Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, August 22, 2011

வலிமையை கற்பது?



மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பெற்றவர் எனக்குத்தெரிந்து இரு குடும்பம் உண்டு.. ஒருவர் மிகப்பெரும் பணக்காரர். மற்றொருவர் நடுத்தர வர்க்கம்.

பணக்காரர் வீட்டில் அக்குழந்தையை கவனிக்க பல ஆட்கள் உண்டு.. இருந்தாலும், அந்த தாய்தான் விரும்பி எல்லா வேலையும் அக்குழந்தைக்கு செய்வார்.. அந்த குழந்தையைத்தான் அதிகம் நேசிக்கவும் செய்வார். உலக சுற்றுலா செல்லும்போதெல்லாம் அக்குழந்தையையும் கூடவே கூட்டிச்செல்வார்கள்.. அப்போது அந்த தாய்தான் முழு கவனிப்பும்..அந்த தாய் முன்னாள் Miss. **** College . ஆனால் வாழ்க்கை இந்த குழந்தை வந்தபின் முற்றிலுமாக மாறிப்போனது அவருக்கு..

அடுத்த குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறக்கும்போது நல்லபடியாக பிறந்து ஒரு சிகிச்சை மூலம் மனவளர்ச்சி குன்றியது.. தாய் பார்த்துக்கொண்டிருந்த ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு முழு நேரமும் குழந்தையோடு. செய்யதா செலவில்லை.. எல்லோரும் அக்குழந்தையை மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் விட சொன்னார்கள்.. அவரோ கோபப்பட்டார்.. நான் உயிரோடு இருக்கும்வரை அப்படி செய்யவேமாட்டேன் என அருமையாக வளர்த்தார்.. ஒரு தம்பியும் பிறந்து அவனும் இன்று அப்பெண்ணுக்கு மிக உதவியாக..

இது ஏன் திடீரென?.. நேற்று மார்க்கெட்டுக்கு சென்ற போது ஒரு பெண் தன் 12 வயது குழந்தையை Pram ( குழந்தைகளை எடுத்து செல்லும் வண்டி ) லிருந்து எடுத்து மடியில் வைத்துக்கொண்டே வியாபாரத்தையும் கவனித்தார்.. அந்த குழந்தை உயரம்தான் இவரும்.. மெலிந்த உடல்.. அவர் உடல்வாகுக்கு அக்குழந்தையை தூக்கவே முடியாது.. ஆனால் அப்படியே அள்ளி எடுத்து மடியில் உட்காரவைத்ததை பார்த்து அசந்து போனேன்..எங்கிருந்து கிடைத்தது அந்த சக்தி?.. வெறித்தனமான பாசம் இருந்தால் மட்டுமே இப்படியெல்லாம் செய்ய முடியும்.. தான் ஏழ்மை நிலையிலிருந்தாலும் , தன் குழந்தையை தன்னோடு வைத்துக்கொண்டு கவனிப்பது?..என்ன ஒரு வலிமை இருக்கணும் ?..

சில நேரம் நாம் நினைப்போம் , எனக்கு வந்தால் தாங்க முடியாது என.. ஆனால் வரும்போது வேறு வழி இருப்பதில்லை.. தாங்கித்தான் ஆகிறோம்..தாங்க முடியா சிலர் மட்டுமே மரித்துப்போவதும்.. வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் எல்லாமே ஒரு புதிர்போலத்தான்.. எல்லாவற்றுக்கும் விடை தயாராக இருப்பதில்லை..அவரவர் சிலுவைகளை அவரவரே சுமக்கணும் இங்கே.. ஆனால் இதில் முக்கியமான விஷயம், நல்ல மனிதர்கள் , ஊக்குவிப்போர் அமைவது , அல்லது அமைத்துக்கொள்வது.. எந்த ஒரு பிரமாண்டமான பிரச்னையென்றாலும், ஆறுதலுக்கு ஒரேயொரு துணிவான நல்ல மனம் கிடைத்தால்கூட போதும், உலகை ஜெயித்திடலாம்.. வலிமை பெற்றிடலாம்..

நான் சொன்ன மேற்கூறிய பெண்களுக்கும் இதே போல யாராவது இருக்கக்கூடும்.. அந்த நல்லவர்கள் வாழ்க.. அப்படியான ஒரு மனிதராக எவருக்காவது நாம் இருக்கிறோமா, இருந்தோமா, என நம்மை சுயபரிசோதனை செய்துகொள்வோம்.. அப்படி நாம் இருந்திருந்தால் அது தரும் மன திருப்திக்கு ஈடு எதுவுமே இல்லை..அப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் விட்டுவிடாதீர்கள்..

இப்படியான மனிதர்களை சந்திக்கும் சம்பவங்கள் நம்மை , நம் வாழ்வை ஆன்மீக பாதைக்கு திருப்பிவிடும்..நம்மைச்சுற்றி நடப்பவைகளை பார்த்து சிந்திப்பதும், கேள்வி கேட்பதும், என்ன செய்யலாம் என யோசிப்பதும்தான் என்னைப்பொறுத்தவரை ஆன்மீகம்.. அதுதான் திருப்தியும்.. நிஜமான ஆன்மீகவாதிகள் என நீங்கள் கருதுபவர்களை கொஞ்சம் மனக்கண் முன் கொண்டு வாருங்கள்.. அவர் எளிமையானவராய் , அங்கீகாரம் விரும்பாதவராய் , சக மனிதனுக்கு என்ன செய்யலாம் என்ற சிந்தனையுள்ளவராய் இருக்கக்கூடும்..

குழந்தை வயற்றில் இருக்கும்போது ஒரு தாய்க்கு என்னென்ன கற்பனைகள் இருக்கும்.?.. நாள் நெருங்க நெருங்க , குழந்தை எவ்வித ஊனமுமின்றி நல்லபடியாக பிறந்தால் போதும் என நினைக்காத தாயே இருக்க முடியாது..ஆனால் நாம் நல்லபடியாக பிறந்து வந்தாலும் , மனிதர்களை , எத்தனை விதமாக பிரித்துப்பார்த்து பழகுறோம்?.. சாதி , மதம் , ஆணா, பெண்ணா, என்ன இனம், மொழி, கருப்பா , சிவப்பா, ஏழையா பணக்காரனா என..

இப்படி செய்வதால் நிஜமாகவே மனம் மகிழ்வாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்க முடியாது.. ஆனாலும் ஆட்டு மந்தைக்கூட்டமாக ஏன் எதுக்கு என கேள்வி கேட்காமல் பின்பற்றித்தொலைக்கிறோம்.. சிந்தியுங்கள்.. எது உங்கள் ஆழ்மனதுக்கு சரி எனப்படுகிறதோ அதை கேள்வி கேளுங்கள்.. தனித்திருப்பதைப்பற்றி கவலைப்படவேண்டியதில்லை.. அப்படியானவர்களே மாற்றம் கொண்டுவந்தார்கள்.. மனிதநேயம் வளர்த்தார்கள்..

சாதி , மதம் , இனம் , எல்லாவற்றையும் கடந்து ஒரு குழந்தையின் மனநிலைக்கு வர முயலுவோம். வலிமை பெறுவோம்..இப்படியானவர்களை சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் வலிமை எனக்கும் தொற்றிக்கொள்கிறதுதான்..இப்படி விசேஷ குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் ஒவ்வொருவரையும் வணங்குகிறேன் . ஆதரித்து ஊக்குவிக்கும் ,பல ஆசிரியர்கள் , பல தொண்டு நிறுவனங்கள் , முக்கியமாக பெற்றோர், உடன்பிறந்தோர்க்கு , சொந்தங்களுக்கு எம் வணக்கங்கள்..





( என் இரண்டாவது குழந்தைக்கு Down syndrome பரிசோதனை செய்யணும் என மருத்துவர் சொன்னபோது மறுத்துவிட்டேன்..கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு ஊசி செலுத்தி சாம்பிள் எடுப்பார்களாம்.. அது தவறி வேறெங்கோ படக்கூடிய வாய்ப்புண்டாம். அதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாமல் மறுத்தேன்.. அப்படி ஒரு குழந்தை பிறக்கணும்னா பிறக்கட்டும் என பிடிவாதமாக இருந்தேன்.. இது என் கருத்து மட்டுமே.. வளர்க்க முடியாதவர்கள் செய்வது நல்லதே )


டவுன் சின்ட்றோம் பற்றிய தகவலுக்கு கிளிக் செய்யவும்.


( அலுவல் நேரம் பின்னூட்டம் தவிர்க்கவும்..நன்றி. )

படங்கள் நன்றி கூகுள்




Monday, July 4, 2011

மிஸ் யுவகிருஷ்ணா- புதிய தலைமுறை ?.:)







யுவகிருஷ்ணாவின் அராஜக , வக்கிரமான பேச்சு யாவரும் அறிந்ததே..

பல முறை தொடர்ந்து எரிச்சலூட்டி வந்தார் பஸ் ல்.

நானும் இவன் தரம் அறிந்து கண்டுகொள்ளாமலே சென்றேன்..

இவனைப்போன்றவரிடம் மோதுவது வெட்டி வேலை நேர விரயம் மட்டுமே. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியா கோழைகள்..

சமீபத்தில் மீண்டும் மீண்டும் வம்பு செய்ததோடு ஏழர யின் விளக்கம் கேட்டமையால் பதிலளிக்க வேண்டி வந்தது இந்த சாருவின் ஆதரவாளரிடம்..

அவன் பேச ஆரம்பித்த விதத்தை பாருங்கள்..அப்ப புரியும் நான் ஏன் இவனை மிஸ் என தலைப்பில் போட்டேன் என..:)

என்னை ஆணாக கருதுவது எனக்கு இழிவல்ல. பெருமையே..:). இந்திரா காந்தி சொன்னது போல்..

------------------


யுவ கிருஷ்ணா - மிஸ்டர் சாந்தி!

எனக்கு பொம்பளைகளை திட்டுவதில் உடன்பாடு இல்லை. ஆனால் உங்களை பார்த்தால் பொம்பளை மாதிரியே இல்லை.

எனக்கு எதுக்கு செருப்படி? விளக்கம் ப்ளீஸ்...
6/௩0

jmm s - ஆனால் உங்களை பார்த்தால் பொம்பளை மாதிரியே இல்லை.//

ரொம்ப நன்றி..

உங்களை பார்த்தாலும் ஆண் மாதிரியே தெரியலை..

:))
Edit6/௩0

யுவ கிருஷ்ணா - அப்படிங்களா சார்? :-) உற்றுப் பாருங்க என் மூக்குக்கு கீழே மீசை தெரியும்... உங்க லெவலுக்கு எனக்கு மீசை வளரலேன்னாலும், ஏதோ கொஞ்சம் வளர்ந்திருக்கு....6/௩0

யுவ கிருஷ்ணா - //எனக்கு எதுக்கு செருப்படி? விளக்கம் ப்ளீஸ்...//

இந்த கேள்விக்கு துப்பிருந்தா விடை சொல்லுங்க மிஸ்டர் சாந்தி....

அப்படி செருப்படி கொடுக்கணும்னு நெனைச்சா, நேர்லே வாங்க. நானும் கூட பாட்டா ஷூ போட்டிருக்கேன். ஒருத்தரை ஒருத்தர் ஜோட்டாலே அடிச்சி விளையாடிக்கலாம்

:-)
6/30 (edited 6/30)

jmm s - மொக்கைக்கு எனக்கு நேரமில்லை

--------------------

இவனோடு இவன் தரத்துக்கு பேச மனமில்லாமல் விலகினால் மீண்டும் அசிங்கமா பேசினான்..


செருப்பால் அடிப்பேன் என சொன்னது அவன்தான். ஜாக்கி கு குழந்தை பிறந்த போது நான் சொன்ன விஷயம் இது

நான் போட்ட கமெண்ட் இது கீழே..

----------------


jmm s - இனியாவது நிர்வாணப்படத்தை பற்றி பேசும்போதும் போடும்போதும் தன் பெண் குழந்தை முகம் நியாபகத்துக்கு வரட்டும்..

நாட்டிலுள்ள மற்ற பெண் குழந்தைகளும் காப்பாற்றப்படட்டும்...

பெண் குழந்தை பெறுவது அதிர்ஷ்டம்.. வாழ்த்துகள் ஆபாச படம் போடாத தந்தைக்கு



-------

ஆக குழந்தை பற்றி பாராட்டியேயுள்ளேன்..

ஆனால் இவன் அதை திரித்து பஸ் விட்டதோடு நான் குழந்தையை திட்டியதாய் பொய் பரப்பினான்..அவன் நோக்கம் என்னை பற்றி அவதூறு பரப்புவது . அதை தொடர்ந்து செய்கிறான்..

----------------
யுவ கிருஷ்ணா • 1:36 PM • Buzz

சமீபத்தில் ஒரு நண்பருக்கு குழந்தை பிறந்திருக்கிறது.

