Wednesday, August 11, 2010

பொண்ணுகளே இப்படித்தான் - குட்டிக்கதை





















"ரகு , என்னோட நண்பர் நவீன் சென்னைல இருக்கார். கூட படித்தவர் சொல்லிருக்கேனே.
அவர் நிச்சயமா உனக்கு ஒரு வேலை வாங்கி தரமுடியும்.."

" கூடப்படிச்சவங்கெல்லாம் இன்னுமா நியாபகம் வெச்சிருப்பாங்களா சுசி.?"

" எல்லாரும் போல அல்ல இவர். ரொம்ப உதவும் மனப்பான்மை அதிகம்.."

-----------------------------------------------------

" சார் கவலைய விடுங்க.. ஒரு வேலை வாங்கி தர முடிஞ்ச எனக்கு உங்க இருவரின் கல்யாணத்த நடத்த முடியாதா?."

" அப்படி இல்ல ரொம்ப தொந்தரவு செய்றேனோ னு.."

" சுசிக்காக என்ன வேணா செய்யலாம் சார்.. கடைசி வருஷம் புராஜக்ட் நேரம் என் அப்பாக்கு முடியாம போச்சு..
அப்ப சுசிதான் இழுத்து போட்டு என் புராஜக்டையும் முடிச்சு தந்தா. ரொம்ப குடுத்து வெச்சவங்க சார் நீங்க."

" ம். புரியுது.. ஆனா வீடு பாக்கணும் , அது இதுன்னு பெரிய வேலைகள் இருக்கே.. இரண்டு வீடுகளும் பகை எங்க காதலுக்கு ."

" கவலைய என்கிட்ட விடுங்க சார். நம்ம பசங்க இருக்காங்க.. எள்ளுன்னா எண்ணெயா நிப்பாங்க.. நீங்க சுசிய வர சொல்லுங்க,."

-------------------------------------------------

" சுசி நீ இப்போதைக்கு என் அக்கா வீட்டில் இரு.. எல்லாம் சரியானதும் நானும் சாரும் வந்து அழைத்து செல்கிறோம்."

" கஷ்டமா இருக்கு நவீன். எங்களால உனக்கு அதிக சிரமம்.. "

" ஏன் இப்படி தனித்து பேசுற சுசி.? . நீ என்னோட பெஸ்ட் பிரண்ட்.. உனக்கு செய்யாம யாருக்கு செய்ய.?"


" சார் , இந்தாங்க 20,000 ரூபாய் .. சம்பளம் வரும் வரை சமாளிங்க..மேற்கொண்டு ஏதும் வேணுமுன்னா தயங்காதீங்க.."

சுசிக்கு
கண்ணீர் வந்தது..ரகுவோ பிரமித்து போய் நின்றான்.

----------------------------------------------

" அழகான வீடு.. நவீன் நல்ல வீடா செலக்ட் செய்திருக்கான்... பாருங்க எனக்கு செடிகள் பிடிக்கும் னு எத்தனை செடி வாங்கி வெச்சிருக்கான்.?"


" இங்க பாரு .. சமையல் அறையில் பாத்திரங்கள் கூட..."


"ஆமா சுசி . கட்டில் மெத்தை , மேசை , நாற்காலி கூட அவனே வாங்கிட்டான் , நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல.."

" என்ன தங்கமான மனசு பாருங்க.. ஒரு கல்லூரி தோழிக்காக இத்தனை மெனக்கெட முடியுமா யாராச்சும்..? ரியலி ஐயம் ப்ரவுட் ஆஃப் ஹிம்.."

" ம்... சுசி அப்புரம் ஒரு முக்கியமான விஷயம்.."

" சொல்லு ரகு."


" ம். சொல்றேன்னு தப்பா நினைக்காதே.. இனி நவீன் கூட பேசுவதை குறைச்சுக்கோ.."

" என்ன சொல்ற ரகு.? "

" ஆமா.. இதுநாள் வரை நீ பழகியது வேற . இனி நீ என்னோட மனைவி .."

" சோ . வாட்.. என்ன பேசுற ரகு.. இவ்வளவு செஞ்சவனுக்கு நான் நன்றியோட இருக்க கூடாதா?"

" நன்றியோட இருக்க , நான் இருக்கேன்.. ஆயுசுக்கும் நண்பனா. ஆனா நீ மட்டும் குறைச்சுக்கோ னு சொல்றேன்."

" புரியல ரகு.. "


" நீயும் நவீனும் நட்பா இருப்பது எனக்கு பிடிக்கல னு புரிஞ்சுக்கோயேன்.. விளக்க முடியாது " சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

----------------------------------------------------------------------------------

" சார் எப்படி இருக்கீங்க.. வீடுல்லாம் புடிச்சிருக்கா.?..
"

"ம். ரொம்ப நன்றி நவீன். நீங்க இல்லாட்டி எங்களால ஒண்ணுமே செய்திருக்க முடியாது.. வாழ்நாள் பூரா மறக்க மாட்டேன் இந்த உதவியை.."


" என்ன சார் பெரிய வார்த்தைல்லாம் சொல்லிட்டு... ஆமா சுசி எங்க.? . நல்லா ஒரு வெட்டு வெட்டலாம்னு வந்தேன்.."

" ஓஹ் . அதுவா.. உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும் நவீன்.. "

" சொல்லுங்க சார்.."

" அது வந்து.. வந்து.. இப்ப கல்யாணம் ஆனதும் சுசி கொஞ்சம் தனிமையை விரும்புறார்போல தெரியுது..ஒருவேளை அவ பெற்றோரை பிரிந்ததால் இருக்கும்.."


" இருக்கும் இருக்கும் சார்..நல்லா பாத்துக்கோங்க அவளை .. நான் வரேன் சார்.."

" இருங்க நவீன் .. நீங்க எனக்கு பெஸ்ட் பிரண்ட் தான் இனி.. நாம சந்திப்போமே அலுவலகத்தில்;."


"பரவால்ல சார்.. ஏதாச்சும் உதவின்னா கூப்பிடுங்க "

----------------------------------------------------------

கனத்த
மனதோடு " இந்த பொண்ணுங்களே இப்படித்தான் " னு மனதுள் சொல்லிக்கொண்டே வெறுப்பாய் சென்றான்..


உதிர்ந்த
ஒரு துளி கண்ணீரை துடைத்தவளாய் நவீன் செல்வதை மாடியிலிருந்து பார்த்தாள் சுசி..

