Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Monday, August 29, 2011

ஏன் சென்றாய் செங்கொடி?.





செங்கொடியின் கொள்கை, நோக்கம் மிக உயர்ந்தது எனினும் , ஒருபோதும் ஊக்குவிக்கப்படக்கூடாது.. நீதி கிடைக்கும்வரை போராடணும்.. முத்துகுமாரின் மரணம் அவர் நினைத்ததை தந்ததா?.சரி, தவறு என்பதற்கு அப்பாற்பட்டது இது..அவரவரின் கொந்தளிப்பான, உணர்ச்சிகர சூழல் முக்கிய காரணம்..இன்னும் எத்தனை எத்தனை போராட்டங்களுக்கு தலைமை வழிநடத்தியிருக்கவேண்டியவர்கள் நீங்கள்..?. ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பதார்க்கு.ஒருபக்கம் மக்கள் சக்தியை எளிதாக எடைபோட்டுவிட்டாரோ என தோணுது.. கொள்கையுடையோர் அவசரப்படலாமா?

லட்சம் பேரை தம் பின்னால் அணிதிரட்டக்கூடிய வலிமையுடையோர், பல்லாயிரம் தலைவர்களை உருவாக்கக்கூடியோர் நீங்கள்.. எப்போது மரணத்துக்கு அஞ்சாதவராக இருக்க முடியுதோ, அப்போது உலகம் உங்கள் கையிலல்லாவா?.. சாதித்திருக்கவேண்டாமா பல வழிகளில்..?. உங்கள் உணர்வுகளின் கொந்தளிப்பு பலரை அடைய செய்திருக்கணுமே தவிர, அவசரப்பட்டீரே..சாவை துச்சமென நினைப்போர் புதிதாக அல்லவா பிறக்கின்றனர் மக்களின் தலைமையாக..?

இந்த தூக்குதண்டனை பிரச்னை மட்டுமே நம் முன்னால் இருப்பதல்ல. பல சமூக பிரச்னைகள் , வாழ்வாதார பிரச்னைகள் நம் முன்னால் ஆயிரக்கணக்கில் உள்ளது.. பல அப்பாவி மக்களுக்கு இன்னும் அதுபற்றி தெரியக்கூட இல்லை.. அப்படியிருக்கையில் இப்படி உங்களைப்போன்ற கொள்கையுடையோர் பொசுக் னு முடிவெடுத்தால்?.. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய.. அப்பாவி மக்களை விடுவிக்கவேண்டிய பொறுப்புகள் எக்கச்சக்கம் இங்கே.. இதே போல தொடர்ந்தால் நல்லவர் இல்லாத இடங்களில் நரிகளின் நாட்டாமைகள் தொடங்கிவிடும்.. கொள்கையுடையோரை இழப்பது லட்சம்பேரை இழப்பதற்கு சமம் என புரிந்துகொள்ளணும்..


கொள்கையுடையோர் உயிர் அவருக்கு மட்டுமானதல்ல.. எத்தனை பேருக்கு துணிவை தந்திருக்கலாம் நீங்கள்.. ?.. எத்தனை பேரை போராட வைத்திருக்கலாம் உங்கள் சொற்கள்..?.. உங்கள் மரணம் வலி தருது..சரி/தவறு என்ற விமர்சனமில்லை.. சகோதரி ஐரோம் சர்மிளா தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறாரே..ஏன்?.. ஏதிரிகளுக்கு உங்களைப்போன்ற கொள்கையுடையோரின் மரணம் வரவே..

மக்களுக்காக சிந்திக்கக்கூடியோராக பிறக்கும் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை..இத்தகையோரின் உயிர் சாதாரண மக்களின் உயிரை ஒப்பிடுகையில் நிச்சயம் விலைமதிப்பில்லாதது.. உங்களுக்கான போராட்டத்தை செய்துவிட்டே சென்றுள்ளீர்கள்.. இருப்பினும் இன்னும் எவ்வளவு சாதித்திருப்பீர்கள் என்ற ரணம்.. எத்தனை பேரில் மாற்றம் கொண்டு வந்திருப்பீர்கள்?..அவை மிகப்பெரிய இழப்பல்லவா?.. மனதால் ஏற்கனவே மரணித்தோர் பலருண்டு இங்கே.. இருப்பினும் இறுதி மூச்சுவரை கொள்கையை விடாமல் பற்றிக்கொண்டு செயல்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.. வெளிச்சத்துக்கு வராமல்..

விழுதுகளை தாங்கவேண்டிய ஆலமரமே சாய்ந்தால்? வீழ்த்த எண்ணியோர்க்கு இடமளித்ததாகிடுதே!

மூவருக்காக இங்கே மூன்று பெண்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனரே..தன்னையே வருத்திக்கொண்டிருக்கும் அநத ச்கோதரிகளின் உணர்வுகள் வலிமையற்று போய்விடக்கூடாது.. அவையும் தற்கொலைக்கு ஈடானதுதான்.. உணவளிப்பது வயற்றுக்கு மட்டுமா?.. இல்லையே?.. எல்லாம் செயலற்று போகுமே அவர்களுக்கு?.. நிமிடங்கள் போகப்போக வலிகள் கூடுமே சகோதரி?..நொடிப்பொழுதில் உயிர் விடுவதை விட ரணமல்லவா இது?..வணங்குகின்றேன் அச்சகோதரிகளை..




செழுமையாக வளர்ந்து இன்னும் பலரை வளரச்செய்யவேண்டிய கொடி , இன்று கருகியதேன்..

உணர்ச்சிகளை தூண்டுவிதமாக பலர் செயல்படலாம்.
தியாகி பட்டம் தரப்படலாம்.. ஆக ,கவனமாக கையாளணும்..சிலரின் மரணம் பலருக்கு அரசியல் , விளையாட்டு மட்டுமே..

இனியும் இதுபோல நடக்காமல் பார்ப்பதும் நம் அனைவரின் கடமையே..

தோல்வி நிலையென நினைத்தால்?.

Each victim of suicide gives his act a personal stamp which expresses his temperament, the special conditions in which he is involved, and which, consequently, cannot be explained by the social and general causes of the phenomenon.
Emile Durkheim


படம்: கூகுள்
Link

Saturday, February 5, 2011

நான் யார்?.. சிறுகதை..




