Showing posts with label பாலியல் வன்முறை. Show all posts
Showing posts with label பாலியல் வன்முறை. Show all posts

Saturday, April 2, 2011

நடிகையும் ஒரு பெண் என மதிப்போம்..






நான் சமீபத்தில் படித்த கமெண்ட் சில எனக்கு ஏற்படுத்திய எரிச்சலை வலியோடு பகிர்ந்துகொள்கிறேன்..

யார் எழுதியது என்பது நமக்கு தேவையில்லை.. தெரியாமலே இவை பழக்கப்படுத்தியிருக்கலாம்.. இது தவறு என சொல்வதும் நம் கடமை அவ்வளவே.. கமெண்ட் நாலு பேர் கூட சேர்ந்து அடிக்கும்போது சுகமாத்தான் இருக்கும்.. ஆனால் அது நம் வீட்டு பெண்ணா இருந்தால் அடிப்போமா என எண்ணிப்பார்ப்போம்..

-------------------------

வடிவேலு அம்பிகாவை வச்சிருந்த கதையெல்லாம் மேடையில் நாறுமோ? :-)

அம்பிகா கதை மட்டும் இல்லை... ஷ்ரேயா கதை எல்லாம் கூட வெளி வரும்.

மதுரைக்குத் தி.மு.க. அனுப்பிவைத்த பிரசார பீரங்கி குஷ்பு!

XXXX : சிங்கிள் பேரலா மல்ட்டி பேரலா?...

அடுத்து கனிமொழியையும் ராசாவையும் இணைத்து..

அப்புரம் குஷ்பூவின் பழைய நீச்சலுடை படம் போட்டு அவரை இழிவுபடுத்துதல்..

ஜெயா அம்மையாரையும் நடிகை என்ற பார்வையில் அசிங்கப்படுத்துவது..

--------------------------------------------------

என்ன ஒரு ஆர்வம்??...இவர்களுக்கெல்லாம்.?..அப்பப்பா.. ஒரு நொடி அந்த பெண்களை நம் வீட்டு பெண்களாய் எண்ணியிருந்தால்..?..

அடுத்தவர் அந்தரங்கத்தை பொதுவில் அலச ஆர்வமுள்ளவர்கள் அதே ஒழுக்கமற்றவர்களாய் இருப்பார்கள்..

இது ஒரு கீழ்த்தரமான உத்தி..

நன்றாக நியாபகம் வைத்துக்கொள்வோம் , நாம் எல்லோரும் அதே சூழலில் , முக்கியமா நம் வீட்டு பெண்களும் அதே சூழலில் இருந்தால் அதையே செய்திருப்போம் என நினைவில் கொள்ளுவோம்..

( நாளை நம் வீட்டு குழந்தையும் இதே போல செய்ய மாட்டார் என எத்தனை பேர் நிச்சயமா சொல்வீர்கள்..?. எதுவும் நடக்கும்.. யார் கையிலும் இல்லை .)

அம்பிகாவை தொடர்பு படுத்தி அசிங்கப்படுத்தவேண்டி
யதன் நோக்கம்.?

நடிகை என்றால் என்னவேணா பேசலாம்னா பேசுபவர் அப்படியானவரே என்னைப்பொறுத்தவரையில்..

இதுக்கு பலத்த எதிர்ப்போ, கும்மியோ, கண்டனமோ தெரிவித்தாலும் இதுவே என் பதில்..

பாலியல் தொழிலை விட இப்படியான பேச்சுகள்தான் சமூகத்தின் முக்கியமான சீர்கேடு . இப்படி பேசுபவர்களை விட பாலியல் தொழிலாளிகளும், நடிகைகளும் உயர்ந்தவர்கள் என்னைப்பொறுத்தவரையில்..


யாரும் திருந்தணும்னு கட்டாயப்படுத்தல்.. ஆனால் இதுதான் என் கருத்து..

அரசை , ஊழலை , விமர்சிக்கணும்தான். மக்களுக்கு அவர்கள் தவறை வெளிச்சம் போட்டும் காண்பிக்கணும்தான்.. ஆனால் இதுவல்ல வழி.. அவர்களுக்கும் நமக்கும் வித்யாசமே இல்லை..உடனே மாற்றம் வர , கோபம் வர வழி தேடாமல் நிரந்தரமாக நம் நாடும் சமூகம் நல்லதொரு சூழல் அமைக்க பாடுபடலாம்.. எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதை விட்டு.. அது நீண்ட கால பயனளிக்காது. ..



எது சரி எது தவறு என்று கூட தெரியாத அளவுக்கு தமிழர்கள் சிலர் , பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட பெண்களை, முக்கியமா நடிகைகளை , அவர்களின் அந்தரங்கங்களை பொதுவெளியில் அலசுவது மிக சர்வ சாதாரணமாக போய்விட்டது..ஆனா அதே பெண்களிடம் ஆட்டோகிராப் வாங்கவோ , குத்துவிளக்கு ஏற்றவோ க்யூவிலும் நிற்போம்..புகைப்படம் எடுப்போம்.

அதுமட்டுமா அந்த நடிகையின் படத்தை போட்டு ஹிட்ஸ் சேர்ப்போம். ஓட்டு பிச்சை எடுப்போம்.. ஏன்னா நாம நல்லவர்கள்....

அதெப்படி வெளிநாடு வாழ் தமிழர்கள் கூட வெளிநாட்டில் பெண்கள் எவ்வாறு மதிக்கப்படுகின்றனர் என பார்த்தபின்பும் , தனிமனித உரிமைகள் அதற்கான சட்டங்கள் பற்றி அறிந்த பின்னும் , தமிழரோடான பேச்சில் தம்மை மறந்து , அந்தரங்க அலசலில் இத்தனை ஆர்வம் காட்டுகின்றனர்..?

அருவருப்பா இருக்கு.. :((((((((..

இவர்களெல்லாம் நாட்டை திருத்த போறாய்ங்களாம்.. போங்க போங்க போய் மொதல்ல உங்களை நீங்க திருத்திக்கோங்க.. அப்புரம் நாட்ட திருத்த வாங்க..


திருந்தவே மாட்டாங்க சில ஆணாதிக்கவாதிகள் , தன் வீட்டு கதவை அந்த பிரச்னை தட்டும் வரை.. திருந்தவாவது , சீக்கிரம் அதே சூழல் அவரவர் குடும்பத்தில் வரட்டும் என மட்டும் வாழ்த்துவோம்..:)

உடனே கேட்கத்தோணும், உங்க வாரிசுகளுக்கு வந்தால் பரவாயில்லையா?..