Friday, August 6, 2010

3d செய்தித்தாள் பாங்காக்கில்.. முதல்முறையாக



http://bangkokpost.newspaperdirect.com/epaper/viewer.aspx


செய்தித்துறையில், 64 வருடம் நிறைவடைவதை கொண்டாடும் பொருட்டு பாங்காக் போஸ்ட்

இன்று 3டி யில் படங்களை வெளியிட்டுள்ளது.


அதற்கான சிறப்பு கண்ணாடியையும் இலவசமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



40 பக்கம் கொண்ட செய்தித்தாளில் எழுத்துகள் அதே வடிவம் கொண்டிருந்தாலும் படங்களும் விளம்பரங்களும்

3டி யில் அமைந்திருப்பது மிக சிறப்பு..

இதற்கான சிறப்பு விலை ஏற்றம் ஏதுமில்லை..

நாட்டிலேயே முதல்முறையாக இப்படி 3டி படங்கள் அளித்து வாசகர்களோடு தான் சமீபத்தில் பெற்ற விருதினை கொண்டாடி மகிழ்கிறது.


படங்கள் பார்க்க : http://bangkokpost.newspaperdirect.com/epaper/viewer.aspx

Tuesday, August 3, 2010

நிஜமா நிழலா - சின்ன தொடர்..







பெண் பார்க்க செல்லும்போதே ஏகப்பட்ட கேள்விகள் ரகு மனதில்..

" அக்கா , பொண்ணு நேரில் பார்க்க அழகா இருப்பாளா.?"

" படிச்சதெல்லாம் கான்வெண்டில் தானே?.."

" ஆங்கிலம் சரளமா பேசுவாளா.?"


" மாடர்ன் உடை உடுத்துவாளா.?."


எல்லாவற்றையும்
பொறுமையா கேட்ட அவன் அக்கா,


" அதான் புகைப்படம் அனுப்பினேனே.. அதில் உன் கேள்விக்கான விடையும் இருக்கு..
கான்வெண்டில் படிச்சவ தான் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுபவள்தான்."

மனதுக்குள்
ஒரு வித கலக்கத்துடனே நகரத்திலுள்ள அந்த பெரிய உணவு விடுதிக்கு சென்றார்கள்...


கல
கல சிரிப்புடனே எல்லோரிடையேயும் பேசி சிரித்துக்கொண்டிருக்காளே அவளா பெண்?..


நடிகை
மீனா சாயலில் , கொஞ்சம் தெத்துப்பல்லோடு...பிங்க் நிற சேலையில்.. ஒடிசலாக..


கூட
ஜீன்ஸ் போட்டுக்கொண்டு மற்ற பெண்ணொருத்தி, அது அவள் தங்கையாக இருக்கணும்..


இன்னும்
கொஞ்சம் பருமனா ஆனா அழகா தோழி போல ஒரு பெண்.. அவள் அண்ணியாக இருக்கணும்..


அடுத்து
வயதான அம்மா. வேஷ்டி கட்டிய அப்பா, மரியாதை கலந்த பயத்தோடு தம்பியும் அண்ணனும்..
இவர்கள் வந்ததை பார்த்ததும் ஒரு வணக்கம் சொல்லிவிட்டு மிக சகஜமாக இருந்தாள்..

ரகுவுக்கு
இருந்த அளவு ஆர்வமேதுமில்லை...அவளிடம்...
அக்காவிடம் கண் ஜாடையிலேயே கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டான் அவள்தான் பெண் என்று.. பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துவிட்டது..

ஆனால்
அவளோ தன் அக்காவிடமும் அக்கா குழந்தை சுமி கிட்டயும் பேசுவதில்தான் ஆர்வம் காட்டினாள்.
எல்லோரும் அறிமுகப்படுத்திக்கொண்டு எதிரெதிர் அமர்ந்தார்கள்.. உணவு ஏதும் சுவையாக இல்லை ரகுவுக்கு..

ஆனால்
அவளோ ஒவ்வொன்றையும் ரசித்து விமர்சித்து அதை பற்றி தன் அண்ணியிடம்
கேட்டும் தெரிந்துகொண்டாள்.. தனியாக பேச அனுமதிக்கமாட்டார்களா என ஏங்கியவனை புரிந்தார்போல் , பெண்ணின் தகப்பனார் , அத்தானிடம் ,

" வேணும்னா தனியா பேசட்டுமே " என சொல்லிவிட்டு மற்றவர்களை அழைத்து சென்றார்.

எந்த
வித வெட்கமும் படாமல் , மிக சகஜமாக இருந்தவளிடம் , திக்கி திணறி ,


" உங்க ஹாபீஸ் என்ன.?"


அடுக்க
ஆரம்பித்தாள்... தோட்டக்கலையிலிருந்து , மிருகங்கள் , சேவை , அது இது என..


சப்பென்று
ஆனது..


பிரபல
ஆங்கில நாவல்களின் பெயரை, கவிஞர்களை பற்றி கேட்டான்..
ம்ஹூம்..

அதில்
ஆரவமில்லை என சொன்னாள் நேரடியாக..


அவள்
செல்லும் , செய்யும் ஷாப்பிங் பற்றி கேட்டதற்கும் ,


" எல்லாம் அம்மா அண்ணியே வாங்கி தருவார்கள் " என்றாள்.


" அப்ப மாப்பிள்ளையும் அப்படித்தானா?."

" ஆமாம்.."
நேரடி பதில் அதிர்ச்சியாய் இருந்தது அவனுக்கு..

" அப்ப அவங்களுக்கு பிடிச்சிருந்தா போதுமா?.. உனக்குன்னு ஏதும் ஆசைகள் எண்ணங்கள் இல்லையா.?"


" ம்................................. இல்லை.." னு யோசித்து சொன்னாள்..

" என்னைவிட அவங்க நல்லா பார்ப்பாங்க " னும் சொல்லி வைத்தாள் வெகுளியாக.

தான்
எதிர்பார்த்த மாடர்ன் பெண் அல்ல இவள் என புரிந்துகொண்டான்..
இவளை எப்படி அமெரிக்கா கூட்டி செல்வது..

" உனக்கு அமெரிக்கா வர விருப்பம்தானே?."


" ம்.. இல்ல.. ஆனா அப்பாக்கு சரின்னா எனக்கு ஒக்கே.."


அதிர்ந்தான்
..


" கட்டாயப்படுத்தினார்களா..?"

