Tuesday, June 10, 2008






பரபரப்பூட்டும் மலை, அருவி, காட்டாறு விளையாட்டுகள் பாகம் ‍ 4*


மலைமேலே விளையாட்டுகள்..
முதலில் நாங்கள் சென்றது, மலையிலிருந்து கீழே சருக்குவது.. ஒரு மிதவைமேல் படுத்துக்கொண்டு.. உண்மையிலேயே பயம் . ஏனேன்றால், அந்த மிதவை குப்புற கவிழுமோ என்ற பயம்.. பையன் மட்டும் சென்றான்..நான் உற்சாகப்படுத்தியதில்...மீண்டும் மேல வந்தவன் , " அம்மா நல்லாருக்கு " எனவும், சரி நீயேஇன்னோரு முறை எனக்கு பதிலாக போ என அனுப்பினேன்..
கிட்டத்தட்ட 7 மாடி உயரத்திலிருஃது நீண்ட பிளாஸ்டிக் ஷீட் விரித்து அதில் இந்த மிதவையை தள்ளிவிடுகிறார்கள், அது வழுக்கிக்கொண்டே செல்ல கூட தண்ணீரும் தெளிக்கிறார்கள் அங்கங்கே.. அதை கவனிப்பது ஒரு கர்ப்பிணி பெண்.. அவள் ஒருமுறை தண்ணீரி பைப்பை எடுக்க அது சீரிக்கொண்டு அவள்மேலேயே தண்ணீரை கொட்ட, அடுத்த பாவம்...கொஞ்சம் கவனக்குறைவென்றாலும் அவள் வழுக்கலாம்...
ஏன் இந்த இடத்தில் வேலை பார்க்கிறாள் என்று எனக்கு வருத்தம்..அதுவும் கர்ப்ப காலத்தில்..
அது முடிந்ததும் , அதே போல் ஒரு மிகப்பெரிய பந்து , அதனுள்ளும் தண்ணீர் செலுத்தி, ஆளையும் செலுத்தி, மூடி விட்டு மலையிலிருந்து சருக்கில் உருட்டி விடுகிறார்கள்.. இது பயங்கர சிரிப்பாயிருந்தது... உள்ளே உள்ள ஆள் கண்டபடி புரட்டி போடுது , முகத்தில் தண்ணீர் வேறு பாய்கிறது.. வேகம் வேறு.. விழுந்து விழுந்து சிரித்தேன், எல்லாரும் என்னை ஒருமாதிரியாக பார்த்தாலும்.. ( சில நேரம் சிரிப்பை அடக்கமுடியாது.. அடக்க அடக்க வெடிக்குது..ஏன் என தெரியலை..)
நேரமாச்சு குழந்தை பற்றி விசாரிக்க , தகவல் சொல்ல ,என கைபேசியில் கணவரை அழைத்தால் செல்லமாட்டேங்குது.. நெட் ஒர்க் பிரச்சனை போல..சோதனை இப்படித்தானே வரும்..
அடுத்து ஃபிளையிங் ஃபாக்ஸ் அன கயற்றில் மலை உச்சியில் இருந்து தொங்கிக்கொண்டே கீழே இறங்குவது...8 80 வயது வரை செல்லலாம் பயமில்லை...
அடுத்து நீரில் சருக்கு... மேலே ஒரு படகில் ஏறி சடாரென்று கீழே நீரில் இறங்குவது..இதெல்லாம் பழசு..
அடுத்து கார்ட் க்ராஸ்.. இதுக்கு பையனை அனுப்பலாம் என்றால்
" உங்க பையன் வயது என்ன?.18 க்கு மேலே கீழா?." ஒருவேளை இது சின்னப்பசங்களுக்கு மட்டும் போல என எண்ணி, " ஹிஹி 18 க்கு கீழே " என்றேன்..
" அய்யோ மன்னிக்கவும் , முடியாதே." எனவும்,
" ஆனா அவன் நல்லா ஓட்டுவான் " நம்பிட்டாங்க.. அவன் பார்க்க 20 வயசு பையன் போல் இருக்கான்.. , 12 வயதுக்காரன்..
" சரி அப்ப நீங்களும் அமருங்கள்.. "
"அடப்பாவமே இது என்ன சோதனை...சரியென்று நானும் ஹெல்மெட் போட்டு நானே ஓட்டினேன்..பையனுக்கு ஓட்ட முடியவில்லை என வருத்தம்...
ஒருவழியா முடிந்து மீண்டும் ரயில் வண்டி ஏறி வர, எதிர்வண்டியில் சின்னவனும் அப்பாவும்.. ஹஹஹா
திரும்பி அவர்கள் வரும் வரை கடையில் சென்று சூடா காஃபி குடிக்க சென்றோம்..
பையன் சூடா சூப், நான் 2 காஃபி தயாரிக்க, கணவர் குழந்தையுடன் வந்து சேர்ந்தார். அவரை படுத்தி எடுத்துவிட்டானாம், அம்மாவை தேடி..ஏன் போன் , பேசலை?. , 1001 கேள்விகள்...
" சரி எதுக்கு 2 காஃபி.?. எனக்கு வேண்டாம்.."
" ஹிஹி.. நன்றிங்க.. இது ஓட்டுனருக்கு.. பாவம்.. மழைவேறு..அசதியாயிருப்பாரே.."
" அவர் இதெல்லாம் குடிக்கமாட்டார்.."
நான் சென்று குடுத்ததும் சந்தோஷமாக வாங்கிக்கொண்டார்..பெரியவனுக்கு ரொம்ப சந்தோஷம்.. " ரொம்ப நன்றிம்மா. நீங்க ரொம்ப நல்ல அம்மா" , என கொஞ்சினான்..
" ஆமா , இப்ப இப்படி சோலு, படிக்க சொன்னா மட்டும், கோச்சுக்கோ"
" சாஆஆஆரிம்மாஆஆ"மறுபடியும் கொஞ்சல்..
அதோடு போட்டிபோட்டு சின்னது முத்த மழை பெய்து கொஞ்ச, அப்பாவுக்கு கோவம் வருது..
" என்னதான் நான் கவனித்தாலும் , பாரு 2ம் உன்கிட்டதான் வருது...என்னவோ வசியம் பண்ற..ஊரிலுள்ளவர்கள் மேலெல்லாம் பாவம் பார்க்க என்னவிடுத்து..என்கிட்ட இருக்காமல் அம்மா என்று தேடுகிறான் சின்னவன்.."
அங்கேயே தங்குவதற்கும் அழகான கூடரங்கள், விடுதிகள் உள்ளன.
எல்லாம் முடிந்து அசதியுடன் கிளம்பும்போது எஸ் எம் எஸ் வருது..
அலுவலகத்திலிருந்து, மடல் பார்க்கச்சொல்லி...
எல்லோரும் வீடு வந்து சேரும் வரை நன்றாக தூங்க, சின்னவன் ஏற்கனவே தூங்கிவிட்டதால் என்னுடன் விளையாடிக்கொண்டே ,பேசிக்கொண்டே வர, எனக்கு மட்டும் அசதி..
வந்ததும் மடல் பார்த்து பதில் அனுப்பி, குளித்து , ஒதுங்க வைத்து படுத்ததுதான் தெரியும்.. தூக்கம் இழுத்துக்கொண்டு சென்றது..
சில விளையாட்டுகள் ஆபத்தானவை, நம் உடல் நலம் தெரிந்து விளையாடணும்.. எனக்கு சிறு வயதிலிருந்தே இதில் ஆர்வமிருந்ததால் , பிள்ளைகளை பழக்கும் பொருட்டு, கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் செயல்பட்டேன். படிப்பவர்கள் தயவுசெய்து எளிதாக எண்ணவேண்டாம்... என்னுடைய network வேலையும் அப்படி, மேலும் , நானும், வீட்டுக்காரரும், விளையாட்டுகளில் அதிகம் பங்கேற்றதால் , அடிவாங்கியதால்,கொஞ்சம் பயம் குறைவு.. அவ்வளவே. குழந்தைகளை சிறு வயதிலேயே பயம் போக்கி, வளர்ப்பது நல்லது.. அதற்கான சிறு முய்ற்சி இது...
வாசித்தவர்களுக்கும், பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள்..





