தம்பி உனக்கு வேணுமா ? பணம் எல்லாம் தர வேணாம் சும்மாவே தரேன் . நீ பார்த்திருக்கியா அவள் போட்டோ . நீ பார்க்கணுமா ? இரு இப்பவே அனுப்பி வைக்கிறேன் .எப்படி ...............இருக்கா பார்த்தியா ? இவளுக்கு போய் யாராவது சப்போர்ட் பண்ணி பேசுவாங்களா ?
--------------------
இப்படி நான் பேசியதாக என் மீது அவதூறு கூறி திரிவதோடு என்னை மீண்டும் மீண்டும் வம்பிழுக்கின்றனர்..
முடிந்தால் இந்த வார்த்தை ஒவ்வொன்றையும் நிரூபிக்க சொல்லுங்கள்..
என் மீது புரளிகள் வருவது புதிதல்ல ..இணையம் வந்ததிலிருந்து இதை சந்திக்கிறேன்.
இருப்பினும் இது போன்றவைகளை நிரூபிக்க சொல்வதே அவர்கள் நேர்மை வெளி கொண்டு வர மட்டுமே..
எனக்கு வார்த்தைக்கு வார்த்தை நிரூபணம் தேவை...
பதில் சொல்லட்டும் மதாரும் , முகிலனும்....
Sunday, September 26, 2010
புரளிகளை நிரூபிக்கட்டும் வார்த்தைக்கு வார்த்தை.
Saturday, September 25, 2010
இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் - பாகம் 5



4. போதாமை , குறைபாடு, இயலாமை , ஊனம்
கவன ஈர்ப்பு, ஆளுமை, வேலை செய்யாமல் போனதால் எப்படியாவது பலம் சேர்த்து பழி வாங்கும் முயற்சியில் இறங்கினாலும்,
அதிலும் தோற்று போனதும் அவர்கள் இந்த இயலாமை நிலைமைக்கு தள்ளப்படுவர்..
தம் திறமையின் மீது நம்பிக்கை வைத்து முன்னேறாமல் அடுத்தவரை காயப்படுத்தி அதிலொரு இன்பம் காணுவதையே முழுநேர தொழிலாக செய்வதால் குறைபாடு
அதிகம் வளர்த்து ஒரு ஊனமான நிலைமைக்கு தம்மையே தள்ளுவர்..
செய்யவேண்டிய ஆக்கபூர்வமான காரியங்கள் எத்தனையோ இருக்க பழிவாங்குவதில் அத்தனை நேரத்தையும் செல்விட்டு அதில் தோல்வியும் அடைவதால் இனி என்னிடம் என்ன இருக்கு என்ற போதாமை
எண்ணம் வந்துவிடும்...
தம்பதியினருள் ஒருவர் தொடர்ந்து இந்த வித்தைகளை பயன்படுத்தும்போது அடுத்தவர் மிக கவனமாக முதல் நிலையிலேயே புரிந்துகொண்டு அங்கேயே பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளணும்..
சிலர் இயலாமை வரை வந்த பின்பே சரணடைவார்கள்..
அதையும் கணக்கில் கொள்ளாமல் ஊக்கப்படுத்தினால் மீண்டு வர வழிபிறக்கும்...
அராஜகமான முறையில் எப்போதும் நியாயம் கிடைப்பதில்லை என புரிந்துகொள்ளணும்..
அப்படியே கிடைத்தாலும் அது தொடர்ந்து நிலைப்பதில்லை..
நம்மை , நம் குடும்பத்தை சுற்றியுள்ளவர்கள் எப்படி இருக்கிறார்கள் , அவர்களுக்கு நம் மீதான நல்லெண்ணம் இருக்கிறதா இல்லை போலியான உறவுகளா என பார்த்து
விலகலோ, உறவாடுதலோ மேற்கொள்ள வேண்டும்...
நமக்கு தெரியமலே இந்த புதைகுழிக்குள் சிக்கிடும் வாய்ப்புண்டு..
ஆக நம் சூழல், நட்புகள், உறவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன நம் குடும்ப நிம்மதிக்கும், குழந்தை வளர்ப்புக்கும்...
ஒருவரிடம் நட்பு கொள்ளும்போது முதலில் அவர் நோக்கம் நன்றாக இருக்கிறதா என பார்த்துக்கொள்ளணும்..
அவருக்கு சமூகத்தின் மீதான பார்வை , உதவும் எண்ணம் எத்தனை உயர்வாக உள்ளது என்றும்..
சுயநலமாக இருந்து பாராட்டை பெற விரும்புபவரை விட பொதுநலத்துக்காக விமர்சனங்களை ஏற்பவராக இருப்பவர் நேர்மையானவர்.
அப்படி ஒரு கொள்கை கொண்டவரோடான நட்பு ஒருபோதும் நான் மேலே சொன்ன நான்கு வகை குணங்களை கொண்டிருக்காது...
அதாவது போலித்தனமான கவன ஈர்ப்பு , ஆளுமை , பழிவாங்குதல் இயலாமையில் தள்ளுதல் இருக்கவே இருக்காது..
மாறாக படிப்படியாக நம்மை உயர்த்துவதாய் இருக்கும்...அவர்களின் கொள்கை...
இல்லறத்தில் ஒருவர் இப்படியான குணத்தை கொண்டிருந்தாலும் கூட அக்குடும்பமே இத்தகைய குணம் கொண்டு வளரும்.. அவர் சார்ந்த சூழலும் சமூகமும்..
அப்படியும் பிடிவாதமாய் மாற்ற முடியாத ஒரு துணை அவருக்கு கிடைத்தாலும் அவர்களது விவாக ரத்தானது மிக நட்போடு பிரியும் எவ்வித கசப்பும் இல்லாமல்..
எனக்கொரு தோழி உண்டு இங்கே .. 10 வருடத்துக்கு பின் தம்பதியினர் இருவரும் நட்போடு, புரிதலோடு பிரிந்தார்கள்..
இப்பவும் மாதம் ஒருமுறை டென்னிஸ் ஒன்றாக விளையாடுவதுண்டாம்...
ஆக பிரிவும் தவறில்லை , ஒரு வித ஊக்கமான தொடர்பு நட்பாக தொடரும்போது...
அத்தகைய மன நிலைக்கு நம்மை நாம் தயார் செய்துகொள்ளணும் என்றால், முதலில் நாம் துணை மீதான அக்கறையை வலிய சென்று அதிகப்படுத்தி
முன்னுதாரணமாய் இருக்கணும்...
திருமண வாழ்க்கையில் சில காரணங்களால் அலுப்பு தட்டலாம்.. சந்தேகம் வரலாம்.. ஆனால் அதை எல்லாவற்றையும் ஆரம்பத்திலேயே கவனத்தில் கொண்டு அலட்சியம் செய்யாமல்
பிரச்னைகளை மனம் விட்டு பேசிடவும் பேச வாய்ப்புகள் தரவும் வேண்டும்...
துணை ஒருவர் கவன ஈர்ப்பு செய்ய ஆரம்பிக்கிறார், அன்புக்கு பதிலாய் ஆளுமை வருகிறது , பழிவாங்க தயாராகிறார் என்றார் மற்ற துணை உடனே அதை சரிசெய்திட வேண்டும்..