" நோ , நோ.... கல்யாணம் கட்டினா மாப்பிள்ளை கூட போகணும்தானே.. அது அயனாவரம்னா என்ன , அமெரிக்கா னா என்ன.?"

எவ்வளவு எளிதா எடுத்துக்குறா?..

தான்
எதிர்பார்த்தவை இல்லையென்றாலும், ஏனோ அவளின் வெகுளித்தனமான வெளிப்படையான பதில்கள், சிரிப்பு , அழகு பிடிச்சிருந்தது..


" உனக்கு ஏதாவது கேள்வி இருக்கா என்னிடம்?"


"ம்..ம்.. " யோசித்தாள்...
பின்பு கடக் என சிரித்தாள்...

" என்ன " னு கேட்டான்.

" ம்.. ஹஹ,.. இல்ல..நீங்க புகை பிடிப்பீங்களா.?."


சட்டென்று
என்ன சொல்ல னு தெரில அவனுக்கு.. ரெகுலரா பிடிக்காட்டியும் அவ்வப்போது குடித்ததுண்டு.. மதுவும் கூட.
ஒருவேளை உண்மையை சொல்லி அவளுக்கு பிடிக்காமல் போய்விட்டால்?.

" இல்ல எனக்கு அந்த பழக்கமில்ல "
அவள் அந்த பதிலை ஏற்றாளா னு ஒரே குழப்பமாய் இருந்தது அவள் பார்வை.

பேசி
முடிந்ததும் , அக்கா வந்து கல்யாணத்துக்கு நாள் குறித்துள்ளதாகவும் , அதில் ஒன்றை தேர்வு செய்யும்படியும் சொன்னார்.


அப்பவே
அவளை கூட அழைத்துக்கொண்டு சென்றுவிடலாமா என தோணியது ரகுவுக்கு...


--------------தொடரும்...

த்ரில்லர் பயணம் - தொடர்ச்சி






\






காய்ச்சலோடு ஊசி போட்டபின் ரூம் காலி செய்துவிட்டு பயணம் தொடர்ந்தோம்..

தாய்லாந்தில் பார்க்க வேண்டிய இடங்களை நீல பலகையில் ஆங்காங்கே எழுதி வைத்திருப்பார்கள்..

அதனால் பெரிய பிளான் ஏதும் தேவையில்லை..


மேலும் அருகிலுள்ள கடையில் , அங்குள்ள சுற்றுலா இடம் பற்றி கேட்டால் அழகாக சொல்லுவார்கள் . ஆனால் தாய் பேச தெரிந்திருக்கணும்.. அவ்வ்வ்

கிள்ம்பும்போதே விடுதியிலுள்ள பெண்ணிடம் கேட்டபோது மிக அருகிலேயே ஒரு நீரூற்று இருப்பதாக சொன்னார்..

சுமார் 10 கிமீ தொலைவுதான்...ஆறு போல் ஓடி வருகுது நீர்.. அதன் மூலத்தை பார்க்க சென்றால் , ஒரு நீர்த்தொட்டி போன்ற இடத்தில் மிக அழகான ஊற்று நீல கலரில்..
குழந்தைகள் பலர் விளையாடிக்கொண்டிருந்தனர்..

அப்படியே அள்ளி பருகலாம் போன்றதோர் தெளிவான கண்ணாடி போன்ற நீர்..அப்பழுக்கின்றி..


இதற்கு முன் வேறு மலைப்பயணங்களில் பார்த்துள்ள ஊற்றுகள் சுடு தண்ணீர் .. அதில் நேரடியாக குளிக்க முடியாது.. கொதிக்கும் சூடு.. ஆனால் அதில் கால் வைத்து அமர்ந்திருப்பார்கள்..


பின்பு சிறிது தூரத்தில் அறைகள் கட்டிவிட்டு குளிர்ந்த நீரையும் கலந்துகொண்டு குளித்திட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
சின்னவர் மட்டும் குளிக்க இறங்கினார்.. ஆனால் நாங்களெல்லோரும் இறங்காததால் , அவருக்கும் மூடு இல்லை..

அதை முடித்துவிட்டு , நேராக இப்போது அம்யூஸ்மெண்ட் பூங்கா செல்ல பயணித்தோம்.. சுமார் 60 கிமீ தொலைவுதான்..


அதை தேடிக்கொண்டே போன போது அந்த பாதையை தவற விட்டு வேறொரு மலையில் ஏறிவிட்டோம்..
எனக்கோ எதுவுமே சேலஞ்ச் தான்..

நாங்கள் ஏறிய மலையில் ஏரி ஒன்று இருந்தது.. அதனை சுற்றுலா தளமாக ஆக்கி பூங்கா , அதனை சுற்றி உணவகம் என மக்கள்
கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்..

அங்கு நேரம் செலவழிக்க விரும்பாமல் திருப்பிக்கொண்டு , வரும் வழியில் கால்பந்து போல ஒரு சோபா (சிறுவர் அமருவது ) கடையில் இருந்தது. (நீண்ட நாள் தேடியது )

அந்தக்கடைக்கு சென்று அதை வாங்கிவிட்டு தெளிவாக வழி கேட்டு பின் ஒருவழியாய் தொங்-சொம்பூன் அம்யூஸ்மெண்ட் பார்க் வந்தடைந்தோம்..

அதுவரை காய்ச்சலில் இருந்த பெரிய மகன் சுறுசுறுப்போடு எழுந்துவிட்டார்..தாம் என்னவெல்லாம் விளையாடணும் என ஆர்வத்தோடு சொல்லவும் , நான் முறைக்கவும், அவர் வழியவும்,

சரி பொழச்சு போ னு டிக்கெட் எடுத்துவிட்டு , மலைக்கு அழைத்து செல்லும் ரயிலில் உட்கார்ந்தோம்.
குழந்தைகளுக்கான ஒரு சிறந்த இடம் ..

குதிரையேற்ற பயிற்சி, கவ் பாய் வாழ்க்கை , ஃபார்ம் விலங்கு வளர்ப்பு என இயற்கையோடு ஒன்றிய இடம்..மலையடிச்சாரல் , புல், புதர்கள், குளுமை

என.
அங்கு தங்கிட கவ் பாய் வண்டிகளையே ரிசார்ட் ஹோம் மாதிரி செய்து வைத்துள்ளார்கள்.. புதியதொரு அனுபவம் கிடைக்கும்.. இதில் ஹனி மூன் தம்பதியருக்கென்று சிறப்பான இடமும்..