" அய்...யாஆஆஆஆஆஆஆஆஆஆஆ....." ஓங்கி குரலெடுத்து கதறினாள் மீனாட்சி.

நீதிபதி வெங்கடேசன் மடியில் வைத்து படித்துக்கொண்டிருந்த கீதையை மூடிவிட்டு , கண்ணாடியை கழற்றினார்.

பின் மெதுவாக தான் அமர்ந்திருந்த ஊஞ்சல் கம்பியை பிடித்துக்கொண்டு கால் தரையில் ஊன்றி நிப்பாட்டினார்..

பார்வையாலேயே காவல்காரனுக்கு சம்மதம் தந்தார் மீனாட்சியை உள்ளே விட சொல்லி..

" ராவுல ,என்ன ஏதுன்னு சொல்லாம போலீஸ் புடிச்சுட்டு போச்சுய்யா.. திருட்டு கேஸூன்னு சொன்னாங்க..

வேல பாக்க கம்பெனில திருடிட்டார் னு நிர்வாணமா நிக்க வெச்சு அடிச்சிருக்கான். அப்பவும் அவர் கிட்ட பொருள்

ஏதும் கண்டுபிடிக்க முடியாம போலிஸ் கிட்ட சொல்லி கூட்டிட்டு போனாங்கய்யா.. நான் போறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சேய்யா.."

கதறினாள்.. மீனாட்சி நீதிபதி அலுவலகத்தில் துப்புறவு வேலை செய்பவள்..

" ராவுல உடனே அய்யாவ பாக்க ஓடிவந்தேங்ய்யா . ஐயா தூங்குறாரு எழுப்ப முடியாதுன்னு காவக்காரர் சொல்லிட்டாருங்கய்யா.." கதற சக்தி இல்லாமல்

மூச்சு விட்டு விட்டு பேசினாள்..

ராதிகா சத்தம் கேட்டு வந்தவள் கையிலிருந்த காப்பியை மாமனாருக்கு தந்துவிட்டு மீனாட்சியை ஒரு கணம்தான் கவலையோடு பார்க்க முடிந்தது..

நீதிபதியின் பார்வை அவளை உடனே உள்ளே போக சொன்னது..

"சரி நான் பார்க்கிறேன். நீ போய் ஆக வேண்டியதை கவனி..எந்த ஸ்டேஷன், கம்பெனி விபரம் உதவியாளர் கிட்ட கொடுத்துட்டு போ.. "

" ராதிகா ஒரு 5000 ரூபாய் எடுத்துட்டு வா.."

எடுத்து வந்தவள் , காவலனிடம் கண்ணாலேயே " ஏன் இரவு அனுமதிக்கல ? " னு கேட்டு " என் வேலை போயிருக்குமே மா" என்று கைவிரிப்பே பதிலாய் வந்ததும்

புரிந்துகொண்டாள்..

---------------------------------

தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார் நீதிபதி வெகுநேரமாய்.. பின் , இறுதியாக ,

" சரி தொகையை கொஞ்சம் கூட்டிடுங்க.. மத்தத நான் பார்த்துகிறேன்.என் தொகையை குறைச்சுக்கலாம்.."

குளித்துவிட்டு உணவு மேசைக்கு வந்தவர் , மருத்துவர் மகனிடம் ,

" போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கேட்கிறபடி செய்துகொடுத்துடு " என்று கட்டளையிட்டார்..

இட்லியை பிட்டுக்கொண்டிருந்தவர் தலை அசைத்தார்.

கணவனின் அடிமைத்தனத்தை ஒரு வெறுமைச்சிரிப்போடு கடந்தாள்..

-----------------------------------

" பூஜை சாமான்லாம் தயாரா மா? " மாமியார்

பேரப்பிள்ளைகள் அட்சரம் பிசகாமல் ஸ்லோகம் சொல்வதை ஒரு கணம் கண் மூடி ரசித்தார் நீதிபதி..

அதையே பாராட்டாய் எடுத்துக்கொண்டு வெட்கச்சிரிப்பில் பெருமிதமாய் பூஜை செய்ய ஆரம்பித்தார் மாமியார்..

----------------------------------

குடுகுடுன்னு மாடிப்படி ஏறிய 6 வயது மகளை தடுத்து நிப்பாட்டி ,

" ஏன் இத்தனை வேகம்.. எத்தனை முறை சொல்வேன்.. ஓடாதே.."

" அய்யோ மம்மி. விடுங்க. பென்சில் சீவும் போது கை வெட்டி காளிம்மாவுக்கு ரத்தம் மம்மி.."
விட்டால் அழுதுடுவாள் போல..

" ஒருவாட்டி சொன்னா கேட்கமாட்டியா. ஷார்பனர் இருக்கும்போது ஏன் அவ கிட்ட தரணும்..? " திட்டிக்கொண்டே பின்பக்கம் போக ,

சாதாரணமாய் பெருக்கிக்கொண்டு இருந்தாள் காளி..

" என்னாச்சு காளி .?"

" எதும்மா.. ..ஒஹ். அதுவா. பாப்பா சொல்லிச்சா.. ஹாஹா.. ரத்தத்த பார்த்து கொழந்த பயந்துடுச்சு போல.. அட இங்க பாருங்க.. பிளாஸ்டர் மருந்தெல்லாம் எடுத்து வாரத."

கலகல வென சிரித்தாள்.. " என் செல்லம், என் தங்கமே.. அம்மா மாதிரியே கொணம் ஒனக்கும்.. என்ன பெத்த தாயே, ஏழ பாழங்களுக்கு இதெல்லாம்

பழக்கம்டா கண்ணு. வலிக்காது கண்ணே.. " னு கொஞ்சினாள்..

----------------------------------------






எல்லா வேலையும் முடித்துவிட்டு குழந்தைகளை பள்ளி அனுப்பிவிட்டு , மாமனார், கணவர் வேலைக்கு சென்றதும்,

மாடிக்கு சென்றாள்.. குளித்துவிட்டு பக்கத்தில் இருக்கும் கலக்டர் வீட்டுக்கு செல்லணும்.. பேரப்பிள்ளைக்கு பேர் வைக்கிறார்கள்..