நிச்சயமாக .. ஏனெனில் நான் பாலியல் தொழிலாளிகளின் வாழ்வு மேம்படத்தப்படணும் என பல வருடம் முன்பே பேச ஆரம்பிச்சாச்சு..

1. அத்தொழில் முற்றிலுமாக ஒழிக்கப்படணும்.

2. முடியாத பட்சத்தில் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து கெளரவமாக நடத்தப்படணும்...

ஏன்னா, உலகிலேயே மிகவும் பரிதாபத்துக்குறிய , மனமும் உடலும் தினம் செத்து பிழைக்கும் தொழில் அது..

ஒன்ணு அவர்கள் வலியை உணரணும்.. அல்லது தம் வாரிசுகள் அதை அனுபவிப்பதன் மூலமே அறியணும்.. இது எனக்கும் பொருந்தும்..


( இதுக்கு ஒரு 100 பேராவது ( ஆணாதிக்கவியாதிகள் ) எதிரியாகணும் எனக்கு .. ).

நடிகைக்கும், பாலியல் தொழிலாளிக்கும் , அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கு.. ஒன்றுமேயறியாத அக்குழந்தைகளை பலிகடா ஆக்கி மன உளைச்சல் தரும் மன நோயாளிகளே அந்தப்பாவம் உங்கள் வாரிசுக்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்..

அப்படி பேசுபவர்களுக்கு ஆதரவு தந்து அக்குற்றத்தை வளர்க்க உதவாதீர்கள்...தவறு என துணிவாக எடுத்து சொல்ல தயங்காதீர்கள்..


தேர்தல் நேரமென்பதால் எப்படியாவது அடுத்தவரை இழிவுபடுத்தியே தான் பெரியவனாக காண்பித்துக்கொள்ள கட்சியினர் தான் அடித்துக்கொள்கின்றனர் என்றால் பதிவுலகிலும் ..



இது வளர்ச்சி அல்ல வீழ்ச்சி நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம் என்பதற்கான சான்று ..


படம் : நன்றி கூகுள்..


.

Wednesday, March 2, 2011

கள்ளன் பெரிசா காப்பான் பெரிசா?.:






சினிமாக்களில் அன்றிலிருந்து இன்றுவரை பெண்ணை வன்புணர்ச்சி செய்தாலோ , அவளை கள்ளத்தனமாக ஓட்டை வழியாக அவள் உடம்பை பார்த்துவிட்டால்லோ ஏனோ குடியே முழுகியதுபோல் வெட்கி , தலை குனிந்து , அவமானப்பட்டு ,விரக்தியடைந்து , மனநோய் வந்து ,பித்து பிடித்து , உண்ணாமல் உறங்காமல் , இறுதியில் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்வதாக காட்டுவது ஏன்.?..


அதற்கப்புரமே வீரம் வந்து பழிவாங்கி , எதிரியும் செத்து , தானும் செத்து சுண்ணாம்பு ஆவதுதான் கதை..


இது இன்று யுத்தம் செய் வரையிலுமே..


தன்னை ஒருவன் தவறாக பார்க்கிறான் என்றால் அந்த இடத்திலேயே அவனை எதிர்கொள்ள பழக்காமல் தடுப்பது எது?.


நம் ஊர்களில் , ஆறு , குளத்தில் குளித்து விட்டு அப்படியே அதே ஈரத்துணியோடு நடந்து செல்வார்கள் குடும்பப்பெண்கள்.. எத்தனை பேர் தப்பா பார்த்தார்கள்..அப்படி பார்த்தவர்களையும் , ஏதோ கெட்ட வார்த்தை போட்டு திட்டிவிட்டு சபித்துவிட்டு செல்வார்கள்.. எங்கே இருந்து வந்தது அந்த துணிவு..?..


பெண் உடம்புக்கு மட்டும் கற்பு என்ற ஒரு அபத்தமான விலை வைத்ததன் விளைவா இது.?


சட்டத்தை நம் கையில் எடுக்க வேண்டியதுதான் சில நேரம்.. ஆனால் எல்லாமே காத்திருந்து வன்முறையாகவும் கொலையாகவும் இருக்கவேண்டியதில்லை..


நிர்வாணப்படுத்திவிட்டான் என்றதும் தற்கொலை செய்யவேண்டியதுமில்லை என்று சொல்லி வளருங்கள் குழந்தைகளை.. என்னடா செய்த, ஏன் பார்த்த, என தெருவுக்கு இழுத்து வந்து தர்ம அடி வாங்கித்தர பழகுங்கள்.. சமூகம் என்ன சொல்லுமோ , பெண் பிள்ளைக்கு வரன் அமையாதே என்ற முட்டாள்தனமான கவலையை ஒதுக்கினால் மட்டுமே நம் சமூகம் முன்னேறும்.. இப்படி தினமும் ஒரு பெண்ணாவது நிமிர்ந்து நின்றாள் என்ற செய்தி வந்தால் தன்னாலேயே மாற்றம் வரும்..




அதைவிட்டுவிட்டு , ரூமுக்குள் போய் குமுறி குமுறி அழுதுவிட்டு உடனே யாரையோ பழிவாங்குவதாய் நினைத்து செத்து தொலைய சொல்லி படம் எடுக்காதீர்கள்.. தயவுசெய்து அப்படியான கோழைப்படங்களை உங்க குழந்தைகளுக்கு காண்பிக்கவும் செய்யாதீர்கள்.. ,


என் வீட்டில் காமிரா வை னு சொன்னதையே ஆணாதிக்கவாதிகள் எப்படியெல்லாம் திரித்து பேசி தன் வக்கிர உணர்ச்சிகளுக்கு பசியாற்றினார்கள்.. இன்னும் அதை பேசி பேசி இன்பம் காண்கிறார்கள்..

ஆனால் இவர்கள் மறந்தது இவர்கள் வீட்டு பெண்ணையே இவர்கள் வன்புணர்கிறார்கள் என்பதுதான்...சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படியான வக்கிர புத்தியுடையவர்கள் அதையும் கண்டிப்பாக செய்வார்கள்..


சபலம் தட்டுவது போல உடை உடுத்தக்கூடாதுதான்.. ஆனால் நம்மூர் பெண்கள் ( நம் , அம்மா, நம் அத்தை , சித்தி , அண்ணி , அக்கா ) ஆற்றில் குளித்துவிட்டு உடம்பை ஒட்டிய ஆடையோடு அரைகுறையோடு எத்தனை துணிவோடு நடந்துவந்தார்கள்.. இன்றும் நடந்து வருகிறார்கள் என்பதை நினைவு கொள்வோம்.. கிராமத்து பெண்களுக்கு இருக்கும் துணிவுகூடவா நகரத்து பெண்களுக்கு இல்லை..?????


