Thursday, April 24, 2008










ஆயுத்தயா- 1350-1767 ( அயோத்தியா)ஆயுத்தயா என்ற நகரம் மன்னர் யு-தாங் என்பவரால் 1350 ம் வருடம் கண்டுபிடிக்கப்பட்டது..இது தான் தாய்லாந்தின் பழைய தலைநகராகும். இதனை சியாம் என்றும் அழைப்பர்.இந்த நகரத்துக்கு ராமாயணத்தில் வரும் ராமர் பிறப்பிடமானஇந்தியாவில் உள்ள அயோத்தியா எனும் இடமே மூலகாரணமாய் விளங்குகிறது...
1767 ம் ஆண்டு பர்மா படையினரால் அழிக்கப்பட்டு , பின் வரலாற்றுச் சிறப்பிடமாக இன்றுவரையிலும் யுனெஸ்கோ வால் கருதப்பட்டு, அரசுத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இது தற்போதைய தலைநகரமான பாங்காக்கிலிருந்து, 85 கி.மீ வடக்கே அமைந்துள்ளது..இது தாய்லாந்தின் மிக முக்கியமான கலாச்சார , வரலாற்று சுற்றுலாத் தளமாகும்..இதனுடைய முழு பெயர் ஃபிர நகோன் சி அயுத்தயா.முக்கியமான சொள ஃபிரயா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது..
அயுத்தயா என்பதற்கு " வெல்லமுடியாத நகரம் " என்றொருபொருளும் உண்டாம்.இங்கு இன்னும் பழைய பிரசித்தி பெற்ற கோவில்கள் பராமரிக்கப்பட்டுள்ளன.
வாட் பிரா சி சன்பேட் என்பதுதான் மிகப்பெரிய கோவில். இதில் நிறைய தூண்கள் உண்டு..இதுதான் பழையஅரண்மனை பூஜை, விசேஷங்களுக்காக உபயோகப்படுத்தப்பட்டது..இதில் 340 கிலோ தங்கத்திலான ,16 மீட்டர் உயரமான புத்தர் சிலைமுன்பு இருந்ததாகவும், அதனை தீவைத்து பர்மாவினர், எடுத்துகொண்டதாகவும் வரலாறு கூறுகிறது..
விஹார்ன் பிர மொங்கோல் போபிடாஹ் வில் பெரிய வெண்கல புத்தர் சிலை உள்ளது..
வாட் தம்மிகரட் டிலும், இன்றும் கோவிலும் பூஜைகளும் நடைபெறுகிறது.. மேலும் அதிசயமாகசுவரிலிருந்து பெரிய மரம் ஒன்று வளர்ந்து வருவது அதிசயமானதும்.
வாட் ரட்சபுரானா வில் நிறைய தங்கச்சிலைகள் இருந்ததாகவும், கலை வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்தனவாம்.இதனுள் உள்ளே உள்ள படிக்கட்டு வழி சென்றால் இன்னும் பழங்கால ஓவியங்களை காணலாம்.
வாட் பிரா மஹாதட் ஒரு மாபெரும் கோவில். இதில் புத்தரின் சிலையில் உள்ள தலையை சுற்றி மரம் வளர்ந்திருப்பதை காணலாம்.
வாட் பிர ராம் ல் இருந்து ஆயுத்தயாவின் இடங்கள் முழுவதையும் காணலாம்.பிர சேடி சி சூரியோதாய் , வெள்ளை மற்றும் தங்க நிற தூண்கள் நிறைந்தவை.. இவை முன்னாள்,அரசியாரின் நினைவுக்காக கட்டப்பட்டது..தோட்டத்துடன் அழகாக காட்சியளிக்கிறது..
வாட் பு காவ் தாங் பெரிய வெள்ளை தூண்களால் கட்டப்பட்டுள்ளது. அதனுள் பெரிய உருவிலான சிரித்தபடி இருக்கும் புத்தர் சிலை உள்ளது.
வாட் சியுங் தா, வாட் நா பிரா மெரு, வாட் ப நான் சேர்ங் போன்றவையும் சிறியதும் , பெரியதுமாக பல புத்தர் சிலைகள் கொண்டவை.
வாட் யாய் செய் மொங்கோன் ஒரு பெரிய கோவில், படுத்தபடி இருக்கும் புத்தர் சிலை பிரசித்தம்.