15 ஆயிரம் மதிப்புள்ள டிசைனர் புடவையை எடுத்து வைத்தாள்.. ஏதோ ஒரு எம்.எல்.ஏ வீட்டு பரிசாம்.. அலட்சியமா சிரித்தாள்..

சின்ன நகை டப்பாவில் பரிசை பத்திரப்படுத்தினாள்..தான் சேமித்து வைத்த லட்ச ரூபாய் பணத்தையும் எடுத்து கைப்பையில் ஒளித்துவைத்துக்கொண்டாள்.

அனாதை இல்லம் போகணும் பிராயசித்தமாக என எண்ணிக்கொண்டாள்..

" ரெடியாம்மா " மாமியார் குரல்

" இதோ 10 நிமிஷத்தில் வந்துடுறேன் மா.. "

அவசர அவசரமாய் கணினியில் உட்கார்ந்தாள் .

" கொலையா தற்கொலையா ?. நீதி வேண்டும்.. ஏழைகள் வயிற்றில் அடிக்கும் நீதிபதி , மருத்துவர் , காவல்துறை என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும்

சகட்டுமேனிக்கு ஆசைதீர கிழி கிழி என கிழித்தாள்.. நீதிபதி வீட்டினரையும் சாபம் விட மறக்கவில்லை.. இறுதியில் - தீகங்கு என கையெழுத்திட்டாள்..

பத்திரமாக தன் ஜெர்மன் தோழிக்கு அனுப்பி வைத்தாள்..அன்று இரவே இணையத்தில் தீகங்கின் எழுத்து வெளிவந்து சலசலப்பை ஏற்படுத்தியது . பற்றிக்கொண்டு பற்றி எரிந்தது

நாலாபுரமும்..அதை மனக்கண் முன் கொண்டு வந்து புன்னகைத்தாள் திருப்தியோடு..

எவ்வித சுவடுமின்றி அழகாக அலங்காரம் செய்துகொண்டு மாடிப்படி இறங்கி வந்தாள் தேவதை போல..

















படம் : நன்றி கூகுள்..

Friday, August 27, 2010

புலித்திருட்டு லக்கேஜில்..

















2 மாத புலிக்குட்டி ஒன்றை குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்களோடு கலந்து ஈரான் நாட்டுக்கு
எடுத்து செல்ல துணிந்த பெண்மணி , பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக
அந்த புலிக்குட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்க வைத்துள்ளார்.
விளையாட்டு சாமான்களோடு இருக்கும்போது பஞ்சு வைத்து அடைத்த புலிக்குட்டி போன்ற தோற்றம் ஏற்படுத்த கலந்து வைத்துள்ளார்..

விமான
நிலையத்தில் ஸ்கேன் செய்யும் போது புலிக்குட்டி மூச்சு விடுவது தெரிந்துவிட்டது..


பெட்டியை
திறக்க சொல்லி பார்த்த போது மிக அழகான அந்த 2 மாத குட்டி அமைதியாக அரை தூக்கத்தில் இருந்துள்ளது.


உடனே அப்பெண்ணை கைது செய்து 4 வருட சிறை தண்டனையும் வழங்கியுள்ளார்கள்....

புலிகள் தற்போது அழிகின்ற சூழலில் இருப்பதால் மிகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது..

வனவிலங்கு
அதிகாரிகள் புலிக்குட்டியை எடுத்து சென்று மிக பாதுகாப்பாக வைத்துள்ளனர்..


புலியை
கண்டுபிடித்து மீட்டது குறித்து பெருமகிழ்ச்சி கொண்டனர் அதிகாரிகள்..

Monday, August 23, 2010

குழந்தை பூஜா பற்றிய வதந்தி

நன்றி : http://www.hoax-slayer.com/105-17.ஷ்த்ம்ல்


Brief Analysis
The case described is real, but took place back in 2006. Police rescued her from her kidnapper at a railway station at Thiruvananthapuram, in the Indian state of Kerala. Although Pooja's parents have never been located, the child was later taken in by a couple in Thiruvananthapuram.


மேலும் வாசிக்க http://www.hoax-slayer.com/105-17.shtml

Detailed Analysis
Pooja
Police rescued four year old Pooja from a beggar at the Thiruvananthapuram railway station in April 2006
This widely circulated message details the case of four year old Indian girl, Pooja (sometimes "Puja") who was rescued by Kerala police from a kidnapper. According to the message, little Pooja was too young to give clear indications about her identity or the whereabouts of her family. The message asks that recipients forward the message on to as many people as possible in the hope that someone will be able to identify Poona's parents or other relatives.

Friday, August 6, 2010

3d செய்தித்தாள் பாங்காக்கில்.. முதல்முறையாக



http://bangkokpost.newspaperdirect.com/epaper/viewer.aspx


செய்தித்துறையில், 64 வருடம் நிறைவடைவதை கொண்டாடும் பொருட்டு பாங்காக் போஸ்ட்

இன்று 3டி யில் படங்களை வெளியிட்டுள்ளது.


அதற்கான சிறப்பு கண்ணாடியையும் இலவசமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



40 பக்கம் கொண்ட செய்தித்தாளில் எழுத்துகள் அதே வடிவம் கொண்டிருந்தாலும் படங்களும் விளம்பரங்களும்

3டி யில் அமைந்திருப்பது மிக சிறப்பு..

இதற்கான சிறப்பு விலை ஏற்றம் ஏதுமில்லை..

நாட்டிலேயே முதல்முறையாக இப்படி 3டி படங்கள் அளித்து வாசகர்களோடு தான் சமீபத்தில் பெற்ற விருதினை கொண்டாடி மகிழ்கிறது.


படங்கள் பார்க்க : http://bangkokpost.newspaperdirect.com/epaper/viewer.aspx

Tuesday, July 13, 2010

பாங்காக்கில் யானைக்கு உணவளித்தால் 10,000 ஃபைன் . டூரிஸ்டுகளுக்கு எச்சரிக்கை..






























பாங்காக் வீதிகளில் யானைகளை அழைத்து வந்து தர்மம் கேட்கும் பழக்கம் இருந்து
வந்தது..