டெலிவரி பார்க்கும் ஆண் மருத்துவரை நம்பி திருமணமான பெண்களே உடலை தயங்காமல் சிகிச்சைக்கு ஒப்படைக்கும் காலமிது.. எனக்கு டெலிவரி இரண்டு முறை பார்த்ததும் ஆண் மருத்துவர்தான்..


ஒவ்வொருமுறையும் நாம் பாதுகாத்துக்கொண்டே இருந்தாலும் கள்ளன் நிப்பாட்ட போவதில்லை.. காப்பான் எப்பவும் கடைசியில்தான் வரமுடியும்.. அதனால் அப்பப்போ , அங்கங்கே எதிர்கொள்ள செய்யுங்கள்..


இவர்களை விட முக்கிய எதிரி, ஆபாத்தானவர்கள் நம்மை சுற்றியிருப்பவர்கள் சிலர்... அவர்களை சமாளிப்பதுதான் பெரிய விஷயம் பலருக்கு.. நாகரீகமற்று இது குறித்து வருத்தத்தோடு பேசுவது போல் நாடகமாடி தகவல் கறந்து பரப்பும் வேலை செய்பவர்கள்.. இப்படியானவர்களை மொத்தமாக வாழ்விலிருந்தே தவிர்த்திடணும்..


சம்பவம் குறித்து பேச வந்தாலே முகத்தில் அடித்தாற்போல் , "வேற பேசலாமா .?" என சொல்லிடுங்கள்.. எப்படியும் கெடுதல் எண்ணமுடையவர்கள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க போவதில்லை.. வம்பழத்து குதூகலிக்கும் கூட்டமாய் சேர்ந்து.. தூசியென பலரை அற்பர்கள் என துணிவோடு ஒதுக்கினால் மட்டுமே நல்லவர்களை நாம் காண முடியும்..நல்ல பக்குவமடைந்தவர் பலர் இருக்கின்றனர் . பயம் வேண்டியதேயில்லை..

நல்லவர்கள் பலர் அமைதியாக இருப்பதால் கெட்டவர்களின் ஆட்டம் பெரிதாக தெரிகிறது சமூகத்தில்.. அவர்களின் பெரும்பான்மை குறித்து எவ்வித அச்சமும் தேவையேயில்லை..

எல்லாரும் வாழத்தான் வாழ்க்கை இங்கே என்பதை புரிந்துகொண்டு சொல்லிக்கொடுங்கள்.. உதவிக்காக காத்திருப்பதைவிட , உதவ முன்வருவதை பழக்கிடுங்கள்.. எங்கே தப்பு நடந்தாலும் தட்டிக்கேட்க துணிவு தாருங்கள்..


அதற்கு பலனாக ஆபாச வார்த்தைகள் என நினைத்து , விபச்சாரி , ( இன்னும் பல கெட்ட வார்த்தைகள் தெரியவில்லை ) , என பல பட்டம் தருவார்கள்தான். அவற்றையெல்லாம் ஒரு புன்னகையோடு கடந்து சென்று அவ்வார்த்தைகளின் மதிப்பிழக்க செய்திடுங்கள்.. ஏனெனில் பாலியல் தொழிலாளியும் மனிதர்தான் என்று மனிதாபிமானத்தை பழக்காதவருக்கே , ஆணாதிக்கவாதிகளுக்கே அவை ஆபாசமாகத்தெரியும்..


*உடலிலல்ல கற்பு.. எண்ணங்களில் இருக்கு ." .. துணிவை கொடுப்போம் பெண்ணுக்கு..

( மகளிர் தினத்துக்கான பதிவு. )

( இன்றும் 8 வயது குழந்தை அனுசூயா கோவையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.. ஆழ்ந்த அனுதாபங்களும் , கண்டனங்களும்.. ஆபாச பதிவும் , எழுத்தும் செய்யும் வீரர்கள் ,ஊடகங்கள் , சினிமாக்கள் , சரோஜாதேவி புத்தகத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் , தொடர்ந்து நடத்துங்கள் உங்க சேவையை , உங்க வீட்டு கதவுகளை தட்டும் வரையிலும் .. இது ஒரு பக்கமிருக்க , ஆபாச பதிவர்களை பல ஆண் பதிவர்கள் துணிவாக எதிர்க்க முன்வந்திருப்பது மகிழ்வான விஷயம்.. வாழ்த்துகள்.. )


[ என் கணினியிலும், தொலைபேசியிலும், மிரட்டலும் , தொந்தரவும் வருகிறது.. பின்னூட்டங்களையும் மாற்றுகின்றனர்.. எனக்கு மரணத்தையே தந்தாலும் என் மனதின் எண்ணங்களை ஒருபோதும் மாற்ற முடியாது என்பதை புரிவீரா?..தொடரும் என் கருத்துகள்..நிலைபெற்றும் நிற்கும்.. சமூகத்தில் மாற்றம் கொண்டு வர முன்பைவிட அதிக துணிவை தருவதற்கு நன்றிகளும்.. எதிரிகள் யாரென்று தனியா சொல்லவேண்டியதில்லைதானே?..:)) ]



படம் : நன்றி கூகுள்..




.

Friday, February 4, 2011

மாற்றம் கொண்டுவர காத்திருப்பேன் தோழி..!


கோபத்தை குறைக்க வேண்டிக்கொண்டாய் பிரியமானவளே..

அன்பாகவும் மென்மையாகவும் மட்டுமே எனைப்பார்த்துவந்த என் தோழி.

எனைப்பற்றிய கவலை , என் நலம் மீதான அக்கறை உனக்கு .

கோபம் என்பதே அதிகமான அன்பினால்தான் என புரிவதில்லை உனக்கு.

முகத்தில் உமிழ சொன்ன ஆண்,.நம் பாரதி.. அது கோபமா தோழி?.

அன்பாலே சாதிக்க முடியாதா என்கிறாய்..அன்பானவளே..

அலுத்து தோற்றுவிட்டேன் , பொறுமைக்கிங்கே மதிப்பில்லையே தோழி..

என் வாழ்வு நிறைவாய் முடிந்ததென எப்போது புரிவாய் என் தேவதையே?.