ஆனால், ஒரே ஒரு ஜென்மம் மட்டும் இந்த மகிழ்ச்சியை பொறுக்க மாட்டாது, குழந்தை பெற்ற நண்பர் குறித்த மோசமான கமெண்டுகளை எழுதி தனக்குதானே மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.


கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் இணையத்தில் சகஜம். ஆயினும் இது மாதிரியான சந்தர்ப்பங்களையும் தன்னுடைய தனிப்பட்ட காழ்ப்புணர்வுக்கு தீனியாக்கி அரிப்பை தீர்த்துக் கொள்ளும் ஜென்மங்கள் செருப்பால் அடிக்கப்பட வேண்டியவர்கள்.


--------------

.. ஜாக்கி சேகர் ரோட்டில் போகும் பெண்களை வர்ணித்து போடுவது மிக மிக அசிங்கமான செயலும் . ஆபாசமானதும்.. சின்ன குழந்தையை கூட விமர்சிக்காமல் விட்டதில்லை ஜாக்கி...

ஜாக்கி சேகரின் ஆராய்ச்சிகள்..:

"அதில் ஒரு சின்ன குட்டி பெண். அவள் அணிந்து இருந்த டிரஸ் செம கியூட்டாக இருந்தது...அவளைதான் வண்டியின் டேங்கில் முன் பக்கம் உட்கார வைத்து ஓட்டிக்கொண்டு வந்து இருக்க வேண்டும்.. காரணம் அவள்தான் அதிகம் நனைந்து இருந்தாள்.. பிராய்லர் கறி கோழி மீது சட்டென தண்ணீர் ஊற்றினால் சிலிர்த்து நிற்குமே .. அது போல சிலிர்த்து இருந்தாள்... அவள் கையில் இருந்த ரோமகால்கள் சிலிர்த்து காணப்பட்டன..

வழியில் ஒரு வாகனம் என்னை கடந்து போனது... பையன் டேங்கில் உட்கார்ந்து இருந்தான்...அப்பா ஒட்டினார்.. அப்பாவுக்கு பின்னால் ஒரு வயதுக்கு வந்த பெண் இரட்டை கால் போட்டு உட்கார்ந்து இருந்தது.. வண்டியில் பாக்ஸ் இருந்த காரணத்தால், அந்த பெண்ணால் சரியாக உட்காரமுடியவில்லை ஙே என்று உட்கார்ந்து கொண்டு போனது. அந்த பெண்ணின் அம்மாவின் பின்புறம் இதுக்குமேல எதுவும் இல்லையா என்பது போல் பாவமாக தொங்கியது.. அந்த அம்மா நிறைய பவுடர் பூசி இருந்தார்கள்... ஜாக்கெட்டில் பின்பக்கம் முடிச்சி போட்டு தைத்து இருந்தார்கள்.. முடிச்சி போட அவரின் கணவர் உதவி செய்து இருக்க வேண்டும்.. செம டைட்டாக முடிச்சி கோபத்தில் போட்டு இருப்பது தெரிந்தது... வண்டி ஒரு பள்ள மேட்டில் இறங்கி ஏறினாலோ அல்லது எம்டிசி ஏற்படுத்திய புழுதியினால் அசுக்கு என்று தும்பினால் எந்த நேரத்திலும் அந்த முடிச்சி அறுத்துக்கொள்ள அனேக சான்ஸ் இருந்தது.."

-----------------

மேலே வர்ணிக்கப்பட்டுள்ள பெண் நீங்களாகவோ, இல்லை உங்க வீட்டு பெண்ணாகவோ இருந்தால் என்ன சொல்வீர்கள்.. ஜாக்கியை பாராட்டுவீர்களா?.

உங்க வீட்டு குழந்தையை பிராய்லர் கோழிக்கு ஒப்பீடு செய்தால் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்..?


நான் போட்ட கமெண்ட் ஆபாசமா இல்லை இவர் பதிவும் வழிநடத்தலும் ஆபாசமா என..?

இதை பதிவுலகில் தொடர விடலாமா ?..யோசித்துக்கொள்ளுங்கள்..


நான் இல்லாவிட்டாலும் வேறு யாராவது தட்டிக்கேட்கத்தான் போகிறார்கள்..


நான் மட்டும் அறிவுரை சொல்லவில்லை என்பதையும் கவனிக்க..பலருமே..

ஸ்ரீராம் பதிவிடும்போது


ஜாக்கி.. ஒரு பெண்ணுக்கு தகப்பனாயிட்டே.. இனிமேலாவது அடங்குவியா நீயீ????

னு தான் போட்டார்.. சில பின்னூட்டங்களும் அதே போல் வந்ததா இல்லையா னு ஸ்ரீராமிடம் கேட்டுக்கொள்ளவும்..



-----------------

யுவ கிருஷ்ணா - மொக்கை சாந்தி அவர்களே!

ஜாக்கிசேகரின் குழந்தையை திட்டியதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறேன். இதற்கு செருப்படியா?

யுவ கிருஷ்ணா - jmm s என்கிற பைத்தியக்கார சாந்தி!

தில்லு இருந்தால் சென்னைக்கு வா. என்னிடம் ’பாட்டா’ ஷூ இருக்கிறது. நீ அடிப்பதற்கு முன்னால் நான் அடிக்கிறேன் செருப்பால் உன்னை.

யுவ கிருஷ்ணா - தோழர!

ஒரு பெண்மணி மனம் பிறழ்ந்து போகிற வருகிறவனை எல்லாம் செருப்பால் அடிப்பேன் என்று உளறிக் கொண்டிருந்தால், பெண் என்ற ஒரே காரணத்துக்காக சும்மா இருக்க முடியாது.

இந்த மெண்டலுக்கு இன்றே ஒரு முடிவு கட்டியாக வேண்டும்.

யுவ கிருஷ்ணா - லூசு சாந்தி!

அவன் இவன்னு ஏக வசனத்துலே பேசினா, அவ இவன்னு பேசுவேன்.

பொதுவெளியில் பேசுறோம்னு கொஞ்சமாவது அறிவிருக்கா? ஏழு கழுதை வயசாவுதுல்லே?

என்னை விட உனக்கு பதினைஞ்சி வயசு அதிகம் இருக்குமில்லே? சின்னப்பய கிட்டே வந்து செருப்படி படப்போறேன்னு சொல்றே? வெட்கமாயில்லே... த்தூ.. என்ன ஜென்மமோ...


யுவ கிருஷ்ணா - அடிங்... அறிவில்லே முண்டம்..


-----
மீண்டும் எப்படி திரிக்கிறான் பாருங்கள்..

குழந்தையை எங்கேயாவது திட்டினேனா?..

இவனுடைய மிரட்டலுக்கெல்லாம் பயப்படுவோம்னு நினைத்தான் போல.

என்னிடம் மட்டுமல்ல பலரிடமும் இப்படியே பேசி வருகிறான்.. வேணுமென்றே இடைஞ்சலும்..

இதைக்கூட எனக்கு பதிவா போட விருப்பமில்லாமலே இருந்தது.. நண்பர்கள் சிலர் இவனை பற்றி கண்டிப்பாக அறிவிக்கணும் என்பதால் பகிர்கிறேன்..
------------------

jmm s - அறிவில்லே முண்டம்..//

உன் அம்மாவை சொல்றியா?..:))

சரி



யுவ கிருஷ்ணா - இந்த பைத்தியக்கார முண்டம் பேசிக்கொண்டிருக்கும்போதே அம்மாவையெல்லாம் இழுக்கிற்து .

-------------------

கவனித்தீர்களா , அவன் கேவலமான பேச்சை அவனிடமே திருப்பியதும் அவனுக்கு வரும் கோபத்தை..?

அதாவது இவனைப்போன்றவர் என்ன வேணா ரவுடித்தனமா பேசலாம்.. ஆனால் அதையே நாம் அவர் குடும்ப உறுப்பினரிடம் திருப்பினால் கோபம் வருது..

இவனெல்லாம் ஒரு பத்திரிக்கையாளனாம்.. உடன்பிறப்பாம்.. அந்த பத்திரிக்கையையே கேவலப்படுத்தும் விதமாய் இருக்கு இவன் பேச்சு.. ( இவனலாயே திமுக மீது எரிச்சலடைந்தோர் உண்டு )

இதையெல்லாம் அந்த பத்திரிக்கை அலுவலுக்கு அனுப்பி வைத்தால்?..

இது மட்டும்அல்ல இன்னும் நிறைய பேசி இருக்கிறான்.. பஸ் ல். நான் கண்டுகொள்வதில்லை..

செருப்பால் அடிப்பது என்ன அத்தனை எளிதா என்ன தமிழ்நாட்டில்?.. ஏன் இந்த வெத்து சவடால்.?..:)))

இவன் அடித்தால் இவன் வீட்டிலுள்ளவர்களை சும்மா விடுவாங்களா என்ன , அடி வாங்கியவர்கள்..?..

பதிவுலகம் வன்மம் வளர்க்கும் இடமா?..

இதை அவன் அலுவலகம் அனுப்பினால் என்னாகும்?..( ஏற்கனவே ஒருவர் அதை செய்ததாய் தகவலுண்டு )


ஆனால் இதுவே இறுதியாக இருக்கட்டும்.. இது மன்னிப்பும் அவனுக்கு..

(Abraham Lincoln"I have always found that mercy bears richer fruits than strict justice." )


யாராலும் சவடால் விட முடியும். வன்மம் வளர்க்க முடியும் .. ஆனால் அது தேவையற்றது என்றே விலகி இருக்கிறார்கள்..

வன்முறை என்பது வீரமல்ல..கோழைத்தனம்..


ஏன் அமைதியாக போவது?..என இந்த விடீயோவை க்ளிக் செய்து பாருங்கள்..

ஜெயம் கொண்டான் பட க்ளைமேக்ஸ்

இதுதான் அனைவருக்குமான பதில்..


இது போன்ற பதிவை போட்டமைக்கு வருந்துகிறேன்.. நட்புகளிடம் என் மன்னிப்பும்.. வன்முறையாளர்களை அம்பலப்படுத்தவே இது..

சில கருத்துகளை நான் சொன்னால் அதை கருத்தால் எதிர்கொள்ள பழகணும்..

சிலருக்கு பயம்.. எங்கே தன்னுடைய இடம் பறிக்கப்படுமோ என.. அதனாலேயே சிலரை பழித்து ஒதுக்குவது.. முக்கியமா பெண்கள் பயந்து ஓடுவார்கள் என்ற எண்ணம்..

இதையெல்லாம் தாண்ட பழகிக்கொண்டார்கள் பெண்கள்.. இனிமேலும் இந்த மிரட்டல் உருட்டல் எல்லாம் பலிக்காது..

மதார் என்ற பெண்ணும் , முகிலனும் இத்தகையோரொடு சேர்ந்து பேசிய மிக ஆபாசமான வார்த்தைகள் நேரமிருப்பின் தனிப்பதிவாக வரும்..

இவையெல்லாம் பதியப்படணும்.. வன்முறை எப்படி வளருகிறது , ஒரு கூட்டத்தினரின் சுயநலத்தால் வளர்த்து எடுக்கப்படுகிறது என்பதை புரியணும்...

"நல்லவர் யாவரும் ஒதுங்கிக் கொண்டால் நரிகளின் நாட்டாமை தொடங்கிவிடும் "


தொடரும்....

(The Nagpur bench of the Bombay High Court has held that abusing or using filthy language to annoy someone can be an offence, even if it does not take place in a public place. The accused in this case had been convicted by a lower court under Section 294 (obscene acts and songs) of the Indian Penal Code.

According to this section, “whoever, to the annoyance of others... sings, recites or utters any obscene song, ballad or words, in or near any public place, shall be punished with imprisonment which may extend to three months.

http://www.hindustantimes.com/Verbal-abuse-need-not-be-in-public-place-to-attract-punishment/Article1-526477.அச்ப்க்ஸ் )














..

Tuesday, March 22, 2011

மனம் தளராமல் - பதிவுலக ஊக்க கட்டுரை. ( சேட்டைக்கரன், Karthik L(LK) அம்பலமும் )



எனக்கு அமைந்த நட்புகள் மிக மென்மையானவர்கள்.. நான் காயப்படக்கூடாது என விரும்புபவர்கள்..

உனக்கேன் இந்த வேலை . சமூகத்தை பற்றி நீ ஏன் கவலைப்படணும் என்கிறார்கள்..

அனேக கட்டுரை வருவதை நாம் பார்க்கிறோம்.. அன்பா இருப்பது , மகிழ்ச்சியா இருப்பது எப்படி என..

அன்பானவர்களால் சூழ்ந்து இருங்கள்.. அமைதி தருபவற்றை படியுங்கள் என.. நிச்சயமா செய்யலாம்தான்.. ஆனால் அழ்மனதில் ஒரு குறுகுறுப்பு இருக்கும்..

சமீபத்தில் தனலட்சுமி என்ற சிறுமையை நாய் கூண்டில் அடைத்து வைத்து சித்ரவதை , சூடு போடப்பட்டு கொலை செய்யப்படுகிறாள்..

நாம் வாழும் காலத்தில் நம் அருகில் தான் நடக்குது.. ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் அந்த சிறுமி பட்ட வேதனையை..

கேட்ட தினத்திலிருந்து இன்றுவரை தூங்க முடியவில்லை எனக்கு.. என் குழந்தையாய் தான் பார்க்கிறேன்..

இது போல் 5000 குழந்தைகள்.. அடிமையாக.. என்ன செய்ய போகிறோம் நாம்.?

நிம்மதி தேடி ஆழியாருக்கும் , ஆலயத்துக்கும் , காணிக்கை போட்டும் , யோகா செய்தும் மன அமைதி கிட்டியது என பரப்புவோமா?..நாமே நம்மை ஏமாற்றுவோமா.?.

ஜப்பானில் அழிவு என்றால் அதிர்வு நம் மனதிலும் தான்..


நாளையே நான் மரணித்து போகலாம்.. ஏன் இப்பவே கூட.. என்ன கொண்டு வந்தோம் என்ன கொண்டு போக..?. ஆனா ஒரு திருப்தி இருக்கணும் .. நம்மால் முடிந்த சிறு துரும்பை நகர்த்தினோம் .. அநீதியை எதிர்த்தோம். அதனால் அடி வாங்கினோம் என..நாட்டுக்கே விடுதலை வாங்கித்தந்த மஹானுக்கு கிடைத்த பரிசு துப்பாக்கி குண்டுதான்..

நமக்காக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிடணும்.. அதே போல் இன்பம் துன்பம் எல்லாம் அனுபவிச்சாச்சு என்ற நிறைவு நமக்கே வரணும்.. வாழ்வின் இறுதிவரை சுயநலத்தோடு " நான், " எனக்கு " என வாழணும் என நினைப்பவருக்கு எல்லாமே துன்பமயம் தான் என்னைப்பொறுத்த்வரை....இனி புகழ்ச்சி, இழிவு எல்லாம் எனக்கு சமமே..

சொல்லப்போனால் நான் சமூகத்துக்காக எடுக்கும் ஒவ்வொரு படியிலும் எனக்கு ஒவ்வொரு சவால்தான் காத்திருக்கு..அதிகமான இழிவுகளும் , மிரட்டல்களும்..
ஆனால் இவற்றையெல்லாம் வலி என்றே கணக்கிட கூடாது.. எது வலி.. இயலாமையில் தனலட்சுமி வெந்து மடிந்தாளே.. கொஞ்ச வேண்டிய
குழந்தையை மனம் செத்து அனுப்பி வைத்தாளே ஒரு தாய்..அவமானம் தாங்காது செத்து மடிந்தாளே திவ்யா.. அவள் தாய்க்கு இருக்குமே வலி. அதுதான் வலி.. ஈடு செய்ய முடியா இழப்பு..

இப்படி எத்தனை எத்தனை பேர் நம்ம மத்தியில் வாழ்ந்து மடிகிறார்கள் தினமும்?.. இதையெல்லாம் பார்த்துவிட்டும், " நான் " , " எனக்கு " என மன நிம்மதி தேடி அலைபவர்களை பார்க்க மிக கேவலமாக இருக்கு எனக்கு.. நிம்மதி, அன்பு, மகிழ்ச்சி எல்லாமே அருகில்தான் இருக்கு.. நம்மை சுற்றிதான் இருக்கு குப்பைகளும்.. அதை அகற்ற எவ்வித முயற்சியும் எடுக்காமல் , அல்லது எடுப்பவர்க்கு ஆதரவு தராமல் , இடைஞ்சல் தந்து தன் பலத்தால் எதிர்த்து இழிவாக பேசி திரிபவர்களை என்ன செய்ய?.. இன்னொரு முக்கிய விஷயம் தமிழருக்கு தமிழர் மீதான நம்பிக்கை மிக குறைந்து வருகிறது.. நண்டு கதை போல.. அதற்கு முக்கிய காரணம் தமிழக தலைமையும், ஊடகத்தின் ஆதிக்கமும் .. தமிழ் மக்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பிப்பதிலேயே இருக்கின்றார்கள்.. அப்படியான ஒரு சூழல் அமைந்துள்ளதும் சாபக்கேடு..





ரவுடியாக, அடாவடியாக இருந்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்பது எத்தனை கெடுதல்.. அதே தானே பதிவுலக அரசியலிலும் பார்க்கிறோம்?..ரவுடிக்கு ரவுடி பாஷையில் பதிலளித்தால் மட்டுமே பயம் வருது... சாபக்கேடுதானே?..

இருங்க அவர்கள் பாராட்டுகளையும் போடுறேன் பலரும் அறியணும்..

தினமும் என்னைப்பற்றி எழுதாவிட்டால் பொழுதே விடிவதில்லை அவர்களுக்கு.. :)

சேட்டைக்காரன் :-)))) • Mar 6, 2011 • Buzz
ரொம்ப நாளைக்கப்புறம் இங்கிட்டு வந்திருக்கோமப்பு! அதுவும் "தாய்"க்குலத்தின் தன்னிகரில்லா பிரதிநிதி, பெண்குலத்தின் விடியல் ஒருவர் சிலம்பில்லாம சலம்பிட்டிருக்கும்போது, அதாவது புலம்பிட்டிருக்கும்போது போய் ஒரு மைனஸ் ஓட்டுக்கூடவா போடாம இருப்பீங்க? ஷேம் ஷேம் பப்பி ஷேம்!


சேட்டைக்காரன் :-)))) - //கேன் இட் க்ளீன் தி சமுதாயம்//

சமுதாயம் என்பதில் சமு+"தாய்"+"அம்" என்று பிரித்து நோக்கிடில் நீங்கள் தாய்லாந்தில் இருக்கும் ஏதோ ஒரு அம்மணியைப் பற்றித்தான் எழுதியிருக்கிறீர்கள் என்று அவர் ஒரு இடுகை போடுவதாக காற்றுவாக்கில் தகவல் வந்திருக்கிறது.

Dhinesh Kumar (முகிலன்) - தாய்லாந்து வரைக்கும் ஓக்கே. அம்மிணியாங்கிறதுதான் டவுட்டா இருக்கு.


சேட்டைக்காரன் :-)))) - //அம்மிணி - மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது. மாக்களை அம்மணி என்று அழைப்பதில்லை.//

அப்போ ஜிம்மிணி-னு அழைக்கலாம்.பிராணிகளுக்கு எல்லாரும் அந்தப் பெயரைத்தான் வைப்பாங்க





Karthik L (LK) - அப்படி இல்லை பிரபாகர். இது ஒருவகை மனவியல்.தன் இருப்பை காட்டிக்கொள்ள இடைவெளி விட்டு விட்டு செய்வது


ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன் - வாட் யூ மீன் பை புரட்சி ? கேன் இட் க்ளீன் தி சமுதாயம்
Mar 6, 2011
Karthik L (LK) - புரட்சி மீன்ஸ் இன்டர்நெட் புரட்சி
Mar 6, 2011
சேட்டைக்காரன் :-)))) - புரட்சி = புரட்டு + சீ

அதாகப்பட்டது, சீ என்று சொல்லுமளவுக்கு மல்லாந்து படுத்துத் துப்புவதும், எம்புட்டு புரட்டிப் புரட்டி அடி வாங்கினாலும் திரும்பத் திரும்ப மூத்திரப்பெரைக்கு வந்து சேருவதும் தான் புரட்சி!
Mar 6, 2011
Dhinesh Kumar (முகிலன்) - //கேன் இட் க்ளீன் தி சமுதாயம்//

எங்க வீட்டு டாய்லெட்டைக் கூட க்ளீன் செய்யாது.

சேட்டைக்காரன் :-)))) - ஆமாம் ஜீவ்ஸ்! அதுலேயும் அவங்க தாய்லாந்துலேயே கோனார் கைடு எழுதுறவங்களாம். :-)
Mar 6, 2011
சேட்டைக்காரன் :-)))) - //அம்மிணியாங்கிறதுதான் டவுட்டா இருக்கு//

அப்படீன்னா, அவங்க அம்மிணியில்லே; கொஞ்சம் கம்மிணி-ன்னு சொல்றீங்களா முகிலன்?
Mar 6, 2011
Karthik L (LK) - /கோனார் கைடு // தேன்மொழி நோட்ஸ் எழுத மாட்டாங்களா # சந்தேகம்





இதில் மிகுந்த ஆச்சர்யம் என்னன்னா . எப்படி இவர்களுக்கு நாள் முழுதும் கும்மியடிக்க மட்டுமே நேரம் செலவழிக்க முடியுது?..

நமக்கு வாசிக்கவே பத்துவதில்லை.. இத்தனைக்கும் நான் ஒண்ணும் பெரிய பிரபலமோ இலக்கியவாதியோ இல்லை.. என்னையே இப்படி ?:))))))))

ஆனா இப்ப சிலர் கொஞ்சம் ஒதுங்கி இருக்காங்க நான் சுட்டி காட்ட ஆரம்பித்த பின்..

தொடரணும் அவர்கள் சேவை.. என வாழ்த்த மட்டும் செய்வோம்..


அடுத்து தோழி என்பவர் ,

----------------------------


४१ தோழி १४ - வந்துட்டேன்.. எங்க சண்ட எங்க சண்ட//
४१ தோழி १४ - வேணாங்க பதிவு போட்டு பிரபலமாக பாத்த ஒருத்தர இன்னிக்கு பஸ்ல தான் தொங்க போட்டு அடிச்சோம்..

४१ தோழி १४ - ஒரு திரில்லர் படம் போட்டிருக்காங்க. பெயரு "சாந்தி நிலையம்".ஆஹா, ஜெமினி என்னமா பாடுறாரு...இயற்கையென்னும் இளையகன்னி.. //

இதுக்குமுதல்ல இந்த பாட்டுதான் வரும்.. சேட்டைக்கார அண்ணாச்சி பொய் சொல்றாப்ல..

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்

----------------------------------------------------------------

இவர் படிப்பதெல்லாம் ராமாயணம் இடிப்பதெல்லாம் பெருமாள் கோவில் கதை...:)) http://siththarkal.blogspot.com/


இப்படியானவர்களின் போலி வேஷங்களை பார்த்துதான் மத வெறுப்பு வருது பலருக்கு..:) . நல்லவர் கூட கெட்டவர் கூட சேருவதாலும் இருக்கலாம்..

----------------------------------------------

ஜீவ்ஸ் :: Jeeves: கிருஷ்ணன் • Mar 16, 2011 (edited Mar 16, 2011) • Buzz
மண்டையில மசாலாவே இல்லாம பிரபலமாவது எப்படி ?

296 more comments from Priya Siva, Karthik L (LK), Dhinesh Kumar (முகிலன்), KANNAN J NAIR and விஜி . and 10 others//

அலுவல் நேரத்தில் அடுத்தவரை பற்றி பேசி ஏசியே பொழுதை போக்கும் இவர்கள் திடீரென சமூக அக்கறையில் பதிவும் போடுவார்கள்..:)

--------------------------------------------------------------


இதையெல்லாம் போடுவதால் நான் அனுதாபம் தேடுகிறேன் என நினைக்கவேண்டாம்.. இவற்றையெல்லாம் தாங்க முடிந்தால் மட்டுமே நம் கருத்துகளை அழுத்தமாகவும் அதே சமயத்தில் நாகரீகமாகவும் சொல்லக்கூடிய துணிவு வரும் என்பதற்காகவே இந்த பகிர்தல்..


நாம் அனுமதிக்காமல் நம்மை யாரும் இழிவுபடுத்தவோ, வருத்தப்படுத்தவோ , பொறாமைகொள்ள செய்யவோ முடியாது என்பதை ஒவ்வொருவரும் புரியணும்..


அல்டிமேட் ஆக என்னதான் செய்ய முடியும் எத்தனை தூரம் போக முடியும் என வேடிக்கை பார்க்க கற்றுக்கொள்ளணும்.. அதுதான் அஹிம்சை.. அதுதான் வீரம்.. அதுதான் வள்ளுவர் சொல்லும் துறவு நிலையும்.. எல்லா இழிவுகளும் சொன்னவருக்கே அர்ப்பணம்.. என்ற மனம் வந்திடணும்.. எல்லா இழிவையும் தாங்கியும் நம் பக்கமிருந்து அநாகரீகமாக ஏதுவுமே சொல்லாமல் இருக்கும்போது நம் எதிராளியும் அதே நிலைக்கு வந்தாகணும்.. (சிலர் நிதானத்துக்கு வந்துள்ளார்கள் என்பதையும் இங்கே மகிழ்வோடு பகிர்கிறேன்.. ) ..