தெரிந்தோ தெரியாமலோ நாமும் காரணமாயிருக்கலாம்.. நம்மேல் நியாயம் என்றால் கூட புரிதலில் சிக்கல் இருக்கலாம் ..
ஆக நேரம் செலவழித்து புரிய வைப்பதும் நம் கடமைதான் என்னதான் அவர் மேல் நியாயம் இல்லையென்றாலும்..
ஏனெனில் இது குடும்பம் .. மற்ற உறவு நட்பு போல அல்ல..
பள்ளியில் ஒரு மாணவன்/வி இப்படி செய்தாலும் ஆசிரியர் அப்பிள்ளைக்கு தனி கவனம் செலுத்தி அவர் குறையை தீர்க்கலாம்..
நட்பு என்றாலோ , அலுவல் என்றாலோ கூட நாம் ஒதுங்கிடலாம் .. ஆனால் துணை அப்படியான விஷயமல்ல..
என்னால ஒண்ணும் முடியாது என்ற நிலைமைக்கு அவர்கள் வந்தாலும் , ( Helpless Stage ) , நாம் அவர்களிடம் எடுத்து சொல்ல வேண்டியது ,
அவர்களால் எல்லாம் முடியும் .. என்ன பிரச்னை னா Self help less , சுயமா தம்மை மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய வில்லை என்பதை எடுத்து சொல்லி ,
எதிர்மறை எண்ணத்திலிருந்து விடுவித்து ஒரு முழுமையான தன்னம்பிக்கை கொண்டவராய் ஆக்கிடலாம்...இது கண்டிப்பாக முடியும்..
கொஞ்சம் பொறுமை தேவை.. முக்கியமா மூன்றாவது ஆளின் தலையீடு இல்லாமல் /குழப்பாமல் பார்த்துக்கொள்ளணும்...
இனிய இல்லறமே குழந்தை வளர்ப்புக்கு மிக அடிப்படை தேவை..
ஆக குழந்தைகளுக்காக தத்தம் ஆசைகள் , பிரச்னைகள் , சிலவற்றை தம்பதியினர் விட்டுக்கொடுப்பதில் தவறேயில்லை..
கிடைத்துள்ளது ஒரு வாழ்க்கை.. இன்பமயமாக ஆக்கிக்கொள்வது நம் கையில்..
வாழ்க இனிமையாக...
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த உளவியல் கட்டுரை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன் .. அனேகமாக அடல்ஸ் ஒன்லியாக இருக்கக்கூடும்...அல்லது பெண்ணின் தேவை என்ன ( what a women really wants ?. ) என்பதாக இருக்கலாம்...
அல்லது நீங்களே சொல்லலாம்.. எதை குறித்து எழுதலாம் என..:)
சந்திப்போம் ...நன்றி..
Friday, September 24, 2010
புர்கா போட்ட பெண்கள்.

இந்த செவ்வாய் அன்று ஏற்கனவே எழுதியிருந்தேன் ஐடிசி க்கு சென்று அகதிகளை சந்தித்ததாக..
10 மணிக்கு வரிசையில் நின்று படிவம் நிரப்பி கொடுத்துவிட்டு அமர்ந்தால் எதிரே 2 வட இந்தியர் , ஒரு பாகிஸ்தான் பெண்மணி , 3 இஸ்லாமிய தாய் பெண்கள் ( கல்லூரி செல்லும்
பெண்களாயிருக்க கூடும்.. )
நான் சுவற்றை பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்ததால் எனக்கு பார்வையை செலுத்த வேறு வழியில்லை.. இவர்கள் 6 பேரையும் மாற்றி மாற்றி பார்த்தே ஆகவேண்டிய நிலைமை,..
அல்லது கண்ணை மூடிக்கொண்டு இருக்கணும்..
அந்த பாகிஸ்தான் பெண்மணி 6 அடி உயரம் , மெலிந்த தேகத்தோடு மிக அழகாக ஒரு மாடல் போல் இருந்தார்.. இஸ்லாமியர் என்பதன் அடையாளமாக
தலையில் துப்பட்டா மட்டுமே அனிந்திருந்தார்.. அது அவருக்கு மேலும் அழகூட்டியது என்றே சொல்லலாம்..
கால் மேல் கால் போட்டு மிக கம்பீரமாக அமர்ந்திருந்தார்.. ( கம்பீராமன பெண்மணிகள் எப்போதும் என்னை கவர்ந்திடுவார்கள்.:) )
கால் , கை விரல்களில் மிக பொருத்தமான நகப்பூச்சுகள்.. தன்னை அழகுபடுத்திக்கொள்ள எப்படி நேரம் செலவழிப்பார்கள் என்பது எப்போதுமே நான் வியப்பதுண்டு...
நான் செய்யாவிட்டாலும் அதை முழுமனதாய் ரசிப்பேன்.. இங்கே பார்க்கும் சில தாய் பெண்களை வைத்த கண் வாங்காமல் பார்த்த சம்பவமுண்டு..
கணவர் தான் " சைட் அடித்தது போதும் வா." என அழைத்து செல்லணும் அத்தனை அழகு பதுமைகள் பொருத்தமான அலங்காரத்தோடு , ஆப்பிள் கன்னங்களோடு
கன்ணை கவர்ந்ததுண்டு.. ( நல்லவேளை ஆணாய் பிறக்கவில்லை :)) ).. அதே போல திருநங்கைகளும் அத்தனை அழகு இங்கே...
அதே போல சிறுமிகளும் அவர்கள் உடுப்புகளும் தலை அலங்காரமும்..எப்போதும் ரசனைக்குறியவை..
காலில் அணியும் காலணியில் கூட பாருங்கள்.. பெண்களுக்கென்றால் அதில் கல் பதித்து , அழகான சம்க்கி , பூக்கள் கொண்டு அழகழகான வேலைப்பாடுகளுடன் .
ஒரு அலுவலில் , ஏன் காவல்துறை , நீதிமன்றம் , மருத்துவமனை போன்ற வெற்றிடமாக இருக்குமிடத்தில் கூட ஒரு பூந்தொட்டியையோ, பச்சை இலை செடிகளையோ வைத்து பாருங்கள்..
மனதுக்கு எத்தனை இதம்...
ஒரு பிரச்னையின் போது நாம் கேட்கும் மெல்லிய இசை?.. நல்ல திரைப்படம்./. கடற்கரையில் காலார நடை..?.
இப்படி ரசனைகள் நம் மனதினை மாற்றும் வல்லமை படைத்தவை..
"A THING OF BEAUTY IS JOY FOREVER " John Keats சொன்னது எத்தனை நிஜம்.?
அழகு படுத்திக்கொள்வது , அழகை ரசிப்பது அவரவர் விருப்பம்.. ஆனால் அதை வைத்து மட்டுமே எடைபோடுவதுதான் தவறான விஷயம்..
இப்படி இருக்க , எனக்கு மிக வேதனை தந்த விஷயம் என் முன்னால் அமர்ந்திருந்த அந்த 3 இஸ்லாமிய வாலிப பெண்கள்..
தலையில் வெள்ளை முக்காடு..
உடம்பு முழுதும் கருப்பு அங்கி போன்ற உடை..