சமூகத்தில் புறையோடிக்கிடக்கும் அழுக்குகளுக்கு அன்பெனும் ஆயுதம்

காலாவதியானதை சீக்கிரம் விளங்கிக்கொள்வாயா?.

கோபம்,அல்லது கோபம் கொள்வதான நடிப்பு மட்டுமே எடுபடுமிங்கே.

மனதைக்கொலை செய்யும் கொலைகார கும்பலிடமிருந்து..

வன்முறையை தடுக்க வன்முறையே தேவை என்ற சாபக்கேடு அறிவாயா?.

யாரையவது பலிகொடுத்தே பல பலிகளை தடுக்க வேண்டிய காலகட்டாயம்..

நேற்றொரு திவ்யா..நாளை யாரோ..!!!!. அன்பெங்கே ???




சாதி , மதம், இனம் , மொழி கடந்து மனித நேயம் வளர தேவை அன்பு.

ஆனால் அதை வளர்க்க தேவை கோபம்.. முரணாயிருக்கிறதா?..

ஆன்மீகம் என்பது அன்பு பாதை மட்டுமல்ல தோழி..

சுயம் அறிவது மட்டுமல்ல , சுற்றுமுற்றும் அறிவதுமே அறிவு என் அன்புத்தோழி..

நச்சு நாகம் வந்து குழந்தைகளை , நல்லவர்களை

நயவஞ்சகமாய் தீண்டும் போது நாதம் கேட்க சொல்வாயோ தோழி?.




நீரின் ஓட்டத்திலேயே பிணமாய் செல்ல நீயே போதும்.. நானல்ல , நாணல்.

அன்பால் என்னை கட்டிப்போட எண்ணாதே.. கோபப்படவிடு..கோபப்பட்டுவிடு

சட்டத்தின் கதவுகளையும் சத்தம் போட்டே தட்டவேண்டியுள்ளதிங்கே..

அமைதிகாக்க அமைதிக்கு விலங்கிடும் சூழலிங்கே..அதுமட்டுமே சாந்தியிங்கே..

கண்முன்னே நடப்பதை கண்டுகொள்ளாமல் ,பதைக்காமல்

கண்மூடி ,கண்ணீரோடு தியானம் செய்யமுடிகிறதா தோழி..?.






நிறைய நேசம் இழந்தாய், எதிரிகளை சம்பாதிக்கணுமா என்கிறாய்..

ஆம், நிஜம் தோழி.. இழந்தது நேசத்தையல்ல.. போலிகளை..

பெற்றது எதிரிகளை அல்ல.. நியாயங்களை..வளரட்டும் எதிரிகள்..

வீசப்பட்டது வீண் விமர்சனங்களல்ல. வீரத்தழும்புகள் அவை.

வலிக்கவில்லை தோழி.. வலிமையே கூடியது..உன் வருத்தேமே என் வலி.

நாளை மரணிக்கவேண்டியிருப்பின் திருப்தியாக இருக்கணும் என்/நம் பயணம் .

தனிப்பட்ட இன்ப துன்பம் ஏகத்துக்கும் அனுபவித்த மகிழ்ச்சி மட்டுமல்ல ,

குரல்கொடுக்க முடிந்த மகிழ்ச்சியும் இதில் அடங்கணும்..

எனக்கான உன் வருத்தம் , உன் அன்பு என்னை தடுக்கக்கூடும்,

துணிவை குறைக்கும் , நான் தோற்கக்கூடும் , ஆகையால் தள்ளியே நில் தோழி..

என்னோடு வந்து இதில் நீயும் கைகோர்க்கும் நாளே

எனக்கு , இல்லையில்லை, நமக்கு வெற்றி., பலம் ..

அன்பொழுக பேசி ஆதாயம் தேடுவோர் பலரிருக்கட்டும்.

அழிக்கவேண்டிய ஊழல்,பேதம்,அடிமைத்தனத்தில் நம் கவனம் இருக்கட்டும்.

அன்பாய் பேசி ஆட்டுக்குட்டிகளாய் மாற்றி பின்னால் வரச்செய்யும்

அருமை வித்தை அறிவேன் தோழி , ஆனால் அதுவா நம் தேவை..?

நாம் தூங்க யாரோ எவரோ எங்கோ விழித்திருக்க , நம் சந்ததி

நாளை நிம்மதியடைய சில நேரம் நாமும் விழிப்போமே தோழி...

கைகோர்ப்பாயா தோழி ?..காத்திருப்பேன் விடியல்வரை..உன் அன்போடிங்கே







திவ்யாவின் தற்கொலைக்கு காரணமான அந்த ஆசிரியர்களுக்கும் இந்த ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுத்த இந்த சமூகத்துக்கும் என் கடுமையான கண்டனங்கள்..




படம் : நன்றி கூகுள்...

Friday, January 28, 2011

ட்விட்டரில் நடக்கும் போராட்டம்!!!!!#tnfisherman






மீனவர் கொலைகளுக்கு எதிராக ட்விட்டரில் நடக்கும் போராட்டத்தின் முக்கிய தளம் http://www.savetnfisherman.org/

ட்விட்டரில் நுழைந்து #tnfisherman என்ற டேக் ஐ இணைத்திடுங்கள் அல்லது #tnfisherman #indianfisherman #worldfisherman என்றும் இணைக்கலாம்..

என் டிவீட்ஸ் சில சாம்பிளுக்கு..

Peace in Tamilnadu = Peace in Indian subcontinent (India, Pakistan, Bangladesh, SriLanka),

maryshan
We want selfless leaders who dont have dire desire to kill their own people for power & money.

maryshan
Decentralize the power to the grass root i.e to Tamilnadu. to save Tamil fishermen..

maryshan
We lived as a nation so long, bcos of ahimsa , adaptability and accepting nature of the Indian.





solution need not be brought through violence but by using your minds to think.PM, CM..

maryshan
solution need not be brought through violence but by using your minds to think.PM, CM..

maryshan
There is solution for every problem and we dont want that solution brought through violence

maryshan
Was south & north more united when the British ruled us.?STOP THE KILLING!

maryshan
Are fishermen a minority dear CM.?STOP THE KILLING!



»
People from many religions , but who is the God here?.. money ?. power?.STOP THE KILLING!

maryshan
மானாட மயிலாட . அங்கே உயிரோடு ஊசலாட. நேவிக்காரன் விளையாட.. கண்டும் நாடகமாட..STOP THE KILLING!