பரபரப்பூட்டும் மலை, அருவி, காட்டாறு விளையாட்டுகள் பாகம் ‍ 3



அடுத்ததாக நாங்கள் செல்ல வேண்டிய இடம், மலை அருவியிலிருந்து கயறு கட்டி கீழே இறங்குவது...தேடினோம் வந்தது... அப்போதுதான் ஞாபகம் வந்தது , பணம் எடுக்கவேண்டும்.. எடிஎம் இயந்திரம் அங்கு இல்லை.. ஊருக்குள் தான் வரணும்... 30 கி.மீ ஊருக்குள் வந்து திரும்பி சென்றோம்.. மலையழகை ரசிப்பதிலேயும், சரக்கொன்னை, பூமரங்கள் ( flame of forest ) வழி நெடுகிலும் பந்தல் போட்டதுபோல் இருந்த அழகும், வயல்வெளியும், அதில் உள்ள தனித்தனி பண்ணை வீடுகளும், குதிரை லாயங்களும், ஏறி இறங்கி மீண்டும் ஏறி இறங்கி வளைந்து செல்லும் சாலையும்,மிக அழகு..க‌ண்ணுக்கும் , ம‌ன‌துக்கும் குளிர்ச்சி..

அருவியிலிருந்து க‌ய‌று க‌ட்டி இற‌ங்கும் இட‌த்துக்கு வ‌ந்தால் அருவியும் இருக்கு, கீழே ஓடையும் இருக்கு ஆள்க‌ள்தான் இல்லை... காலில் ஷூ மாட்டிக்கொண்டு ப‌ந்தாவாக‌ இற‌ங்கி விசாரித்தால் வார‌த்தில் 3 நாள் ம‌ட்டுமே விளையாட்டு உண்டாம்... ச‌ரியான‌ ஏமாற்ற‌ம்...என‌க்கும் பெரிய‌வ‌னுக்கும்.. அப்பாவுக்கு குஷி கேக்க‌ணுமா?..
ச‌ரி இன்னும் இதே போன்று இட‌ம் வேறு க‌ண்டிப்பாக‌ இருக்கும் என்று ஆறுத‌ல்ப‌டுத்திக்கொண்டு, முய‌ற்சி உடையார் இக‌ழ்ச்சி அடையார் போல், பாதையெங்கும் விள‌ம்ப‌ர‌ப்ப‌ல‌கை பார்த்துக்கொண்டே வ‌ந்த‌தில் ஒரு விளையாட்டு (அம்யூஸ்மென்ட் ) பூங்கா க‌ண்ணில் ப‌ட்ட‌து..
குழ‌ந்தை தூங்கிவிட்டான்.. " பெரிய‌வ‌னுட‌ன் நீங்க‌ போறீங்க‌ளா , இல்லை நான்?."

" அய்யோ ஆள‌ விடும்மா... நான் காரிலேயே இருக்கிறேன் குழ‌ந்தை பார்த்துக்கொண்டு.."

நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு வ‌ந்தால் ஒரு நீள ர‌யில் வ‌ண்டி த‌யாராய்.. அங்கிருந்து ம‌லைக்குள் 3 கி.மீ செல்ல‌ணுமாம்.. பைய‌னுக்கு எங்கே உட்காருவ‌து என்று குழப்பம்... முன்னால‌, இல்ல‌ இல்ல‌ , பின்னால‌..
" வேண்டாய்யா, ந‌டுவில் உட்கார‌லாம், ம‌ழை வ‌ந்தாலும் வ‌ரும்..."
" இல்ல‌ம்மா, வாங்க‌ முன்னால்.."

ஏறி உட்கார்ந்து வ‌ண்டி கிள‌ம்பிய‌தும், ம‌ழை சோரென்று அடித்து பெய்த‌து, முக‌த்தில்.. முழுதும் ந‌னைந்தோம்.. என் கைபேசியை ம‌ட்டும் நனையாம‌ல் பார்த்துக்கொண்டேன்.. டிக்கெட், பணம் அனைத்தும் நீரில்.குளிர் தாங்க‌ முடியாம‌ல் டைப் அடிக்குது விர‌ல்க‌ளும், உத‌டுக‌ளும்..

.மேக‌ங்க‌ள் எங்கள்மேல்பட்டு விரைவாக‌ க‌ட‌ந்து செல்லுது...அடுத்த‌ சிறிது தூர‌த்தில் வெயில் அடிக்குது... ம‌ழை நின்று.. ஆச்ச‌ர்ய‌மாய் இருக்குது..வ‌ண்டி ஏற்ற‌ இற‌க்க‌த்தில் ர‌ம்மிய‌மான‌ தாய் பாட‌ல்க‌ளுட‌ன், க‌வ்பாய் ஸ்டைலில் போகுது..

அனைவ‌ரும் க‌வ்பாய் போல‌ உடையும்.. எதோ அவ‌ர்க‌ள் கூட்ட‌த்தில் இருப்ப‌துபோல‌ உண‌ர்ச்சி..

எல்லோரும் ம‌ழையிலும் பாட்டுபாடி கைத‌ட்டிக்கொண்டு..என‌க்கோ த‌லையிலிருந்து த‌ண்ணீர் (+ முகத்தில் அசடு) சொட்டுகிற‌து துடைக்க‌கூட‌ துணியில்லாம‌ல்...பைய‌னுக்கோ குஷி..ம‌ழையில் ந‌னைவ‌து... ( பின்னால் பாடு என‌க்குத்தானே?.)
இப்ப‌ எதை விளையாடுவ‌து என்று.????..

விட்டு விட்டு ம‌ழை.



ஆனாலும் விளையாட்டு ந‌ட‌க்குது...

கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டே விளையாட்டை நடத்தும் பெண் ஊழியர்களும் ..பாவமாயிருக்கு .." "அம்மா, பாவம் 3 ஹிஹி."


ச‌ரி என்று ஒவ்வொன்றாக‌ போனோம்...
நாளை க‌டைசி பாக‌த்தில் விளையாட்டுக‌ள்....