கைகளுக்கும் , விரல்களுக்கும் கூட கருப்பு துணியால் மூடி, கால்களுக்கு சாக்ஸ் போட்டு கருப்பு ஷூ போட்டு மூடி...:(
கண்களை தவிர வேறெதுவும் காணமுடியாது..
ஏற்கனவே தாய் மக்கள் பேசுவது சத்தமே கேட்காது..ரகசியம் பேசுவது போல மிக மென்மையான சங்கீத மொழியில் பேசுவர்..
இப்ப அங்கியினுள் பேசுவது ?.
அதில் ஒரு பெண் உணவருந்த ஆரம்பித்தார்.. கை விரல் வரை இருந்த அந்த தலை முக்காடானது , அவர் சாப்பிட மிக இடைஞ்சலாக வந்து வந்து விழுது சாப்பாட்டின் மேல்..
அதை பொருட்படுத்தாது ஒரு கவளம் எடுத்து வாயில் போட மற்றொரு கையால் அந்த துணியை பிடித்துக்கொள்ள , இப்படியே ஒவ்வொரு வாய்க்கும் அவர் செய்வது பார்க்க கஷ்டமாயிருந்தது..
தண்ணீர் குடிக்கவும் அந்த பாட்டிலை துணிக்குள் எடுத்து சென்று கஷ்டப்பட்டே குடிக்கணும்..
அவர்களுக்கு அது பழகிப்போன ஒன்றுதான் இல்லையென சொல்லவில்லை..
ஆனால் இந்த நூற்றாண்டிலும் இப்படி ஒரு பழக்கவழக்கத்தை வைத்து பெண்களை கஷ்டப்படுத்துவதை பார்த்தால் மிக வருத்தமாக உள்ளது..
எனக்கு தெரிந்த ஒரு இஸ்லாமிய பெண் வெளிநாடு சென்று படிக்கும்போது விரும்பிய உடை , ஏன் ஜீன்ஸ் கூட அணிவார்.. விரும்பிய அணிகலனும் அப்பப்ப உள்ள பேஷன் பொருந்த்து.
ஆனால் ஊருக்கு வந்துவிட்டால் கருப்பு அங்கியில் முடங்கி விடுவார்.
எத்தனை எத்தனை ஆசைகளை விருப்பங்களை மற்றவருக்காக அவர் இருக்கும் சமூகத்துக்காக விட்டுக்கொடுக்கவேண்டியுள்ளது?..
இது போல எத்தனை பெண்கள் தம் ஆசைகளை துறந்து துறவி வாழ்க்கை வாழ்ந்துகொண்டுள்ளார்கள்..?
கிடைத்துள்ளது ஒரு வாழ்க்கை .. அதில் பலதரப்பட்ட கட்டுப்பாடோடு உயிர் இருந்தும் பிணமாய் வாழ்ந்துகொண்டு ?..
இதில் திருமணம் செய்து வைத்துவிட்டு வெளிநாடு செல்வார் கணவர்.. , ஆயுசுக்கும் தொலைக்காட்சியை பார்த்து அதில் வரும் காதல் பாட்டுகளை கற்பனை செய்துகொண்டு
2 ஆண்டுக்கு ஒருமுறை கூடிக்கொண்டு , ஒரு நாடகமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு...?????.. நல்லபெயர் எடுக்கவா?...
கடவுள்னு ஒருத்தர் இருப்பாரென்றால் அவருக்கு நம் மனம் புரியாதா?.. மனதளவில் நாம் சரியாக இருந்தால் போதாதா?..
இதை யோசித்துக்கொண்டிருக்கும்போதே அப்பெண்களில் ஒருத்தி வந்து தாய் பாஷையில் அந்த படிவம் நிரப்பிட உதவி கேட்டார்..
அப்பதான் அந்த கண்களை சந்தித்தேன்.. அதிலேயே தெரியுது அவள் தாழ்ச்சி , புன்னகை...
உலகமெங்கும் பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த கட்டுப்பாடு?..
அப்படியானால் இஸ்லாமிய பெண்ணை தவிர மற்ற பெண்களை ஆண்கள் பார்க்கலாம் என்ற சமரசமா?..
இல்லை மற்ற பெண்களை பார்க்கும்போது கண்களை மூடிக்கொண்டு பேசுவார்களா?..
கண்களுக்கு கடிவாளம் போடலாம் ... மனதுக்கு... கற்பனைக்கு எப்படி போடுவது?..
யாரை ஏமாற்றுகிறோம்?.. யாருக்காக...
ஒரு இஸ்லாமிய பெண்ணை என்னை போன்ற மற்றொரு பெண் ரசித்து பார்க்க கூடாதா?..
ஒரு பாகிஸ்தான் பெண்மணி கம்பீரமாக இருப்பதாய் மகிழும் நான் , எனக்கு முன்னுதாரணமாய் எடுத்துக்கொள்ளும் நான் இப்படி புர்காவினால் எத்தனை பெண்களை இழந்துள்ளேன்.?
பாராட்டு எல்லோருக்குமே பிடிக்கும்.. புர்காவுக்குள் புழுங்கும் பெண்கள் மட்டும் விதிவிலக்காய் இருக்கணுமா?..
நடமாடும் சிறை கைதிகளாய் தோன்றினார்கள் எனக்கு...
உலகில் அடுத்து ஒரு மிகப்பெரிய மாற்றமோ, புரட்சியோ வருமென்றால் அது இந்த புர்காவிலிருந்து விடுதலையாக இருக்கணும் என்பது என் பேராசை..
நான் அணிவது என்னை நான் ரசிக்க, எனக்கு உற்சாகம் கொள்ளவே.. அதே உற்சாகம் அனைவருக்கும் கிடக்கணுமே..
நான் ரசித்தவகைகளை , நான் அனுபவித்து உடுத்தியவகைளை , நான் விரும்பிய நிறங்களை , இந்த சகோதிரிகளும் அணியும் காலம் எப்போது வரும்..
வரணும்.. வரும்...
யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புகள்..
ஆனால் அதைவிட நான் அதிகம் காய்ப்படுகிறேன் ஒவ்வொரு முறை புர்காவினுள் ஒரு கைதியாக ஒரு பெண்ணை , சக மனுஷியை பார்க்கும்போது...:((
படம் : நன்றி கூகுள்..
இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் - பாகம் 4





மூன்றாவதாக பழிவாங்குதல் பற்றி பார்ப்போம்..
3. பழிவாங்குதல் /வஞ்சம் தீர்த்தல்.
நான்கவனிக்கப்படவில்லை ( கவன ஈர்ப்பு வேலை செய்யவில்லை ) .. என் அதிகாரமும் பிரயோசனப்படவில்லை.. ( ஆளுமை எடுபடவில்லை ) எனும்போது கோபம் அதிகமாகி அடுத்த கட்ட நடவடிக்கையாக பழிவாங்குதல் / அல்லது வஞ்சம் தீர்த்தலில் வந்து நிற்பார்கள்..
அலுவலில் தாம் எதிர்பார்த்த புராஜெக்டில் தாம் இணைத்துக்கொள்ளப்படாவிட்டாலோ , இல்லை எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காவிட்டாலோ இந்த நடவடிக்கை எடுக்க துணிவர். தம் மேல் உள்ள குறை என்ன என ஆராயாமல் , தன் ஈகோ பாதிப்படைந்துவிட்டதாய் எண்ணி பழிவாங்கினால் மட்டுமே பாடம் படிப்பிக்க முடியும் என மிக தவறான எண்ணத்தை ஆயுதமாக்கிக்கொள்வர்.