»

maryshan
Its a scar , ever dying scar about our own country PM ji..STOP THE KILLING!

maryshan
Vital thing is the SAFETY dear Mr.PM..

maryshan
Vital thingsare education for all, reducing the infant mortality rate, stop female foeticide,?


maryshan
Developing nation of 1 billion?..in what ways?.STOP THE KILLING!


maryshan
leaders cherishing & celebrating power ?..STOP THE KILLING!

So many cultures, so many languages. but humanity ??? from leaders ?..STOP THE KILLING!

» maryshan
Reminds me of Telengana & the leaders going for hunger strike there..STOP THE KILLING!
maryshan
We want our kacha theevu back..only to protect ourselves..STOP THE KILLING!

»

maryshan
Dont the SL Navy has a son /daughter like me dad?.." Our CM, PM also have My dear son."

maryshan
Dad when will u come back ?. " only if SL Navy leaves me , son " STOP THE KILLING!

maryshan
we mourned for all the attacks in India ,but who will console&support us now?.STOP THE KILLING!

maryshan
we are counting the death , and you can start counting the days in power.STOP THE KILLING!

maryshan
Is killing a hobby , & lobbying a fun, ????STOP THE KILLING!

»

maryshan
we are bored with all the excuses..dear PM & CM.. STOP THE KILLING!




மிக்க நன்றி..











.

Thursday, December 9, 2010

இணைய நட்பு - வருமுன் காப்பது..2






































அக்கம்
பக்கம் உள்ளவரிடம் பேசாதவர், நல்ல விதமாய் நட்பு பாராட்ட முடியாதவர்கள் கூட இணையத்தில் எளிதாக நட்பு பாராட்ட முடிகிறது..

எல்லோருக்குமான சம உரிமை இங்கே உள்ளது.. தத்தம் திறமைகளை எவ்வித தயக்கமுமின்றி வெளிப்படுத்தி பாராட்டும் ஊக்கமும் பெற முடிகிறது..

அண்டை வீட்டுக்காரர்களுக்கு , ஒரு துரும்பை கூட எடுத்து உதவ முடியாதவரெல்ல்லாம் இணையத்தில் நல்ல மனிதராய் நடிக்க முடிகிறது..

குழந்தை , குடும்பம் என மிகவும் அன்பான நிறைவான சூழலில் , ஏன் ஆச்சாரமான சூழலில் இருப்பவரும் கூட நட்பை தேடி இணையம் வருகிறார்கள்..

அதைவிட நான் அதிகமாக கண்டது புகழ் விரும்பிகள்..

எல்லோருக்கும் புகழ் பிடிக்கும்தான்.. இதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.. சிலருக்கு அது ஊக்கம் , அங்கீகாரம்.. அந்தளவில் அது ஆரோக்கியமானதே..

ஆனால் அதையும் தாண்டி தகுதியற்ற புகழை தேடும்போதுதான் ஆபத்தாக வந்து முடியும்..

எப்படி இந்த தகுதியற்ற புகழை அடைய விரும்புவார்கள்.?

ஓட்டு போடுங்க என பிச்சை கேட்பது.. இதில் கூட சமூகத்துக்கு தேவையான விஷ்யங்களை சொல்லி அது பரவவேண்டும் என நல்லெண்ணத்தில் ஓட்டு கேட்பவர்களை இங்கே சொல்லவில்லை.. ஆனால் உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் ஓட்டு பிச்சை கேட்பதும் , பின்னூட்ட மொய் எழுதுவதுமாய்...


ஜாலியாக சகாக்கள் சேர்ந்து கும்மி அடிக்கட்டும் அதுவும் தவறில்லை.. ஆனால் சிலர் தகுதியற்ற , சமூக விரோத பதிவுகளை போட்டு கூட்டம் சேர்த்துவிட்டு தன்னை பெரிய தலைவராக நினைத்துக்கொண்டு கருத்து சொல்லும்போது தான் தாங்க முடிவதில்லை...

ஆக இங்கே தற்போது நிலவும் இந்த சூழல்/கூட்டம் ஆரோக்கியமானதல்ல என்பது என் கருத்து...


இப்ப சில விஷயம் பெண்கள் குறித்து.. இது தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்குவதற்கல்ல. ஒரு விழிப்புணர்வுக்கு மட்டுமே..


பொதுவெளியில் நாம் என்ன உடையில் செல்வோமோ , அந்த உடையில் உள்ள படங்களை மட்டுமே உங்கள் முக புத்தகத்திலோ அல்லது பதிவிலோ போடுங்கள்..

சில மாதம் முன்பு ஒரு பெண்ணின் நைட்டி போட்ட படம் தினமும் வந்து என் முகபத்தகத்தில் தொந்தரவு கொடுத்தது..

அவர் அந்த படத்தை அறிந்தோ அறியாமலோ போட்டிருக்கலாம்.. இல்லை அது அவருக்கு ஒரு பெரிய விஷயமாக/தவறாக இல்லாமல் கூட இருக்கலாம்..

எதையும் எதிர்நோக்கும் துணிவு மிக்கவராயும் இருக்கலாம்..

ஆனால் பார்ப்பவர்கள் எல்லாரும் அவர் மன நிலையில் இருப்பார்கள் என சொல்ல முடியாதே?..

அதே போல்தான் சில ஆபாச கவிதைகளும்..

மணிமேகலை எழுதுகிறார் என்றால் அவரால் எதிர்கொள்ள முடியும்..

முத்தக்கவிதை எழுதும் சில தோழியர் , அவர் வாழும் நாட்டில் இது சகஜமாக இருக்கலாம்.. ( நான் வாழும் நாடு போல )

அவர்கள் குடும்பத்தினரும் அதனை அங்கீகரிக்கலாம்..

ஆனால் பொதுவில் அப்படி ஒரு கவிதை எவ்வாறு உள்வாங்கிக்கொள்ளப்படுகிறது என்பதையும் கணக்கில் கொள்ளணும்..

அதே போல சில பின்னூட்டங்கள் மூலமும் சில பெண்கள் தம்மை வெளிப்படுத்திக்கொள்வதுண்டு..

ஆக இதை வைத்தே ஒரு ஆண் எளிதாக இவர்களை எடைபோட முடிகிறது..

சாந்தம் வழியும் சர்வ லெக்ஷனம்;
காந்தமாய் கவரும் கண்களில் அன்புமழை;
பொன்னகைப் பூட்டிய பளிங்கு கழுத்தை
புன்னகைக் காட்டிய பவள இதழ்கள்
வெல்லும் வண்ணம் வார்த்து எடுத்த---

இப்படி ஒரு வர்ணனை ஒரு பெண்ணிடம் முக புத்தகத்தில் .அவள் புகைப்படம்
பார்த்து.

