Monday, February 18, 2008

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா - தொடர்....

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா - தொடர்....
======================================

அறிமுகம்...- பகுதி 1...

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் முடிவேயில்லாதது..
---------------------------------------------------------------------------
விமானம் நியூ யார்க் நகரத்தின் மேலெழும்பி பறக்கத்தொடங்கியதும் மதுமிதாவின் எண்ணச்சிறகுகள் விரிக்கத்தொடங்கின..
மேலெழும்பும் போது வரும் காது வலியை மறக்க நினைவுகளை அசை போட்டாள்...


இதே போன்று முதன்முறயாக ரகு என்ற ரகுராமுடன் தேனிலவுக்காக அவள் வந்தது.., பயந்தது..
அதனையே சாக்காக வைத்து அவன் துணையாக அனுசரணையாக இருந்த நிமிடங்கள். மறக்க முடியுமா?
அதன்பின் வந்த எத்தனையோ தனிமைப்பயணங்கள் தராத சுகங்கள் அவை...
பக்கத்தில் அமர்ந்திரூந்த நபர் நல்ல குரட்டை சத்தத்துடன் தூங்க ஆரம்பித்தார்..
இவள் ரகு தன்னிடம் முதன்முதலாக காதல் சொன்னதை எண்ணிப்பார்த்து கொஞ்சம் சத்தமாகவே சிரித்தாள்..


---------------------------------------------------------------------------­------------

ரகு குழந்தைகளுடன் குழந்தையாக தீபாவளி வெடி வெடித்துக்கொண்டிருந்தான்...
விசாலம் அம்மாவோ குழந்தைகளை நினைத்து பயந்தபடி,
" ரகு என்னப்பா விளையாட்டு...கவனமப்பா...." என்று சொல்லிவிட்டு,
பட்சணங்கள் செய்ய சென்றுவிட்டார்..
வீடே கலகலவென்றிருந்தாலும், மது இல்லாமல் கொஞ்சம் வெரிச்சோடிதானிருந்தது...
விசாலம் அம்மாவுக்கு மது மருமகள் அல்ல மகள்...
"நான் உங்க புள்ளயா, இல்ல மதுவான்னு எனக்கு சந்தேகமாயிருக்குமா" ரகு அம்மாவிடம்..
வீடு மற்றும் வேலையாட்கள் மதுவின் வரவுக்கு தயாராகிகொண்டிருக்கிறார்கள்...


---------------------------------------------------------------------------­----------

வேந்தன் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளரும் சகல அதன் மற்ற கம்பெனியின் மேனேஜிங் டைரக்டருமான
வேந்தன் அமெரிக்காவில் படிப்பையும் இன்ன பிற வேலைகளையும் பார்த்து அங்கே நிரந்தரமாக இருக்கலாம்
என்ற நிலையில் தந்தையின் கட்டாயத்தின் பேரில் இந்தியா வந்தவர்.... ராமர் அய்யாவின் 4 மகன்களில் மூத்தவர்..அழகானவ்ர்..


வெளிநாட்டுப்பெண்ணுடன் திருமணம், பின் முறிவு,,,எல்லாம் இள வயதில் நடந்து, அதனால், மருமணம் வேண்டாம்
என்றிருப்பவர்...பெண்கள் என்றாலே வெறுப்பு இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு பயத்தில் பெண்களை
தன் கீழ் வேலைக்கு வைக்க விரும்பாதவர்...


மதுமிதா வேந்தன் கம்பெனியின் மூத்த அதிகாரி.. நம்பிக்கைக்கு பேர்போனவர் என்பதால் சீக்கிரம் உயர்பதவிக்கு வந்தவர்.
பெரியவருக்கு மிகவும் பிரியமானவள்...தன் மகன்களிடம் சொல்லாத விஷயங்களைக்கூட பெரியவர், மதுவிடமே
கேட்டு முடிவெடுப்பார்..


