Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, February 5, 2011

நான் யார்?.. சிறுகதை..




" அய்...யாஆஆஆஆஆஆஆஆஆஆஆ....." ஓங்கி குரலெடுத்து கதறினாள் மீனாட்சி.

நீதிபதி வெங்கடேசன் மடியில் வைத்து படித்துக்கொண்டிருந்த கீதையை மூடிவிட்டு , கண்ணாடியை கழற்றினார்.

பின் மெதுவாக தான் அமர்ந்திருந்த ஊஞ்சல் கம்பியை பிடித்துக்கொண்டு கால் தரையில் ஊன்றி நிப்பாட்டினார்..

பார்வையாலேயே காவல்காரனுக்கு சம்மதம் தந்தார் மீனாட்சியை உள்ளே விட சொல்லி..

" ராவுல ,என்ன ஏதுன்னு சொல்லாம போலீஸ் புடிச்சுட்டு போச்சுய்யா.. திருட்டு கேஸூன்னு சொன்னாங்க..

வேல பாக்க கம்பெனில திருடிட்டார் னு நிர்வாணமா நிக்க வெச்சு அடிச்சிருக்கான். அப்பவும் அவர் கிட்ட பொருள்

ஏதும் கண்டுபிடிக்க முடியாம போலிஸ் கிட்ட சொல்லி கூட்டிட்டு போனாங்கய்யா.. நான் போறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சேய்யா.."

கதறினாள்.. மீனாட்சி நீதிபதி அலுவலகத்தில் துப்புறவு வேலை செய்பவள்..

" ராவுல உடனே அய்யாவ பாக்க ஓடிவந்தேங்ய்யா . ஐயா தூங்குறாரு எழுப்ப முடியாதுன்னு காவக்காரர் சொல்லிட்டாருங்கய்யா.." கதற சக்தி இல்லாமல்

மூச்சு விட்டு விட்டு பேசினாள்..

ராதிகா சத்தம் கேட்டு வந்தவள் கையிலிருந்த காப்பியை மாமனாருக்கு தந்துவிட்டு மீனாட்சியை ஒரு கணம்தான் கவலையோடு பார்க்க முடிந்தது..

நீதிபதியின் பார்வை அவளை உடனே உள்ளே போக சொன்னது..

"சரி நான் பார்க்கிறேன். நீ போய் ஆக வேண்டியதை கவனி..எந்த ஸ்டேஷன், கம்பெனி விபரம் உதவியாளர் கிட்ட கொடுத்துட்டு போ.. "

" ராதிகா ஒரு 5000 ரூபாய் எடுத்துட்டு வா.."

எடுத்து வந்தவள் , காவலனிடம் கண்ணாலேயே " ஏன் இரவு அனுமதிக்கல ? " னு கேட்டு " என் வேலை போயிருக்குமே மா" என்று கைவிரிப்பே பதிலாய் வந்ததும்

புரிந்துகொண்டாள்..

---------------------------------

தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார் நீதிபதி வெகுநேரமாய்.. பின் , இறுதியாக ,

" சரி தொகையை கொஞ்சம் கூட்டிடுங்க.. மத்தத நான் பார்த்துகிறேன்.என் தொகையை குறைச்சுக்கலாம்.."

குளித்துவிட்டு உணவு மேசைக்கு வந்தவர் , மருத்துவர் மகனிடம் ,

" போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் கேட்கிறபடி செய்துகொடுத்துடு " என்று கட்டளையிட்டார்..

இட்லியை பிட்டுக்கொண்டிருந்தவர் தலை அசைத்தார்.

கணவனின் அடிமைத்தனத்தை ஒரு வெறுமைச்சிரிப்போடு கடந்தாள்..

-----------------------------------

" பூஜை சாமான்லாம் தயாரா மா? " மாமியார்

பேரப்பிள்ளைகள் அட்சரம் பிசகாமல் ஸ்லோகம் சொல்வதை ஒரு கணம் கண் மூடி ரசித்தார் நீதிபதி..

அதையே பாராட்டாய் எடுத்துக்கொண்டு வெட்கச்சிரிப்பில் பெருமிதமாய் பூஜை செய்ய ஆரம்பித்தார் மாமியார்..

----------------------------------

குடுகுடுன்னு மாடிப்படி ஏறிய 6 வயது மகளை தடுத்து நிப்பாட்டி ,

" ஏன் இத்தனை வேகம்.. எத்தனை முறை சொல்வேன்.. ஓடாதே.."

" அய்யோ மம்மி. விடுங்க. பென்சில் சீவும் போது கை வெட்டி காளிம்மாவுக்கு ரத்தம் மம்மி.."
விட்டால் அழுதுடுவாள் போல..

" ஒருவாட்டி சொன்னா கேட்கமாட்டியா. ஷார்பனர் இருக்கும்போது ஏன் அவ கிட்ட தரணும்..? " திட்டிக்கொண்டே பின்பக்கம் போக ,

சாதாரணமாய் பெருக்கிக்கொண்டு இருந்தாள் காளி..

" என்னாச்சு காளி .?"

" எதும்மா.. ..ஒஹ். அதுவா. பாப்பா சொல்லிச்சா.. ஹாஹா.. ரத்தத்த பார்த்து கொழந்த பயந்துடுச்சு போல.. அட இங்க பாருங்க.. பிளாஸ்டர் மருந்தெல்லாம் எடுத்து வாரத."

கலகல வென சிரித்தாள்.. " என் செல்லம், என் தங்கமே.. அம்மா மாதிரியே கொணம் ஒனக்கும்.. என்ன பெத்த தாயே, ஏழ பாழங்களுக்கு இதெல்லாம்

பழக்கம்டா கண்ணு. வலிக்காது கண்ணே.. " னு கொஞ்சினாள்..

----------------------------------------






எல்லா வேலையும் முடித்துவிட்டு குழந்தைகளை பள்ளி அனுப்பிவிட்டு , மாமனார், கணவர் வேலைக்கு சென்றதும்,

மாடிக்கு சென்றாள்.. குளித்துவிட்டு பக்கத்தில் இருக்கும் கலக்டர் வீட்டுக்கு செல்லணும்.. பேரப்பிள்ளைக்கு பேர் வைக்கிறார்கள்..