மாமியார் மருமகள் உறவிலும் எப்போதோ நடந்த பிரச்னையை மனதில் வைத்து மருமகளை தண்டிப்பது.. அதே போல மருமகளும் வயதான மாமியாரை தண்டிப்பது.. தம்பதியினர் இடையே பிரச்னைக்கு முக்கிய காரணமே ஈகோதான்..
ஆனால் தாம்பத்யம் என்ற மிக சிறந்த மருந்தானது இந்த ஈகோவை தவிடுபொடியாக்கிவிடும்..
இல்லற வாழ்வில் இருவர் மனமொத்து காமம் கொள்ளும்போது அங்கு நான் பெரியவன்/ள் நீ சின்னவன்/ள் என்பதற்கே இடமில்லை.. இருவரும் அடுத்தவரை திருப்தி படுத்துவதே முதன்மை என்ற எண்ணம் அங்கு மட்டுமே வருவதால் அங்கே ஈகோவுக்கு இடமேயில்லை..
அதனால்தான் எத்தனை பிரச்னை வந்தாலும் , சில நேரம் சண்டை போடுவதை பார்த்தால் அடுத்த நொடியே பிரிந்தால்தான் உண்டு போல என பார்ப்பவருக்கு தோன்றினாலும், தாம்பத்யமானது எல்லாவற்றையும் பொய்யாக்கிவிடும்..
சண்டைகள் வரலாம்.. அதன் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்தும் கொள்ளலாம்.. ஆனால் ஒருபோதும் தாம்பத்யத்தை தள்ளி போடவோ இடைவெளி விடவோ கூடாது..
ஆனால் இதிலும் இடைவெளி வந்துவிட்டால் இந்த பழிவாங்கும் எண்ணம் அதிகரித்துக்கொண்டே செல்லும்..
ஒரு துணை அமைதியாக ஒதுங்கி சென்றாலும் அடிபட்டவர்/பாதிக்கப்பட்டவர் , அவரை சீண்டிக்கொண்டே இருப்பார்.. பழிவாங்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்..
" நீங்க அன்னிக்கு அப்படி செய்தீங்கல்ல.. அதுக்கு பலனா நான் இன்னிக்கு இங்கே இப்படி செய்கிறேன்.."
அவர் மறந்தே போயிருக்ககூடும் என்று என்ன செய்தார் என்று.. ?..
சரி மறந்துடு .. அத விட்டு வெளியே வா னு சொன்னா பிடிவாதமா வர மறுப்பார்கள்.
" உங்க அண்ணன்/அப்பா என்னை அவமதித்தார் ..." னு கணவனும் ,
" உங்க அம்மா என்னை கொடுமை படுத்தினாங்க . அதனால் உங்க ஊர் பக்கமே வர மாட்டேன் னு அமனைவியும் தத்தம் துணையையே பழிவாங்குவர்..
இதில் பாதிக்கப்படுவது தாமும் தம் வாரிசுகளுமே என எண்ணாமல்.. ஒரு நல்ல தம்பதி செய்ய வேண்டியது என்ன?.. நமக்கு ஆகாதவர்கள் என்றாலும் குழந்தைகளிடம் அவர்களை பற்றி குற்றம் குறை சொல்லாமல் கொஞ்சம் கவனமா வேணா இருக்க சொல்லிவிட்டு , உரிய மரியாதை கொடுக்க சொல்லி பழக்கணும்..
அக்குழந்தைகள் வித்யாசம் பாராட்டமல் செய்யும் மரியாதையே கூட குடும்பங்கள் மீண்டும் மனஸ்தாபம் இல்லாமல் ஒன்றுபட வழிவகுக்கும். அதே தான் துணைகளும்.
கணவனோடு மனஸ்தாபம் என்றாலும் அமைதியாக இருந்துகொண்டு , அப்பாவை குழந்தைகளிடம் விட்டுகொடுக்காமல் இருக்கவேண்டியது மனைவியின் கடமை.
அப்பா எத்தனை கஷ்டப்பட்டு உழைக்கிறார் என்று சண்டையிருந்தாலும் மிக நேர்மையாக ஒரு மனைவி சொல்வாரென்றால் அவர் வெற்றியை தன் பக்கம் வைத்துள்ளார்.
அதே போல மனைவி மீது சிறு மனவருத்தம் கணவர் பேசாமலேயே, குழந்தைகளிடம் , " இது அம்மாவுக்கு உதவும்னு வாங்கி வந்தேன்.. அல்லது அம்மாவை ஒய்வெடுக்க சொல். நாம் வெளியே உண்ணலாம்.. அல்லது அம்மா பேச்சை கேள் அம்மா உன் நல்லதுக்குத்தான் சொல்வாங்க " என்பாரானல் அவர் மிக நேர்மையாக பிரச்னையை சமாளிக்க தெரிந்தவர் மட்டுமல்ல முன்னுதாரணமாய் இருப்பார்.
அதைவிடுத்து மனைவியை பழிவாங்க கணவன் அடிப்பதும் , அதை மனதில் வைத்துக்கொண்டு கணவனை பழிவாங்க மனைவி தாம்பத்யத்துக்கு ஒத்துழையாமல் இருப்பதும்....பிரச்னையை அதிகரிக்கும். பிரச்னையை ஆரம்பித்தவர் ஈகோ பாராது இரங்கி வரணும்..
தாமொருவனின்/ளின் ஈகோ முக்கியமா இல்லை மொத்த குடும்ப முன்னேற்றம் முக்கியமா?..
கோபம் எல்லாராலும் பட முடியும் .. எல்லாரிடமும் ஒரு நியாயமும் இருக்கும்...
பிரச்னை எப்படி வருகிறது என்பதை ஆராயாமல் அந்த பிரச்னையை எப்படி தீர்த்தால் என்னென்ன விளைவுகள் /தீர்வு கிடைக்கணும் என்பதை கொஞ்சம் முன்கூட்டியே ஆராய்ந்தால் இந்த பழிவாங்கும் எண்ணம் வரவே வராது..
நேர்மையா கிடைக்கவேண்டிய பதவி உயர்வு கிடைக்கவில்லையா?..உங்க மேலதிகாரிக்கு உங்களை பிடிக்கவில்லையா?.. பொறாமையா.? பொறாமையால் அவதிப்படாதவர் யாருமே இருக்க முடியாது... நாம் பொறாமைப்படும் அளவுக்கு நமக்கு ஆசீர்வாதம் கிடைத்திருக்கே என திருப்திகொண்டு அந்த பதவி உயர்வு ஏன் தனக்கு அளிக்கப்படவில்லை என நேரிலேயே சென்று விளக்கம் கேட்கலாம்..
பதில் எடக்கு மடக்கா இருந்தாலும் " எனக்கு உங்க பதில் திருப்தியில்லை.. மிக வருத்தம் .. இருந்தாலும் என் கடின உழைப்பு தொடரும் " என புன்சிரிப்போடு சொல்லி வர முடிந்தால் அதுதான் மிகப்பெரிய வீரம்..
