும் மட்டுமே மிஞ்சும்...

தண்டனைகள் மட்டுமே மனிதர்களை திருத்துமென்றால் உலகமே ஊனமாயிருக்கும்..


புரட்சி என்றாலே வெறுப்பாயுள்ளது..:(


இத்தனைக்கும் நான் சந்தனமுல்லையின் பப்புவை பற்றிய பதிவுகளை ஆசையாக படிப்பேன். நானும் ஒரு குழந்தைப்பையித்தியம் என்பதால்..

நர்சிம் கார்க்கி எனக்கு அறிமுகமே இல்லாதவர்கள்..


-------- தொடரும்.... தொடரலாம் கண்ணியமாக மட்டுமே....பிரச்னைக்குரிய பதில்கள் பிரசுரிக்கப்படமாட்டாது...