Wednesday, February 27, 2008

பாகம் - 12

மறுநாள் அலுவலகம் வந்த வேந்தன் காதுக்கு மதுவின் விவாகரத்து விஷயம் மூத்த வக்கீலின் மூலம் எட்டுகிறது..
அதிர்ச்சியாயிருந்தாலும், அதுபற்றி தெரியாதவர்போல் காட்டிக்கொண்டார்... அவள் மேல் கரிசனம் கூடியது... இவ்வளவு பிரச்சனைக்கு
நடுவில் அலுவலக வேலைகளையும் கருத்தாக செய்கிறாளே...


அவளுக்கு முடிந்த அளவு உறுதுணையாக இருக்க நினைத்தான்..
அடுத்த வார பயணத்தை ஒத்திப்போட கூட வேண்டாமென்கிறாள்...
வேந்தன் பயணத்தில் மதுவும் கலந்து கொள்ள, சுகமாகவே இருக்கு ...அவளுக்காக, அவளுக்கு பிடித்த எழுத்தாளர் புத்தகம் ஒன்றினை பரிசாக அளிக்கிறார்.. அவளுக்கு சந்தோஷம்.. அதை வைத்து பேசுகிறார்கள் மலை பயணத்தின்போதே...திடீரென்று..கார் நின்றது...


" அய்யா எதோ வண்டியில் பிரச்சனை..கொஞ்சநேரம் இருங்கள் .என்னவென்று பார்க்கிறேன்.."

" மொதல்லே பார்க்கக்கூடாதா .." என்று சொல்லிவிட்டு கீழிறங்கினால் அழகிய வயல் சூழ்ந்த கால்வாயோடு பசுமையான இடம்..அள்ளிச்செல்கிறது மனதை அந்த இடத்தின் ரம்மியம்...

இருவரும் காலார நடக்கின்றார்கள்.. தன்னைப்பற்றியும் அமெரிக்க வாழ்க்கை பற்றியும் மது கேட்காமலே பகிர்கிறார் வேந்தன்..

"உங்களைப்பற்றி விருப்பமிருந்தால்......"

மதுவும் தன் ஆசைக்கணவரைப்பற்றி சொல்கிறார்...முடிவில் ஒரு பெருமூச்சு...கண்களில் கலக்கம்.. சமாளிக்கிறாள்..

மெளனம்... வேந்தனுக்கு அவளை தைரியப்படுத்தவும் , சமாதானப்படுத்தவும் ஆசை.. ஆனால் எப்படி சொல்வது தனக்குத் தெரியுமென்று..?

"நீங்கள் இனி எனக்கு ஒரு நல்ல தோழி... என்ன உதவியோ என்னிடம் தயங்காமல் கேளுங்கள்.. உங்களுக்குச் செய்வது என் கடமைபோல.."

" கண்டிப்பா சார்..."

" இன்னும் சார் தானா..?.. தயவுசெய்து வேந்தன் என்றே சொல்லுங்கள் மது.."

" சரி...நீங்களும் இனி என்னை ஒருமையில் அழைக்கலாம் அப்படியென்றால்..."
"சரி மது..."


" ஏன் இன்னொரு திருமணம் பண்ணக்கூடாது..."

" நீங்களுமா... என்னவோ தோணவில்லை.. என் மனதுக்கு பிடித்த அப்படி ஒரு பெண் இதுவரை கிடைக்கவில்லை..."

" அது என்ன "அப்படி ஒர் பெண்..?. எப்படியாம்...?" கிண்டலாக மது அவர் மனதை நோட்டம்விட்டு அப்படி ஓர் பெண் தேடலாம் என்ற நோக்கில்...
"எப்படின்னா................ம்...........ம்........ம்..........உங்களைப்போல....''


" விளையாட்டு வேண்டாம் .. உண்மையா சொல்லுங்கள்.. அமெரிக்காவில் படித்தவர்... அதுபோலவா..."

" உண்மையாகத்தான் சொல்கிறேன்..நான் பெண்களிடமே குறைவாக பேசுவேன்.. ஏனோ உங்களிடம்தான் இவ்வளவு பேசியுள்ளேன்...அதனால்தான் சொல்கிறேன், உங்களைப்போல் ஒரு பெண் என்று.."

" சரி பார்க்கிறேன்.. " என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு காரில் மேற்கொண்டு பயணத்தை தொடர..

வேந்தனுக்கு சந்தோஷம் நம் விருப்பத்தை தெரிவித்துவிட்டோம் என்று...மதுவுக்கோ, அட எவ்வளவு எளிமையா தன் விருப்பத்தை சொல்கிறார்.. நல்ல பெண்ணாக பார்க்கணும் என்று மனதினுள்..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேந்தனும் மதுவும் மலையில் உள்ள தொழிலாளர்களுடன் அவர்களின் குடியிருப்பு தோட்டத்திலேயே கூட்டம் வைத்துள்ளனர்..


மது சாதாரணமாக ஒரு பாறையின் மீது அமர்ந்து அவர்களின் நலன் விசாரிப்பதும், அவர்களோடு வித்தியாசமில்லாது பழகுவதும், அவள் மீது மதிப்பும் , மரியாதையும் கூடுகிறது...

" ஏன் மது, இங்குள்ளவர்களுக்கு விளையாடுவதற்கு நல்ல முறையில் மைதானம் ஒன்று அமைத்துத் தரணும்." ஆச்சர்யத்துடன் மது..

" செய்யலாமே, வேந்தன்.. எனக்குத் தோணவில்லை பாருங்கள்..." சந்தோஷப்படுகிறாள், அவனின் முழுமையான பங்கேற்பு குறித்து...

ரகுவுடன் ஒரே வீட்டில் எதிரிகள் போல் பேசாமல் வாழும் நரகத்தை மறந்தாள் சிறிது.. தொழிலாளர்களுடன் உணவு உண்டபின் ரம்மியமான எஸ்டேட்டை சுற்றிப்பார்க்கின்றனர் இருவரும்..

அதிக குளிர்.. மதுவோ சாதாரண காட்டன் புடவையில்.. தன் மேல்கோட்டை தருகிறான் வேந்தன்..

" நீங்கள் குளிர் தாங்கமாட்டீர்கள்.. தயவுசெய்து..." அவன் கரிசனம் பெரியவர் போன்றே உள்ளது.. என்ன அவர் இவளை திட்டுவார் சம்மதிக்க வைக்க..பிடிவாதமும் அவருக்கு..

அழகாக மறுக்கிறாள்.., தனக்கு இந்த குளிர் பிடிக்குமென்று....சிரித்துகொள்கிறார் அவள் சமாளிப்பதை ..
இரவு தான் கொடுமையாக உள்ளது . விசாலம் அம்மா, குழந்தைகளுடன் பேசியதும் , தூங்கலாம் என்றால் நினைவுகள் வாட்டுது..

ஏன் ரகு இப்படி என்னிடம் பேசாமல்....??? நடந்துகொண்டே இருந்தவள் வெளியே வேந்தன் நடப்பதைப் பார்க்கிறாள்..

"என்ன தூங்கவில்லையா?... " " இல்லை.. தூக்கம் வரலை.. உங்களுக்கு?" " எனக்கும்தான்... "
" சரி பேசிக்கொண்டிருக்கலாமே... "அப்படியே மேஜை மேல் உற்சாக பானம் இருப்பதை கண்டு முகம் மாறுவதை பார்க்கிறார்..