அதை விடுத்து உன்னை என்ன செய்றேன் பார்.. உன்னை பத்தி எனக்கு தெரியாதா.. ?.. உன்னை எப்படி , எங்கே போட்டுக்கொடுக்கணும் னு எனக்கு தெரியும் என வெறிகொண்டு பழிவாங்க பேசித்திருவது மிக மிக அல்பமான கோழைத்தனம்..
நியாபகமிருக்கட்டும் கெட்டவார்த்தையோ கெட்ட செயலோ செய்வது வீரம் அல்ல.. அதை தாங்கிக்கொண்டும் கண்டுகொள்ளாமல் முன்னேறுவதே வீரம்...
ஆக இத்தகைய வீரம் தம்பதியினருக்கு இருந்தால்தான் குடும்பம் அமைதிபெறும்..
இல்லறத்தில் தோற்றுப்போக தயாராக இருப்பவர்களே அதிக வெற்றி பெருகிறார்கள்..
அவர்களை சுற்றியே குடும்பம் வலம் வரும் சூரியனை சுற்றுவது போல..
அதிக அன்பும் , அறிவும் இருப்பவர்கள் எப்போதும் விட்டுக்கொடுப்பவர்களாகவே இருப்பார்கள்...
நீங்கள் எப்படி.?...:)
படம் : நன்றி கூகுள்.
Wednesday, September 22, 2010
இருமனம் இணைவதும் பின் பிரிவதும் ஏன் - பாகம் 3


இந்த தொடரில் அடுத்த இரண்டாவது குணமான " அதிகாரத்தை கையிலெடுத்து ஆட்டிவிப்பது " குறித்து பார்ப்போம்...
2. அதிகாரம் /ஆளுமை..- நீயா ?.. நானா.?..
எனக்கான மதிப்பும் மரியாதையும் நான் அதிகாரம் செய்தால் மட்டுமே கிடைக்கின்றது என்ற ஒரு தவறான புரிதல்..
அன்பாலேயே ஆளுமை செய்ய முடியும்.. ஆனால் அதற்கு மிக அன்பும் பொறுமையும் தேவையாயிற்றே.. என்னால் பொறுமையால்லாம் இருக்க முடியாது..
நான் சொல்வதை உடனே இவர்கள் கேட்டாகணும்..அதற்கு ஒரே வழி அதிகாரம் செய்வது ஆளுமையை கையில் எடுத்துக்கொள்வது.
பள்ளி என்றால் ஒரு குழந்தையின் வித்யாசமான போக்கை வைத்தே கவனிக்கலாம்..பிடிவாதம் , ஆசிரியையிடமே எதிர்த்து/மறுத்து பேசுதல் , கத்துதல் , போன்றவை.
துணை விஷயத்தில் அல்லது அலுவலகம் என்றால் , ஒரு முக்கிய விஷயம் குறித்து பேசுமுன்னரே அது தமக்கு பிடிக்கவில்லை என்றோ, தேவையில்லை என்றோ நடக்காது என்றோ எதிர்மறையாக மட்டுமே பேசுவது...
பேசுபவர் நியாயமான கருத்தை சொன்னாலும் கூட அதை மறுப்பதிலே ஒரு ஆனந்தம்..ஒரு வெற்றி.. சில நேரம் அதுவும் வேலைக்காகாவிட்டால் மிரட்டும் தோரணை ஆரம்பமாகும்..
ஏதாவது வைத்து மிரட்டல் விடுவார்கள்.. " அடிப்பேன் " ." கவைனிச்சுக்கிறேன் " போன்ற வார்த்தையோடு..அது தனக்கே ஆபத்தாக முடியும் என புரியாமல்... தன் ஆளுமையை நிரூபிக்க மட்டுமே வீண் நேர விரயம் செய்வார்கள்..
இவர்களின் தொடர் மிரட்டலால் அலுத்து போன அலுவலர்களோ துணையோ, சலிப்புடன் விலகிக்கொள்வார்கள்.. இதனால் இறுதியில் அதிக சந்தேகமும், அதிக பொறாமையும் அதனால் அதிக கோபமும் மட்டுமே விளையும்...
ஆரம்பத்தில் தன்னோடு கூட இருந்து தமக்கு ஆதரவளித்தவர்கள் தன் வீரத்தை மெச்சியவர்கள், விலக விலக , இன்னும் அதிக ஆளுமை காட்ட கூட இருந்தவர்களையே மிரட்ட ஆரம்பிப்பார்கள்..
கிட்டத்தட்ட ஒரு மனநோய் அளவுக்கு அவர்களின் ஆளுமை பாதிக்கப்பட்டிருக்கும்..
வரம்பு மீறிய , முறைகேடான , கெட்டவார்த்தை பேச்சின் மூலமாவது அல்லது வதந்தி கிசுகிசு மூலம் கவன ஈர்ப்பு செய்து பின்பு அந்த ஆளுமையை தக்க வைக்க போராடுவார்கள்...
அவர்களின் சுற்றமும் அப்படியே அமைவது ஆச்சர்யமல்ல..
ஆக அமைதியாக இதை எதிர்கொள்ளும் துணையோ அலுவலரோ , எத்தனை அமைதியானவரானாலும் , பண்புள்ளவரானாலும் ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் இவரது செயல்களை வெளிக்கொணருவார்..
தண்டனை வழங்கினால் மட்டுமே திருத்த முடியும் என ஆசிரியர்/பெற்றோர் கூட தண்டிப்பதுமுண்டு தாங்க முடியாமல்..
ஆக தாங்க முடியாத ஆளுமை அதிகாரம் எத்தனை பொறுமைசாலியையும் கோபம் கொள்ள செய்யும்...எத்தனை தான் விலகி நின்றாலும்..
அப்படி ஒரு நடவடிக்கை எடுத்தாலும் ஆசிரியர் பெற்றோர் மேலுள்ள நியாயத்தை புரிந்துகொள்ளாமல் , " இந்த முறை அடங்கி போகிறேன்.. ஆனால் மீண்டும் என் ஆளுமையை நான் காண்பித்தே தீருவேன் " என தன்னையே புரிந்துகொள்ளாமல் தன்னையே அழித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றுவிடுவதுண்டு..
மற்றொரு வகையினர் உண்டு.. இவர்கள் மென்மையானவர்கள் தான்.. நியாயமானவர்களும்.. பள்ளியிலோ அலுவலகத்திலோ , வீட்டிலோ மிக பொறுமையாக , தாழ்ச்சியோடு அனுசரித்தே போகிறவர்கள்..
இவர்கள் தொடர்ந்து சிலரால் எரிச்சலூட்டப்படும்பொழுது , மட்டுமே தன் ஆளுமையை காண்பிப்பர்.. அதில் வெற்றியும் பெறுவர்..
" என்னடா இவரை ரொம்ப பண்பானவர், அமைதி னு எண்ணினோமே, இப்படி வெகுண்டெழுந்தாரே " னு ஆச்சர்யப்பட வைக்கும் அவரது செயல்கள்..