*************************************தொட‌ரும் க‌டைசி பாக‌ம்********
ப‌ர‌ப‌ர‌ப்பூட்டும் காட்டாறு , ம‌லை , அருவி விளையாட்டுக‌ள் ‍ பாக‌ம் 2

தலை குப்புர விழுந்ததும் எழலாம் என்றால் தண்ணீர் இழுக்கிறது... அப்போதுதான் சின்னவன் ஞ்ஜாபகம் வருது.. எங்கே சத்தத்தையே காணோம்.. அப்பாவும் மகனும் சுமார் 30 அடி தூரத்தில் , பத்திரமாக எழுந்து நிற்கிறார்கள்...என்னையும் பெரியவனையும் மட்டும் இழுத்து வந்துள்ளது தண்ணீர்.. ( ஆமா கொஞ்சம் கனம் அதிகம்..)
அங்கங்கே வலிக்குது , ஆனா எங்கெங்கேன்னு தெரியலை..
தண்ணீரில் எதிர்த்து சின்னவன் கிட்ட போனோம்... பேயரைந்தது போல் அப்பா..

" அப்பா, ஒன்னுல்ல‌, அப்பா, ஒன்னுல்ல‌, " என்று ஆறுத‌ல்ப‌டுத்துகிறான் குழ‌ந்தை...
ஏதோ எல்லாரும் உயிரோட‌தான் இருக்கோம் என்று ச‌ந்தோஷ‌ம்...ஆழ‌ம் அதிக‌மில்லை...
அத‌ற்குள் க‌விழ்ந்த‌ ப‌ட‌கை திருப்பிப்போட்டு ஏறும்போது தேடுகிறான் ப‌டகின் துடுப்பை..
அது கோவித்துக்கொண்டு விரைவாக‌ செல்லுது.. மீன் போல் ஒரே பாய்ச்ச‌லில் நீந்தி அதை எடுக்கிறான் ப‌ட‌கோட்டி..
ஒருவ‌ழியாக‌ மீண்டும் ஏறி உட்கார்ந்தோம்.. அப்போதுதான் யார் யாருக்கு என்னென்ன‌ காய‌ம் என்று லிஸ்ட் த‌யாரித்தோம்.. பாவ‌ம் அவ‌ருக்கு கை முழ‌ங்கையில் அதிக‌ சிராய்ப்பு.. என‌க்கு காலில்... பிள்ளைகளுக்கு ஒன்றுமில்லை க‌ட‌வுள் கிருபையால்..( இருந்தாலும்தான் என்ன‌.. ப‌ழ‌க‌ட்டும்)
என் காலில் ர‌த்த‌ம் பார்த்து கூச்ச‌லிடுகிறான் ம‌க‌ன்..
" ஐய‌ இது ஜூஜூபி.. நானெல்லாம் சின்ன‌ வ‌ய‌சுல..."
" அய்யோ ஆஅர‌ம்பிச்சுட்டாளா உங்க‌ அம்மா?.. இதுக்கு நான் த‌ண்ணீரிலேயே இருப்பேனே.."

ச‌ரி ஏற்கென‌வே வெந்த‌ புண்ணில் வேல் , ஞாய‌மில்லைதான் என்று நிப்பாட்டிக்கொண்டேன் என் பிராத‌ப‌ங்க‌ளை..
ஒருவ‌ழியா இப்ப‌ அடுத்து வ‌ந்த‌ 10 ப‌டிக‌ளையும் உல‌க‌ க‌ட‌வுளை வேண்டிக்கொண்டு ம‌றுப‌டியும் விழாம‌ல் வெற்றிக‌ர‌மாக‌ வ‌ந்து சேர்ந்தோம்.
அந்த‌ ஆற்றின் இரு க‌ரையிலும் வ‌ள‌ர்ந்த‌ ம‌ர‌ங்க‌ள் த‌ன் அக‌ன்ற‌ கிளைக‌ளை , நீரில் ப‌ர‌ப்பி விளையாட‌, அத‌னூடே நாங்க‌ள் செல்லும்போது எங்க‌ளையும் கொஞ்ச‌ம் பிடித்து கொஞ்சிய‌தில், சின்ன‌வ‌னுக்கு க‌ன்ன‌த்தில் சிராய்ப்பு..
இடையில் திடீரென்று பெரிய‌வான் " அப்பா உங்க‌ க‌ழுத்தில் பூச்சி " என்று ஏதோ டைனோச‌ர் இருப்ப‌துபோல் க‌த்த‌, நானும் ப‌ய‌ந்துபோய் பார்த்தால் ஒரு சின்ன‌ வ‌ண்டு...
பிள்ளைக‌ளுக்கு பூச்சி, எறும்பு கூட‌ பார்ப்ப‌து அரிதாகிக்கொண்டே வ‌ருகிற‌தே...
ப‌ட‌கோட்டி ம‌ட்டும் துடுப்பு போட‌, என் அருகில் இருந்த‌ துடுப்பை எடுத்து நானும் போட‌,
" நீ பேசாம‌ இருக்க‌மாட்டியா.. உன‌க்கு தெரியாது.."
" இல்லீங்க‌ அவ‌ன் பாவ‌ம்... ஒரு ஆள் எப்ப‌டி த‌னியாக‌ "
" பாவ‌ம் பார்க்க‌ ஆர‌ம்பிச்சுட்டீயா...இனி எங்க‌ளை ஒழுங்கா போய் சேர்க்க‌ மாட்ட‌.." பாவ‌ம் 1 என்று எண்ண‌ ஆர‌ம்பித்துவிட்டார்.
" இல்ல‌ அங்க‌ பாருங்க‌ ம‌த்த‌ ப‌ட‌கில் எல்லாரும் துடுப்பு போடுராங்க‌..நாம‌ளும் போட‌ணும்.. என‌க்கு ஆசை என்று விடுங்க‌ளேன் " உண‌மையில் பாவ‌மாயிருந்த‌து.. நானும் போட‌ ம‌க‌னும் போட‌, எளிதாக‌ இருந்த‌து...
ப‌டிக‌ள் வ‌ரும்போது நான் கொஞ்ச‌ம் பேல‌ன்ஸ் ப‌ண்ணி ப‌ட‌கை திருப்ப‌, அது ச‌ரியாக‌ இற‌ங்கிய‌து.. ஆனா இவ‌ர்க‌ள் ப‌ய‌ம்தான் தாங்க‌முடிய‌வில்லை..." அம்மா, ஆடாம‌ அசையாம‌ இருங்க‌ என்று.."
ஒருவ‌ழியா க‌ரை வ‌ந்த‌தும் ஒரு வாலிப‌ கூட்ட‌ம் கொஞ்ச‌ம் எங்க‌ளை பொறாமையாக‌ பார்த்த‌து.. நாங்க‌ள் ப்ரிதாப‌மாக‌ பார்க்கிறாங்க‌ என்று நினைத்தால் அப்ப‌டியில்லையாம்..
ஆற்றில் விழுந்து எழுவ‌தே கிள‌ர்ச்சியாம்.. அந்த‌ வாய்ப்பு அவ‌ர்க‌ளுக்கு கிடைக்க‌வில்லையாம்... அத‌னால் இன்னொருமுறை போக‌லாமா என்று யோசிக்கிறாங்க‌ளாம்... ந‌ல்லா யோசிங்க‌ப்பா.உங்க‌ வ‌ய‌சு அப்ப‌டி... இருந்தாலும் என் க‌ண‌வ‌ருக்கு இப்ப‌ கொஞ்ச‌ம் திருப்தி... ஏதோ நாமும் கொஞ்ச‌ம் சாத‌னை ப‌ண்ணிட்டோம் என்று...( இல்லாட்டி திட்டு ம‌ழை பெய்திருக்க‌லாம் .. த‌ப்பித்தேன்..)