" இது அமெரிக்கா இல்லையே. தவிர்க்கலாமே..உடல்நலத்துக்கு நல்லதில்லையே..."

" உங்களுக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்" என்று எடுத்துச்செல்ல சொல்கிறார், வேலையாளிடம்..அவளின் அக்கறை குறித்து மகிழ்கிறார்..

தன்னை யாரும் இதுவரை சொன்னதில்லை... மதுவுக்கோ அவர்மேல் மரியாதை கூடுகிறது, பானத்தை தான் சொன்னதும் தவிர்த்ததால்..

இருவரும் நேரம்போவது தெரியாமல் பேசிக்கொண்டிருக்க,,பின் தூங்க சென்றனர். தூங்கும்போது பழைய நினைவுகளில் மீண்டும் ரகுவுடன் முதன்முறையாக திருமணம் முடிந்து தேனிலவுக்கு வந்தது ,ஞாபகம் வந்து தூக்கத்தை தொலைத்தாள்.... அதேபோல் வேந்தனும் தூங்க மனமின்றி...........

*************************************************************************************************தொடரும்...

பாகம் - 11

நிஷா வேதனை தாங்கமுடியாமல், ரகுவின் தோழன், சுந்தருக்கும் டாக்டர் சங்கருக்கும், சொல்லிவிட்டாள்...அனைவருக்கும் அதிர்ச்சி.. ஆனால் இது குடும்ப விஷயம் ..
அவர்கள் விரும்பினாலன்றி நாம் தலையிடவேண்டாம் என்றும், சுந்தர் மட்டும் நயமாக பேசி பிரச்சனை என்ன என்று அறிவதாக ஏற்பாடு..மது இது அறிந்து முதலில் வருத்தப்பட்டாலும், பின்னர் ஒத்துக்கொண்டாள்..

ஆனால் அவன் போக்கில் விடுங்கள் சில நாள்கள் , எனக்காக மறந்தும் சப்போர்ட்டாக பேச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டாள்.

கீதாம்மாவுக்கு கோபமும் வருத்தமும்.. , தன்னிடம் கூட சொல்லாமல் நம் பெண் மறைத்துவிட்டாளே.. ஏன் கணவன் சொன்னால் வேலையை விட வேண்டியதுதானே?.. ஆனால் மதுவின் தந்தைக்கோ, தன் மகள் எது செய்தாலும் சரியாக இருக்கும், அவளிடம் யாரும் எதுவும் அதுபற்றி பேசவோ , கேட்கவோ கூடாது என தடைபோட்டார்..

ஏனெனில் அவன் கோபம் இவளுக்குத்தானே தெரியும்...இப்படித்தான் பரமு விசயத்தில்..,

* * * * * * * * *

"என்ன தைரியம் இருந்தால் ஒரு வேலையில்லாதவனை , அடுத்த மதத்தவனை திருமணம் செய்வேன் என்று சொல்லுவாய்..?"

" அண்ணா அவரைத் தவிர யாரையும் என்னால் நினைத்துகூட பார்க்க முடியாது..நான்கு வருட காதல். நல்ல படிப்பு..நல்ல வேலை கிடடக்கும் சீக்கிரம். நீயும்தானே. அண்ணியை....?"

" அப்படியென்ன பெரிய காதல்.. நான் காதலித்தேன் என்றால் தகுதியோடு, முறைப்படி , எல்லோருடைய விருப்பத்தோடும்., பெருமைபடும்படியாக..."

" பரமுவுக்கும் நாமே நடத்திவைக்கலாமே.. சின்ன பிள்ளை தெரியாமல் நடந்துவிட்டது...இப்ப வேறு வழியில்லையே.." கெஞ்சுகிறாள் மது..

" நீ கொஞ்சம் பேசாமல் இருக்கிறாயா?. இது என் குடும்ப விஷயம்...நீதான் இதுக்கு முழு ஆதரவா..?.என் தங்கை நல்லா இருக்கணும்னு நினைக்கிறது தப்பா...?. மது இனி இதில் யார் தலையிட்டாலும் எனக்கும் அவர்களுக்கும் எந்த உறவுமில்லை..மது ,நீ உள்ளே போ"மது வெறுப்புடன் உள்ளே செல்கிறாள்..

" பரமு, நான் பார்க்கும் மாப்பிள்ளையை தான் நீ கல்யாணம் செய்யவேண்டும்.. மீறினால் எனக்கும் உனக்கும் இனி உறவில்லை.."

" என் மகன் சொல்வதே நானும் .. ஏன் இந்த தலைக்குனிவு எனக்கு... நல்லாதானே வளர்த்தோம் உன்னை..?.." அப்பா.

விசாலம் அம்மா, பரமுவும் அழ, தன் அறைக்கு , ரகு சென்றபின் அழைத்துச்செல்கிறாள்... பரமுவோ பிடிவாதமாக இருக்கிறாள்,செத்துவிடுவேனென்று.. அவளை நன்றாகத் திட்டிவிட்டு, சரி பைத்தியமாக ஏதும் செய்துவிடாதே, நான் முடித்துவைக்கிறேன் என்கிறாள்..

அதேபோல் அந்த வாரமே விசாலம் அம்மா, பரமுவை அழைத்துக்கொண்டு ,கோயிலில் வைத்து திருமணத்தையும் முடித்துவிட்டுவீட்டுக்கு திரும்புகிறாள், புயலை எதிர்பார்த்து...

" அங்கேயே நில்..உள்ள ஒரு அடி எடுத்து வைக்கக்கூடாது... எவ்வளவு சொல்லியும் என் பேச்சை மீறி..."

" சரி.. உள்ளே வந்து என்ன வேணாலும் பண்ணுங்க... வெளியில் நான்கு பேர் பார்ப்பாங்க..." அவள் சொல்லிக்கொண்டே உள்ளே செல்கிறாள், அம்மாவின் கையைப் பிடித்தபடி...அம்மா சமையலைறையில் புகுந்து கொண்டார்கள்..

" இப்ப என்ன அவள் செத்தாக்கூட பரவாயில்லை, ஆனால் உங்க மானம் தான் பெரிது இல்லையா மாமா?."

" அப்படித்தான் வெச்சுக்கோ.. எங்களைப்பொறுத்த வரையில் அவள் செத்துவிட்டாள்..... இனி நீயும் அவளுக்கு பரிந்துகிட்டு இந்த வீட்டில் இருக்க முடியாது.."அவளுக்கு உள்ளுக்குள் சிரிப்பாய் வந்தாலும், வெளியே காண்பிக்காமல்,

" அதுக்கெல்லாம் நானும் தயாராத்தான் இருக்கேன்... தங்கை , மகள் செத்தாலும் பரவாயில்லைன்னு நினைக்கிற மனுஷங்களோட இனி நான் இருக்க முடியாதுப்பா..." துணி மணிகளை எடுத்து வேகமாக பெட்டிக்குள் திணிக்கிறாள்...

"சரி. சரி.. நீ உள்ளே போம்மா.. அப்புறமா பேசிக்கொள்ளலாம்..." மாமா பயப்படுகிறார்...விசாலம் அம்மாவுக்கு இது நாடகம்தான் என்று தெரிந்ததால் அவர்,

" சரிம்மா, போகுமுன் ஒரு வாய் சாப்பிட்டு போகலாம்.. இரு இப்பவே சமைக்கிறேன் "என்கிறார்..