ரயில் சுமார் 7-10 கிமீ பயணம் செய்து மலை உச்சியை அடைந்தது..


கோ கார்ட், மாதிரி ஏகப்பட்ட கார் ரேஸ்கள் விதவிதமாய்.. மலையிலிருந்து சரிந்து கீழே செல்லும்,.. பின் அங்கிருந்து கேபிள் கார் மூலம் மேலே ஏறி வரணும்.


அடுத்து மிகப்பெரிய பிளாஸ்டிக் பந்து அதனுள் நாம் நுழைய, மலையிலிருந்து ஒரு பாதையில் உருட்டி விடுவார்கள்..
ஒரு நீண்ட பிளாஸ்டிக் சீட்டில் வட்டப்படகு போன்ற மிதவை ஒன்றை நாம் அமர்ந்துகொள்ள அதை தள்ளிவிடுவார்கள்.. அது சுற்றிக்கொண்டே மிக வேகமாய் கீழிறங்கும்..

அப்புரம் மலைப்பகுதியில் ATV ஓட்டுவது..


சின்னவருக்கு Go Kart போக ஆசை. வயது 5 என்றாலும் 10 வயது மதிக்கலாம் , தாய் குழந்தையை ஒப்பிடும்போது..
அதனால் டிக்கெட் வாங்கிக்கொண்டு தயாரானார்.

எங்களுக்கு தான் உள்ளூர பயம்..
அவனுடைய கனவே தான் ஒரு மிகப்பெரிய பைக் ரேசரா வரணும் என்பதுதான்.. அதைபற்றியே தான் நாள் முழுக்க பேசிக்கொண்டிருப்பான்..

பசங்க இருவருக்குமே எப்படா 18 வயதாகும் னு இதுக்காகவே அவசரப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்..


தலையில் ஹெல்மெட் மாட்டும்போதும் , " பயமா இல்லையா, நீ ஓட்டிருவியா?. " என கேட்டோம்.


ஜம்முன்னு போய் உட்கார்ந்தால் கால் எட்டவில்லை.. பின்னால் 2 தலையணை வைத்து சரி செய்தார்கள்..
ஆக்சிலேட்டர், பிரேக் சொல்லி தந்தார்கள்... கிளம்பிட்டார்..

வளைவுகளில் திருப்ப முதலில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும், பின் வேகத்தை கூட்டி குறைத்து சாகசம் செய்தார்.
பின்னால் வந்த பெரிய பையனை முந்துவதே குறிக்கோளாய் இருந்தார்..

வேண்டாம்னு சொன்னா கேட்டாதானே?..
வேகத்தில் போய் அடுக்கி வைத்திருந்த டயர்களில் மோதினார்.. முகத்தில் பீதியில் அழுகை வரும்போல இருந்தது.. ஆனாலும் அசடு வழிய , திருப்பிக்கொண்டு மும்முரமாக மீண்டும் ஓட்டினார்..

ரேஸிங்கில் முதல் படி ஏறிவிட்ட பெருமையோடு விண்வெளி வீரர் போல இறங்கினார்..
அண்ணா, அப்பா , எல்லாரும் தூக்கி வைத்து கொஞ்ச வெட்கம் வந்துவிட்டது..:)

அடுத்து Free fall னு நம்மை கொக்கியில் மாட்டி கேபிளில் தொங்க விடுவார்கள்.. மேலேஉள்ள கம்பியை பிடித்தோ பிடிக்காமலோ , கையை வீசிக்கொண்டே மலையிலிருந்து கீழே பறக்கலாம்.
இதை ஏற்கனவே பலமுறை பத்தாயா என்ற கடற்கறை சாகசங்களில் செய்துள்ளதால் செய்யவில்லை..

ATV மட்டும் அண்ணனும் தம்பியும் மீண்டும் மீண்டும் போக ஆசைப்பட்டார்கள்.. அங்கிருந்து நகர்த்தி கூட்டி வருவதற்குள் பெரும்பாடானது..
பசங்களுக்கு ஏந்தான் காரோட்ட பைக் ஓட்ட இப்படி ஆசை வருதோ..?..

விளையாட்டை முடித்ததும் கிளம்புகையில் ,
" அந்த காய்ச்சல் காரன் எங்கேன்னு தேட வேண்டியதாயிற்று..

திரும்பவும் காவ் யாய் மலை வழியே சென்று , அங்குள்ள பல அருவிகளுக்கு நடந்தே சென்று குளித்ததெல்லாம் முக்கியமல்ல. ஒவ்வோன்றும் சுமார் 3 மிகீ, காடுகளுக்குள்ளே, ஒத்தையடிப்பாதையில் கல் முள்ளோடு..கொஞ்சம் தவறினாலும் அகால பாதாளத்தில் விழணும்.. கவனமா நடக்கணும்..

ஒரு பெரிய மரம் சாய்ந்து கிடந்தது.. சுமார் 3-4 அடி உயரம். அதை ஏறி கடக்க சின்ன மரம் ஒன்றை போட்டிருந்தார்கள்.. சின்னவர் தான் துறுதுறுன்னு வேகமாய் நடந்தார்;

இந்த மரத்தில் ஏறி இறங்கும்போது பிடிச்சுக்கோ னு சொன்னத கேட்காம " ஹ நான் என்ன பேபியா ?." னு சொல்லிட்டே இறங்கும்போது தொப்பென விழுந்தார்.
எனக்கு சிரிப்பு .

ஆனாலும் அடக்கிக்கொண்டு, அவரை எழுப்பி , அட்வைஸ் சொல்ல வாயெடுப்பதற்குள் , " ஒண்ணுமில்லம்மா , டோண்ட் ஒர்ரி " ன்னுட்டார்...
இதெல்லாம் பழகணும்னுதானே இப்படி அழைத்து வருவதே.. காயப்படாமல் வாழ்க்கை இனிக்குமா?.

------------------------------

பின் மலைப்பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்த நாள் நக்கோன் நயோக் என்ற அருவி பக்கம் தங்கலாம்னு சென்றால் அங்கும் இதே கதைதான் ரூம் தேட.