15 ஆயிரம் மதிப்புள்ள டிசைனர் புடவையை எடுத்து வைத்தாள்.. ஏதோ ஒரு எம்.எல்.ஏ வீட்டு பரிசாம்.. அலட்சியமா சிரித்தாள்..

சின்ன நகை டப்பாவில் பரிசை பத்திரப்படுத்தினாள்..தான் சேமித்து வைத்த லட்ச ரூபாய் பணத்தையும் எடுத்து கைப்பையில் ஒளித்துவைத்துக்கொண்டாள்.

அனாதை இல்லம் போகணும் பிராயசித்தமாக என எண்ணிக்கொண்டாள்..

" ரெடியாம்மா " மாமியார் குரல்

" இதோ 10 நிமிஷத்தில் வந்துடுறேன் மா.. "

அவசர அவசரமாய் கணினியில் உட்கார்ந்தாள் .

" கொலையா தற்கொலையா ?. நீதி வேண்டும்.. ஏழைகள் வயிற்றில் அடிக்கும் நீதிபதி , மருத்துவர் , காவல்துறை என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும்

சகட்டுமேனிக்கு ஆசைதீர கிழி கிழி என கிழித்தாள்.. நீதிபதி வீட்டினரையும் சாபம் விட மறக்கவில்லை.. இறுதியில் - தீகங்கு என கையெழுத்திட்டாள்..

பத்திரமாக தன் ஜெர்மன் தோழிக்கு அனுப்பி வைத்தாள்..அன்று இரவே இணையத்தில் தீகங்கின் எழுத்து வெளிவந்து சலசலப்பை ஏற்படுத்தியது . பற்றிக்கொண்டு பற்றி எரிந்தது

நாலாபுரமும்..அதை மனக்கண் முன் கொண்டு வந்து புன்னகைத்தாள் திருப்தியோடு..

எவ்வித சுவடுமின்றி அழகாக அலங்காரம் செய்துகொண்டு மாடிப்படி இறங்கி வந்தாள் தேவதை போல..

















படம் : நன்றி கூகுள்..

Tuesday, November 30, 2010

இறுதிவரை லிவிங்-டுகெதர் - சிறுகதை..

































அமெரிக்காவில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு அடையாரிலிருந்து பேசினாள் ஷான் என

செல்லமாக முன்னாள் கணவனால் அழைக்கப்படும் ஷாந்தினி.

வழக்கமான விசாரிப்புக்கு பின் ,

" சொல்லு ஷிவா. என்ன தயங்குற .?"

" எனக்கே என் மேல் அவமானமா இருக்கு ஷாந்தினி.."

" ஹேய்.. என்ன இது.. நான் உன்னோட பெஸ்ட் பிரண்ட் னு நினைச்சு சொல்லு."

" ம்."

" எ.......ன்...........ன. சொல்லு.?"

" நா.........ன் கீர்த்தி கி.........ட்ட புரோபஸ் பண்ண...............லாம் னு இருக்................கேன்.."

" ஹேய்.. வாட் எ சர்ப்ரைஸ்... ஐம் வெரி ஹேப்பி பார் யு.."

" நிஜமா.?"

" இல்ல பொய்யா..:))"

" அதில்ல ஷான் , என்னமோ உனக்கு துரோகம் செய்ராப்ல தோணுது.."

" என்ன இது.?. நாம பிரிஞ்சு 4 வருஷம் ஆகுது.. இன் ஃபேக்ட். நானே உனக்கு நல்ல பொண்ணு பார்த்துட்டு இருந்தேன்.."

" அம்மா கிட்ட சொல்லவா.?"

" வேண்டாம் ஷிவா. அம்மா பழைய காலத்து ஆள்.. அவங்களால இதை உடனே ஏத்துக்க முடியாது..லீவ் இட் டு மி.."

" சரி நம்ம பையன் கிஷன் கிட்ட.?"

" ஷ்யூர்.. அவன் கிட்ட கண்டிப்பா சொல்லு.. ஹி வில் ஆல்சோ பி வெரி ஹேப்பி.. ஃபார் யூ.."

" ஷான் அதுக்கு முன்னால சில செட்டில்மெண்ட்ஸ் பண்ணிறலாம் னு நினைக்கிறேன்.. "

" வாட். " கொஞ்சம் எரிச்சலோடு.

" அதான் , உன் பேர்லயும், கிஷன் பேர்லயும் சொத்துக்கள் வாங்கலாம்னு..." முடிப்பதற்குள் ,

" டோண்ட் பி ரப்பிஷ். ஷிவா.. நீ தேவைக்கும் மேல செய்துட்ட.. உன்னோட அம்மாவை என்கூட வாழ அனுமதிச்சிருக்க..எனக்கு விருப்பமான

இந்த டீச்சிங் புரொபஷன் க்காக இந்த பள்ளி ஆரம்பிச்சு கொடுத்த . உன்னோட அறிவியல் ஆராய்ச்சிக்காக அமெரிக்காவில் இருக்க விருப்பம் உனக்கு..

எனக்கு நம்ம நாட்டுல வாழணும்னு ஆசை.. எல்லாத்துக்கும் அனுமதிச்ச.. அழகான நட்போட பிரிஞ்சோம்..

பிரிஞ்சதிலிருந்து உன் மேல மரியாதை கூடிட்டேதான் இருக்கு.. நம்ம மகனை ஒரு நல்ல தகப்பனா வளர்ப்பதைவிட , ஒரு மிகச்சிறந்த நண்பனா பார்க்கிற..

என்னை விட அதிகமா நீதான் அவன்கிட்ட அமெரிக்காவிலிருந்து தினமும் பேசுற..வழிநடத்துற. லிசன் பண்ற அவன் பிரச்னைகளை... "

" அதுக்கில்ல ஷான்.. நாளைக்கே எனக்கு இன்னொரு குழந்தை வந்தப்புரம் நான் செய்ய முடியுமோ இல்லையோ.?"