இதை பல வெளிநாட்டவர் , மற்றும் உள்நாட்டவரும் முக்கியமாக குழந்தைகள் விரும்பினாலும், இதனால் யானைகள் சீக்கிரம் மரணமடைந்துவிடுவதாகவும் , நகர

வீதியில் வாகனப்புகையினால் , தெருக்களில் நடப்பதாலும் உடல் பலவீனமடைந்து

டிபி போன்ற நோய் வாய்ப்படுவதாலும் அரசு இச்சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது..

யானைப்பாகனுக்கும் அதே ஃபைனும் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்..

இது குறித்து தொலைக்காட்சியிலும் , ஊடகங்களிலும் மற்றும் நகரின் முக்கிய இடங்களிலும் அறிவிப்புகள் வெளியிடப்படும்..

தாய்லாந்தில் கற்பமாய் இருக்கும் பெண்கள் தொடர்ந்து பள்ளியில் படிக்க அரசு ஊக்கம்

தாய்லாந்தில் கற்பமாய் இருக்கும் பெண்கள் தொடர்ந்து பள்ளியில் படிக்க அரசு ஊக்கம்

( தமிழ்படுத்த நேரமில்லை மன்னிக்கவும்.. பள்ளிக்கூடம் திறக்கணும் :) ஹிஹி)

Controversial draft law on pregnant students being allowed maternal leave, later study draws concern

BANGKOK: -- A draft law that intends to give pregnant students the legal right to take maternal leave and continue their studies after giving birth, is now attracting much controversy.

While a survey on www.ilaw.or.th showed most respondents supported the draft law, prominent child-rights activist Wallop Tangkananurak said he was concerned the legislation would indirectly endorse school-age pregnancies.

"I agree that schools should not fire students just for being pregnant. However, having a clear law on the issue may indirectly convince youth that it is okay to get pregnant during their school years," Wallop said in www.gotoknow.org.

He said he planned to raise the issue at the National Children Protection Committee meeting soon. He explained that although it was good to give youth more freedom, it could be better to rely on subtle measures.

Public Health Minister Jurin Laksanawisit said there was much discussion about Article 12 in the draft, over whether directors of educational institutions with pregnant female students should allow the women to continue studying during their pregnancy and after giving birth.

Jurin said many prominent public health officers worried the law would encourage teen pregnancy. Others said it would open the way for pregnant students to have both maternal leave and continue their studies after giving birth, instead of losing their positions.

Jurin said he was not sure that firing pregnant students was beneficial - their numbers had not decreased during the past few years.

The Department of Health records showed that each year in Thailand, 10,000 students under 15 years of age become pregnant. Of 800,000 women who get pregnant annually, 20 per cent are under 20 years.

Reproductive Health Division chief Dr Kittipong Saejeng, secretary of a subcommittee to develop reproductive health law and regulation, said the subcommittee would organise a meeting to revise this draft. After that the subcommittee would hold public hearings for two months before making submissions to the National Reproductive Health Committee, chaired by the Public Health Minister, and then to Cabinet.

Jurin said the law would protect people's reproductive health rights. It would also cover the medical services of all state and private medical units and oblige them to provide consultation and reproductive health services.

The law will not allow any individual or organisation to block maternal leave, will encourage breastfeeding and safeguard against sexual harassment.

He said it would encourage support for pregnant women, those with unwanted pregnancies and those who were not in a position to take care of their kids.

நன்றி - http://www.thaivisa.com/

குட்டைப்பாவாடைக்கு தடை பாங்காக் கல்லூரிகளில்


தனியார் கல்வி நிறுவனங்களின் துறை சார்பில் தாய்லாந்து கல்வியியல் அதிகாரிகள் ஒரு அவசர அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்கள்..

எல்லா தனியார்
வெக்கேஷனல் பள்ளிகளிலும் பெண்கள் கெளரவமாக உடை அணியும்வரை பள்ளி/கல்லூரிகள் மூடப்படும் என்பதே..

பாங்காக் நகரின் பொதுமக்கள் பலரிடமிருந்து வந்துள்ள புகார்கள் பெண்களின்
குட்டப்பாவாடை மிக சங்கடத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர்..

நகரின் முக்கிய சிறந்த பள்ளிகளில் பாவாடை முட்டிக்கு கீழ் இருக்கவேண்டும், சட்டைகள் தொள தொள எனவும் உடம்போடு ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு..

சட்டத்தை மீறி கவர்ச்சியாக உடை அணிந்து வரும் பெண்களை பார்க்க நேர்ந்தால்
அப்படி அனுமதிக்கும் கல்லூரி / பள்ளிகளை மூடப்போவதாக தனியார் கல்வி நிறுவன உயர்மட்டகுழு அறிவித்துள்ளது..



அதிகமாய் கவர்ச்சியை காட்டுவதன் மூலம் , நாட்டில் அதிக குற்றங்கள் ஏற்பட வாய்ப்பளிப்பதாகவும், பெற்றோரும் தங்கள் குழந்தைகள் உடையில் அதிக கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்..

படங்கள் நன்றி - http://www.thaivisa.com/

Sunday, July 11, 2010

காஷ்மீரியின் கண்ணீர்




சொர்க்கமாய் படைக்கப்பட்ட காஷ்மீரில் மக்கள் படும் அவஸ்தைகள் எழுத்தில் வடிக்க முடியாதவை.

இன்று கொரிய தொலைக்காட்சியில் காஷ்மீர் பற்றிய தொகுப்பு ஒன்றை பார்க்க நேர்ந்தது..

[ போர்ட்டர்கள் பற்றி பார்க்க காணொளி -
http://il.youtube.com/watch?v=rEh0R40PKWk&feature=related ]



குடும்பத்தோடு , முக்கியமாக குழந்தைகளோடு பார்க்க முடிந்தது நன்று..நாம் எத்தனை அதிர்ஷ்டம் செய்திருக்கோம் என உணரசெய்கிறது இது போன்ற தொகுப்புகள்..

ஒரே உலகில் தான் எத்தனை ஏற்ற தாழ்வுகள்..?.