மது குழந்தையை கூப்பிட்டு, " கிளம்புடா, தாத்தா வீட்டுக்கு போகலாம்...இனி அங்குதான் நீ படிக்கப்போற.."சந்தடி சாக்கில் குழந்தையையும் இணைக்க,

" என் பெண்ணை எங்கே கூட்டிப்போற..?. அவள் என்கூடதான் இருப்பா..."பெண்மேல் அதிகம் பிரியம் ரகுவுக்கு..

" வேண்டாம்மா .. சொன்னா கேளு... ரகு நீ இப்போ உள்ளே போ.. " கொஞ்சம் அதட்டலாய் மாமா..இருபது நிமிடம் கழித்து பெட்டியுடன் மது வெளிவர, எல்லோரும் அதிர்ச்சியில்..
" எங்க போற..?"
"......" அழுகிற மாதிரி மது நல்லாவே நடிக்க.."
உள்ளே ..போ.."குழந்தை ஒரு கையில் , பெட்டி மறு கையில் எடுக்க,

" உள்ளே போ என்று சொன்னேன்..." பெட்டி எடுத்து அவளையும் இழுத்துக்கொண்டு உள்ளே சென்று சமாதானப்படுத்துகின்றான்...
" எனக்கு ஏதோ கோவம்.. அதுக்காக உடனே போய்விடுவாயா?...நீ பண்ணின காரியம் இருக்கே... சரி சரி... மறுபடியும் வேதாளம் ஏறிவிடும்..எல்லாரும் தப்பு பண்ணிட்டு என்னை தண்டியுங்க....ஆனா இனி பரமு பற்றி யாரும் பேசக்கூடாது .." சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்...

உள்ளே வந்த விசாலம் அம்மா, கதவை அடைத்துவிட்டு, மதுவை கட்டிப்பிடித்து அழுதார்... மது சிரிக்கிறாள்..

" அம்மா என் நடிப்பு எப்படி..இனி மாப்பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்கும்வரை ரகுவுக்குத் தெரியாமல் நாம் உதவணும்..?"
" என்னமோ மா. ரகுவை, மாமாவை உன்னால்தான் சமாளிக்க முடியும்...நான் செய்த புண்ணியம் நீ கிடைத்தது.."

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆனால் 10 வருடம் முன் உள்ள கோபம் வேறு. இப்போது வேறு .. அப்போது ரகு மதுவின் பின்னால் பூனைகுட்டி போல , எப்போதும் அவளுடன்.. ஆனால் இப்போது பிரிவு சகஜமான ஒன்று.. இப்போது பேசுவதே அபூர்வம்..
*************************************************************************தொடரும்...******************************************************

Saturday, February 23, 2008


பாகம் - 10

மறுபடியும் அலுவலகம் வந்தவளை வேந்தன் தொலைபேசியில்..
" இன்று முக்கிய ஆலோசனை.உள்ளது... எங்கள் வீட்டில் இரவு விருந்தில் கலந்து கொள்ள முடியுமா?"
சரி என்கிறாள்.. வேறு வழியில்லை..


மாலை சென்றதும் பெறியவரை சந்திக்க அவரது அறைக்கு அழைத்துச்செல்லப்படுகிறாள்.
" இப்பதான் மா உன்மேல என் மகனுக்கு நம்பிக்கை வந்திருக்கு. எனக்கு ரொம்ப சந்தோஷம்..
" அவன கூட்டிட்டு நம்ம எஸ்டேட் எல்லாம் சுத்தி காண்பித்து விவரங்கள் தரணும் மா. அவன் ரொம்ப
நல்ல மனதுக்காரன் மா..என் மத்த பையன்கள் போல் அவனுக்கு சுயநலமில்லாதவன்.. "


" சரி ஐயா. "
" அம்மா மது அப்படியே அவனுக்கு இன்னொரு திருமணம் செய்ய நீதான் அவன் மனதை மாற்றணும்."
" ஹிஹி.. சரி அய்யா.."
அதற்குள் வேந்தனும் வந்து கலந்து கொள்கிறார்...எல்லா விஷயத்தையும் கலந்தாலோசிக்கின்றனர்.
சாப்பிட அழைப்பு வந்ததும், பெரியவர் எழும்ப முயல, மது கை கொடுத்து தூக்குகின்றாள்..


அவள் கை பிடித்தே நடந்தும் வருகிறார்.. வேந்தனுக்கு ஆச்சர்யம்.. யாரையும் அனுமதிக்காத அப்பா,
மதுவுக்கு மட்டும் ...அவள் அலட்டிக்கொள்ளாமல் அக்கறை கொள்ளும் விதமோ இன்னும் அருமையாயுள்ளது..
வேலை ஆட்கள் பலர் இருந்தாலும் மதுவே பார்த்து பார்த்து பரிமாறுகிறாள், தந்தைக்கு...
மறுபடி தனக்கும் இப்படி ஒருத்தி அமைந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நினைக்கிறார்..
அப்பாவிடம் உரிமையோடு நடந்தாலும் தன்னிடம் மிக அளந்தே பேசுகிறாள்...


நாம் அவளிடம் கொஞ்சம்
கடுமையாக நடந்துகொண்டோமோ என்று நினைத்து , இனி அவளிடம் நல்ல நட்பு பாராட்ட
வேண்டும் என்று நினைக்கிறார்.... சசல அலுவலக கோப்புகளை பார்க்க மாடிக்கு அழைத்துச்செல்கிறான் வேந்தன்..

அங்கு அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் கோப்பைகளை , புத்தகங்களை, பெயிண்டிங்குகளை அதிசயத்துடன் பார்க்கிறாள்..

" இவையெல்லாம்.."

" ஆமா என் இள்மைக்காலத்தில் எனக்கு கிடைத்தவை.. புத்தகங்கள் என் தோழன்... தோட்டக்கலை, பெயிண்டிங் , இப்படி பல பொழுதுபோக்கு.."

புத்தகம் , எழுத்தாளர் பற்றி பேசுகிறார்கள்.. சந்தோஷமாக சிறு குழந்தைபோல புகைப்படங்கள் , எல்லாவற்றையும் காண்பிக்கிறார்.. இருவரும் கொஞ்ச நேரம் தத்தம் கவலை மறந்து பேசுகின்றனர்.


வேந்தனுக்கு ஆச்சர்யம்.. இதுவரை தனிமை விரும்பியாயிருந்த அவர் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக ஒரு பெண் தன் மனதை அலைக்களிப்பதை தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்.

மதுவுக்கு வேந்தன் நட்புமுறை பாராட்டுவது அலுவலகத்து பொறுப்புக்கு எளிதாகப்படுகிறது..மேலும் அய்யா சொன்னதுபோல் திருமணம் பற்றி அவரிடம் பேச ஏதுவாயிருக்கும் என நினைக்கிறாள்..

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விருந்து முடிந்து வீட்டுக்குப்போகும் போது இன்று இரவு எப்படி போகுமோ , விசாலம் அம்மாவுக்கு தெரியுமோ, என்னாகுமோ என்று கலங்குகின்றாள்..அப்படியேதுமில்லை..

படுக்கும்போது மறுபடியும் ரகு ,

" ஏதாவது சொல்லணுமா.."