போகும் வழியில் சரிகா அருவி க்கு இடது புறம் திரும்பவும் னு சைகை பார்த்து இடது பக்கம் போனால் போய்ட்டே இருக்கு மலையை காணோம்..( யாரோ சதி செய்துட்டாங்க )


அப்ப எதிரில் வந்த ஒரு காரை நிப்பாட்டி வழி கேட்டோம்..
கார் கண்ணாடியை இறக்கியவர் என் முகத்தை பார்க்காமல் பேசினார்.. ( அத்தனை ஐ கொடூரமா ? )

தலை வேறு மொட்டை அடித்திருந்தார்.. கிட்டத்தட்ட ஒரு தாதா மாதிரி நினைத்து கொஞ்சம் பயம் கொண்டேன்.
இருட்ட வேறு ஆரம்பித்தது..

ஆள் அரவம் ஏதுமில்லாத இடம்.


" Follow me " னு சொல்லிட்டார்..


நாங்க அந்த சின்ன ரோட்டில் காரை திருப்புவதற்குள் படாத பாடு பட்டோம்.. (காரை அப்படியே திருப்பும் மாடல் வந்திருக்காமே..ஜப்பானில். ? )

அதுவரை காத்திருந்து இங்க சுத்தி அங்க சுத்தி அழைத்து சென்றார்..

பென்ஸ் கார் அவரோடது.. சும்மா வழுக்கிக்கொண்டு போகுது , திரும்புது..
சரியா ஒரு பெரிய ரோட்டின் சிக்னலில் வந்து நின்றார்..

அங்கே சரிகா அருவிக்கான வழி இடது பக்கம் திரும்ப சொல்லி போட்டிருந்தது..
ஆனா இவரோ நேராக செல்லும் வழியில் காரில் நிற்கிறார். வழி புரிஞ்சாச்சு.

ஆனா எப்படி சொல்ல. என நினைக்கும்போதே , மொட்டைத்தலை தாதா போன்ற அந்த ஆள் காரின் கதவை திறந்துகொண்டு இறங்கி வந்தார் எங்களை நோக்கி.


ஆச்சர்யத்தில் மூர்ச்சைதான் ஆகவில்லை நாங்கள்...


அனைவரும் ஒரு சேர கைகளை குவித்தோம் ..

தலை வணங்கினோம்...



காவி உடை அணிந்திருந்தார்.. சாதாரண காலணியும்.. தெய்வத்தை பார்த்தது போல இருந்தது ஒரு நிமிடம்..



அவர் அங்குள்ள புத்த பிட்சுகளின் தலைவர்...

அந்த ஊரின் பல இடங்களில் இவரின் புகைப்படங்கள்...


அவர்கள் பெண்களை நோக்கி பேசுவதில்லை...

வெட்கினேன்..என் எண்ணத்துக்காக...


--- தொடரும் .

Wednesday, July 28, 2010

மீண்டுமொரு த்ரில்லர் பயணமும் கடவுள் நம்பிக்கையும்..










சில பயண அனுபவங்களை வருங்காலத்தில் திருப்பி பார்க்க சேமிக்கும் முயற்சிதான் இக்கட்டுரை.
.

வாசகர்களுக்கு போர் அடிக்கலாம் என் பெருமைகளும் , புலம்பல்களும் ( சொறிதல் - வலையுலக வார்த்தையில்)

அதனால் தொடராமல் இங்கேயே நின்றுகொள்ளவும். :)

-------------------------------------------------------


4 நாள் தொடர்ந்தார்போல் லீவு என்றாலே குழந்தைகள் பிளான் போட ஆரம்பித்துவிடுவார்கள்..

அப்பாவுக்கும் பெரியவனுக்கும் எப்போதும் கடற்கரை வேணும்.

எனக்கோ ஆறு , அருவி , மலை , மரங்கள் இருக்கணும்.குழந்தைகளுக்கு படிப்பினையாகவும் அட்வென்சர் பயணமாகவும் இருக்கணும்.

மேலும் கடற்கரை 200 கிமீ . மோட்டார் வேயில் சென்றால் 1.30 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.அதனால் திட்டமிடாமலே எப்போதும் செல்லலாம்..

மலைக்கு அப்படியல்ல , 100 கிமீ என்றாலும் போய் சேர 3 மணி நேரமாகும்..

பயணத்துக்கு முந்தினம் கொஞ்சம் மிக்சர் முறுக்கு செய்தால் நன்றாயிருக்குமே னு கணவர் சொல்ல உடனே மார்க்கெட் சென்று அரிசி மாவு வாங்கி வந்து கடலை மாவு கலந்து

அதையும் தயார் செய்தாச்சு.

குழந்தைகள் பற்றி பிரச்னையில்லை.. தாய் உணவுகள் உண்பார்கள் விரும்பியே,.எனக்கு தண்ணி,ஆப்பிள் இருந்தா போதுமானது..

சனிக்கிழமை மதியம் கிளம்பலாம் என் முடிவு செய்து இன்னும் நேரமிருக்குதே என புதிதாக வாங்கிய கணினியை ஆன் செய்தால்

திரையில் ஒண்ணும் வரலை.

அடிப்படை டிரபிள்ஷூட்டிங் செய்தும் பயனில்லை..

வாங்கி 7 நாளுக்குள் திருப்பி கொடுக்கணும்.. வேறு வழியேயில்லை..

போட்டதை போட்டபடி , குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கணினியை பேக் செய்துவிட்டு கடைக்கு சென்றோம்.

எல்லாம் பரிசோதித்து விட்டு விஜியே கார்ட் பெயிலர் என்றார்.

காம்பேக் சிஸ்டம். புது மாடல்.. பின்பு மாற்றி தந்து காப்பி செய்ய 2 மணி நேரமானது.

உடனே வீட்டுக்கு வந்தால் வீடு பூட்டியிருக்கு.

அப்பதான் நியாபகம் வந்தது வேலையாளிடம் , முயலுக்கு சாப்பாடு கொடுக்க திங்களன்று வர சொல்லி அவளிடம் ஒரு சாவியை

கொடுத்தேன்.

அவளோ வேலை முடிந்ததும் வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டாள்.. சாவியை லாபியில் கொடுக்காமல்..


அப்புரம் அவளை அழைத்து வீட்டை திறந்து படபடவென பாக்கிங் செய்து புறப்படுவதற்குள் மணி 4 ஆனது..

இருட்டிய பிறகு கார் ஓட்ட எனக்கு பிடிப்பதில்லை.. கண் கூசும் ..

புதிதாக வந்துள்ள பாட்டுகளை ஓடவிட்டு , வண்டியை கொஞ்சம் வேகமா செலுத்தி மலைவாசலை சென்றடைந்தோம்.6 மணிக்கெல்லாம்.