அவரும் நன்றி சொல்கிறார் இக்கவிதைக்கு...

பளிங்கு கழுத்தை பவள இதழ்கள் போன்ற அசிங்க வர்ணணைகளை ஏன் பொதுவில் அனுமதிக்கின்றார்கள்..?..

முளையிலேயே கிள்ளி எறியவேண்டாமா?..

இல்லை அதை விரும்பினாலும் தனிமடலில் இருந்துவிட்டால் பரவாயில்லை.. அது அவர்கள் தனிமனித சொந்த விருப்பம்...மட்டுமே..

இது போதாதா சில ஆண்களுக்கு?..

இப்படியான பிரபலங்களை ஏன் பெண்கள் விரும்புகின்றார்கள் என்றுதான் புரிவதில்லை...

இவர்கள் கட்டாயம் மற்றவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமும்..

ஒஹோ நாமும் இப்படி வழிசலை ஏற்றால் தான் நமக்கும் பிரபலமடைய முடியும் என்று எண்ண வைக்கின்றார்கள்..

பெண் என்பவள் கம்பீரமானவள்.. சக்தி வாய்ந்தவள்.. எவருக்கும் அஞ்சாத மன பலம் படைத்தவள்..தவறுகளை துணிந்து எதிர்ப்பவளாக ,விமர்சனங்களை எதிர்கொண்டு தாங்கி புன்னகைப்பவளாக இருக்கணும்..

அவள் இப்படி கவிதைகள் மூலம் போகபொருளாய் பலவீனப்படுத்தப்படுவது மிக

ஆரோக்கியமற்றது என்பது என் கருத்து...

சமீபத்தில் சேட்டைக்காரன் என்ற பதிவர் கூட பொதுவில் ஒரு விஷயம் சொல்லியிருந்தது எல்லாருக்கும் நினைவிருக்கும்..

அவரிடம் இரு பெண்கள் தவறாக நடப்பதாகவோ/பேசியதாகவோ... அதை அவர் நிரூபிக்கவும் தயார் என்றார்..


ஆக இப்படியான பெண்கள் நம் மத்தியில் இல்லை என்று சொல்ல முடியாது..

செய்வதை செய்துவிட்டு ஆண்களே மோசம் என பழி போடுவது எப்படி சரியாகும்.?

ஒரு ஆண் தவறாக பேச முயல்கிறான் என்பதை ஒரு வார்த்தையிலேயே /புகழ்ச்சியிலேயே மிக மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும்...

அதை அனுமதித்து விட்டு பின்பு அழுவதால் பிரயோசனமில்லை..

நான் இணையம் வந்த புதிதில் பலரும் இப்படியாக பேசியவர்தான்..முதலில் காம ரசம் சொட்டும் கவிதைகளை பகிர்ந்து நம் கருத்தை கேட்பார்கள்.. அல்லது சிலைகளுடைய புகைப்படம் அனுப்புவார்கள்.. அல்லது இருக்கவே இருக்கு ஓஷோவின் காம வரிகள்...

நாம் மரியாதை கருதி அமைதியாகவோ , ஒரு புன்னகையோடோ விலகுவோம்..

சிலர் மீண்டும் தொந்தரவு செய்யும்போது , எனக்கு இதிலெல்லாம் விருப்பமில்லை என மென்மையாக மறுக்கலாம்..

யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை...

பின்பு நாம் அதை விரும்பாதவர் என தெரிந்தும் நல்ல விதமாய் மட்டுமே நட்போடு பழகுபவராய் மாறிப்போனதுண்டு..

ஆணிடம் காமம் குறித்தான் எண்ணம் பெண்ணை விட அதிகம்தான்.. மறுப்பதற்கில்லை...அது இயற்கை..

அதற்கு இடம் கொடுப்பதை பொறுத்தே இருக்கிறது , அதை தொடர்வதும் , விலகுவதும்..

ஆனால் அதை வைத்து மட்டுமே ஒருவன் அயோக்கியன் என்று சொல்லிவிட முடியாது..

பெண்களிடம் செல்லும் எல்லோரும் அயோக்கியருமல்ல.. செல்லாதவர் எல்லாரும் யோக்கியருமல்ல..

இதே தான் பெண்களுக்கும்..

20 வயதிலிருந்தே ஆணின் பார்வைகளை தாங்கியே வளர்ந்திருக்கோம்.. பெண் அங்கங்களை ரசிப்பவனாகவே படைக்கப்ப்ட்டிருக்கான் ஆண்..

ஆனால் எல்லா பெண்களையுமா எப்போதும் பார்க்கிறான்?.. அது காம வெறியனின் செயல் மட்டுமே..

அப்படி பார்ப்பவனும் , பெண்களையே ஏறெடுத்தும் பார்க்காமலேயே இருப்பவனும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள்..

மற்றபடி சாதாரணமாய் ரசிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.. அது நாகரீகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்..

இதேதான் இனையத்திலும்...


ஆணுக்கு பெண்ணின் மீது ஒரு அன்பு, பாசம், தாய்மை ஏதோ ஒன்றின்மீதும் , பெண்ணுக்கு ஆணின் மீதும் ஒரு கண்காணிப்பு, பாதுகாப்பு , ஆறுதல் , துணிவு தரும் ஏதோ ஒன்றும் தேவைப்படுகிறது...

இவை வரம்பு மீறாதவரை இரு பக்கமும் வளர்ச்சியோடு இருக்கும்வரை ஆபத்துகள் ஏதுமில்லை.. எப்ப மற்றவர் மீது பொறாமை , பொஸசிவ்நெஸ்/ஆழுமை வர ஆரம்பிக்குதோ அப்போது அங்கேயே நட்போடு , எவ்வித கசப்புமின்றி பிரிவது அவசியம்..


பிரியணும்னு முடிவெடுப்பவர் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் மிக கவனமாக கையாளணும்...

தன் நிலைமையை விளக்கி ஆணுக்கான அவகாசம் /நேரம் கொடுத்து , அவர் இதுவரை செய்த நல்ல விஷயங்களுக்கு நன்றி செலுத்தி , அவர் காயப்பட்டிருந்தால் அதற்கான மன்னிப்போடு விலகணும்..

அந்த நட்புக்கு ஒரு குற்ற உணர்ச்சியை கொடுத்துவிடக்கூடாது.. தப்பு நம்மேலும்தான்..இதை ஏற்க கடினமென்றாலும்..

ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் நட்போடு இருக்கும்போது கண்டிப்பாக அவர் நல்ல விஷயம் செய்திருப்பார்.( ஒன்றாவது ) . அதை மறந்து தூக்கி எறிந்து விட்டு செல்ல வேண்டாம்..


அப்படி செல்லும்போதுதான் பழிவாங்கும் எண்ணம் வரும்..

இதையும் தாண்டி மென்மையாக பிரிந்தும் இப்படி பழிவாங்கும் எண்ணமிருந்தால் ஒண்ணும் கவலைப்படாது துணிந்து நிற்பதே வழி..

சில பல விஷமத்தனமான விமர்சனங்கள் நம்மீது பரப்பப்படும்.. எல்லாவற்றையும் ஏற்க பழகிக்கணும்.. ஏன்னா இது பொறாமை , போட்டிகள் நிறைந்த உலகமாச்சே..

நாம் நல்லவர்கள் , என்பதற்காக மட்டுமே நமக்கு நடப்பதெல்லாம் நல்லவையாக நடக்கணும் என்ற எவ்வித கட்டாயமுமில்லை..

ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு..

“Expecting the world to treat you fairly because you are a good person is a little like expecting a bull not to attack you because you are a vegetarian" Dennis Wholey

மேலும் ஒரு நல்ல நட்பு தப்பை சுட்டிக்காட்டக்கூடியதாய் இருக்கணும்.. தப்புகளை ஏற்றுக்கொள்வதாகவும் இருக்கணும்.. நட்பாய் இருக்கணும் என்ற ஒரே காரணத்துக்காக தப்புகளை கண்டும் காணாமல் இருக்க கூடாது..


நம் மனசாட்சிக்கு நாம் நல்லவர்களாய் இருந்தால் போதும்.. மற்றவர்களுக்காக அல்ல..அதே போல் நிரூபிக்க தேவையுமில்லை யாரிடமும்..

நம் குடும்பத்தினர் நம்மை நம்பணும்.. அவ்வளவே..

மேலும் திருமணமான பெண்கள் மற்றொரு ஆணோடு பேசுவதை நம் தமிழ்நாட்டு/இந்திய /சில சமயம் பல நாட்டு கலாச்சார ஆண்களால் உடனே ஏற்க முடியாதுதான்..

மெதுவாகத்தான் புரிய வைக்கணும்.. ஆனால் பெண் புரிந்துகொள்வாள் எளிதில்..

( என் வேலை நிமித்தம் என் பாஸ் கூட பல்வேறு ஊர்களுக்கு சென்று விடுதியில் தங்கி வருவேன்.. பல இரவு நேர வேலையும் எனக்கு.. இதையெல்லாம் பெருமையாக

அனுப்பி வைத்தாலும் , ஆயிரம் பேரோடு அலுவலில் கைகுலுக்கினாலும் ,20 வருடமாய் ஆண்களோடு ஆண் போலவே வேலை செய்தபோதும் , தன் கண் முன்னால் வேறொரு ஆண் கைகுலுக்குவதை ஜீரணிப்பது இன்னும் என் கணவருக்கு சங்கடம்தான்..அதிலும் வெளிநாட்டவர் என்றால் கூட பரவாயில்லை.. இந்தியர் என்றால் தான் ..:) ஏனெனில் நம் வளர்ப்பு அப்படி.. )


ஆக கணவரையும் புரிந்துகொள்ளணும்.. நாம் பேசும் அனைத்து நட்புகளையும் முடிந்தவரை அறிமுகப்படுத்திடணும்..

எனக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரும்போதெல்லாம் அவரும் சில சமயம் பேசுவார்..என் கல்லூரி தோழர்கள் என் வீட்டில் வந்து தங்கியதுமுண்டு..அவருக்கு பிடிக்கும் பட்சத்தில்..

பிடிக்காவிட்டால் ?.. வேறென்ன செய்ய புரியவைக்க முடியாவிட்டால் , புலம்பிக்கொண்டே விட்டுவிட வேண்டியதுதான்.. மற்றவரை மாற்றுவதை விட , நாம் மாறிக்கலாம் சில வேளை..

ஆண்களோடான எனது இருபது வருட வேலை அனுபவத்தில் ,நட்பு/காதல் பிரிவினால் அவர்கள் வருந்துவதையும், வலிகளை மனதுக்குள்ளே வைத்து அழுவதையும் கண்டுள்ளேன்.. பெண் புலம்பியாவது ஆறுதலடைவாள்.. ஆனால் ஆண் பூட்டி வைப்பான்..சிலரே வெளியில் சொலவ்தும்..


ஆண்களும் சில பெண் நட்புகள் , அல்லது காதலி பிரிந்துபோய்விட்டாளே என ஒருபோதும் கவலை கொள்ளாதீர்கள்..

காதலும் , அன்பும், நட்பும், இன்ன பிறவும் நம்மிடையேதான் இருக்கிரதேயன்றி பிறரிடம் இல்லை.. அதற்கு தகுதியானவர்கள் கிடைத்தே தீரும்...

நண்பர்கள் பிரிந்தாலும் அவர்களோடான அந்த நட்பு கால நினைவுகள் ஒருபோதும் பிரிவதில்லை.. அவை என்றென்றும் இனிமையாக இருக்கணும்..

நண்பர்களை நட்போடு பிரிய பழகுவோம்...



படம் : நன்றி கூகுள்..





--

Friday, November 12, 2010

"சரக்கு சேவர் " ஐ வாழ்த்துவோம் வாருங்கள் :ஜெய் சாக்கி!


ஜாக்கி சேகரின் ஆராய்ச்சிகள்..:

"அதில் ஒரு சின்ன குட்டி பெண். அவள் அணிந்து இருந்த டிரஸ் செம கியூட்டாக இருந்தது...அவளைதான் வண்டியின் டேங்கில் முன் பக்கம் உட்கார வைத்து ஓட்டிக்கொண்டு வந்து இருக்க வேண்டும்.. காரணம் அவள்தான் அதிகம் நனைந்து இருந்தாள்...பிராய்லர் கறி கோழி மீது சட்டென தண்ணீர் ஊற்றினால் சிலிர்த்து நிற்குமே.. அது போல சிலிர்த்து இருந்தாள்... அவள் கையில் இருந்த ரோமகால்கள் சிலிர்த்து காணப்பட்டன..