அடுத்து, சின்ன‌வ‌னுக்கு உடுப்பு மாத்தி சாப்பாடு கொடுக்க‌ணும் .. அது தான் பெரிய‌ வேலை.. ந‌ல்ல‌வேளை ஒரு நாய் க‌ட்டிப்போட்டிருந்தார்க‌ள்.. மேலும் அருகில் மாம‌ர‌த்தில் மாங்காய் காய்த்து ப‌றிப்பாரில்லாம‌ல் இருந்த‌து அருகில் துர‌ட்டியும் ( ச‌ரியா??) ப‌றிப்ப‌த‌ற்கு.
ஓட்டுன‌ர் மாங்காய் ப‌றித்து போட‌ ஒருவ‌ழியாய் சாப்பாடு சென்ற‌து...
அனைவ‌ரும் குளித்து உடுப்பு மாற்றி இப்ப‌ திரும்ப‌வும் அதே ஆற்றை க‌ட‌க்க‌ணும்.. இந்த‌ முறை த‌யாராக‌ அங்கிருந்த‌வ‌ர்க‌ள் இன்னோரு வ‌ண்டியில் வ‌ர‌, நாங்க‌ள் ஆற்றில் சென்று இற‌ங்கி த‌ள்ள‌ த‌யாராக‌ இருக்கும்போது ச‌ர்ரென்று எங்க‌ளை ஏமாற்றிவிட்டு கார் விரைவாக‌ மேலேறிய‌து... சே எங்க‌ அனைவ‌ரின் வீர‌மும் காட்ட‌ முடியாம‌ல் போய்விட்ட‌து..

ச‌ரி முடிந்த‌தா , வீட்டுக்கு போக‌லாமா"
" அட‌ என்ன‌ இப்ப‌தான் ம‌ணி 12 ஆகுது.. இன்னும் இருக்கு விளையாட்டுக‌ள்... முத‌லில் ச‌ன்னாவும் ச‌ப்பாத்தியும் சாப்பிடுங்க‌ள் " என‌ ஆசுவாச‌ப்ப‌டுத்தி அடுத்த‌ விளையாட்டான‌ அருவியில் க‌யிறு பிடித்து இற‌ங்கும் ஆபத்தான விளையாட்டை நோக்கி சென்றோம்..


" ஆமா ஓட்டுன‌ர் சாப்பிட்டாரா. பாவ‌ம் அவ‌ர்.."
" பாவ‌ம் 2..அப்ப‌வே ச‌ப்பிட்டார்."




பாகம் 1


ஞாயிறன்று சுமார் 200 கி.மீ தூரத்திலுள்ள சாராபுரி எனுமிடத்திற்கு சென்றோம்..இயற்கை சூழ்ந்த இடத்தில் பலவிதமான சாகச விளையாட்டுகள் அமைத்துள்ளனர்.. அதில் முக்கியமானது, விரைந்து ஓடும் காட்டாற்றில் மிதவை படகில் துடுப்பு போடுவது..சுமார் 6 மாடி உயரமுள்ள அருவியிலிருந்து கயறு பிடித்து கீழே இறங்குவது , போன்ற ஆபத்தான , அதே சமயம், கிளர்ச்சியூட்டும் விளையாட்டுகள்..
இது தாய்லாந்து வந்ததிலிருந்தே ஆசை .. இப்போதுதான் நிறைவேறியது...
ஓட்டுனரிடம் சொன்னால் அவருக்கு அப்படி ஓர் இடம் இருப்பதே தெரியாதாம்...கேக்கணுமா, பிள்ளைக்கும் , அப்பாவுக்கும், முணுமுணுப்புக்கு...
பேசாமல் வாருங்கள், நான் அழைத்துச்செல்கிறேன் என்று தைரியப்படுத்திக்கொண்டு, மலையில் வண்டியில் ஏற ஆரம்பித்தோம்...
கடைசியில் ஒருவழியாக கண்டும்பிடித்துவிட்டோம்...
அது ஒரு பள்ளத்தாக்கு, நடுவில் காட்டாறு.. அதில் ரோடு உள்ளது ரோட்டுக்கு மேல் முக்கால் அடி தண்ணீர்.. கடந்து அந்த பகுதி போனால் தான் விளையாட முடியும் ..யோசிக்கும்போதே எதிர் பக்கம் கார் வந்ததால், தைரியமாக ஓட்டுனர் காரை செலுத்த கார் சரியாக ஆற்றின் மையப்பகுதியில் சென்று நின்றுவிட்டது... கேக்கணுமா, எனக்கு விழுந்த வசவுகளை... ( எல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில்...ஹிஹி.. பழகிவிட்டது..)
இப்ப காரை தள்ளணும்.. என் பக்கம் கதவை திறக்க முடியாது.. கணவரும் , ஓட்டுனரும் , இறங்கி காரைத்தள்ள, முடியவில்லை... ( பின்ன உள்ளே இருப்பது யாரு?..) இதை பார்த்துக்கொண்டிருந்த எதிர் காரிலிருந்தவர்கள் உதவ ஓடி வந்தார்கள்..
நான் இற‌ங்க‌லாம் என்றால் சின்ன‌வ‌ன் ப‌ய‌ப்ப‌டுகிறான்..ஒருவ‌ழியாக‌ நானும் இற‌ங்கி த‌ள்ளிய‌தும் கார் முன்னேறிய‌து... ந‌ன்றி சொல்லிவிட்டு மேட்டிற்கு சென்றோம்... குதிரை ப‌ழ‌க்கும் இட‌மும், சூரிய‌காந்தி தோட்ட‌மும், ம‌லைக‌ளின் ப‌ச்சை ப‌ட்டாடையும், அலுப்பு ச‌லிப்புக‌ளை நீக்கிய‌து..ர‌ம்மிய‌ம் தொற்றிக்கொண்ட‌து..
முத‌லில் எடிவி ( ATV- ALL TERRAIN VEHICLE/SPORT UTILITY )எனும் 4 ச‌க்க‌ர‌ மோட்டார்வாக‌ன‌ம்..க‌ர‌டு முர‌டான பாதையில் போக‌க்கூடிய‌து... நானும் என் பெரிய‌ ம‌க‌னும் ஏறிக்கொண்டோம்.. கிட்ட‌த்த‌ட்ட‌ 4 கி.மீ ப‌ய‌ண‌ம், ம‌லைமேலே ஏற்ற‌மும், ச‌ர்ரென்று கீழே இற‌க்க‌மும்.களிமண் சகதியிலும், பாறைகளிலும். ப‌ய‌மாக‌த்தானிருக்குது, இருந்தாலும் பைய‌னிட‌ம் காண்பிக்க‌ முடியாதே...கீழே இற‌ங்கும்போது க‌த்துறான், " அம்மா ஆக்ஸிலேட்ட‌ரை போடாதீங்க‌, பிரேக‌ ம‌ட்டும் பிடிங்க‌ என்று.." சும்மாவே உத‌ற‌ல்..அக்க‌ம் ப‌க்க‌ம் பார்க்க‌க்கூடாது.. ப‌ள்ள‌த்தாக்கை பார்த்தால் போச்சு.! க‌ண்டிப்பாக‌ ஓட்ட‌ முடியாது...
ஒருவ‌ழியாக‌ ப‌த்திர‌மாக‌ வ‌ந்து சேர்ந்தோம்... அடுத்து காட்டாற்றில் மித‌வை ப‌டகில் ப‌ய‌ண‌ம்.. தேவையான‌ உப‌க‌ர‌ண‌ங்க‌ளை உட‌ம்புக்கும் , த‌லைக்கும் போட்டுவிட்டு போட்டோவுக்கு போஸ் குடுத்துவிட்டு, ப‌ட‌கில் குடும்ப‌த்தோடு உட்கார்ந்தோம்..
"உன‌க்கு தெரிய‌மா, எப்ப‌டி போக‌ணும்னு"
" ம். அதெல்லாம் ப‌ய‌மில்லை , வாங்க‌ "..என்று தைரிய‌ம் சொல்லியாச்சு , இருந்தாலும் உள்ளுக்குள் உத‌ற‌ல்.. சின்ன‌ப்பைய‌ன் இருக்கானே என்று.. ப‌ட‌கோட்டியும் எங்க‌ளுட‌ன்.. ஆற்றில் ஆழ‌ம் அதிக‌மில்லை.. இடுப்ப‌ள‌வே த‌ண்ணீர், இருந்தாலும் இழுப்பு அதிக‌ம்...