"..ம்.."

"என்ன.."

" யாருக்கும் இன்னும் கொஞ்ச நாள் தெரியவேண்டாம்.. அவர்கள் தாங்க மாட்டார்கள்.."

"..ம்.." அவன் சென்றுவிட மனசு கனத்தது..அலுப்பு அதிகமானதால் தலைவலியுடன் தூங்கியும் விட்டாள்..

--------------------------------------------------------------------

மறுநாள் சனிக்கிழமை.. விசாலம் அம்மா மகள் பரமுவை பார்க்க செல்வார்கள்.. சிலசமயம் மதுவும் கூட.
மதுவைக்கேட்கலாம் என்று சென்றவருக்கு நல்ல காய்ச்சலில் மது முனகிக்கொண்டிருப்பது தெரிகிறது...

" என்னம்மா ..இது.. எப்போதிருந்து ..எனக்குத்தெரியாதே.." பதருகிறார்..

மாத்திரை கொடுத்து வருடுகிறார்.. ரகு வருகிறான் ..

" அம்மா ., கிளம்புறேன்.."

" மதுவுக்கு காய்ச்சல்னு என்கிட்ட சொல்லக்கூடாதப்பா?..."

முழிக்கிறான் ரகு..

" இல்லம்மா , அவருக்கும் தெரியாது.. நான் சொல்லல..."

" வித்தியாசமாக உணர்கிறார்.. ரகு எப்பவும் பதருவானே..

" என்னமோ மா , நல்ல பொண்ணு, இப்படி காய்ச்சல் அடிக்குது...வேலை வேலைன்னு..."

"அதேதான் நானும் சொல்றேன் வேலைதான் அவளுக்கு முக்கியம்..மனுஷாள் இல்ல.."

" சரி இப்போ அவள குழப்பிட்டு இருக்காம டாக்டர்கிட்ட கூட்டிட்டு போ.."

" இல்லம்மா வேண்டாம். சரியாயிடும் ஓய்வு எடுத்தா... நீங்க கிளம்புங்க கோவிலுக்கு.."

அம்மா சென்றதும் , " ஏதவது உதவி வேணுமா "

" வேண்டாம் .. நன்றி.."

" இந்த திமிருக்கொண்ணும் குறைவில்லை.." எரிச்சலாய் போகிறான்..

புரியவில்லை , இவளுக்கு, வேறு என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறான்...

ஆனாலும் அவன் பேசிய , திட்டிய 2 வார்த்தை ஆறுதலாயிருந்தது.. என் ரகு கோபப்பட்டாலும் என்னிடம்தான் இருப்பான் என்ற தெம்பு வந்தது... அது பொய் என்று தெரியாமல்..

Friday, February 22, 2008

லேசா லேசா பாகம் 9


இதோ கதைச் சுருக்கம்!

ரகு, மது, வேந்தன் என மூவர்.ரகு மதுவைக் காதலித்து மனைவியாக்கி, இப்போது விவாக ரத்து கோரும் நிலையில்! லண்டனில் இருந்து திரும்பிய, வேந்தன் கம்பெனியில் பணி புரியும் மதுவுக்கு இது அதிர்ச்சி அளிக்கிறது.வெள்ளைக்காரப் பெண்ணை மணந்து முறிவு பெற்று, இப்போது பெண்களை வெறுக்கும் வேந்தன்மது, ரகு இவர்களது காதல் நினைவுகள் இந்த பதிவுகளில்!தனக்குக் கீழே பனிபுரியும் மதுவைத் தான் மணக்க விரும்புவதாக ரகு சொல்ல, குழம்பிய நிலையில் இருக்கும் மதுவைப் பெண் பார்க்க ரகு வருகிறான், மதுவின் தந்தை, அவர்கள் குடும்ப டாக்டர் துணையுடன்! .ரகுவின் அம்மா விசாலம், மதுவையே பெண்ணாகக் கருதும் ஒருவர்,மதுவை திருமணத்துக்கு ரகுவிடம் பேசி மனதை மாற்ற அவன் கைபற்ற அவனோ விலக, பழைய ஞாபகம் சுவைக்கிறது.. அவன் கரம் பற்றிய முதல் பொழுதுகள்..மன்மத காதலுக்கு போட்ட விதைகள்... முன் 'ஜொள்ளிட்ட' முனீஸ் இவர்களும் ஒரு ஓரத்தில்... இக்கதையில்! இனி கதையை மேலே படியுங்கள்!:))))))))))).

பாகம் - 9

வேந்தன் மதுவைப்பற்றிய குழப்பத்திலேயே இருந்தான்... அவளை அப்பா சொல்வதுபோல்
உண்மையாக புரிந்துகொள்ளணும்.... பார்க்கலாம் திருப்பூர் ஆலை விஷயத்தில் என்ன சொல்கிறாள்
என்று... ஏற்கனவே அதை மூடிவிட்டு வேறு நல்ல தொழில் ஆரம்பிக்க புராஜக்ட் எல்லாம் ரெடி..
அப்பாவிடமும் விளக்கம் கொடுத்து சம்மதமும் அனேகமாக பெற்றாலும் , இறுதி கூட்டம் வரும் புதனன்று
கூட்டம் ஆரம்பித்தது.. எல்லாரும் பேசி முடித்ததும் வழக்கம்போல் பெரியவர்


" உன் கருத்து என்னம்மா..?.."
" எனக்கு முழு சம்மதம் , அந்த தொழிற்சாலையை மூடுவதற்கு அய்யா..."
வேந்தனுக்கு அதிர்ச்சி... அவளை மடக்கிவிடலாம் என்று எண்ணியவருக்கு ..
" அந்த பகுதி மக்கள் இந்த களிவு நீராலும், காற்றும் மாசு பட்டுள்ளது.. மூடுவேதே நல்லது..."
வேந்தனுக்கு ஒண்ணும் புரியவில்லை,, அவள் சிந்தனையே வேறாக இருக்கிறதே..



முதல் முறையாக அவள் மேல் மரியாதை வருகிறது...அவளும் அப்பாவும் சாதாரணமாக சிரித்துக்கொண்டு
வெளியே செல்கிறார்கள்.... அப்பாவிடமும் அவளைப்பற்றி சொன்னதும் மத்த எஸ்டேட்களையும் அவளுடன் சேர்ந்து
பார்த்து அவளிடமிருந்து விவரம் கற்றுகொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.
அடுத்த வாரமே அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார் வேந்தன்...மனதுக்குள் மது நினைப்பு..



--------------------------------------------------------------------------------------------------------------------------
அலுவலகத்துக்கு வந்த பின் எப்போதும் வீடு பற்றிய நினைப்பே இருக்காது மதுவுக்கு.. அன்று
மண்டையை குழப்புகிறது ரகுவின் நேற்றைய செயல்...இருந்தாலும் நாம் தாழ்ந்து போகலாம்,..
என் மேலும் நிறய தப்பு இருக்குதே.. ஒரு மனைவியின் கடமையை நான் முழுதாக செய்யவில்லையே..



அவன் கோபம் நியாமானதே.. பேசினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்கையில் தொலைபேசி அழைக்கிறது..
" நான் ரகு பேசுரேன்.."
" சொல்லுங்கப்பா.." சந்தோஷமாக...
" இன்னிக்கு சாயங்காலம் வக்கீல் அலுவலகத்தில் 3 மணிக்கு சந்திக்கணும்..."
" எதுக்கு ரகு.."