" ஸ்டாப் இட் ஷிவா.. ஏன் இப்படிலாம் திங்க் பண்ற..?.. நான் செய்வேன் உன் குழந்தைக்கு.. ஏன் நம்ம மகன் செய்வான் . அவனை அப்படித்தானே கொடுக்க சொல்லி பழக்கி வெச்சிருக்கோம்..

ஹி வில் எஞ்சாய் கிவ்விங்.பணம் நமக்குள் எப்பவாவது பிரச்னையா வருமா என்ன.? "


" சரி அம்மா கிட்ட எப்ப சொல்றது.?"

" உனக்கு ஒரு குழந்தை பிறக்கட்டும்.. அப்ப இந்தியாவுக்கு கூட்டிட்டு வருவல்ல.. அப்ப சொல்லிக்கலாம். கிஷனோட தம்பி, தங்கைன்னு.. சரியா..?.. "

" உன்னை மாதிரி ஒரு நல்ல மனைவியை இழந்தாலும் , ஒரு நல்ல தோழியா ஆயுசுக்கும் நீ இருப்பன்னு நினைக்கும்போதே என் வாழ்க்கை பூரணமா இருக்கு ஷான்.."

" நான் தான் உனக்கு நன்றி சொல்லணும் ஷிவா.. உன்னோட உறவுகளையெல்லாம் எனக்கு கொடுத்தியே.. நம்ம மகனுக்கு ஒரு நல்ல தோழனா , வழிகாட்டியா இருக்கியே.."

" இருந்தாலும் ஒரு கில்டி ஃபீலிங்.. ஷான்."

" நோ..நோ.. நெவர் ஃபீல் லைக் தட்.. உனக்கு துணை அவசியம் னு எனக்கு நல்லா தெரியும்.. உன்னோட முன்னேற்றத்துக்கு அது தேவை.. ஆனா எனக்கு அப்படியில்ல.. தம்பத்யம் எனக்கு

முக்கியமல்ல னு உனக்கும் தெரியும்... சோ.வாட் ஸ்டில் வி ஆர் லிவிங் டுகெதர் அஸ் குட் பிரண்ட்ஸ்.. இனி கீர்த்தியும் என்னோட தங்கைதான்.. விஷ் யு போத் ஆல் த பெஸ்ட் திங்ஸ் இன் லைஃப்...."

" சரி ஷான். பிலீஸ் , கொஞ்சம் பணம் மட்டுமாவது அனுப்பி வைக்கிறேனே.."

" இதப்பாரு . நீதானே சொல்வே, பொன்ணுங்கல்லாம் சொந்த கால் ல நிற்கணும். னு. என்னை அப்படி நிற்க வெச்சுட்டு இப்ப கையேந்த சொல்றியே நீயே.. வேண்டாம் ஷிவா.. ஏதாச்சும் டிரஸ்டுக்கு

அனுப்பி வை. நிறைய பணம் வெச்சிருந்தீன்னா.." சிரித்தாள்..

" உன் மேல மதிப்பும் மரியாதையும் கூடிட்டே இருக்கு ஷான்.. யு ஆர் எ வெரி டிஃப்ரண்ட் பெர்சன்.. உன்னை மாதிரி ஒரு பெண் குழந்தை பெற்று வளர்க்கும் ஆசை வந்துடுச்சு."

" ஐ ஃபீல் ஹானர்ட் ஷிவா..."

" கீர்த்தி என்ன செய்றாங்க.?.. எப்போ கல்யாணம்..?"

" அவங்க ஃப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட்.. திருமணம் இப்ப இல்ல.. இப்போதைக்கு லிவிங் டுகெதர் மட்டும் .கொஞ்சம் எனக்கு என்மேல பயம்தான். :) "


" எனக்கு உன் மேல அதிகமா நம்பிக்கை இருக்கு. நீ நிச்சயமா ஒரு நல்ல கணவனா இருப்ப னு .. கோ அஹெட்.. "




.


படம் : நன்றி கூகுள்..




.

Thursday, October 7, 2010

திட்டோ திட்டு..சிறுகதை...








































காலங்காத்தால எழுந்ததும் சுப்ரபாதம் கேட்குதோ இல்லியோ , நடராஜன் சார்வாள் வீட்டிலேருந்து காட்டு கத்தல் கேட்கும்.

வேற ஒண்ணுமில்ல மூத்த பிள்ளையாண்டான் பகத்சிங் மேல அம்புட்டு பாசம்.

அதிலேயும் தினமும் மறக்காம சொல்வது " உனக்கு போய் பகத்சிங் பேர வேச்சேனடா.."

இவன் கேட்டானா அந்த பேரை வைக்க சொல்லி... இல்ல பகத்சிங் மாதிரி வீரத்தை காண்பிக்க சுதந்திர போராட்டம் தான் இருக்கா என்ன?..

இப்படி மனசுக்குள்ளேயே கேள்வியும் கேட்டுக்கொண்டு சிரித்து வைப்பான்..

சில நேரம் அடக்க முடியாமல் சிரிப்பு வந்தால் வாந்தி எடுப்பது போல் பாவனை செய்துகொண்டு பின் கட்டில் போய் விழுந்து விழுந்து சிரித்து வைப்பான்..

கூடவே அம்மாவும் , தம்பி , தங்கையும் வந்திடுவதுமுண்டு..

அப்பத்தான் கொஞ்சம் எரிச்சலாயிருக்கும் அவனுக்கு.. சத்தமா சிரிக்காதீங்கன்னு நிஜமாவே கோபப்படுவான்..அவர்களிடம்..

என்னடா இவனை புரிஞ்சுக்கவே முடியலை னு அலுத்துகொண்டு செல்வார்கள்..

வழக்கம் போல இன்னிக்கும் ஆரம்பிச்சார் அப்பா..

" டேய் எலக்ட்ரிக் பில் கட்ட சொன்னேனே .. இன்னும் கட்டலியா.?.. நீயெல்லாம் எதுக்குத்தாண்டா இருக்க.. தண்டமா..?"

சத்தம் கேட்டதுமே , முதல் அலாரமாய் போர்வையை விலக்கி மணி பார்த்தான்.. சரிதான் 6.45.. அப்பா மார்க்கெட் க்கு போய்ட்டு வந்துட்டார்..போல..

15 நிமிடம் கழித்து..