தாய்லாந்தில் வருடப்பிறப்பு ( ஏப்ரல் 13-15)


----------------------------------------------------------
தாய்லாந்தில் கொண்டாடப்படும் அனைத்து விசேஷங்களிலும் முக்கியமானது "சொங்க்ரான்"( songkran) எனப்படும் தாய்லாந்து வருடப்பிறப்பே..இது பக்கத்திலுள்ள கம்போடியா, லாவோஸ், மற்றும் பர்மாவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது...



சொங்க்ரான்" என்பது சமஸ்கிருதத்திலிருந்து வந்த வார்த்தையாகும். அதாவது சூரியன் மற்ற ராசிக்குள் பிரவேசிப்பதை குறிப்பது..முக்கியமாக மேஷ ராசிக்குள்..அதன் முழுப்பெயர் மஹா சொங்க்ரான் எனவும் அழைக்கப்படுகிறது...



இந்த விடுமுறை நிச்சயிக்கப்பட்ட ஒன்று.. ஏப்ரல் மாதம் 13ம் தியதி ஆரம்பித்து 15ம் தியதி முடிவடையும்..சிலசமயம் 16ம் தியதியும்..
இது இந்தியாவில் ஹோலி பண்டிகையைப்போலவும் கொண்டாடப்படுகிறது...



இதுதான் தாய்லாந்து மக்களின் பாரம்பரிய திருநாள், விழா எனலாம்..அவர்கள் முழுமையாக விடுமுறையுடன் குடும்பத்தாருடன் இன்பமாக தண்ணீர் தெளித்து கொண்டாடுவார்கள்.
இத்திருநாளில் புத்த கடவுளுக்கும் பெரியவர்களுக்கும் வாசனை திரவியத்துடன் கலந்த தண்ணீர் வழங்கி மரியாதை செலுத்துவார்கள்.பழையன கழித்து ,வீடு கோவிலை சுத்தம் செய்வார்கள்.



ஊர் முழுவதும் தண்ணீர் லாரிலாரியாக வைத்து போவோர் வருவோர் எல்லோர் மேலும் அடித்து விளையாடுவர் வயது வித்தியாசமில்லாமல்.. எல்லோரும் அதை நகைச்சுவையாகவே ஆசீர்வாதமாகவே ,எடுத்தும்கொள்வர்...மேலும் முக்கிய காரணம் கொளுத்தும் வெயில் காலத்துக்கு தண்ணீர் விளையாட்டு சுகமாகவும் இருக்கலாம்..
இது சிஃபி.காம் இல் சித்திரை சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரை.


















காஞ்சனாபுரி..இயற்கையில் ஒர் சொர்க்கபுரி.