" நம்ம பிரிவு பற்றி முடிவெடுக்க..."
" ........."
" என்ன வர முடியுமா , இல்ல.."
" ரகு.. நான் சொல்ரத ..."


" ஜஸ்ட் டெல் மி, முடியுமா, முடியாதா..."
" சரி.ப்...பா.."


பிரமை பிடித்தவள் போல் மது தலையில் கைவத்து அப்படியே மேஜையில் தலை சாய்த்தாள்..

" மே ஐ கம் இன்.." வேந்தன்...

" சார்.. நீங்க.. ..சொன்னீங்கன்னா நானே வந்திருப்பேனே..."
" நன்றி. இன்றைய முடிவுக்கு.. அடுத்த வாரம் எஸ்டேட் போக நேரமுண்டா உங்களுக்கு..."


" போகலாமே..."

" நன்றி வருகிறேன்..."

எல்லாவற்றையும் மூடிவிட்டு, யோசிக்கிறாள்... ரகு என் மேல ஏன் இவ்வளவு கோவம்?..

சரி என்னை விவாகரத்து பண்ணிவிட்டு என்ன பண்ணப்போரீங்க?.. மறுமணமா?... எப்படி முடியும் ரகு....

என்னை உங்கள் மனதிலிருந்து நீக்குவது அவ்வளவு எளிதா...?. இல்லை நடிக்கிறீர்களா?..
ஏன் இவ்வளவு அவசரம், அனக்கேதும் அவகாசம் குடுக்காமல், என்னிடம் பேச விரும்பாமல்..


என்னை தண்டிப்பது மட்டுமே உங்கள் நோக்கமாகத் தெரியுது.. கண்டிப்பா இன்னொரு திருமணத்துக்கு
நீங்கள் தயாரில்லை என்று எனக்குத் தெரியாதா?. சிரிப்புதான் வருகிறது.. ஆனாலும் நான் என்ன செய்தாலும்
உங்கள் வேகம் அதிகரிக்குமே தவிர குறையாது...


முள் மேல் விழுந்த சேலை, மெதுவாகத்தான்
எடுக்கணும்.. யாருக்கும் காயமின்றி.. ஆனால் நான் மிகவும் தளர்வாய் ஆகிவிடுகிறேனே, உம்
ஆதரவின்றி.. என்னைத்தவிர்ப்பது தாங்க முடியாத கொடுமையாக உள்ளதே.. யாரிடமும் பகிர கூட முடியாதே..


எல்லாரும் உன்னைத்திட்டி உன் கோவந்தான் அதிகரிக்கும் என்மேல்.. மனதுக்குள்ளேயே வைப்பது அதனினும் கொடுமை..
" நிஷா, நான் சொல்லப்போர விஷயத்தை கேட்டுக்கோ, ஆனா யாரிடமும் , முக்கியமா, எங்க வீட்டுக்கும்,
அவர் வீட்டுக்கும் தெரியக்கூடாது...மனச்சுமை இறக்கத்தான் உன்னிடம்...நீ உடனே பயப்படாதே .. சரியா?.."


" அய்யோ என்ன விஷயம் னு சொல்லு சீக்கிரம்... இப்பவே பயமாயிருக்கு.."
" ரகு என்னை பிரிய விரும்புகிறார்..."
" பைத்தியாமா என்ன அவருக்கு.. நான் பேசுகிறேன் இப்பவே...விளையாடுவாராயிருக்கும்..."


" சொன்னேன்ன்ல, அவசரப்படாதே.... பார்க்கலாம் கடவுள் சித்தம் என்னன்னு..."
" எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லிட்டு..." அழுகிறாள்..நிஷா.


" நீ ஏன் அழுகிறாய்.. ச்ச். நீ எனக்கு தைரியம் சொல்லுவாய் என்று நினைத்தால்... மொதல்ல
அழுரதை நிப்பாட்டு... எனக்கும் அழுகைவருது.........."
"........."
"..........."
" சரி பெரியவ என்ன பண்ணுகினறாள்..." பேச்சை மாற்றிவிட்டு, மது சாப்பிட பிடிக்காமல் காஃபி
மட்டும் குடித்துவிட்டு அலுவலக வேலைகளில் மூழ்குகிறாள்..
--------------------------------------------------------------------------------------------------------------------------


மாலை 3..00 மணி..

ரகுவும் மதுவும், ஒரே அறையில் காத்திருக்கிறார்கள்...ரகுவாகப்பேசட்டும்.. என்று மது.. அவளைப்
பார்த்தாலே பேசவேண்டிவரும் என்று செய்திதாளில் ரகு...


என்ன ஒரு அசிங்கமான சூழல்.... வக்கீல் அழைத்து விசாரித்து 6 மாதமாவது இருவரும் தனியாக
இருக்குமாறு சொல்கிறார்... இருவரும் விரும்பிதானே பிரிகிறீர்கள் என்று கேட்கிறார்..
இல்லை என்று சொல்லகூட மதுவுக்கு முடியவில்லை.. ரகு அங்கேயே கத்த ஆரம்பித்துவிடுவான்..


கோவத்தின் உச்சியிலிருக்கான்... இப்போதைக்கு அவன் வழி சென்று நிதானமாக செயல்படுவோம்
என்று பிரம்மையில் எல்லாவற்றுக்கும் தலையாட்டுகிறாள்... அவளுக்கு கவலையெல்லாம் எப்படி விசாலம் அம்மாவிடமும்
பிள்ளைகளிடமும் மறைப்பது என்பதுதான்..


இப்போது முதல்முறையாக கோவம் வருகிறது அவளுக்கு
அவளின் இயலாமை குறித்து...எல்லா பேப்பரிலும் வெறியோடு கண்ணீரோடு உஅதட்டைக்கடித்துக்கொண்டு
கையெழுத்து போட்டுவிட்டு ரகுவை திரும்பி கூட பார்க்காமல் வெளியேற,
" மது .. .."


"...."

" மது... இப்ப பேசலாம்....."

" இனி என்ன பேச ரகு...சந்தோஷம்தானே...." கண்ணீருடன் சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு
காரில் ஏறி செல்கிறாள்....


காரில் குலுங்கி குலுங்கி முதல் முறையாக அழுகிறாள்.......

---------------------------------------------------------------------------------------------

மறுபடியும் அலுவலகம் வந்தவளை வேந்தன் தொலைபேசியில்..

" இன்று முக்கிய ஆலோசனை.உள்ளது... எங்கள் வீட்டில் இரவு விருந்தில் கலந்து கொள்ள முடியுமா?"

---------------------------------------------------------------------------தொடரும்........

Thursday, February 21, 2008

லேசா லேசா நீயில்லாமல் பாகம் - 8
================================


வேந்தன் அப்பாவின் அழைப்பின் பேரில் அவரைக் காணச் செல்கிறான்..


" என்னப்பா உன் மலைப்பயணமெல்லாம் சிறப்புதானே..?"

" ஆமாப்பா. உங்கள் உடல்நலம்...?"

" எனக்கென்னப்பா.. எப்பவும் இளமைதான் மனதில்.. உடம்புக்கென்ன . எனக்கு கவலையெல்லாம் உன்னைப்பற்றிதான்..