இந்த கட்டுரையில் அசார் என்ற மூட்டை தூக்கும் தொழிலாளியைப்பற்றி

காண்பித்தார்கள்.. தன் எடையை விட 4 மடங்கு அதிக எடையை பல

கிலோமீட்டருக்கு அதுவும் மலையில் ஏறி கொண்டு செல்லும் பணி...

அசார் இதை தன் 15 வயதிலிருந்து செய்கிறார் கடந்த 35 வருடமாக..

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது தகப்பனாருக்கு கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் கால் இரண்டும் செயலிழக்க, சுமை அசார் மேலும் அவர் தம்பி மேலும் வந்து விழுந்தது.. காஷ்மீரில் அவர் கிராமத்தில் கல் குவாரி வேலை மட்டுமே..

அதனால் குடும்பத்தை காப்பாற்ற கனத்த மனதோடு தம்பியையும்

அழைத்துக்கொண்டு சிம்லா வருகிறார்..

அதன் பின் திருமணம் , 3 குழந்தைகள் எல்லாம் இந்த மூட்டை தூக்கும் தொழில் வைத்தே..

இதற்கிடையில் திருமணம் முடிந்து 10 வருடமாய் சேர்த்த பணத்தில் சிறிய

வீடொன்றை கட்டி முடிக்கவும் தீவீரவாதிகள் வந்து ஒளிந்துகொள்ளவும், அவர் வீட்டை ராணுவம் தாக்கியதில் எல்லாம் மொத்தமாய் அழிந்து போனதும் , பட்ட காலிலேயே கொட்டிய சோகம்...

அழுதழுது பார்த்தாலும் அவர் தான் எழும்பணும்.. பின் ஒரு வருடம் அழுது முடித்து மீண்டும் சுமை தூக்கியாய் வேலை... 3 மாதமொருமுறை சிம்லாவிலிருந்து காஷ்மீர் கிராமத்துக்கு சுமார் 16 மணி நேர பயணத்துக்கு பின் குடும்பத்தாருடன் இணைதல்...

தினமும் 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம்.. அந்த நேரத்துக்குள் குழந்தைகள்

படிப்பதோ மற்ற வேலைகளோ முடிக்கணும்..

தன் பிள்ளைகளுக்கு கல்வி கிடைப்பதை மிக பெருமையாக நினைக்கிறார்.. தன் கஷ்டமெல்லாம் தன் மகன் படித்து ஒரு வேலைக்கு போனால் சரியாகிவிடும் என சுமக்க முடியாத மூட்டையோடு கண்ணீரோடு பகிர்கிறார்...மலை ஏறி இறங்கி தினமும் கால் வலி.. அதுக்கு வேறு மருந்து செலவு.. ஒரு முறை மலை ஏற வெறும் 30 ரூபாய் கிடைக்கிறது... இப்படி நாளொன்றுக்கு பலமுறை ஏறி மாதம் 6000 ரூபாய் மிச்சப்படுத்துகிறாராம் குடும்பத்துக்கு...

உடம்பில் எலும்பை தவிர வேறெதுவும் இல்லை.. ஆனால் மனம் மட்டும் இறைவனை நம்பி இருப்பதால் அதிக நம்பிக்கையோடு இருக்கு..

அல்லா எனக்காக நிச்சயம் ஒரு நல்வாழ்க்கை வைத்திருப்பார்.. நான்

கஷ்டப்பட்டாலும் என் பிள்ளைகள் கஷ்டப்படாதே.. என்கிற நம்பிக்கையில் தானும் மகிழ்ச்சியாக இருந்துகொண்டு சக தொழிலாளிக்கும் நம்பிக்கை ஊட்டுகிறார்.. மிக வயதான தொழிலாளிகளும் அவரோடு பயணம் செய்கின்றனர்.. தன் வேலை முடிந்ததும் அந்த பெரியவர்களுக்கு காலுக்கு மருந்திட்டு மசாஜும் செய்கிறார்..

தன் பெண் குழந்தை மிக நன்றாக படிப்பதாகவும் , ஆனாலும் அடுத்த குடும்பத்துக்கு போகப்போகிற பெண் என்பதால் எதிர்பார்ர்புகள் இல்லாவிட்டாலும், அவள் மீது அதிக பிரியமாய் இருக்கிறார்..

நான் ஏன் இத்தனை கஷ்டப்படணும்னு நினைத்ததில்லை.. ஏன்னா நான் தான் தகப்பன்.. குடும்பத்தலைவன்.. இது அல்லாவின் கட்டளை.. இதைத்தவிர வேறெந்த எண்ணமுமில்லை அவருக்கு..


காஷ்மீர் ஊருக்குள் ராணுவத்தினர் சிலர் மிக நல்ல தோழர்களாக இருப்பதாகவும் சொல்கிறார்.. இருப்பினும் காஷ்மீர் பிரச்னைகள் முடிவுக்கு வந்து தன் வம்சாமாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என பிராத்திக்கின்றார்..

நாமும் அதைத்தான் செய்ய முடியும் என நினைத்த போது சின்ன சின்ன

விஷயங்களுக்கெல்லாம் அலுத்துக்கொள்ளும் நம் மனதை நினைத்து மிக

வெட்கமாய் இருந்தது...










Tuesday, June 22, 2010

உலக சிறு செய்திகள்..








இந்த புதிய பக்கம் மூலம் உலகில்

நடக்கும் சின்ன சின்ன செய்திகள் பதிவாக தொடரும்..


ஜகார்தா - இந்தோனேஷியா :
இந்தோனேஷிய

காவல்துறையினர் அக்மாமூல் முக்மினின் என்ற 24 வயது இளைஞரை விலங்குகள் சரணாலய புலியை கொன்றமைக்காக கைது செய்தனர்..

மிக பாதுகாக்கப்படவேண்டிய விலங்கினமான புலியை கொன்று அதன் தோலை எடுத்தமைக்காக குறைந்த பட்சம் 5 வருடம் சிறைத்தண்டனையும் 4 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்..


சரணாலயம் மூடியபின்பு புலி உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது..

கோலாலம்பூர் - மலேஷியா :

நூறாண்டுகளுக்கும் மேல் பழமையான சிறைச்சாலை ஒன்று நாட்டின்

அபிவிருத்திக்காக இடம் தேவைப்படுவதால் இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது..