" அடேய் , அறிவு இருக்கா உனக்கு.. இன்னிக்கு நேர்காணல் இருக்கே . மறந்துட்டியா?.. "


அட 7 மணி ஆயிடுச்சா.?..என எழுந்து உட்கார்ந்தான் சோம்பல் முறித்துக்கொண்டு...

அடுத்த 15 நிமிடத்தில்....

" ஏண்டா கணினி மேசையில் என்னத்த தான் வெக்கிறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா?.."

வெச்சது சின்னவன்.. ஆனா திட்டுவது இவனைத்தான்..

" 7.15 ஆயிடுச்சா..." பல் துலக்க போனான் பகத்சிங்.

" ஏங்க நீங்க கிளம்புங்க . நேரமாச்சு... " அம்மா..

" பெரியவன திட்டினா உனக்கு பொறுக்காதே.. சின்னவன பாரு அவன் வேலைய ஒழுங்கா செய்யுறான்.."

படிக்கும்வரை பெரியவனுக்கும் அளவாதான் இருந்தது திட்டு, இப்ப 3 மாசமா வேலை இல்லாமல் இருப்பதால் திட்டும் கோட்டா கூடிவிட்டது.

சின்னவன் அப்பாவின் முகத்தை நேரா பார்த்தான் ஒருமுறை.. அதாவது "என்னை ஒண்ணும் சொல்ல தேவை இல்லை " என்பது போல..

பெரியவனை திட்டுவது போல சின்னவனை திட்ட முடியாது என்று அப்பாவுக்கு தெரியும்...

அதனால் அடக்கி வாசிப்பார்...சின்னவனிடம்...

"ஏண்டா அந்த பைக் துடைத்து வைக்க சொன்னேனே .. ஒரு அப்பாவுக்கு இந்த உதவி கூட செய்ய கூடாதாடா.?.

உங்களுக்காக மாடா உழைக்கிறேனே...%#%^$%&*^%*(^^...... " ஆரம்பித்துவிட்டார். முழு கச்சேரியை...

ஆஹா 7.45 ஆயிடுச்சா... இனி குளிக்க போயிடணும்... னு நினைத்து கதவை பூட்டிக்கொண்டு உள்ளே சென்று பாட ஆரம்பித்தான்..

" நான் இவ்வளவு கத்துறேன்.. அவன் காதுல போட்டுக்காம பாட்டு பாடுறான் பாரு..."

" ஏங்க அந்த புள்ள பதில் பேசினா , எதிர்த்து பேசுறான் னு திட்டுவீங்க.. பேசாட்டியும் திட்டுறீங்க.. என்னமோ போங்க.." அம்மா..

" ஏண்டி எனக்கென்ன ஆசையா.. திட்டிகிட்டே இருக்கணும்னு..அவனுங்க நல்லதுக்குத்தானே சொல்றேன்..எனக்கெதிராவே வளர்த்து வை...

சரி சரி..சாப்பாடை எடுத்து வை..."

குளித்து முடித்து சாமி கும்பிட்டுவிட்டு நெற்றியில் விபூதி இட்டு வந்தான் பகத்சிங்...

" இந்த பக்திக்கொண்ணும் குறைச்சலில்லை..." சொல்லிட்டே மூக்கில் சிந்தியிருந்த விபூதியை துடைத்தும் விட்டார்.. முகத்தை மறக்காமல் உர்ர்ர் என வைத்துக்கொண்டே..

" டேய் நேர்காணல் நடக்கும் இடத்துக்கு எப்படி போக போற.?."

" பஸ் ல தான் பா."

" ஏன் என்னை கூட்டிட்டு போனா மதிக்க மாட்டாங்களோ.?"

வாந்தி வருவது போல கையை வாயில் வைத்து அடக்கிக்கொண்டான்... வேறு பக்கம் திரும்பி.. தோசை போட வந்த அம்மாவோ தோசை போடாமல்

உள்ளே போய்விட்டார்..சிரித்துக்கொண்டே..

" கெளம்பு டா. சீக்கிரம் . போற வழியில இறக்கி விடுறேன்."

" இல்லப்பா நான் பஸ் ல..." முடிக்குமுன் ,

" ஏய் வெளங்காதவனே.. நேர்காணல் னா சொன்ன நேரத்துக்கு 30 நிமிஷத்துக்கு முன்னால அங்க இருக்கணும் தெரியுதா?.. என்கூட வர

இஷ்டமில்லன்னா ஆட்டோல யாவது போய் தொலை அப்ப..இந்தா 200 ரூபாய்..."

' 100 ரூபாய் போதும் பா..."

" திரும்பி வர உங்க தாத்தாவா தருவார்..கடனா வெச்சுக்கடா.. சம்பாதிச்சதும் வாங்கிக்கிறேன்..என்னமோ நான் கஞ்சன் மாதிரி ஊரெல்லாம் நினைக்க வெப்பீங்களே...."

சின்னவன் முறைத்தான்.. இப்ப அண்ணனையும் , அம்மாவையும் சேர்த்து...அண்ணனை திட்டிய கோபத்தில் சின்னவன் சாப்பிடாமலேயே போனான்..

----------------------------------------------------

நேர்காணல் முடிந்து சோகமா வீடு வந்தான் ..

" சரி விடுப்பா ..அவங்களுக்கு கொடுத்து வைக்கல உன்னை வேலையில் சேர்க்க.." அம்மா.

" இல்லம்மா வேலை கிடைச்சுடுச்சு..சென்னைக்கு போகணும் "

அம்மாவுக்கு முகமெல்லாம் மலர்ச்சி... " நெசமாவாப்பா..?" அம்மா


" அப்புரம் ஏன் அண்ணா , வருத்தம்.. ஜாலியா கொண்டாடிடுவோம்..." சின்னவன் கணினி விட்டு எழுந்து வந்தான்...

" இல்லடா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்...அப்பா பத்தி"

" என்னண்ணா.இனி அவர் தொல்லை உனக்கு இருக்காது ..திட்டமாட்டார்.. தப்பிச்சுட்ட.எஞ்சாய்..."

" இல்லடா... அதான் என் கவலை.. நம்ம அப்பா ரொம்ப நேர்மையானவர் டா. அதிக பாசக்காரரும்.. சின்ன வயதிலேயே தன்னோட அம்மாவை இழந்து

அப்பாவோட கண்டிப்பிலே வளர்ந்து அத்தைமார் இருவரையும் கரை சேர்த்த அயர்ச்சி அவருக்கு... ரொம்ப கஷ்டப்பட்டுட்டார்டா..வாழ்க்கையில்...

இப்ப இவர் பதவியிலும் நேர்மையா இருப்பதால் பல தொந்தரவுகள்.. அந்த எரிச்சலையெல்லாம் தான் கோபம் போல என்னிடம் கொட்டி தீர்ப்பார்..

சர்க்கரை வியாதி வேறு அப்பாவுக்கு..அதனால் அவர் என்னை திட்டும் ஒவ்வொரு முறையும் எனக்கு அவர் மேல் பரிதாபமாய்தான் இருக்கும்..

இனி அவர் என்னை திட்ட முடியாதே.. தயவுசெய்து எனக்கு பதிலா அந்த திட்டுகளை நீ வாங்கிக்குவியா டா தம்பி.?.. அதுமட்டும் இல்லடா, அப்பா கிட்ட

திட்டு வாங்கி வாங்கி யார் திட்டினாலும் சிரித்துக்கொண்டு சகிச்சு போகும் பழக்கம் வந்தது.. அதனாலேயே எனக்கு நிறைய நட்புகளும்..தெரியுமா டா..".

சிரித்துக்கொண்டே சொன்னான்...

கேட்டுக்கொண்டிருந்த அம்மா, தம்பி, தங்கை மூவர் கண்ணிலும் கண்ணீர்...

பேச வார்த்தையின்றி மெளனமாயினர்.. சின்னவன் மட்டும் அண்ணா கை பிடித்து சம்மதம் சொல்லிவிட்டு


" அண்ணா நீ உண்மையிலேயே வித்யாசமான வீரன் பகத்சிங் தான் ணா.பொறுத்து போவதும் ஏற்றுக்கொள்வதும் வீரம்தான் ன்னு நிரூபிச்சுட்ட..."

சொல்லிவிட்டு அழுகையை மறைக்க உள்ளே சென்றான்..

வீடு அமைதியானது...


உள்ளே நுழைந்தார் அப்பா..

" என்ன எழவு வீடு மாதிரி இருக்கு... இன்னிக்கும் உன் மகன் பல்பு வாங்கிட்டானா ..?" கிண்டலோடு வண்டியை நிப்பாட்டினார்...

அம்மா, தம்பி, தங்கையிடம் " ஏதும் சொல்லாதீங்க " என கண் காட்டிவிட்டு , கடைசி முறையாக அப்பாவிடம் ஆசையாக திட்டு வாங்க தயாரானான் பகத்சிங்..



படம் : நன்றி கூகுள்

Monday, September 6, 2010

இழிவினால் முன்னேற்றம்....- சிறுகதை..




-----------------------------------











படம் : நன்றி கூகுள்

-----------------------------------



"இதப்பாரும்மா.. உனக்கு நல்ல முகவெட்டு.. சினிமா துறையில் நல்லதொரு எதிர்காலம் இருக்கு "

" வேண்டாம் சார். என் குடும்பத்துல பழக்கமில்ல.. விடமாட்டாங்க சார்.. தொந்தரவு பண்ணாதீங்க."

" ஏம்மா இது உன்னோட வாழ்க்கை.. நீ பிரபலமானதும் அவங்க ஏத்துக்குவாங்க.. அதுவரை நான் கவனிச்சுக்கிறேன் உன்னை.."

" யோசிக்கிறேன் சார். "

-----------------------------------------------------------------

2 வருடத்துக்கு பின்..



"இதப்பாரு இந்த படம் பயங்கர வெற்றின்னு ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள், இயக்குனர் உன்னை நெருங்குவாங்க.. என்கிட்ட கேட்காம கால்ஷீட் கொடுத்திடாதே.."

" சரிங்க.."

" உன்னை எந்த உசரத்தில் கொண்டு போய் சேர்க்கணும்னு எனக்கு தெரியும்.. என்கிட்ட மோதக்கூடிய பணமோ, பலமோ இண்டஸ்ட்ரில யாருக்கும்
கிடையாது .. தெரியுமுல்ல.. "

" ஆமாங்க.."


" ஆனா அதுக்கு நீ ஒண்ணு செய்யணும்...எனக்கு ----------------- இருக்கணும்.."

" அய்யோ , மன்னிச்சுடுங்க சார்.. நவீனும் நானும் உயிருக்குயிரா ......"


" சுத்த பையித்தியக்கார பொண்ணாயிருக்கியேம்மா.. அவன் ஹீரோ.. அவன் ஆயுசுக்கும் நடிச்சுட்டே இருப்பான்.. ஆனா இண்டஸ்ட்ரீல பெண்ணோட மதிப்பு அவ வயசுக்குத்தான்... அதான் சில பெரிய நடிகையெல்லம் இப்படி செட்டில் ஆயிடுறாங்க . கேள்விப்பட்டதில்லையா.? "

--------------------------------------------------------


5 வருடத்துக்கு பின்...

" ஹலோ..."

" ஏங்க நாந்தான்.. எப்ப நம்ம கல்யாணம்.?"


" நீயா.. இந்த நம்பர் புதுசா இருக்கே.. சரி ரொம்ப தொந்தரவு பண்ணாத.. நான் ஸ்விட்சர்லாந்து போய்ட்டு வர 3 மாதமாகும்..
ஏதாச்சும் சீரியல் ல அம்மா , அக்கா வேஷத்துக்கு முயற்சி பண்ணேன்... என்னை இனி அணுகாதே .. நான் ரொம்ப பிஸி.."

" என்னங்க இப்படி சொல்றீங்க.. உங்களை நம்பி எந்த படத்துக்கும் ஒத்துக்காம என் வாய்ப்புகளையெல்லாம் விட்டேனே.. நீங்க கல்யாணம் பண்ணிக்கிறேன்னு..."