இது நேர்மறையான ஆளுமை அல்லது அதிகாரம்.. முற்றிலும் ஏற்ககூடியதே.. உதாரணமாய் , எப்பவுமே தன் அம்மா வீட்டுக்கு போக பிரியப்படாத துணை ஒரு முக்கிய விஷயத்துக்காக போகணும் னு சொன்ன போது ஏதாகிலும் முட்டுகட்டை போட்டால் , மிக நிதானமாய் கிளம்பி ஊருக்கு பயணிப்பார்..தன் ஆளுமையை காண்பித்து..
எப்போதும் மனைவி பேச்சை கேட்கும் துணை, திடீரென மனைவி பேச்சை மீறி தன் நண்பரையோ , அல்லது பிடித்த பொழுதுபோக்கவோ செல்வது..
சமத்தா எது கொடுத்தாலும் சாப்பிடும் குழந்தை பிடிவாதமாக ஒருநாள் சாப்பிட மறுப்பது...
இது போன்ற நேரத்தில் கொஞ்சம் விட்டு பிடித்தே ஆகணும் புரிந்துகொண்டு... அதுமட்டுமல்ல ஒருவரின் குணத்தை , போக்கினை முழுதுமாக மற்றொருவர் மாற்ற முடியாது என்பதையும் இதனால் புரிந்துகொண்டோமானால் , சகிப்புத்தனமையும் அனுசரிப்பும் வந்துவிடும்..
அதைவிட்டு ஒரளவு நியாயமாக யாருக்கும் தொந்தரவில்லாதவர்களை திருத்துகிறேன் என்ற நோக்கில் நாமும் அதிகாரத்தை கையிலெடுத்தால் அது விபரீதமாக முடியக்கூடும்...
ஆக ஆளுமையில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு... ஆனால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும்போதே பாதிப்புகள் அதிகம்...
இதில் சக்தி தேவையற்று வீணடிக்கப்படுகிறது..
இதுபோல் பல்வேறு நாட்டில் பல்வேறு அடிமைத்தனம் மூலம் பார்த்திருப்போம்..
பொதுவா தமிழ்நாட்டில் பெண்ணடிமை, கீழ் சாதி , பணக்காரன் ஏழை இத்யாதி...என்ற வித்யாசம் மூலமும் இதை நடைமுறைப்படுத்தியவர்கள் உண்டு.. இவை இப்ப வெகுவாக குறைந்தும் வருகிறது என்பது நல்ல விஷயம்..
அடுத்து பழிவாங்குதல் பற்றி பார்ப்போம்..
படம் நன்றி : கூகுள்
Tuesday, September 21, 2010
ஐடிசியில் உகாண்டா பெண்ணுடன் சந்திப்பு



கடந்த இரு வாரமாக ஐடிசிக்கும் , சிறைச்சாலைக்கும் செல்ல முடியவில்லை...
இந்த வாரம் எப்படியாவது சென்றே ஆகணும் என்று எண்ணினேன்..
அதே போல ஆலயத்தோழியிடம் சொல்லி நான் சந்திக்க இருக்கும் நபர்களின் விபரம் கேட்டேன்.
ஹிந்தி பேச தெரியுமா என கேட்டார்.... இல்லை ஆங்கிலமும் தமிழும்தான்..
ஹிந்தி சமாளிக்கும் அளவுதான் தெரியும்..
ஆங்கிலம், தமிழ் பேசும் அகதிகளை மட்டும் சந்திக்கிறேன் என்றேன்.
முன்பு சிறைச்சாலையில் சந்தித்த பாகிஸ்தானியரிடமும் ஆங்கிலத்தில் தான் பேசமுடிந்தது..
( இதுபோன்ற நேரங்களில்தான் ஏந்தான் ஹிந்தி படிக்காம விட்டோமோ னு வருத்தமா இருக்கும்.. )
போன முறை ஈழத்தமிழ்ப்பெண்ணை சந்தித்தேன்.. கூடவே ஒரு சிறுமியையும் , சிறுவனையும்...
ஒருவர் ஒரு நபரைத்தான் சந்திக்க முடியும்..
ஆனால் நான் காத்திருக்கும்போதே ஈழத்தமிழர்கள் சிலர் வெளியில் நம்மோடு அமர்ந்திருக்கையில், வந்து பேசி நட்பாகிடுவார்கள்..
9.30 க்கே நான் போய் படிவங்கள் எல்லாம் நிரப்பி கொடுத்தாலும் 10.30 க்குத்தான் உள்ளே உள்ள கதவை திறப்பார்கள்...
ஈழத்தமிழர்கள் பேசும் தமிழை கேட்பதே ஒரு இன்பம்.. மிக மரியாதையாகவும் தாழ்ச்சியோடும் இருக்கும்..
சில நொடிகளிலேயே அக்கா என அழைத்து உறவும் பாராட்டினால் கேட்கணுமா?..
நாம் ஏதும் பேச வேண்டாம் கேட்டுக்கொண்டிருந்தாலே போதும் .. அத்தனை துயரம் நிறைந்த கதைகள் ஒவ்வொன்றும்..
நான் போன முறை சென்ற போது இப்படி ஒரு தம்பி மீன் குழம்பு செய்து அக்குழந்தைகளுக்கு எடுத்து வந்திருந்தார்..
பெண்ணுக்கு 13, சிறுவனுக்கு 11 வயதாம்.. கடந்த 6மாத வாசம் ...
அக்கா அவளோடு பேசுறீயளா ?. னு கேட்டதும் சரின்னு சொன்னேன்..
சில சாமான்களை உள்ளே வரை கொண்டு தரும்படியும் கேட்டார்..
நான் என் தோழியிடம் அனுமதி கேட்டேன் .. அவர் சிங்களவர்.. மிக நல்ல பெண்மணி..சேவைக்காக தன் வசதியான வாழ்க்கையையே விட்டு வந்தவர்.
அவர் சரின்னு சொன்னதும் அந்த தம்பியிடம் 2 பெரிய பைகளை வாங்கிக்கொண்டேன்..
எல்லா வகையான பரிசோதனைகளும் செய்துதான் உள்ளே அனுமதிப்பார்கள்..
நம்முடைய பாஸ்போர்ட் டிரைவிங் லைசென்ஸ் எல்லாம் வாங்கி வைத்துக்கொள்வார்கள்..
நான் சந்திக்க வேண்டிய ஈழப்பெண்ணை சந்தித்த பின் அக்குழந்தைகளை எனக்கு அறிமுகப்படுத்தினார்..
அதுவரை மிக துணிச்சலாக இருந்த நான் நொறுங்கிப்போனேன் ..
அவர்கள் முன்னால் கண்ணீர் சிந்தக்கூடாது என முகத்தில் ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டு பேசினேன்..
இருப்பினும் முடியவில்லை... என் குழந்தைகளே உள்ளே இருப்பது போல் ஒரு பிரமை...
மற்றொரு முக்கியமான கஷ்டம் என்னவென்றால் கிட்டத்தட்ட 50 பேரை ஒரே நேரம் இரு கம்பி வலை தடுப்புக்கு பின்னால் இருந்து பேச சொல்வார்கள்..
பல்வேறு நாட்டினர் , பல்வேறு பாஷைகள் என கூச்சலும் குழப்பமுமாய் இருக்கும்..
நாம் பேசுவது அந்த பக்கமுள்ளவருக்கு கேட்காது..