---------------------------------------------------------------------------­------------

13 வருடங்களுக்கு முன்பு..
ரகு வின் கீழ் மது வேலை பார்த்தாள்... ரகு கண்டிப்பான அதிகாரி... எல்லா விவரமும் விரல் நுனியில்..
இவருக்கும் பெண்களிடம் கொஞ்சம் தூரம் வைப்பது பிடிக்கும்...
திருமணம் வேண்டாம் என்று தள்ளிப்போட்டவர்....


ஆனால் மது இந்த அலுவலகம் வந்து 1 வருடத்தில் அவளின் சுறு சுறுப்பும், வேலையின்மீதுள்ள பிடிமானமும், ரகுவை
கவர்ந்தது.....விசாரித்ததில், தன் தோழிக்கு ஏற்பட்ட காயத்தில் திருமணம் வேண்டாமென்று இருக்கிறாளாம்.


கடந்த 6 மாதமாக எப்படி சொல்வது என்று டிசைன் டிசைனாக யோசித்தும் முடியவில்லை..
இன்று அவளை மீட்டிங் என சொல்லி வரச்சொல்லியிருந்தான்...
"மே ஐ கம் இன் சார்.."" உள்ளே வரலாமா"
"யெஸ் ப்லீஸ்."


உள்ளே ஒரு பத்திர்க்கையை வைத்து சிரித்துக்கொண்டிருந்தான் ரகு...
அவனே" ஏன் சிரிக்கேன் தெரியுமா"
ஜாலியாக இருப்பதை பார்த்து கொஞ்சம் வியப்பாகத்தானிருக்குது...இருந்தாலும் அதிகாரி ஆயிற்றே.
" சொல்லுங்க சார்"


" ஹாஹாஹா..நான் படித்த கதையில் தன் செக்ரட்ரியிடம் காதல் சொல்லத்தெரியாது தவிக்கிறான் நாயகன்.. ஹாஹாஹா."
இவளுக்கு சிரிப்பு வரலை. இருந்தாலும் சிர்த்து வைத்தாள்..
" டூ யூ ஹேவ் எனி ஐடியா.. உனக்கெதாவது தோணுதா"
" யூர் சஜஸ்ஷன்.. உன் எண்ணம்?.."


அய்யோ இது வேரயா?.. சீக்கிரம் மீட்டிங் முடிந்தால் வீட்டுக்கு போகலாம் . சரி சொல்லித்தொலைப்போம்.,
" இதிலென்ன சார் பயம்.. ஏதாவது ஒரு பூ வை எடுத்து அவளிடம் " ஐ லவ் யூ.. ஆர் ஐ வாண்ட் டூ மேரி யூ" னு சொல்ல வேண்டியதுதானே"
ஒப்பேத்தினாள்....


உடனே பக்கத்திலுள்ள பூச்சாடியில் உள்ள ரோஜா ஒன்றை எடுத்து மதுவிடம் அருகில் வந்து நீட்டி.,அவள் எதிர்பார்க்காத நிலையில்
" மது ஐ லவ் யூ.. அண்ட் ஐ வாண்ட் டூ மேரி யூ.. .."
என்ன நடக்குது என்பதே புரியாமல் அதிர்ச்சியுடன், ஆனால் காட்டிக்கொள்ளாமல் ,


" சார் என்ன இது .. நேரமாகுது.. சீக்கிரம் சார்.. . ஷிப்பிங் பத்தி பேசலாம் சார்.."
" மது ஐ மீன் இட்....நான் உன்னை கல்யாணம் செய்ய விடும்புகிறேன்..."
ஹாஹா. சிரித்தாள் அவள்....
" சார் ,ப்லீஸ் பி சீரியஸ்..." அசட்டுச்சிரிப்புடன்ன்.............................


---------------------------------------------------------------------------­----------------------
--
தொடரும்...வாரம்தோரும்...

No comments: