Wednesday, April 27, 2011

ஏழை என்ற இளக்காரம்?.

http://timesofindia.indiatimes.com/city/chennai/Chennai-school-urges-parents-to-protest-against-RTE/articleshow/8085252.cms

மேலே உள்ள சுட்டியில் ஏழைகள் வசதியான பள்ளியில் ஒதுக்கீடு முறையில் கல்வி கற்கும் உரிமையை மறுக்க ஒரு பள்ளி அழைப்பதாக செய்தி..

Admitting poor students may bring down discipline and the quality of education and also demoralize teachers, says Sri Sankara Senior Secondary School.


ஏழைகள் எல்லாரும் மொத்தமா நாடு முழுக்க வேலை நிறுத்தம் செய்தா என்னய்யா பண்ணுவீங்க?.. முட்டாள்கள்.

ஏழை என்றால் ஒழுக்கமில்லைனு உங்களுக்கு யார் சொல்லித்தந்தா.?

In a circular issued to students by the Adyar-based school, principal Subala Ananthanarayanan has linked a student's performance to his/her economic status and asked parents to protest against the Right To Education Act.

ஒழுக்கத்த சொல்லித்தரவேண்டிய உங்ககிட்டயே ஒழுக்கமில்லையே..

வன்மையாக கண்டிக்கத்தக்கது..

எத்தனை துணிவு..?.. இதை சொல்ல?..

டிசிப்பிளீன் னா எது?,.. இந்த இங்கிலிபீசுல கெட்ட வார்த்தை பேசிட்டு அது சரின்னு அர்த்தம் சொல்ற கேவலமா?..

இல்ல பெரிய படிப்பு படிச்சுட்டு வொயிட்காலர் பிராடுதனம் , லாபியிங் பணறதா?..
குடிச்சுட்டு வேகமா கார் ஓட்டி பாதசாரிகளை கொல்வதா?.. ஈவ் டீஸிங் செய்து தற்கொலைக்கு தூண்டுவதா?.. எழுத்தில் விபச்சாரம் செய்வதா?..ரேகிங் ல் மாணவனை துண்டு துண்டாக வெட்டுவதா?.. நீதிக்கு 15 வருடம் காத்திருக்க வைப்பதா?.. எதை சொல்லுவோம் டிசிப்ளின் என.?..



ஆமா அது தெரியாதுதான் ஏழைகளுக்கு.

"All this will make all schools perform exactly like government schools in quality and discipline. //

குவாலிட்டியா?.. மாநில ரேங்க் எடுக்குது அரசு பள்ளிகள்..

(http://www.dinamalar.com/News_detail.asp?Id=19020, http://www.dinamalar.com/news_detail.asp?Id=215485 : குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிரின்டிங் டெக்னாலஜி, மருத்துவ ஆய்வகம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மாநில அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது,http://article.wn.com/view/WNAT7d5d8a4fa74cee7b251d08ec41ba41d9/ தாமரன்கோட்டை அரசு பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை.http://silakurippugal.blogspot.com/2008/06/blog-post.html ).

இந்த மாணவ/மாணவிகள் ஆசிரியர்கள் கேள்விப்பட்டால் எத்தனை வருத்தம் வரும்.. இதைவிட கேவலப்படுத்த முடியுமா இவர்கள் உழைப்பை..???

Is this why we have admitted our children in this or any good school?" the circular asks.

குட் ஸ்கூல் கு அர்த்தம்/அளவுகோல் என்னென்ன?.. காமிராவில் சக மாணவியை படம் பிடித்து இணையத்தில் போடும் பிள்ளைகள் படிக்கும் பள்ளியா?..போதை மருந்துக்கு அடிமையாகும் குழந்தைகள் படிக்கும் பள்ளியோ.?.

இதை சொல்பவர் வீட்டில் சமையல்காரர், தோட்டக்காரர் , ஓட்டுனர், இவர்களெல்லாம் ஒழுக்கமற்றவர்களா?.. அப்படி இருந்தால் இவர்களால் இன்று இப்படி பேசமுடியுமா?..

கல்வி என்பது என்ன?..

அறிவியலும், பூகோளமும் , பொருளாதாரம் பற்றி படிப்பது மட்டுமா?.. வாழ்வில் பணம் சம்பாதித்து வெற்றி பெற்று பின் மன அமைதியின்றி வாழ்நாளெல்லாம் மருத்துவரே கதி என அலைவதா?..

நல்ல கல்வி வாழ்க்கைக்கான பாடமாக இருக்கணும்.. உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் சக மனிதனை மனிதத்தன்மையோடு நேசிக்க, அவனும் சுவாசிக்க வழி வகுக்குமாறு கல்வி இருக்கணும்..

முரண்களை ஏற்றத்தாழ்வுகளை ஏற்கும் பக்குவம் சொல்லித்தருவதாக அல்லவா இருக்கணும்.?

சிறு வயதிலேயே பிரிவினையை போதிக்கும் கூடங்களை மூடிவிட்டால்தான் என்ன?..

ஜப்பானில் சுனாமி வந்தா பதறாம இருக்கிறார்கள்.. ஏன்.. எப்படி வந்தது அந்த பொறுமை..?. பெருந்தன்மை..?.. எப்படியும் மண்ணுக்குள் போக போறோம்.. இப்பவோ எப்பவோ.. என வாழ்நாள் முழுதும் குழந்தைப்பருவத்திலிருந்தே தயார்படுத்தப்படுகின்றனர்.. வாழும் நாட்களில் நம்மால் முடிந்ததை சக மனிதருக்கு செய்யணும் என்ற ஆவல் அங்கே பழக்கப்படுத்தப்படுகிறது..


நம்மூர் தமிழர்கள் மலேஷியாவில் கழிப்பறை சுத்தம் செய்யும் வேலை செய்வதை பார்த்தேன்.. மகிழ்ச்சியாக , மரியாதையாக நடத்தப்படுவதாக சொல்கிறார்கள்.. நம் நாட்டில்.?.. எப்ப இந்த மாற்றம் வரும்.. யார் செய்யப்போகிறார்கள்..?

டிஸ்கவரி சேனலில் , காட்டில் ஒருவன் அகப்பட்டுக்கொண்டால் பாம்பை தின்று ஓடையில் ஓடும் நீர் குடித்து, மரணித்த ஒட்டகக்கறியை பிச்சி எடுத்து தின்பதாக காண்பிக்கின்றார்கள்.. ஆக மரணிக்கும் சூழல் வந்தால் அடுத்தவனை கொன்றாவது நாம் பிழைக்கணும் எனும் என்ணமுள்ள அல்ப மனிதர்களே நாம்.. ஆனால் நாகரீகம் என்ற பேரில் பல விதங்களில் மனிதன் முன்னேற்றம் அடைந்தாலும், எண்ணம் இன்னும் கீழ்த்தரமான சக மனிதனை பிரித்து பார்க்கும் விதமாக அல்லவா போய்க்கொண்டிருக்கிறது..

எத்தனை மதம் வந்தாலும், நான் மதவாதி என சொல்லத்தான் பெருமைப்பட்டுக்கொள்கிறோமே தவிர அதிலுள்ள நல்ல விஷயங்கள் நம் கண்ணில் படாமலே இருப்பது விந்தைதான்..

யோகா , ஆன்மீக சொற்பொழிவெல்லாம் யார் கேட்கிறார்கள் னு கவனித்துள்ளீர்களா?.. ஏழைகளின் யோகா, ஆன்மீகம் எது?.. ஏன் அவர்கள் மகிழ்ச்சியாக வயல் வேலையோ மற்ற வேலையோ ஈடுபாட்டுடன் செய்கிறார்கள் வெள்லந்தி மனதோடு.?.. ஏனெனில் அடுத்தவனை கெடுத்து , போட்டுக்கொடுத்து வாழ்க்கையில் எப்படி முன்னேற என்ற எண்ணம் அவர்களை அரிப்பதில்லை.. தெளிவா இருக்காங்க.. இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் னு தெரியுது.. உயர்தர சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதில்லை..ஆனாலும் எதையும் ஏற்கும் பக்குவம் அவர்களிடமல்லவா இருக்கிறது..

கிலோமீட்டர் கணக்கில் நடக்க முடியும்.,. ஆனா நாம் வீட்டுக்குள்ளேயே மெஷின் வாங்கி வைத்து அதே நடையை வெட்டியாக நடக்கிறோம்.. உலகத்தை அவர்கள் சுமக்கிறார்கள்.. நம்மைப்போன்றவர் நவீன உபகரணங்களால் பாரமாக்குகின்றோம்..மின்சாரம் இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது.. அவர்களுக்கு அப்படியில்லை.. எச்சூழலிலும் வாழ முடியும்.. யார் பலசாலி?.. யாரிடமய்யா ஒழுக்கம் அதிகமிருக்குது.?..

பசிக்காக ஏழை திருடுகிறான்.. ஏழைப்பெண் பாலியல் தொழில் செய்கிறாள்.. படித்தவன் பெரிய அளவில் ஊழல் செய்கிறான்.. சீதாம்மா தன் எழுத்தில் சொன்னது போல சில பணக்காரன் ( அந்த காலத்திலேயே ) கார் கீயை மாற்றிக்கொள்கிறான்.. சினிமாவில் பெண்ணை போகப்பொருளாய் காண்பிப்பது , உடை குறைய குறைய அவளுக்கு பணத்தை புகழை அள்ளி அள்ளிக்கொடுப்பது மேல்தட்டு நாகரீகம்..???. அப்படித்தானே?.


ஏழைகளில் சேற்றில் கைவைக்காமல் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பதை ஒவ்வொரு முறை உண்ணும்போதும் எண்ணணும் என குழந்தைகளை பழக்குவோம்.. இனியாவது நாமும் திருந்துவோம், இதுவரை எப்படி இருந்தாலும்..

சுத்தப்படுத்தும் வேலையில் அவர்கள் இல்லையென்றால் நாடே நாறிவிடும் என்ற நியாபகமிருக்கட்டும் நமக்கு..

நல்லவர் கெட்டவர் எல்லா நாட்டிலும், இனத்திலும் , உண்டு.. அதுக்கு ஏழை என்ற அப்பத்தமான காரணம் சொல்லும் அருவருப்பை களைவோம்.. பணக்காரரிலும் நல்லவர் உண்டு.. பணக்காரர் எல்லாம் கெட்டவர் என ஏழை ஒதுக்குவதில்லையே..

*சக மனிதனை சமமாக பாவிக்காத, மனிதத்தனமை வளர்க்காத எந்த நாடும் அந்த மக்களும் , இல்லாமலே போகட்டும்*..


போலித்தனத்திலிருந்து இனியாவது வெளிவந்து சக மனிதனை நேசித்து ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாளில் ஏதாவது செய்தோம் என்ற மன நிறைவோடு மரணிப்போம்.. அப்போது யோகம் , தியானம் ஆன்மீகம் எதுவும் நமக்கு தேவையிராது...

( செய்தி பார்த்த அவசரத்தில் எழுதியது.. தவறிருப்பின் மன்னிக்கவும்..தயவுசெய்து அலுவலிலிருந்து பின்னூட்டம் தவிர்ப்போம்.. நன்றிகள்.)

லேட்டஸ்ட் செய்தி -




படம் .: நன்றி கூகுள்..