இல்லாவிட்டால் குழுமமெல்லாம் நடத்தவே முடியாது..ஒரு பெண்ணால்..:)

அதுதானே நம் எண்ணம் .?.. நோக்கம்..? நம் வெற்றியும்.?..


-----------------------------------------------

நஜீபா said...


"ஐயோ, எனஅ் கையைப்புடிச்சு இழுத்திட்டான். என்னை மின்னஞ்சலிலேயே வன்புணர்ச்சி பண்ணிட்டான்,’ என்று அவ்வப்போது பிலாக்காணம் பாடும் ஆயாக்களும் படு அமைதியாக இருக்கிறார்கள்.//


சாந்தி : இது யாருங்க?.. தெளிவா சொல்லலாமே.?

நஜீபா : அதை நீங்கள் தயங்காமல் செய்வீர்கள் என்று அறிவோம். உங்களைப் பற்றி யாரேனும் எழுதினால், உடனே அதில் மற்ற பெண்களையும் இழுத்து, உங்களோடு சேர்த்து மற்றவர்களையும் அசிங்கப்படுத்துவீர்கள் என்பதைத்தான் தமிழ் வலையுலகில் நேற்று வந்தவர்களும் சொல்கிறார்களே. ஆனால், நான் ஒரு பெண்ணின் பெயரை உபயோகிப்பதன் முன்னம் யோசிப்பேன். எனது சுயநலத்துக்காக இன்னொரு பெண்ணின் சுயகௌரவத்தைப் பலிகொடுக்க மாட்டேன்.-

----------------

சாந்தி :பிலாக்காணம் பாடும் ஆயாக்களும் ???? ஆரும்மா அந்த ஆயா?..
அத விட்டுட்டு பூசி மெழுகினா எப்படி?..

கடைசி வரை சொல்லவில்லை.. ஏன்?. சொல்ல முடியாது.. வம்பிழுப்பது மட்டுமே நோக்கமாயிருக்கும்போது.?.

வலிய உங்க பதிவில் வம்புக்கு இழுக்கும் உங்க செயலை அம்பலப்படுத்தவே அதையும் கேட்டேன்.. இப்ப கவலை வேண்டாம் நஜீபா என்பவர் யார் என பலருக்கும் தெரியும்.. உங்களுக்கும் புரிந்ததா நஜீபா யாரென...

உடனே நஜீபா க்கு வக்காலத்து வாங்கி சேட்டை பஸ் இல் இப்படி சொல்றார்
---------.

சேட்டைக்காரன் :-)))) - சொரணையிருக்கிற சென்மமாயிருந்தா நாண்டுக்கிட்டு சாகணும்! த்தூ.....!
Mar 18, 2011
Karthik L (LK) - அண்ணே அது கிலோ என்ன விலை ?
Mar 18, 2011
சேட்டைக்காரன் :-)))) - நமக்கெல்லாம் வேணாம் கார்த்தி. ஒரு ஷிப்மென்ட் தாய்லாந்து அனுப்பணும் போலிருக்குது.
Mar 18, 2011
Karthik L (LK) - அதுக்குதான் கேட்டேன்


----------------------------

நான் என் பஸ் ல் போட்ட பதில் கீழே.


//இப்படி வலிய வம்பு பேசி திரியும் புள்ளங்கள பெத்ததுக்காக சொரண அதிகமாயிருக்கும் உங்க அம்மா , உங்க வீட்டு பொண்ணுங்கள போய் நாண்டுகிட்டு சாக சொல்லு சேட்டைக்காரனே..:))..

Karthik L (LK).. ஓவரா இருக்கு உன்னோட அனாவசிய நக்கல்.. கவனிச்சுட்டுத்தான் இருக்கோம்.. என்னை சொல்ற அத்தனையும் உன் பெண்ணுக்கு சாபமா வரத்தான் செய்யும்.. நீயே அதை வரவேற்கிற.. அதை நீ புரிஞ்சுக்காத..பாவம் உன் பொண்ணு..

யார் யாருக்கு என்னென்ன சாபம் வேணுமோ அதை அடுத்தவங்களுக்கு சொல்லுங்க.. தாராளமா.. //

நாம் அடுத்தவர்களை சொல்வது நமக்கே திரும்பும்..என்ற பயம் இருக்கணும் . சும்மா இணையம் கிடைத்ததேன்னு எழுதி தள்ளக்கூடாது. வம்பு வளர்க்கும் இடமல்ல. வெத்து மிரட்டல்தான் இவையெல்லாம்.. நேரிலே போனால் காலில் விழும் ஜென்மங்கள் இவை..

இப்ப புரிந்தும் இருப்பீர்கள் என் பேரில் போலியாக வந்த நபர் யார் என்றும்..



சேட்டைக்காரன் , Karthik L (LK) பற்றி தகவல் இருந்தால் பகிரவும் தனிமடலில்.. இனி இப்படி பலரின் எழுத்துகள் அம்பலப்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கணும்.. பதிவுலகை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வர அனைவரும் பாடுபடணும்.. இல்லையென்றால் நல்லவர்கள் எல்லோரும் வெளியேறி கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சும் நிலை வரும்..

தமிழ் மீதான ஆர்வமும் குறையும்.. நானே 10 கட்டுரை வாசித்தால் 7 ஆங்கிலம்தான்.. தமிழ் பதிவுலகம் மீது அனேகருக்கு இப்படியானவர்களால் வெறுப்பு இருக்கிறது..

என்னிடம் ஒரு நண்பர் , " தாய்லாந்து பற்றி எழுதி தாருங்கள். புத்தகமாக இலவசமாகவே போடுகிறேன் " என்கிறார்,, என் ஆர்வம் அதிலெல்லாம் இல்லை.. என்னால் முடிந்தளவு நான் சமூகத்துக்கு குரல் கொடுக்கணும் என நினைத்தேன் செய்தும் விட்ட ஆத்ம திருப்தி இருக்கு..

பயமே வேண்டாம் திட்டுபவர் அலுத்து போகும்வரை திட்டட்டும்.. அவையெல்லாம் நம் சாதனைக்கான வாழ்த்து என மட்டும் எடுத்துக்கணும்.. தொடரணும் நம் நல்லெண்ணம் நாகரீகமான முறையில்..


திட்டுவதில் இல்லை வீரம்.. எல்லா இழிவையும் தாங்கிக்கொண்டும் , நம் கொள்கைக்காக நாகரீகமாக போராடுவதே வீரம்..


நான் இப்படி அம்பலப்படுத்த ஆரம்பித்ததும் கதிர் போன்றோர் பஸ் அழித்துள்ளனர்/அல்லது மூடியுள்ளனர்.. அதுவே நல்ல திருப்பம் தான்.. அந்த பயம் வரணும்.. எல்லாருக்கும் குடும்பம் இருக்கு.. நாம் காறி துப்பினா , செருப்பால் அடித்தா பலமடங்கு திருப்பி கிடைக்கும்னு இப்ப கதிருக்கும் , தண்டோராவுக்கு புரிந்திருக்கும்.. அவர்கள் கூட சேர்ந்தவர்க்கும்..

உங்க பதிவில் இப்படியானவர்களின் பின்னூட்டம் வரணுமா என யோசித்துக்கொள்ளுங்கள்.. அது உங்க மதிப்பையும், நல்லெண்ணத்தையும் கெடுக்கும்..


" என் தம்பிக்கு வேலை போயிடுச்சு . என் பாஸ் தாய்லாந்தில் அடிபட்டு கிடக்கிறார் " என சொல்லி உதவி கேட்டவரெல்லாம் எதிரணியில் சேர்ந்து கும்மியடிப்பார்கள்..எவ்வித முன்விரோதமுமில்லாமல்..:)

நல்லா யோசிச்சு பார்த்தா ஒருவித தாழ்வு மனப்பான்மை, அல்லது பயம்.. எங்கே நாம் கும்மியில் இணையாவிட்டால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்ற மிக தவறான புரிதல்.. பாவம்..துணிவற்றவர்கள்... எது தரம் , நிரந்தரம் என அறியாதவர்கள்..


நான் நன்றி எதிர்ப்பார்ப்பதில்லை என்றாலும்.. உளவியல் படிக்க கல்லூரிக்கு போகவேண்டியதில்லை.. பதிவுலகம் வந்தா போதும்.:). இருந்தாலும் நன்மை செய்வது நம் பணி என தொடரணும்தான் எத்தனை ஏமாற்றம் வந்தாலும்...

எல்லோராலும் சமூகத்துக்காக எழுதவோ பேசவோ முடியாதுதான்.. தப்பேயில்லை..அவரவர்க்கு பிடித்த நல்ல விஷயங்களை எழுதட்டும்.நானும் பல நல்ல நகைச்சுவை பதிவுகள் ஆங்கிலத்தில் படிப்பதுண்டு.. நகைச்சுவையும் தனி நபரை காயப்படுத்தாமல் நாகரீகமாக இருப்பது தேவையே.. ஆனால் ஒருபோதும் இத்தகைய சமூக விரோத கும்பலுக்கு ஆதரவாய் இருந்து , நாமும் கெட்டு நம் சூழலையும் கெட்டுப்போக உதவியாய் இருந்துவிடாதீர்கள்..



இன்னும் அதிகமா சில சமூக விரோத கும்பல் இவர்களை தூக்கி வைத்தும் ஆடும்.. அதுவும் எதிர்ப்பார்க்கணும்.. என்றாவது ஒருநாள் வசமா மாட்டவும் செய்யும்போது கதறலாம் , " உன்னால் நான் கெட்டேன். என்னால் நீ கெட்ட " என.. அதுவும் சமீபத்தில் நடந்தது..:)


ஆணுக்கு இணையான பெரிய பதவி வகித்து , வாழ்வில் பல சவால்களை வேலையிலும் , வாழ்க்கையிலும் சந்தித்த எனக்கே நாகரீகமாக , கருத்து பகிர இத்தனை தொந்தரவு தருகிறார்கள் என்றால் , நினைத்துப்பாருங்கள் சாதாரண தமிழ் பெண்ணின் நிலைமையை.. இதில் பெண்ணுரிமை கிடைத்துவிட்டதென எழுதும் சிலரின் பதிவை பார்த்து சிரிக்கத்தான் முடியுது.. . தான் சுகமா இருந்தா உலகமே சுபிட்சமா இருக்கு என எண்ணும் அப்பாவிகள்.. வேறென்ன சொல்ல..?.:)

ஏமாற்றமோ, அவதூறோ, புரளியோ, இழிவோ நம்மை ஒருபோதும் காயப்படுத்தாது , பல தனலட்சுமிகளை , திவ்யாக்களை நாம் காப்பாற்ற நினைத்தோமானால்..தூசியென தட்டிவிட்டு தொடருவோம்..



( பஸ் buzz வசதியாக இருக்கிறது படிக்கவும் மனதில் தோணுவதை உடனே எழுதவும்.. ஆக நல்ல கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அங்கேதான் பகிர்கிறேன்.. நேரமும் மிச்சமாவதால்.. மேலும் பின்னூட்டமெல்லாம் எதிர்ப்பார்ப்பதேயில்லை எப்போதுமே நான்.. இப்பவும் அலுவல் சமயம் யாரும் பின்னூட்டம் போடவேண்டாம் தயவுசெய்து..பின்னூட்டம் முக்கியமேயல்ல.. நம் கருத்து போய் சேர்ந்தால் போதும்..)


பதிவுலகம்.. ஒரு ஆரோக்கியமான பார்வை....!

கழுகில் வந்த கட்டுரையையும் படிக்க.


படம்: நன்றி கூகுள்




.

Tuesday, March 15, 2011

என் பேரில் நடமாடும் போலிகள் கவனம்

என் பேரில் இப்ப ஆபாசமா கமெண்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள்..பதிவர்கள் என் புரோபைல் போட்டோ இருக்குதா என சரி பார்த்துக்கொள்ளவும்..

ஹேக் பண்ணி பார்த்தார்கள்.. வம்புக்கு இழுத்தார்கள்.. அடுத்து இப்படி..

நான் அநாகரீகமாக பேசுவதில்லை என எல்லாருக்குமே தெரியும்..

இதை யார் செய்வார்கள் என்பதும் உங்களுக்கும் எனக்கும் தெரியும்..

இதே போலத்தான் " ஏழர " என்பவருக்கும் செய்தார்கள்..

இருப்பினும் ஒவ்வொரு இடமாக சென்று நான் நிரூபிப்பது கடினம்..

அதனால் இந்த அறிவிப்பு.


இந்த பதிவில் வந்த போலி கமெண்ட் இது ,,
http://thanikaatturaja.blogspot.com/2011/03/blog-post_12.html?showComment=1300185531139#c3189545271944881904

பயணமும் எண்ணங்களும் சொன்னது…

உங்களி போன்ற கீழ்த்தரமான பதிவு போடுகிற ஆட்கள் மனநோயாளிகள் உன் மனைவியோ அம்மாவோ சுய இன்பம் செய்வதை உன்னிடம் சொன்னார்களா நீ சுய இன்பம் செய்வதை போட்டோ எடுத்து போடு
3:12 PM, March 15, 2011


என் மறுப்பு இங்கே..
---------------------------------


பயணமும் எண்ணங்களும் சொன்னது…

என் பேரில் போலி கமெண்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள் கவனமா இருங்க பதிவர்களே...

மேலே என் பேரில் போலிகள் கமெண்ட் போட்டுள்ளார்கள்..


அநாகரீகமாக நான் பேசுவதில்லை என்பது எல்லாருக்குமே தெரியும்..
4:08 PM, March 15, 2011
பயணமும் எண்ணங்களும் சொன்னது…

என்னுடைய புரொபைல் படம் இருக்குதா ன்னு பாருங்கள்..


வேறு என்ன வழி என தெரிந்தால் சொல்லுங்கள்.. நேர்மைக்கான விலை இதெல்லாம்..


4:08 PM, March 15, ௨0௧௧

அந்த பதிவர் புரிந்துகொண்டார்.. .

தனி காட்டு ராஜா சொன்னது…

//என் பேரில் போலி கமெண்ட் போட ஆரம்பித்துவிட்டார்கள் கவனமா இருங்க பதிவர்களே...
மேலே என் பேரில் போலிகள் கமெண்ட் போட்டுள்ளார்கள்..//

அப்படியா சேதி .....அது தானே பார்த்தேன் ....
நீங்கள் ஒரு முறை நான் கோபமாக பதிவு எழுதி இருந்தும் நாகரிகமாக பின்னுட்டம் இட்டு இருந்தீர்கள்.....


Any Way ..மேற்கண்ட பின்னுட்டம் உங்களுடையது இல்லை என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது....
எதோ ஒரு வலை யுலக முற்றிய மன நோயாளி யுடையது போல ....லீவ் இட்:))



Edit
6:07 பம்

என்னுடைய புரொஃபைல் எல்லாவற்றுக்கும் இந்த எண் வருகிறதா என கவனித்துக்கொள்ளுங்கள்..இனி என் பின்னூட்டம்

// எண்ணங்கள் 13189034291840215795 // என வரும்..

நட்புகள் கவனித்துக்கொள்ளுங்கள்..பின்னூட்டம் சந்தேகம் தருவதாக இருந்தால் மௌசை பெயரின் மீது நகர்த்தும் போது கீழே இந்த எண்களை காட்டும் ..அதைக் கொண்டு சரிபார்த்துக் கொள்ளலாம்.

இதே போல டோண்டு சார், ரோசா வசந்த் இன்னும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன் ..

பதிவுலகின் சாபக்கேடு.. :) . ஒற்றுமையாக களைவோம் இவர்களை..




.






..

Wednesday, February 2, 2011

வாழ்வின் எதிர்பாரா அதிர்ச்சிகள்






ஓவ்வொரு முறை ஊர் பயனத்தின் போதும் நல்ல சேதியோடு கெட்ட சேதியும் ரகசியமாக காத்திருக்கும்..

எதிர் வீட்டில் மெஸ் நடப்பதால் விரும்பிய உணவுகளை விரும்பிய நேரம் வாங்கிக்கொள்ளும் வசதி..

4 பெண் குழந்தையோடு செல்லமாக வளர்க்கப்பட்ட மகன்.சிவா ( கற்பனை பெயர் ) . அப்பா இலங்கையிலேயே ஹோட்டல் நடத்தி இந்தியாவுக்கு வந்தவர்கள் 50 வருடம் முன்பு.

கிட்டத்தட்ட 5 கிரவுண்ட் இடத்தில் முன்பக்கம் வீடும் பின்பக்கம் பால்மாடுகளும் தோட்டமும்..

நாங்கள் அனைவரும் ஓடி விளையாடி களைத்த இடம்..

தெருவுக்கே பால் சப்ளை அங்கிருந்துதான்..

தீபாவளிக்கு சிவா போடும் வெடிகள் கோபம் ஏற்படுத்துபவை.,. ஆனால் நம் கோபம் அவனுக்கு சிரிப்பு.:)

நான்கு பெண்களையும் சிறப்பா திருமணம் செய்துகொடுத்தாலும் , மகன் மட்டும் படிக்காமல் கெட்ட நட்போடு வீணாகிக்கொண்டிருந்தான்..

தந்தை அவனுக்கு ஒரு ஹோட்டல் வைத்து தந்தார் மருத்துவமனை எதிரில்.. நல்ல கூட்டம்..

கார் வாங்கினான்.. வசதி கூடியது.. அதோடு தீய நட்பும் அதிகரித்தது...

பெண் தர பலர் மறுத்ததால் ஏழை பெண்ணொருத்தி , அதிகம் படிக்காதவளை மணமுடித்து வைத்தனர்..

அவளுக்கு 16 வயது..

இரண்டு பெண் குழந்தைகள்.. மிக அருமையான குழந்தைகள்.. நான் ஊருக்கு செல்லும்போதெல்லாம் எங்க வீட்டு பொடியனை கொஞ்ச வருவார்கள்..

விளையாடுவார்கள்..

போனமுறை அவசரமாக நான் வங்கிக்கு செல்லும்போது

" யக்கா , கண்ணே தெரியலையா?.. நானும் கவனிக்கிறேன் நாலு நாளா.. கண்டுக்காம போறீங்களே..!" என உரிமையா கோபக்குரல்..முகம் நிறைய சிரிப்போடு..

திரும்பிப்பார்த்து ,

" மன்னிச்சுக்கோ சிவா.. கவனியாமல் இல்லை.. உன் மனைவி, அம்மா, குழந்தைகளிடம் பேசினேன்.. நீ ரொம்ப பிஸி என்பதால் தொந்தரவு செய்ய

வேண்டாமேன்னு நினைத்தேன்.."

எல்லா விசாரிப்புக்கு பின் அவன் மெஸ் ஆரம்பித்து மீண்டும் நல்லபடியாக முன்னேறி வருவது குறித்து என் மகிழ்ச்சியை தெரியப்படுத்தி ஊக்கமளித்தேன்.

( அவன் தந்தை மறைவுக்கு பின் அந்த ஹோட்டலை வித்துவிட்டு வீட்டிலேயே மெஸ்.. இதற்கு காரணமும் குடி கெட்ட நட்பும் )

குடி போதையில் , அம்மாவை , மனைவியை அடிப்பதும் அவர்கள் கோவித்துக்கொண்டு போவதும் வழக்கமானது..

இப்படி போன வருடம் மனைவி முடிவோடு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்னை சென்றுவிட , அம்மா, சகோதரி வீட்டுக்கு செல்ல ( எல்லோருமே சென்னை)

இவன போய் மனைவியிடம் சமாதானம் பேசி அழைக்க அவள் மறுக்க. , சகோதரி வீட்டுக்கு சென்று திட்டு வாங்கி கொஞ்சம் அழுதுவிட்டு ,

நேரே ஊருக்கு வந்து வெறுமையில் , தனிமையில் தற்கொலை செய்துவிட்டான்..

யாருமே எதிர்பார்க்கவில்லை.. அவன் நன்மைக்குத்தான் திட்டியிருப்பார்கள்..

கேள்விப்பட்டதுமே சென்று பார்த்தேன்.. அவன் அம்மா கட்டிபிடித்து கதறினார்..

மனைவி மெலிந்த தேகம் எப்பவுமே.. அவளுக்கு அழ கண்ணீர் இல்லை.,. எல்லாவற்றையும் ஏற்கனவே அழுது முடித்திருக்கணும்..

அந்த குழந்தைகள் சென்னையில். அவள் தம்பி வீட்டிலிருந்து படிக்கிறார்கள்.. . நல்லவேளை நான் காணவில்லை..:(

மனைவிக்கு 26 வயது.. !!!!!!!!!!..

இரண்டு பெண்கள் தனிமையில்..சொந்த வீட்டைவிட்டு , 50 வருடம் பழகிய இடத்தை விட்டு போக மனமின்றி அந்தம்மா..

அவன் என்னை அனுப்பியிருக்கணுமே.. அவன் குழந்தைக்காவது தகப்பனா இருக்கக்கூடாதா என கதறினார்கள்..

எங்கே நடந்தது தவறு?.. யாரை கேட்க?..

பெண் குழந்தைகளை மிக நன்றாக படிக்க வைக்க சொல்லி துணிவையும் ஆறுதலையும் மட்டுமே தர முடிந்தது..


தமிழ்நாட்டில் பெண்ணாக பிறந்த தலையெழுத்து என்று மட்டும் நினைத்து வெளியேறினேன்..

யக்கா , கண்டுக்காம போறீங்களே.." ஒலித்துக்கொண்டே இருந்தது ஒவ்வொருமுறையும் முகம் நிறைய சிரிப்போடு.!!!!!!!

-------------------------------------------------------------------------------------






போன வாரம் வீட்டுக்கு வந்து தன் ஒரே மகன் படிப்பை பற்றியும் அவன் எதிர்கால கனவுகள் பற்றியும் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தவர்,

திடீரென வேலை இழந்தார்..

குடும்பத்தை நினைத்து கதறி கதறி அழுதார் அந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல்...

ஆண் என்றால் அழமாட்டார்கள் என யார் சொன்னது?...

முடிந்தவரை தாங்குவார்கள்.. அதையும் தாண்டிய துக்கமென்றால்தானே அழுகை வந்திருக்க முடியும் , ?.

உடனடியாக ஏன் இப்படி வேலை விட்டு அனுப்புகின்றார்கள் என கோபம் வந்தது..:((..

அக்குழந்தையின் படிப்பு..?.

ஒவ்வொரு முறையும் இப்படி சிலர் வேலையை விடும்போது அந்த துக்கம் நம்மையும் வந்து சூழ்ந்து கொள்கிறது.. இயலாமை..

எதுவுமே நிரந்தரமற்ற தன்மை கொண்டது இவ்வுலகம்..என்னதான் புரிந்துகொண்டாலும் வாழ்வில் லட்சியம் , எதிர்பார்ப்புகள்

இலக்குகள் வைக்காமல் வாழ்வு நடத்தவும் முடியாதே..

ஓரளவு நாம் கடந்துவிட்டோம் என்றாலும் நம் குழந்தைகள் இதை கடக்கவேண்டியதை நினைத்தால் !!!!!!!..

-------------------------------------------------





ஊரிலிருந்து வந்ததுமே பெரிய மகனுக்கு முக பக்கவாதம் வந்தது ,பள்ளியில்..( Bell's Palsy ). பள்ளியிலிருந்து அழைத்து சென்று காண்பித்தார்கள்.

நானும் உடனே சென்றேன்.. என்னைவிட பள்ளி ஆசிரியர்கள்தான் அதிகம் வருந்தினர். ( அல்லது நான் காண்பித்துக்கொள்வதில்லை )

கண் இமை மூட முடியாது.. ஒரு பக்க உதடு செயலற்று..

இணையத்தில் பல தகவல் சேகரித்தேன்..

முக்கியமா மகனுக்கு ஊக்கம் தந்தேன்.. எதுவானாலும் வாழ்க்கையில் ஏற்க சொல்லி..

ஒரு கஷ்டம் வரும்போதுதான் நம்முடைய மறைந்திருக்கும் மற்ற திறமைகள் வெளிவரும் என நம்பிக்கை கொடுத்தேன்..

( சில நேரம் நினைப்பதுண்டு கஷ்டமே வராமல் இருந்தால் குழந்தைகளுக்கு தலைக்கனம் அதிகமாகுமோ என.

சக மனித உணர்வுகள புரிய தாங்கிக்கொள்ளும் கஷ்டம் வரணுமோ?.. Learning in the hard way?? )

தொடர்ந்து 3 வாரம் மருத்துவமனைக்கு சென்றோம் .. அதை ஒரு பெரிய விஷயமாகவே எடுக்கவில்லை..அதனால் அவனுமே கண்டுக்கொள்ளவில்லை.

இப்ப 2 நாளா நார்மலுக்கு திரும்பிவருகிறார்.. 90% நார்மல் இப்போது..

துணை நின்ற இணையத்துக்கும் தகவல் அளித்தவர்களுக்கும் நன்றிகள்..

( இத்தனைக்கும் குடும்பம் முழுவதும் மருத்துவர்கள் பல துறையில் இருந்தாலும்

யாரையும் அணுக விடாமல் செய்தது இணையமே.. :)) )

பெல்ஸ் பால்ஸி தகவல்

பெல்ஸ் பால்ஸி பயிற்சி




---------------------------------------------------------------------------

சுய புலம்பல் என்பதால் பின்னூட்டத்துக்கு நேரம் செல்வழிக்க வேண்டாமே..,.அதைவிட மீனவருக்காக டீவீட் செய்தால் மகிழ்வேன்..