அவர் வாயசைவை வைத்தே அவர் என்ன சொல்ல வருகிறார் என கூர்ந்து கவனிக்கணும்..
ஏற்கனவே நொந்து போய் இருக்கும் அவர்களை மேலும் கத்த சொல்லி கொடுமைப்படுத்துவதாய் தோணும்..
இருந்தாலும் யாருமே பார்க்க வரமுடியாத அயல்நாட்டில் இப்படி யாராவது வந்து பேசுவது அவர்களுக்கு மிக மகிழ்ச்சியான விஷயம்..
ஒரே நேரம் ஒரு அறையில் 600 பேருக்கும் மேலாக கூட அடைத்ததுண்டாம்..
படுக்க முடியாமல் இடுக்கிக்கொண்டு உட்காரணுமாம்..
நம்பவே முடியாத அளவுக்கு இருக்கு அவர்கள் விவரிக்கும் ஒவ்வொண்ணும்..
ஒருவர் மேல் ஒருவர் படுப்பதுண்டாம்..
வாயில் வைக்க முடியாத உணவாம்..சோப்பு , ஷாம்பு, லோஷன், நாப்கின் ஏதுமின்றி பெண் பிள்ளைகள் சிலருண்டாம்.
இப்படி யாரவது சொந்தமோ நட்போ இருந்தால் அவர்கள் பிழைத்துக்கொள்வர்..
அதிலும் ஒரு ஆளுக்கு இவ்வளவுதான் எடை னு பொருள்கள் தர முடியுமாம்..
அதே தம்பி அடுத்த முறை பொருள்கள் எடுத்து செல்லும்போது பிடிபட்டாராம்.. பவுடர் டப்பாவுக்குள் செல் போன் பேட்டரி இருந்ததை
காவலர் கண்டுபிடித்து விட்டனர்.. அவ்வளவுதான் இனி அவர் போகவே முடியாது சந்திக்க...
இது எனக்கு எச்சரிக்கையும்.. நான் இனி ஒருபோதும் அடுத்தவருக்காக இரக்கப்பட்டு பொருள்களை உள்ளே கொண்டு செல்லமாட்டேன்...
வேணுமென்றால் பணமாக கொடுக்கலாம்...உள்ளே கடை உள்ளது விலை அதிகமென்றாலும் தேவைப்படும் போது வாங்கிக்கொள்ளலாம்..
நான் இன்று சந்தித்த உகாண்டா நாட்டு பெண் 21 வயது..
கூட படித்த சிவிட்சர்லாந்து பெண்ணொருத்திக்கு வாடகை தாயாக முடிவு செய்து ட்ரீட்மெண்டுக்காக தாய்லாந்து அழைத்து வரப்பட்டிருக்கிறாள்.
இங்கு ஒரு நல்ல ஹோட்டலில் வைத்து பரிசோதனைகளும் நடந்திருக்கு...ஆனால் இவளுக்கான விசா முடிந்து விட இமிகிறேஷனில் மாட்டிக்கொண்டார்..
அந்த பெண் சுவிஸ் சென்றுவிட்டாராம்.. நல்ல பெண் என்றே கூறுகிறார்.. தான் படிக்க அவர்தான் உதவினாராம்.
இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை..
இப்போது ஆலயம் மூலமாக அவளை உகாண்டாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார்கள் போல..
கடந்த 5 மாதமாக பித்து பிடித்தவளாய் இருக்கிறேன் என்கிறார்.
நீ சீக்கிரம் உன் நாட்டுக்கு திரும்ப ஏற்படு செய்கிறார்கள் என்றதும் முகத்தில் கொஞ்சம் பரவசம் , மகிழ்ச்சி..
கொஞ்சம் துணிவையும் , ஊக்கத்தையும் கொடுத்து அவரை மகிழ்விக்க வேண்டியதாயிருந்தது...
தன் பெற்றோர், தன் தம்பி, தங்கைகளுக்காக இந்த வாடகை தாய் வேலைக்கு சம்மதித்ததாக சொன்னார்...
இப்படி வந்து ஐடிசி யில் கிடப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை..என வருந்தினார்..
இப்படி எத்தனை எத்தனை பேர் உலகில் காரணமில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்..?
பணத்துக்காக முன்பின் அறியாதவரிடம் உயிரையே பணயம் வைக்கும் தேவைக்கு எதனால் தள்ளப்பட்டார்கள்..?
ஒருபோதும் தீராத பல கேள்விகளோடு விடைபெற்றேன்...
படம் : நன்றி கூகுள்
Monday, September 20, 2010
தெய்வக்குழந்தைகள்..



சரி இப்ப என்ன விஷயம்னா , பூங்காவுக்கு அழைத்து செல்வதென்பது நம் குழந்தைகளை விளையாட வைக்க மட்டுமல்ல. தாய் மக்கள் குடும்பத்தோடு வந்து குழந்தைகலோடு விளையாடி மகிழ்வதை காணவும்தான்.
தெய்வக்குழந்தைகள்..
வாரம்தோறும் எங்கு போகிறோமோ இல்லையோ பூங்காவுக்கு அழைத்து சென்று சருக்கு , ஊஞ்சல் , பந்து , சைக்கிள் என ஆடி ஓடி
ஓய்ந்து போய் வரணும்..
பெரியவர் முதலிலேயே சென்றிடுவார் சைக்கிளில்...கூடை பந்து விளையாட...
நாங்க பின்னாலே சென்று விளையாடிவிட்டு வரும்போது சைக்கிளை ஓரிடத்தில் நிப்பாட்டி விட்டு எம்கூட வருவார்..
நம் ஊரில் இப்படி சைக்கிளை பூட்டி வைத்தாலும் மீண்டும் இருக்குமா என்பது சந்தேகம்.
இங்கு எத்தனை நாளானாலும் அப்படியே இருக்கும்..
குழந்தையோடு குழந்தையாக , பெற்றோர் இருவரும் , பந்து , இறகுப்பந்து , சைக்கிள் என சிரித்துக்கொண்டே விளையாடுவதை பார்க்கும்போது ஒரு மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக்கொள்ளும் இலவசமாக...
சின்னவர் பூங்கா செல்லும்போது எல்லாவற்றையும் அள்ளி போடுவார்.. கிரிக்கெட் மட்டை , ஹாக்கி மட்டை , பந்துகள் 4 , ரிங், பூமராங் , ரோலர் ஸ்கேட்டிங் சைக்கிள்.. சப்பு சவருன்னு எல்லாம் ..
என்னமோ அத்தனையையும் விளையாடிவிடுவது போல..
முதலில் கிரிக்கெட் விளையாட ஆரம்பிப்பார்.. அவர் எப்பவும் பேட்ஸ்மேன்.. நாந்தான் பவுலிங்.. பந்தை சரியா அடிச்சுட்டா ஒரு பெருமிதமா சிரிப்பு சிரிப்பார்.. அப்பா கை தட்டணும்.. ஆனா பந்தை அடிக்க முடியலையோ , அம்மாவுக்கு பந்தை சரியா போட முடியலைன்னு பிராது வந்திடும்...
கிரிக்கெட் விளையாடுவதை அதிசயமாக சுற்றி உட்கார்ந்து தாய் மக்கள் ( முக்கியமா பசங்க ) பார்ப்பாங்க.. தாய் மக்களுக்கு பிடிச்சது கால்பந்து தான்..