இதனை வரலாற்றாய்வாளர்கள் எதிர்க்கின்றனர்..

கோலாலம்பூரின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் " புடு" எனும் சிறைச்சாலை 115 வருடம் பழமை வாய்ந்தது..சுற்றுலா தளமாகவும் ,வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும் விளங்கி வந்தது..

இதன் 394 நீள சுவர் நேற்று இடிக்கப்பட்டு மிகப்பெரிய உணவு விடுதிகளும்,

அடுக்ககங்களும் கட்ட அரசு சார்ந்த கட்டட துறையினர் திட்டமிட்டுள்ளனர்..

சிறை ஒருபோதும் வரலாற்று தலமாகாது என்பதும் , பெருமைப்படக்கூடிய இடமுமல்ல என்பதும் அரசின் முடிவு..



கொசுறு..:

வெலிங்டன் - நியூஸிலாந்து :

மிக அழகான யுவதி ஒருத்தி நேரே அருகில் திறந்திருந்த

வீட்டுக்குள் சென்று வீட்டிலுள்ள நன்றாக மது அருந்திவிட்டு , உணவும் உண்டு விட்டு , உடைகளையும் போட்டுக்கொண்டு , படுக்கையில் படுத்து உறங்கிவிட்டார்..

வீட்டு ஓனர் , காவல்துறைக்கு அறிவிக்க , காவலர் கையும் களவுமாய் பிடித்தனர்..

விசாரித்ததில் , அன்று என்ன நடந்ததென்றே தெரியவில்லையாம்...!!!!!

நஷ்ட ஈடாக 50,000 ரூபாய் பணமும், நன்னடத்தைக்காக வீட்டு காவலில்

வைக்கும்படியும் தண்டனை பெற்றுள்ளார்..

தொடரும்....

Thursday, May 20, 2010

பற்றி எரிந்த பாங்காக்..அழுகிறது தலைநகரம்..








அமைதியான
, ஜாலியான எப்போதும் புன்முறுவலுடனேயே காணப்படும் தாய்லாந்து மக்கள்
முகங்களில் வழிந்தோடுது சோகம்..

ஆளுங்கட்சியினருக்கும் செஞ்சட்டைக்காரர்களுக்கும் கடந்த 45 நாள் போராட்டம் ராணுவ தலையீடால் நேற்று முடிவுக்கு வந்தது..

செஞ்சட்டை தலைவர் ஒருவரின் அகால
மரணத்துக்குபின் போராட்டம் தீவீரமடைந்தாலும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருந்தார்கள்..

பொதுஜனத்துக்கு எவ்வித பாதிப்புமின்றி சட்ட திட்டத்துக்குட்பட்டே போராட்டம் நடத்தினார்கள்.. கிட்டத்தட்ட அஹிம்சை வழியில்..

இருப்பினும் பிரதமர் கண்டுகொள்ளாததினால் லிட்டர் கணக்கில் அனைவரின் ரத்தம் சேகரித்து பார்லிமெண்ட் வளாகத்தில் ஓடவிட்டனர்..அப்படியாவது இரக்கம் வரட்டும் என..

அதுவும் எடுபடவில்லை.. பின் நகரின் முக்கிய வர்த்தக வீதியான வேர்ல்ட் டிரேட் செண்டர்
அருகில் கூடாரத்தை அமைத்தனர்..

அவர்களின் முக்கிய கோரிக்கையான பாரளுமன்றத்தை கலைத்து புது தேர்தல் நடத்துவது குறித்த
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது..( பேச்சுவார்த்தை நடக்கும்போது பார்த்தால் இருபக்கமும் கககுலுக்கி மிக தோழமையுடனே நடந்தது ஆச்சர்யப்பட வைத்தது.. )

பின் பிரதமர் ராணுவத்தை வைத்து மக்களை வெளியேற்ற அவசர கால சட்டம் போட்டார்..
போராளிகள் இடத்தை காலி செய்ய கெடு மேல் கெடு விதித்தார்.. பலமுறை இக்கெடு பயனளிக்கமல் போனதற்கு ராணுவத்திலும் காவல்துறையிலுமே செஞ்சட்டைக்காரர்களின் உறவுகள் இருந்தது முக்கிய காரணி..

இதில் செஞ்சட்டை தலைவரின் அகால மரணத்தில் போராட்டம் தீவிரமடைந்தது.. எங்கள்
அனைவரையும் ( சுமார் 6000 பேர் ) சுட்டாலும் நகரமாட்டோம் என பிடிவாதமாய் அமர்ந்திருந்தனர்..

ஆனால் வர்த்தகமும் டூரிஸ்மும் அதிக பாதிப்படைந்ததால் வேறு வழியின்றி ராணுவ தாக்குதல்
நேற்று அறிவித்தபடி நடந்தது..

இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் ( வெளிநாட்டு பத்திர்க்கையாளர்கள் உட்பட) பலியாகியும்
1000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தும் , போராட்ட இடங்களுக்கு அடிப்படை வசதிகள் நிப்பாட்டப்பட்டதாலும் வேறுவழியின்றி ஒருவழியாக செஞ்சட்டை தலைவர்கள் நால்வர் சரணடைந்தனர்..

அவர்களை சரணடைய செய்த கோபத்திலும் , வருத்தத்திலும் நகரத்தில் ஆங்காங்கே முக்கிய
கட்டடங்களீல் தீ வைத்துவிட்டனர்..

ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய வேர்ல்ட் டிரேட்
செண்டர் என புகழ்பெற்ற புதிய அழகான கட்டடம் தீக்கிறையானது..
நகரமே புகை மண்டலமாக காட்சியளித்தது...

வீதியெங்கும் அவசரகால சட்டத்தால் வெறிச்சோடி காணப்பட்டது..


சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கேற்ப புத்த மதத்தை தழுவி அதன் நெறியோடு
வாழ்ந்து வரும் மக்கள் இப்போராட்டங்களை கண்டு அலுப்படைந்துள்ளனர்..

( என் அண்டை வீட்டு தாய் பெண் கேத்ரீனா, ஐஸ்வர்யாராய் போன்ற அழகுடையவர்.. நேற்று
முழுதும் அழுது சிவந்த முகத்தை பார்க்கவே சகிக்கலை.. அப்பப்ப வந்து என் குழந்தை உங்க வீட்டிலேயே இருப்பதால் சிரமமேதுமில்லையே னு கேட்டுக்கொண்டார்..ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை..கைகளைப்பற்றி தைரியம் மட்டுமே சொல்ல முடிந்தது.. குழந்தைக்கு தாய்லாந்து உணவு ( சூப்) செய்து கொடுத்தால் மிக மரியாதையாக அருந்தியது குழந்தை..சூழ்நிலை புரிந்து.. அதே போல் என் வேலையாளும் பலரும் செஞ்சட்டைக்கு ஆதரவு..அவர்களின் சோகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது..)

போராட்டக்காரர்களின் மீது ராணுவ ஆக்ரமிப்பு , துப்பாக்கி சூடு , கட்டாய வெளியேற்றம்,
வெற்றியல்ல என்பது செஞ்சட்டைக்காரர்களின் எண்ணம்..

பேச்சுவார்த்தையில் முடிக்க வேண்டிய பிரச்னை அழிவில் வந்து முடிந்தது..

இருப்பினும் மற்றொரு நாட்டின் உள்விவகாரம் எந்தளவு உள்ளது என்பது அவர்கள் மட்டுமே அறிந்த உண்மை.. நாம் பார்வையாளர் மட்டுமே.. எந்த பெரிய விபத்து நடந்தாலும் சிறிதும் கோபமோ , எரிச்சலோ காண்பிக்காது புன்னகையோடே வந்து கைகுலுக்கி விபத்து பற்றி பேசி அல்லது உடனே மன்னிப்பு கோரி நம்மை ஆச்சர்யப்படுத்தும் இம்மக்களுக்கா இந்த நிலை என்று நினைக்க தோணுது..

புத்த பிட்சுகள் காலில் செருப்பின்றி பிச்சை பாத்திரம் ஏந்தி வர அவர்களுக்கு பொருள்கள்
வழங்கும் மக்கள் பொது இடத்திலேயே உடனே முட்டிக்கால் போட்டு வணங்கி தம் கைகளில் பொருள்களை நீட்ட பிட்சுகள் எடுத்துக்கொள்வார்கள்.. தானம் வழங்கும்போதும் வழங்கும் கைகள் தாழ்ந்து இருக்கணும் என்ற கோட்பாட்டை இன்னமும் பின்பற்றி வருவதை பார்க்க அதிசயமாயிருக்கும்..

புத்த பிட்சுகள் நம்மை பார்க்க கூட மாட்டார்கள்.. ஒரே ஒரு காவி சீலை.. பிச்சை பாத்திரம்..
செருப்பில்லாத கால்கள்..அரசருக்கு மேல் மரியாதை செய்யப்படுபவர்கள் தேசத்தில் இப்படியும் ஒரு போர்க்களமான நிலை..

பிரச்னைகள் யாரை எந்த நாட்டை , மதத்தை விட்டது..? பிரச்னை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாய் பிரதமர் இன்று அறிவித்தார்...


படங்கள் நன்றி..: http://www.nationmultimedia.com/


Sunday, August 10, 2008






பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா.. - ஒரு பார்வை...
2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8, 2008 தொடங்கி ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெறவுள்ளன. சீனப் பண்பாட்டில் 8ஆம் இலக்கம் இராசியாக கருத்தப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைப்பெறும்.
கால்பந்தாட்டப் போட்டிகள், படகோட்டம், நீச்சல்ப் போட்டிகள், மரதன் ஓட்டம் உட்பட சில போட்டி நிகழ்வுகள் சீனாவின் வேறு நகரங்களில் நடைப்பெறும். குதிரைப் பந்தயங்கள் ஹாங்காங்கில் நடைபெறும்.
விளையாட்டின் முக்கிய அடையாளமாக "நடனமாடும் பெய்ஜிங்" என்பது பெய்ஜிங் பெயரில் காணப்படும் இரண்டாவது சீன எழுத்தான "ஜிங்" என்பதன் அழகியல் வடிவமாகும். போட்டியின் குறிக்கோளாக "ஒரே க‌ன‌வு ஒரே உல‌க‌ம்" தேர்ந்தெடுத்துள்ளார்கள்.. இவ்விளையாட்டில் 10, 500 க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கலாம்..மொத்த நிகழ்ச்சிகளும் 300 கும் அதிகமே.



கடந்த மார்ச் 24ஆம் நாள் கிரீசு நாட்டில் ஏற்றப்பட்ட சுடர் 5 மாத காலத்தில் 19 நாடுகள் வழியாக சீனா வந்தடைந்தது.

மிகப் பெருமையுடைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைத் தான் நடத்துவதில் பெருமிதம் கொண்டது சீனா.

சீனாவின் பிடிக்குள் சிக்கி, பெயரளவிலான தன்னாட்சிப் பகுதியாகக் கிடக்கும் திபெத், தனது உரிமைக் குரலை தொடர்ந்து எழுப்பியது. , சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் நோக்கில் சீனாவிற்குக் கொண்டு செல்லப்படும் ஒலிம்பிக் சுடரைத் திபெத்தின் விடுதலைச் சுடராக மாற்றிக் கொண்டது திபெத்.