நான் ( தைரியசாஆஆஆஆஆ...லி) முன்னால் உட்கார‌ அவ‌ர்க‌ள் மூவ‌ரும் பின்னால் ப‌ய‌ந்துகொண்டே..
ப‌டிப்ப‌டியாக‌ கீழே இற‌ங்கும் த‌ண்ணீர் பாய்ச்ச‌ல் மிக‌ அழ‌கு.. அழ‌குதானே ஆப‌த்தும்..?.
முத‌ல் ப‌டியில் மித‌வை அழ‌காக‌ இற‌ங்கிய‌து... தைரிய‌ம் வ‌ந்துவிட்ட‌து...
அடுத்தும்.... ப‌ர‌வாயில்லையே...
மூன்றாவ‌து கொஞ்ச‌ம் பெரிதும் சிக்க‌லான‌தும்...நேரே செல்ல‌ வேண்டைய‌ ப‌ட‌கு,
ஒரு பாறையில் முட்டி, மோதி, ச‌டாரென்று திரும்பிய‌து.. என்ன‌ ந‌ட‌க்க‌ப்போகுதோ என்று எண்ணும்போதே ப‌ட‌கு க‌விழ்ந்து அனைவ‌ரும் ப‌ட‌குக்கு அடியில்.....

Tuesday, April 29, 2008





*பாகம் - 2*




நான் முக்கியமான வேலையில் இருக்கும்போது டேனிக்கு பிடித்த விளையாட்டு கணினி மேசை , சமயல் மேசை மேல் ஏறி அமர்வது..
சிலசமயம் மானிட்டர் மேலும்... கீழே இறங்கும்மா என்று கெஞ்சினாலும் " மாட்டேன் " என்ற கலகல சிரிப்போடு கூடிய பதில்தான்..
குழந்தையோடு கொஞ்சுவது பிடித்தமான வேலைதான் இருந்தாலும், சில நேரம், வேலையும் நடக்கணுமே.. அவனோடு பேசிக்கொண்டிருந்தால் ,
உப்பு போட்டேனா, சீனி போட்டேனா, என்று குழம்பிவிடுவேன்...அவனைக்கண்காணிப்பதில்...
அதனால் வேறு வழியின்றி, டாம் & ஜெரியில் வருவதுபோல்,
" மானிட்டர்/குக்கர் குள்ளா வெடி இருக்கு வெடிச்சுரும்.. கீழே இறங்கு.."
" ஏன் வெடிக்கும், யார் வெச்சா..?.."
" அதுமேல உக்காந்தா வெடிச்சுரும்.."
" ஏன் உக்காந்தா வெடிக்குது..?"அப்பாவியாக.
" ஏன்னா, அதுக்கு பிடிக்காது.."
" ஏன் அதுக்கு பிடிக்காது..?.." கண்ணை சுறுக்கிக்கொண்டு
" அய்யோயோயோ... ஏன் இப்படி கேள்வியா கேட்க...அம்மா இவ்வளவு நேரம் விளையாண்டேன்ல..?போய் விளையாடு.. வேலை முடிச்சு வாறேன்.."
" ஏன் கேக்கக்கூடாது...அம்மா?." சீரியஸாக
" ஹிஹி.."
"அம்மா. ஏன் சிர்க்கீங்க..?." பயத்துடன்
" ஹிஹி ஹஹ ஹிஹி..முடியலமா.."
" அம்மா, ஏன் சிரிக்க சொல்லு..." என் வாயைப்பொத்திக்கொண்டு..
" ஹஹஹஹஹஹஹஹஹஹஹாஹாஹா... அய்யோ யாராவது காப்பாத்துங்களேன்..."
" நிறய கேளுடா ஐயா, அம்மாகிட்ட...அறிவு வளரும்..." அப்பா...
" அப்பா என்ன கேக்கணும்...?.."மழலையில் அப்பாவியாக
" அய்யய்யோ, நான் மாட்டிக்கிட்டேன்.... கொஞ்சம் உன் அண்ணாகிட்ட போறியா?.."
" சிங்கண்ணா... சிங்கண்ணா...." உதவிக்கு கூப்பிடுகிறான்..( சிங்கு - பெரியவன்..)
" அம்மா , இப்ப டேனிய இங்க அனுப்பாதீங்க., பிளீஸ்.... நான் வீட்டுப்பாடம் செய்யணும்..."
****************தொடரும் ***********************************************