மன்னர் ராமா I ( Rama I) காஞ்சனாபுரியை பர்மா படையினரிடமிருந்து தற்காத்துக்கொள்ள ஏதுவாக விசாலமாக்கிய இடம்..த்ரீ பகோடா பாஸ்( Three Pagodas Pass ) வழியாக பார்மாவினர் தாய்லாந்துக்குள் நுழையாமல் இருக்க காஞ்சனாபுரியில் படைத்தளம் அமைக்கப்பட்டது.உலகப்போர் I ன் போது தாய்லாந்து கலந்து கொள்ளவில்லை..ஆனால் ஜப்பானிய படை பர்மாவில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு சாமான்கள் அனுப்ப மிகப்பெரிய ரயில் பாதை தாய்லாந்துக்கும் பர்மாவுக்கும் இடையே கட்டியது.இதில் ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஹாலந்து மற்றும் தாய்லாந்து வீரர்களும் உண்டு..
1.அதில் முக்கியமானது க்வாய் (Bridge on the River Kwai ) எனும் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம்..இதில் 100,000 க்கும் மேல் சிறைக்கைதிகள் கட்டுமானத்தின்போதும், நோயினாலும்,மரணமடைந்தனர்.அதிலிருந்து இந்த பாலம் டெத் ரெயில்வே ( Death Railway ) அன் அழைக்கப்பட்டு வரலாற்று சின்னமானது.. இது பற்றி ஆங்கிலப்படங்களும் வந்தது குறிப்பிடப்பட்டுள்ளது.இது பற்றி ஒரு ஜெத் வார் மியூசியம் விரிவாக சொல்கிறது.(The JEATH War Museum War & Art Museum
JEATH stands for Japan, England, America, Australia, Thailand and Holland,)
2. பிரசித்தி பெற்ற புலி கோவில் இங்குள்ள புத்த பிட்சுக்களால் பாதுகாக்கப்படுகிறது.. புலிகள், பூனைகள் போல பழக்கப்பட்டு அன்பு செலுத்தப்படுகிறது...பார்வையாளர்களும் புலியை தொட்டு விளையாடலாம்.. (நாங்கள் புலி பூங்காவில் புலி குட்டியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.. புலியை மடி மீது அமர்த்த பெரியவன் பால் புட்டியை வைத்து புலிக்கு குடுக்க , சின்னவன் வாலைப்பிடித்துக்கொண்டு விட மறுத்தான்...)மேலும் குரங்கு பள்ளிக்கூடத்தில், தேங்காய் பறிக்கவும், கூடைப்பந்து விளையாடவும் பழக்குகின்றனர்.
3. நிறய விலங்குகள் கொண்ட சஃபாரி பார்க். இதனை பூங்காவின் பேருந்திலோ, மகிழ்வுந்திலோ சென்று விலங்குகளை பார்க்கலாம்..விலங்குகள் அதன் இயற்கையான சூழ்நிலையிலேயே பார்ப்பது சிறப்பு.
4.எரவான் நீர்வீழ்ச்சி: தாய்லாந்தின் மிக அழகான , நீர்வீழ்ச்சி.. இது 7 அடுக்குகளையும் , 1500 மீட்டர், நீளமும் கொண்டு, ஓடிவரும் அழகு நெஞ்சை கொள்ளை கொள்ளும்..இதில் அனைவரும் குளித்து குதூகலிக்க ஏற்றதாய் உள்ளது.இதன் அருகில் பல குகைகள் உள்ளன. அதனுள் சுண்ணாம்பு கற்களால் ஏற்பட்ட ஸ்டலக்மைட்ஸ், ஸ்டலக்டைட்ஸ்,( limestone formations, stalagtites and stalagmites ) தூண்கள் கண்டுகளிக்கலாம்.
5. பொழுதுபோகு அம்சங்கள்..
கோல்ஃப் விளையாட்டு மைதானம், பாறைகள் ஏறுதல், கயாக் என்ற சின்ன தோணியில் காட்டாற்றில் முரட்டுத்தனமாக பயணம் செய்தல், ஆற்றினிடையில், காட்டுக்குள் யானைசவாரி, போன்ற நிறைய உள்ளன..
6. எப்படி செல்வது: தாய்லாந்து தலைநகரிலிருந்து 150 கி.மீ மேற்கே உள்ளது..காரில் 1.30 மணி நேரத்தில் சென்றாலும், ரயிலில் 4 மணிநேரம்.. ரயிலில் செல்லும் போது ஒரு பக்கம் க்வாய் ஆற்றின் வளைவில் , மற்றொரு பக்கம் மலைகளைத்தொட்டுக்கொண்டு, ஆபத்தான சரிவில் மெதுவாக ஊர்ந்து செல்லுவது மிக ரம்மியமாக, அதே சமயம் ஆபத்தானதாகவும் , த்ரில்லிங்காகவும் இருக்கும்..கீழே சுற்றுலாவுக்கென்றே ஆற்றில் படகு வீடுகள் இருக்கின்றது..வருடம் முழுதும் ஒடும் தண்ணீர், மழைக்காலத்தில் வேகத்தோடு சீறி வருவது, மிக அழகு.மேலும் விபரங்களுக்கு இந்த சுட்டியை பார்க்க..