ஒலிம்பிக் விளையாட்டு என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட கிரேக்கர்களின் தேசியத் திருவிழா. கிரேக்கர்களின் தெய்வம் வாழ்ந்த ஒலிம்பியா மலையில், கிரேக்க தெய்வத்தை வழிபட கிரேக்கர்கள் ஒலிம்பிக் விழாவை விளையாட்டு போட்டிகளை நடத்திக் கொண்டாடினார்கள்.
பெய்ஜிங்கில் பண்பாட்டு மற்றும் விளையாட்டு மையம், ஆங்கில மொழியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் பொருட்டு ஆங்கிலம் விசேஷமாக கற்றுத்தருகிறது... ஆச்சர்யம் என்னவென்றால் ,மாணவர்களின் சராசரி வயது, 58 .
பெய்ஜிங் மாநகர அரசின் திட்டத்தின் படி, 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறும் போது, 40முதல் 60 லட்சம் வரையான பெய்சிங் நகரவாசிகள் ஆங்கில மொழி பேச முடியும்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது, பெய்ஜிங் காற்று தர பிரச்சினையில் , காற்று தரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், பெய்ஜிங் சுற்றுச்சூழல் துறை மிகவும் கவனம் செலுத்தி பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


ஒலிம்பிக் குழுவின் உலக ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டாளி, தொலைக்காட்சி ,அஞ்சல் நிறுவனங்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் சந்தை வளர்ச்சி ஆகிய திட்டங்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் ஏற்பாடு மற்றும் அனைத்து பணிகளுக்கு, அதிக நிதி, வசதிகள், தொழில் நுட்பம், சேவை ஆகியவற்றை திரட்டியுள்ளன.


பெய்ஜிங் ஒலிம்பிக் பூங்காவின் மையப் பிரதேசத்திலுள்ள தென் பகுதியில் , போட்டிக்கான சிறப்பு வாய்ந்த அரங்குகளில் ஒன்றான 17 ஆயிரம் இருக்கைகள் கொண்ட, சுமார் 80 ஆயிரம் சதுரமீட்டருள்ள ,நீர் கன சதுர விளையாட்டரங்கு, அதிகாரப்பூர்வமாகக் கட்டி , பயன்படுத்தப்படத் துவங்கியது.

பெய்ஜிங், 31 விளையாட்டரங்குகளையும் பயிற்சியரங்குகளையும் ,இதர 30 விளையாட்டரங்குகள், 44 பயிற்சியரங்குகளுடன் , 29வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தேவையை நிறைவு செய்யும் வகையில்,கட்டியமைத்துள்ளது

கிட்டத்தட்ட 63 தொழில் நிறுவனங்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஒத்துழைப்பு நிறுவனங்களாக மாறியுள்ளன.நிதி, பொருட்கள், தொழில் நுட்பம் மற்றும் சேவை போன்று பல்வேறு வகையிலும் ஆதரவுகளை இந்தத் தொழில் நிறுவனங்கள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு வழங்கும். இதனால் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு தலைசிறந்த பொருட்களின் அடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழில் நிறுவனங்களைப் பொறுத்து, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீனாவின் சந்தையை விரிவாக்குவதற்கு வலிமையான வாய்ப்பை வழங்கும்.
சீனாவின் மிகப்பரப்பிலான ஆழமான பண்பாட்டையும் "ஒரே உலகம், ஒரே கனவு" என்ற தலைப்பின் அடிப்படையில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்திக்காட்ட விரும்பியுள்ளது..
பெய்ஜிங்கிற்கு வருகை தரும் வீரர்கள், பயிற்சியாளர்கள் பல்துறை அதிகாரிகள், வெளிநாட்டு பார்வையாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6 இலட்சம் இரூக்கலாம்.பண்பாட்டு நடவடிக்கைகள் ஒலிம்பிக் நடவடிக்கைகளின் முக்கிய பகுதியாகும். அனுமதிபெற்றுள்ள 20,000 மக்கள் தொடர்பு ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும்..
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவின் தீபத்தை ஏற்றும் வழிமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டவட்டமான நுணுக்கங்கள், இரகசியமானது .தொடக்க விழா சடங்கு, கலைநிகழ்ச்சிகள், வீரர்கள் விளையாட்டரங்கில் நுழைவது, தீபத்தை ஏற்றுவது ஆகிய 4 பகுதிகளை இத்தொடக்க விழா உள்ளடக்கும்.

வண்ணமயமான வான வேடிக்கைகள் மூலம் ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்களை முதன்முறையாக ஆகாசத்தில் காண்பிக்கப்படும்.. மேலும் கொடி ஏற்றத்தின்போது மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு செல்லும் அளவிற்கு கணினியின் துணையோடு வான வேடிக்கைகள் வெடிக்கப்படும்..

நிகழ்ச்சியின் இறுதியில் 2008 முகங்கள் உலகம் முழுவதிலிருந்தும் காண்பிக்கப்படுவது விசேஷமாக இருக்கும்..


மேலதிக விசேஷமான பாதுகாப்புகள், பார்வையாளருக்கும், வீரர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..இதில் FBI யும் அடங்கும்..

மேலும் பெய்ஜிங்கில் வாகன , போக்குவரத்து வசதிகளும் , அதி வேக ரயில்கள் ஓவ்வொரு 5 நிமிடங்களுக்கு ஒன்றாக வசதியாகவே உள்ளது பெய்ஜிங்கில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான வாடகை மகிழ்வுந்துகள் இருக்கின்றது..

இதைத்தவிர உணவகங்கள், சர்க்கர நார்காலி வசதியுடன் கூடிய வண்டிகள், மது அருந்துமிடங்கள், தொலைபேசி வசதிகள், புகைப்பட வீடியோ வசதிகள்,மருத்துவ வசதிகள், இப்படி தேவையான அனைத்து வசதிகளும் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளன... பொது மக்களுக்கும் உதவி செய்திட விசேஷ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது..
இந்த விளையாட்டை காண்பதற்காக விற்கப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் அதிரடியாக விற்றுத் தீர்ந்தன... இதற்காக 2 நாள்கள் கூட வரிசையில் காத்திருந்தார்கள் மக்கள்..

சீன கலாச்சாரத்தோடு இணைந்த சில நகைச்சுவை பாத்திரங்களாய் விளையாட்டுகளை சித்தரித்து மகிழ்கிறார்கள்..படத்தில் உள்ளது போல..மேலும் அழகான வேலைப்பாடுகள் நிறைந்த சிறபங்கள் பூங்காக்களை அலங்கரிக்கின்றன்..


பல பிரச்னைகளுக்கிடையிலும் இந்த விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதோடு தம் கலாச்சாரத்தையும் , பண்பாட்டையும் பேணும் சீனாவையும், இந்த விளையாட்டுக்கள் நல்ல முறையில் நடைபெறவும் நாமும் மன மகிழ்வுடன் வாழ்த்துவோம்...