" இத பாரு...இது சகஜம் இந்த இண்டஸ்ட்ரீ ல..பொலம்புரத விட்டுட்டு, பொழைக்கிற வழிய பாரு.."


" நான் சும்மா விடமாட்டேன் உங்களை.. எங்கிட்ட சாட்சி இருக்கு..."


" என்ன செய்யணுமோ செய்யும்மா.. வரட்டா.. உடம்பு பத்திரம்.."

---------------------------------------------------------------

" இன்ஸ்பெக்டர் சார் , அந்த நடிகை நம்மை ரொம்ப தொந்தரவு செய்றாப்ல..."

" சொல்லிட்டீங்கல்ல.. செஞ்சுருவோம்...நீங்க நல்லபடியா பேசுற மாதிரி அவள அந்த விடுதிக்கு மட்டும் வர சொல்லிடுங்க.."

---------------------------------------------------------------

" அட என்னம்மா இது.. கோழையாட்டம் தற்கொலை அது இதுன்னு..."

" மேனேஜர் சார்.. பார்த்தீங்கதானே?.. என்கூட 5 வருஷமா இருக்கீங்க.. நடந்ததெல்லாம் உங்களுக்கு தெரியும்தானே?."


" விடுங்கம்மா.. சில ஊடகம் இப்படித்தான் போடுவாங்க .. அதுக்கு சில காவலர்களும் ஆதரவு ..என்ன செய்ய,..பெண் னா விபச்சாரினு..நா கூசாம எழுதுவாங்க."

" எனக்கு உயிரோட இருக்க பிடிக்கல சார்.."

" அட என்னகங்கம்மா நீங்க.. உயிர விட்டா அவனுங்க சொன்னது நெசமாயிடும்.. காலையிலேயிருந்து எத்தனை அழைப்புகள் தெரியுமா.?"

" எதுக்கு சார்.. " பயத்தோடு...


" பல கட்சியில் உங்களை கூப்பிடுறாங்கம்மா.."

" நிஜமாவா.?"


" ஆமாம்மா.. அதிலும் ஆளுங்கட்சி பிரமுகர் நேரில் சந்திக்க ஆள் அனுப்புவதாய் சொல்லிருக்கார்...இனி கவலை பட ஓண்ணுமேயில்லை.."

" எனக்கென்ன அரசியல் தெரியும் சார்.."


" எல்லாம் கத்துக்குவீங்க.. இனி நீங்க அந்த தயாரிப்பாளரை ஒரு கை பார்க்கவாவது அரசியலில் சேர்ந்தே ஆகணும்மா.. "

" ஏன்
என்னை போய் கூப்பிடணும் சார்.. என்னை பற்றி இத்தனை மோசமா செய்திகள் வந்தும்.?"


" அதான் மா ரகசியம்.. இனி நீங்க இழக்க எதுவுமேயில்லை.. எதையும் தாங்கும் இதயம் உங்களைப்போன்றவர்களிடம் மட்டும்தான் இருக்கும்... விமர்சனம் என்ற சாக்கடையை அலட்சியம் செய்ய உங்களால் மட்டும் தான் முடியும்... "

" ஆமா சார்.. இகழ்ச்சியே எனக்கு இப்ப துணையா இருக்கு.. இனி என்னைப்பற்றி பேசினாலே அது விளம்பரமாயிடும் எனக்கு.... இனி என் வாழ்க்கையில் நான் செய்ய நினைத்தவற்றை துணிவா செய்யலாம்... "

" அம்மா , அப்ப மொதல்ல போன் போட்டு தகவல் சொல்லிடுறேன் கட்சிக்கு..."



" ஆமா சார். அப்படியே அந்த தயாரிப்பாளருக்கும் ஒரு நன்றி சொல்லிடுங்க...என் சார்பில்.."


Thursday, September 2, 2010

கிருஷ்ண ஜெயந்தி - சிறுகதை..



























" தோ பாரு காளி .. எல்லா பாத்திரத்தையும் அலம்பிட்டு தாழ்வாரத்தையும் கூட்டி பெருக்கி கழுவிடு."

" சரிம்மா.."

" ம்ம்மாஆஆஆ"


" யாரது.. கொழந்த சத்தம் கேட்டுது..?"


" ஆமாம்மா.. கொழந்த பாத்துக்குற ஆயவுக்கு சொரம்.. அதான்......" இழுத்தாள்..


" கொழந்த வெச்சுட்டு வேல எப்படி டீ செய்வ.?"

" அதெல்லாம் பயப்படாதம்மா .. பட்டு பட்டுன்னு செஞ்சுடுவேன்ல.."

" சரி கொழந்தய சத்தம் போடக்கூடாதுன்னு சொல்லு.. ஐயா தூங்குறாரு.."

---------------------------------------

" ம்மாஆஆஆ.."

" இருடா. ராசா.. வேல முடிச்சுட்டு பால் தாரேன்.."

" ம்ம்மாஆ..."


" இருன்னு சொன்னேன்ல..."


" ம்மாஆஆஆ.."

" சொன்னா கேக்க மாட்ட..அப்பன மாதிரியே வந்து வாச்சுருக்கு..."

" என்ன சத்தம் காளி..வேல பாக்க வந்தியா இல்ல புள்ளய சீராட்ட வந்தியா.. இன்னிக்கு கிருஷ்ண ஜெயந்தி .. தெரியுமுல்ல..ஐயாவோட வேல பாக்குறவுங்க குழந்தைகலாம் வருது.. பலகாரம் செய்யணும்.. இப்படி இருந்தா எப்படி..?"

" ஒரு நிமிசம் மா.. இத்தோ.." பால் கொடுத்துக்கொண்டிருந்தவள் சட்டென எழுந்தாள்..


" இந்தா இந்த பிஸ்கெட்ட கொடு கொழந்தைகு..."

" நன்றிம்மா.. "

" ஏய் ஏய் .. அங்க கவனி.. கொழந்தைய அதெல்லாம் தொடக்கூடதுன்னு சொல்லு.. பூஜை சாமான்..பகவானுக்கு "


" ஏண்டா இப்படி படுத்துற..?.. சும்மா இருக்க மாட்ட.?"
அம்மாவின் முக கோபத்தை பார்த்ததுமே வீரிட்டு அழுதது குழந்தை..