நீ ஏன் இன்னொரு திருமணம் செய்து குழந்தை, குட்டின்னு, நல்லமுறையில் இருக்கலாமே...உன் தனிமை எனக்கு
பயமளிக்கிறதே..."


" ஹாஹாஹா. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. எனக்கு நல்ல பொழுதுபோக்குகள், புத்தகங்கள், என்று நிறய உள்ளதே.

இன்னொரு திருமணம் பற்றி பேச்சுக்கே இடமில்லை அப்பா.. அது குறித்து நீங்கள் வருந்தாதீர்கள், தயவுசெய்து அது பற்றி
பேசவும் வேண்டாமே....என்னுடைய வாழ்க்கை இனி இந்த தொழில் முன்னேற்றத்தில்தான்...திருப்தியும் கூட...
ஆனால் என்ன என் அலுவல் இந்த மதுகோட இருப்பது மட்டுமே கொஞ்சம் சிக்கலாய் உள்ளது"சிரித்துக்கொண்டே கூற,


" இல்லை இல்லை, உனக்கு அவளைப்பற்றி அதிகம் தெரியாது... அவளைவிட புத்திசாலிகளை பார்த்திருப்பாய்.. மறுக்கவில்லை..
ஆனால் அவளுடைய மனிதத்தன்மையுள்ள செயல்பாடுகளும், கடின உழைப்பும், அனுசரித்துப்போகும் குணமும், வித்தியாசமானவை .."


" நீ வேணா பாரேன், கொஞ்ச நாளில் உனக்கும் புரியும்..."

" ..ம்...சரி..."என்று மட்டும் தலையசைத்தான்..." அப்பா வயதானவர் .. திருத்த முடியாது என்று நினைத்துக்கொண்டு..

இருவருமே கொஞ்சம் கனத்த மனதுடன் விடைபெறுகிறார்கள்..
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ரகுவின் முடிவு விளையாட்டாகவே இருக்கும் , நாம் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டாள்.
என்ன இருந்தாலும் என் கணவ்ர் தானே, எத்தனை எத்தனை பிரச்சனைகளை கடந்து வந்துள்ளோம் இருவரும்... எத்தனை முறை ஆறுதலாய்
தந்தையாய் , அண்ணனாய், நல்ல தோழனாய் துணை இருந்தான் ரகு... தன் பிரசவத்தின் போது ஒரு தாய்க்கும் மேலாக பாசம் காட்டி பார்த்தாரே..
என்ன ரகுவுக்கு குழந்தை போல் கோவம் வரும் அடிக்கடி.. அதுவும் பின் சரியாகிவிடும்...சகஜம் தானே...


இன்று நாமே சென்று வலிய
அவனுடைய பிரச்சனை பற்றி கேட்க வேண்டும்... அலுவலகத்தில் மலையளவு பிரச்சனை வந்த போது சமாளிக்கவில்லையா?..
ரகுவின் தங்கை, திருமண பிரச்சனை எவ்வளவு பெரியது.. நடத்தினோமே...


தனக்குத்தானே தைரியப்படுத்திக்கொண்டு, கடவுளிடம் வேண்டிக்கொண்டு
அன்று இரவு படுக்குமுன் பேசிட தயாரானாள்..


ரகு கணினியில் மும்மரமாயிருந்தான்...

எப்படி அணுகுவது , ஆரம்பிப்பது என்று தயக்கம்.. பொறுத்து பொறுத்து அறைமணிநேரமாகுது... இதயம் வேகமாகத்துடிக்குது...
தன்மேல் நம்பிக்கை குறையுது.. பயம் வருது..


இறுதியில் குழந்தைபோல் ஆகுது மனம்... மெதுவாக அவனருகில் சென்று அவன் கையை மட்டும் பிடிக்க அவளைப்பாராமலே கையை மட்டும் தருகிறான்..

முதல் தோல்வியாய் படுகிறது அவளுக்கு...

10 நிமிடத்துக்குப்பின் அவன் கையை தானாகவே விடுவித்துக்கொள்கிறான்...
இரண்டாவது தோல்வி..


இருந்தாலும் மனம் தளராமல்,

" ரகு நாம் இப்போது பேசலாமா , சிறிது நேரம்.."

".." பதிலில்லை..

" ரகு..."

" ம்.."

" எனக்காக கொஞ்ச நேரம்..."

" எனக்கு நேரமில்லை... என்னைத்தொந்தரவு செய்யாதே தயவுசெய்து...."
கடினமாக...வருகிறது...

ஏமாற்றத்தில் அதிர்ந்துதான் போகிறாள்....என்னுடைய உரிமைகள் இழக்கின்றேனே ...சுயபச்சாதபம் வருமுன் தூங்கிவிடலாம்
என்றெண்ணி கீதையில் இரண்டு வரி வாசித்துவிட்டு படுக்கச்செல்கிறாள்...இதே கைகள் முதன்முதலில் பற்றியபோது..


---------------------------------------------------------------------------------------------------------------------------------
ரகு நிச்சயம் முடிந்ததும் கீதாம்மாவிடம் மதுவைப்பற்றி மேலும் தெரிந்துகொண்டு, அவள் மேலே என்ன செய்யவேண்டும் என்று
பேசிவிட்டு, தினமும் சாயங்காலம் தான் கொண்டுவந்துவிடுவதற்கு சம்மதம் பெறுகிறான்...


அடுத்த நாள் அலுவலகத்தில் இருவரும் சந்திக்கும் போது இருவருக்குமே பேச வரவில்லை... முதல் நாளே ஒருவழியாக சமாதனாமாகிவிட்டாள்
மது.. குறை என்று சொல்ல ஒன்றுமேயில்லை.. எல்லோருக்கும் சந்தோஷம்..


தன் ஒருத்தியின் பிடிவாதத்தை விட்டுக்கொடுப்பதில் தவறில்லை..
டாக்டரிடம் மட்டும் நேரம் கிடைத்தால் சண்டைபிடிக்கணும் என்று சிரித்துக்கொண்டாள்..


ரகுவிடம் தொலைபேசியில் தயவுசெய்து அலுவலகத்தில் யாருக்கும் சீக்கிரம் தெரியவேண்டாம் என்று கேட்டுக்கொண்டாள்..

"அப்படின்னா நீ முனீஸ் கிட்ட பேசாதே " என்று கண்டிஷன் போடுகிறான் ரகு... சிரித்துக்கொண்டார்கள் இருவரும்...

சாயங்காலம் மிக மகிழ்ச்சியாக அவளை அழைத்துக்கொண்டு செல்லும்போதும் மெளனமே நிலவ...எப்படி ஆரம்பிக்க,

என்ன பேச .. தெரியவில்லை இருவருக்கும்... வெட்கம் ..

" காஃபி ஷாப் போகலாமா..?.."

" வேண்டாம் சார்.. அம்மா தேடுவாங்க..."

" சாரா..?.. என்ன இது.. ரகுன்னு சொல்லு.."

" எனக்கு வராது.."

" வரணும்.." அழுத்தமாக...

" வேண்டாம் .. சார்.. அப்புரம் சொல்ரேனே.."

" நொ. இப்ப சொல்லணும்.."

" சொ.. ல்......லு . கால் மி ரகு.."

" அப்போ நான் இறங்கி போயிடுவேன்.."