*குழந்தையின் கும்மி..*




இந்த பதிவு, என் குழந்தையின் சேட்டைகளை எனக்கு பின்னாளில் மறவாதிருக்க,வலையில் பதிவுசெய்யும் பொருட்டு, பயணத்தை தொடங்க உள்ளேன்... இதில் உங்களுக்குத் தெரிந்த , அல்லது நீங்கள் பண்ணிய கும்மியையும் தந்தால் மகிழ்வேன்... தற்பெருமைக்காக என நினைத்தால் மன்னியுங்கள்... கிடைத்த சின்னஞ்சிறு மகிழ்வுகளை, சோர்ந்திருக்கும் பொழுதில் ஞாபகப்படுத்திக்கொள்ள மட்டுமே...:-))... ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்...:-))
---------------------------------------------------------------------------­-----------
" *அம்மா மங்கி கத சொல்லு..."*
*" மொதல்ல பாட்டு, அப்புரம்தான் கத சரியா?..நீ மொதல்ல ஒழுங்கா படுக்கிறியா?... ?*
*3 தலையணை, முழுவதிலும் படுத்துக்கொண்டு அம்மாவின் தலைமுடியை கொத்தாக கையில் பிடித்துக்கொண்டு, அப்பாவின் முகத்தில் கால் போட்டுக்கொண்டு அராஜகம் பண்ணிக்கொண்டு இருக்கு...*
*" படுக்க மாட்டேன்..."*
*" அப்ப நான் மங்கி கத சொல்ல மாட்டேன்..."* *மெதுவா கீழே இறங்கி படுக்கிறான்.* ** *" அந்த கார் கொஞ்சம் மேஜையில் வெக்கிறியா?..இடைஞ்சலா இருக்கு.."* ** *" மாட்டேன்.. கார் பாவம்.."* ** *" கார் டயர்டா இருக்கும் கார் மேஜையில் தூங்கட்டும் .." முத்தம் கொடுத்து பை பை சொல்லிவிட்டு தருகிறான்.*
*" ஒரு ஊருல ஒரு மங்கி இருந்துச்சாம்.. அது ரொம்ப நாட்டி.( சேட்டை)..அது பேரு..?."*
*" அம்மா , நான் நாட்டியில்ல, நான் குட்..."*
*" ஆமா. நீ ரொம்ப குட்.. மங்கிதான் நாட்டி...அது என்ன பண்ணுச்சாம், அதோட வெளாட்டு சாமானெல்லாம் எறிஞ்சுச்சாம்..."*
*" அம்மா, டேனி எறியமாட்டான்.. டேனி ரொம்ப குட்.."*
**
*" ஆமா, டேனி எறியவே மாட்டான்...டேனி ரொம்ப குட்.."*
*இடையில் அப்பா " என்ன பேச்சு .. சீக்கிரம் தூங்கு.. நாளைக்கு ஸ்கூல் போகணும்.."*
*" அப்பா, பேட் பாய்.. ஷ்ஷ்ஷ்.. நீ தூங்கு...அம்மா, நீ குட், நீ சொல்லு.."*
*" அந்த மங்கி எறிந்த பொம்மைகார் கீழே காவலாளி மண்டையில் விழுந்து அடிபட்டு காவலாளி ஒரே அழுகையாம்.."*
*"..ம்..."*
*" காவலாளி நேரே மேலே வந்து, வீட்டு மணியை, டிங், டாங் தட்டி, மங்கியை பிடித்துச்சென்றானாம்..."*
*" அம்மா, டேனி போமாட்டான்..."என் முகவாயை பிஞ்சுக்கையால் பிடித்துக்கொண்டு..*
*" டேனியில்லை , மங்கி..... அதுதானே எறிந்தது.."*
*" மங்கிக்கு 2 அடிகுடுத்து அறையில் பூட்டி வைத்தான் காவலாளி..."*
*" பாவம் மங்கி.... அம்மா, டேனி சேட் ( sad) ஆயிட்டேன்..." இறுக கட்டி அணைத்துக்கொண்டான்..*
*" அப்புரம் ,மங்கி சாரி சொல்லிச்சாம்... மிட்டாய் குடுத்து இனி செய்யாதேன்னு சொல்லி காவலாளி அனுப்பிட்டான்.."*
*" அம்மா டேனி செய்யமாட்டான்...டிவிங்கில் ஸ்டார் பாட்டு பாடு.."*
*" அம்மாவுக்கு டயர்டா இருக்கு, கொஞ்சம் முடிய விடுறியா?.. அங்க பார் நிலவு வந்தாச்சு.. உள்ளே தேவைதைகளெல்லாம் உன் பிரேயருக்காக காத்திருக்காங்க... "*
*" நீ சொல்லு.பிரேயர..டேனி ரொம்ப டயர்டா இருக்கான்."*
*" அப்ப கடவுள் எனக்குதான் எல்லாம் தருவாங்க .. நீ சொல்லு..அப்பதான் நீ தூங்கும்போது காதுல வந்து மெதுவா பாடுவாங்க...பார், செடில உள்ள பூவெல்லாம் ஆட ஆரம்பிச்சாச்சு, வந்துட்டாங்க...."*
*" ம்ஹும்..ம்ஹூம்... காட் பிளஸ்..டேனி..........ஹப்பி..."முனகிக்கொண்டே..*
*" சரி கண்ண மூடிட்டு தூங்கு....."*
*" அம்மா, சுச்சூ...வருது.."*
*" பொய் சொல்லாத, இப்பதான போய்ட்டு வந்த..எத்தன வாட்டி போவ.?"*
*" அப்ப மங்கி கத சொல்லு.. "*
*" டேனி இப்ப நீ ,அடிவாங்கப்போற.. போ போய் அப்பாகிட்ட கேளு..."*
*" அப்பா, மங்கி கத சொல்லு..."*
*" நான் அப்பவே தூங்கிட்டேன்.." அப்பா.......*
********************************************************தொடரலாம்..*********­*****
*சொப்பனத்திருமணம்*...(*எது தோல்வி, எது வெற்றி...?...முடிவு உங்களிடம்*.)
சாயும்கால நீல வானத்தில் மேகத்தை வைத்தே கவிதை புனைந்து கொண்டிருந்த மீனாவுக்கு , ராஜனின், குரல் அதிர்வைத்தந்தது..
" என்ன பகல் கனவு கண்டுகிட்டு இருக்க..?. எத்தனை தடவை கூப்பிடுறேன்..."
திருமணம் முடிந்து 11 மாதம் ஆகிறது... வெளிநாட்டு வாழ்க்கை.. ஊரிலும், வெளியிலும் , நல்லவன் போல் நடித்தாலும், வெளிநாடு வந்ததும்தான் உண்மை புரிந்தது
மீனாவுக்கு..எதற்கெடுத்தாலும் கோபம்.. எரிச்சல்.. திருப்தியின்மை...அடுத்தவரோடு போட்டியோடு பேசுவது...ஆனால் பூஜை செய்வதிலோ, தாம்பத்யத்திலோ
குறைவில்லை... மொத்தமாக நிம்மதி இழந்தாள் மீனா... ஆசிரியரான அப்பாவும், இரண்டு தம்பி, தங்கைக்காகவும், இவ்வளவு நாள் பொறுத்துக்கொண்டாள்..
தன்னுடைய குடும்பத்தின் பொருளாதார நிலைமையை அடிக்கடி சுட்டிக்காட்டி அசிங்கப்படுத்துவது... இத்தனைக்கும் மீனாவும் தகவல் தொழில்
நுட்ப துறையில், மேற்படிப்பு படித்து வேலையிலிருப்பவள்...ஒன்றும் வாங்காமல் கல்யாணம் பண்ணியதையும், தன் தகுதிக்கு, இன்னும் அழகாக, வசதியான இடத்தில்
சம்பந்தம் எடுத்திருக்கலாம் என்றும் பீற்றிக்கொள்வான்... ஒன்றுமே பதில் சொல்லாமல் அமைதியாகிவிடுவாள் மீனா.. தன் குடும்பத்தாரை நினைத்து, எல்லாவற்றையும்
தாங்கிக்கொள்வாள்..ஆனால் இப்ப வர வர அவளால் தாங்க முடியாத நிலைமை... அலுவல் முடிந்து தாமதமாய் வந்தால் ஆயிரம் கேள்வி...
யாரும் வீட்டுக்கு தொலைபேசியில் அழைக்கக்கூடாது.. இல்லாவிட்டால், வேலை விட்டு நிற்கணும் என்ற கட்டளைவேறு..அது இன்னும் கொடுமை..
அவன் அலுவலக விருந்துக்கு சென்றாலும், யாரிடமும் சகஜமாக பழகக்கூடாது... ஒரு புன்சிரிப்போடு நிறுத்திக்கொள்ளணும்...
தாம்பத்யத்தின்போது மட்டும் அன்பாக இருப்பதுபோல் நடித்தும் கொள்வான்...
அன்று தற்செயலாக அவள் குடியிருக்கும் அடுக்ககத்தில் வீடு வாடகைக்கு பார்க்க அவள் அலுவலக தோழன் கோபி வந்துவிட்டான்..அவனுக்கோ
ராஜனைப்பற்றி ஒன்றும் தெரியாது...புதிதாக மணமுடித்தவன்.. கலகல பேச்சு...
" சார், மீனாதான் எங்க அலுவலகத்தில் முக்கியமான நட்சத்திரம்... எல்லவற்றையும் சிறப்பா , குறித்த நேரத்திற்குள் செய்ய அவளால் மட்டுமே முடியும்.."
"..ம்ம்."
" அதேபோல நல்ல நகைச்சுவையாளினி, பெரிய கவிதாயினி சார்.. நீங்க கொடுத்து வெச்சவங்கதான்..."
"...ஹாங்......"அவளை ஒருமாதிரியாக பார்த்துக்கொண்டே...,
கோபி போவதாய் தெரியவில்லை...மீனவுக்கும் அசதிதான்..
" மீனா என் மனைவியை அடுத்த மாதம் வீடு பார்த்ததும் அழைத்துவரப்போகிறேன்... நாக்கு செத்துப்போச்சு, இந்த பர்கரிலும், பிசாவிலும்...