" ஏய் நல்ல நாள் அதுவுமா ஏன் இப்படி அழுகை சத்தம் ...மொதல்ல எங்கேயாவது போய் விட்டுட்டு வந்து வேலைய செய்யு.."

" இல்லம்மா.. அதுக்கு மருந்து வெச்சிருக்கேன்.. அத கொடுத்தா தூங்கிரும்.."


" என்ன --------- .. செய்து தொல.."



-----------------------------------

" வாங்க வாங்க .. ஏன் இத்தனை நேரம்?.. விருந்தினர் வரதுக்குள்ள வரவேண்டாமா ..?
எல்லாம் தயார்.. நம்ம குட்டி கிருஷ்ணரோட பாதம் தான் படணும் .."

" மருத்துவமனைக்கு போய்ட்டு வரோம் அத்தை.."


" என்னாச்சு ?." ஆவலோடு..

" நிப்பாட்டி வெச்சிருந்த பைக் ல ஏறி விழுந்துட்டான் மா."

" அச்சச்சோ.. "


" நல்லா அடி காலுல.. கட்டு போட்டுட்டு வந்தோம்.. "


" அடப்பாவமே..
"

"இப்ப
குழந்தை கால் தடத்துக்கு என்ன பண்ணுவது.மா.?"


" ஆதான் யோசிக்கிறேன்.. இரு காளி பின்கட்டுல இருக்காளா னு பாக்குறேன்."


" ஏய் காளி.. உன் மகன் எங்கே.. ?"

" இங்கதான இருந்தான்.. நடக்க ஆரம்பிச்சதிலேயிருந்து ஒரு எடத்துல நின்னாதானே." எல்லோரும் தேடினார்கள்..

" தொர .. தொர .." காளி சத்தமாய் அழைத்தாள்..

சத்தம் கேட்டு சாத்தியிருந்த பூஜையறையை திறந்துகொண்டு வெளியே சிரித்துக்கொண்டே வந்தான் குழந்தை..

காளியை திட்டுவதற்காக வாயெடுத்தவர், வாயடைத்து நின்றார் ,

வழியெங்கிலும் மாவு கொட்டி பின்கட்டு வரை குழந்தையின் கால்தடம்....கண்டு..


-------------------------
படம் : நன்றி கூகுள்..

Wednesday, September 1, 2010

எல்லை எதுவரை?.- சிறுகதை..

































Pictures : Thanks to Google..Images

" இன்னிக்கு வரட்டும் இருக்கு.. என்னதான் நெனச்சுட்டிருக்கார் மனசுல.?.."

" ஆரம்பிச்சுட்டியா மா.. விட்டுத்தள்ளுமா.. ஆம்புள அப்படித்தான்.. நாம தான் அட்ஜீஸ் பண்ணிட்டு போவோணும்.."

" உனக்கு தெரியாது செல்லம்மா.. உங்கள மாதிரி பெண்கள் இப்படி இளக்காரம் கொடுத்து கொடுத்தே திமிர் ஏறிப்போச்சு.."

" அதுங்காட்டி சொல்லல கண்ணு.. பொண்ணு குழந்த பெத்து வெச்சிருக்கியே..."

" பொண்ணு பெத்தா அடங்கி போகணுமா?.. பார்ட்டி அது இதுன்னு குடிச்சுட்டு வர அப்பாக்கு எங்க போச்சு பொறுப்பு.?"

" சரி சத்தம் போடாத பாப்பா முழிச்சுக்கும்.. " னு வேலையை செய்ய சென்றாள் செல்லம்மா..

--------------------------------------------------------------------------------------

" ஹேய் என்னாதிது ..?. பெட்டியை அடுக்கிட்டு இருக்க?.. "

"...."


" கேக்குறேன்ல.."

" புரியலையா ?.. நான் போறேன்.."

" எங்க உங்க அண்ணன் வீட்டுக்கா.?" அவரே கஷ்டப்பட்டுட்டிருக்கார்.. இல்ல அம்மா வீட்டுக்கா.?"

" நான் ஏன் அங்க போணும்.. எங்கே போறேன்னு போனப்புரம் தெரிஞ்சுக்கோ."

" என்ன மரியாதை குறையுது.?"

" அதுக்கேற்ற மாதிரி நீ நடந்துக்கல..சரி உன்கிட்ட பேசுவது வேஸ்ட்.. " என குழந்தையின் பெட்டியை அடுக்க ஆரம்பித்தாள்..

-----------------------------------------

" செல்லம்மா , இந்தா இந்த மாச சம்பளம்.. செடிக்கு முடிஞ்சா தண்ணி ஊத்து.. பணம் வந்து தருவேன்.."

" ஏம்மா நெசமாத்தான் சொல்லுதியா.?.. ராத்திரி சமாதானம் ஆயிருப்பன்னு நெனச்சேன்.." வருந்தினாள்..

" ,.. விடு செல்லம்மா. எங்க போயிருவா?.. அங்க சுத்தி இங்க சுத்தி திரும்ப இங்கதான வரணும்.?."பேப்பர் எடுத்துக்கொண்டு நிதானமாக உட்கார்ந்தான்..

" ...."

" குட்டிம்மா , இந்த உடுப்ப போட்டுக்க .. நாம ஊருக்கு போறோம்.."

" எங்கம்மா.?.. எனக்கு ஸ்கூல் இருக்கே.."

" அதெல்லாம் அப்புரம் பார்த்துக்கலாம்.. "

" அப்பா வரலியா மா.?"

" இல்ல.. நாம மட்டும்தான் இனி..."

" எனக்கு அப்பா வேணும் .மா..."

" சொன்னா கேட்கமாட்டியா.? "

" அவளை ஏண்டி அதட்டுற ?.. என்மேலுள்ள கோபத்துல... நீ இங்க வாடா செல்லம்.."

" ஒஹ்.. அப்ப சரி.. நீயும் இங்கேயே இரு.. ஆமா , நான் ஏன் ஒவ்வோரு வாட்டியும் உன்னையும் இழுத்துகிட்டு போகணும்..