நல்லவேளை இருட்டவில்லை.. டிக்கெட் வாங்கிவிட்டு ஹேர்பின் பெண்ட் வளைவுகளை ரசித்தபடியே மலை ஏறினோம்..

6.30 க்கு போய் மலை உச்சியில் சேர்ந்தோம்.

இரவு சஃபாரிக்காக லைன் நின்றது.

உடனே அதை விசாரிக்கவும் கடைசி வண்டி 7.30 க்கு இருப்பதாக சொல்லவும் டிக்கெட் வாங்கிவிட்டு அருகிலுள்ள உணவகத்தில் கொஞ்சம் சூடா சூப் குடித்தோம்.

குளிர் ஆரம்பித்தது மெதுவாக இருட்டவும்.

உணவருந்தி வெளியே வரும்போது ஏதோ ஒன்று துள்ளி ஓடியது..

பார்த்தால் அழகிய மான் குட்டி ஒன்று...

பின் சஃபாரிக்கு திறந்த ஜீப்பில் ஏறி நின்றுகொண்டும் உட்கார்ந்துகொண்டும் பயணித்தோம்.. ஸ்பாட் லைட் வைத்து காட்டுக்குள் அடித்துக்கொண்டே வந்தார்கள்

பல இடங்களில் மான்கள் கூட்டம் கூட்டமாய்.. யானை , புலி, தென்படவில்லை.. குரங்குகள் இருந்தன.

குளிர் தாங்க முடியவில்லை... குழந்தைகளுக்கு.

சின்னவருக்கு மட்டும் தலையை மூடினேன். பெரியவர் வேண்டாமென்றார்.

அடுத்து அங்கு தங்க இடம் எளிதாக கிடைக்குமென பார்த்தால் எல்லா இடமும் நிரம்பி வழிந்தது..

நமக்கு எப்பவுமே பாஸிட்டிவ் எண்ணம்தான்.,. எப்படியும் நமக்கென ஒரு இடம் இருக்கும் னு.

சுமார் 20 விடுதிகப்புரம் தங்க ஒரு இடம் கிடைத்தது 2 மடங்கு விலையில்..

அழகான ரோஜா தோட்டம் இருந்தது..

ஆனால் ரசிக்க முடியாமல் அசதி வர நானும் பெரியவரும் தூங்கினோம்.. சின்னவரும் அப்பாவும் ஓனரோடு பேசிக்கொண்டிருந்தார்களாம்.

அப்பப்ப ரோஜாவை பறித்து வந்து அம்மா இந்தாங்கன்னு சொல்லிக்கொண்டிருந்தார்.. அத பறிக்க கூடாதும்மா னு கனவுலேயே திட்டிக்கொண்டிருந்தேன்.

காலையில் எழுந்ததும் வீர சாகச விளையாட்டுகள் நிறைந்த கவ் பாய் இடத்துக்கு செல்லலாம் னு எண்ணியிருந்தோம்..

ஆனால் முனகல் சத்தம் கேட்டது..

பெரியவருக்கு பயங்கர காய்ச்சல்..

என்னாச்சு னு கேட்டா பேச முடியலை தொண்டை வலி..

நீங்க வேணா சுத்திட்டு வாங்க நான் இங்கே இருக்கேன் னு சொன்னார்..

" அட வந்ததே உங்க இருவருக்காகத்தான்.. இப்ப பாரு மருந்து வாங்கி தர்வேன் எல்லாம் சரியாயிடும்" னு பாஸிட்டிவா உற்சாகம் கொடுத்துவிட்டு

தாமதியாமல் , எழுந்து குளித்து காஃபி அருந்திவிட்டு மெடிகல் ஷாப் தேடி சென்றேன்... அது கொஞ்சம் கிராமம் போன்ற இடம்..

சில நபர்களிடம் விசாரித்து ஒரு நீண்ட சாலைக்குள் நுழையும்போது , சந்தேகத்தோடு வழி கேட்கலாமான்னு பார்க்க ஒரு பெண்மணி கையசைத்தார்..

கண்ணாடியை இறக்கிவிட்டு மெடிகல் ஷாப் இருப்பதை உறிதிசெய்யும்போது , அவர்,

" நானும் உங்ககூட வந்து மருந்து எடுத்து தருகிறேன் நான் அங்குதான் செல்கிறேன் என்றார்.

எனக்கு தூக்கி வாரி போட்டது...

என்ன சொல்றார் இவர்.?

அவர் தொடர்ந்தார் , " நான் மருத்துவர் . இந்த கிராமத்துக்கு ஞாயிற்றுகிழமை மட்டும் வருவேன்.. ஒரே ஒரு மருத்துவமனை.."

எனக்கு பாதி நம்பிக்கை மட்டுமே..தெரியாத ஊரில் என்ன செய்வது..?. மருத்துவர் என்றால் ஏன் காரில் செல்லவில்லை.?.

பொது பேருந்துக்கு நிற்கிறார்?.

ரொம்ப கேஷுவல் உடை வேறு..

இங்க போ, அங்க திரும்பு என வழிக்கட்டினார்.. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் போய்க்கொண்டிருந்தேன்.

கடைசியில் நிப்பாட்ட சொன்னார். இறங்கி ஒரு சந்துக்குள் அழைத்து சென்றார்.

அங்குள்ள கடையின் 2 ஷட்டரை திறந்தார்,.

அப்பாடா நிம்மதி.. அது கிளினிக் தான் இரண்டு படுக்கையோடு...

கடவுளாய் பார்த்து தக்க நேரத்தில் மருத்துவரையே என் கூட அனுப்பி வைத்திருக்கார்..

கூட வரும்போதே பையன்/ காய்ச்சல் பற்றி தகவல்கள் சொல்லியிருந்தேன்..

அதற்குள் ஒரு பெண்மணி குழந்தையோடு பைக்கில் வந்து ஊசி போட்டு சென்றார்..

அதை முடித்துவிட்டு மருந்துகளை எடுத்துக்கொண்டு என்னோடு புறப்பட்டார் , அந்த கும்பிட போன தெய்வம்...