இன்னிக்கு உங்க வீட்டுல தமிழ்நாட்டு சாப்பாடு கெடைக்குமில்ல...?.. " வெகுளியாய்..
" ஹங்... ஆமா.. ஆ....................மா..." கணவரை பயத்துடன் பார்த்துக்கொண்டே...
எல்லாம் முடிந்து கோபி சென்றதும் யுத்தத்தை ஆரம்பித்துவிட்டான்..மீனாவுக்கோ அசதியில் தூக்கம் வருகிறது..
" சோ.. எல்லாம் முன்னேற்பாடோடதான் செஞ்சுருக்க...."
" என்ன சொல்றீங்க..?."பதருகிறாள்...தவிக்கிறாள்.. உண்மையை உணரவைக்க போராடுகிறாள்... ஆத்திரம் அதிகரிக்க ஓங்கி ஒரு அடி
கொடுத்துவிட்டு, தூங்கச்செல்கிறான்.. வந்த தூக்கம் , துக்கமாய் மாறி, அழுதுகொண்டே இரவு முழுதும் யோசிக்கிறாள்..
---------------------------------------------------------------------------­------------------------------
" மீனா, துண்டு எங்க... ?."
"....."
" கேக்கிறேன்ல..."
"....."
" காது கேக்குதா இல்லையா?..மெதுவாக அருகில் வந்து அவனை தீர்க்கமாய் பார்த்து..
" துண்டு எல்லாத்தையும் இனிமேல் நீங்களே எடுத்துக்கணும் ராஜன்..." அமைதியாக...
" என்ன..எ..ன்....னா...?.....திமிரா..."
" நான் போறதா முடிவு பண்ணிருக்கேன்.... "
" எங்க போற..?....எதுக்கு இப்ப... பணம் செலவழிக்க முடியாது இப்ப...."
" நான் உங்களை விட்டு பிரியரதா இருக்கேன் னு சொன்னேன்..." அவனைப்பார்க்காமலே...அழுத்தமாய், மெதுவாய்..அதிர்ச்சி, கோபம் அவனுக்கு..
" போய்த்தொலை.....அதிகம் படித்த , சம்பாதிக்கிறோம்கற திமிர்..... போ..போடி..போய் கஷ்டப்படு அப்ப தெரியும்... உங்கப்பாவுக்கு
முதல் கல்யாணம் செய்து வைக்கவே வழியில்லாமல் என் தலையில் கட்டி வெச்சார்...போ...போ...சனியன் ஒழிந்ததுன்னு நிம்மதியா தலை முழுகுவேன்.."
"......" ஒன்றுமே பேசவில்லை.. எல்லாம் எதிர்பார்த்திருந்தாள்... பிரிவதென்பதே அவளைப்பொறுத்த வரையில் பெரிய முடிவு...இனி இதை
நல்லபடியாக வேறு நிறைவேத்தணுமே.. அவன் கோபத்தை அதிகரிக்காமல் வெளியேறணுமே... அவன் பேச்சு எல்லாத்துக்கும் மெளனம் காத்தாள்...
அலுவலகத்தில் லீவு மட்டும் சொல்லிவிட்டு சென்னை சென்றதும் மாற்றல் கேட்கலாம், இல்லாவிட்டால் ராஜினாமா பண்ணலாம் என்றிருந்தாள்...
உதவி தேவைப்படலாம் என்று தன் நெருங்கிய தோழியிடம் மட்டும் பிரச்சனையை கால்வாசி சொல்லிவைத்தாள் ...பெற்றோருக்கு தெரியாமல் , கூறாமல்,
அவர்களை வேதனைப்படுத்தாமல் மறைப்பதுதான் ரொம்ப கஷ்டமாயிருக்கு... எப்படி தாங்குவார்கள்... தம்பி, தங்கையை நல்லமுறையில் படிக்க வைக்கணும்...
யோசித்த வேளையில் தொலைபேசி அலறியது....
" உன்னோட பாஸ்போர்ட் டிக்கெட் எல்லாம் ரெடி.. என்னிக்கு கிளம்புற....?.."அதிகாரமாய், அலட்சியமாய்..
எதிர்பார்த்தே இருந்தாலும், வலிக்குது , முள்ளாய் தைக்குது வார்த்தை....
"வருகிற சனிக்கிழமை...."
ஞாயிறு அவர்களது திருமண நாள்... 1 வருடம் முடியும்...
இன்னும் 4 நாள் உள்ளது.....எல்லாம் நல்லபடியாய் நடக்கணும்.. நரகமாய் நகருது நேரம்...பிடிமானமின்றி , பிணமாய் கடவுள்மீதே கோபம் வருது..
---------------------------------------------------------------------------­--------------------------------------------
கோபத்தில் அலுவலகம் சென்றாலும் ஒன்றுமே ஓடவில்லை ராஜனுக்கு... என்னுடைய உரிமை என்றல்லவா நினைத்திருந்தேன்...என்ன தைரியம்?..
அவள் பெற்றோர்மேல் உள்ள மரியாதையில் அவர்களுக்கு களங்கம் விளைவிக்க இப்படியெல்லாம் எண்ணகூட மாட்டாள் என்றல்லவா நினைத்திருந்தேன்...
சே,, உண்மையிலேயே தோத்துவிட்டேன்... அவளிடம் என்ன குறை கண்டேன்... எல்லாத்துக்கும் நான்தான் காரணம்... சொந்தம் கொண்டாடி அடிமை
படுத்தியுள்ளேன்... இப்படி ஒரு முடிவுக்கு அவள் வருவாள் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.. இப்ப என்ன செய்வது...என்னுடைய அகந்தை தடுக்குது...
அவளை சமாதானம் செய்யணுமா, மன்னிப்பு கோரணுமா...?.." மாட்டேனென்று சொல்லிவிட்டால்..?..என்ன அவமானம்....?
குழம்பி போயிருந்தவனைப்பார்த்துவிட்டான் நண்பன்...வேறு வழியின்றி சொல்லுகிறான் அனைத்தையும்.. நம்ப முடியவில்லை அவனால்...
நீயா இப்படி.. உங்க இருவரையும் பார்த்தா அப்படி தெரியவில்லையே... மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி இருப்பீங்களே..
" பாதிபேர் உலகத்துக்காக நடிப்பதில்தான் தோற்றுப்போகிறார்கள்.. அவள் உனக்கு உரிமைன்னு தெரிஞ்சப்புரம் உன்னுடைய உடைமைன்னு புரிஞ்சுக்காம, உன் கண்ணையே
குத்தி வேதனைப்பட்டுருக்கியே ராஜன்... "
" என்னுடைய வளர்ப்பிலேயோ, பார்வையிலேயோ தவறு நடந்திருக்குடா..எங்கம்மா, அப்பாவுக்கு பயந்தேதான் இருப்பாங்க..அக்காவும் அப்படியே..."
" உனக்கெங்கு போச்சு புத்தி... வெளிநாட்டில் அதுவும்... அவள் சந்தோஷமா இருந்தாதானே நீ சந்தோஷமா இருக்க முடியும்...பயத்துலயோ, மரியாதையிலயோ,
ரொம்ப நாள் உறவு தங்காது...நல்ல நட்பு வேணும் முதலில்...ஆயுசு முழுக்க துணையா வரவேண்டியவளை இப்படி அநியாயமா.....போ..போய் சமாதானம் பண்ணு.."
சமாதானம் பண்ண சொல்கிறான்..அகங்காரம் தடுக்குது...
---------------------------------------------------------------------------­-------------------------------------------
வெள்ளிக்கிழமைவரை இருவரும் பேசிக்கொள்ளாமலேயே நகருகிறது... அவளாய் பேசுவாள் என்று இவன்.. அவன் திருந்தவே வாய்ப்பில்லை .,
தப்பித்தால் போதும் என்று இவள்..சனிக்கிழமை சாயங்காலம் விமானம்...எதையும் எடுத்துவைக்ககூட ஆர்வமில்லாதவளாய், இரு சிறு பெட்டிகள்
மட்டும் எடுத்துக்கொள்கிறாள்.. அவனால் நம்பமுடியாத அதிர்ச்சி.. ஆனாலும் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியவில்லை..தன்னுடைய அறையை பூட்டிக்கொண்டு
குட்டிப்போட்ட பூனையாய் நடந்துகொண்டே இருக்கிறான்.. அவள் போய்விடுவாளோ, எவ்வளவு பெரிய தோல்வி.. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் மறுபடி
கிடைக்காது.... பரவாயில்லை, என் மனைவிதானே.. .ஒருவாட்டி பேசிப்பார்க்கலாம்.. எப்படி ஆரம்பிப்பது, இருந்தாலும்...கதவு தட்டும் சத்தம்..
" விமான நிலையம் கிளம்ப நேரமாச்சு...." அமைதியாக...
"...ம்..."
" நான் கிளம்பவா...?" பயத்தோடு..
"..ம்.. இரு நான் வந்து விடுகிறேன்...."
" இல்ல பரவாயில்லை.. நானே சென்றுகொள்கிறேன்..." பக்குவமாக...
"..ம்..." என்று சொன்னதும் பெட்டியை தூக்கிக்கொண்டு வாசல் அருகில் செல்கிறாள்..........