எங்கே பார்த்தாலும் அதுதான் இங்கே பிரபலம்..
இவன் அடிக்க அடிக்க அந்த பசங்க ஹோ னு சத்தம் போட்டு ஊக்குவிப்பார்கள் கை தட்டி.. கேட்கணுமா பெருமை முகத்தில் வழியும்..:)
அடுத்து கால்பாந்து .. நான் கொஞ்சம் வேகமா அடிச்சாலோ , இல்லை வேறு பக்கம் அடித்தாலோ கோபம் வந்திடும்.. முகத்தை தூக்கி வைத்துக்கொள்வார், கை இரண்டையும் கட்டிக்கொண்டு.. இதை பார்த்து அந்த தாய் பசங்க விழுந்து விழுந்து சிரிப்பார்கள்..
ஏனெனில் தாய் மக்களுக்கு கோபம் னா என்னன்னே தெரியாது அது நம்ம இந்திய சொத்தல்லவா?..
அவன் கோபமும் அவன் முக கோணலும் அவர்களுக்கு பயங்கர சிரிப்பை வரவழைக்கும்..
அதே போல ஊசி போடும்போதும் இங்குள்ள குழந்தைகள் அப்படி ஒண்ணும் பெரிதாக அழுவதில்லை.. வலியில் கண்ணீர் வந்தாலும் கத்துவதெல்லாமில்லை.. ஆனா இவன் ஊசி போடுமுன்னே ஊரை கூட்டுவான்...
என்னை வெளியே போக சொல்லி 10 பேர் சேர்ந்து கட்டிபிடித்து அமுக்கி ஊசி போடணும்.. அப்பவும் விழுந்து விழுந்து சிரிப்பாங்க... அடக்க மாட்டாமல்.. ஏதோ ஏலியனை பார்த்ததுபோல்...:)
கீழே வழுக்கி விழுந்தாலும் முதலில் சிரிப்புத்தான்.. விழுந்தவனும் சிரிச்சுக்குவான்.. வந்த புதிதில் என்னடா இது சரியான லூஸுப்பசங்களா இருப்பாய்ங்களோன்னு நினைத்ததுண்டு.. இப்ப அதிலும் நாங்களும் ...
முக்கியமா சொல்ல வந்த விஷயத்தை விட்டு வண்டி எங்கோ போய்விட்டது..
அருமையான விஷயம் என்னவென்றால் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை அழைத்து வருவார்கள்.. அக்குழந்தையை அவர்கள் குடும்பத்தினர் மட்டுமல்ல எல்லோருமே சேர்ந்து கொஞ்சி மகிழ்ந்து விளையாடுவார்கள்..
ஆக ஒரு மனவளர்ச்சி குழந்தை இருந்தால் இங்கே தெய்வமாக கொண்டாடப்படுகிறது ..
அக்குழந்தையை எல்லா குழந்தையும் போல சாதாரணமாக விளையாட விடுவார்கள்.. இப்படி செய்வதால் சில நாளில் அக்குழந்தைகள் சாதாரண நிலைமைக்கு வருவதுமுண்டாம்..
எங்க ஆலயத்தில் இப்படி ஒரு பெண் உண்டு.. அவருக்கு பிரசங்கம் நடக்கும்போது ம் நன்மை( நற்கருணை ) எடுக்கும் போதும் வரிசை ஒழுங்கு படுத்தும் வேலை கொடுத்துள்ளார்கள். அவர் மிக அழகாக புன்னகையோடு அதை செய்வார்..
ஆலய வேலைகள் செய்வது எல்லோருமே வாலண்டியர்ஸ் தான்..
இப்படியான பொறுப்புகள் கொடுக்கும்போது அவர்கள் பெரும் முக்கியத்துவமே அவர்களை முன்னேறவைக்கும்... தாமும் மற்றவர்போல் சாதாரணம் என்ற எண்ணம் வரும்.. சங்கோஜமில்லாமல் பழக முடியும்.. ஒரு போட்டி வரும்..
எளிதில் கற்றும்கொள்வார்கள்..
சின்னவர் விளையாடும்போது அவனிடம் வந்து அக்குழந்தை பந்து கேட்டது.. இவர் கொஞ்சம் வெட்கப்பட்டுக்கொண்டே கொடுக்க , அதை வாங்கி திரும்ப இவனிடமே எறிய , இவனை விளையாட அழைத்தது..
நாங்கள் ஊக்குவிக்கவும் இவரும் அக்குழந்தைக்கேற்றார்போல சிறிது நேரம் விளையாடினார்..
அப்பதான் நாம் எத்தனை பாக்கியம் செய்திருக்கோம்னு புரியுது..இதை கூட இப்படி சொல்லிக்கொள்ளலாமான்னு தெரியலை..
அதே போலொரு குழந்தை கிடைத்திருந்தாலும் நான் மனமுவந்து ஏற்றிருப்பேன் .. அதுவேறு விஷயம்..
( என் பிரசவத்தின்போது இதுபோல ஒரு குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறதென்றும் ( Down syndrome ) என்னிடம் மருத்துவர் சொன்னதும் அதற்கான பரிசோதனை செய்யவே மாட்டேன் என பிடிவாதம் பண்ணியதுமுண்டு. அப்பரிசோதனை கருவில் இருக்கும் குழந்தையை சேதப்படுத்தும் வாய்ப்பு அதிகமாம்.... )
இருப்பினும் அக்குழந்தைகளை கவனிப்பதென்பது நிச்சயமாக சவாலான விஷயம்.. தனி அர்ப்பணிப்பு தேவை..அதிக பொறுமையும்..
அது நிச்சயமா என்னிடம் இருக்குமான்னு சந்தேகம்தான்..
கிளம்பும்போது அக்குழந்தையிடம் பந்தை கொடுத்துவிட்டு வணக்கம் சொல்ல சொல்கின்றனர்.. அப்போதும் அவர்கள் முகத்தில் சந்தோஷமான புன்னகை.. நன்றியும்...
குழந்தையின் முகத்திலும் ஒரு உறவினை கண்ட மகிழ்ச்சி.. அக்குழந்தையும் இருகரம் கூப்பி மிக அழகான " ஸ்வாதிகாப் " ( வணக்கம் ) என சிரம் தாழ்த்தி சொன்னது..
மகன் வரும்போது கேட்கின்றார் " அம்மா என்னாச்சு அந்த குழந்தைக்கு ?."
" அவர்கள் கடவுளின் மிக விசேஷமான செல்லக்குழந்தைகள்.. " என விளக்க ஆரம்பித்தேன்..
ஆக பூங்கா செல்வதென்பது விளையாட்டு மட்டுமல்ல படிப்பினையும் ஆகிறது குழந்தைகளுக்கு...
இது போன்ற சம்பவங்கள் நாம் பெற்ற ஆசீர்வாதங்களை எண்ண வைப்பதோடு நாம் இன்னும் செய்யவேண்டிய நல்ல விஷயங்களை குறித்து நியாபகப்படுத்தி ஒரு குற்ற உணர்ச்சியை தந்திடுகிறதுதான்...
படம் : நன்றி கூகுள்.
Subscribe to:
Posts (Atom)