வழியில் ஒரு வாகனம் என்னை கடந்து போனது... பையன் டேங்கில் உட்கார்ந்து இருந்தான்...அப்பா ஒட்டினார்.. அப்பாவுக்கு பின்னால் ஒரு வயதுக்கு வந்த பெண் இரட்டை கால் போட்டு உட்கார்ந்து இருந்தது.. வண்டியில் பாக்ஸ் இருந்த காரணத்தால், அந்த பெண்ணால் சரியாக உட்காரமுடியவில்லை ஙே என்று உட்கார்ந்து கொண்டு போனது. அந்த பெண்ணின் அம்மாவின் பின்புறம் இதுக்குமேல எதுவும் இல்லையா என்பது போல் பாவமாக தொங்கியது.. அந்த அம்மா நிறைய பவுடர் பூசி இருந்தார்கள்... ஜாக்கெட்டில் பின்பக்கம் முடிச்சி போட்டு தைத்து இருந்தார்கள்.. முடிச்சி போட அவரின் கணவர் உதவி செய்து இருக்க வேண்டும்.. செம டைட்டாக முடிச்சி கோபத்தில் போட்டு இருப்பது தெரிந்தது... வண்டி ஒரு பள்ள மேட்டில் இறங்கி ஏறினாலோ அல்லது எம்டிசி ஏற்படுத்திய புழுதியினால் அசுக்கு என்று தும்பினால் எந்த நேரத்திலும் அந்த முடிச்சி அறுத்துக்கொள்ள அனேக சான்ஸ் இருந்தது.."

-----------




"சரக்கு சேவர் " ஐ வாழ்த்துவோம் வாருங்கள் :
--

நாமெல்லாம் பெருமை படும்படியா நம்ம "சரக்கு சேவர் "அலெக்சாவுல வந்துருக்காராம்ல..நாட்டுக்கு எவ்வளவு முக்கியமான விஷயம்..? ஏன் இன்னும் பாராட்டு விழா எடுக்கவில்லை..?..நட்புகள் சொல்லிதான் சேதி தெரியும்..

மோகன்ராஜ் அலையஸ் மோகனகிருஷ்ணன் உருவாக அண்ணாவின் சேவை மகத்தானது..

மோகன்ராஜ் எப்படி உலகம் பூரா புகழடைந்தாரோ அதே புகழ் நம்ம சரக்கு சேவரும் அடைந்திருக்கிறார் என்பதில் பெருமகிழ்ச்சியடைவதோடு இதை உலகெங்கும் பரப்பும் கடமை ஒவ்வொரு தமிழனுக்கு இருக்கிறது என்பதை இங்கே நியாபகப்படுத்துவதில் நித்யானந்தம் அடைகிறேன்..

எதிர்காலத்தில் அண்ணா அவர்கள் ஆசிரமம் அமைத்து தம் பின்னூட்ட சீடர்களுக்கு முன்னுரிமை தருமாறு வேண்டிக்கொள்கிறேன்..

ரோட்டில் போகும் பெண்களின் முதுகை, அங்கங்களை , மழையில் நனையும் குழந்தைகளை இன்னும் தெள்ளத்தெளிவாக நோக்கிட ரசிகர்களை காத்திட , கண்பார்வை நன்றாக இருக்குமாறு மட்டுமல்ல எக்ஸ்ரே கண் கொடுத்தாலும் நன்று என எல்லாம் வல்ல பிதாவை வேண்டிக்கொள்கிறேன்..

பாலியல் வன்புணர்ச்சிகளை கூட மிக அருமையாக வர்ணணையோடு நகைச்சுவை கலந்து அந்த நிகழ்வோடு தம்மை ஈடுபட செய்யும் அண்ணாவின் சேவைக்கு ஆஸ்கார் அவார்ட் பரிந்துரைக்கிறேன்..ஏனெனில் இதை பார்த்து இன்னும் பல மோகன்ராஜ்கள் விவரமாக தெரிந்துகொள்ள அண்ணா உதவுகின்றார் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது..


அண்ணா சூரியன் என்றால் அவரை சுற்றும் ரசிகர்கள் நட்சத்திரம் என்றால் மிகையாகாது..

உங்க வீட்டு பெண்கள் ஸ்கூட்டியிலோ பைக்கின் பின்னாலோ சென்றால் அண்ணாவுக்கு ஒரு சின்ன தகவல் அனுப்பினால் போதும்.. அங்கம் அங்கமாக அலசி ஆராய்ந்து ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பிப்பார்.. இத்தனைக்கும் இது இலவசம்.. உடனே முந்துங்கள் .. ( ஆனால் அண்ணி பற்றி அப்படி ஆராய்ச்சிகள் கிடக்குமா னு யாராச்சும் கேட்டுராதீங்க.. மூச்.. )

இந்த நல்ல வேலையை இப்போதைக்கு ஒத்தி வைக்கிறேன் ... கெட்ட வேலைகள் நிறைய இருக்கு..

பிட்டு படம் போடாமல் , அலெக்சாவில் இடம்பிடிக்க கொஞ்சம் கூட முயற்சிக்காமல் , கடவுளேன்னு சில நாட்டுக்கு இப்ப தேவையற்ற கட்டுரைகளை ஜெயபாரதன் சார் ( அறிவியல் ) , என். கணேசன் ( ஆன்மீகம் ) , செல்வகுமார் ( தமிழ் விக்கி ) போன்றவர்கள் எழுதி வருவதை கடமையேன்னு படிச்சுபோட்டு வாரேன்.. வேலையத்த வேலையாய் இவர்கள் இப்படி பலர் சமூகத்தை முன்னேற்றிட கட்டுரைகள் எழுதி வருவதை என்ன சொல்ல.... என என் வருத்தத்தை பதிவு செய்கிறேன்...


வாழ்க சாக்கி .. ஜெய் சாக்கி...ஜெய் மோகன்ராஜ் என்ற கிருஷ்ணன்..

இன்னும் பல பல பலான ரேங்கிங்கில் முதலில் வந்து நம் நாட்டுகே பெருமை சேர்க்க வாழ்த்துவோம் வாருங்கள்....

"A" ஜோக் போட்டே முன்னால் வந்தவரை " A " கிரேடு தமிழர் என பெருமைபடுத்துவோம்...


( சாக்கி என்பது பிணம் அழுகிய சாக்கு மூட்டையை திறந்தால் வருமே..அந்த வாசம்.. ஆஹா என்ன மணம் என்ன மணம்...தமிழையே மணக்க செய்யும் சரக்குக்கு சாக்கி என்பது பொருத்தம்தானே?...)


சாக்கு மூட்டையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குழந்தைகள் இருப்பதாக நியாபகம் வந்தால் சாக்கு கும்பெனி பொறுப்பாகாது...

படம் : நன்றி கூகுள்...






.