" ஒரு நிமிஷம்"
ராஜன் மீனாவைக்கூப்பிட, அவ‌ளோ ப‌ய‌த்துட‌ன்...
" நான் ப‌ண்ணின‌து த‌ப்புதான்னு உண‌ர்கிறேன்... ஆனாலும் உன்னை க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌வில்லை..."
கொஞ்ச‌ம் ஆச்ச‌ர்ய‌மாய் இருந்தாலும், 20 நிமிட‌ம் ஒன்றுமே பேச‌வில்லை அவ‌ள்.. அவ‌ன் ம‌ட்டும் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தான்.. முடிவாக‌, மீனா,
" ..ம்.. இனிமேலும் என‌க்கு சேர்ந்து வாழ்வ‌தில் உள்ள‌ ந‌ம்பிக்கை குறைந்து விட்ட‌து....கொஞ்ச‌ங்கூட‌ அன்பில்லாம‌ல், ச‌ந்தேகித்த‌து.., இன்னும் ப‌ல‌ கொடுமையை பெற்றோருக்காக‌ பொறுத்துக்கொண்டேன்... இனிமேலும் ச‌க்தியில்லை ராஜ‌ன்...ஆனால் ஒன்று செய்ய‌லாம்.. புதுசா ந‌ம் ந‌ட்பை முத‌லில் ஆர‌ம்பிக்க‌லாம்....
அது வ‌ள‌ர்ந்து காத‌லாக‌ட்டும்.... அது ஒத்துவ‌ந்தால் திரும‌ண‌ வாழ்க்கையை தொட‌ங்குவோம்... அதுவ‌ரை இருவ‌ரும் இடைவெளி விட்டு, பிரிந்தே இருப்போம்...
இருந்தாலும் இதுவும் நீங்க‌ள் இவ்வ‌ள‌வு தூர‌ம் இற‌ங்கிய‌த‌ற்காக‌ ம‌ட்டுமே..ஒரு உதவி மட்டும் செய்யுங்கள், அதுவரை நம் குடும்பத்தினருக்கு தெரியவேண்டாம்... "
பெரிய‌ ஏமாற்ற‌ம் ராஜ‌னுக்கு, இருந்தாலும் இந்த‌ த‌ண்ட‌னைகூட‌ தேவைதான் என‌ உண‌ர்ந்தான்...வலியுடனே வழியனுப்பி வைத்தான்..
ஞாயிற்றுக்கிழ‌மை.. காலையில் மீனாவை அழைத்தான் தொலைபேசியில்..
" *திரும‌ண‌நாள் வாழ்த்துக‌ள்*... மீனா"
" ந‌ன்றி ராஜன்.... ஆனால் ஒரு சின்ன‌ மாற்ற‌ம் .. ந‌ம் *ந‌ட்பின் ஆர‌ம்ப‌ தின‌ வாழ்த்துக‌ள்.. இதுவ‌ரை ந‌ட‌ந்த‌து ஒரு சொப்ப‌ன‌மே...."*
" ஹ‌ஹா"
" ஹ‌ஹா".......