" அப்பா . இதுக்கொண்ணும் குறைவில்லை.."

" ஒகே. ஒகே.. . ஆனா இனி ரகுன்னு தான் கூப்பிடணும் சரியா.."

தலையாட்டிவைக்கிறாள்..அதற்குள் அவள் வீடு வந்ததும்.. கை நீட்டுகிறான் ரகு..

பதரித்தான் போகிறாள்..அப்படியே இருக்கையில் சாய்கிறாள்..பார்வை வெளியே பார்த்துக்கொண்டு..

என்ன இது இப்படி கஷ்டப்படுத்துகிறானே....

" ..ம் .." மறுபடியும் இவள் கை கேட்கிறான்...

பெண்ணின் தயக்கம் , பயம் அறியாயோ ரகு,.. அதுவும் என் வீட்டருகில்...

" என் வீடு வந்துவிட்டது.. நான் போகணும்..."

" தெரியும்.. கைகொடுத்தா என்ன குறை...சீக்கிரம்...இல்லாட்டி போக மு..டி..யா..து..."

என்னவோ செய்கிறது பலமிழந்து..." நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.." வெளியில் பார்த்துக்கொண்டு,
அவனைப்பார்க்க முடியாமல். முதன்முறையாக மென்மையாக அவள் கரம் பற்றுகின்றான் ரகு...


அவன் விரல்கள் , கண்கள் , ஆயிரம் கவிதைகள் , கதைகள் சொல்லுது அவனின் காதல்...

அவளின் கண்களிலோ கண்ணீர்.. போதும் அவளை இனிமேலும் தர்மசங்கடத்தில் ஆளாக்கக்குடாது என்று..

விடுதலை கொடுக்கிறான்....இப்போது அவளுக்கு விட மனமில்லை... இவனல்லவோ என் துணைவன்...

மென்மையானவன்...முதன் முறையாக காதல்வயப்படுகிறாள் மது...

-----------------------------------------------------------------------------தொடரும்......


Wednesday, February 20, 2008

பாகம்- 7 .சுந்தரி கண்ணால் ஒரு சேதி.....
===================================
அப்பா சொன்னதும் எரிச்சலாய் வந்தது.... நான் ஏதாவது செய்தால் ரகு இன்னும் வேகமாக காரியத்தில்
செயல்படுத்துகின்றாரே.....


" என்னப்பா இது அதுக்குள்ளேயேவா?.."

" இல்லம்மா நாளை நல்ல நாள். அதைவிட்டால் இன்னும் 1 மாதம் ஆகும்...அதான் சரின்னு சொல்லிட்டேன்.."

" சரிப்பா ஆனால் முடிவே பண்ணிவிடாதீர்கள்"
சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றவளின் காதுகளில்
ரகுவின் வார்த்தைகள் தொந்தரவு தந்தது...

"நிஷா இனி என் தங்கைதான்"... என்ன நல்ல மனசு..

."நீதான் என் மனைவி, அதில் எந்த மாற்றமுமில்லை.".. என்ன தைரியம்...ஆனாலும் எனக்கு சம்மதமில்லையே...

------------------------------------------------------------------------------------
வீடே கலகலப்பாயிருந்தது... அண்ணா குடும்பத்தினர் குழந்தைகளோடு வந்தது மதுவுக்கு குதூகலம்..


பெண் பார்க்க வருகிறார்கள் என்பதை மறந்து விளையாடிக்கொண்டிருந்தாள்...
கீதாம்மாவும் அவர் மருமகள் ஷைலஜாவும் மைசூர்பாக் செய்வதில் பிஸியாக இருந்தார்கள்.


அவர்களோடு சமூக ஆர்வலரான எதிர்வீட்டு சீதாம்மாவும் கலந்துகொண்டார்கள்..

அப்பாவும் சூர்யா அண்ணாவும் வீட்டை ஒழுங்குபடுத்தினார்கள்....

முதலில் வந்தது டாக்டர்... வந்ததுமே கலகலப்பாகிவிட்டது வீடு... அடுத்து நிஷா தன் குழந்தைகளுடன்..

வந்ததும் மதுவுக்கு அலங்காரம் பண்ண ஆரம்பித்தாள்.. அவளோ ஒரே பிடிவாதம் , சாதரண புடவை போதுமென்று..

" அடி கண்ணே, இதுவும் பெண்ணுக்கு முக்கியமான முதல் நாளோல்லியோ..." சீதாம்மா..

" எனக்குதான் அந்த சந்தர்ப்பம் இல்லை, உன் மூலமாவது நிறைவேத்திக்கிறேன் பா.." நிஷா..

" என்னை என்ன பாடு படுத்தின. ம். இப்ப நீ பட்டுப்புடவை கட்டியே ஆகணும்.. கூட என்ன நகைகளையும்
போட்டுக்கணும்..." மன்னி சைலஜா...


கீதாம்மா புன்னகைத்துக்கொண்டார்.தான் தப்பித்தோம், தன் வேலை சுலபமாயிற்றென்று..

6 மணிக்கு ரகு , சுந்தர் தன் மனைவி , 2 பசங்களுடன், ரகுவின் தங்கை பரமேஸ்வரி, விசாலம் அம்மா, அப்பா.

அனைவரும் வந்ததும் டாக்டர் பாட்டுபாடி வரவேற்றார்...

" அடியே என் கள்ளி, மாப்பிள்ளை ரொம்ப அழகுடி.. உனக்கு வேண்டாம்னா சொல்லு நான் ரெடி." என்று சீதாம்மா

வேறு சிரிக்க வைத்துக்கொண்டிருக்க, மற்ற அனைவரும் மாப்பிள்ளையை ஜன்னல் வழியாக பார்க்க போட்டி
போட்டுக்கொண்டிருந்தனர்..அனைவருக்கும் பஜ்ஜி சொஜ்ஜி மைசூர்பாக்குடன் பரிமாறப்பட்டது...


" பெண்ண கூட்டிண்டு வாங்கோ " டாக்டர் சங்கர்...

சுந்தர் நிமிர்ந்து உட்கார்ந்தார்..." நீங்க ஏன் நிமிர்ந்து உக்காருரீங்க.. மாப்பிள்ளை நீங்கன்னு தப்பா நெனச்சுக்கப்போறா.."

எல்லாரும் சிரிக்க, அழகாக அம்சமாக காபி தட்டுடன் மது குனிந்த தலையுடன், அதிக வெட்கத்தோடு
நடை மறந்து, யாரையும் பார்க்கும் சக்தியின்றி , மல்லிகைப்பூக்கள் ஜிமிக்கியோடு போட்டிபோட்டு
தோளிலாட, பட்டுப்புடவை சரசரக்க வருகிறாள்..


நிசப்தம்..பார்த்த மாத்திரத்தில் ரகுவுக்கு, கவிதை தோன்றுகிறது...

"ஆயிரம் முறை அலுவலகத்தில்
வேலை கருத்தோடு பார்த்தாலும் ,
கோபத்தில் நீ முறைத்தாலும் ,
அன்னநடையில் உன் வெட்கத்தாலும்,
புதுஅனுபவத்தின் பயத்தாலும்,
தேவதை உன் அலங்காரத்திலும்
அள்ளிச்செல்கிறாயே என் மனதை கள்ளியே"

மெய்மறந்து புதிதாகப்பார்ப்பவன் போல் மயங்குகிறான்...