சரிதான்.. உன் அப்பாவே உன்னை கவனிச்சாத்தான் பொறுப்பு வரும்.." னு சொல்லிட்டு பெட்டியை எடுத்துகிட்டு கிளம்பினாள்..

" ஹேய்.. நில்லு.. என்ன பையித்தியமா.. ?.போறதானா , குழந்தையையும் கூட்டிட்டு போ.. ..என்னால லீவு போட முடியாது.."

" ஒஹ்ஹொ.. அப்ப ரொம்ப வசதியா போச்சு.. அலுவலுக்கு கூட்டிட்டு போய்ட்டு அப்படியே பார்ட்டிக்கும் கூட்டிட்டு போய் பழக்கிடுங்க..குடிக்க .."

"........" உறைத்தது அவனுக்கு, ...

" சொல்லி சொல்லி திருத்தலாம்னு பொறுத்து பொறுத்து பார்த்தால் ஒண்ணும் வேலைக்காவாது..இனி பிள்ளையை சீராட்டி எழுப்புவதிலிருந்து

ஒவ்வோரு உணவா மாற்றி மாற்றி செய்து கொடுத்து , பாடம் எழுத வெச்சு , கத சொல்லி தூங்க வெச்சா , பொறுப்பு கூடுமோ என்னமோ.?.. நான் வரேன்.."

நிதானமாய் எழுந்து வாசல் வரை சென்றவளை ஓடி வந்து கரம் பிடித்து நிப்பாட்டினான்...

" சரி உள்ள வா .. பேசலாம்.."

கையை உதறினாள்...

"எல்லாத்துக்கும் எல்லையுண்டு .. இப்ப எல்லையை தாண்டியாச்சு .. கொஞ்சம்..., அட்லீஸ்ட் ஒரு வாரம் குழந்தையோடு லீவு போட்டு இருந்தால் மட்டுமே திருந்தலாம்...

பேச்சு வார்த்தை பயனளிக்கும்னு தோணலை..ஒரு வாரம் கழித்து வருகிறேன் " என சொல்லிவிட்டு தாண்டி சென்ற ஆட்டோவை கை தட்டி அழைத்தாள்..


குழந்தையை பிரிந்த வலி மனதிலிருந்தாலும், இதைவிட வேறு வழியின்றி மனசை கல்லாக்கிக்கொண்டு ஆட்டோவில் புறப்பட்டாள்...

அவன் குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாய் வாசல் வருமுன்...

Monday, August 30, 2010

இன்னா செய்தாரை - குட்டிக்கதை..
































" டேய் , எப்படியாவது போட்டுத்தள்ளணும்டா." .. ரிச்சி


" ஆமாண்டா. சாதாரண வக்கீல் பொட்டச்சிக்கு என்ன இம்புட்டு திமிரு.?" பீட்டர்

" நாம யாருன்னு காட்டணும்டா.." சாம்..

" பெரிய நீதிபதின்னு இவளுக்கு நெனப்பு.. ஒழுங்க புள்ள குட்டிய பார்த்துட்டு இருக்க முடியாதோ?..
எல்லார் தப்பையும் தட்டி கேட்பாளாம்.. தட்டி வெச்சா அடங்குவா.."

" இப்படி நம்மள ஒட்டு மொத்தமா நஷ்ட ஈடு வழங்க வெச்சுட்டாளே டா.."


" அவளுகளுக்கு ஆதரவு கொடுக்கிறானுங்க பாரு ************** அவனுங்கள சொல்லணும்.."

" என்ன புரளி சொன்னாலும் அசர மாட்டேங்காளடா.. "

" கெழவி டா.. அவள போய்.. சீ தூ... "
கேவலமாய் பேசி தங்களுக்குள்ளே சிரித்து ஆற்றாமையை தீர்த்துக்கொண்டனர்..

--------------------------------------------------------------


" டேய் தெரியுமா சேதி.. இன்னிக்கு நாம படிச்ச பள்ளிக்கு வராளாம்.. என்னமோ விருதெல்லாம் கொடுக்க போறாளாம்... "

" நம்ம பள்ளி யில் இவளுக்கென்ன வேலை..? .. படுபாவி.. சும்மா விடக்கூடாது டா.. பிளான் சொல்லு.."

" கெளம்புடா நாமளும் போவோம்.. போகும்போது சொல்றேன் என் பிளானை.."


------------------------------------------------------------

பல்வேறு
சிறப்பு நிகழ்ச்சிகள் , விளையாட்டுக்கு பின் பரிசளிப்பும் விருதும் ..

" நல்லொழுக்க விருது " ரிச்சி " என்ற முன்னாள் மாணவர் பெயரால் வழங்கப்படுகிறது.. "

கைதட்டல்.


சிறந்த சமூக சேவை விருது " பீட்டர் " என்ற முன்னாள் மாணவர் பெயரால் வழங்கப்படுகிறது..
"

கைதட்டல்.


சிறந்த
மாணவன் விருது " சாம்" என்ற முன்னாள் மாணவர் பெயரால் வழங்கப்படுகிறது..



பலத்த கைதட்டல்.



பின்
அந்த பெண் வக்கீல் பேசுகையில் ,

அந்த 3 மாணவரையும் வாழ்நாள் முழுதும் எல்லோரும் நினைவு கூறும் வகையில் தான்
இவ்விருதுகளை அறிவித்ததாக சொன்னார்..

கையிலுள்ள கத்திகளை அங்கேயே போட்டுவிட்டு வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்க கூட தகுதியின்றி வெளியேறினார்கள் , ரிச்சி, பீட்டர் , மற்றும் சாம்...

ஆனால் அடுத்த விருதுக்கு தம்மால் இயன்ற உதவியை செய்யணும் என்ற தீர்மானத்தோடு...

-------------------------------------------------------------------------------
நன்றி படம்: கூகுள்



( சமீபத்திய பிரச்னையில் பின்னூட்டம் இட்டவர்களும், தனிமடல் அனுப்பியவர்களுக்கும் நன்றி சொல்ல மறந்திருந்தால் என் மன்னிப்புகள்..

அறிமுகமில்லாத நட்புகளின் ஆறுதல் அளவிடமுடியாதது.. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி
..)