Wednesday, October 31, 2007





மீண்டும் மீண்டும்!!!

=================


தென்றலாய் நுழைந்து ,

மண்வாசனை முகர்ந்து ,

குயில்களின் ஓசை பிடித்து ,

மர இலைகள் சலசலத்து,

தூரலில் ஆரம்பித்து,

வேகமெடுத்து புயலாய் மாறி,

சுனாமியாய் அனைத்தையும் எடுத்துச்சென்றாய் ,

படிப்பினை விட்டுச்சென்றாய்!!.


எல்லாம் முடிந்தது என்றிருந்த வேளையில்,

மீண்டும் தென்றலா????????
இது வரமா ? சாபமா?.

கெடுப்பினையா? கொடுப்பினையா?


இல்லையில்லை இதுதான் வாழ்க்கை!......

Friday, October 12, 2007





கல்லைக் கண்டா....................!!!!


காதலித்தபோது வேலையைக் காணோம்.

வேலைகிடைத்தபோது காதலியைக் காணோம்.!


குழந்தை கொஞ்ச நேரம் காணோம்.

வளர்ந்தான் அவனும் நேசம் காணோம்!


உறவினர் மகிழ செல்வம் காணோம்

செல்வம் வந்ததும் உறவுகள் காணோம்!


இளமையில் விவேகம் பொறுமை காணோம்

முதுமையில் வேகம் உடல்நலம் காணோம்!


வாழ்க்கையில் எப்போதும் ஏதாவது காணோம்

இழந்ததை நினைத்தால் இன்பத்தை காணோம்!

Tuesday, October 2, 2007






ஒரு வாழ்க்கை!

=============
ஒரு பாடல் மனதை ஆறுதல்படுத்தும்!.

ஒரு நட்ஷத்திரம் கப்பலை வழிநடத்தும்!

ஒரு மரம் தான் தோப்புக்கு வழிவகுக்கும்!.


ஒரு புன்னகை நட்பை ஆரம்பிக்கும்!.

ஒரு வார்த்தை அதை ஆழ்ப்படுத்தும்!.

ஒரு ஓட்டு நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும்!.


ஒரு சூரியக்கதிர், உலகையே வெளிச்சமாக்கும்!

ஒரு மெழுகுவத்தி வீட்டின் இருளை நீக்கும்!.

ஒரு எட்டு தான் பயணத்தை தொடங்கும்!.


ஒரு சிரிப்பு சோகத்தையே கலைக்கும்!

ஒரு நம்பிக்கை வாழ்வையே வழிநடத்தும்!.


ஆகையால்,

உனக்கு ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கு,

அதனை நன்றாக அமைக்க ஒரு மனதுமிருக்கு!.

பிரச்சனை, கவலையை ஓரமாக ஒதுக்கிவிடு!

ஒரு நிமிடம், ஒரு நொடி என் வாழ்ந்துவிடு!