ஊசி போட்டு மருந்தும் கொடுத்தார்.. பின் அவரை கொண்டு விட்டுவிட்டு , வந்து உணவருந்திவிட்டு கிளம்பினோம்.

http://www.google.co.th/images?hl=en&q=khao+yai&um=1&ie=UTF-8&source=univ&ei=ldlPTPP3NYSYrAewnfiSDg&sa=X&oi=image_result_group&ct=title&resnum=7&ved=0CEoQsAQwBg

http://www.khaoyai.com/khaoyai.htm

http://en.wikipedia.org/wiki/Khao_Yai_National_Park

The park is the second largest in Thailand. It covers an area of 2,168 square kilometers, including evergreen forests
and grasslands. Its altitude mostly ranges from 400 to 1000 m above sea level. There are 3,000 species of plants,
320 species of birds like red junglefowl and green peafowl and 67 species of mammals, including Asiatic black bears,
Asian elephants, gaur, tigers, gibbons, Indian sambar deer, crab-eating macaque, Indian muntjac, dholes, and wild pigs.
Its waterfalls include the 80 metre Heo Narok, and Haeo Suwat made famous from the film The Beach.

http://www.thongsomboon-club.com/

Love the rush as you soar 50 ft above ground on this scenic zipline.
Not for the faint of heart or the weak of grip.

Got to know who can really put the pedal to the metal? Show off your driving skills by circling our smooth course.

Think you’re too young to ride? Think again.
We offer another track for all those young and excited.

----------------தொடரும்...















Friday, July 16, 2010

சம்மர் வகுப்பு + சுற்றுலா..- பாகம் 2



















சும்மா விளையாட்டுக்கு ஆரம்பித்த சம்மர் வகுப்புகள் மிக சிறப்பாக நடப்பது எனக்கே ஆச்சர்யம்தான்...

என்னை யாரென்றே தெரியாத , எனக்கு யாரென்று தெரியாதவர்கள் எல்லாம் தொலைபேசியில் அழைத்து எங்கள் குழந்தைகளையும் அனுப்பட்டுமா என்று கேட்டு அனுப்புகின்றனர்..

பணம் எவ்வளவு ? இதுதான் அனைவரின் கேள்வியும்..

இல்லீங்க இலவசம்தான் னு சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க... பணம் இல்லாமல் எப்படி அனுப்புவது .?

உங்களுக்கு தொந்தரவா இல்லையா?.. கொஞ்சமாவது
வாங்கிக்கோங்களேன்...

இல்லீங்க
இதனால் நானும் என் குழந்தையும் பயனடைகிறோமே...னு பல
காரணத்தை சொல்லி சமாதானபடுத்த ( ஆமா படுத்த ) வேண்டியுள்ளது..

ஆக ஆரம்பித்து 18 நாட்களானதால் ஒரு பிக்னிக் கூட்டிட்டு போகாட்டி எப்படி.. குழந்தைங்க கோச்சுக்காதா?.. ( முக்கியமா எனக்கு )

அதனால்
இந்த வெள்ளிக்கிழமை பிக்னிக் போகலாம்னு முடிவு செய்தோம்..

குழந்தைகளோடு பொழுதை கழிப்பது மிக சுவாரஸ்யமானது..

" ஆண்ட்டி , இந்த சட்டை நல்லாருக்கா.?"

" ஆண்ட்டி நான் கீழ விழுந்துட்டேன்."


" ஆண்ட்டி நான் கலர் பண்ணிட்டேன்.. சாக்லேட் தாங்க.."

" இந்த ஜூஸ் எனக்கா.?"

" கேக் வாங்கி வெச்சிருக்கீங்களா."


இப்படி
உரிமையான கேள்விகள்..


அதுல
ஒரு குட்டிப்பெண் பட்டுப்பாவாடை போட்டு வந்து அப்படியே கொள்ளை
கொண்டது.. ( ம்ம்.. பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தை கிளப்பி விட்டது :) )

முதலில்
9 மணிக்கு ஆரம்பித்த வகுப்புகள் ,


" ஆண்ட்டி 9.30 க்கு ஆரம்பிக்கலாமே."


" இல்ல நான் 10 மணிக்குத்தான் எழும்புவேன் .. பிளீஸ் ஆண்ட்டி.."
அப்படி இப்படீன்னு இப்ப 11 - 1 .30 மணி வரை வருகிறார்கள்..

வந்ததும்
கொஞ்சம் படம் வரைதல் , கலரிங் , கதை புத்தகம் படித்தல்..

அடுத்து ஓரிகேமி - காகிதத்தில் பூக்கள், தொப்பி, கிறுஸ்மஸ் மரம் , ஹேண்ட்பேக் , அன்னம் , என ஏதாவது ஒன்று தினமும் சொல்லித்தரப்படும்..( கூகுளய்யா வாழ்க )

அப்புரம் ஹிந்தி பாட்டு போட்டா ஒரே டான்ஸ் தான்...( இன்னாமா ஆடுறாய்ங்க..????. டேன்ஸ் மாஸ்டர் கிட்ட படிக்கிறாங்களாம். )

இப்ப
டயர்டா ஆனதும் எல்லாரையும் அமர வைத்து கையில் ஆளுக்கொரு
கீரைக்கட்டு.. அல்லது கேரட் துண்டு ...

எதுக்கு
?..


இப்ப
தான் முயலார் ஃபீடிங் டைம்...


அவரை
உள்ளே இருந்து கதவை திறந்து விட்டு மாப்பிள்ளை மாதிரி அழைத்து
வந்தால் ,

ஒரே கூச்சல் ..


முண்டியடித்துக்கொண்டு
நான் நீ என போட்டி போட்டு கீரை , கேரட் கொடுப்பதில்
முயலார் பயந்து ஓட , இவுக பின்னால் துரத்த..

அதனால்
இப்ப யாரும் எழும்ப கூடாது அமர்ந்து இருங்கள்.. முயலார் வந்து வாங்கி
சாப்பிடுவார் னு சொல்லி கண்ட்ரோல் பண்ணுவதற்குள்.......... ஹாஆஆஆ............

அதற்குள்
குழந்தைகளை அழைத்து செல்ல ஆயாக்களும் அம்மாமாரும்
வருவாங்க.. ஆனா போக மாட்டாங்க... பிடிச்சு இழுத்துட்டு போகணும்.. ( நம்ம வேலையும் பாக்கணுமே..)