காபி கொடுப்பதற்குள் தடுமாறித்தான் போகிறாள் பேதை..விசாலம் அம்மா தன் அருகில் அமரச்செய்கிறார்.
அதற்குள் சின்னஞ்சிறு குழந்தைகள் , மதுவிடம் ஓடிவந்து ,


" ஏன் சாமி மாதிரி இவ்வளவு நகை போட்டிருக்க?.."

" நீ மட்டும் நிறய பூ வெச்சுருக்க".. என்று மடியில் ஏற முயலுகிறது மற்றொன்று..
அவளின் தர்மசங்கடத்தை ரசிக்கிறான் ரகு...


ஷைலஜா , சீதாம்மா, கீதாம்மா , எல்லோருக்கும் ரகுவைபற்றி ரொம்ப திருப்தி..

அதேபோல் " அண்ணா எனக்கு ஒகே" பரமேஸ்வரி..." எனக்கும் தான்" விசாலம் அம்மா.
விரல்களோடு விளையாடிக்கொண்டிருந்த மதுவிடம் " என்னம்மா நீ ஏதாவது பேசணுமா" டாக்டர்..


இல்லை என தலையாட்டுகிறாள்..

" பெண்ணை பாட்டுபாட சொல்லணுமா..இல்லாட்டி நான் பாடவா " சிரிக்கிறார்கள் அனைவரும்...

" நீங்க எதாவது பெண்கிட்ட பேசணுமா மாப்பிள்ளை சார்.?." டாக்டர்...சங்கர்.

" பேசணும் , பெண்கிட்ட இல்லை, ஆனால் அவள் அம்மாவிடம்..." ரகு

எல்லோரும் ஆச்சர்யப்பட , கீதாம்மா ரொம்ப வெட்கப்படுகிறார் , மதுவைவிட..

சரி அதுக்குமுன்னால் தட்டு மாத்திக்கொள்ளலாம் என்றதும் தான் விபரீதம் புரிகிறது மதுவுக்கு...

" எதுக்கும் என் பெண்ணிடம் ஒரு வார்த்தை.."மதுவின் அப்பா

" ஹாஹாஹா. மது என் பெண். என் பேச்சை என்று தட்டியிருக்கிறாள்..இல்லம்மா..?.. தட்டை எடுங்க" டாக்டர் சங்கர்.கட்டளையிருகிறார்..

.மது யோசிப்பதற்குள் எல்லாம் முடிந்தது.. நல்லபடியாக..

ரகு கீதாம்மாவை தொடர்கிறான்...............................................

-------------------------------------------------------------------------------தொடரும்....

Tuesday, February 19, 2008

பாகம் - 6----என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா..?

பாகம் - 6----என்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா..?===================================================

எல்லாரையும் விசாரித்து இவ்வளவு சீக்கிரமாக சம்மதிக்க வைக்கிறாரே என்று வியப்புடன் கூடிய கோவமாய் வருது
மதுவுக்கு... அப்பாவின், நிஷாவின், டாக்டரின், அண்ணாவின், .. யார் வார்த்தையும் தட்ட முடியாது போகவே
கோவம் அதிகமாகுது..


இன்று நேரில் பேசிவிடணும் என்று வந்தவளுக்கு தன் மேஜை மீது பெயரில்லாமல் ரோஜா
பூங்கொத்து இருப்பது கோவத்தை அதிகப்படுத்துது..முன் அனுமதி பெறாமலேயே அவர் அறைக்கு செல்கிறாள்..


" மன்னிக்கணும் சார்.. நான் உங்களிடம் பேசலாமா".. ரகுவை பார்க்காமல் மேஜையைப்பார்த்து பேசுகிறாள்...

புரிந்து கொள்கிறான் ரகு அவள் கோவத்தை, புன்னகையுடன்....

" தாராளமாக....சொல்லுங்க...உட்கார்ந்து பேசலாமே .."

" என்ன நினைத்துக்கொண்டிருக்கீங்க சார். . உங்க மனசில...?...பெண் என்றால் , அதுவும் அதிகாரி என்பதால்...."

பேச முடியாமல் அழுகை வருகிறது அவளுக்கு...அவள் கோவம் ரகுவுக்கு விளையாட்டாய் இருக்கு.. மனதுக்குள் சிரிப்பு..

" எனக்குதான் இஷ்டமில்லைனு சொல்லிட்டேனே.. அப்புரமும் ஏன் இப்படி...".

" உங்களுக்கு வேற பொண்ணே கிடைக்கலயா?.. ஏன் என்னை படுத்துரீங்க... உங்க அதிகாரத்தை பயன்படுத்துரீங்களா...?."

சுரீரென்றது ரகுவுக்கு,,,

" போதும் மது... "

" உங்களை சந்திக்கவே பிடிக்கல.."

" நிப்பாட்டுங்கன்னு......சொன்னேன்..."கொஞ்சம் சத்தமாகவே எழுந்து...

" சார்.. நான்...." கையை காண்பிக்கிறான் போதும் என்று...

" ...ப்போதும்.. எதுவும் சொல்ல வேண்டாம் இனி...எனக்கு ஏன் உன்னை பிடிச்சுருக்குன்னு சொல்ல தெரியலை..
ஆனா நீ என் வாழ்க்கைத்துணையா வந்தா நல்லாயிருக்கும்னு நினைத்தேன்.. யு ஆர் இன் சம் வே ஸ்பெஷல்.."


" இனி நான் உன்னைத்தொந்தரவு பண்ணவே மாட்டேன்...அது என்னுடைய பூங்கொத்தும் இல்லை..."

அதிர்ச்சியாகவும் , அசிங்கமாகவும் ஆகிவிட்டது மதுவுக்கு.. தன் தவறை உணர்கிறாள்..

" மன்னிக்கணும் சார்..." அவசரமாக வெளியேறுகையில்...

" ஒரு நிமிஷம். மது.. ஆனால் நீ மட்டும் தான் என் மனைவி என்பதில் எந்தவித மாற்றமுமில்லை.."

" மேலும் நிஷா இனி எனக்கும் தங்கைதான்..நம் திருமணம் நடந்தாலும் இல்லாவிட்டாலும்..."

" ஓய்வு எடுத்துக்கொள் .. எல்லா சரியாயிடும்..." என்று சமாதானப்படுத்துவதற்காக புன்னகைக்கிறான் ரகு...

தன் இடத்துக்கு வந்தவளுக்கு ஒரே குழப்பம்.. சே என்ன மடத்தனம் பண்ணிவிட்டேன்...

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு... சே. சே.. அவமானமாயிருக்கு... அப்போ யாருடைய பூங்கொத்து?

" ஹலோ.. ஒரு நன்றி சொல்ல மாட்டியா, மது...வேலண்டைன்ஸ்டே பூவுக்கு..?""

மிச்சமுள்ள எல்லா கோவத்தையும் சேர்ந்து வாங்கிக் கட்டிக்கொண்டான் முனீஸ்....

--------------------------------------------------------------------------------------------------------------
வீட்டுக்கு வந்தவளிடம் அப்பா சொல்கிறார் நாளை அவளை பெண் பார்க்க வருகிறார்கள் என்று..
---------------------------------------------------தொடரும் பெண்பார்க்கும் படலம் ...பாகம் - 7 ல்...