படம்: நன்றி கூகுள்.

Tuesday, January 25, 2011

குழந்தைகளும் கற்பனைகளும்..:






கதை சொல்லி தூங்க வைப்பது எப்போதும் தொடர்ந்து நடைபெறும் விஷயமென்றாலும் எப்போதாவது சுவையான சம்பவமாகிடுவதுமுண்டு..

எத்தனை கோபம் பிடிவாதம் என்றாலும் கதை வைத்தே லஞ்சமாக பேசி காரியம் சாதிக்கவும் முடிகிறது குழந்தையிடம்..முக்கியமா வீட்டுப்பாடம் சடசடவென முடியும்.. உணவு உள்ளே தள்ளப்படும்...ஜெபமும்...

ஏன் கதைகள் அத்தனை சுவாரஸ்யமாகிப்போனது ?..

ஏனெனில் நிஜத்தைவிட கற்பனை உலகம் மிக மகிழ்ச்சிகரமானதாகவே இருக்கிறது குழந்தைக்கு...

குழந்தைக்கு மட்டுமா ?... நமக்கும்தான்,..

டாம் & ஜெர்ரி விரும்பி ரசித்து அதில் மயங்கி நேரம் செலவாகுவது கூட தெரியாமல் இருப்போருண்டே நம்மில்..


நேற்றும் விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு என்னை அணைத்துக்கொண்டே கதை கேட்க தயாரானார்...

ரொம்ப ஒண்ணும் கஷ்டமில்லை என்றாலும் அப்போதுதான் கதையும் தயாரிக்கணும் என் மூளை... பாத்திரங்கள் அவரே சொல்லிடுவார்.. யார் இருக்காங்களோ இல்லையோ அவர் இருக்கணும்.. அதாங்க அவர்தான் ஜெர்ரி மவுஸ் .( எலி )

நான் , அல்லது அவன் அண்ணாதான் டாம்..

கூட துணை நடிகர்களாக காட்டிலுள்ள விலங்குகள் ..

இதில் வேறு பல நேரம் ஜெரி மவுஸ் பைக் ரேஸ் வேற போகும்.. அதுதான் ஜெயிக்கும்.. இப்படி கதைக்கான கருவும் அவரே இடையிடையே சொருகிடுவார்.. சில நேரம் என் கற்பனை தடை செய்யப்படுவதாக நான் குற்றம் சுமத்த, அவர் கோவித்துக்கொண்டு சண்டையிடுவார்...

எப்போதும் ஜெரி வெற்றி பெருவதில் எனக்கு உடன்பாடில்லை.. ( அப்புரம் வாழ்வை எப்படி சமாளிப்பதாம் என அம்மாவான எனக்கு கவலை... நியாயம்தானே?... )

ஆனால் அவருக்கோ, ஜெர்ரி எப்படி அடி வாங்கினாலும் , போராடினாலும், ஜெர்ரிதான் வெற்றி பெறணும்...


பெரியவருக்கு கதை சொல்ல இத்தனை சிரமப்படவில்லை.. சீனு உதவினான்.. அதாங்க சீனு நம்ம கழுதையார்.. அவர்தான் பெரியவரோடு பள்ளிக்கு போவதும் , ஆசிரியருக்கு தெரியாமல் சீனுவை சக நண்பர்கள் ஒளித்து வைப்பதும் , உதவுவதும், விமானத்தில் செல்வதுமாய் ஏகத்துக்கும் கதை விடுவேன்.. சிரித்துக்கொண்டே தூங்கிடுவார்.. சில நாள், நான் சொல்லும்போதே தூங்கிடுவேன்.. எழுப்பி வைத்து கேட்பார்.. ( என்ன கதை சொன்னோம்னே மறன்னு போயி..இடையில் கனவு வேற டிஸ்டர்ப் செஞ்ஞல்லே ).


நேர்று கதை ஆரம்பித்ததுமே, ஒரு ஊர்ல , ......................................ஒரு ஊர்.....................................ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல னு இழுத்தேன்...



அவரே ஆரம்பித்து வைத்தார்.. " ஒரு ஜெர்ரி மவுஸ் இருந்தது.. அப்புரம் சீக்கிரம் சொல்லுங்கம்மா... " னு இன்னும் ஆசையோடு கட்டிப்பிடித்துக்கொண்டார்.. அதிலேயே அவர் ஆவல் புரியும்.. கற்பனை விண்டோ ஓப்பன் பண்ணிட்டார்னு அர்த்தம்...

அந்த ஜெர்ரி மவுஸ் பாலத்தில் செல்லும்போது டான்ஸ் ஆடிக்கொண்டே சென்றதால் பாலத்திலிருந்து தண்ணீருக்குள் விழுந்தது......................

........ஹெல்ப் என கத்தியது.. நண்பர்கள் ஓடி வந்து காப்பாற்ற முடியாமல் யானையை அழைத்து வந்தது.... இத்யாதி...


இதுக்குள் டென்ஷனாயிடுவார்... என்னாச்சு மா.. என்னாச்சுமா.. இப்படி காப்பாத்தி இருக்கலாமே அப்படி செய்திருக்கலாமே னு அடுக்குவார் ஐடியாக்களை...

" யானை வந்து தன்னோட நீண்ட தும்பிக்கையால் அந்த மவுஸ் ஏற செய்தது... அது உன்னை மாதிரி சேட்டைக்கார மவுஸ் ஆச்சே, யானை மூக்குக்குள் போய்விட்டது எலி.......................................வெளியே வரமாட்டேன் னு அங்கேயே உட்கார்ந்து கொண்டது..."


கை அசைவோடு சொல்லணும்.. என் கைதான் தும்பிக்கை.. அவர் விரல்கள் மவுஸ்.. பிடித்துக்கொண்டார்..

சொன்னதும் விழுந்து விழுந்து சிரிப்பு...


யானை மூக்கை சீந்தினாலும் வரமேட்டேன் னு பிடிவாதம்...

உடனே நண்பர்கள் ஒரு ஐடியா சொன்னார்கள் , நிறைய உறைப்பு சாப்பிடு... கண்ணீரும் தண்னீரும் வரும்.. அப்ப மவுஸ் வழுக்கி விழும்...

யானையும் உறைப்பு சாப்பிட்டு தண்ணீர் வந்ததும் , ஆவலோடு எல்லா விலங்குகளும் பள்ளிக்கு செல்லாமல் பாறைகள் மேலேறி உட்கார்ந்து காத்திருந்தன...

ஆனா மவுஸ் ஜாலியா , " ஐ வாட்டர் ஃபால்ஸ் ( நீர்வீழ்ச்சி ) னு குளித்து பாட ஆரம்பித்தது... ( ஏன்னா சின்னவருக்கு தண்ணீர்னா போதும் ஒரு நாளைக்கு 10 முறை கூட குளிப்பார்.. காய்ச்சல் என்றாலும் ) ..


சிரிப்பு தாங்க முடியலை...


சரி போதும் இன்னிக்கு.. தூங்கு னு சொன்னதும் கெஞ்ச கொஞ்ச ஆரம்பித்துட்டார்..

பிளீஸ் , ஒரு ஆயிரம் முறை...

சரி இன்னும் ஒரு சில வரிகள் என சத்தியம் வாங்கிக்கொண்டு , தொடர்ந்தேன்..

சின்ன சின்ன இலைகளை பூக்களை எடுத்து வந்து மூக்குக்குள் செலுத்தினால் மவுஸ் வெளியே வரும் என நட்புகள் சொல்ல ,

அதையும் செய்ய , அவற்றையெல்லாம் உள்ளேயிருந்து வாங்கிவைத்துக்கொண்டு , " ஆஹா நான் நல்ல மலர்படுக்கை செய்துவிட்டேன் .. நல்லா தூங்க போறேன் ' னு சொல்லி குட்நைட் சொல்லிச்சாம்...


சரி குட் நைட் சொல்லிடுச்சு போய் தூங்கு...


--------------------

தூக்கத்திலேயும் சிரித்தார்.. எந்த கதைக்குன்னு தெரியலை...

காலையில் எழுந்ததிலேருந்து சிரிப்பு.. பள்ளி விட்டு வந்ததுமே கதை தயாரா இருக்கணுமாம்...பள்ளி நட்புகளிடமும் ஆசிரியரிடமும் சொல்வாராம்....

குழந்தைகளின் கற்பனை உலகத்தை விரிவாக்கிடலாம் கதை மூலம்...அதில் நாமும் நுழைந்து ரசிக்கலாம் இலவசமாக.. உபயோகமாக...


கதையின் கரு ஒரு வரியாகக்கூட இருக்கலாம்.. ஆனால் சொல்லும் விதமும், குழந்தைகளை அந்த கற்பனை உலகில் சஞ்சீகரிக்க , அழைத்து செல்லும் மந்திர வித்தையும் வருவதற்கு முதலில் நாமே குழந்தையாகி அக்கதையை ரசிக்க பழகணும்... ( சொன்னா நம்பமாட்டீங்க.. இன்னும் என் கதையின் சீனு என்ற கழுதையார் ( 6 வருட பழக்கம் ) மற்றும் , தொடர்கதையின் நாயக நாயக்ர்கள் உயிரோடு வாழ்கிறார்கள் என்னில் )


அதே போல நிறைய கேள்விகள் கேட்க வைக்கலாம் குழந்தைகளை...


குழந்தைக்காக படம் வரைய கற்றுக்கொண்டிருக்கிறேன்....

http://www.ehow.com/how_5581915_draw-computer.ஹ்த்ம்ல்








படம் : நன்றி கூகுள்..

Wednesday, December 15, 2010

அம்மா புராணம் - 3 -போதையிலிருந்து மீட்ட மணமகன்..




அம்மாவோட தோழிகளை பார்த்தாலே புரியும் அம்மாவோட ரசனை..எல்லாரிடத்திலும் சமமாக பழகினாலும் , துணிச்சலான பெண்மணிகளே அம்மாவின் தோழிகள்..
இப்படி பலர் இருந்தாலும் இன்று நான் சொல்லப்போவது டெல்லியம்மா பற்றி.டெல்லி அம்மா என்ற பெயர் எப்படி வந்தது?.. புரிந்திருக்கும்..ஆம். டெல்லியில் கிட்டத்தட்ட 40 வருடம் வாழ்க்கை நடத்திவிட்டு ஊர்பக்கம் வந்தவர்கள்..

மிக அழகானவர்.. வட நாட்டு பெண்மணியை போல தோற்றம்..அவர் கணவர் ராணுவத்தில் மிக உயர்ந்த பதவியில்..அதன்மூலம் இவர்களுக்கு அன்னை இந்திராகாந்தியின் பழக்கம் கிடைத்தது.. பல வருடம் அவருக்கு உதவியாளராகவும் இருந்துள்ளார்.. தனிப்பட்ட முறையில்.. எங்களிடம் அந்த புகைப்படங்களை காண்பிப்பார்.. சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தியோடும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்..இப்படி மிகப்பெரிய ஆட்களோடு பழகி , தம் குழந்தைகளையும் மிகப்பெரிய பள்ளியில் சேர்த்து கல்வி கொடுத்தார்.. அதில் கடைசி மகன் கல்வியோடு போதைக்கும் அடிமையானார்..அதிலிருந்து மீட்டு பின் பிடிவாதமாய் சொந்த ஊருக்கு அழைத்து வந்தார்..

அந்த பையன் கணினியில் அப்பவே கெட்டிக்காரர்.. ( 17 வருடம் முன்பு ) .என் அண்ணனும் கணினி என்பதால் இருவரும் நட்பாயினர்.. ( கணினியையே கட்டிகிட்டு அழுவார்கள் எந்நேரமும் ).இப்ப அந்தம்மா தன் மகனுக்கு பெண் பார்க்கிறார் தன் சாதியில்.. ( என்கே போய் வாழ்ந்தாலும் இந்த சாதி விடமாட்டேங்குது பாருங்க..).

நல்ல விஷயங்கள் உடனே பரவுதோ இல்லையோ கெட்ட விஷயங்கள் தீ மாதிரி பரவிடுமே.. அந்த பையனின் போதை பழக்கம் ஊர் முழுக்க தெரிந்தது..யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை.. இத்தனைக்கும் ஏகப்பட்ட சொத்துக்கள்.. அந்தம்மாவும் தனக்கு சம்பந்தம் கொஞ்சம் பெரிய இடமாக இருக்கணும் என தேடினார்கள்.. மகனுக்கும் அவன் பேசும் நுனிநாக்கு ஆங்கிலத்துக்கும் ஏற்ற பெண் இருக்கணும் என்ற ஆசையும்..மிக நல்ல மரியாதையான பையன் தான் அவர்.. எங்க வீட்டுக்கு வரும்போது அமைதியாக அண்ணணுக்காக காத்திருப்பார்.. வசதியானவர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல்...ஆனா அவர் அம்மா நல்லாவே பந்தா காட்டுவார்.. இரண்டு தெரு தள்ளியிருந்து எங்க வீட்டுக்கு அம்மாவிடம் பேச வரணும் என்றாலும் காரில்தான் வருவார்.. டிரைவார் காத்திருந்து கூட்டிசெல்வார்..