இன்று வெள்ளிக்கிழமை... பிக்னிக் . அருகிலுள்ள பூங்கா.. போனால் பகல் பொழுது அடைப்பார்களாம்.. உடனே கொஞ்சம் தூரமுள்ள பூங்கா சென்றோம்.. அங்கு விளையாடிவிட்டு வெயிலாக இருந்ததால் அதன் மிக அருகிலுள்ள மரங்கள் அதிகமுள்ள பூங்கா சென்று விளையாடிவிட்டு கொண்டு வந்த உணவுகளை குழந்தைகள் சாப்பிட்டார்கள்..

அருகில்
ஒரு விஷ்ணு மந்திர் இருந்தது அங்கும் சென்றோம்..


எல்லா
குழந்தைகள் போல என் குழந்தையும் அவர்களை பார்த்து கீழே விழுந்து
நமஸ்கரித்தார்..

ஏன்
இவுங்க ஜீஸஸ் வேற மாதிரி இருக்கார்..? - மகன்..


அப்புரம்
உள்ளே ஒரு அடி அளவில் கோவில் மணிகள் சுமார் 6
தொங்கவிட்டிருந்தார்கள்.. அதிலேயும் சாமி சிலைகள்..

அதிலிருந்து
கயறு
தொங்கியது... எல்லா குழந்தைகளும் அந்த மணியை இழுத்துவிட்டு கைகள் குவித்து பிராத்தனை செய்ய மகனாரும் அதையே பின்பற்றினார்...

கோவில்
மிக உயரத்தில்..கீழே மண்டபம்.. ஏதோ பூனூல் விசேஷம் போல நடந்தது...
ஹீரோ/மாப்பிள்ளை ? மொட்டை போட்டு உச்சியில் குடுமி வைத்திருந்தார்.. ஆனா அவருக்கும் அழகு கலை நிபுணர் அலங்காரம் செய்தார்.. ஹால் நடுவில் 4 வாழைமரம் கட்டி, பூ அலங்காரம் செய்து புரோகிதர் ஓதிக்கொண்டிருந்தார்..( இதெல்லாம் எப்படி பார்த்தீங்கன்னு கேட்பீகளே.. ? ஜன்னல் வழியா தெரிந்தது... ) பர்மா காரர்கள் கூட்டமாய் இருந்தார்கள்..

கீழே இந்திய கடை இருந்தது..
ஒருவர் சூடா சமோசா போட்டு தந்தார்.. குலாப்ஜாமூன் இருந்தது.. விரும்பலை குழந்தைகள்..

பின்பு பிக்னிக் முடிந்து திரும்பியதும் அரட்டையோடு தாங்கள் எடுத்த மலர்களை ( புல்லில் விழுந்தது) வீட்டுக்கு கொண்டு செல்வதை பற்றி மகிழ்ச்சியா பேசிக்கொண்டே வந்தனர்...


இப்படியாக என் பொழுதுகள் மிக இனிமையாக உபயோகமாக சென்றதோடு என் குழந்தைகால நியாபகத்தையும் மீட்டியது......

நான் சிறு குழந்தையாக இருந்தபோது பெரிய விடுமுறைக்கு பாட்டி வீடு செல்வதென்றால் அத்தனை இஷ்டம்... பெரிய காம்பவுண்ட் வீடு.. உள்ளே சுமார் 12 குடித்தனங்கள் வாடகைக்கு இருந்தார்கள்..

அதன்
பின்புறம் பெரிய
மாட்டுத்தொழுவம்..மாட்டு வண்டிகள்... கூடவே கோழிகளும் , நாய்களும்...புளியமரம் , அதில் ஊஞ்சல்... அருகில் தாமிரபரணி ஆறு..நினைத்த போது குளியல்.. கணக்கில்லாமல்...

வாடகைக்கு குடியிருப்பவர் வீடுகளில்தான் முழு நேரமும் விளையாட்டு.. கேரம்போர்ட் , தாயம் , சோளி , சீட்டுகட்டு , கோலிக்குண்டு ,குச்சிகம்பு , என வகை வகையாக.. பின்னர் இரவானதும், முற்றத்தில் அனைத்து வீட்டு குழந்தைகளும் நிலாச்சோறு...அதன்பின் அங்குள்ள அக்காக்கள் கதை சொல்ல அங்கேயே தூங்கிடுவோம்... அத்தைகள் வந்து எழுப்பும் வரை..

அவர்களெல்லோரும் இப்ப எங்கெங்கு இருக்காங்களோ தெரியாது.. ஆனால் அந்த நினைவுகள் மிக சுகமானவை... இப்படி பணம் ஏதும் செய்யாமலே வருடா வருடம் 2 மாதங்கள் பணிவிட செய்துள்ளதை நினைக்கும்போது , அவர்களுக்கு மனதில் மட்டுமே நன்றியை செலுத்த முடிகிறது..

வாழ்வில்
சில வருடங்கள் உழைக்க , சம்பாதிக்க , நம் கடமைகள் செய்ய என
சென்றாலும் எப்போதாவது சில நாட்கள் /வேளைகள் தான் நிஜமாக வாழ்வதைப்போல ஒரு எண்ணம் ஏற்படும்.. அதைப்போல " நானும் வாழ்ந்தேன் ".

குழந்தைப்பருவம் மட்டுமே சுமைகள் இல்லாதவை...

இக்குழந்தைகளும் சில இனிய
நினைவுகளை சேமிக்கட்டும்...

( புலம்பல் வகை.. பின்னூட்டத்துக்கு நேரம் செலவிட வேண்டாமே...:) )

Tuesday, July 13, 2010

பாங்காக்கில் யானைக்கு உணவளித்தால் 10,000 ஃபைன் . டூரிஸ்டுகளுக்கு எச்சரிக்கை..






























பாங்காக் வீதிகளில் யானைகளை அழைத்து வந்து தர்மம் கேட்கும் பழக்கம் இருந்து
வந்தது..

இதை பல வெளிநாட்டவர் , மற்றும் உள்நாட்டவரும் முக்கியமாக குழந்தைகள் விரும்பினாலும், இதனால் யானைகள் சீக்கிரம் மரணமடைந்துவிடுவதாகவும் , நகர

வீதியில் வாகனப்புகையினால் , தெருக்களில் நடப்பதாலும் உடல் பலவீனமடைந்து

டிபி போன்ற நோய் வாய்ப்படுவதாலும் அரசு இச்சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது..

யானைப்பாகனுக்கும் அதே ஃபைனும் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்..

இது குறித்து தொலைக்காட்சியிலும் , ஊடகங்களிலும் மற்றும் நகரின் முக்கிய இடங்களிலும் அறிவிப்புகள் வெளியிடப்படும்..