இப்ப இன்னொரு தோழியின் மகளை பேசி முடிக்க எங்க வீட்டில் வைத்து பேச்சு நடக்கும்.. அந்த தோழி மலைக்காரம்மா.. ( மூணாறில் எஸ்டேட் இருப்பதால் இப்பெயர் .)
அவர்கள் வீட்டு பெண்களும் மிக அழகும் கலரும்.. வசதியும்.. படிப்புதான் குறைவு...இப்ப என்ன பிரச்னைன்னா, சீர் , பணம் ஏதும் தரமாட்டேன் என பெண் வீட்டார் சொல்கிறார்கள்.. ( வலிய வந்தமையால் )..இப்படி இழுபறி நடந்துகொண்டிருந்தபோது அந்த பெண்ணுக்கு வேறொரு பண்ணையார் வீட்டில் அழகுக்காக விரும்பி நிச்சயம் செய்துவிட்டார்கள்..

அப்பதான் அம்மா சொன்னார்கள் , " பையன் போதை பழக்கம் எல்லாரும் அறிந்தமையால் பயப்படுவார்கள்.. ஏன் ஒரு ஏழை பெண்ணுக்கு வாழ்வளிக்க கூடாது ?." .அந்தம்மா முதலில் ஒத்துக்கொள்ளவில்லை.. அவர் மகனிடம் என் அம்மா பேசியபோது அவர் மிக தயாராய் இருந்தார்.. தன் அம்மாவையும் சம்மதிக்க வைப்பதாகவும் , " நீங்க சொல்ற எந்த பெண்ணையும் நான் கட்டிக்கிறேன் மா. " என்றார்.. கடைசியில் அந்தம்மாவும் சம்மதித்தார்கள்.. இப்பதான் அம்மாவுக்கு பிரச்னை.. வேலியில் போற ஓணானை -----------//

அக்கம்பக்கம் இருந்த ஏழைப்பெண்கள் லிஸ்ட் எடுத்து அழைத்து மெதுவா கேட்டுப்பார்த்தார்கள்.. டெல்லி என்றதுமே பலர் வேண்டாமென சொல்லிவிட்டார்கள்..இப்ப கடைசியில் இருப்பது சில வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு குடும்பம்.. வசதியிருந்து நொடித்தவர்கள்.. 8 பெண்கள் ஒரே பையன்.. ஒவ்வொரு பெண்ணையும் கறையேத்த மிக கஷ்டப்பட்டது அக்குடும்பம்..அவர்கள் சண்டையிட்ட குடும்பம் எங்களோடு மிக நெருக்கம் என்பதால் எங்களிடமும் பேசமாட்டார்கள்..ஆனாலும் அம்மாவுக்கு அந்த குடும்பம் மீதும் , பெண் குழந்தைகள் மீதும் ஒருவித பாசம் /மரியாதை உண்டு...என்னிடம் சொல்லி அனுப்பினார்கள் அந்தம்மாவை எங்க வீட்டுக்கு வர சொல்லி.. நான் போய் சொன்னதும் வேண்டா வெறுப்பாக வந்தார்கள்.. அம்மா விபரமாக எல்லாவற்றையும் எடுத்து சொல்லி , " நான் கட்டாயப்படுத்தவில்லை.. நீங்க யோசிச்சு சொல்லுங்க .. " னு சொன்னார்கள்..


அவர்கள் முதலில் வேண்டாம்னு சொல்ல , பின் அவர்கள் மூத்த மகள் வந்து மேலும் பேசி விப்ரம் கேட்டு அறைகுறையாக சம்மதித்தார்கள் பெண் பார்க்க..உடனே எங்க அண்ணியோட நகையை எடுத்து சென்று அப்பெண்ணுக்கு போட்டு அலங்கரித்தோம்.. மாப்பிள்ளையும் அவர் அம்மாவும் வந்து பார்த்து பிடித்துவிட்டது..பெண் அதிகம் படிக்கவில்லை.. 10ம் வகுப்பு மட்டுமே..சுமாரான அழகுதான்..( இதை சொல்வது ஊர் உலக பார்வைக்காக மட்டுமே . என் பார்வை அல்ல.. திட்டிராதீங்க.. :)) )

சம்மதம் தெரிவிக்கும் வகையில் மாப்பிள்ளை வீட்டார் ஒரு நகை , சில புடவைகள் பரிசாக பெண்ணுக்கு தந்தார்கள்.. பெரிய ஹோட்டலில் அந்த வாரமே திருமணமும் நடந்தது... பலர் விமர்சித்தார்கள் எதிர்மறையாக.. எங்கம்மா அந்த பையனிடம் சத்தியம் வாங்கினார்கள்.. என் பெண்ணை கொடுத்தது போல கொடுத்துள்ளேன்.. நீ ந்ல்லா வாழ்க்கை நடத்தி காண்பிக்கணும் என.. அந்த பையன் கண்ணீரோடு சத்தியம் செய்தார்..

திருமணம் முடிந்த சில தினங்களில் டெல்லிக்கு விமானத்தில் சென்றார்கள்.. அடுத்த வருடத்தில் மாமியார் போன்ற மிக அழகான பெண் குழந்தை பெற்று மாமியார் மனதிலும் நீங்க இடம் பிடித்தார் அப்பெண்.. இப்பல்லாம் வருடந்தோறும் விமானத்தில் தனியே குழந்தையோடு வருவார்..( இன்று ஒரு நடிகையைப்போன்ற மிக அழகிய வாலிப பெண் . அதே நுனிநாக்கு ஆங்கிலமும் அப்பாவைப்போல ) . எங்கேயோ போய் விட்டாள் அந்த கிராமத்து பெண்... இப்பவும் எந்த அவசரம் என்றாலும் அம்மாவை வந்து பார்த்து " அம்மா இது நீங்க கொடுத்த வாழ்வு " என வணங்கிவிட்டு செல்வாராம்....


ஊரே பழியை போட்டது அம்மா மேல்.. இது எப்படி நல்லா வாழ முடியும் என சவால் விட்டது.. அதுவும் வேறு ஜாதியினர்.. அன்று பழியெல்லாம் தனி ஆளாக அம்மா ஏற்றுக்கொண்டார்.. இன்று அக்குடும்பமே மகிழ்ச்சியில்...அம்மா எங்களுக்கு எப்பவும் இப்படி செய் , அப்படி நட என சொன்னதில்லை.. சொல்ல நேரமிருந்ததில்லை எனலாம். ஆனால் அவர் வாழ்க்கையை பார்த்தே கற்கலாம்..அவர் துணிவை, அடுத்தவருக்காக பழி ஏற்றுக்கொண்டும் செய்யும் நற்செயல்களை...நிஜமான அக்கறை இருந்தால் மட்டுமே முடியும்.. பெண் குழந்தைகளுக்கு முக்கிய தேவை கல்வியும் துணிவும் என நினைப்பவர்..




(புராணத்துக்கு தேவையில்லாதது : ஜனாதிபதி திரு.வெங்கட்ராமன் அவர்கள் தூத்துக்குடி வந்தபோது டெல்லியம்மாவுடன் எங்க அம்மாவும் சென்று சந்தித்தது அப்போதுதான்... அப்பதான் டெல்லியம்மாவின் மரியாதையை முழுதாக கண்டார் அம்மா..டெல்லியம்மா கெஸ்ட் ஹவுஸ் குள் நுழைந்ததுமே காவலர்கள் சல்யூட் அடிக்குமளவுக்கு பிரசித்தி...அவர் கணவர் பற்றி எனக்கு தெரியவில்லை.. அரசியல் பிரமுகர்கள் பலரும் பரிச்சயமுண்டு..)

இப்படி கம்பீரமான பெண்"மணிகளை" எமக்கு அறிமுகப்படுத்த தவறியதில்லை அம்மா... )

-

அடுத்து ஒரு எமோஷனல் காதல் பிளாக்மெயில் பற்றி நேரமிருப்பின் எழுதுவேன்.. அல்லது அடுத்த வருடம் வந்து தொடருவேன்.. விடுமுறைக்குப்பின்...

பதிவுலகினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..



அம்மா புராணம் - 2 படிக்க
அம்மா புராணம் - 1 படிக்க



படம் : நன்றி கூகுள்..





.

Thursday, December 9, 2010

இணைய நட்பு - வருமுன் காப்பது..2






































அக்கம்
பக்கம் உள்ளவரிடம் பேசாதவர், நல்ல விதமாய் நட்பு பாராட்ட முடியாதவர்கள் கூட இணையத்தில் எளிதாக நட்பு பாராட்ட முடிகிறது..

எல்லோருக்குமான சம உரிமை இங்கே உள்ளது.. தத்தம் திறமைகளை எவ்வித தயக்கமுமின்றி வெளிப்படுத்தி பாராட்டும் ஊக்கமும் பெற முடிகிறது..

அண்டை வீட்டுக்காரர்களுக்கு , ஒரு துரும்பை கூட எடுத்து உதவ முடியாதவரெல்ல்லாம் இணையத்தில் நல்ல மனிதராய் நடிக்க முடிகிறது..

குழந்தை , குடும்பம் என மிகவும் அன்பான நிறைவான சூழலில் , ஏன் ஆச்சாரமான சூழலில் இருப்பவரும் கூட நட்பை தேடி இணையம் வருகிறார்கள்..

அதைவிட நான் அதிகமாக கண்டது புகழ் விரும்பிகள்..

எல்லோருக்கும் புகழ் பிடிக்கும்தான்.. இதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.. சிலருக்கு அது ஊக்கம் , அங்கீகாரம்.. அந்தளவில் அது ஆரோக்கியமானதே..

ஆனால் அதையும் தாண்டி தகுதியற்ற புகழை தேடும்போதுதான் ஆபத்தாக வந்து முடியும்..

எப்படி இந்த தகுதியற்ற புகழை அடைய விரும்புவார்கள்.?

ஓட்டு போடுங்க என பிச்சை கேட்பது.. இதில் கூட சமூகத்துக்கு தேவையான விஷ்யங்களை சொல்லி அது பரவவேண்டும் என நல்லெண்ணத்தில் ஓட்டு கேட்பவர்களை இங்கே சொல்லவில்லை.. ஆனால் உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் ஓட்டு பிச்சை கேட்பதும் , பின்னூட்ட மொய் எழுதுவதுமாய்...


ஜாலியாக சகாக்கள் சேர்ந்து கும்மி அடிக்கட்டும் அதுவும் தவறில்லை.. ஆனால் சிலர் தகுதியற்ற , சமூக விரோத பதிவுகளை போட்டு கூட்டம் சேர்த்துவிட்டு தன்னை பெரிய தலைவராக நினைத்துக்கொண்டு கருத்து சொல்லும்போது தான் தாங்க முடிவதில்லை...

ஆக இங்கே தற்போது நிலவும் இந்த சூழல்/கூட்டம் ஆரோக்கியமானதல்ல என்பது என் கருத்து...


இப்ப சில விஷயம் பெண்கள் குறித்து.. இது தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்குவதற்கல்ல. ஒரு விழிப்புணர்வுக்கு மட்டுமே..


பொதுவெளியில் நாம் என்ன உடையில் செல்வோமோ , அந்த உடையில் உள்ள படங்களை மட்டுமே உங்கள் முக புத்தகத்திலோ அல்லது பதிவிலோ போடுங்கள்..

சில மாதம் முன்பு ஒரு பெண்ணின் நைட்டி போட்ட படம் தினமும் வந்து என் முகபத்தகத்தில் தொந்தரவு கொடுத்தது..

அவர் அந்த படத்தை அறிந்தோ அறியாமலோ போட்டிருக்கலாம்.. இல்லை அது அவருக்கு ஒரு பெரிய விஷயமாக/தவறாக இல்லாமல் கூட இருக்கலாம்..

எதையும் எதிர்நோக்கும் துணிவு மிக்கவராயும் இருக்கலாம்..

ஆனால் பார்ப்பவர்கள் எல்லாரும் அவர் மன நிலையில் இருப்பார்கள் என சொல்ல முடியாதே?..

அதே போல்தான் சில ஆபாச கவிதைகளும்..

மணிமேகலை எழுதுகிறார் என்றால் அவரால் எதிர்கொள்ள முடியும்..

முத்தக்கவிதை எழுதும் சில தோழியர் , அவர் வாழும் நாட்டில் இது சகஜமாக இருக்கலாம்.. ( நான் வாழும் நாடு போல )

அவர்கள் குடும்பத்தினரும் அதனை அங்கீகரிக்கலாம்..

ஆனால் பொதுவில் அப்படி ஒரு கவிதை எவ்வாறு உள்வாங்கிக்கொள்ளப்படுகிறது என்பதையும் கணக்கில் கொள்ளணும்..

அதே போல சில பின்னூட்டங்கள் மூலமும் சில பெண்கள் தம்மை வெளிப்படுத்திக்கொள்வதுண்டு..

ஆக இதை வைத்தே ஒரு ஆண் எளிதாக இவர்களை எடைபோட முடிகிறது..

சாந்தம் வழியும் சர்வ லெக்ஷனம்;
காந்தமாய் கவரும் கண்களில் அன்புமழை;
பொன்னகைப் பூட்டிய பளிங்கு கழுத்தை
புன்னகைக் காட்டிய பவள இதழ்கள்
வெல்லும் வண்ணம் வார்த்து எடுத்த---

இப்படி ஒரு வர்ணனை ஒரு பெண்ணிடம் முக புத்தகத்தில் .அவள் புகைப்படம்
பார்த்து.

அவரும் நன்றி சொல்கிறார் இக்கவிதைக்கு...

பளிங்கு கழுத்தை பவள இதழ்கள் போன்ற அசிங்க வர்ணணைகளை ஏன் பொதுவில் அனுமதிக்கின்றார்கள்..?..

முளையிலேயே கிள்ளி எறியவேண்டாமா?..

இல்லை அதை விரும்பினாலும் தனிமடலில் இருந்துவிட்டால் பரவாயில்லை.. அது அவர்கள் தனிமனித சொந்த விருப்பம்...மட்டுமே..

இது போதாதா சில ஆண்களுக்கு?..

இப்படியான பிரபலங்களை ஏன் பெண்கள் விரும்புகின்றார்கள் என்றுதான் புரிவதில்லை...

இவர்கள் கட்டாயம் மற்றவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமும்..

ஒஹோ நாமும் இப்படி வழிசலை ஏற்றால் தான் நமக்கும் பிரபலமடைய முடியும் என்று எண்ண வைக்கின்றார்கள்..

பெண் என்பவள் கம்பீரமானவள்.. சக்தி வாய்ந்தவள்.. எவருக்கும் அஞ்சாத மன பலம் படைத்தவள்..தவறுகளை துணிந்து எதிர்ப்பவளாக ,விமர்சனங்களை எதிர்கொண்டு தாங்கி புன்னகைப்பவளாக இருக்கணும்..

அவள் இப்படி கவிதைகள் மூலம் போகபொருளாய் பலவீனப்படுத்தப்படுவது மிக

ஆரோக்கியமற்றது என்பது என் கருத்து...

சமீபத்தில் சேட்டைக்காரன் என்ற பதிவர் கூட பொதுவில் ஒரு விஷயம் சொல்லியிருந்தது எல்லாருக்கும் நினைவிருக்கும்..

அவரிடம் இரு பெண்கள் தவறாக நடப்பதாகவோ/பேசியதாகவோ... அதை அவர் நிரூபிக்கவும் தயார் என்றார்..


ஆக இப்படியான பெண்கள் நம் மத்தியில் இல்லை என்று சொல்ல முடியாது..

செய்வதை செய்துவிட்டு ஆண்களே மோசம் என பழி போடுவது எப்படி சரியாகும்.?

ஒரு ஆண் தவறாக பேச முயல்கிறான் என்பதை ஒரு வார்த்தையிலேயே /புகழ்ச்சியிலேயே மிக மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும்...

அதை அனுமதித்து விட்டு பின்பு அழுவதால் பிரயோசனமில்லை..

நான் இணையம் வந்த புதிதில் பலரும் இப்படியாக பேசியவர்தான்..முதலில் காம ரசம் சொட்டும் கவிதைகளை பகிர்ந்து நம் கருத்தை கேட்பார்கள்.. அல்லது சிலைகளுடைய புகைப்படம் அனுப்புவார்கள்.. அல்லது இருக்கவே இருக்கு ஓஷோவின் காம வரிகள்...

நாம் மரியாதை கருதி அமைதியாகவோ , ஒரு புன்னகையோடோ விலகுவோம்..

சிலர் மீண்டும் தொந்தரவு செய்யும்போது , எனக்கு இதிலெல்லாம் விருப்பமில்லை என மென்மையாக மறுக்கலாம்..

யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை...

பின்பு நாம் அதை விரும்பாதவர் என தெரிந்தும் நல்ல விதமாய் மட்டுமே நட்போடு பழகுபவராய் மாறிப்போனதுண்டு..

ஆணிடம் காமம் குறித்தான் எண்ணம் பெண்ணை விட அதிகம்தான்.. மறுப்பதற்கில்லை...அது இயற்கை..

அதற்கு இடம் கொடுப்பதை பொறுத்தே இருக்கிறது , அதை தொடர்வதும் , விலகுவதும்..

ஆனால் அதை வைத்து மட்டுமே ஒருவன் அயோக்கியன் என்று சொல்லிவிட முடியாது..

பெண்களிடம் செல்லும் எல்லோரும் அயோக்கியருமல்ல.. செல்லாதவர் எல்லாரும் யோக்கியருமல்ல..

இதே தான் பெண்களுக்கும்..

20 வயதிலிருந்தே ஆணின் பார்வைகளை தாங்கியே வளர்ந்திருக்கோம்.. பெண் அங்கங்களை ரசிப்பவனாகவே படைக்கப்ப்ட்டிருக்கான் ஆண்..

ஆனால் எல்லா பெண்களையுமா எப்போதும் பார்க்கிறான்?.. அது காம வெறியனின் செயல் மட்டுமே..

அப்படி பார்ப்பவனும் , பெண்களையே ஏறெடுத்தும் பார்க்காமலேயே இருப்பவனும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள்..

மற்றபடி சாதாரணமாய் ரசிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.. அது நாகரீகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்..

இதேதான் இனையத்திலும்...


ஆணுக்கு பெண்ணின் மீது ஒரு அன்பு, பாசம், தாய்மை ஏதோ ஒன்றின்மீதும் , பெண்ணுக்கு ஆணின் மீதும் ஒரு கண்காணிப்பு, பாதுகாப்பு , ஆறுதல் , துணிவு தரும் ஏதோ ஒன்றும் தேவைப்படுகிறது...

இவை வரம்பு மீறாதவரை இரு பக்கமும் வளர்ச்சியோடு இருக்கும்வரை ஆபத்துகள் ஏதுமில்லை.. எப்ப மற்றவர் மீது பொறாமை , பொஸசிவ்நெஸ்/ஆழுமை வர ஆரம்பிக்குதோ அப்போது அங்கேயே நட்போடு , எவ்வித கசப்புமின்றி பிரிவது அவசியம்..


பிரியணும்னு முடிவெடுப்பவர் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் மிக கவனமாக கையாளணும்...

தன் நிலைமையை விளக்கி ஆணுக்கான அவகாசம் /நேரம் கொடுத்து , அவர் இதுவரை செய்த நல்ல விஷயங்களுக்கு நன்றி செலுத்தி , அவர் காயப்பட்டிருந்தால் அதற்கான மன்னிப்போடு விலகணும்..

அந்த நட்புக்கு ஒரு குற்ற உணர்ச்சியை கொடுத்துவிடக்கூடாது.. தப்பு நம்மேலும்தான்..இதை ஏற்க கடினமென்றாலும்..

ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் நட்போடு இருக்கும்போது கண்டிப்பாக அவர் நல்ல விஷயம் செய்திருப்பார்.( ஒன்றாவது ) . அதை மறந்து தூக்கி எறிந்து விட்டு செல்ல வேண்டாம்..


அப்படி செல்லும்போதுதான் பழிவாங்கும் எண்ணம் வரும்..

இதையும் தாண்டி மென்மையாக பிரிந்தும் இப்படி பழிவாங்கும் எண்ணமிருந்தால் ஒண்ணும் கவலைப்படாது துணிந்து நிற்பதே வழி..

சில பல விஷமத்தனமான விமர்சனங்கள் நம்மீது பரப்பப்படும்.. எல்லாவற்றையும் ஏற்க பழகிக்கணும்.. ஏன்னா இது பொறாமை , போட்டிகள் நிறைந்த உலகமாச்சே..

நாம் நல்லவர்கள் , என்பதற்காக மட்டுமே நமக்கு நடப்பதெல்லாம் நல்லவையாக நடக்கணும் என்ற எவ்வித கட்டாயமுமில்லை..

ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு..

“Expecting the world to treat you fairly because you are a good person is a little like expecting a bull not to attack you because you are a vegetarian" Dennis Wholey

மேலும் ஒரு நல்ல நட்பு தப்பை சுட்டிக்காட்டக்கூடியதாய் இருக்கணும்.. தப்புகளை ஏற்றுக்கொள்வதாகவும் இருக்கணும்.. நட்பாய் இருக்கணும் என்ற ஒரே காரணத்துக்காக தப்புகளை கண்டும் காணாமல் இருக்க கூடாது..


நம் மனசாட்சிக்கு நாம் நல்லவர்களாய் இருந்தால் போதும்.. மற்றவர்களுக்காக அல்ல..அதே போல் நிரூபிக்க தேவையுமில்லை யாரிடமும்..

நம் குடும்பத்தினர் நம்மை நம்பணும்.. அவ்வளவே..

மேலும் திருமணமான பெண்கள் மற்றொரு ஆணோடு பேசுவதை நம் தமிழ்நாட்டு/இந்திய /சில சமயம் பல நாட்டு கலாச்சார ஆண்களால் உடனே ஏற்க முடியாதுதான்..

மெதுவாகத்தான் புரிய வைக்கணும்.. ஆனால் பெண் புரிந்துகொள்வாள் எளிதில்..

( என் வேலை நிமித்தம் என் பாஸ் கூட பல்வேறு ஊர்களுக்கு சென்று விடுதியில் தங்கி வருவேன்.. பல இரவு நேர வேலையும் எனக்கு.. இதையெல்லாம் பெருமையாக

அனுப்பி வைத்தாலும் , ஆயிரம் பேரோடு அலுவலில் கைகுலுக்கினாலும் ,20 வருடமாய் ஆண்களோடு ஆண் போலவே வேலை செய்தபோதும் , தன் கண் முன்னால் வேறொரு ஆண் கைகுலுக்குவதை ஜீரணிப்பது இன்னும் என் கணவருக்கு சங்கடம்தான்..அதிலும் வெளிநாட்டவர் என்றால் கூட பரவாயில்லை.. இந்தியர் என்றால் தான் ..:) ஏனெனில் நம் வளர்ப்பு அப்படி.. )


ஆக கணவரையும் புரிந்துகொள்ளணும்.. நாம் பேசும் அனைத்து நட்புகளையும் முடிந்தவரை அறிமுகப்படுத்திடணும்..

எனக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு வரும்போதெல்லாம் அவரும் சில சமயம் பேசுவார்..என் கல்லூரி தோழர்கள் என் வீட்டில் வந்து தங்கியதுமுண்டு..அவருக்கு பிடிக்கும் பட்சத்தில்..

பிடிக்காவிட்டால் ?.. வேறென்ன செய்ய புரியவைக்க முடியாவிட்டால் , புலம்பிக்கொண்டே விட்டுவிட வேண்டியதுதான்.. மற்றவரை மாற்றுவதை விட , நாம் மாறிக்கலாம் சில வேளை..

ஆண்களோடான எனது இருபது வருட வேலை அனுபவத்தில் ,நட்பு/காதல் பிரிவினால் அவர்கள் வருந்துவதையும், வலிகளை மனதுக்குள்ளே வைத்து அழுவதையும் கண்டுள்ளேன்.. பெண் புலம்பியாவது ஆறுதலடைவாள்.. ஆனால் ஆண் பூட்டி வைப்பான்..சிலரே வெளியில் சொலவ்தும்..


ஆண்களும் சில பெண் நட்புகள் , அல்லது காதலி பிரிந்துபோய்விட்டாளே என ஒருபோதும் கவலை கொள்ளாதீர்கள்..

காதலும் , அன்பும், நட்பும், இன்ன பிறவும் நம்மிடையேதான் இருக்கிரதேயன்றி பிறரிடம் இல்லை.. அதற்கு தகுதியானவர்கள் கிடைத்தே தீரும்...

நண்பர்கள் பிரிந்தாலும் அவர்களோடான அந்த நட்பு கால நினைவுகள் ஒருபோதும் பிரிவதில்லை.. அவை என்றென்றும் இனிமையாக இருக்கணும்..

நண்பர்களை நட்போடு பிரிய பழகுவோம்...



படம் : நன்றி கூகுள்..





--